COD - பாகம் 5 கேள்விகளும் பதில்களும் QUESTIONS AND ANSWERS COD 20 64-08-23E நாம் நின்றவண்ணமாக சற்று நேரம் ஜெபிப்போம். அன்புள்ள தேவனே, இன்றிரவு நாங்கள் எங்கள் இரட்சகர் இயேசுவுக்காக உமக்கு முதலாவதாக நன்றி செலுத்துகிறோம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயுள்ள காரணத்தால் உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அதை விசுவாசிக்கின்ற மக்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் எங்களுக்கு கற்பனையான ஒரு தேவன் கற்பனையான ஒரு விக்கிரகம், கற்பனையான ஆவி இல்லாமல் எங்களோடும் எங்களுக்குள்ளும் வாசம் செய்து, எங்கள் மூலமாய் கிரியை செய்யும் உண்மையான, ஜீவிக்கிற தேவன் எங்களுக்கு இருக்கிறபடியால் நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம் அதில் கற்பனையான எதுவுமே இல்லை. நாங்கள் தேவனுக்கு விக்கிரகங்களை உண்டாக்குகிறதில்லை, நாங்களே தேவனுடைய ஜீவிக்கிற ரூபங்களாய் இருக்கிறோம்... பரிசுத்த ஆவியானவர் ஒரு விக்கிரகத்தின் மூலம் பேசாமல், மீட்கப்பட்ட ஒரு பாண்டத்தின் மூலம் பேசுகிறார். தேவன் மாம்சத்தில் வெளிப்படுதல் இதற்காகவும், மகத்தான அக்கினி ஸ்தம்பம் எங்களை பின்தொடருகிறதற்காகவும், அதாவது நாங்கள் அக்கினிஸ்தம்பத்தை பின் தொடருகிறதற்காகவும், அதே ஆவி அது பூமியில் வரும் போதெல்லாம் செய்து வந்துள்ள அதே கிரியை இப்பொழுதும் செய்து அதே மகத்தான அடையாளங்கள் காணப்படுகிறதற்காகவும் நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! அது எவ்வளவாய் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது! கர்த்தாவே, இன்றிரவு நாங்கள், வேறெந்த நோக்கத்துக்காகவும் அல்ல, உம்முடைய உதவியினால் நாங்கள் எப்படி அறிந்துகொள்வதென்றும், எப்படி கற்றுக் கொள்வதென்றும், எவ்விதம் மேலான கிறிஸ்தவர்களாக ஆகி, நாங்கள் அணுகிக் கொண் டிருக்கும் இந்த மணிநேரத்தில் நாங்கள் எவ்விதம் மேலான பொருத்தமுள்ள கிறிஸ்தவர்களாக இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்துக்காகவே கூடி வந்துள்ளோம். எங்களுக்கு உதவி செய்யமாட்டீரா, கர்த்தாவே, நீர் எங்களுக்குத் தேவையாயிருக்கிறீர். இயேசுவின் நாமத்தில். ஆமென் நீங்கள் உட்காரலாம். 2இன்னும் ஏறக்குறைய முப்பது நாற்பது கேள்விகள் உள்ளன. இவைகளுக்கெல்லாம் எவ்விதம் பதில் சொல்லி முடிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று பிற்பகலில், வழக்கமான அளவிற்காவது அதை முடிக்க முடியுமா என்று கடினமாக முயன்று பார்த்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால் இதைக் கூற விரும்புகிறேன், அதாவது என்னால் இயன்றவரையிலும் இக்கேள்விகளுக்கு பதில் கூற நான் முயல்வேன். ஏனெனில் இவை கிறிஸ்தவர்களின் இருதயங்களில் எழுந்த அருமையான கேள்விகள். எனக்குத் தெரிந்தவரையில் இக்கேள்விகளுக்கு ஞானமான பதில்களை உரைக்க நான் நிச்சயம் விரும்புகிறேன்.இன்று காலையில் இந்த கேள்விகளுக்கு பதிலுரைக்க அவர் உதவி செய்து, அவர் நமக்களித்த விடைகளுக்காக நான் கர்த்தருக்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்பொழுது, இக்கேள்விகளையெல்லாம் கலந்து வைத்திருக்கிறேன். அவை 150க்கும் அதிகமான கேள்விகள் என்று எண்ணுகிறேன். இப்பொழுது நாம் துவங்குவதற்கு முன்பாக, மேளங்கள் கொட்ட, சபை 'ராக்' இசைக்கிறது என்னும் கட்டுரையை யாராகிலும் காண விரும்பினால் -அந்த பிரஸ்பிடேரியன் போதகர் தன் சபையை திருவிருந்துக்காக “ராக் அண்ட்ரோல்” இசையுடன் நடத்திச் செல்லுதல்... இதை நான் ஒரு நிமிடம் பார்க்கட்டும். 3“வாலிப அங்கத்தினர்கள் 'ஜாஸ்' (Jazz) இசைக்கு நடனமாடுதல். இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்த நாடகம். நவீன 'ராக் அண்டு ரோல்' இசை சிலுவையில் அறையப்படுதலைத் தெரிவிக்கிறது' என்னும் தலைப்பு. அங்குள்ள போதகர் இளைஞர் அனைவரையும் அங்கு நடத்திச் சென்று, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை 'ராக் அண்டு ரோல்', 'ஜாஸ்' இசையின் மூலம் நடித்துக் காண்பிக்கச் செய்தார். நல்லது. அது மேரிலாண்டில் நடந்தது. அது ஏதோ ஒன்றைக் குறிக்கவில்லையா? இதோ, இங்கு அந்த புகைப்படம்... இன்று காலை நான் 'பீட்டில்ஸ் (Beatles) பாடகர்களைக் குறித்து கூறிக் கொண்டிருந்தேன். அந்த கட்டுரை 'பீட்டில்ஸ் திரும்ப வருதல்' என்னும் தலைப்பு கொண்டது. அந்த பத்திரிகையில் உள்ள கட்டுரையை நீங்கள் படிக்கவேண்டும்.“.... அவர்கள் ஒரு புது மார்க்கத்தை நிறுவியுள்ளனர். அவர்களுடைய மேலாளர்.... அந்த செய்தித்தாளிலிருந்து நான் குறிப்பு எழுதிவைத்துக் கொண்டிருக்கிறேன். நமக்கு நேரமில்லை... இவைகளை யாராகிலும் படிக்க விரும்பினால் இவைகளை நான் அறிவிப்பு பலகையில் தொங்க விடுகிறேன், அப்பொழுது நீங்கள் அதைப் படிக்கலாம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரம் அதிர்ச்சியுண்டாக்கக் கூடியது என்பதை உங்களுக்குக் காண்பிக்கவே விரும்பு கிறேன். ஒருக்கால் உங்களால் இதைப்புரிந்து கொள்ள முடியாது, ஆனால், மக்களே, இவை என்னவென்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நான் சகோ. காப்ஸிடம், இதை படிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவருக்கு நல்ல கல்வியறிவு உண்டு. அவரால் என்னை விட நன்றாக படிக்க முடியும். 'பீட்டில்ஸ்ஸின் மேலாளர் கூறியுள்ளதை இக்கட்டுரையிலிருந்து படிக்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதை செய்வீர்களா, சகோ. காப்ஸ்? 4(சகோ. காப்ஸ் 'பீட்டில்ஸ்' பற்றி எழுதப்பட்ட கட்டுரையைப் படிக்கிறார் - ஆசி). பீட்டில்ஸ் தங்களைக் குறித்து வியந்துள்ள எந்த பதிலையும். பெறுவதில்லை. “அது நம்பமுடியாத ஒன்று. முற்றிலுமாக நம்ப முடியாத ஒன்று” என்று கூறுகிறார், 'பீட்டில்ஸ்ஸின் செய்திதுறை ஆசிரியரான (Press Officer) டெர்ரிக் டெய்லர். “லிவர்பூலைச் சேர்ந்த இந்த நான்கு வாலிபர் இதோ உள்ளனர். அவர்கள் முரட்டுத்தனமுள்ளவர்கள்; அவர்கள் தேவனை நிந்திப்பவர்கள்; அவர்கள் இழிவானவர்கள்; இருப்பினும் அவர்கள் உலகையே கைப்பற்றி யுள்ளனர். அவர்கள் ஒரு புது மார்க்கத்தை நிறுவியது போல் உள்ளது. அவர்கள் முற்றிலும் கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள். நானும் கூட கிறிஸ்துவுக்கு விரோதமானவனே; ஆனால் அவர்கள் மிகவும் அதிகமாக கிறிஸ்துவுக்கு விரோதமாக இருக்கும் நிலை என்னில் அதிர்ச்சியுண்டாக்குகிறது, அது எளிதான காரியமல்ல. ஆனால் அவர்கள் என் மனதை ஆக்கிரமித்துள்ளனர். ஒவ்வொரு வரும் அப்படித்தான் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுடைய நேர்மை என் மனதைக் கவர்ந்துள்ளது. அவர்களை மிகவும் அதிகமாக விரும்பும் மக்கள், மிகவும் அதிகமாக அவமானப்படுத்தப்பட வேண்டிய மக்களே.” “உதாரணமாக, ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு முறையும் அவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கும் போது, டீகாலே வந்திறங்கினது போல, இன்னும் சொல்லப்போனால் மேசியாவே வந்திறங்கினது போல இருந்தது. வழிநெடுக ஜனங்கள் திரளாக நின்று கொண்டிருந்தனர். சப்பாணிகள் தங்கள் கக்கத் தண்டங்களைத் தூக்கியெறிந்தனர். நோயாளிகள், அந்த வாலிபர்களில் ஒருவர் தொட்டால் அவர்கள் சுகமடைந்து விடுவார்கள் என்பது போல, காரை நோக்கி விரைந்து ஓடினர். நாங்கள் சாலையில் கடந்து சென்ற போது, வயோதிப ஸ்திரீகள் பேரக் குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நோக்கினர். அவர்களுடைய முகங்களில் இருந்த தோற்றத்தை என்னால் காணமுடிந்தது. ஏதோ ஒரு இரட்சகன் அந்த இடத்திற்கு வந்தது போலவும், இனி மேல் காரியங்கள் நன்றாக ஆகிவிடும் என்பதைப் போலவும் ஜனங்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களாய், பாரம் நீங்கினவர்களாய் காணப்பட்டனர்”. டெய்லர் பேசுவதை சற்று நிறுத்திக்கொண்டு, வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, “இனி பீட்டில்ஸ் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, சுகமளிக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதே என்றார். 5இயேசு அதைதான் கூறினாரல்லவா? “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, நாங்கள் .......செய்யவில்லையா? என்பார்கள். பாருங்கள்? நீங்கள் சுகமளிக்கும் கூட்டங்களில் உங்கள் நம்பிக்கையை வைக்க முடியாது என்பதை உங்களால் காண முடியவில்லையா? அப்படிப்பட்ட எந்த அடையாளத்திலும் உங்கள் நம்பிக் கையை நீங்கள் வைக்க முடியாது. நீங்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒன்றே ஒன்று வேதத்திலுள்ள கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் மட்டுமே. இப்பொழுது சபையே, உங்களை அங்கு தான் வைக்க நான் முயன்று வந்திருக்கிறேன். என் பிள்ளைகளே. எனக்கு ஏதாகிலும் நிகழ்ந்து தேவன் என்னை இந்த உலகிலிருந்து எடுத்துக்கொள்வாரானால், நீங்கள் ஒரு போதும் தவற வேண்டாம்; அதாவது, வார்த்தையில் நிலைத்திருங்கள். வார்த்தையை விட்டு விடாதீர்கள். அதற்கு முரணான எதையும், அது எதுவானாலும் அதை தனியேவிட்டு விடுங்கள். அப்பொழுது அது சரியென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்? ஒரு சுகமளிக்கும் கூட்டமாம்! தங்கள் இழிவான செயலினாலும் அழுக்கான காரியங்களினாலும் தங்கள் சொந்த மேலாளர்களுக்கே அதிர்ச்சியை விளைவிக்கும் பாவமுள்ள மனிதர்; ஜனங்கள்தங்கள் கக்கதண்டங்களை தூக்கியெறிந்து விட்டு, இந்த பையன்களைக் காணும்போது சுகமடைகின்றனராம். இது அழுக்காயும் அந்திக்கிறிஸ்துவாயும் இருக்கிறது. பாருங்கள். இது சாத்தான் நடத்தும் போலி கூட்டம். பாருங்கள்? சாத்தானால் கிறிஸ்து செய்த எதையும் செய்யக்கூடும், ஆனால் அவனால் வார்த்தையை உறுதிப்படுத்த முடியாது. பாருங்கள்? அவன் இங்கு ஒரு பாகத்தையும் அங்கு ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான், ஆனால் அவனால் முழுவதுமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவனால் மொத்தமாக எடுத்துக்கொள்ள முடியாது. பாருங்கள்? எனவே, பாருங்கள், அந்திக்கிறிஸ்துவின் ஆவி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும் என்று வேதம் உரைத்துள்ளதில் வியப்பொன்றுமில்லை. அவர்களுடைய சொந்த செய்தித்துறை மேலாளர், பத்திரிகை ஏஜெண்டு, அவர்கள் சார்பில்இருந்து கொண்டு, அவர்களை விசுவாசித்து, அவரும் அதே காரியத்தை மனதில் கொண்டவராயிருப்பதாக கூறுகிறார், ஏனெனில் அவர்கள் அவரை கவர்ந்து விட்டனர். 6அந்த பொல்லாத காரியங்கள்... இப்பொழுது, உங்களால் காணமுடியவில்லையா, பெண்களே. நான் ஏன் உங்களிடம் குட்டை கால்சட்டை அணிதல், தலைமயிரைக் கத்தரித்தல், தலை மயிரை 'பாப்' செய்து கொள்ளுதல் (bobbing) ஆகியவைகளைக் குறித்து கூறுகிறேன் என்றால், அது ஒரு ஆவி! சபையில் ராக் அண்டு ரோலைக் குறித்தும் இன்னும் மற்றவைகளைக் குறித்தும் நமது தலை சிறந்த பத்திரிகைகளில் காணப்படுகிறது. ஏன். அது சாத்தானுக்கு ஒரு நல்ல அமைப்பு, அவை இன்னும் சபைகளாகவும் ஸ்தாபனங்களாகவும் உள்ளன. பிள்ளைகளே, உங்களால் இயன்றவரை வார்த்தைக்கு விரைவாக திரும்புங்கள்; அதை விட்டுவிலகத் துணிச்சல் கொள்ளாதீர்கள். அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள். பாருங்கள், எவ்வாறு அந்த அந்திக்கிஸ்துவின் ஆவி, அது அந்நிய பாஷையில் பேசும், அது அடையாளங்களையும் அற்புதங் களையும் காண்பிக்கும்; அது வியாதியஸ்தரை சொஸ்தமாக்கும்; அது இவையனைத்தையும் செய்யும். பாருங்கள்? இந்த மக்கள் தேவனை அணுகுவதாகவும், இந்தப் பையன்கள் தேவனால் அனுப்பப்பட்டவர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் சபையானது வார்த்தையை விட்டு விலகி விட்டது. இந்தப் பையன்கள் ஒரு சபையைச் சேர்ந்தவர்களே. எல்விஸ் பிரஸ்லி ஒரு பெந்தெகொஸ்தேகாரர். பாட்பூன் கிறிஸ்து சபையைச் சேர்ந்தவர். இந்த ஆசாமிகளைப் பாருங்கள், பெந்தெகொஸ்தேயினர், கிறிஸ்து சபையினர், இத்தகைய இவ்வனைவரும் தங்கள் மேல் பொல்லாத ஆவிகளைக் கொண்டுள்ளனர். ரெட்ஃபோலி, மிகவும் கணீரான குரல், கிறிஸ்து சபையைச் சேர்ந்தவர், யாரும் பாட முடியாத அளவுக்கு பக்தி பாடல்களை அருமையாகப் பாடுபவர், ஆனால் அதே குரலை உபயோகித்து அவர் 'ராக் அண்டு ரோல் பாடல்களைப் பாடுகிறார். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். அவர்கள் எந்த சபைகளில் சேர்ந்துள்ளனர் என்பதைப் பாருங்கள். எல்விஸ் பிரஸ்லி அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை சேர்ந்தவர். பார்த்தீர்களா, அவர்கள் ஒவ்வொருவரும் அதை விரும்பினர், சாத்தான் அதை அவர்களுக்குக் கொடுத்தான். உங்களால் காண முடியவில்லையா, நண்பர்களே, எப்படி... அந்த வார்த்தையை தளர விட்டுவிடாதீர்கள். பாருங்கள், அது உங்களைப் பிடிக்கும் ஒரு ஆவி. 7இந்த ஸ்திரீகள் இந்த உடைகளை அணிந்து கொண்டு தங்களை கவர்ச்சியுடையவர்களாக காண்பிக்கும்போது, அவர்கள் விபச்சாரம் செய்ததற்காக தேவனுக்கு பதில் சொல்லியாக வேண்டுமென்று நான் அவர்களிடம் கூறுகிறேன். நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன். தீர்க்கதரிசி என்று அழைப்பதை விசுவாசிப்பீர்களானால், நான் உங்களிடம் கூறுவதற்கு செவிகொடுங்கள். பாருங்கள்? ஒருக்கால் உங்களால் அதை புரிந்துகொள்ள இயலாதிருக்கலாம். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் சொல்வதைச் செய்யுங்கள். நான் கூறுவதற்கு தேவன் என்னை பொறுப்பாளியாக்குவார். பாருங்கள்? நீங்கள் கூர்ந்து கேளுங்கள், அவை ஆவியென்பதை நினைவில் கொள்ளுங்கள். சாதாரணமாக, ஒருக்கால் அந்த நபர்.... அண்மையில் நான் சருமத்தினால் மூடப்பட்ட தேவன் என்னும் தலைப்பில் பிரசங்கித்தது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா, (பாருங்கள், பாருங்கள்?)- தம் மேல் சுருமத்தைக் கொண்டுள்ள தேவன்? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நம்மில் சிலர் அந்த ஆதிக்கங்களுக்குள் சென்று இவைகளை எடுத்துரைக்க இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாருங்கள்? அது முன்னறிவு : அது தேவன் பேசுதல், காண்பித்தல். நீங்கள் ஏதாவதொன்றை மாம்சத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறுவீர்களானால், அவர்கள் குற்றமற்றவர்கள் (இங்கு பாருங்கள்), அருமையானவர்கள், நேர்மையுள்ளவர்கள், உங்களிடம் ஒரு பொய் கூட சொல்லமாட்டார்கள். ஆனால் முழு காரியமே பிசாசாயுள்ளது. மார்க்க வைராக்கியம் கொண்டவர்கள், சுகமளிக்கும் கூட்டம் ஒன்றையும் கூட துவங்குவார்கள். பாருங்கள்? ஆனால் அது முற்றிலும் அந்திக்கிறிஸ்துவாய் உள்ளது. பாருங்கள்? அந்த பிரஸ்பிடேரியனும் அவையனைத்தும். அந்த ஸ்தாபனங்களும் அதே காரியத்தைச் செய்வதைப் பார்த்தீர்களா? 8ஏன், அண்மையில் இங்கிலாந்து தேசத்தில் உள்ள லண்டனில் ஒரு 'ராக் அண்டு ரோல்' குழு கிறிஸ்துவையும், யூதாஸையும் மற்றவர்களையும் பாவனை செய்து நடித்துக் காண்பித்தது. அவர்கள் கிறிஸ்துவை “டாடி - ஓ ” என்று அழைத்து, அந்த வெறிபிடித்த பையன்கள் பேசும் எல்லாவிதமான சொற்களையும் பேசினர். பாருங்கள்? அந்த இளைஞர்கள் உலகத்தை ஆட்கொண்டுவிட்டனர். வேதம் அதை முன்னுரைத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். நன்றியறியாதவர்கள், பரிசுத்தமில்லாதவர்கள், சுபாவ அன்பில்லாதவர்கள், இணங்காதவர்கள். தாய் தகப்பன்மார்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் (பாருங்கள்?) (2தீமோ. 3:2-5). இளைஞர் உலகத்தை ஆட்கொள்ளுதல். அவர்கள் அதைச் செய்து விட்டனர். அன்றொரு நாள் நான் ஒரு இடத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே அவர்கள் அந்த அசுத்தமான 'ஜூக்பாக்ஸில் (juke box) கிராமபோன் தட்டுகளைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர் என் குடும்பத்தை அங்கு கொண்டு செல்ல எனக்கு விருப்பமில்லை. அங்கிருந்த பெண்ணிடம் நான், “ஒருகிராம போன் தட்டு போட்டுக் கேட்க எவ்வளவு காசு அதில் போட வேண்டும்?” என்று கேட்டேன். “ஒன்றுக்கு பத்து சென்டுகள்” என்றாள். “ஒரு மணிநேரத்துக்கு எவ்வளவு தட்டுகள் கேட்கலாம்?” என்றேன். அவள் பதில் சொன்னாள். நான் “இதோ பணம். அதை எடுத்துக்கொண்டு மின்சாரப் 'பிளக்' கை கழற்றி விடு” என்றேன். அவள், “என்னால் முடியாது. கிராமபோன் தட்டுகளைப் போட்டுக் பேட்க அந்த இளைஞர் வருகின்றனர்” என்றாள். அங்கு நான் பணத்தை செலவழிக்க முடியவில்லை; நான் வேறோரிடத்துக்குச் சென்றேன். பாருங்கள்? அந்த கிராம போன் இசை உங்களுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். அதைக் கேட்ட பிறகு, நீங்கள் சென்று, நரம்பை அமைதிப்படுத்தும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிவரும். அது கிறிஸ்தவனுக்கு வெறுப்பூட்டுகின்றது. அப்படிப்பட்ட இசை உங்களுக்கு பிடிக்குமானால், உங்களில் என்ன தவறென்று உங்களுக்குத் தெரியுமா?நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும், ஏனெனில் உங்களில் உள்ளது வார்த்தையைத் தவிர வேறெதோ ஒன்றைக் கொண்டு போஷிக்கப்பட்டு வருகிறது. இயேசு அப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பார் என்று உங்களால் நினைத்தும் கூட பார்க்க முடிகிறதா? தீர்க்கதரிசிகளில் ஒருவன் அவ்விதம் செய்திருப்பான் என்று உங்களால் நினைத்தும் கூட பார்க்க முடிகிறதா? நண்பர்களே, எங்கு பார்த்தாலும் இந்த காரியம் பிசாசினால் உண்டானதென்று உங்களால் காணமுடியவில்லையா? அவன் எவ்விதம் மார்க்கவேஷத்தை தரித்துக்கொண்டு, கிறிஸ்துவைப் போல் செய்வான் என்று வேதம் உரைக்கிறது. பாருங்கள்? ஆனால் அதை நீங்கள் கண்டுகொள்ளக் கூடிய ஒரே வழி, இந்த சபையை, அந்த சபையை சேர்ந்து கொள்வதனால் அல்ல, ஆனால் வார்த்தையில் நிலைத்திருப்பதன் மூலமாகவே; அவரே வார்த்தையாயிருக்கிறார். 9இப்பொழுது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக. நாம் நேரடியாக கேள்விகளுக்குச் செல்லப் போகின்றோம். இப்பொழுது ஏறக்குறைய ஒரு மணி பதினைந்து நிமிடங்களுக்கு... இந்த கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லி முடிக்க முடியாது. இவை குவியலாக இங்குள்ளன. அவை நல்ல கேள்விகள் என்பது என் கருத்து. அவை மிகவும் அருமையானவை நான் குனிந்து இவைகளை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து.. அவைகளுக்கு பதிலுரைப்பேன். யாராகிலும் இங்கு வந்து கேள்விகளைப் பொறுக்கி எடுத்து படித்தால், நான் அவைகளுக்கு “ஆம்”, “இல்லை” என்று பதில் சொல்லி விடலாமென்று எண்ணினேன். ஆனால் அது ஜனங்களுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. அவைகளுக்கு பதில் உரைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இந்த கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். நான் அவ்விதம் செய்யமாட்டேன். என்னால் முடிந்த வரை , கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்; என்னால் பதிலளிக்க இயலாத கேள்விகளுக்கு அடுத்த முறை பதிலளிப்பேன் இப்பொழுது நான் .... அடுத்த ஞாயிறு, எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரிவிக்கிறேன்; இப்பொழுதிலிருந்து புதன் கிழமைக்குள் நீங்கள் பில்லியுடன் தொடர்பு கொண்டால்.. நாங்கள் ஒருக்கால் புறப்பட்டுச் செல்ல வேண்டியதாயிருக்கும். 10இப்பொழுது, ஒரு காரியம். நான் முடிக்க வேண்டிய பேட்டிகள் நிறைய உண்டு. பில்லி இன்னும் இவ்வளவு உயரமுள்ள பேட்டிகளின் குவியலை எனக்குக் காண்பித்தான், இவைகள் காத்திருக்கின்றன. சில பேட்டிகள் மாதக்கணக்காக காத்திருக்கின்றன. நல்லது, இங்கு நான் உள்ள போது, அவைகளில் சிலவற்றை முடிக்க வேண்டும், சில கூட்டங்களுக்கு செல்லவேண்டும். இவைகளைச் சமநிலைப்படுத்த நான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இவ்வாரம் நான் வெளியே சென்றிருக்கும் போது, நான் ஆண்டவரிடம், “நான் என்ன செய்ய வேண்டும், இவைகளை முடிக்க வேண்டுமா, அல்லது பேட்டிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்று ஜெபித்துக் கேட்கப் போகிறேன். நான் பேட்டிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நான் ஞாயிறன்று வீடு திரும்பி, நாள் முழுவதும் எங்காவது போட்டிகளை நடத்திக் கொண்டே செல்ல வேண்டும். இல்லாவிடில் நான் திரும்பி வரும் வரைக்கும் பேட்டிகளை தள்ளிப்போட்டு விட வேண்டும். நான் பேட்டிகளை நடத்தவில்லையென்றால், கேள்விகளுக்கு பதிலுரைப்பேன்... நான்... பில்லி உங்களுக்கு கடிதம் அனுப்பித் தெரிவிப்பான். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; இந்த அருமையான வாலிபப் பிள்ளைகள் ஒருவரையொருவர் எவ்வாறு நேசிக்கின்றனர், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பைக் குறித்து உங்களிடம் கூறுவது மிகவும் நன்றாயுள்ளது. ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கிறார். இந்த மற்றவர் மற்றவருக்கு... பில்லி நூற்றைம்பது மைல் தூரத்திலுள்ள பகுதியிலுள்ள ஒருவரை தொலைபேசியில் அழைத்து அறிவிக்கிறான், உடனே மற்றவர்களுக்கு அது அறிவிக்கப்படுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். அவர்கள் எதையும் இழக்க விரும்பவில்லை. இங்கு என்ன நடக்கிறதென்று காண, அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் இங்கிருக்க விரும்புகின்றனர்; கர்த்தர் ஏதாவதொன்றை அளிப்பாரானால், அதைப் பெற்றுக்கொள்ள அவர்கள் இங்கிருக்க விரும்புகின்றனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். 11இப்பொழுது. ஞாபகம் கொள்ளுங்கள், அருமை நண்பர்களே . இந்த கேள்விகள் சிலவற்றின் பேரில் இன்று காலையில் நான் ஒரு அறிக்கை விடுத்தேன். இன்று காலையில் நாம் பார்த்த சில கேள்விகள் (ஆம்!) பெரும்பாலும் ஜனங்கள் அரிசோனாவில் குடியேறுவதைக் குறித்தவை என்பதை நான் கவனித்தேன். பாருங்கள்? நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, அதை தெளிவுபடுத்துவது நலமென்று எண்ணினேன். ஜனங்கள் எங்கு தங்க வேண்டும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்கு சொல்ல முயல்கிறேன் என்று எண்ண வேண்டாம். இதை நான் கூற முற்படுகிறேன், என் அன்பார்ந்த சகோதரனே. அரிசோனாவுக்கு குடியேற வேண்டும் என்று நினைக்கும் உத்தமமான மக்கள் உள்ளனர். யாருக்காவது அங்கு குடியேற விருப்பமானால், அங்கு நான் உள்ளவரைக்கும், அதைக் குறித்து நான் மகிழ்ச்சி கொள்வேன் என்பது உறுதியாகும்... நான் அங்குள்ளதைவிட பத்து மடங்கு அதிகமாக இங்கிருக்கிறேன். எனக்கு.... இப்போதைக்கும் கிறிஸ்துமஸுக்கும் இடையே உள்ள காலத்தில், நான் நான்கு நாட்கள் அங்கிருப்பேன். அதன் பிறகு நான் உடனே வெளிநாடுகளுக்குச் செல்கிறேன். எழுப்புதல் கூட்டங்களுக்காக நான் வெளிநாடு செல்வதற்கு முன்பாக - இந்த வசந்த காலத்தில் நான் அதை மேற்கொள்வது வழக்கம்- இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நான் இந்த கூடாரத்தில் இருப்பேன். அங்கிருந்து அரிசோனா முழுவதிலும் எனக்கு ஒரு கூட்டம் மட்டுமே உண்டு. அது ஜனவரி மாதத்தில் பீனிக்ஸ் கிறிஸ்தவ வர்த்தகருடன் இரண்டு இரவுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் அங்கு அதிகமாக பிரசங்கிப்பதில்லை.... அங்குள்ள ஜனங்கள் மட்டும்... அந்த ஒலிநாடாவை பதிவுசெய்வதை நிறுத்தி விடுவீர்களா? (சகோ . பிரான்ஹாம் ஒலிநாடாவைப் பதிவு செய்யும் கருவியை நிறுத்திவிடக் கூறிவிட்டு, சபையோரிடம் பேசுகின்றார் - ஆசி) 12இப்பொழுது, இன்றிரவு இக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் துவங்குகையில், நான் இங்குள்ள கேள்விகளில் ஒன்றை எடுத்து ... நீங்கள் இவைகளை அனுபவித்து மகிழ்கின்றீர்களா? அப்படியானால் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). இந்த நேரத்தில் அது நமக்கு இலாபமானதென்று எண்ணுகிறேன். ஒ, நான் நம்புகிறேன், விரைவில்.... இங்கு வருவதற்கு முன்பாக இன்று காலையில் நான் வேதத்திலுள்ள சில வசனங்களையும், சில இடங்களையும் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் நினைத்துக் கொண்டேன், “ஓ, அது எவ்வளவு அற்புதமாக இருக்கும்... கர்த்தருடைய வருகைக்காக நாம் காத்திருக்கையில், பழைய ஏற்பாட்டிலுள்ள மக்களை நாம் எடுத்துக் கொண்டு - யோபுவையும் மற்றவர்களையும் - அவர்களைக் குறித்து தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தினால், அது எவ்வளவு அற்புதமாக இருக்குமென்று நினைத்துக் கொண்டேன் (அது அற்புதமாயிருக்கும் அல்லவா), அது இந்நாளுக்கு எவ்வாறு முன்னடையாளமாயுள்ளது என்பதை உங்களுக்குக் காண்பிக்க (வார்த்தை முழுவதும் ஒன்றோடொன்று இணைகிறது), பண்டைய காலத்தில் ஏற்பட்ட அழிவுகள் அனைத்தையும் குறித்தும், அவை எவ்வாறு இந்நாளுக்கு முன்னடையாளங்களாக உள்ளன என்பதைக் குறித்தும்; எவ்வாறு பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லாமே கர்த்தராகிய இயேசுவின் வருகையைக் குறிக்கின்றன என்பதைக் குறித்தும். 13கேள்வி: இப்பொழுது, இக்குவியலிலிருந்து நான் கையிலெடுத்த முதலாம் கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஒரு கிறிஸ்தவள் தன் தலைமயிரைச் சுருள வைக்கும் 'பின்'களை (pincurls) போட்டுக் கொள்வது தவறா? மேலும், அவளுடைய உடையின்கைகள் (sleeves) எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்? நன்றி. ஒரு சகோதரி. இது அந்த ஸ்திரீக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இங்குள்ள சகோதரராகிய நம்மில் சிலர், “ஓ, முட்டாள் ஸ்திரீ” என்று நினைக்கக் கூடும். ஆனால் அவளுக்கு அது முட்டாள் தனமாகத் தோன்றவில்லை. அவள் அறிய விரும்புகிறாள். இப்பொழுது தலைமயிரை, அது என்ன, பன்றிவாலைப் போல் (pig tails) சுருள வைத்துக் கொள்வது. நான் வருந்துகிறேன். நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை.... அது... நான் வருந்துகிறேன். தலைமயிரைச் சுருள வைக்கும் 'பின்'களை போட்டுக்கொள்வது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். பின் 'செட்டு'கள் - பன்றிவால். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவ்விதம்தான் பெண்கள் தங்கள் தலை மயிரில் அணிந்து கொள்வது வழக்கம். உங்களுக்கு ஞாபகமுள்ளதா, ஒருவிதமான... அது சரிதானே? அவர்கள் அதை 'பன்றிவால்' (pigtails) என்று அழைப்பதுண்டு. மயிர் சுருள்கள் கீழே தொங்கிக் கொண்டிருக்கும். இல்லை, 'பின்' சுருள்கள், என்னை மன்னித்துக் கொள், சிநேகிதியே. “உடையின் கைகளை எவ்வளவு நீளமாக அவள் அணிந்து கொள்ள வேண்டும்?” இப்பொழுது, அதைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. பார்? வேதத்தை நான் ஆதாரமாகக் காண்பிக்க முடியாத எதைக் குறித்தும் நான் அதிகம் பேச விரும்பவில்லை. 14இப்பொழுது, இதை நான் என் கருத்திற்கேற்ப உன்னிடம் கூறுகிறேன். ஏனெனில் இதற்கு ஆதாரம் காட்ட எனக்கு வேதத்தில் ஒன்றுமேயில்லை. தலைமயிரைக் குறித்து நான் ஸ்திரீகளுக்கு வேதத்திலிருந்து எடுத்துக்காட்டக் கூடிய ஒன்றே ஒன்று, அவர்கள் அதைக்கத்தரிக்கக் கூடாது என்பதே. அவர்கள் தலைமயிரை எவ்விதம் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களைப் பொறுத்தது. தலைமயிரைச் சுருள் வைக்கும் 'பின்'களைக் குறித்து, உண்மையில், அவை என்னவென்று எனக்குத் தெரியாது. துணிகள் பறந்து போகாமலிருக்க போடும் 'கிளிப்புகளைப்' போல் காணப்படுபவைகளை அவர்கள் தலையில் போட்டுக் கொள்கிறார்களே, அதுவாக இருந்தாலன்றி. நான்... எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று... உடைகளின் கைகளின் நீளம், நீ கிறிஸ்தவளாயிருப்பதால், அவையெல்லாவற்றையும் குறித்து தேவன் உன்னிடம் கூறுவாரென்று நினைக்கிறேன். பார்? ஒரு கிறிஸ்தவள் என்ற முறையில், அந்த விஷயத்தில் நீ என்ன செய்ய வேண்டுமென்று உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன். தேவன் ஒரு குறிப்பிட்ட நீளத்தை நிர்ணயிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நீ நாணயமுள்ளவளாயும், மதிக்கத்தக்கவளாகவும், சுத்தமாகவும் காட்சியளித்தால், அது சரியென்று நினைக்கிறேன். இல்லையா? பார்? இது என் கருத்து, இது நான் கூறுவது, ஏனெனில்,அதை வேத வசனங்களினால் ஆதாரம் காண்பிக்க என்னால் இயலவில்லை. 15தலைமயிருக்கு நிறச்சாயம் பூசிக் கொள்வதைக் குறித்த ஒரு கேள்வி இன்று காலையில் எழுந்தது என்று எண்ணுகிறேன். அதைக் குறித்தும் என்னால் ஒன்றும் கூற இயலாது. எனக்குத் தெரியாது. உங்கள் தலைமயிருக்கு நிறச் சாயம் பூசிக் கொள்ளக் கூடாது என்று கூறும் வேதவசனத்தை எனக்கு காண்பிக்க இயலாது. இப்பொழுது, அது.... ஸ்திரீகளாகிய நீங்கள் காண்பதற்கு அழகாயிருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் காண்பதற்கு அழகாயிருக்க வேண்டும். சகோ. பிரான்ஹாம், பிள்ளைகளாகிய உங்களுக்கு விரோதமாயில்லை. நீங்கள் என் பிள்ளைகள்; உங்களை நான் நேசிக்கிறேன், உங்களை நோக்கி கூச்சலிட நான் விரும்பவில்லை. நான் காரணமில்லாமல் அவ்விதம் செய்வதில்லை. உங்களுக்கு நான் உதவிசெய்யவே முயல்கிறேன். இப்பொழுது பாருங்கள், உங்களைக் கேட்கிறேன்.... அந்த கேள்விக்கு விடையாக இதை நான் கூறுகிறேன். நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகும் சகோதரிகளே, இதோ அது. அதைக் குறித்து ஒரு கேள்வி எழுமானால், அதைச் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியினால் நிறைந்து, அதைச் செய்ய வேண்டுமென்று மனதில் எண்ணம் கொண்டால், அது வேதம் கூறுவதில் தலையிடாமல். எந்த கேள்வியையும் எழுப்பாமல், அது கர்த்தருடைய சித்தமென்று நீங்கள் பூரண திருப்தியடைவீர்களானால், அதைச் செய்யுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் அதைச் செய்யக்கூடாதென்று எந்த வேதவசனமும் கூறவில்லை. 16ஏசாயா 5ம் அதிகாரம். அந்த அதிகாரம் தான் என்று நினைக்கிறேன், ஸ்திரீகளைக் குறித்தும் அவர்கள் எவ்விதம் மாற்று உடைகளை அணிவார்கள் என்றும் உரைக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனால் அது பெருமையும், பெரிதாகக் காண்பித்துக் கொள்வதுமாயிருக்கிறது. அதை நீங்கள் பெருமைக்காகச் செய்வீர்களானால், அது தவறு. பாருங்கள்? தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை சோதித்துப் பாருங்கள். அதைச் செய்யக் கூடாது என்ற வேதவாக்கியம் இல்லாமலிருந்து ஆவியானவர் உங்களை நடத்துவாரானால், நீங்கள் அதைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் தலைமயிர் நீளமாயிருக்க வேண்டுமா அல்லது குட்டையாயிருக்கலாமா என்னும் விஷயத்தில் நீங்கள் நீண்ட தலைமயிரை உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படித்தான் வேதம் கூறுகிறது. இங்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு இப்பொழுதே பதில் சொல்லி விடுகிறேன். அது இங்குள்ளது. அதை இன்று காலையில் அல்லது வேறு எப்பொழுதோ கண்டேன். “நீங்கள் எப்பொழுதுமே ஸ்திரீகளைக் குறித்து அவர்கள் எவ்விதம் தங்கள் தலைமயிரை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆனால் ஆண்களைக் குறித்து நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை என்று அக்கேள்வியில் எழுதப்பட்டுள்ளது. 17ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயைப் போல் நீண்ட தலைமயிர் தன் முதுகில் தொங்கிக் கொண்டு இங்கு வருகிறதை நான் கண்டால், நான், “மிஸ்டர், நீர் ஏன் அம்பட்டன் கடைக்குச் செல்லக்கூடாது? நீர் ஒரு பெண்ணைப் போல் காட்சியளிக்கிறீர்” என்பேன். பாருங்கள்?ஆனால் மனிதர் சாதாரணமாக அவ்விதம் செய்வதில்லை. பாருங்கள்? மனிதர்... மனிதர் பிழையற்றவர் என்று நான் கூற வரவில்லை, அவர்கள் ஸ்திரீகளைப் போலவே குற்றமுள்ளவர்கள். இதைக் கூற முற்படுகிறேன். அவ்விதம் செய்யத் தன் மனைவியை அனுமதிக்கும் ஒரு மனிதன் இரட்டிப்பாக குற்றமுள்ளவனாயிருக்கிறான். ஏனெனில் வீட்டார் அவன் சொற்படிதான் நடக்க வேண்டும். அந்த மனிதனுக்கு அவனுடைய சொந்தவீட்டாரின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனால், அவன் எவ்விதம் அதை தேவனுடைய வீட்டில் செய்ய முடியும்? பாருங்கள்? இங்கு வருகை தருகின்ற நமது ஸ்திரீகளின் கூட்டத்தைக் குறித்து நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இதை நான் மரியாதையோடும் அன்போடும் கூறுகிறேன். இது உண்மையென்று தேவன் அறிவார். தென் பகுதியில் எனக்கு ஒரு போதகர் நண்பர் இருந்தார். நான் அதுவரை கண்டிராத அவ்வளவு சுத்தமாகக் காணப்படும் சபைகளில் ஒன்றை அவர் கொண்டிருந்தார். ஸ்திரீகளைக் குறித்து பேசுகையில், மிகவும் அழகான பெண்கள் அங்கு வந்து பரிசுத்தமுள்ளவர்களாய், தேவபக்தியுள்ளவர்களாய், நீண்ட தலைமயிரை உடையவர்களாய் உட்காருவார்கள். அந்த சபைக்கு சென்று அவர்களைக் கண்டு பேரானந்தமடைய நான் விரும்பின்துண்டு. ஆனால் இன்றைக்கு அவர்களையும் மங்கச் செய்யும் ஸ்திரீகளைக் கொண்ட ஒரு சபையை கர்த்தராகிய இயேசு எனக்கு அருளியிருக்கிறார். நான் நீசத்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களைக் கடிந்து கொள்வதில்லை. உங்களைக்குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். சாத்தான் எங்காவது காலடி எடுத்து வைக்க எனக்கு பிரியமில்லை. நீங்கள் மேல் நோக்கிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன், பின் நோக்கி அல்ல. எந்த ஒரு மனிதனும் நயமான சொற்களினால் உங்களை வஞ்சிக்க இடம்கொடாதீர்கள். “ஓ, நல்லது. அதுவல்ல...'' என்று யாராகிலும் கூற அனுமதிக்காதீர்கள். பாருங்கள்? அப்படித்தான் சாத்தான் ஏவாளுக்கு வார்த்தையை வியாக்கியானித்துக் கொடுத்தான் பாருங்கள்? வார்த்தை என்ன உரைக்கிறதோ, அதை அப்படியே விசுவாசியுங்கள். சரி. 18கேள்வி: மிகவும் அவசரம், சகோ. பிரான்ஹாமே, காலம் முடிவடைந்து நித்தியம் துவங்குகிறது என்று அறிந்திருப்பதனால், விவாகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஒரு தம்பதிகளுக்கு உங்கள் ஆலோசனை என்ன? நீங்கள் முன் சென்று விவாகம் செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் இன்னும் நூறாண்டுகள் இவ்வுலகில் வாழப் போகின்றீர்கள் என்பது போல் அதை சென்று நிறைவேற்றுங்கள். உங்கள் இருதயத்தை கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள், இவ்வுலகக் காரியங்களின் மேல் உங்கள் இருதயங்களை வைக்காதீர்கள். கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள். பாருங்கள்? நீங்கள் சென்று. விவாகம் செய்து, பிள்ளைகளைப் பெறுங்கள். தேவன் உங்கள் விவாகத்தில் உங்களை ஆசீர்வதிப்பாராக. 19கேள்வி: அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, நான் இயேசுவின்'' நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன். அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று வார்த்தை உரைக்கிறது. 'அது பரிசுத்த ஆவியின்அபிஷேகத்தைக் குறிக்கிறதா, அல்லது அந்த அபிஷேகத்துடன் நான் ஒரு நிச்சயமான அனுபவத்தைப் பெற வேண்டும் என்பது அதன் அர்த்தமா? நான் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட வேண்டுமென்று மிகவும் விசாரமுள்ளவனாயிருக்கிறேன். இந்த நீண்ட குறிப்புக்காக என்னை மன்னிக்கவும், இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் நீண்டகாலமாய் காத்திருக்கிறேன். நன்றி. அந்த நபர் தன் பெயரைக் கையொப்பமிட்டுள்ளார். அவர்கள் இந்த நகருக்கு வெளியே வாழ்பவர்கள். இப்பொழுது, அது நல்ல கேள்வி. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஒரு நபர் பெறவேண்டிய திட்டவட்டமான அனுபவமாகும். இதை நான் ஒரு நிமிடம் தெளிவாக்கட்டும். பாருங்கள்? அநேகர் கொண்டிருக்கும் கருத்து என்னவெனில்.... அது திரிக்கப்பட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். இங்குள்ள இந்த சபைக்கும். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சபைக்கும் ஒருக்கால் ஒரு கேள்வி இருக்கக் கூடும். அந்நிய பாஷைகளில்பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் தொடக்க அடையாளம் என்பதை நான் விசுவாசிப்பதில்லை என்று நான் குறிப்பிடும் போது (அதை நான் ஏற்றுக் கொள்வதில்லை),தேவனுடைய உதவியைக் கொண்டு அது தவறென்று வேதவாயிலாக என்னால் நிரூபிக்க முடியுமென்று நான் நம்புகிறேன் (பாருங்கள்?), ஏனெனில் அந்நிய பாஷைகள் பேசுவது பரிசுத்த ஆவியின் ஒரு வரமாகும். எத்தனை பேருக்கு அது தெரியும்? தெய்வீக சுகமளித்தலும், பரிசுத்த ஆவியின் ஒரு வரமே. இப்பொழுது 'பீட்டில்ஸ்' (Beatles) அதை செய்கின்றனர். பாருங்கள்? இந்த வரங்களில் எந்த ஒன்றையும் பிசாசினால் பாவனை செய்யமுடியும். ஆண், பெண் மந்திரவாதிகள் அந்நிய பாஷைகள் பேசி அவைகளுக்கு அர்த்தம் உரைக்க முடியும். காட்டுப் பிரதேசங்களில், அநேக முறை ஒரு மந்திரவாதி அந்நிய பாஷைகள் பேசி, மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்து, அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைக்கிறான். 20அரிசோனாவில் அவர்கள் தானிய நடனம் (Corn dance) என்னும் அந்த பழைய கொண்டாட்ட நடனத்தைச் செய்யும் போது. இந்தியர்கள் தங்கள் தானிய விளைச்சலுக்காக மழையை அனுப்ப தெய்வத்தினிடம் வேண்டிக் கொள்ளும்போது, அவர்கள் பெரிய பாம்புகளை தங்கள் மீது சுற்றிக் கொள்கின்றனர். அவர்கள் அதை 'தானிய நடனம் என்றழைக்கின்றனர். அவர்கள் தானியத்தின் மகரந்தக் குஞ்சத்தை எடுத்து, அவர்கள் மேல் அதை வைத்து, ஒரு மேகத்தின் உருவை உண்டாக்கிக் கொண்டு நடனமாடுகின்றனர். மந்திரவாதி வைத்தியன் தன் தலையில் கொம்புகளை, எறுமை கொம்புகளைச் சூடிக் கொண்டு வருகிறான். அவர்கள் இந்த பெரியபாம்புகளை தங்கள் மேல் சுற்றிக் கொண்டு நடனமாடுகின்றனர். அந்த இடத்தில் மந்திரவாதிகளும் புகை குழாயை உபயோகித்து புகை பிடிப்பவர்களும் மற்றவர்களும் உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் ஒரு வெள்ளையனையும் அங்கு அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நான் 'இரு கண் தூரப் பார்வை கண்ணாடியின் (binoculars) மூலம் அவர்களைப் பார்த்திருக்கிறேன், மட்டுமல்ல அத்தகைய நடனத்தில் கலந்து கொண்ட இந்திய நண்பர்கள் எனக்குள்ளனர். அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்த தானிய நடனத்தை அவர்கள் பாம்புகளைச் சுற்றிக் கொண்டு ஆடுகின்றனர். மந்திரவாதி அங்கு வந்து தன்னை கத்திகளால் கீறிக் கொண்டு எல்லாவற்றையும் செய்கிறான். முடிவில் அவர்கள் ஆவிக்குள்ளாகி, அந்நிய பாஷைகள் பேசி, அதற்கு அர்த்தம் உரைக்கின்றனர். இங்கிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேர பயணத்தில் உங்களை நான் ஓரிடத்துக்கு கொண்டு செல்ல முடியும். அங்கே அசுத்த ஆவியினால் இயக்கப்படுகின்ற ஒருவன் (medium)ஒரு பென்சிலை மேசையின் மேல் வைத்து, நிஷ்டையில் ஆழ்ந்து, தன் கைகளை ஆட்டுகிறான். அப்பொழுது அந்த பென்சில் நேராக நின்று, அந்நிய பாஷையில் எழுதுகிறது. அந்த மந்திரவாதி எழுந்து நின்று அது என்ன சொல்லுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துரைப்பான். 21இப்பொழுது, அது பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல. பாருங்கள்? அதை நீங்கள் நம்பமுடியாது. ஆவியின் கனியையும் நீங்கள் நம்ப முடியாது. ஏனெனில் ஆவியின் முதற்கனி அன்பு, 'கிறிஸ்தவ விஞ்ஞானிகள்' என்று அழைக்கப்படுகிறவர்கள் எனக்குத் தெரிந்தவரையில், மற்றெல்லாரைக் காட்டிலும் அதிக அன்பு செலுத்துகின்றனர், ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கின்றனர். பாருங்கள்? என்னைப் பொறுத்தவரையில், பரிசுத்த ஆவியின் ஓரே அத்தாட்சி இந்நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையில் உண்மையான விசுவாசம் கொண்டிருத்தலே! இப்பொழுது, அந்த யூதர்கள் வருகின்றனர்; அவர்களுக்கு சீஷர்களைக் காட்டிலும் அதிக மதப்பற்று இருந்தது. அவர்கள் சீஷர்களைக் காட்டிலும் வேதத்தில் அதிகம் பயிற்சிப்பெற்ற மக்களாயிருந்தனர், ஏனெனில் சீஷர்கள் மீன் பிடிக்கிறவர்களும், சுங்க வரிவசூலிப்பவர்களும், இத்தகைய தொழில்களைச் செய்தவர்களாயிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளில் உண்மையான விசுவாசம் இருந்தது. இப்பொழுது, இதைக் கூர்ந்து கவனியுங்கள்; இதைக் காணத்தவறாதீர்கள். பாருங்கள்? தயவு, சாந்தம் என்பது போன்ற ஆவியின் கனிகளைப் பெற்றிருக்கும் விஷயத்தில் இயேசு கிறிஸ்துவை விட அதிகம் பிரகாசிக்காதவர்கள் அந்த ஆசாரியர்களில் ஒருவரும் கூட இல்லையென்று நினைக்கிறேன். இயேசு தேவாலயத்துக்கு பின்னின கயிறுடன் சென்று, அவர்களைக் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய மேசைகளைக் கவிழ்த்துப் போட்டு. அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியே துரத்தினார். அது சரியா? அவர் அவர்களைக் கோபத்துடன் பார்த்ததாக வேதம் உரைக்கிறது. வேதம் அவ்வாறு உரைக்கிறது அது முற்றிலும் உண்மை. 22எனவே பாருங்கள், அந்த ஆசாரியர்கள் தயவுள்ளவர்களாகவும், சாந்தகுணமுள்ளவர்களாகவும், மக்களைப் புரிந்து கொள்ளுகிறவர்களாகவும் இருந்தனர். ஆவியின் கனிகளைப் பெற்றிருக்கும் விஷயத்தில் இயேசுவைக் காட்டிலும் அதிக கனிகளை அவர்களால் காண்பிக்க முடிந்தது. வேதசாஸ்திரம் பயிலும் விஷயத்திலும், அவர் எந்த வேதசாஸ்திரப் பள்ளியிலிருந்து வந்தாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. “இந்த மனிதன் எங்கிருந்து வந்தான்? அவனுக்கு எந்த ஐக்கியச் சீட்டு உள்ளது? அவன் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்? அவன் எங்கிருந்து வந்தான் என்று எங்களுக்குத் தெரியாது. அவன் முறை தவறிப்பிறந்து முற்றிலுமாக வெளியே தள்ளப்பட்ட ஒருவன். அவனை நாங்கள் சில நிமிடங்களில் வாயடைத்து விட்டு, எங்கள் பிரமாணங்களைக் கொண்டு காண்பிக்க முடியும்.... ”அந்த விஷயத்தில் அவர்கள் செய்ததைச் செய்ய அவர்களுக்கு உரிமை இருந்தது. ஏன்? ஏனெனில் அவர் அந்நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை என்பதை அவர்கள் காணத்தவறினர். இயேசு அவர்களுடைய இருதயங்களிலிருந்த சிந்தனைகளை அறிந்து, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வெளிப்படையாய் அறிவித்து வார்த்தையை செயல்படுத்தின அந்த ஒரு வழியில் மட்டுமே அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் தேவனுடைய வார்த்தையின்படி தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் உரைத்த ஒவ்வொரு வார்த்தையும்,வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறினது. 23அவர் தேவனுடைய தீர்க்கதரிசி, ஊழியக்காரன், தீர்க்கதரிசியாகிய தேவன். தேவனுடைய தீர்க்கதரிசி அவர்களுக்கு முன்னால் இருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய தேவன், தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல. மல்கியா, எரேமியா, ஏசாயா, எலியா போன்றவர்களே தேவனுடைய தீர்க்கதரிசிகள். ஆனால் இவரோ தீர்க்கதரிசியாகிய தேவன், தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல. உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா? அவருடைய வாழ்க்கையை பாகங்களாக சித்தரித்த தீர்க்கதரிசிகள் அனைவரும், தங்கள் பாகத்தை ஏற்று நடித்தனர். ஆனால் இவருக்குள் தீர்க்கதரிசிகள் அனைவரின் பரிபூரணமும் இருந்தது. தீர்க்கதரிசிகளுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. ஆனால் இவரோ வார்த்தையும் தீர்க்கதரிசியுமானவர், அதே நபர். பாருங்கள். 24இப்பொழுது, இப்பொழுது, ஒரு மனிதன் அவனிருக்கும் தற்போதைய நிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது. நீங்கள் அதை சரியென்று.... பாருங்கள்? அவர்களில் சிலர், “நல்லது, நான் ஒரு லுத்தரன்' என்கின்றனர். நல்லது. அதற்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால் கழுகுகள் அந்த ஆகாரத்தை தின்பதில்லை பாருங்கள்? அது நீண்டகாலம் முன்பு நடந்த ஒன்று. அது அந்நாளின் புதிய ஆகாரம். “நான் ஒரு வெஸ்லியன்” அது சரிதான், ஆனால் நீங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது, அந்த ஜனங்கள், “ஆபிரகாம் எங்கள் தகப்பன் என்றனர். அந்த தீர்க்கதரிசி, “இந்தக் கல்லுகளினாலே தேவன் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ணவல்லவராயிருக்கிறார்” என்றான் (மத். 3:9). பாருங்கள்? “நாங்கள் இதை சேர்ந்தவர்கள், அதை சேர்ந்தவர்கள்”. அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அவன் “விரியன் பாம்புக்குட்டிகளே, வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? 'ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண. வல்லவராயிருக்கிறார்” என்றான் (மத்.3:7,9). பாருங்கள்? எனவே நன்கு பயிற்சி பெற்ற வேதசாஸ்திர பண்டிதனுக்கு இதனுடன் யாதொரு தொடர்பும் இல்லை. சாந்தமும் தயவும் உள்ளவர்களாயிருப்பதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அவரை வித்தியாசமாக்கினது எது? அவர் வார்த்தை மாம்சமானவர். மோசேயின் காலத்துக்கான வார்த்தை அல்ல. மோசே அந்த காலத்தின் வார்த்தையாயிருந்தான்; நோவாவின் காலத்துக்கான வார்த்தை அல்ல, நோவா அவன் காலத்தின் வார்த்தையாயிருந்தான்; எலியாவின் காலத்துக்கான வார்த்தை அல்ல, எலியா அவன் காலத்தின் வார்த்தையாயிருந்தான்; ஆனால் அவர் நிகழ்கால வார்த்தையாயிருந்தார், அவர்களோ முன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். 25அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறது! தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டுணர்ந்து, அதை ஏற்றுக்கொள்வீர்களானால், அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட தன் அத்தாட்சி. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றோ, அதைப்பற்றி ஒன்றுமில்லை. தேவன் இப்பொழுது உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதே முக்கியம். அதுதான் அத்தாட்சி. இயேசு உரைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட தன் அத்தாட்சியை அவர் யோவான் 14ம் அதிகாரத்தில் உரைத்திருக்கிறார். அவர், “இன்னும் அநேகங் காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அதற்கு எனக்கு இப்பொழுது நேரமில்லை. பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது, அவர் உங்களுக்குப் போதித்து, நான் உங்களிடம் கூறினதை உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்றார் (யோவான் 16:12-13). உங்களால் காண முடியவில்லையா? அதுதான் அத்தாட்சி. வரப்போகிற காரியங்களை முன்கூட்டி அறிவித்து, எழுதப்பட்ட வார்த்தைக்கு தெய்வீக வியாக்கியானம் உரைப்பது. அது தீர்க்கதரிசியின் அடையாளம் அல்லவா? வேதத்தில் காணப்படும் ஞான திருஷ்டிக்காரன் (seer) முன்னறிவித்தது பிழையின்றி அப்படியே நடந்தது, யாரோ ஒருவர் அவன் மேல் கைகளை வைக்கவில்லை, அதுவரம். தீர்க்கரிசி என்பவன் முன் குறிக்கப்பட்டு தீர்க்கதரிசியாயிருக்கப் பிறந்தவன். பாருங்கள்? அவனுடைய வாழ்நாள் முழுவதுமே அவன் தீர்க்கதரிசியாயிருக்கிறான், அது ஒரு உத்தியோகம். அங்கு தான் ஜனங்கள்... 26இங்குள்ள பல கேள்விகள், “நல்லது, மணவாட்டி இதை செய்வாளா?” “இது நடக்குமா?” “சபை என்ன செய்யும்?” என்பதன் பேரில் உள்ளன. பாருங்கள்?அவர்களைப் நீங்கள் பிரிக்க முடியாது. மணவாட்டி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள். சபை உபத்திரவக் காலத்தின் வழியாய் செல்கிறது. அவர்களைக் குறித்து விருப்பமுள்ளவன் வரக்கடவன்'' என்று கூறப்பட்டுள்ளது. மணவாட்டி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்து விதமான உத்தியோகங்கள் உண்டு. “தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகரையும், மேய்ப்பரையும், போதகரையும் ஏற்படுத்தினார் (எபே.4:13). தேவன் அதை செய்தார். மனிதன் மகன் மார்போன்றவர்களை ஏற்படுத்திக்கொள்கிறான், ஆனால் பாருங்கள், சபை சீர் பொருந்தும் பொருட்டு தேவன் சபையில் இவர்களை ஏற்படுத்துகிறார் - அதை பிரிக்க முடியாது. இப்பொழுது, பரிசுத்த ஆவி வரும்போது, இந்த வார்த்தை சரியென்று உங்களுக்கு சாட்சி கொடுக்கிறது (பாருங்கள்?) - இன்றைக்கான வார்த்தை, லூத்தரின் காலத்துக்கான வார்த்தையல்ல, மோசேயின் காலத்துக்கான வார்த்தையல்ல. அது சத்தியமென்று நாம் சாட்சி பகருகிறோம், ஆனால் அது வேறொரு காலத்துக்குரியது. 27இப்பொழுது, இயேசு இவ்வுலகிற்கு வந்து, “மோசே எல்லாரையும் எகிப்தை விட்டு வெளியே கொண்டு சென்றது போல நானும் உங்களை எங்காவது கொண்டு செல்வேன்” என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும். அவர், “நாம் போய் ஒரு பேழையைக் கட்டுவோம். நான் தேவனாகிய கர்த்தர். நான் உலகத்தையும் அதில் உள்ளவர்களையும் மூழ்கடிக்கப் போகிறேன்” என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? அவர் வார்த்தைக்கு அப்பாற்பட்டிருப்பார்... பாருங்கள், அவர் அவ்விதம் வருவாரென்று வேதம் உரைக்கவில்லை. அப்படியானால் அவர் மேசியாவாய் இருந்திருக்கமாட்டார் அவர் எவ்வளவு தான் பேழையைக் கட்டினாலும், அவர் என்ன செய்திருந்தாலும், அவர் மேசியா வாவதற்கு தகுதியைப் பெற்றிருக்கமாட்டார். அல்லேலூயா! பார்த்தீர்களா? அது தகுதி. ஆம், ஐயா! 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் இவ்விதம் உரைக்கிறது. “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்” (1 கொரி. 13:10). எனவே சிறுவர்களைப் போல் மேலும் கீழும் குதித்தல், அந்நிய பாஷையில் பேசுதல் போன்ற இந்த சிறு காரியங்கள் அனைத்தும், நிறைவானது வரும் போது... இன்றைக்கு நமக்கு, தேவனுடைய உதவியினால், தெய்வீக உறுதிப்படுத்துதலுடன் கூடிய வார்த்தையின் நிறைவான வியாக்கியானம் கிடைக்கப்பெற்றுள்ளது. அப்பொழுது குறைவானது ஒழிந்துபோம். “நான் குழந்தையாயிருந்தபோது, குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ, குழந்தைக் கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” (1கொரி: 13:21). ஆமென்! நான் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டால், மற்ற கேள்விகளைப் பார்க்க முடியாது. 28சகோ. பிரான்ஹாமே... (அந்த கேள்விக்கு பதில் கூறி முடித்து விட்டேனா? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து நான் கூறினேனா?... ஆம், அதுதான் அது. இல்லையா? சரி, அதைநான் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான்.... இவை மிகவும் அருமையான கேள்விகள். ஒரு கேள்வியின் பேரில் ஒரு இரவு முழுவதும் நிலைத்திருந்து, சகோதரனே, அதை தொட்டிருக்கவும் முடியாது). நம் தேவனுடைய ஊழியக்காரனாயிருப்பதை நான் மெச்சுகிறேன். சத்தியத்தின் செய்தியை நான் விசுவாசிக்கிறேன். என் மனைவி எனக்கு செவிகொடுப்பதில்லை, அவள் இந்த செய்தியைக் குறித்து ஒன்றுமே கூறுவதில்லை, அவள் செய்தி ஒலிநாடா எதையும் கேட்பதில்லை. என் வேலையைக் குறித்து எனக்கு நரம்பு கோளாறு ஏற்பட்டுள்ளது. என் மனைவியும் விசுவாசித்து என் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சகோ.பிரான்ஹாமே, நான் தேவனுடைய நண்பனாயிருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நான் தேவனுடைய சித்தத்தில் காணப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். அவருடைய ஊழியக்காரனாயிருக்க விரும்புகிறேன் (அந்த நபர் “அடுத்த பக்கம்” என்று சொல்லி கையொப்பமிட்டிருக்கிறார். ஒரு நிமிடம் பொறுங்கள். நான் சிறுவனாயிருந்தபோது, நான் ஒரு பிரசங்கியாயிருக்க விரும்புகிறேன் என்று எல்லோரிடமும் கூறியிருக்கிறேன். நான் என்ன செய்யவேண்டுமென்று தேவன் விரும்புவாரென்று எனக்குத் தெரியவில்லை. நான் கர்த்தருக்காக எதையும் செய்ய சித்தமாயிருக்கிறேன். இவன் கர்த்தருக்குள் உங்களுடையவன். இப்பொழுது, நல்ல கேள்வி. அந்த மனிதன் உத்தமமானவர். அவருடைய மனைவி, அவருடைய பாகமாயுள்ள அவருடைய துணைவி... இதனுடன் நான் ஒன்றைக் கூட்டலாமா? என் சகோதரரே, இதை நான் கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். இந்நாட்களில் ஒன்றில், கர்த்தருக்குச் சித்தமானால், நான்: “விவாகமும் விவாகரத்தும்” என்னும் செய்தியை இந்தக் கூடாரத்தில் பிரசங்கித்து, அதை ஒலிநாடாவில் பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன். அது பிரிக்குமானால், அது பிரிக்கத்தான் வேண்டும். அது கர்த்தருடைய வார்த்தை என்று நாம் நிரூபிக்க போகின்றோம். 29பாருங்கள், என் சகோதரரே, இதைச் செவிகொடுத்து கேளுங்கள். அநேக சமயங்களில் இவ்வுலகில் நீங்கள் தவறான துணைவிகளைப் பெறுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சில அழகிய பழுப்பு நிறமுள்ள, அல்லது நீல நிறமுள்ள, அல்லது சாம்பல் நிறமுள்ள கண்கள் உங்களை மயக்கி, நீங்கள் செவிகொடுத்திருக்கக் கூடாத இடத்துக்கு உங்களைக் கவர்ந்துவிடுகிறது. மனிதர் பலர் அதை உணருகின்றனர். விவாகம் செய்கின்ற ஒரு மனிதன், முதலில் அதை ஜெபத்துடன் அணுக வேண்டும். வெளித்தோற்றத்தில் அழகாயுள்ள பெண்ணை நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது, உட்புறத்தில் அழகாயுள்ள பெண்ணை, உங்கள் பிள்ளைகளுக்கு தாயாயிருப்பவளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 30பிரசங்க பீடத்திலிருந்து ஒரு ஊழியக்காரன் இதைக் கூறும்போது, அது பயங்கரமாகத் தொனிக்கும் என்று அறிந்திருக்கிறேன். நான் மேற்கில் இருந்த போது, கால்நடைகளை வாங்குபவர்களுடன் நான் சென்றிருக்கிறேன். நாங்கள் குட்டிப் போடும் கால்நடைகளை வாங்குவோம், அவர்கள் ஒரு மந்தையைத் தொடங்க விரும்புவார்கள். அங்கு நான் நிறைய கற்றுக்கொண்டேன். மாடுகளை ஏலம் விடுபவர்கள் செய்வதையும் வாங்குபவர்களின் செயல்களையும் நான் கவனித்திருக்கிறேன். நான் இந்த சபைக்கு வருகிற ஒரு வயோதிபனுடன் அங்கு செல்வது வழக்கம். அவர் தொடக்கத்தில் நாத்தீகனாயிருந்தார், அவரை நான் கிறிஸ்துவினிடத்தில் நடத்தினேன் - திரு. ஜேவரெஸ். உங்களில் பலருக்கு அவரை ஞாபகமிருக்கும். அவர் கொலராடோவில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். நாங்கள் செல்வோம், அவர்கள் பசுக்களை கவனிப்பார்கள். ஒரு நாள் ஒரு பசுங்கன்று 11,000 டாலர்களுக்கு விற்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். அது சிறுகன்று. அது குட்டி போட்டதேயில்லை. ஜேவ் என்னிடம், “என்னிடம் போதிய பணம் இருந்தால், இந்தக் கன்றுக்குட்டியை நான் வாங்கி விடுவேன்” என்றார். “அவர் மாட்டுப் பண்ணை சொந்தக்காரர். அவருடைய தொழிலை அவர் புரிந்துகொண்டிருக்கிறார்” என்று நான் நினைத்துக் கொண்டேன். நான், “ஜேவ், நீர் ஏன்... இந்த கன்றுக்குட்டிக்குள்ள தகுதி என்ன? அது ஹியர்ஃபோர்ட் ரகத்தைச் சேர்ந்தது. அங்குள்ள மற்றக் கன்றுக்குட்டி சிறிது நேரத்துக்கு முன்பு 300 டாலர்களுக்கு விற்கப்பட்டது. எனக்கு அது பெரிய கன்றுக்குட்டியாக காணப்பட்டது” என்றேன். அவர், “பாருங்கள், பில்லி, கன்றுகள் வாங்கும் விஷயத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் தெருப் பிரசங்கம் செய்வதில் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும்மென்று எண்ணுகிறேன். ஏனெனில் கால்நடைகளை குறித்து உங்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. அங்குள்ள அந்த கன்றுக்குட்டியைப் பாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அது இருந்த இடத்துக்கு நடந்து சென்று. “ அதன் கண்களில் முறைப்பான பார்வையைக் கண்டீர்களா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்றேன். அவர், “அதன் குட்டிகளுக்கும், பேரக் குட்டிகளுக்கும், கொள்ளுப் பேரக்குட்டிகளுக்கும் அந்த முறைத்த பார்வை வழிவழியாக வந்து கொண்டிருக்கும். அவை தங்களையே அழித்துக்கொள்ளும். தங்கள் கன்றுக்குட்டிகளுக்கு அவை ஒருபோதும் தாயாக இருக்காது. அவைகளை நீங்கள் கொழுக்க வைக்க முடியாது; அவை இறைச்சிக்கு உதவாது. இப்பொழுது விற்கப்பட்ட அந்த சிறு கன்றுக்குட்டியை கவனியுங்கள். அதன் பார்வை எவ்வளவு சாந்தமாயுள்ளது! அதன் அமைதியான பார்வையை, தயவுள்ள பார்வையைக் கவனியுங்கள். அதன் கண்களில் ஒரு முறைப்பும் கூட இல்லை. அது தன் கன்றுக்குட்டிகளுக்கு உண்மையான தாயாக இருக்கும். அதன் குட்டியின் கன்றும், அந்தக் கன்றின் கன்றும் தொடர்ந்து இந்தப் பார்வையை பெற்றிருக்கும். அவையனைத்தும், இனச் சேர்க்கைக்கு சரியான காளைகளை கிடைக்குமானால், தங்கள் குட்டிகளுக்கு தாயாக இருக்கும். ஆனால் இந்த முறைப்பானபார்வை கொண்ட கன்றுக்குட்டியை ஒரு மனிதன் வாங்கினால், அது சொற்பமான மந்தையையே உண்டாக்கும்” என்றார். நான், “ஆம், ஐயா! நன்றி!” என்றேன். 31அது ஸ்திரீகளுக்கும் பொருந்தும். முகத்தில் வர்ணம் பூசின , முறைப்பான கண்களைக் கொண்ட, ஏதோ ஒரு விதமான மிருகத்தைப் போல் காணப்படும் ஒருத்தியை உங்கள் மனைவியாகத் தெரிந்துகொள்வீர்களானால்; அவள் மானிட தோற்றத்தை உருக்குலைக்கிறாள், அவள் எதையுமே சாதிக்கமாட்டாள். அவள் எல்லா நேரங்களிலும் ஓடிக்கொண்டேயிருப்பாள். கிறிஸ்தவ மார்க்கம் - என்பது வெளிப்புற அழகல்ல, அது உட்புறத்தில் உள்ளது; சமாதானம், அமைதி, தங்களை சமாதானமுள்ள, அமைதியான ஆவியினால் அலங்கரித்துக் கொள்ளுதல்; அதுவே கர்த்தருக்கு முன்பாக விலையேறப்பெற்ற பொக்கிஷமாய் உள்ளது. அதையே நாம் ஸ்திரீகளிலும், மனிதரிலும், யாராயிருந்தாலும், காண விரும்புகிறோம். இப்பொழுது... 32கேள்வி: சகோ. பிரான்ஹாமே: கேள்விகள்: ஒரு கிறிஸ்தவ பெண்மணி சாதாரண ஆபரணங்களை, கழுத்து மாலையாக அல்லது முத்துக்களை அணிந்து கொள்ளலாமா? நல்லது, சகோதரியே, இது உனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று எண்ணுகிறேன். நான் உண்மையைக் கூறுவேன் என்று என் பேரில் நீ நம்பிக்கை வைத்துள்ளதால், அது எனக்கும் முக்கியம் வாய்ந்தது. இப்பொழுது, ஞாபகம்கொள், வேதம், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய, இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. என்று உரைக்கிறது (1 தீமோ . 2:9-10) இப்பொழுது, சகோதரியே, அதன் மூலம் இதை நான் கூற வரவில்லை, உனக்கு ஒரு ஆடை ஊசி (pin) இருக்குமானால்.... இப்பொழுது, இது நான் கூறுவது, கர்த்தர் அல்ல. ஒரு ஆடை ஊசியை, அல்லது உன் கணவர் உனக்கு வாங்கித் தந்த ஒரு கழுத்து மாலையை நீ அணிந்துகொள்ள விரும்பினால் - அல்லது அதைப் போன்ற ஒன்றை நீ ஏற்கனவே அணிந்திருந்தால், என்னைப் பொறுத்த வரையில், அது தவறல்ல. இது நான் கூறுவது. இதை ஞாபகம் கொள், நான் தெளிவாகக் கூறுகிறேன், இது என் கருத்து. அது நீ அணுகும் முறையைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்; அதை நீ செய்யும் விதத்தைப் பொறுத்தது. பார்? அதைச் செய்வதற்கான நோக்கம் என்னவென்பதைப் பொறுத்தது. அது உன்னை விடாப்பிடியாய் பற்றிக் கொள்கின்றது என்பதை நீ காணும் போது, அதை விட்டுவிடு. நான் நினைக்கிறேன், நீ விவாக மோதிரத்தை அணிந்திருப்பாயானால்.... 33நசரீன் மக்களே, விவாக மோதிரத்தை அணிந்துள்ள ஒரு ஸ்திரீக்கு நீங்கள் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை என்று எனக்குத் தெரியும். அந்த மனப்பான்மை அவசியமில்லை என்று நினைக்கிறேன். வேதாகம காலத்தில் அவர்கள் விவாக மோதிரங்களை அணிந்திருந்தனர், அது 'தலை மாலை' என்று அப்பொழுது அழைக்கப்பட்டது. அதை அவர்கள் தலையில் அணிந்து கொண்டிருந்தனர், அதில் ஒன்பது வெள்ளிக் காசுகள் இருந்தன. ஆனால் நான்.... அவர்கள் விவாகமானவர்கள் என்பதைக் காண்பிக்க. அது சரியென்று நான் நினைக்கிறேன். ஸ்திரீகள் உடுத்து, நாணயமாக, சுத்தமாக, நேர்த்தியானது போல் காணப்பட விரும்பினால், என்னைப் பொறுத்த வரையில் அதனால் ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் பெருமைகொள்ள அவ்விதம் செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் தவறு செய்கின்றீர்கள். அது உங்கள் மனப்பான்மையைப் பொறுத்தது. சிலகாலத்துக்கு முன்பு அவர்கள் 'ஸ்காண்டில் பாவாடைகள்' என்று அழைக்கப்பட்ட பாவாடைகளை உடுத்திக்கொண்டது ஸ்திரீகளாகிய உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? அவை மறுபடியும் வெளியே வருகின்றன என்று நினைக்கிறேன்... இப்பொழுது, அவைகளை 'ஸ்காண்டில்' என்பதற்கு பதிலாக 'ஸ்காண்ட் லெஸ்' என்று அழைக்கின்றனர். அந்த பெண்களும் வாலிப ஸ்திரீகளும்... வயோதிப ஸ்திரீகளும் கூட அதை உடுப்பது வழக்கம். ஏனெனில் அவர்கள் அனைவரும் இளமையாகக் காணப்பட விரும்புகின்றனர். சகோதரிகளாகிய உங்களை நான் கூறவில்லை. உலகப்பிரகாரமான ஸ்திரீகளையே குறிப்பிடுகிறேன். அவர்கள் தங்கள் பாவாடைகளை ஒவ்வொரு முறையும் ஒரு அடி உயர்த்தி வெட்டுவார்கள். அவர்கள் அழகான உள்ளாடையை அணிவார்கள். அவர்கள் அடியெடுத்து வைக்கும் போது, பின்னல்' (lace) சுருக்கம் (frill) வைத்துதைக்கப்பட்ட உள்ளாடை காணப்படும். அந்த உள்ளாடையைக் குறித்து உங்களுக்குத் தெரியும். 34'டன்கர்ட்' (Dunkard) பெண் ஒருத்தி என்னிடம் வந்தாள். அவள் சற்று முன்பு தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அவள் 'அசெம்பிளீஸ் ஆப் காட்' சபையைச் சேர்ந்தவள். இது நான் விவாகம் செய்து கொண்ட இந்தியானாவிலுள்ள ஃபோர்ட் வேய்ன் என்னுமிடத்தில் நடந்தது. அவள் என்னிடம் வந்தாள், மிகவும் அருமையான பெண். அவள், “சகோ. பிரான்ஹாமே, உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றாள். நான், “சரி, சகோதரியே, அது என்ன?” என்று கேட்டேன். அவள், “ஒரு கிறிஸ்தவப் பெண் 'ஸ்காண்டில் பாவாடை' உடுத்துவது தவறென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றாள். நான், “சகோதரியே, அது என்ன விதமான பாவாடை என்று எனக்குத் தெரியவில்லை. 'ஸ்காண்டில் பாவாடை' என்றால் என்ன?” என்று கேட்டேன். அவள் அது என்னவென்று எனக்கு விளக்கித்தந்தாள். நான்.... அவள், “அது உள்ளாடையைக் காண்பிக்கும் ஒன்று” என்றாள். “உள்ளாடையை ஏதோ ஒரு மனிதனுக்கு காண்பிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் உள்ளத்தில் என்ன உள்ளது? அவ்விதம் செய்வதற்கு ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு என்ன வேலை? ஒரு கிறிஸ்தவ பெண் அவ்வாறு செய்வதை எண்ணிப் பார்க்க முடிகிறதா?” என்று கேட்டேன். 35இப்பொழுது, பாருங்கள், ஒரு மனிதனுக்கு தன் உடலில் காண்பிக்க அதிகம் ஒன்றுமில்லை. அவன் அரை நிர்வாணியாய் நடந்து சென்றால், யாரும் அவதூறு பேசமாட்டார்கள். நான் ஆண்கள் சார்பில் பேசுவதாக எண்ண வேண்டாம், ஆனால் அவர்கள்... 'ஷர்ட்டைக் கழற்றிப்போட்டு, குட்டை கால்சட்டையுடன் நடந்து செல்லும் ஒரு மனிதனைப் பார்த்து எந்த விதமான பெண் கவரப்படுவாள் என்று உங்களுக்குத் தெரியும். பெரிய திடகாத்திரமுள்ள உடல், அது காண்பதற்கு அருவருப்பாய் உள்ளது. அங்குள்ள இந்த மனிதரைப் பாருங்கள். அதைக் காணும்போது ஒரு ஸ்திரீக்கு வாந்திப் பண்ணத்தான் தோன்றும்... ஆனால் ஒரு ஸ்திரீயை நீங்கள் எடுத்துக்கொண்டு அவளை அந்த விதமான நிலையில் வைத்தால், அது வித்தியாசமான ஆலயம். உங்களுக்குப் புரிகிறதா? சரி. நான் நினைக்கிறேன், கழுத்து மாலையைப் பொறுத்த வரையில்... நீங்கள்... நீங்கள் பத்து சென்டு அங்காடிக்கு போனதைப்போல் நிறைய ஆபரணங்களை அடுக்கிக் கொண்டு, காந்தத்தை உங்கள் மேல் கொண்டவர்களாய் செல்வீர்களானால், நான் நினைக்கிறேன், அது... அவ்விதம் கூறினதால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அவ்விதம் கூறவேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனால் அது தவறு. 36நான் முதன்முதலாக அமெரிக்காவைக் குறித்து வெட்கமடைந்து, அதற்கு விரோதமாக என்னைத் திருப்பின் சம்பவம் என்னவென்றால்... ஒரு நாள் நான் ஸ்விட்சர்லாந்தில் இருந்தேன். லாசேன் என்னுமிடத்தில் நானும் சகோ.ஆர்கன் ப்ரைட்டும், ஒரு பெரிய, நல்ல 'ஸ்டீக்' கிடைக்குமிடத்தைக் கண்டு பிடித்தோம். அது இவ்வளவு பெரிதாயிருந்தது, ஏறக்குறையமுக்கால் பவுண்டு எடையுள்ளதாயிருந்தது, அதன் விலை அமெரிக்க நாணயத்தில் முப்பது சென்டுகள் மட்டுமே. ஓ, நாங்கள் ராஜாக்களைப் போல் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் அங்கு செல்வோம். அங்குள்ள எல்லோருமே திராட்சரசம் குடிப்பார்கள், அது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. நான் அந்த திராட்சரசம் குடிக்க மறுத்துவிட்டேன், எனவே நான் மருந்து கடைக்குச் சென்று அவர்கள் வைத்திருந்த வடிகட்டின தண்ணீர் ஒரு குப்பி வாங்கிக் கொண்டேன். நான் சென்றவிடமெல்லாம், அதை என்னுடன் கொண்டு சென்றேன். எல்லோரும், “அந்த மனிதன் தன் சொந்த ரகம் திராட்சரசத்தை கூடக் கொண்டு செல்கிறார்” என்று நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். எனவே அதை என் கையில் பிடித்திருந்தேன். ஒரு நாள் நாங்கள் இந்த 'ஸ்டீக்'குகள் விற்கும் இடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது அமெரிக்கா அழகுராணி (Miss America) காரில் அங்கு வந்தாள். அவள் 1928ம் மாடல் ஷெவர்லே காரை ஓட்டி வந்தாள். அவள் 'பூடுல்' ரக நாய் ஒன்றை மடியில் வைத்திருந்தாள். அதையும் அவள் கடைக்குள்ளே கொண்டு வந்தாள். அவளுக்குப்போதிய ...அந்த ஸ்திரீகள் இருவரும் பத்து சென்டு அங்காடியில் கிடைக்கும் நிறைய நகைகளை அணிந்திருந்தனர், பெரிய, நீண்ட, காதணிகள் கீழே தொங்கிக் கொண்டிருந்தன, முகத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்குமே ஐம்பது வயதிருக்கும், என் வயது. அவர்கள் பதினைந்து வயது பெண்களாக ஆக விரும்பினர் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். அவர்கள் என்ன செய்ய முயன்றனர்? அவர்கள் வாழ்க்கை சாலையில் காரோட்டிக் கொண்டு, பின்புறம் காணும் கண்ணாடி வழியாய் பார்த்து, அவர்கள் முன்பு எவ்விதம் காணப்பட்டனர் என்பதை பின் நோக்கிக் காண முயன்றனர். 37இப்பொழுது, கிறிஸ்தவர்களே, அப்படிச் செய்யாதே ஒரு கிறிஸ்தவன். அவன் முன்பு காணப்பட்ட விதமாக இருக்க முயல்வதில்லை; அவன் முன்பு எங்கிருந்தான் என்பதை நோக்கி பாராமல், அவன் எங்கு செல்கிறான் என்பதையே நோக்குகின்றான். பாருங்கள், பாருங்கள்? முன்பு எவ்விதம் இருந்தாய் என்பதைக் குறித்து கவனம் செலுத்தாதே; அதை நீ வாழ்ந்து முடித்துவிட்டாய். அதற்கு நீ திரும்பிச் செல்லப்போவதில்லை; அது முன்காலத்து ஒன்று. காரிலுள்ள பின்புறம் காணும் கண்ணாடியின் வழியாக வாழ்க்கை சாலையில் காரோட்டிச் செல்லும் எந்த மனிதனும் விபத்துக்குள்ளாகி நாசமடைவான்; அப்படித்தான் கிறிஸ்தவ சாலையில் பயணம் செல்லும் உங்களுக்கும் நேரிடும். நீ என்னவாயிருந்தாய் என்று பின்நோக்கிப் பாராதே, நீ என்னவாய் இருக்கப் போகின்றாய் என்பதை முன்நோக்கிப்பார். பவுல், “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்றான் (பிலி. 3:13-14). அது உங்களை வெட்கத்துக்குள்ளாக்கியது. அவர்கள் இந்த சிறு, நாற்றமெடுத்த நாயை உள்ளே கொண்டு வந்து மேசையின் மேல் உட்காரவைத்தனர். அது எவரையும் வாந்திபண்ணச் செய்யும்! அங்கு தங்கள் கைகளினால் அந்த நாயிடம் அங்கு விளையாடிக் கொண்டு, அதே கைகளை உபயோகித்து அதை தின்றனர். உணவு கொண்டு வருகிறவன் (waiter) அங்கு வந்து அவர்களிடம் ஏதோ ஒன்றைத் தன் மொழியில் உளறினான். டாக்டர் குக்கென்புல் அப்பொழுது என்னுடன் இருந்தார். அவர் சிரிக்கத் தொடங்கி, தலையைத் திருப்பிக் கொண்டார். நான், “அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டேன். “அந்த 'வேய்ட்டர்' அந்த நாயை கீழே இறக்கி விடக் கூறினான். ஆனால் அங்கிருந்தவர்கள் 'அவளை விட்டு விடு. அவள் அமெரிக்க நாட்டுப் பெண்' என்றனர்'' என்றார். அதாவது “அவளுக்கு இதை விட நல்லது வேறொன்றும் தெரியாது” என்னும் அர்த்தத்தில் கூறினர். பாருங்கள்? நான் ரோமாபுரியிலுள்ள வாடிகன் நகரத்திலுள்ள செயின்ட் ஆஞ்சலோ என்னுமிடத்துக்குச் சென்றிருந்தபோது (இதை சிந்தித்துப் பாருங்கள்), அவர்கள் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருந்தனர்: “அமெரிக்க ஸ்திரீகளே, நீங்கள் சவ அறையில் பிரவேசிக்கும் முன்பு, இறந்தோரை கெளரவிக்க உங்கள் உடைகணை அணிந்து கொள்ளுங்கள்” கத்தோலிக்க சபை. பாருங்கள்? 38கேள்வி: சகோ. பிரான்ஹாமே, பூமி வெடித்து எரியும் போது, மணவாட்டி எங்கிருப்பாள்? வாதைகள் விழுந்த போது, இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டைப் போல் அது ஒரு இடமாக இருக்குமா? அது நடக்கும் போது மணவாட்டி பூமியில் இருப்பாளா? அப்படியானால், அவள் எங்கிருப்பாள்? எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் நேரத்தில் மணவாட்டி அனைவரும் ஒரே இடத்தில் இருப்பார்களா? மணவாட்டி, பூமி வெடிக்கும் போது... எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் நேரம், மரித்தோர் நித்திரையினின்று எழும்பி, உயிரோடிருப்பவர்களுடன் ஒன்று சேர்ந்து, எடுத்துக் கொள்ளப்படுதலில் அவர்களைக் கொண்டு செல்லும். இப்பொழுது, மணவாட்டி ... இப்பொழுது, பாருங்கள், எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு நடைபெற வேண்டிய சம்பவங்களில் ஒன்றாகும். பூமி எரியும் சம்பவம், ஆயிரம் வருட அரசாட்சிக்கும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கும் இடையே நடக்கும் ஒன்று. பாருங்கள்? பரிசுத்தவான்கள் பூமியின் பரப்பில் பாளயமிறங்கியிருக்கும் போது, சாத்தான் அந்த அன்பார்ந்த நகரத்தை சுற்றி வளைவான். தேவன் அப்பொழுது வானத்திலிருந்து அக்கினியையும் கந்தகத்தையும் பொழிந்து அவர்களை அழித்துப்போடுவார். சரி, வேதம் அவ்வாறு உரைக்கிறது. 39கேள்வி: மேலும், சகோ. பிரான்ஹாமே, ஒரு ஸ்திரீ தன் புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் கிறிஸ்தவ ஸ்திரீ ஒருத்திக்கு, உங்கள் ஆராதனைகள் ஒன்றுக்கும் கூடவராத பாவியான புருஷன் ஒருவன் இருந்து, அவன் மனைவியிடம் தலை மயிரைக்கத்தரித்துக் கொள்ளவும், குட்டை கால் சட்டை அணிந்து கொள்ளவும், தேவபக்தியற்ற இடங்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தினால், அந்த ஸ்திரீ இந்த மனிதனுக்கு அவ்வழியில் கட்டுப்பட்டிருக்க வேண்டுமா? தயவுகூர்ந்து இதை இன்னும் தெளிவாக விளக்குங்கள், ஏனெனில் இது அடிக்கடி கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகும். இப்பொழுது, சகோதரியே, அப்படிப்பட்ட ஒருவனுக்கு நீ கீழ்ப்படிய வேண்டியதில்லை. இல்லவே இல்லை. இந்த காரணத்திற்காக, நீ எல்லாவற்றையும் விட்டு தேவனிடம் இசைந்திருக்க வேண்டும். இப்பொழுது, காரியம் என்னவெனில்... அந்த மனிதன் உன்னுடன் வாழ விரும்பி, நீ கிறிஸ்தவளாக இருக்க சம்மதித்தால்.... ஆனால் அவன் உன்னை குட்டை கால் சட்டை அணியவும், தலை மயிரை கத்தரிக்கவும், மற்ற காரியங்களைச் செய்யவும், தேவபக்தியற்ற இடங்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தினால், முதலாவதாக நீ தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடு. அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு நீ கட்டுப்பட்டவள் அல்ல. வேதம் என்ன கூறுகிறதென்றால், “அவளும் அவனும் ஒன்றாக வாழ திருப்தி கொண்டால், அவர்கள் .... இப்பொழுது, அந்த வேத வசனத்தை நான் குறித்து வைக்கவில்லை, ஏனெனில் சில நிமிடங்களுக்கு முன்புதான் இந்தக் கேள்வியை நான் கையிலெடுத்தேன். இப்பொழுது நான் ஒன்றைகையிலெடுக்கிறேன், எனக்கு நேரமில்லாமல் போய் விடுகிறது .... 40பவுல் என்ன சொல்லியிருக்கிறான் என்றால், அவிசுவாசியான ஒரு புருஷனுக்கு விசுவாசியான ஒரு மனைவி இருந்து, அவன் தேவனுக்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தூண்டாமல், அவளுடன் வாழ விரும்பினால்.... “இனியவளே. நீ போய் வா, உனக்கு சபைக்கு போகவேண்டுமென்றால் போ, ஆனால் நான் வரமாட்டேன், அதில் எனக்கு விசுவாசம் இல்லை; அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. நீ போய் வா. ஆனால் அவன், ''நீ போகக்கூடாது'' எது. அதற்கு நீ கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தேவனுக்கென்று எல்லாவற்றையும் விட்டு பிரிந்து விடு. 41சகோ. பிரான்ஹாமே, (நாம் பார்ப்போம்)... விவாகரத்து செய்யப்பட்ட துணைவி உயிரோடிருக்கையில், செய்திக்கு வருவதற்கு முன்பு மறு விவாகம் செய்து கொண்ட ஒரு நபர் ஊழியம் செய்வது முறையாகுமா? நல்லது, நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், இந்த கேள்விக்கு விடையாக 1 தீமோத்தேயு 3:2, தீத்து 1:6 ஐ நீங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் (இவைகளை நான் எழுதி வைத்திருக்கிறேன்). பாருங்கள்? ஒரு மனிதன் கண்காணிப்பாளன் அல்லது பிரசங்கியின் உத்தியோகம் வகிக்க ஆவல் கொண்டால் (அல்லது சபையில் வேறெந்த உத்தியோகத்தையும்), அவன் ஓரே மனைவியை உடையவனாயிருக்க வேண்டும். அது உண்மை ! ஒரு போதகர். இப்பொழுது, அது 1.தீமோத்தேயு 3:2ம், தீத்து 1:6ம். ஆம்! நல்லது. தேவனுடைய வீட்டில் ஊழியக்காரனாயிருக்கும் ஒருவன் ஒரே மனைவியை உடையவனாயிருக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். 42கேள்வி: அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேவன் என்னைச் சந்தித்து அன்பின் வரம் என்னவென்பதை எனக்கு வெளிப்படுத்தினார். அன்று முதல் அதற்கு நான் திரும்ப வேண்டும் என்பதே என் ஜெபமாயுள்ளது. நான் மரிக்கும் முன்பு அதைப்பெற்றுக் கொள்வேனா? என் கணவர் வார்த்தைக்கு செவிகொடுப்பாரா, நான் என்ன செய்ய வேண்டும்? அது ஒரு நல்ல கேள்வி. இப்பொழுது, அவள் கூறியிருக்கிறாள். இங்கு, என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அவள் “என் கணவர்” என்று கூறியுள்ளதால், அதைக்கூறினது ஒரு ஸ்திரீயாக இருக்க வேண்டும். இப்பொழுது, அவள் ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்துவிட்டாள். பாருங்கள்? அவள் ஆவியில் குளிரடைந்து விட்டாள். இப்பொழுது, சகோதரியே, நீ இன்னும் சபைக்கு வந்து கொண்டிருந்து, சரியான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறபடியால், உன் இரட்சிப்பை நீ இழந்து போகவில்லை, ஆனால் உன் இரட்சிப்பின் சந்தோஷத்தை தான் இழந்து போயிருக்கிறாய். ஒரு முறை தாவீது, “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும்” என்று கதறினான் (சங்.51:12). நீ இன்னும் கிறிஸ்தவளாகத்தான் இருக்கிறாய் எனவே நீ என்ன செய்ய வேண்டுமென்றால், சகோதரியே, உனக்குத் தெரிந்த வரைக்கும் எல்லாவற்றையும் புறம்பாக்கிவிட்டு, தேவனை தேடி ஜெபம்பண்ணு . “என் கணவர் வார்த்தைக்கு செவி கொடுப்பாரா, நான் என்ன செய்ய வேண்டும்?” இன்று காலை கூறினது போல, உப்புத்தன்மை கொண்டவளாயிரு. “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் . உன் கணவர் உன் கற்புள்ள வாழ்க்கையைக் கவனிப்பார். அவிசுவாசியான புருஷன் விசுவாசமுள்ள தன் மனைவியினால் கர்த்தருக்கு பரிசுத்தமாக்கப்படுகிறான். கர்த்தரைத் தேடி, தாழ்மையுடன் இருந்து, எல்லா நேரத்திலும் ஜெபம் செய்து, தேவனுக்கு துதியைச் செலுத்தி, உன் கணவர் தற்போதைய நிலையில் உன்னுடன் வாழ சித்தம் கொண்டுள்ள வரைக்கும் அவருடன் தயவாய் நடந்துகொள். 43கேள்வி: இது ஞாயிறு ஆராதனைகளுக்காக. ஒரு ஸ்திரீ ஒரு தவறைச் செய்து... (இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள்; இதை நான் முதலில் படிக்கட்டும். பாருங்கள்? சகோ.பிரான்ஹாம் தனக்குள் அந்த கேள்வியைப் படிக்கிறார் - ஆசி) சரி, அது பரவாயில்லை). ஒரு ஸ்திரீ விவாகமான ஒரு மனிதனுடன் ஒரு தவறைச் செய்து, மனந்திரும்பி, வேதத்தின்படி தன் கணவருடன் அதை சரி செய்து கொண்டு விட்ட பிறகு, அவள் ஈடுபட்ட அந்த மனிதனின் மனைவிக்கு இதைக்குறித்து ஒன்றும் அறியாமலிருந்தாலும், அவளிடம் சொல்ல வேண்டியது அவசியமா? அல்லது அந்த மனிதன் அவளிடம் முதலில் சொல்ல வேண்டுமா? அல்லது அவளைப் புண்படுத்துவது அவசியம்தானா? இது நடந்து முடிந்தபிறகு, நட்புத் தன்மை ஈடுபட்டுள்ள இவ்விஷயத்தில் எவ்வளவு தூரம் நாம் சென்று இதை சரி செய்து கொள்ள வேண்டும்? நல்லது, என் அருமை சகோதரியே, நீ ஒரே ஒரு காரியத்தை மட்டும் சரியாகச் செய்திருக்கிறாய். நீ அதில் ஈடுபட்டாய் என்று நினைக்கிறேன், அல்லது உனக்குத் தெரிந்த யாரோ ஒருத்தி இந்த தவறான செயலில் ஈடுபட்டிருக்கிறாள். நீ வேறொரு ஸ்திரீயின் துணைவருடன் இந்த சமூக செயலைச் செய்திருக்கிறாய். நீ அதைச் செய்த போது கிருபையிலிருந்து விழுந்துவிட்டாய். அதன் பிறகு நீ மனந்திரும்பினாய். நீ அந்த மனிதனிடம் சென்று அதை சரிசெய்து கொள்ளும் வரைக்கும் உன்னால் மனந்திரும்ப முடியாது. நீ அந்த செயலில் ஈடுபட்ட அந்த மனிதனிடம் உன் கணவரையும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த காரியத்தை தான் நீ செய்திருக்க வேண்டும். அது தான் வேதப் பிரகாரமானது. 44இங்குள்ள லூயிவில்லில் வசிக்கும் ஒருத்தி என்னிடம் வந்திருந்தாள். அவள் ஒரு வாலிபப் பெண். அவள் ஒரு மனிதனுடன் தொடர்பு கொண்டிருந்தாள். அதன்பிறகு அவள்... அவள் செய்வது தவறென்று அறிந்துகொண்டாள். எனவே அவள் நகரத்தை விட்டு, தூரத்திலுள்ள வேறொரு நகரத்துக்கு சென்று, அவளுடைய பெயரை மாற்றிக்கொண்டு, அங்கிருந்த சிலருடன் வாழ்ந்து வந்தாள். இந்த மனிதன் அவளைப் பின்தொடர்ந்து அங்கு அடைந்து அவளிடம், அவள் மேல் இந்த சுமை உள்ளதென்றும், அவள் அவனுக்கு மனைவியாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், இல்லையென்றால் அவன் இந்த விவகாரத்தைக் குறித்து கூறிவிடுவானென்றும் பயமுறுத்தினான் (அவள் அந்த இடத்தில் ஒரு அருமையான கிறிஸ்தவனை மணந்து கொண்டாள். அவள் அவ்விதம் நடந்து கொள்ளாவிட்டால் அவன் முழு விவகாரத்தையும் அம்பலப்படுத்திவிடுவதாக மிரட்டினான். எனவே அவள் தொடக்கத்தில் தன் நிறத்தைக் காண்பிப்பதற்கு பதிலாக இந்த இரு மனிதருக்கும் வாழ்க்கைப்பட வேண்டியதாயிற்று. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு இப்பொழுது பதினெட்டு வயதாகின்றது. இவர்களில் யார் அவளுடைய தகப்பன் என்று அவளுக்குத் தெரியாது. இப்பொழுது அவளுடைய மாதவிடாய் நின்றுவிட்டது, அது அவளுக்கு நேர்ந்துவிட்டது. இப்பொழுது அவளால் என்ன செய்ய முடியும்? நான், “நீ செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று. ” என்றேன். அவள், “என் கணவரிடம் இதைப் பற்றி கூறினால், அவர் என்னை விட்டுப் போய் விடுவார். என் மகள் அறிந்தால், அவள் தற்கொலை செய்து கொள்வாள்” என்றாள். நான் அவளிடம், “இதை நீ மனதிலே வைத்துக் கொண்டிருந்தால், நீ நரகத்துக்குப் போவாய். இப்பொழுது, நீ எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்” என்றேன். செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அதை துடைத்து சரிபடுத்திக் கொள்வதே. அது முற்றிலும் உண்மை. உண்மையுள்ளவளாயிரு. 45உங்களுக்குத் தெரியும், அநேக சமயங்களில், ஸ்திரீகளும் மனிதரும் வரும்போது, தரிசனங்களில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் வாழ்க்கையில் செய்தவைகளை தோண்டி எடுத்து வெளிப்படுத்துவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், கண்டிருக்கிறீர்கள், அது உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? அவர்கள் என்ன செய்ய வேண்டும் மென்பதையும் அவர் அவர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவர்கள், “நல்லது. நான் அதை ஏற்கனவே கர்த்தரிடம் சரி செய்து கொண்டுவிட்டேன் என்கின்றனர். ஆனால் நீங்கள் உங்கள் கணவரிடமோ அல்லது உங்கள் மனைவியிடமோ சென்று அவர்களிடம் இதைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் அதை அறிக்கைசெய்ய வேண்டும். இப்பொழுது, இந்த நபர், அவள் குற்றவாளியாயிருப்பாளானால், அவள் அதைச் செய்துவிட்டாள், அவள் தன் கணவரிடம் சென்று அறிக்கை செய்து விட்டாள். இப்பொழுது, சகோதரியே, உன்னை நீ சுத்தப்படுத்திக் கொண்டு விட்டாய், ஏனெனில் இடையில்... நீ உன் கணவருக்கு விரோதமாக விபச்சாரம் செய்தாய். நீ உன் கணவரிடம் சென்று அறிக்கையிட்டு உன்னை சுத்தப்படுத்திக் கொண்டு விட்டாய். அதன் பிறகு அந்த மனிதனிடமும் சென்று அங்கேயும் அதை சரிசெய்து கொண்டுவிட்டாய். நீ சுத்தமாயிருக்கிறாய். உன் கணவர் உன்னுடன் தொடர்ந்து வாழ விரும்பினால், நீ மறுபடியும் அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாதபடிக்கு நற்பண்புள்ளவளாயிரு அவர் அக்குற்றத்தை மன்னிக்காவிட்டால், அது அவருடைய சொந்த விஷயம். அவர் உன்னைத் தள்ளிவிடலாம். முற்றிலும் உண்மை. இப்பொழுது, அச்செயலில் நீ ஈடுபட்ட அந்த மனிதன், அவர் தான் தன் மனைவியிடம் சென்று அவளை உன்னிடம் கூட்டிக் கொண்டு வர வேண்டும். உன் பாகத்தை நீ செய்து விட்டாய், அவர் தன்னுடைய பாகத்தை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பார். 46இந்த ஸ்திரீ அந்த மனிதனுடன் அந்த செயலில் ஈடுபட்டாள். அவள் தன் கணவரிடம் சென்று அதை அறிக்கையிட்டு விட்டு, அந்த மனிதனிடமும் சென்று அதை அறிக்கையிட்டு விட்டு, அதை சரிசெய்து கொண்டு விட்டாள். அந்த மனிதனும் விவாகமானவர். இப்பொழுது அவர் தன் மனைவியிடம் சென்று அவளைக் கூட்டிக்கொண்டு இந்த ஸ்திரீயிடம் வரவேண்டும். அப்பொழுது அது சரியாகி விடும். நான் கூறுவது விளங்குகிறதா? அப்பொழுது அது தீர்ந்து விடும். அதை செய்யாமல் போனால், உன் இருதயம் உன்னைக் குற்றப்படுத்திக் கொண்டிருக்கும். அண்மையில், முதலாம் உலகப் போர் முதற்கொண்டு இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்த ஒரு ஸ்திரீ என்னிடம் வந்திருந்தாள் . அவள், “ஓ, சகோ. பிரான்ஹாமே” என்றாள். அவள் மனநிலை நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து விட்டாள். அங்கு நான் உட்கார்ந்து கொண்டு அந்த அறையில் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மேடா அவளை இங்கு கொண்டு வந்திருந்தாள். அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு, கைக் குட்டையை தன் கையில் இப்படி பிசைந்து கொண்டு, “உலகம் வெடித்து விடப் போகிறது போன்ற உணர்வு எனக்கு உண்டாகிறது. நான்...” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தாள். நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் “இது ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. உன் வாழ்க்கையில் எங்காவது ஏதாகிலும் நடந்ததுண்டா?” என்று கேட்டேன். அவள், “இல்லை, நான் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை என்றாள். நான், “சரி” என்றேன். அங்கு சிறிது உட்கார்ந்து கொண்டு அவளைக் கவனித்தேன். “நான் பச்சை நிறக் கார் ஒன்றைக் காண்கிறேன், நீ வெள்ளை தலைமயிர் கொண்ட ஒரு மனிதனுடன் அதில் இருக்கிறாய். ஒரு ரயில் வண்டி ஏறக்குறைய அந்த காருடன் மோதி விட்டது” என்றேன். அவள், “அதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றாள். நான், “உன் கணவர் அப்பொழுது இராணுவத்தில் இருந்தார்” என்றேன். அவள் அழுது புலம்பி மேலே குதித்தாள். “அதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றாள். பாருங்கள்? அது அவள் உள்ளுணர்வில் குடி கொண்டிருந்தது. அவள், “நான் நீண்ட காலத்துக்கு முன்பே அதை தேவனிடம் அறிக்கை செய்து விட்டேன்” என்றாள். நான் “ஒரு நிமிடம் பொறு. நீ தேவனுக்கு விரோதமாக தவறு செய்யவில்லை. உன் விவாகப் பொருத்தனைக்கு விரோதமாக நீ ஒரு பாவத்தைச் செய்திருக்கிறாய். நீ உன் கணவரிடம் சென்று அதை முதலில் சரி செய்துகொள்ள வேண்டும்” என்றேன். அவள், “அவர் என்னை விட்டுப்போய் விடுவார்” என்றாள். நான், “தேவன் எப்படியும் உன்னை விட்டு போய்விட்டார். இப்பொழுது, யார் உன்னை விட்டுபோக வேண்டுமென்று நினைக்கிறாய்? உன் கணவரிடம் போ” என்றேன். அவள், “ஓ, நான் - நான்... அவர் இதை செய்வார், எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்றாள். நான், “நல்லது, இவ்வளவு தான் நான் உன்னிடம் கூற முடியும். மனநிலை நிபுணர் அதை உனக்குள்ளிருந்து வெளியே கொண்டு வரவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். உன்னை நான் என் வாழ்க்கையில் கண்டதேயில்லை! என்றேன். அவள், “அது முற்றிலும் உண்மையே. நல்லது, நான் அவரிடம் கூற முடியாது” என்றாள். நான், “நல்லது. நான் .... உன்னை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குச் சென்று விட்டேன். மேடா அங்கு வந்தாள். மேடா, “அவள் உங்களைக் காண விரும்புகிறாள்” என்றாள். ' நான் அங்கு சென்று, “உனக்கு என்ன வேண்டும்?” என்றேன். அவள், “சகோ. பிரான்ஹாமே, அதை என் கணவரிடம் என்னால் கூற இயலாது” என்றாள். நான், “உன் கணவர் கறுப்பு தலைமயிர் கொண்டவர்” என்றேன். “ஆம். நான், “அதேவிதமான ஒரு காரியத்தை அவர் உன்னிடம் அறிக்கை செய்ய வேண்டியவராயிருக்கிறார்” என்றேன். அவள், “ஓ, என் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல” என்றாள். நான், “நீ போய் அவரை இங்கு கூட்டிக் கொண்டு வா. ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ உனக்குத் தெரியுமா, அவள் 'பிங்க் நிற ஆடை அணிவதுண்டு. அவள் ஒரு குறிப்பிட்ட மோட்டார் வாகன நிர்வாகத்தின் அலுவலகத்தில் வேலை செய்கிறாள்” என்றேன். அவள், “நிச்சயமாக” என்றாள். நான், “அவளை ஒரு குறிப்பிட்ட பெயரால் அழைக்கிறார்கள் அல்லவா?” என்றேன். “ஆம்.” நான், “இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு 'பீச் (beech) மரத்தின் அடியில் ஒருபழுப்பு நிற ஷெவர்லே காரில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதன் லைசென்ஸ் நம்பர் இன்னின்னது. அவர்கள் அதே செயலில் ஈடுபட்டிருந்தனர்” என்றேன். அவள், “அது என் கணவராக இருக்காது” என்றாள். நான், “சரி, அவரை இங்கு கூட்டிக் கொண்டுவா” என்றேன். அவள் சென்றாள். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் இருவரும் வந்தனர். அவர், “அது உண்மை ” என்றார். நான், “பார்த்தாயா? நீ போய் தேவனிடம் சொல்” என்றேன். 47ஆனால் முதலாவதாக, நீ பலிபீடத்தினிடத்தில் வரும்போது, குறை உண்டென்று கண்டால், நீ போய் அதை சரி செய். அந்த நபர் தன் மனைவியிடம் அதை கூறாமல் குற்றவாளியாயுள்ளவரைக்கும்...... இந்த மனைவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள். இப்பொழுது அது மற்ற பெண்ணையும் அவளுடைய கணவரையும் பொறுத்தது. இந்த மற்ற மனிதனும் அவருடைய மனைவியும் அதை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னால் முடியாது .... நீ என்ன செய்த போதிலும், நீ அதை சுத்தமாக கழுவிக் கொள்ளாவிட்டால், அது உன்னை உன் வாழ்நாள் முழுவதும் அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். அதைச் செய்வதற்கு ஒரே வழியுண்டு; அதை அறிக்கை செய். அது உன் தோலை உரித்தாலும், அதை எப்படியும் செய். உண்மையைச் சொல், அப்பொழுது நீ அதை சரியாக பெற்றுக் கொண்டாய். ஆமென்! இந்த ஒலிநாடாவைக் கேட்கும் அநேகர், “இது தவறு என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அதை ஒருமுறை முயன்று பார்த்து அது சரியா என்பதைக் கண்டுக்கொள்ளுங்கள். சரி. 48ஞாயிறு காலைக்கு கேள்வி: (வருந்துகிறேன், இதை இந்த நேரத்தில்தான் பார்க்க முடிகிறது, ஆனால்...) பரிசுத்த ஆவியைப் பெறும் நேரத்தில், அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுகையில், ஏதாகிலும் வித்தியாசம் உண்டாகின்றதா? ஒரு நபர் அந்நிய பாஷையில் பேசுகின்றாரா? அப்படி எப்பொழுதும் இல்லாமல் போனால், வேறெந்த அடையாளம் காணப்படுகிறது? நல்லது. ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் ஒரு தாய் அதை அறியாமலிருப்பாளா? அவள் அதை அறியாமலிருக்க வேண்டுமென்றால், அவள் மயக்கமுற்ற நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது, அதை அறியாமலிருக்க முடியாது. ஏதோ ஒன்று உங்களில் நடக்கிறது. பாருங்கள்? ஏதோ ஒன்று உங்களை மாற்றுகிறது. உங்கள் முழுஅமைப்பு, உங்கள் ஆவிக்குரிய அமைப்பு முழுவதும் மறுபடியும் புதிதாகின்றது, வேதம் கூறுவது போல் நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகி விடுகின்றீர்கள். அதை நீங்கள் உணர்வீர்கள்.... இப்பொழுது, நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, அப்படியானால் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்பதை நீங்கள் நம்புவதில்லை” எனலாம். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான் என்பதை நிரூபிப்பதற்காக அல்ல. 49என் சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் தேவனிடத்தில் கேட்பீர்களானால், தேவன் அதை உங்களுக்குத் தந்தருளுவார். ஆனால் இதை உங்களிடம் கூற முற்படுகிறேன். அதாவது, பரிசுத்த ஆவியைப் பெற்றிராமல் அந்நிய பாஷையில் பேசும் அநேக ஜனங்களை நான் அறிவேன். தனக்கும் தன் சபையாருக்கும் உண்மையாயுள்ள எந்த ஒரு போதகரும் இதைப் பற்றி சபையாரிடம் கூறாமலிருக்கமாட்டார். பிசாசினால் அதை பாவனை செய்ய முடியும். பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், வேதத்திலுள்ள சகல இரகசியங்களையும் நான் அறிந்திருந்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், இவையனைத்தையும் செய்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்கிறான். அவன் மேலும், நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்' என்கிறான்,'' அதாவது நிறைவானது தெரியப்படுத்தப்படும்போது. அதன் பேரில் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. அதை இன்றிரவு பார்த்து விடுவேன் என்று நம்புகிறேன். அது முத்திரைகள் திறக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதைக் குறித்தது. ஒருக்கால் இந்த கேள்விக்கு அது சரியான பதிலாய் அமையும். 50கேள்வி: சகோ. பிரான்ஹாமே, நாங்கள் என்ன செய்வோம்? ஏதோ ஒன்று என் மேல் தங்கியுள்ளது, அதிலிருந்து விடுபட என்னால் முடியவில்லை. போன இலையுதிர்காலத்தின் போது, நான் வெள்ளை மணலில் காணாமற்போனதாக கனவு கண்டேன். அப்பொழுது இருளாகிக் கொண்டிருந்தது. என்னால் என் வழியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சென்ற இலையுதிர் காலம் முதற்கொண்டு அந்த கனவு எனக்கு உண்டாகிக் கொண்டேயிருக்கிறது. இப்பொழுது நான் இருளில் தடுமாறும் ஒருவனைப்போல் இருக்கிறேன். என் மகன் எர்வினும் என் மனைவியும் என் கனவில் இருந்தனர் அவர்களும் இருளில் இருக்கின்றனர். நாங்கள் பதற்ற முற்றிருக்கிறோம். எங்கள் இருதயங்களில் என்ன உள்ளதென்று தேவன் உமக்குக் காண்பிப்பார் என்று விசுவாசிக்கிறோம்.(திருமதி... ஓ, சரிதான்). நாங்கள் தவறாகவோ அல்லது பாவம் செய்கிறவர்களாகவோ இருப்போமானால், தயவுகூர்ந்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நாங்கள் சரியாக இருக்க விரும்புகிறோம். அந்த அம்மணியை எனக்குத் தெரியாது. அம்மணியே நீ இங்கிருக்க நேர்ந்தால், இதுதான் உன்கோளாறு என்று நினைக்கிறேன். ஏதோ ஒன்று உனக்கு சம்பவிக்க நீ அனுமதித்ததன் காரணத்தால், அது உனக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் “வெள்ளை மணல்” தூய்மைக்கும் நீதிக்கும் எடுத்துக்காட்டாயுள்ளது. சாத்தான் ஏதோ ஒன்றை உன் மேல்சுமத்த நீ அனு மதித்துக் கொண்டிருக்கிறாய். உன் கனவு, தவறு எதுவுமில்லை என்பதை நிரூபிக்கிறது. நீ பயம் கொண்டிருக்கிறாய், இதை நீ செய்வதன் மூலம், அதைக் குறித்து யோசித்துக் கொண்டேயிருப்பதன் மூலம் உன் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் பயந்துபோகும்படி செய்கிறாய். அவ்விதம் செய்வதை நிறுத்து; தேவனால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை உரிமை கோரு. நீ வெள்ளை மணலில் இருப்பதாக கண்ட சொப்பனத்தின் அர்த்தம், எல்லாமே சரியாயுள்ளது என்பதை நிரூபிக்கிறது. நீ தான் பயந்து போயிருக்கிறாள். நீ குடும்பத்திலுள்ள ஒருவர் பயந்து போகும்படி செய்தால் அது அடுத்த அங்கத்தினருக்கு, அடுத்த அங்கத்தினருக்கு பரவுகிறது. அப்பொழுது நீங்கள் அனைவரும் பயந்துவிடுகிறீர்கள். குடும்பத்திலுள்ள ஒருவர் ஏதாவதொன்றைக் குறித்து கவலை கொண்டால், அது அடுத்தவருக்கு, அடுத்தவருக்கு பரவி விடுகிறது. அப்பொழுது குடும்பம் முழுவதுமே கவலைக்குள்ளாகின்றது. அது சாத்தான். குடும்பத்திலுள்ள ஒருவர் களிகூர்ந்தால், குடும்பத்திலுள்ள மற்றவர் அவருடன் களிகூரட்டும். எனவே குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அதைச் செய்ய முயலுங்கள். 51பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உதவிசெய்யுங்கள். அம்மா, நீ .... அப்பா, உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள். அந்த இருண்ட, அவிசுவாசமான ஆவி உங்களைப் பீடிக்க இடங்கொடாதீர்கள். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். தேவனால் அளிக்கப்பட்ட உரிமைகள் 'உங்களுக்கு உண்டு. “புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அதையே சிந்தித்துக் கொண்டிருங்கள்” என்று வேதம் உரைக்கிறது. (பிலி: 4:8). தவறான காரியத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள். சகோதரியே, அதுவே உன் தொல்லை என்று நினைக்கிறேன், அருமை சகோதரியே. இதன் பேரில் நீண்ட நேரம் நிலைத்திருக்கக் கூடும். ஆனால் நான் வாக்களித்தபடி, இன்னும் இருபது நிமிடங்களில்... எத்தனை கேள்விகளைப் பார்க்க முடியுமோ, அவைகளைப் பார்க்க விரும்புகிறேன்... விடை திருப்தியளிக்கவில்லை என்றால், அதை மறுபடியும் மேசையின் மேல்வைத்து விடு, அதை மீண்டும் பார்ப்போம். 52சிலர் சகோ.பிரான்ஹாம் மனுஷகுமாரன் என்கின்றனர். என் கருத்தின்படி அக்கினி ஸ்தம்பமே மனுஷகுமாரன். நான் தவறா? நல்லது. அது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி . நான் அந்த மனுஷகுமாரன் அல்ல, ஒரு மனுஷகுமாரன். இவ்விரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு மனுஷ குமாரன், தேவ குமாரன், தாவீதின் குமாரன். இந்த நபர் இந்த கேள்வி கேட்டதன் காரணம்; அல்லது இவ்விதமான கருத்து நிலவி வருவதன் காரணம். ஜனங்கள் என்னை ஞானதிருஷ்டிக்காரனாக (scer) எண்ணுகின்றனர். நான் ஒருபோதும் அவ்விதம்... அதன் பேரில் என்னை பயங்கரமாக திட்டுகின்ற ஒரு கேள்வி என்னிடம் உள்ளது. பாருங்கள்? ஆனால் நான் - நான் - நான் - நீங்கள் - நீங்கள்... இந்தக் கேள்விகளை நான் படிக்கும்போது. நான் இந்த விதமாக ஏன் பதிலளிக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். நான் ஏதாவதொன்றைச் செய்ய நிச்சயமாக வழி நடத்தப்படும் வரைக்கும்; அப்பொழுது நான் கூற வேண்டியதைக் கூறுவேன். ஆனால் அந்த நேரம் இன்னும் வரவில்லை. எனவே நான் அபிஷேகிக்கப்பட்ட மனுஷகுமாரன் அல்ல. நான் அவருடைய தீர்க்கதரிசி என்று உரிமை கோருவதில்லை. அநேக முறை. இதை நான் கூறவில்லை என்று நினைக்கும் போது, இதை கூறியிருக்கிறேன். நான் கூறியுள்ளதை ஒலிநாடாவில் கேளுங்கள். சில சமயங்களில் இதைநான் கூறுகிறேன். ஏனெனில், தீர்க்கதரிசி என்னும் ஆங்கிலச் சொல் 'பிரசங்கி' என்று அர்த்தம் கொண்டது. அது எல்லோருக்கும் தெரியும். அகராதியைப் பாருங்கள். தீர்க்கதரிசி என்றால் பிரசங்கி' என்று ஆங்கில அகராதி கூறுகிறது. ஆனால் எபிரேயு அல்ல கிரேக்க மொழியில் தீர்க்கதரிசி' என்றால், “ஞானதிருஷ்டிக்காரன், ஒன்றை முன் கூட்டிக்கண்டு, அதை முன்கூட்டி அறிவிப்பவன்” என்று பொருள். ஆனால் ஆங்கில அர்த்தத்தின்படி, அது 'பிரசங்கி'. எனவே, என்னை உங்கள் சகோதரன் என்று அழைத்துக் கொள்வதை தவிர, மற்ற எந்த பெயராலும் என்னை அழைத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் உங்கள் சகோதரன், நீங்கள் என்னை சகோ. பில் அல்லது சகோ.பிரான்ஹாமாகக் கருதுங்கள், அல்லது நீங்கள் அதைக் குறித்து என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அது நன்றாயிருக்கும். வேறெந்த... நீங்கள் என்ன விசுவாசிக்கின்றீர்களோ, அதை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். பாருங்கள்? 53இப்பொழுது, மற்ற கேள்வி என்ன? இவற்றில் நான் மிகவும் காயப்படுகிறேன், மற்றவைகளை மறந்து விடுகிறேன். கேள்விகளில் ஒன்று, நான் மனுஷகுமாரனா என்பது. மற்றது இது தான் என்று நினைக்கிறேன் .... “ அக்கினி ஸ்தம்பம் மனுஷகுமாரனா?” இல்லை! அக்கினி ஸ்தம்பம் என்பது அபிஷேகம் செய்யும் ஒன்று. அக்கினி ஸ்தம்பம்... இது உங்களுக்கு சற்று ஆழமாக இருக்கலாம். இங்குள்ள சில வேதபண்டிதர்களுக்கு - இங்குள்ள சகோ. டாக்டர் வேய்லுக்கும், ஆர்கான்ஸாவிலிருந்து இங்கு வந்துள்ள சில போதர்களுக்கும், இங்குள்ள எனது சில நண்பர்களுக்கும் இது ஒருக்கால் தெரிந்திருக்கலாம். இப்பொழுது, அந்த அக்கினி ஸ்தம்பம் என்பது தேவனிடத்திலிருந்து புறப்பட்டு சென்ற லோகாஸ்' (Logos). லோகாஸ்' என்பது உண்மையில் தேவனுடைய பரிபூரணத்தின் தன்மையாகும் (attribute). தேவன் காணக்கூடிய ரூபமான போது, அந்த மகத்தான ஆவியின் அபிஷேகம் புறப்பட்டுச் சென்றது. அது தன்னைத் தாழ்த்தி, இறங்கி வருகிறது. பிதாவாகிய தேவன், இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேலேயிருந்த 'லோகாஸ்'... அவர் பரிசுத்தமுள்ளவரானதால், அவரால் பாவத்தைச் சகிக்க முடியவில்லை. ஏதேனில் அதற்காக இரத்தம் செலுத்தப்பட வேண்டியதாயிருந்தது. பிறகு அந்த லோகாஸ் மாம்சமாகி, நமது மத்தியில் வாசம் பண்ணினார்; லோகாஸ் வாசம் செய்த மானிட சரீரம் பலியாக செலுத்தப்பட்டது... 54மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட போது... அதன் பிறகு தேவன் மனிதனை மீட்டுக்கொள்வதற்கென மனுஷ சாயலானார்; அது மனிதனையும் தேவனையும் ஒன்றாக இணைத்தது. பரலோகமும் பூலோகமும் தழுவி ஒன்றையொன்று முத்தம் செய்து கொண்டன. லோகாஸ் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் . செய்த போது, தேவனும் மனிதனும் பிதாத்துவத்திலும் குமாரத்துவத்திலும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர். இயேசு, “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன்” என்றார் (யோவான் 16:28). அது சரியா? அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, தேவனுடைய வலதுகரத்தில் (பாரிசத்தில்) வீற்றிருக்க, அவருடைய சரீரம் மேலே எடுக்கப்பட்ட போது... தேவனுக்கு வலதுகரம் உள்ளதாக நான் கூறு முற்படவில்லை, தேவன் ஆவியாயிருக்கிறார். வலதுகரத்தில் என்பது “தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறதாயுள்ளது. அவருடைய நாமத்தினால் பரலோகத்திலுள்ள ஒவ்வொன்றும் பெயரிடப்பட்டு, அதற்கு கீழ்ப்படிந்துள்ளது. பூலோகத்திலுள்ள ஒவ்வொன்றும் அந்த நாமத்தினால் பெயரிடப்பட்டு அதற்கு கீழ்படிந்துள்ளது. இயேசு கிறிஸ்து என்னும் நாமம் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமாயுள்ளது. இப்பொழுது, அவருக்குள் வாசம் செய்திருந்த தேவனுடைய ஆவியான, அபிஷேகமான, இந்தலோகாஸ், இரத்தத்தின் பரிசுத்தமாக்கும் கிருபையினால், அநேக தேவ குமாரர்களைக் கொண்டு வந்தது, அவர்களும் இந்த அதே லோகாஸினால் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர். 55இப்பொழுது, பெந்தெகொஸ்தே நாளில், அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்து, அக்கினி மயமான நாவுகளாகப் பிரிந்து ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. அவர்களுடைய நாவுகள் அல்ல, அக்கினி மயமான நாவுகள், தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டம் மக்களின் மேல் அமர்ந்தது. அவர்கள் இந்த அக்கினி ஸ்தம்பத்தினால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டனர். அது தேவன் தம்மை மனிதனுக்குள் பிரித்துக் கொண்டார் என்பதைக் காண்பிக்கிறது. உங்களுக்கு புரிகிறதா? லோகாஸ் ஆகிய தேவன், தம்மை மனிதனுக்குள் பிரித்துக் கொள்ளுதல்! தேவன் ஒரு நபருக்குள் அல்ல, அவர் உலகம் முழுவதிலுமுள்ள தமது சபைக்குள் இருக்கிறார். ஆகையால் தான் இயேசு, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வீர்கள்” என்றார் (யோவான் 14:12). ஜேம்ஸ் அரசனின் வேதாகமம் “பெரிய கிரியைகள்” என்றுரைக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் சரியான மொழிபெயர்ப்பு'' இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வீர்கள் என்பதே. தேவன் இயேசு என்னும் ஒரு மனிதனில் அடைக்கப்பட்டு (bottled) அவரில் உட்பட்டிருந்தார். ஆனால் இப்பொழுதோ அவர் உலகம் பூராவிலும் வியாபித்திருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய சபை முழுவதிலும் அடைக்கப்பட்டு, அதில் உட்பட்டிருக்கிறார். இப்பொழுது, தேவன் நம்முடன் நம்முடைய இருதயங்களில் பேசிக்கொண்டிருக்கும் இதே தருணத்தில், அவர் ஆப்பிரிக்காவில் இருக்கிறார், அவர் ஆசியாவில் இருக்கிறார், அவர் ஐரோப்பாவில் இருக்கிறார், அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். விசுவாசிகள் எங்கெல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் அவர் இருக்கிறார். 56இப்பொழுது, அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, அவர் பரிசுத்த ஆவியாக வந்தார். பவுல் - அப்பொழுது அவன் சவுல் என்று அழைக்கப்பட்டான் தமஸ்குவுக்குப் போகும் வழியில், அவன் லோகாஸ் ஆகிய அக்கினி ஸ்தம்பத்தால் கீழே வீழ்த்தப்பட்டான். ஒரு யூதன், அதே லோகாஸ் தான் அவனுடைய ஜனங்களை வனாந்தரத்தில் வழிநடத்திச் சென்றது என்பதை அறிந்திராமல் போனால், அந்த அக்கின ஸ்தம்பத்தை அவன் “ஆண்டவரே” என்று ஒருக்காலும் அழைத்திருக்கமாட்டான். பாருங்கள்? அது மனுஷகுமாரன் அல்ல, அது லோகாஸ். இப்பொழுது, இதை நாம் பயபக்தியோடும், அன்போடும், மரியாதையோடும் கூறுகிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதால், லோத்தின் காலத்திற்கு முன்பு, இல்லை, சோதோமில் லோத்தின் நாட்களில் நடந்தது போல, கடைசி நாட்களில் மனுஷகுமாரன் தம்மை மறுபடியும் வெளிப்படுத்துகிறார், அவர் தம்மை மறுபடியும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த கடைசி நாட்களில், இயேசுவின் மேல் தங்கியிருந்து, அங்கிருந்து மறுபடியும் அக்கினி ஸ்தம்பத்துக்கு திரும்பிச் சென்ற லோகாஸ் பூமிக்கு இறங்கி வந்துள்ளது. (நான் ஏதோ ஒன்றைக் கூறப்போனேன். ஆனால் நான் ஒலிநாடாவை கவனித்தேன். நீங்கள் சொன்னாலும் அவர்கள் அதை நம்பமாட்டார்கள். அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. அவர்கள்... ஜனங்கள் அதை நம்பமாட்டார்கள். அதை கூறாமல் விட்டு விடுகிறேன் - அவர் இறங்கி வந்துள்ளார், இப்பொழுது புலன் விசாரணை நியாயத்தீர்ப்பு (investigating judgement) போன்ற ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. 57இப்பொழுது, இன்று பூமியிலுள்ள இந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் விஞ்ஞானப் புகைப்படக் கருவிகளாலும் கூட முற்றிலுமாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிட்டது. அதன் புகைப்படம் அதோ அங்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படம் இப்பொழுதும் அங்குள்ளதென்று நினைக்கிறேன், அது சரியா? அது அங்குள்ளதா? நமக்குள்ள மிகச் சிறந்த ஒருவரால் அது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க போலீஸ் துப்பறியும் பிரிவில் கைரேகை மற்றும் தஸ்தாவேஜுகளை ஆராயும் பகுதியின் தலைவரான ஜார்ஜ். ஜே.லேஸி என்பவர், “சங்கை பிரான்ஹாமே. நானும் கூட அதை மனோதத்துவம் என்று தான் அழைத்து வந்தேன். ஆனால் ஒளி புகைப்படக் கருவியின் 'லென்ஸ்' மேல்பட்டது. அதை நான் நான்கைந்து நாட்களாக அல்ட்ரா வயலட் கதிர்களைக் கொண்டு பரிசீலனை செய்தேன். ஒளி 'லென்ஸ்' மேல்பட்டது. இந்த லென்ஸ் மனோதத்துவத்தை புகைப்படம் எடுக்காது” என்று கூறினார், இப்பொழுது அது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விட்டது. அது செய்யும் கிரியைகளைக் கவனியுங்கள். நமது மத்தியிலுள்ள அது, ஒரு காலத்தில் பாலஸ்தீனாவில் வாழ்ந்த அதே இயேசுவை நிரூபிப்பதாய் உள்ளது. அவர் மேல் தங்கியிருந்த அதே ஆவி, ஒரு சரீரத்தின் வழியாக வந்து மறுபடியும் தலைமைக்கு (Headship) வந்து முடிகிறது. அவர் சீக்கிரமாக வந்து சரீரத்தை உரிமைகோரி பெற்றுக்கொள்வார். ஆமென்! தலையானது சரீரத்துக்கு வருகிறது. உங்களுக்கு புரிகிறதா? அது தேவகுமாரன், மனுஷகுமாரன், தாவீதின் குமாரன், இருக்கிறேன் என்பவராய், சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம், விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கும். 58நான் அவரல்ல; நான் அவருடைய ஊழியக்காரன். அக்கின ஸ்தம்பம் அவரல்ல; அது ஆவியின் ரூபத்தில் உள்ளது. (பாருங்கள்?) அது மனுஷகுமாரனின் மேல் தங்கியிருந்து, இப்பொழுது மனுஷகுமாரர்களை அபிஷேகிப்பதற்கென இறங்கி வந்து, தலையையும் சரீரத்தின் மற்ற பாகங்களையும் ஒன்றாக இணைப்பதற்கென, அவர் உரைத்த விதமாகவே ஓரு ஊழியத்தை திரும்பக்கொண்டு வந்துள்ளது. ஏனோக்கு கட்டின அந்தக் கூர் நுனிக் கோபுரம் போல. கூர்நுனிக் கோபுரத்தின் மேல் அவர்கள் தலைக்கல் வைக்கவில்லை என்பதாக நாம் அறிகிறோம். ஏன்? தலைக்கல் இனி வரவேண்டும். கூர்நுனிக் கோபுரத்தில் உள்ள ஏழுபடிகள்... அதை என்றாவது ஒரு நாளில் பார்ப்போம். அது எவ்வளவு உண்மையாக பரிபூரணமாக வேதவாக்கியங்களுடன் இணைகிறது என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். 59இப்பொழுது, உங்கள் அமெரிக்க டாலர் நோட்டை நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த மகத்தான தலைக்கல், ஒரு கண், “அந்த மகத்தான முத்திரை” என்று கூறுகிறது. அது வரும். அந்த கற்களைக் கவனியுங்கள். இங்குள்ள எவராகிலும் எகிப்திலுள்ள கூர்நுனிக் கோபுரங்களைக்காண எப்பொழுதாகிலும் சென்றதுண்டா? நல்லது. நீங்கள் கவனிப்பீர்களானால்.... அங்கே, அவைகளைக் கண்டுள்ளதாக பின்னால் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சரி. அந்த கற்கள் அங்கே மிகவும் பரிபூணமாக வைக்கப்பட்டுள்ளன, அந்த உச்சியில், வளைவாக உள்ள அந்த உச்சியில், அந்த கல் வரும் போது, ஒரு பெரிய இரத்தினக் கல் அதில் மிகவும் பரிபூரணமாக பொருந்துவதாக இருக்கும். இப்பொழுது, அந்த கல் கீழேயுள்ள அஸ்திபாரத்தில் பொருந்தாது. அது இரண்டாம் அஸ்திபாரம் அல்லது மூன்றாம் அஸ்திபாரத்தில் பொருந்தாது. அது மேலேயுள்ள அஸ்திபாரத்தில் மட்டுமே சரியாக பொருந்தும். அப்பொழுது கட்டிடம் முழுவதுமே அந்த கல்லுடன் பொருந்தினதாய் இருக்கும். சபையானது. விசுவாசிகளின் சரீரமும், இயேசு ஒரு காலத்தில் விட்டுச் சென்ற அந்த ஊழியம் மறுபடியும் வருகிற வரையிலும் அவர் வர முடியாது... அப்பொழுது. அது எதைக்கொண்டு வருகிறதென்றால்..“ அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு” என்று பவுல் எபிரெயர் 11ம் அதகாரத்தில் கூறியுள்ளான்.“அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கும். காலங்கள் தோறும் இருந்த லுத்தரன்களை, வெஸ்லியன்களை, இன்னும் மற்றவர்களை உயிரோடெழுப்ப அவர்களுக்கு இந்த ஊழியம் இருக்க வேண்டியது அவசியம். அது வரும்போது, கழுகுகள் கூடும் அந்த பாகம் வரும்போது... பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்”. (மத். 24:28). அதுதான் கேள்வி. ஓ, அது மிகவும் பரிபூரணமாய் உள்ளது. அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு விட்டதென்று நம்புகிறேன். 60கேள்வி: சகோ.பிரான்ஹாமே, பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள ஒரு நபரில், சாத்தான் பாஷைகள் பேசும் வரம் அல்லது தீர்க்கதரிசன வரத்தை உபயோகிக்க முடியுமா? அது ஒரு நல்ல கேள்வி, இல்லையா? ஆம், ஐயா.... அது மிகவும், மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும். நீங்கள் கவனிப்பீர்களானால், 1 கொரி 14:29ல், இதைக் குறித்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு... பாருங்கள்? இந்த கேள்வியை எழுதின நபர் தன் பெயரைக் கையொப்பமிடவில்லை; அவர் “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று மட்டும் கூறியுள்ளார். பாருங்கள்? 1கொரி.14:29ன்படி, சபையில் உள்ள எந்த ஒரு வரமும் முதலில் நிதானிக்கப்பட வேண்டும் என்று நாம் காண்கிறோம். பாருங்கள்? நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் பொல்லாத ஆவிகள் மெல்ல உள்ளே நுழைந்து விடும். ஏனெனில், மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோதுமையை முதிரப்பண்ண அனுப்பப்பட்ட அதே மழை, அதே தண்ணீர், களையையும் முதிரப் பண்ணுகிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்? அப்படியானால், அது சர்ப்பத்தின் வித்து என்பதைக் குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும், எப்படி இந்தக் குமாரன் தோன்றினான் என்று. என் நேரம் முடிவதற்கு முன்பு, இதைக்குறித்த கேள்வியை இவைகளிலிருந்து பொறுக்கியெடுக்க முயன்று கொண்டிருக்கிறேன், என்னால் அதை கண்டுபிடிக்க இயலவில்லை; எனவே, சர்ப்பத்தின் வித்தாகிய அந்த குமாரன் எப்படி தோன்றினான் என்று. பாருங்கள்? தேவனுக்கு ஒரு பிரமாணம் உண்டு. இப்பொழுது, இதன் பேரில், இந்த ஜீவனின் ஆவியைக்குறித்த பிரமாணத்தை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் சாத்தான் மெல்ல உள்ளே நுழைந்து விடுவான். யாருக்காகிலும் ஏதாவதொன்று வெளிப்படுமானால், அது சபைக்கு முன்னால் கூறப்படுவதற்கு முன்பு, குறைந்தது இரண்டு மூன்று பேர்களால் நிதானிக்கப்பட வேண்டும் என்று பவுல் கூறியுள்ளான். 61இப்பொழுது, இதையும் நான் கூற முற்படுகிறேன். நான் என் .... என் சகோதரன் இன்றிரவு இங்கில்லை என்று எண்ணுகிறேன். இக்கூட்டத்தை விட்டு சகோ. ஜூனியர் ஜாக்சன் சபைக்கு சென்ற ஒருவரைக் குறித்து, அவர் செத்துப் போன பறவைகளின் மத்தியில் சென்றுவிட்டார்'' என்று யாரோ ஒருவர் குறிப்பிட்டாராம். அவ்விதம் கூறுவது உங்களுக்கு வெட்கமாயில்லையா? நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் என் குழந்தையாக இங்கு இருப்பீர்களானால், உங்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யாதீர்கள். ஜுனியர் ஜாக்சன் என் சகோதரன். டான் ரட்டல் என் சகோதரன். நல்லது, அதற்கு காரணம் என்னவெனில், நான் சபையை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குக்குள் அமைத்து, வரங்களின் கிரியைகளை பெற்றுக்கொள்ள முடியுமா என்று காண நான் திரும்பி வரும்போது, அவர்களில் பாதி பேர் அந்த ஒழுங்கிலிருந்து அகன்று விட்டிருந்தனர். ஏனெனில் நீங்கள் பேசத் தொடங்கும்போது அல்லது பிரசங்கிக்கும் போது, அல்லது வேறெதாவதொன்றைச் செய்யும்போது... யாராகிலும் அந்நிய பாஷைகளில் பேசி, யாராகிலும் அதற்கு அர்த்தம் உரைக்காமல் உங்களால் பிரசங்கம் செய்ய இயலாது என்னும் நிலைக்கு அது வந்து விட்டது; அவைகளில் பாதி கூட நிறைவேறுவதில்லை. 62இப்பொழுது, அந்நிய பாஷைகள் பேசுவதில் எனக்கு நம்பிக்கையுண்டு, அர்த்தம் உரைப்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு, ஆனால் அது சபைக்கு நேரடியாக உள்ள ஒன்றாக இருக்க வேண்டும், “கர்த்தர் சீக்கிரமாக வருகிறார்” அல்லது அப்படி ஏதாவதொன்றல்ல. “நீங்கள் அஞ்ஞானிகளைப் போல் வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்.” என்று இயேசு கூறியுள்ளார். (மத்.6:7). அது இப்படி ஏதாவதொன்றாக இருக்க வேண்டும்: “நீ போய் சகோ. இன்னாருடன் அவர் இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்தார். என்றோ சகோதரி இன்னாருடன், அவள் அன்றொரு நாள் இந்த குறிப்பிட்ட காரியத்தை செய்த போது, அவள் தன் கணவனுக்கு செய்த பொருத்தனையை மீறினாள். அவள் அதை சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால், பரிசுத்த ஆவியினால் அவள் அறுப்புண்டு போவாள் என்று சொல் என்பதாக இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவர்களாயிருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் பாவத்தை உணர்த்துகிறீர்கள். அனனியாவும் சப்பீராளும் உள்ளே வந்தபோது இருந்தது போன்ற சபையை நாம் பெற்றிருப்போமானால், நாம் திடமான சபையைப் பெற்றிருக்கிறோம். நீங்கள், “ஓ, சகோ.பிரான்ஹாமே...' என்கிறீர்கள். ஒரு ஆளிடம் நான் இதைக் கூறினபோது, அவர்; ”நீங்கள் ஒரு இறுக்கமான நிலையில் எங்களை வைத்து விடுகிறீர்கள்“ என்றார். நான், “என் வாழ்நாளில் நான் கண்டிராத அந்நியர்களுக்கு முன்னால் நான் இறுக்கமான நிலையில் இல்லையா? ஆனால் இதைச் செய்ய என்னை அனுப்பின் என் தேவனிடம் எனக்கு விசுவாசமும் நம்பிக்கையும் உண்டு. ஒரு முறையாவது அது தவறாயிருந்ததில்லை, அது தேவனாயுள்ள வரைக்கும் அது ஒருபோதும் தவறாயிராது” என்றேன். அது உண்மை. 63அவ்விதமாக பாஷை பேசுதலும் மற்ற காரியங்களும் அல்ல... இந்த அந்நிய பாஷை பேசுதலும், அந்த வரங்களைப் பெற்றுள்ள மக்களும், அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாயிருந்து அதில் சிரத்தை கொண்டிருந்தால், அவர்கள் ஒன்று கூடி தங்கள் அந்நிய பாஷைகளையும் அதன் அர்த்தத்தையும் அளித்து, தேவனுடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்துக்காக அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு தங்கள் சொந்த ஊழியம் ஒன்றுண்டு, ஆனால் அது கூட்டங்களில் பாவிகளின் மத்தியில் இடைபட்டுக் கொண்டிருக்கும்போது அல்ல. “ அவர்கள் ''நீங்கள் கல்லாதவர்கள் என்பார்கள்” என்று வேதம் உரைக்கிறது. சிலசமயங்களில் அவர்கள் மிகவும் அவபக்தியுள்ளவர்களாகி விடுகின்றனர். நம்முடைய குழு அவ்விதமாக ஆகவில்லை என்றல்ல, சிறிது காலம் அவர்களை அவ்விதமே விட்டு விட்டிருக்கிறேன். “கவனித்து வாருங்கள்” என்று நான் சொன்னேன். 64இப்பொழுது, இந்த சகோதரரிடம் நான் (அதை அறிந்த சாட்சிகள் இங்குள்ளனர்), “அதை தனியே விட்டுவிடுங்கள், சற்று கழிந்து, அது தேவனால் உண்டானதா இல்லையா என்று நாம் பார்ப்போம். அது சிட்சையை சகிக்காவிட்டால், அது வேசிப்பிள்ளை” என்றேன். அப்படித்தான் வேதம் உரைக்கிறது (எபி. 12:8). சிட்சை வந்தபோது என்ன நடந்தது. நீண்ட காலம் முன்பு என்ன நடந்தது என்று நான் உங்களிடம் கூறியிருக்கிறேனா? பாருங்கள்? இங்குள்ள மேய்ப்பனைக் கேளுங்கள். அவர், “இதைக் குறித்தென்ன, அதைக் குறித்தென்ன?' என்று கேட்டார். நான், “அதை தனியே விட்டுவிடுங்கள். அவர்கள் குழந்தைகள். அதை நாம் நிதானிக்க முடியாது. ஆனால் அதை வார்த்தைக்கு உட்படுத்தும்போது என்ன நடக்கிறதென்று கவனியுங்கள்” என்றேன். இப்பொழுது, அதனுடன் இணங்காமலிருக்க சகோ. ''ஜூனியர் ஜாக்சனுக்கு உரிமையுண்டு. அவர் விரும்புவது, தமது சபை... சபையோரின் மத்தியில் ஜனங்கள் எல்லோரும் அந்நிய பாஷை பேச விரும்புகின்றனர். அது சகோ.ஜூனியரின் தொல்லை அது அவரைப் பொறுத்தது. ஆனால் நாம் விசுவாசிப்பது போலவே ஜூனியர் ஜாக்சனும் இந்த செய்தியை விசுவாசிக்கிறார். அவர் நம்மில் ஒருவர். அங்கு போவதனால் ஒருவர் 'செத்தபறவை' ஆகி விடுவதில்லை. ஜூனியர் ஜாக்சன் தேவனுடைய மனிதன், அவரை என் முழு இருதயத்தோடும் நான் நேசிக்கிறேன். அவர் இன்றிரவு இங்கில்லை, எனவே நான் விரும்பும் விதமாக இதை வெளிப்படையாகக் கூறலாம். 65டான் ரட்டல்... டான் இன்றிரவு இங்கில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு தங்கள் சொந்த சபை ஒன்றுண்டு. இந்த கூடாரத்துக்கு வரும் ஒவ்வொருவரும் வெளிவந்து டான் ரட்டல் அல்லது ஜே.டி.பார்னல், அல்லது நமது சகோதரர்களாயும் தேவனுடைய ராஜ்யத்தில் உடன் குடிமக்களாயும் உள்ளவர்கள் நடத்தும் சபை ஏதொன்றுக்கும் செல்வார்களானால், நான் மிக்க மகிழ்ச்சியடைவேன், எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது. நான், “கர்த்தாவே, இதை நீர் மறுபடியும் நிரப்புவீராக. அதை வெளியே ஊற்றிவிட்டு வேறொன்றை நிரப்புவீராக” என்பேன். அது எனக்கு பிரியமாயிருக்கும். இந்த பையன் நிரப்பப்படுவதைக் காண நான் பிரியப்படுவேன். அவர்கள் என் பிள்ளைகள். இப்பொழுது ஜே.டி. அல்லது மற்றவர்கள் நான் விசுவாசிப்பது போல் விசுவாசிக்க வேண்டியதில்லை; அவர்கள் அவ்விதம் செய்ய வேண்டியதில்லை. இன்று காலையில் நான் உங்களிடம் கூறினது போல், என் மனைவியுடனும் கூட நான் கருத்தொருமிப்பதில்லை, அவளும் என்னுடன் கருத்தொருமிப்பதில்லை. நான் உண்ணும் மேசைக்குச் சென்று, ஜூனியர் 'ஆப்பிள்பையும் நான் செர்ரிபையும் உண்கிறோம் என்றால், சகோதரனே, நாங்கள் இருவருமே 'பை' தான் உண்கிறோம். அவ்விஷயத்தில் எங்களுக்கு ஒருமைப்பாடு உண்டு, ஆனால்... நாங்கள் இருவருமே அதே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம். அவருடைய சபை ஒழுக்கம்... 66பேதுருவுக்கும் பவுலுக்கும் கருத்து வேற்றுமை உண்டாயிருந்தது, அது உங்களுக்குத் தெரியும், அவர்களுடைய உப்தேசங்களில் அல்ல, ஆனால் பேதுரு நடந்து கொண்ட விதத்தில். அவர்களுக்கு அந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை இருந்தது, ஆனால் அது அவர்களைப் பிரித்துவிடவில்லை. அவர்கள் சகோதரர்களாயிருந்தனர். நிச்சயமாக நமக்கும் கருத்து வேற்றுமைகள் இருக்கும்... எனக்கு அசெம்பிளீஸ் ஆப் காட் ஸ்தாபனத்துடன் கருத்துவேற்றுமை உண்டு. அவர்களுடைய முறைமைகளுடன் எனக்கு கருத்து வேற்றுமை உண்டு, ஆனால் அசெம்பிளீஸ் ஆப் காட் சபையில் உள்ள பலர் விலையேறப் பெற்றவர்கள். நான் பாப்டிஸ்டுகளோடும், பிரஸ்பிடேரியன்களோடும், அவர்களுடைய முறைமைகளுடனும் கருத்து வேற்றுமை கொண்டுள்ளேன், ஆனால் அவைகளில் உத்தமமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். 67இன்று பிற்பகலில் எனக்கு ஒரு தந்தி வந்தது. அதை நான் எங்கோ வைத்து விட்டேன். ஒரு சகோதரன், ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியார், மனிதர் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதற்கு பதிலாக, மனிதன் தேவனுக்கு மரியாதை செலுத்தும் ஒரு இடத்துக்கு வர அவர் நீண்ட காலம் முயன்று கொண்டிருப்பதாக கூறினாராம். இந்த சபைக்கு வரும் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன் அவரிடம் “அந்த விதமான இடத்துக்கு உங்களை நான் கொண்டு செல்கிறேன்” என்றாராம். அவர் இங்கு வருவதற்கு மிகுந்த ஆவல்கொண்டிருந்தார். ஒரு பாப்டிஸ்டு. பாருங்கள். அவர்கள் எல்லா விடங்களிலும் சிதறியுள்ளனர். அவர்களுடைய முறைமையுடன் நான் இணங்கமாட்டேன், ஆனால் அந்த குழுவின்பேரில் நான் அன்பு கெண்டுள்ளேன். எனவே சகோதரர்களைக் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லாதீர்கள். இங்கே, இந்த வரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. எந்த ஒரு வரமும்... அதை கவனிக்க வேண்டும். சாத்தான் எந்த ஒரு வரத்தையும் பாவனை செய்ய முடியும். இந்த 'பீட்டில்ஸ்'களை பாருங்கள், அவர்கள் இப்பொழுது தெய்வீக சுகமளித்தலை பாவனை செய்யப்போகின்றனர், அசுத்தமான, அழுக்கான, அழுகிப் போன நரகத்திலிருந்து பிறந்த இவர்கள். பாருங்கள்? சரி. 68கேள்வி: தானியேல் அக்காலத்து தீர்க்கதரிசியாயிருந்தபடியால் அக்கினி சூளையில் காணப்பட்ட நாலாம் ஆள் தானியேலா? இல்லை, அது இயேசு. நாலாம் ஆள் தேவ புத்திரனுக்கு ஒப்பாயிருந்தார். அது அந்த தீர்க்கதரிசியல்ல என்று எண்ணுகிறேன், ஏனெனில் அவன் சிங்கங்களின் கெபியில் இருந்தான்; தானியேல் அக்கினி சூளையில் இருந்ததாக நான் நம்பவில்லை. என்னால்.... ஒருக்கால் நீங்கள் கூறினது சரியாயிருக்கலாம், ஆனால் இது என்னுடைய அபிப்பிராயம். 69கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஆதியாகமம் 6ம் அதிகாரம் 12ம் வசனத்தில், மாம்சமான யாவரும் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்ததாக தேவன் உரைத்தார். அது விவாகரத்தையும் விவாகத்தையும் குறிப்பிடுகின்றதா? அப்படியானால், இயேசு மத்தேயு 24ம் அதிகாரம் 38ம், 39ம் வசனங்களில், “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வெளிப்படும் காலத்திலும் நடக்கும்” என்று உரைத்த போது, இயேசு அதே காரியத்தைத் தான் குறிப்பிட்டார் அல்லவா? 70கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஆயிரம் வருட அரசாட்சியின் போது, பூமியில் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியின் போது, குழந்தைகள் பிறக்குமா? அந்த காலத்தில் பூமியில் பாவம் உண்டாயிருக்குமா? அந்த காலத்தில் பூமியில் மனித சாரங்களில் ஜனங்கள் இருப்பார்களா? இக்கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க முயல்கிறேன். இப்பொழுது, ஆதியாகமம் 6ம் அதிகாரம் 12ம் வசனத்தில், மாம்சமான யாவரும் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்ததாக தேவன் உரைத்தார். ஆம், அது விவாகம், விவாகரத்து, மற்றெல்லாமே. “நோவாவின் காலத்தில் அவர்கள் எவ்வாறு விவாகம் செய்தனர். பெண் கொடுத்தனர்” என்று வேதம் விளக்குகிறது. அது கடைசி காலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும், அடையாளங்களில் ஒன்று. இப்பொழுது, உலகம் செய்தது அனைத்தும் அது ஒன்றே என்றால், அது மட்டுமே கடைசி காலத்தின் அத்தாட்சி என்று என்னால் கூற முடியாது - எவ்வாறு அந்நிய பாஷை பேசுதல்பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி என்று என்னால் கூற முடியாதோ, அவ்வாறே. நோவாவின் நாட்களில் இருந்தது போன்ற விவாகமும் விவாகரத்தும் உண்டாயிருக்கும் ஒரு காலம் வரும்என்பது உண்மையே. ஆனால் அதனுடன் வேறு பலகாரியங்களும் இருக்கும்; அது பல அடையாளங்களில் ஒன்றாகும். 71அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது பரிசுத்த ஆவியின் அடையாளங்களில் ஒன்று. ஆனால் அது பரிசுத்த ஆவியின் பிழையற்ற அடையாளம் அல்ல - பெண்களும் ஆண்களும் விவாகம் செய்துகொண்டு விவாகரத்து செய்து விட்டு, மறுபடியும் விவாகம் செய்வது எப்படியோ அதுபோன்று. அது மட்டும் ஒரே அடையாளம் இல்லை. அது ஒன்று மட்டும் இருக்குமானால், அதை அவ்விதம் என்னால் அழைக்க முடியாது. பாருங்கள்? அது தேவன் என்பதாகச் செய்ய, அந்நிய பாஷை பேசுவதுடன் மற்ற காரியங்களும் கூட இருக்க வேண்டும். இப்பொழுது, “ஆயிரம் வருட அரசாட்சியின் போது குழந்தைகள் பிறப்பார்களா?” அது என் மனதிலும் உள்ள கேள்வி, அன்றொரு நாள் அதை உங்களிடம் கூறினேன், எனக்குத் தெரியாது. அவ்விதம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த வரையில், நான் உங்களிடம் உண்மையாயிருக்கப் போகிறேன். இது வரைக்கும் எனக்கு அதைக் குறித்து தெரியாது. தேவன் எப்பொழுதாகிலும் அதை எனக்கு வெளிப்படுத்துவாரானால், நான் உங்களிடம் கூறுவேன். காத்திருங்கள்; அது தேவனிடத்திலிருந்து வர வேண்டும். நீங்கள் என் பிள்ளைகள். நான் எங்களிடம் கூற இயலாது. அவ்விதம் இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் கூற இயலவில்லை . 72“... அந்த காலத்தில் பூமியில் பாவம் உண்டாயிருக்குமா?” இருக்காது. பூமியில் அப்பொழுது பாவம் எதுவும் இருக்காது சாத்தான் கட்டப்பட்டிருப்பான். “அந்த காலத்தில் பூமியில் மனித சரீரங்களில் ஜனங்கள் இருப்பார்களா?” ஆம், ஐயா! நாம் நமது மகிமையின் சரீரங்களை உடையவர்களாய், பூமியில் புசித்தும், குடித்தும், வீடுகளைக் கட்டிக்கொண்டும், இப்பொழுது நாம் வாழ்ந்து வருவது போல, ஆயிரம் வருடங்கள் வாழ்வோம். அது மணவாட்டிக்கும் மணவாளனுக்கும் தேன் நிலவு காலம். 73கேள்வி: சகோ. பிரான்ஹாமே, இயேசு மத்தேயு 12ம் அதிகாரம், 32ம் வசனத்தில், “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளதன் அர்த்தம் என்ன? இந்த வேதவசனத்தை எனக்கு தயவுகூர்ந்து விளக்கித்தரவும். நன்றி. அந்த மனிதனின் பெயரை அது கொண்டுள்ளது; அவர் ஒரு ஊழியக்காரர். சரி. சகோதரனே, நான் - நீங்கள் ஒரு வேதசாஸ்திர பண்டிதர், நான் வேத சாஸ்திர பண்டிதன் அல்ல. ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். இயேசு, “எவனாகிலும் பரிசுத்தஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்று கூறியுள்ளார். வேறு சொற்களில் கூறுவோமானால், வேத வாக்கியங்களுடன் அதை இணைத்து பார்ப்போமானால், “மனிதனுக்கு எல்லாவிதமான பாவங்களும் மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம் சொல்லுதல் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தேவ தூஷணம் சொல்லுதல் என்பது, அதை பரிகாசம் செய்தல், அதைக் குறித்து பேசி. கேலி செய்தல். அவ்விதம் ஏதாவதொன்றைச் செய்யும் போது, சரியானதற்கும் தவறானதற்கும் இடையே உள்ள கோட்டை நீங்கள் தாண்டி விடுகிறீர்கள். 74இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைக் காண்பீர்களானால்... உதாரணமாக, பரிசுத்த ஆவி இங்கு இறங்கி வந்து வழக்கம் போல சிந்தனைகளைப் பகுத்தறிகிறார் என்று வைத்துக்கொள்வோம். அது பரிசுத்த ஆவியாக இருந்து, அதை நீங்கள் விசுவாசிக்காமல், நீங்கள் வெளியே சென்று அதை கேலி செய்து, அதைக் குறித்து பேசுவீர்களானால், நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் முடிந்துவிட்டீர்கள். நீங்கள் அதை செய்யக் கூடாது. நீங்கள் தேவனால் உண்டாயிருக்கவில்லை என்பதை அது அங்கேயே நிரூபித்து விடுகிறது. ஏனெனில் தேவனுடைய வித்து மனிதனில் தங்கியிருக்கும் போது, அவனால் பாவம் செய்ய முடியாது. பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். வார்த்தை வெளிப்படுவதை அவன் காணும் போது, அவன் அதை விசுவாசிப்பான். அவனால் ஒன்று மட்டுமே... பாருங்கள், ஒரே ஒரு பாவம் தான் உள்ளது. ஒரே ஒரு பாவம். எத்தனை பேருக்கு அது தெரியும்? அது அவிசுவாசம். அது உண்மை. விபச்சாரம் செய்தல் பாவம் அல்ல, சிகரெட்டு புகைத்தல், பொய் சொல்லுதல், சபித்தல் இவை பாவம் அல்ல. இவை அவிசுவாசத்தின் தன்மைகள் (attributes). நீங்கள் அதை செய்யும் காரணம், நீங்கள் விசுவாசி அல்ல என்பதனால். அது உண்மை. எனவே, பாருங்கள், ஒரே ஒரு பாவம் உண்டு, அதுதான் அவிசுவாசம். “விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று: (யோவான் 3:18). அவன் என்ன செய்த போதிலும், அவன் தொடக்கத்திலேயே ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டுவிட்டான். சரி. 75கேள்வி: சகோ. பிரான்ஹாமே, இளம் விவாகமாகாதவர் (அது யாரென்று குறிப்பிடவில்லை) தங்கள் தலைமயிரைக்கத்தரித்துக் கொள்வது தவறா? அது ஒரு ஸ்திரீயென்று நினைக்கிறேன். ஆம்! எந்த ஸ்திரீயும் அவளுடைய தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது தவறாகும். அது ஒரு சிறுகேள்வி. உங்களுக்கு உறக்கம் வருகிறதா? நல்லது, நம்மால் முடிந்தவரை, நாம் துரிதப்படுவோம். சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வியை தேடி எடுக்க நான் மிகவும் முயன்றேன். கேள்வி: என் மகனுக்காக ஜெபிக்கவும்.... அது ஜெப விண்ணப்பம். இவைகளை நான் பொறுக்கி எடுத்து... 76கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஸ்திரீகளுக்கு ஆரோக்கியமான கணவனும் பிள்ளைகளும் இருந்தால், அவர்கள் பொது ஜன அலுவலகங்களில் பணிபுரிய அனுமதியுண்டா? இந்தக் கேள்வியை நான் வேறொருவருக்காக கேட்கிறேன். நல்லது. எனக்கு அதைக் குறித்து தெரியாது. என்னால் சொல்ல இயலாது. ஆனால் நான் இவ்விதமாக உணருகிறேன். இதை நான் கூற விரும்புகிறேன். நான் ஒரு ஸ்திரீயாக இருந்து, என் கணவர் ஆரோக்கியமுள்ளவராயிருந்து, அவருக்கு ஒரு நல்ல வேலை இருந்து அவர் வேலை செய்துகொண்டிருப்பாரானால், நான் வீட்டில் தங்கி என் பிள்ளைகளைக் கவனித்து, அவர்களை வளர்த்து, கர்த்தரை நேசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். துணிகளை சலவை செய்தல் போன்ற வீட்டு வேலைகளை நான் செய்த பிறகு எனக்கு நேரம் கிடைக்குமானால், தேவனை எவ்விதம் சேவிப்பது என்பதைக் குறித்து என் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பேன். 77இப்பொழுது, உங்களுக்கு கடன் ஏதாகிலும் இருந்து அதை அடைப்பதற்கென உங்கள் கணவனுக்கு உதவி செய்யமுயன்றால், அவ்விதம் நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும் மென்று இருந்தால் நல்லது. நீங்கள் பண்புள்ள பெண்ணாக வாழுங்கள். ஆனால் அது கடினம் என்று எண்ணுகிறேன். நன்றாக புரிந்து கொண்டுள்ள எந்த ஒரு மனிதனும் தன் மனைவி அத்தகைய கூட்டத்தினரின் மத்தியில் வேலை செய்வதை விரும்பமாட்டான். அவர்கள் அவலட்சணமான, அசுத்தமான மனிதர்கள். ஆனால் ஒரு ஸ்திரீ அந்த சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டியது அவசியமானால், நான் நினைக்கிறேன், அவள். அவள் உத்தமமான கிறிஸ்தவள் என்றும், அவள் நம்பிக்கையுள்ள, நம்பிக்கைக்குப் பாத்திரமான ஸ்திரீ என்றும் அவளுடைய கணவன் அறிந்திருக்க வேண்டும். இப்பொழுது, அவள் வேலை செய்யக் கூடாது என்னும் விஷயம் வரும் போது, எனக்குத் தெரியாது. பாருங்கள், அதை ஆதரிக்க வேத வசனம் எதுவுமில்லை. என் கருத்தை மட்டும் நான் தெரிவிக்கிறேன். நான் நினைப்பது என்னவெனில், ஒரு ஸ்திரீ வேலை செய்ய விரும்பினால், அவளுக்கு வேலை செய்ய பிரியமானால்.... 78இப்பொழுது, ஸ்திரீகள் இப்படிப்பட்ட அலுவலர்கங்களில் வேலை செய்வதில் நான் நிச்சயம் விரோதமாக இருக்கிறேன், அங்கு இந்த வியாபாரிகள்.... அவர்கள் அசுத்தமான நகைச்சுவைதுணுக்குகளைக் கூறுகின்றனர். அங்கு ஒரு நல்ல சுத்தமான ஸ்திரீ உட்கார்ந்திருந்து, இந்த அசுத்தமான, அவலட்சணமான காரியங்கள் அங்கு கூறப்படும்போது, அதற்கு விரோதமாக நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட காரியங்களிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டுமென்பது என் கருத்தாகும். ஆனால் ஒரு ஸ்திரீ தன்னைப் பண்புள்ள பெண்ணாக காத்துக்கொண்டு, பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு துணிகள் வாங்கவும், கடனைச் செலுத்தவும், கடன் முடியும் வரைக்கும் வேலைசெய்து தன் கணவனுக்கு உதவி செய்ய முயன்றால்... இப்பொழுது, இது கர்த்தர் அல்ல, ஏனெனில் இதை ஆதரிக்க எனக்கு வேத வசனம் கிடையாது. நான் கூறுவது என் சொந்த கருத்து; அத்தகைய சூழ்நிலை எதுவுமின்றி, கொஞ்சம் அதிகம் பணம் சம்பாதித்து . மது கடைகளுக்கு சென்று குடிக்கவும், புகைக்கவும், இவ்விதம் நடந்து கொள்வதற்காக அவள் வேலை செய்ய விரும்பினால், அவள் அவ்விதம் செய்யக் கூடாது என்று எண்ணுகிறேன். அவள் வீட்டில் தங்கியிருந்து, ஒரு பண்புள்ள பெண்ணாக இருந்து, வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும். 79கேள்வி: இயேசு இரண்டாம்... (இல்லை!) இயேசு - நீங்கள் இரண்டாம் விவாகத்தில் ஈடுபட்டிருந்து அதில் இருவரும் ஏற்கனவே விவாகரத்து செய்து கொண்டவர்களாக இருப்பார்களானால், அதற்காக வருந்தி மனந்திரும்புதல் மட்டும் போதுமா, அல்லது அதைச் சரிசெய்து கொள்ள இந்த விவாகத்தையும் முறித்துக்கொள்ள வேண்டுமா? “நீங்கள் இரண்டாம் விவாகத்தில் ஈடுபட்டிருந்து, அதில் இருவரும் ஏற்கனவே விவாகரத்து செய்து கொண்டவர்களாக இருப்பீர்களானால்... இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன் என்று நினைக்கிறேன். பாருங்கள்? ஆம், ஏற்கனவே பதில் கூறி விட்டேன். இருவருமே ... நான் . மக்களே, இவைகளை நான் கூற வேண்டிய சூழ்நிலை இல்லாமலிருந்தால், நலமாயிருந்திருக்கும். இந்த கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் என் நண்பர்கள் உள்ளனர், எனக்குத் தெரியும்அவர்கள். இதைக் கூறுவது என்னைக் கொன்று விடுகிறது. ஆயினும் அதை நான் கூறியே ஆகவேண்டும். பாருங்கள்? உலகமானது இத்தகைய மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஏதோ ஒரு ஏழை ஸ்திரீ தவறு செய்து ஒரு குடிகாரனை மணம் செய்து கொண்டு, அந்த வழியே சென்றுவிடுகிறாள், அல்லது ஏதோ ஒரு ஏழை மனிதன் தெருவில் திரியும் ஒரு பெண்ணை அறியாமல் மணம் புரிந்து கொண்டு, அவன் உயிரோடுள்ள வரைக்கும் அந்த பெண்ணுடன் கட்டப்பட்டிருக்கிறான். அது மிகவும் பயங்கரமான ஒரு காரியம். விவாகம் என்பது புனிதமான ஒன்று. அநேக சமயங்களில், பாவிகளான இளைஞர்கள் இத்தகைய காரியங்களைச் செய்து விட்டு, இதெல்லாம் என்னவென்று வியக்கின்றனர். அது... இந்த விவாகமும் விவாகரத்தும் என்பதை, அதை விளக்க வேண்டிய விதத்தில் விளக்க கர்த்தர் என்னை அனுமதிப்பாரானால், அது எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் என்று எண்ணுகிறேன். இவை யாவும்.... (ஒலி நாடாவின் முதல்பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் கேள்வியின் நடுவில் துவங்குகிறது - ஆசி) 80கேள்வி: நாங்கள் காண்கிறோம். எங்களால் ஏன் எங்கள் வீட்டை விற்க முடியவில்லை- நன்றி. நாங்கள்... குறிப்பு அதை விற்க நாங்கள் ஜெபித்து உபவாசித்தோம். இதுவரை பயனில்லை. நல்லது. இப்பொழுது, சகோதரனே அல்லது சகோதரியே (அவர்கள் தங்கள் பெயரை கையொப்பமிடவில்லை), நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் சொத்தை நீங்கள் விற்க முயன்று, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருந்தால்... வேறொரு சொத்தை வாங்குவதற்காகவோ அல்லது வேறெதாவதைச் செய்வதற்காகவோ நீங்கள் அதை விற்க எண்ணுகிறீர்கள். என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. உங்கள் நோக்கம் சரியாயிருந்தால், நீங்கள் வேறொரு வீட்டை வாங்க முயன்று கொண்டிருக்கிறீர்கள்... உங்களுக்கு பிள்ளைகள் இருந்து, அவர்களுக்கு இதைக் காட்டிலும் நல்ல வேறொரு வீட்டை வாங்க விரும்புகிறீர்கள்... என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதைக் கூற விரும்புகிறேன்; நீங்கள் அதை விற்கமுயன்று, அது விற்றுப் போக வேண்டும் என்பதற்காக உபவாசத்தில் இருந்தீர்கள், அப்படியானால் அதை கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, அதைக் குறித்து மறந்துவிடுங்கள். பாருங்கள்? ஏனெனில் ஒருக்கால் தேவன்... நீங்கள் ஒருக்கால் வேறொரு வீட்டுக்குச்செல்லலாம். அது சரியானதாக இல்லாமல் இருக்கக் கூடும். பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவராயிருந்து கர்த்தரை நம்புவீர்களானால்; நீங்கள் நிச்சயமாக கிறிஸ்தவராயிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் உபவாசித்து ஜெபித்திருக்கமாட்டீர்கள். பாருங்கள்? நானாயிருந்தால் அதை கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, “கர்த்தாவே, அதை நாங்கள் விற்க வேண்டிய உமது நேரம் வரும்போது, வாங்குபவரை அனுப்பும்” என்பேன். அப்பொழுது அது கர்த்தரிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறது. உங்கள் கரங்களை அதிலிருந்து விலக்கி விட்டு சென்று கொண்டேயிருங்கள். அது கிரியை செய்யும் என்று நம்புகிறேன். நான் வேகமாக பதில் கூறுகிறேன், ஏனெனில் நேரம் கடந்துகொண்டேயிருக்கிறது. 81கேள்வி: சகோ.பிரான்ஹாமே, ஒரு ஸ்திரீ தன் தலைமயிரை சுருள வைத்துக் கொள்வது தவறா? அதற்கு நான் ஏற்கனவே பதிலளித்திருக்கிறேன். நிச்சயமாக, எனக்குக் கவலையில்லை, அதை நீளமாக வைத்திருங்கள். பாருங்கள்? நான் ..... எனக்குத் தெரியும் நீங்கள்... பெண்களாகிய உங்களிடம் இதை நான் கேலியாக கூறவில்லை. பாருங்கள்? நான் உண்மையாகவே கூறுகிறேன். நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள், நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். உங்களுக்கு என்மேல் நம்பிக்கை உள்ளது, இல்லையென்றால் நீங்கள் என்னைக் கேட்கமாட்டீர்கள். சகோதரியே, நான் உன்னிடம் என்ன கூறுகிறோனோ அதை செய்வாய் என்று எனக்கும் உன் பேரில் நம்பிக்கை உண்டு. இதை நான் வேத வசனத்தைக் கொண்டு ஆதாரப்படுத்த இயலாது. உனக்கு வேண்டுமானால்... உனக்கு அழகான சுருண்ட தலைமயிர், நீ ஒரு பெண்ணாயிருந்து, உன் கணவன், அல்லது நீ காதலனுக்காக அல்லது அது போன்ற ஏதாவது பார்வையில் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்பினால், நீ தலைமயிரைச் சுருள வைத்துக் கொள்வதைக் குறித்தோ, அல்லது - அவர்கள் அதை எப்படி அழைக்கிறார்கள் - தலைமயிருக்கு சாயமிடுவதைக் குறித்தோ என்னால் கூற இயலாது. அதைக் குறித்து கூற எனக்கு ஒன்றுமில்லை; அது உன்னைப் பொறுத்தது. பார்? நான் - நான்.....நீ, இடையே... என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேள், அவர் உன்னிடம் கூறுவார். நான் வேதவாக்கியங்களின் அடிப்படையில் காரியங்களை விளக்க முயல்கிறேன். பார்? 82கேள்வி: தயவு செய்து 1 கொரிந்தியர் 13:8-12 வசனங்களை விளக்கவும். தற்பொழுது சபைக்கு பரிபூரண வார்த்தை திரும்ப அளிக்கப்பட்டு விட்டதால், இந்த வேத வசனங்கள் நிறைவேறி விட்டனவா? சற்று முன்பு தான் அதைக் குறித்து பார்த்தோம் என்று நினைக்கிறேன், இல்லையா? 'நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம்“ பவுல், ''நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், இவை எல்லாவற்றையும் நான் செய்தா லும்..... ஆனால் நிறைவானது வரும்போது...' என்கிறான். தேவனைத் தவிர வேறெதாகிலும் நிறைவானதாய் இருக்கமுடியுமா? இல்லை, ஐயா! தேவன் நிறைவானவரா? ஆதியிலே (சபையோர் ”வார்த்தை இருந்தது'' என்று பதிலளிக்கின்றனர்- ஆசி.) அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது''. வார்த்தை இன்னும் தேவனாயிருக்கிறது. பாருங்கள்? சரி, நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 83கேள்வி: சகோ. பிரான்ஹாமே, மேல் தட்டை தலை மயிர்கத்தரிப்பு (Flattop hair cut) செய்து கெள்வது தவறா? இதைக் கேட்டது ஒரு ஆண் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்று நினைக்கிறேன். நல்லது, சில ஸ்திரீகளும் அவ்விதம் செய்து கொள்கின்றனர். நிச்சயமாக நான் இங்கு வேட்டை அதிகாரியாக இருந்த சமயத்தில் ஒரு முறை பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்தேன்..... நான் போய்க்கொண்டிருந்தபோது, நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன், ஒரு மனிதன் என்னுடன் பேசிக் கொண்டு வந்தான். அவன் வெல்டர்களின் தொப்பியை அணிந்து கொண்டிருந்தான். நான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவன் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அவன் வெல்டர்களின் மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்டு, அதை இப்படி மேலே தூக்கிவிட்டிருந்தான். அது இங்கு செல்லர்ஸ்பர்க் என்னுமிடத்தில் நடந்தது. நான் உட்கார்ந்து கொண்டு அந்த ஆளிடம் பேசிக் கொண்டு வந்தேன். அவன் ஏதோ ஒன்றைச் சொன்னான். நாங்கள் இருவரும் சிரித்தோம். நான் அவனை காலில் அடித்தேன். நான், “பையனே, அது உண்மையில் சிரிப்பாக இருக்கிறது இல்லையா?” என்றேன் . நான் அவ்விதம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தபோது, எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருத்தி “ரூத், நீ என்ன செய்யப்போகிறாய்...' என்று என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த நபரைப் பார்த்துக் கேட்டாள். இவள் மேல் கோட்டை போட்டுக் கொண்டிருந்தாள், ஒரு ஆணைப் போல் பெரிய உருவமைப்பு கொண்டவளாய் இருந்தாள். அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு புகைபிடித்துக் கொண்டு, மூக்கின் வழியாய் புகையை வெளியே விட்டுக்கொண்டிருந்தாள். அது ஒரு ஆண் என்று எண்ணினேன். அவள் வெல்டர்கள் உபயோகிக்கும் டார்ச்சை யாரோ ஒருவர் கைத் தவறிப் போட்டு அதுவேறொருவர் தலையில் விழுந்து அவர் மயங்கி விழுந்ததைப் பற்றி ஹாஸ்ய பாணியில் கூறி சிரிக்கத் தொடங்கினாள். நானும் சிரித்து, அவள் மனிதன் என்று நினைத்து அவள் காலை என் கையினால் அடித்தேன். எனக்கு வித்தியாசம் தெரியவேயில்லை. உங்களால் அதை கண்டுபிடிக்க முடியாது. “புருஷரின் உடைகளை ஸ்திரிகள் தரித்தால், அது அருவருப்பானது என்று வேதம் உரைக்கிறது (உபா.22:5). பார்த்தீர்களா? 84இல்லை, சகோதரனே, உங்களுக்கு மேல் தட்டை தலைமயிர் கத்தரிப்பு விருப்பமானால், நீங்கள் ஏறக்குறைய என் வயதை அடையும் வரைக்கும் காத்திருங்கள், அப்பொழுது உங்களுக்கு அது கிடைக்கும். (சகோ. பிரான்ஹாம் வழுக்கைத் தலையைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). எனவே அது பரவாயில்லை. நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை. நண்பனே, சகோ.பிரான்ஹாம் உங்களுக்கு உண்மையை உரைக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்ததால், உங்கள் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக தேவன், ஒரு மனிதன் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும் என்பதை தவிர, அவன் தலைமயிரால் மூடிக் கொள்வது பற்றிவேறெதையும் கூறவில்லை என்று எண்ணுகிறேன். அவன் ஸ்திரீயைப் போல் தலைமயிரை நீளமாக வளர விட்டால், அப்படி செய்வது ஒரு மனிதனுக்கு அவமானம் என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது, நீங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, ஒரு சிறு பையனாக இருந்தால்... அதைக் குறித்து நான் அதிகம் கூறியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். “மேல் தட்டை தலைமயிர் கத்தரிப்புசெய்து கொள்ளும் சிக்கிகளே” என்பது போன்றவைகளை, அதை நான் கூறியிருக்கிறேன்.பாருங்கள்? ஒரு மனிதன் தன் தலைமயிரை எவ்விதம் கத்தரித்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறித்து தேவன் கவலைப்படுவதில்லை என்று எண்ணுகிறேன், அவன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால் சரி. ஏனெனில் அவனுக்கு தலை தேவன், ஆனால் ஸ்திரீக்கு தலை மனிதன், எனவே அவள். அவள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். அப்படியானால் கனவீனமான ஒரு ஸ்திரீ விவாகரத்து செய்யப்பட்டு தள்ளப்பட வேண்டும். அதுசரியா? எனவே ஒரு ஸ்திரீ தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால், அவள் தவறான வாழ்க்கை வாழ்ந்தது போல் அவளைத் தள்ளிவிட அவளுடைய கணவனுக்கு வேதப் பிரகாரமான உரிமையுண்டு. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? வேதம் அவ்விதம் தான் உரைக்கிறது, ஏனெனில் அவள் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். கனவீனமான எந்த பெண்ணுடனும் வாழலாகாது. 85கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஏசாயா சீயோன் குமாரத்திகளிடம் பேசினபோது... (அது. “சீயோன் குமாரத்திகளைக் குறித்து” என்று இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்)... குப்பிகளையும், மயிர்ச் சுருளுக்குப் பதிலாக மொட்டையும் என்று சீயோன் குமாரத்திகளைக் குறித்து சொன்னவை... இந்நாளுக்குப் பொருந்துமா அல்லது சிலர் கூறுவது போன்று பழைய வேதாகமம் தற்காலத்திற்கு பொருந்தாதா? பழைய வேதாகமம் எக்காலத்தும் பொருந்தும், தேவன் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமானது. ஆம், ஐயா! ஒரே ஒரு காரியம் என்னவெனில், பழைய வேதாகமத்திலிருந்து புதிய வேதாகமத்துக்கு வரும்போது, அது விரிவடைகிறது. உதாரணமாக இயேசு, “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக (நீங்கள் அந்த செயலில் ஈடுபட்டிருத்தல்) என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று' என்றார் (மத். 5:27-28). இவை எவ்வளவு தலை சிறந்த காரியங்கள்! இப்பொழுது, நான் முடிக்க வேண்டும், நண்பர்களே, சற்று தாமதமாகி விட்டது. இப்பொழுது, அது மிகவும் நீளமான ஒன்று. வேறு ஏதாவதொன்றை எடுத்துக்கொள்ள முடியுமா என்று பார்ப்போம். 86கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஸ்திரிகள் எவ்விதம் (ஓ,என்னே !) தங்கள் தலைமயிரை அணிந்து கொள்ள வேண்டும்? மறுபடியும், நீங்கள் விரும்பும் எந்தவிதத்திலும், 1 தீமோ. 2:9. பாருங்கள்? “ஸ்திரீகள் தகுதியான வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்க வேண்டும்”. தேவனுக்கு பிரதியாயுள்ள விதத்தில் என் தலைமயிரை அணிந்து கொள்ள விரும்புகிறேன். (அருமை சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக). நன்றி. தேவன் உங்களை ஆசீவர்திப்பாராக. எங்களுக்காக ஜெபியுங்கள். அவள் தன் பெயரை கையொப்பமிட்டிருக்கிறாள். ஷாரோன், நிச்சயமாக, சகோதரியே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அதை எவ்வளவு நீளமாக வைத்துக்கொள்ள முடியுமோ; அவ்விதம் வைத்துக்கொள், சகோதரியே. அது ஒரு சிறு பெண். தேவன் உன்னை ஆசீர்வதிப்பராக, இனியவளே, அது சரியாயுள்ளது. அவ்விதமே செய். 87கேள்வி: மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, புத்தியில்லாத கன்னிகை எவராகிலும் இரட்சிக்கப்படுவார்களா, அல்லது எல்லோருமே இழக்கப்படுவார்களா? இல்லை! பாருங்கள், மணவாட்டி பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, புறஜாதி சபைக்கு எல்லாமே முடிவடைந்திருக்கும். தேவ ஆவியானவர் பூமியை விட்டுப்போய் விடுகிறார். “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” (வெளி.22:11). வேறு சொற்களில் கூறுவோமானால், பரிசுத்த ஸ்தலம் புகையினால் நிறைகிறது. அங்கு தான் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காட வழக்கறிஞர் நின்று கொண்டிருக்கிறார். கிறிஸ்து பரிசுத்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுகிறார்; அவர் மத்தியஸ்தம் செய்த காலம் முடிவடைகிறது. எடுத்துக்கொள்ளப்படுதல் வருகிறது. அவர் பரிசுத்த ஸ்தலத்தை விட்டுப்புறப்பட்டுச் சென்று, மீட்பின் புத்தகத்தை வாங்கிக் கொண்டு, அவர் மீட்டுக் கொண்ட எல்லாவற்றையும் உரிமை கோரிப் பெற்றுக் கொள்கிறார். மத்தியஸ்த ஊழியம் அதன் பிறகு கிடையாது. எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? அது முத்திரைகளில் ஒன்றில் உள்ளது. அல்லது ... ஆம், முத்திரைகளில், அப்படித்தான் நினைக்கிறேன், கிறிஸ்து தமது மத்தியஸ்த ஊழியத்தினால் கிடைக்கப்பெற்றவர்களை உரிமை கோருவதற்கென புறப்பட்டு வருகிறார். 88இப்பொழுது, ஒரு நிமிடம், “புத்தியில்லாத கன்னிகை இரட்சிக்கப்படுவாளா?” இல்லை! நடப்பது என்னவானாலும், இப்பொழுதே நடக்கிறது. அந்த காலத்துக்குப் பிறகு அவள்... இப்பொழுது, அவள் உபத்திரவ காலத்தின் வழியாய் கடந்து செல்ல வேண்டும். அதற்கு காரணம் என்னவென்றால், அவள் பிராயச்சித்தத்தை அதன் முழுமையில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து விட்டாள். அவள் ஒரு விசுவாசி, விசுவாசியைப்போல் நடந்துகொண்டவள், ஆனால் அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். “வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றிவிட்டு, அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப் போயிற்று என்று வேதம் உரைக்கிறது (வெளி. 12:15-17). அது எத்தகைய ஒரு நேரமாயிருக்கும்! பெயர் கிறிஸ்தவ சபைகள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற வேண்டுமென்று இப்பொழுது பசிகொண்டிருப்பதைப் போல் வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இருந்ததில்லை. நான் கிறிஸ்தவ வர்த்தகர், பிரஸ்பிடேரியன், லூத்தரன், கத்தோலிக்கர், நூற்றுக்கணக்கான பாப்டிஸ்டுகள், கிறிஸ்து சபை, நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தார் ஆகியோரைக் குறிப்பிடுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் அதைக் கண்டுக்கொள்ள முயல திரளாக உங்களிடம் வருகின்றனர். பாருங்கள்? 89இப்பொழுது, இது ஒரு குறிப்பிடத்தக்க காரியம். தயவு செய்து இதை ஒரு உபதேசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவ்விதம் சம்பவிக்கும் போது, என்ன நடக்குமென்று வேதம் உரைத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? காலமானது முடிவடைந்துவிட்டது. கவனியுங்கள், ஏழு கன்னிகைகள் - இல்லை, பத்து கன்னிகைகள் மணவாளனைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் பாதி பேருக்கு தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. பாதி பேருக்கு எண்ணெய் இல்லை. அது தான் மரித்துப்போன சரீரத்தின் பாகமும் உயிரோடிருக்கிறவர்களின் பாகமும். ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள். “இதோ, மணவாளன் வருகிறார்' என்னும் சத்தம் புறப்பட்டுச் சென்று போது அவர்கள் எல்லோரும் தீவட்டிகளைச் சுத்தம் செய்து. கலியாண விருந்துக்குச் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் புத்தியில்லாத கன்னிகையோ, ”உங்கள் எண்ணெயில் கொஞ்சம் தாருங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து விட்டன (பாருங்கள்?), உங்கள் எண்ணெயில் கொஞ்சம் தாருங்கள்“ என்றனர். அவர்கள் எண்ணெய் வாங்க சென்றிருந்தபோது, மணவாளன் வந்துவிட்டார். 90“மணவாளன் வந்து கொண்டிருக்கிறார்” என்னும் அறிக்கை, பிரகடனம் புறப்பட்டுச் சென்று போது, எல்லோருமே தங்களை வேகமாக சரிப்படுத்திக் கொள்ள விரும்பினர். கையுறுப்பு சுவற்றில் காணப்படுகின்ற நேரம் அதுவல்லவா? “ஓ, எங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. ”எங்களுக்கு இது; அது, மற்றது தேவை. அவர்கள் அதை வாங்கச் சென்றிருந்த போது, மணவாளன் வந்து விட்டார். புத்தியுள்ள கன்னிகைகள் உள்ளே பிரவேசித்தனர். அவர்களோ புறம்பே விடப்பட்டனர். அங்கு அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அதனுடன் சம்பந்தப்பட்ட அழகான கேள்விகள் என்னிடம் உள்ளன. “கலியாண வஸ்திரத்துடன் உள்ளே பிரவேசித்த மனிதன் யார்? அதனுடன் இணைந்துள்ள கேள்விகள்... 91கேள்வி: ஒருவன் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா, அல்லது கிறிஸ்தவன் வேலைசெய்ய வேண்டுமா? நிச்சயமாக, அவன் வேலை செய்ய வேண்டும். கிறிஸ்தவன் வேலை செய்யும் ஒரு மனிதனாயிருப்பான். “தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா? அந்த தனிப்பட்ட நபர் யாரென்பதை அது பொறுத்தது. அது உண்மை. எபிரெயர் 7ம் அதிகாரத்தில், தசமபாகத்தைக் குறித்து முதன் முதலாக பேசப்படுகிறது. நாம் எந்த நிலையில்.... ஒரு நிமிடம் பொறுங்கள், இரண்டாம் கேள்வி, இல்லை! உ, ஊ. இல்லை! ஏனெனில் சகோதரன், ''சகோ.பிரான்ஹாமுக்கு இரண்டு கேள்விகள்” என்று கூறியுள்ளார். அப்பொழுது... எபிரெயர் 7ம் அதிகாரத்தில், ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து விட்டுதிரும்பி வருகையில், மெல்கிசேதேக்கை சந்தித்து, அவனுக்கு தசமபாகம் செலுத்தினான். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா , நீதியின் ராஜா, அது தேவனைத் தவிர வேறு யாருமில்லை. பாருங்கள்? ஆனால் நீங்கள் தசமபாகம் செலுத்தும் போது... உண்மையில் நீங்கள் எங்கு ஆகாரத்தைப் பெறுகிறீர்களோ, அங்குதான் நீங்கள் தசமபாகம் செலுத்த கடன்பட்டிருக்கிறீர்கள். “உங்கள் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கெண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்.3:10). தசம்பாகம் செலுத்தாத எந்த ஒரு மனிதனும் அல்லது ஸ்திரீயும் இதை ஏற்றுக்கொள்ளும்படி நான் சவால் விடுகிறேன். 92அதை நான் கண்ட போது, என்ன நடந்ததென்றும், நான் என்ன நிலையில் இருந்தேன் என்றும், காலை வரையில் இங்கு நின்று கொண்டு என்னால் உங்களிடம் கூற முடியும். ஆனால் என்னால் கூடுமான வரையில் நான் விசுவாசமுள்ளவனாய் தசமபாகங்களை செலுத்தி வந்திருக்கிறேன். இந்த சபையிலிருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை நான் எடுத்துக்கொள்ளும் போதும், அல்லது கூட்டங்களில் எனக்கு கூடுதல் கிடைக்கும் போதும் - நான் தசமபாகம் கொடுக்கிறேன்.. நான் அதை ஊழியக்காரர்களுக்கு கொடுத்து விட்டு, கூட்டங்களில் கிடைக்கும் மற்றதை ஊழியக்காரர்களுக்கு கொடுக்கிறேன். அப்படி என்னால் செய்ய முடியாமல் போனால், நான் என்ன செய்கிறேன் என்றால், நான் பத்து சதவிகிதம் வைத்துக்கொண்டு தேவனுக்கு தொண்ணூறு சதவிகிதம் செலுத்தி வந்தேன். பிறகு, அவ்விதம் நான் செய்யக் கூடாதென்று பிரமாணம் எனக்கு எடுத்துரைத்தபோது... அவ்விதம் நான் செய்தால், அது அதன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நான் அதை எடுத்து வெளிநாடுகளில் நடக்கும் மிஷன் ஊழியங்களுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வாரத்துக்கு நூறு டாலர் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதிலிருந்து என் தசமபாகத்தை செலுத்துகிறேன். ஆம். ஐயா! தசமபாகம் கொடுப்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். அது தேவனுடைய ஆசீர்வாதங்களில் ஒன்று, அது ஆசீர்வாதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள், “அது பழைய ஏற்பாட்டில் உள்ள ஒன்று எனலாம். அது புதிய ஏற்பாட்டில் உள்ள ஒன்றும் கூட! ஆம் ,ஐயா! 93கேள்வி: அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, விவாகமாகாமல் ஒரு குழந்தை பிறந்தால், அது இரட்சிக்கப்படக் கூடுமா, அல்லது எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல முடியுமா? இரட்சிக்கப்படக் கூடுமா? ஏன் நிச்சயமாக, நான் விசுவாசிக்கிறேன் அந்த குழந்தை... நடந்த ஒரு காரியத்துக்கு அந்த குழந்தை பொறுப்பல்ல. அது உண்மை. ஆனால் நான்.... எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லும் விஷயத்தில்... இரட்சிக்கப்படக் கூடுமா என்னும் விஷயத்தில் நான் “ஆம்” என்பேன். ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதல் என்னும் விஷயத்தில், தெரிந்து கொள்ளப்பட்ட வித்துதான் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்கின்றது. விபச்சாரத்தினால் உண்டாகும் குழந்தை தெரிந்துகொள்ளப்பட்ட வித்து என்பதை என்னால் நம்ப முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? அந்த குழந்தை இரட்சிக்கப்படக் கூடுமென்று நான் நம்புகிறேன்; அந்த குழந்தை இதற்கு பொறுப்பல்ல. அது பயங்கரமான ஒரு செயல். இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், முறை தவறிப் பிறந்த குழந்தை கர்த்தரின் சபைக்குள் பத்து தலைமுறைக்கு பிரவேசிக்கக் கூடாது - அதாவது நானூறு சொச்சம் ஆண்டுகளுக்கு. அந்த சாபம் அவ்வளவு கொடியது. அதை யோசித்துப் பாருங்கள். ஒன்றும் அறியாத குழந்தை, அதன் பத்து தலைமுறை பேரப் பிள்ளைகள் கர்த்தருடைய சபையில் பிரவேசிக்க முடியாது. அது உண்மை . ஆனால் பாருங்கள், அந்த பாவத்தை மன்னிப்பதற்கு வலிமையான எதுவும் இருக்கவில்லை. பழைய ஏற்பாட்டின் இரத்தம் பாவங்களை மன்னிக்கவில்லை; அது பாவங்களை மூடினது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ அதை புறம்பாக்குகிறது. இப்பொழுது அது வித்தியாசமாயுள்ளது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வரும்போது, அது வித்தியாசமடைகிறது. 94கேள்வி: சகோ. பிரான்ஹாமே; கூடுமான வரையிலும் உமது செய்திக்கு நாங்கள் நெருங்கியிருக்க விரும்புகிறோம். நாங்கள் அரிசோனா அல்லது ஜெபர்ஸன்வில்லுக்கு குடிபுகலாமா? உங்கள் செளகரியத்துகேற்ப ஏதாவது ஒன்றில். நான் நிச்சயம் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்றோ, என்ன செய்கிறீர்கள் என்றோ எனக்கு கவலையில்லை. ஆனால் இப்பொழுது, ஆலோசனையாக, நானாயிருந்தால் ஜெபர்ஸன் வில்லுக்கு குடிபுகுவேன். நீங்கள் எப்படியும் இடம் மாற விரும்பினால், ஜெபர்ஸன் வில்லுக்கு வாருங்கள். நான் அரிசோனாவை விட இங்கு தான் அதிக நாட்கள் இருக்கிறேன். அது நல்லது. 95கேள்வி: சகோ. பிரான்ஹாமே, பாவிகளுக்கு இனி பிரசங்கிப்பதற்கு இப்பொழுது நேரம் மிகவும் தாமதமாகி விட்டதா? இல்லை! இல்லை! அவ்விதம் உங்கள் மனதில் சிந்திக்காதீர், நண்பரே, வீட்டை தொடர்ந்து கட்டிக்கொண்டேயிருங்கள். உங்களால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்து கொண்டே யிருங்கள். நீங்கள் அழைத்துக் கொள்ளப்படும் வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள், பாருங்கள்? 96கேள்வி எண் 2: இரட்சிக்கப்பட்டவர்கள் பாவிகளிலிருந்து ஆராதனையில் தங்களை பிரித்துக்கொள்ள வேண்டுமா? நீங்கள் என்ன அர்த்தத்தில் இதை கூறியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வெளியே உள்ள பாவிகளை குறிப்பிடுகிறீர்கள் என்றால்... நீங்கள் தேவனை எங்கும் தொழுதுகொள்கின்றீர்கள். அவ்விதம் நாம் செய்வோமென்றால், நாம் எப்படி சபைக்குச் செல்லமுடியும்? ஏனெனில் சபைக்குள் பாவிகள் வந்து கிறிஸ்தவனின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கின்றனரே! நீங்கள் பாவத்தைத் தவிர வேறெதிலிருந்தும் உங்களைப் பிரித்துக்கொள்ளாதீர்கள், பாவிகளிலிருந்து உங்களை பிரித்துக் கொள்ளாதீர்கள். கூடுமானால் பாவியை கொண்டு வாருங்கள். ஆனால் அவனுடைய பாவத்தில் பங்கு கொள்ளாதீர்கள். 97கேள்வி: இரட்சிக்கப்பட்ட ஒரு மனைவி தன் கணவர் பாவியாயிருந்தால் அவர் அணுகினால் மறுக்கவேண்டுமா? இல்லை, ஐயா! இல்லை ஐயா! அவர் உன் கணவர். அவ்விதம் செய்வதனால் அவரை தேவனிடத்திலிருந்து அதிக தூரம் துரத்தி விடுவாய். பார்? அது உண்மை , சகோதரனே, சகோதரியே. நீ அவரை விவாகம் செய்து கொண்டாய்; அவர் உன்னுடையவர், நீ அவருடையவள். 98கேள்வி: சகோ.பிரான்ஹாமே, 'ஆனல்மெண்ட்' என்னும் சொல்லின் பொருள் என்ன? ஜனங்கள் விவாகம் செய்துகொள்ள சுயாதீனம் பெறுகின்றனரா? அல்லது இது விவாகரத்தைக் குறிக்கும் மற்றொரு சொல்லா? இதன் பேரில் சில தகவல் அறிய விரும்புகிறேன். நிச்சயமாக அவர்கள் விவாகமானவர்களே, அவர்கள் பொருத்தனை செய்து கொண்ட வரைக்கும் அவர்கள் விவாகமானவர்களே. உதாரணமாக, ஒரு பையன் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக நல்விசுவாசத்துடன் வாக்குகொடுத்திருந்தால், அவன் அந்த பெண்ணை விவாகம் செய்ய கடமைப்பட்டிருக்கிறான். அவன் அவளை விவாகம் செய்து கொண்டதற்கு சமானம். நாட்டின் சட்டம் செய்கின்ற ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, நீங்கள் ஒன்றாக வாழ்வதற்கு அது உங்களுக்கு உரிமை பத்திரம் அளிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயிடம், “நான் உன்னை விவாகம் செய்து கொள்வேன், தேனே; உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்வேன், நீ என்னை ஏற்றுக்கொள்வாயா?” என்று கேட்டால், அவன் விவாகமானவன். உங்கள் விவாக பொருத்தனை புனிதமானது; அது தான் உங்களை விவாகம் செய்து வைக்கிறது. எந்த பிரசங்கியும். எந்த மாஜிஸ்ட்ரேட்டும் அல்லது எவருமே உங்களை விவாகம் செய்து வைக்கிறதில்லை; நீங்கள் தேவனுக்கும் இந்த மனிதனுக்கும் செய்யும் பொருத்தனையே விவாகம் செய்விக்கிறது. நீங்கள் வாக்கு கொடுக்கும் போது, உங்களுக்கு விவாகமாகிவிடுகிறது. 99பாருங்கள், நீங்கள், “சகோ பிரான்ஹாமே, அது சரி தானா? நீங்கள் வேதத்தைக்கொண்டு மாத்திரமே பதில் சொல்வீர்கள் என்று கூறினீர்களே” எனலாம். அதைக்குறித்த வேத ஆதாரம் உங்களுக்கு வேண்டுமா? வேண்டுமானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, நமக்கு ஆறு அல்லது எட்டு நிமிடங்கள் உள்ளன. சரி. யோசேப்பு, அவளுடைய புருஷன் நீதிமானாயிருந்தபடியால் (அவளுடைய புருஷனாக அவன் நியமிக்கப்பட்டிருந்தான், ஆனால் அவன் ஏற்கனவே அவளுடைய புருஷன் என்று அழைக்கப்பட்டான்)... “யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் தள்ளி விட யோசனையாயிருந்தான். அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (பாருங்கள்?) கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு : தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்றான் (மத்.1:19, 20). அவனுக்கு ஏற்கனவே விவாகமாகிவிட்டது. அவன் ஏற்கனவே அவளுக்கு வாக்கு கொடுத்தாகிவிட்டது. 100மற்றும் சிறு பெண்ணே, அந்த பையனை விவாகம் செய்து கொள்வதாக நீ வாக்கு கொடுத்திருந்தால், அதை செய்ய நீ கடமைப்பட்டிருக்கிறாய். அந்த கடமைக்கு பிறகு, நீ வேறொருவனை விவாகம்செய்து கொண்டால் - இப்பொழுது முதல் அதை நீ எப்படியும் செய்வாய் - நீ விபசாரத்தில் வாழ்கிறவளாயிருப்பாய். கவனி, ஒரு பையன் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தாலும், அதே காரியம் தான். நீங்கள் கைக்கொள்வதாக இருந்தால் மாத்திரமே நீங்கள் வாக்குபண்ணுங்கள், இல்லையென்றால் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். அதற்கு வேத ஆதாரம் உண்டென்பதை ஞாபகம்கொள்ளுங்கள். யோசேப்பு மரியாளை விவாகம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தான். அதுதான் விவாகமான நிலை என்பதாக தேவன் கூறினார். அதைக்குறித்த பழைய ஏற்பாட்டு பிரமாணத்தைப் படியுங்கள். பாருங்கள்? பழைய ஏற்பாட்டு பிரமாணத்தின்படி நீங்கள் ஒரு பெண்ணை மணந்துகொள்வதாக வாக்கு கொடுத்து விட்டு, வேறொருத்தியை மணந்து கொண்டால், நீங்கள் விபச்சாரம் செய்பவராகிவிடுகிறீர்கள், அது உங்களை பாளயத்திலிருந்து புறம்பாக்கும். ஆம். ஐயா! ஒரு பெண்ணுக்கு நீங்கள் வாக்குகொடுத்தால், அதை நிறைவேற்ற வேண்டும். அவள் புனிதமான சிறுபாண்டம், அது உலகிற்கு ஒரு குழந்தையை கொண்டு வர வேண்டியதாயுள்ளது. எனவே நீங்கள் அவளுக்கு வாக்குகொடுக்கும்போது, அவளை நீங்கள் விவாகம் செய்துகொள்ள வேண்டும். 101கேள்வி: சிறை ஆராதனைகளுக்கும், ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கென சாட்சி கூறும் ஊழியத்துக்கும் மிகவும் கால தாமதமாகி விட்டதா? மேலும், கர்த்தர் சீக்கிரம் வரப்போவதனால், ஒருவர் தனக்கு இப்பொழுதுள்ள எல்லாவற்றையும் விற்று விட வேண்டுமா? நல்லது. உங்களுக்கு எப்படி.... அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் விசுவாசிக்க, நான் ஒன்றையும் கூறவில்லை என்று நம்புகிறேன். நான் அவ்விதம் ஏதாகிலும் கூறினதுண்டா? அவ்விதம் கூறியிருந்தால், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் அந்த அர்த்தத்தில் கூறியிருக்கமாட்டேன். பாருங்கள்? இவைகளை நீங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் தொடர்ந்து சென்று, பிரசங்கித்து, சிறை ஆராதனை நடத்தி, எல்லோருக்கும் சாட்சி சொல்லுங்கள். இங்கு பாருங்கள். ஏழாம் நாள் ஆசரிப்பு சபையினர் அண்மையில், ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு - அதை நான் 'குரியர் ஜாணல் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன் (அது என் பெட்டியில் எங்கோ உள்ளது), 'குரியர் ஜாணல் செய்தித்தாளில் ஒரு பெரியபாகம். அவர்கள் தங்கள் பழைய பெயரைக் களைந்து விட்டு, அவர்கள் 'மில்லரைட்ஸ்' என்று அழைக்கப்படுவதை தவிர்த்து, ஏழாம் நாள் ஆசரிப்பு சபை என்று அழைக்கப்படலாயினர்: 'குரியர் ஜர்னல்' என்னும் செய்தித்தாளின் ஒரு பெரிய தாளில் - அது ப்ராக்ளின், கென்னடி என்னுமிடத்தில் வெளியிடப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக்களை விற்றுவிட.... அவர்கள் ஒரு தேதியை குறித்து, அதை வேத வசனங்களின் மூலம் நிரூபித்து- இயேசு அந்த குறிப்பிட்ட தேதியில் வருவாரென்று அறிவித்து, தங்கள் கின்னரங்களுடனும் மற்றவைகளுடனும், மலைக்கு மேலே சென்று அங்கு உட்கார்ந்து காத்துக்கொண்ருந்தனர். அடுத்த நாள் காலையில் பனி பெய்து அவர்களுடைய சிறகுகளையெல்லாம் நனைத்து விட்டது. காற்றெல்லாம் போய் விட்டவர்களாக அவர்கள் கீழே இறங்கி வந்தனர், பாருங்கள்? அது கொள்கைகளும் (cults) மற்றவைகளும். 102அதை நம்பாதீர்கள். இயேசு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வராமலிருக்கக்கூடும். அவர் எப்பொழுது வருகிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் எப்பொழுது வருகிறார் என்று எந்த மனிதனுக்கும் தெரியாது. ஆனால் அவர் வரும் வரைக்கும் நான் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டும், என்னாலான எல்லாவற்றையும்செய்து கொண்டிருக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கப் போகிறேன். அவர் இன்று இங்கு இல்லாமல் போனால், நாளை அவரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் இந்த வாரம் இங்கு இல்லாமல் போனால், அவருக்காக அடுத்த வாரம் காத்திருப்பேன். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் வராமலிருந்து, நான் உயிர் வாழ்வேனானால், அடுத்த முப்பது ஆண்டுகள் அவருக்காக காத்திருப்பேன். பாருங்கள்? நான் அப்பொழுதும் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் எப்பொழுது வருவாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய வார்த்தைக்கும் அவருடைய மக்களுக்கும் நான் உண்மையாய் ஜீவித்து, ஒரு கிறிஸ்தவனைப் போல் வாழ்ந்து, அவருடைய வருகைக்காக காத்திருக்க விரும்புகிறேன். பாருங்கள்? சிறை ஆராதனைகளில் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு உங்களாலான மட்டும் எல்லோரையும் இரட்சிப்புக்குள் கொண்டு வாருங்கள். அவர் எப்பொழுது வருகிறாரென்று எனக்குத் தெரியாது; யாருக்குமே தெரியாது. ஆனால் இந்த ஒரு காரியத்தை நான் கூறவிரும்புகிறேன். இதற்காகத் தான் இதை நான் உங்களுக்கு கூற முயல்கிறேன், உங்கள் சொந்த வியாக்கியானத்தை இதற்கு தர மாட்டீர்கள் என்று நம்புகிறேன்... அந்த நபரைப் பார்த்து நான் கூச்சலிடவில்லை. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரனே, சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும், இது இந்நகரிலிருந்து வெளியே உள்ள ஒருவர் போல் தோன்றுகிறது, ஏனெனில் அது அஞ்சல் கார்டில் எழுதப்பட்டுள்ளது. அது கொலராடோவிலுள்ள டென்வர் என்று நினைக்கிறேன்... ஆம், பைக் பீக், கொலராடோ யாரோ ஒருவர் அதை அஞ்சல் வழியாக அனுப்பியிருக்கக் கூடும். அதனால் பரவாயில்லை. அவர்கள் ஒலிநாடாவை ஒருக்கால் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் நாம் ஞாபகம்கொள்வோம், நீங்கள் ஒன்றையும் மாற்றி விடாதீர்கள், பாவத்திலிருந்து நீதிக்கு மாத்திரம் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பணியில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திருந்து, அதை அப்படியே செய்து கொண்டிருங்கள். இதை புரிந்துகொண்டவர்கள் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). பாருங்கள்? அதை இப்பொழுது செய்யுங்கள். 103கேள்வி: சகோ. பிரான்ஹாமே, மத்.12:40ல், “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் இரவும் பகலும், மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” என்று கூறப்பட்டுள்ளதே, அப்படியிருக்க, அவர் கல்லறையில் வெள்ளிக்கிழமை மாலையில் வைக்கப்பட்டு ஞாயிறு காலையில் உயிர்த்தெழுந்தார் என்று அவர்கள் எப்படி கூறமுடியும்? அந்த கணக்குப்படி இரண்டு இரவுகளும் ஒரு பகலும் தான் ஆகின்றதே? நீங்கள் கவனிப்பீர்களானால் “போல” (பாருங்கள்?) என்று கூறப்பட்டுள்ளது. “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல ...” அது மூன்று பகல்கள் மூன்று இரவுகளுக்குள்ளாக இருக்க வேண்டும், ஏனெனில் வேத வசனத்தை பொய்யுரைக்க வைக்க உங்களால் முடியாது. “அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில்விடேன்; என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன் என்று தீர்க்கதரிசி கூறியிருக்கிறான்'' (சங்.16:10). மனித உடலில் அழிவு எழுபத்திரண்டு மணி நேரத்தில் உண்டாகிறது. எனவே இரவும் பகலும் மூன்று நாட்களுக்குள் எப்பொழுதாவது அவர் கல்லறையை விட்டு வெளிவர வேண்டும். எனவே இரவும் பகலும் மூன்று நாட்கள் என்றால் சரியாக அப்படியே என்று அர்த்தமல்ல, அது இரவும் பகலும் மூன்று நாட்களுக்குள்ளாக எப்பொழுதாவது, அதற்குள் அவர் உயிரொடெழுந்து வெளிவர வேண்டும், ஏனெனில் தீர்க்கதரிசனம் பொய்யாயிருக்க முடியாது.... அவர் அழிவைக்காண முடியாது. அவர் சரியாக அந்த நேரம் வரைக்கும் தங்கியிருந்தால், அது அழிவைக் கண்டிருக்கும். 104கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஒரு மனிதனுக்கு விவாகமாகியிருந்து விவாகரத்து செய்திருந்தால் (அது பயங்கரமான செயல் இல்லையா (பாருங்கள்), எத்தனையோ பேர்? இப்பொழுது. நான் மக்களுக்கு விரோதமாக எதையும் கூறவில்லை; இதுவே ஜனங்களின் மனதில் உள்ளது. நிச்சயமாக, அவர்கள் கலக்கமுற்றிருக்கின்றனர் முன்பெல்லாம் ஜனங்கள் எடுத்துகொள்ளப்படுதல் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை, அது முக்கியமாக காணப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ அது உலகம் முழுவதிலும் பரவிவிட்டது. ஜனங்கள் வேதாகமத்தில் இதைக் குறித்து படிக்கின்றனர். அங்குள்ள தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் அது என்னவென்று காண வருகின்றனர். அவர்கள் அதை அறிந்து கொள்கின்றனர், அவர்கள் உத்தமமாயுள்ளனர். அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர். ஆகையால் தான் இதைக்குறித்து மிகுந்த ஞானத்தோடு உங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். விவாகமாகியிருந்து விவாகரத்து செய்துவிட்டு, அதன் பிறகு ஏற்கனவே விவாகமாகி விவாகரத்து செய்திருந்த ஒருத்தியை மறுபடியும் விவாகம் செய்திருந்தால், இவ்விருவரும் கர்த்தருடைய பார்வையில் விவாகம் செய்தவர்களாக எண்ணப்படுவார்களா? எப்படி இவ்விருவர் அல்லது இவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லமுடியும்? எப்படி? எனக்குத் தெரியாது. என்னால் கூற இயலாது. கேள்வி என்னவெனில் அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்களா?'' என்பதே. விவாகரத்து செய்வதர்கள், இருவருமே விவாகரத்து செய்தவர்கள், இவர்கள் இருவருக்குமே உயிரோடிருக்கும் துணையார் உள்ளனர். அதன்பிறகு இருவமே மறுபடியும் விவாகம் செய்து கொண்டனர். இப்பொழுது... இந்த ஸ்திரீக்கு உயிரோடிருக்கும் கணவர் இருக்கிறார்; இந்த மனிதனுக்கு உயிரோடிருக்கும் மனைவி இருக்கிறாள். இப்பொழுது, அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர்; அவர்கள் தேவனிடம் வர விரும்புகின்றனர். அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லமுடியுமா? அது பரலோக பிதாவைப் பொறுத்தது. என்னால் அதற்கு பதிலுரைக்க இயலாது. பாருங்கள்? நான் ஒரு காரியத்தைக் காண்கிறேன். அவர்கள் விபச்சாரக்காரர் என்று அழைக்கப்படுவார்கள் என்று வேதம் உரைக்கிறது. மேலும் விபச்சாரக்காரன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை' என்றும் வேதம் உரைக்கிறது. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். அதைக் கூறுவது என்னைக் கொன்றுவிடுகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் வார்த்தை உரைப்பதைத் தவிர வேறெதையும் என்னால் கூற இயலாது. நான் அதில் நிலைத்திருக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவையெல்லாம் தவறாயிருக்கக் கூடாதா என்று எண்ணுகிறேன். வேதத்தில் சில இடங்களில்.... 105நான் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை. தயவு செய்து, ஒரு சிறு வேத வசனத்தை உங்களுக்கு நான் தர விரும்புகிறேன். தயவு செய்து, தயவு செய்து செய்யாதீர்கள் - செய்யாதீர்கள் ....நீங்கள் சந்தோஷமாக உங்கள் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்தால், சந்தோஷமாக உங்கள் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தால், அப்படியே வாழ்ந்து கொண்டிருங்கள். அதற்காக நீங்கள்... நான் கூறினேன் என்பதற்காக அந்த சிறு பிள்ளைகளை விட்டு விலகி, அவர்களுக்கு வீடு இல்லாமல் செய்து விடாதீர்கள். தவறு செய்த ஜனங்களுக்கு தேவன் பரிகாரம் செய்ததாக வேதத்தில் சில இடங்கள் உண்டு. இயேசு தாவீதைக் குறித்து கூறினது உங்களுக்கு ஞாபகமுள்ளதால், அவன் பசியாயிருந்த போது, தேவாலயத்துக்குள் பிரவேசித்து, ஆசாரியர்கள் மட்டும் புசிக்கத் தகுந்த சமூகத்தப்பத்தை புசித்து, குற்றமற்றவனாக காணப்பட்டான். ஆசாரியனும் ஓய்வு நாளில் செய்யத்தகாததை செய்து குற்றமற்றவனாக காணப்பட்டான், ஓய்வு நாளிலும் பெரியவர் இங்கிருக்கிறார். பாருங்கள்? அங்கே... நான்.... இதை நாம் தேவனிடம் சமர்ப்பித்து விட்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே வாழ்ந்து .... இப்பொழுது கிறிஸ்துவுக்காக நாம் வாழ்வோம். நாம் பார்க்கலாம், நீங்கள் உட்பிரவேசிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கக்கூடும். மற்றொரு தவறைச் செய்து விடாதீர்கள். இரண்டு தவறுகள் ஒரு தவறை நேராக்கி விடாது. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தால், ஒருக்கால் உங்களுக்கு ஒரு தவறான துணை இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை யில் உங்களுக்கு தவறான துணை இருக்குமானால், மற்ற வாழ்க்கையில் உங்களுக்கு அப்படி இருக்காது. எல்லா தவறுகளும் சரியாக்கப்படும். 106மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளும் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்களா? “இல்லை, ஒரு பங்கு மாத்திரமே, ஒரு பங்கு, மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளும் அல்ல. ”மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' என்று வேதம் உரைக்கிறது (வெளி. 20:5). அதன் பிறகு அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு, வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகள் பிரிக்கப்படுகின்றனர். மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளுமே செல்வதில்லை... வேதத்தின்படி . 107ஒருவர் உண்மையில் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி என்ன? யோவான்: 14:26, அவர்... “பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது (பாருங்கள்?), வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13). பாருங்கள்? அவர் ஒரு... அவர் அதை பரிபூரணப்படுத்துவார். “மனிதனால் உண்டாக்கப்பட்டவை அதை செய்ய முடியாது - அவர் வார்த்தையாயிருக்கிறார், பரிசுத்த ஆவியாகிய அவர் வரும்போது, அவர் வேதவாக்கியங்களுடன் தம்மை உங்களில் அடையாளம் கண்டு கொள்வார். அதுவே பரிசுத்த ஆவி உங்களில் உள்ளதென்பதற்கு உண்மையான அடையாளம், ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. இப்பொழுது பாருங்கள்! நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதனால் என்ன? அதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் என்ன செய்வாரென்று இயேசு கூறியுள்ளார். நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, மேலும் கீழும் குதித்து, கூச்சலிட்டு, மற்ற அனைத்தும் செய்து, அதன் பிறகு வார்த்தைக்கு வருகின்றீர்கள்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப்பெயர்களை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுப்பதென்பது வேதவாக்கியங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவு என்பதை நான் வேத வாக்கியங்களின் மூலம் உங்களுக்கு நிரூபிக்க முடியும். எவருமே அவ்விதம் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, இருப்பினும் நீங்கள் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட ஒன்றைச் செய்வாரென்று என்னிடம் நீங்கள் கூற முடியுமா? அவர் எவ்விதம் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியும்? 108இந்நாளில் என்ன நடக்கவிருக்கிறது என்றும், எவ்வாறு மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்துவார் என்றும், அவர் என்ன செய்வாரென்றும், இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கிற வேத வாக்கியங்களை நான் உங்களுக்கு காண்பித்து விட்டு, அவர் இறங்கிவந்து அதை நிரூபிப்பதை கண்ட பிறகும், நீங்கள் ஸ்தாபனத்திலேயே தங்கியிருந்து நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் என்று எப்படி உங்களை அழைத்துக் கொள்ள முடியும்? அதில் ஏதாகிலும் அர்த்தம் உள்ளதா? என் மனைவியிடம் அவளை நான் நேசிப்பதாக கூறி விட்டு, வேறொருத்தியுடன் நான் சல்லாபம் செய்து, அவளுடன் சுற்றித் திரிந்து, என் இருதயத்திலிருந்து என் மனைவியை நான் நேசிப்பதாக கூற முடியுமா? அது உண்மையான அன்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் என்னை நேசிப்பதாக கூறிக்கொண்டு, நான் வெளியே சென்ற பிறகு வேறொரு மனிதனுடன் திரிய முடியுமா? அதைதான் இஸ்ரவேல் ஜனங்கள் செய்தனர். வேதத்தில் அவர் இஸ்ரவேலரை நோக்கி, “நீ உன் கரங்களை விரித்து வருகின்ற ஒவ்வொரு மனிதனையும் ஏற்றுக்கொண்டு. அவர்களோடு வேசித்தனம் பண்ணினாய். நான் உன்னைப் புறம்பாக்குவேன்” என்றார். முற்றிலுமாக! அது என்ன? நீங்கள் உங்கள் சரீரத்துக்கு விரோதமாக வேசித்தனம் பண்ணுகிறீர்கள். ஒரு ஸ்திரீ வெளியே சென்று வேறொரு மனிதனுடன் வாழும்போது அல்லது ஒரு மனிதன் வேறொரு ஸ்திரீயுடன் வாழும் போது, அவர்களை அவர்கள் விவாகம் செய்து கொள்ளும் போது, தங்கள் சொந்த மாம்சத்தை அசுசிப்படுத்துகின்றனர். ஒரு நபர் தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொண்டு, வேதவாக்கியங்கள் உண்மை என்பதை மறுத்தால், தான் இருப்பதாக உரிமைகோரும் சரீரத்துக்கு விரோதமாக அவன் விபச்சாரம் செய்கிறவனாயிருப்பான். பாருங்கள். அது அந்திக் கிறிஸ்துவின் முத்திரை, அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். 109கேள்வி: சகோ.பிரான்ஹாமே, ஒரு வாலிபப் பிள்ளை ஸ்லாக்குகளையும் குட்டைகால் சட்டையும் அணிவது சரியா? எவ்வளவு வாலிபம்? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், நீங்களே அதை தீர்மானிக்கும்படி விட்டுவிடுகிறேன். ஒரு சிறு பெண் அல்லது மிகவும் சிறிய பெண், நான் நினைக்கிறேன், எனக்குத் தெரியாது, நான்.... எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று. “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் உரைக்கிறது”(உபா.22:5). பாருங்கள்? அது “ஸ்திரீ” என்று சொல்லுகிறது. 'பிள்ளை என்று சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது நான் .... அதைக் குறித்து உங்களுக்கு தோன்றுகிறதை செய்யுங்கள். நான்... என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறு பெண், ஐந்து அல்லது ஆறு வயதுடையவள் அவ்விதம் உடுப்பது தவறென்று எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் சிறுமிகளாக இருக்கும் போது அவர்கள் முற்றத்தில் ஓடி விளையாடுகின்றனர். ஒரு சிறுமி நீங்கள் 'ஸ்லாக்குகள் என்றழைப்பதை உடுத்தினால் அதில் தவறொன்றும் எனக்குக் காணவில்லை. பாருங்கள், நான் வார்த்தை உரைப்பதையே உங்களிடம் கூறுகிறேன். புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது அருவருப்பானது. 110கேள்வி: நாங்கள் எங்கே ஒன்று கூட வேண்டும்? நாங்கள் எக்காளங்களின் போது ஒன்று கூட வேண்டுமென்று நீர் சொன்னீர். கூட்டாளியே, சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும், அதில் நீங்கள் தவறு செய்கிறீர்கள். எக்காளங்களின் போது நீங்கள் ஒன்று கூடுங்கள் என்று நான் சொல்லவேயில்லை. இஸ்ரவேலர் எக்காளங்களின் போது ஒன்று கூடுவார்கள் என்று தான் சொன்னேன், புறஜாதி மணவாட்டியல்ல. இல்லை, இல்லை, எக்காளங்கள், எழு எக்காளங்களின் முழக்கம் இஸ்ரவேலரை உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் ஒன்று கூட்டுவதற்கே (எத்தனை பேருக்கு அது தெரியும்?).... ஆம், புறஜாதி மணவாட்டி அல்ல... இல்லை, இல்லை! உ, ஊ, இல்லை. எனவே அது புறஜாதி மணவாட்டியல்ல.. நாம் எக்காளங்களின் போது ஒன்று கூடுவதில்லை. மணவாட்டி ஒன்று கூடுவதில்லை. எக்காளங்கள் பெந்தெகொஸ்தே பண்டிகைக்குப் பிறகு வருகிறது. பாருங்கள் ? எடுத்துக்கொள்ளப்படுதல் வருகிறது...அது... இந்த கேள்வி அதை குறித்ததல்ல. 111கேள்வி: சகோ.பிரான்ஹாமே, உங்களுக்கு நேரமிருந்தால் மத். 10:41ஐ தயவு கூர்ந்து விளக்கவும். தீர்க்கதரிசிக்கேற்ற பலன் என்னவென்று அறிய விரும்புகிறேன். நல்லது, இயேசு, “தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக் கேற்ற பலனை அடைவான் என்றார் (ஆங்கிலத்தில் ''Prophet's reward”, அதாவது “தீர்க்கதரிசி அளிக்கும் பலன்” என்றுள்ளது - தமிழாக்கியோன்). தீர்க்கதரிசி அளிக்கும் பலன், தீர்க்கதரிசியின் நண்பராயிருப்பதே. நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். அது சரியா? தீர்க்கதரிசியின் பலன் என்னவென்று அவர்கள் அறிய விரும்பினால், அது தீர்க்கதரிசியின் நண்பராயிருப்பதே, பாருங்கள்? அது ஒரு பலன். அவர் உங்கள் நண்பர். சூனேமியாளைப் போல, அது எப்பொழுதாவது உபயோகப்படும் பாருங்கள்? அது அவளுக்கு உபயோகமாயிருந்தது. பாருங்கள்? தேவனுடைய ஊழியக்காரரை கவனியுங்கள். ஓ, என்னே! இப்பொழுது, நாம்... நான் முடிக்க வேண்டும், நண்பனே, அவ்விதம் செய்ய எனக்கு பிரியமில்லை, ஆனால் இங்கு பாருங்கள், நூற்றுக்கணக்கான கேள்விகள் (சபையோர், மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்க, சகோ. பிரான்ஹாமை கேட்டுக் கொள்கின்றனர் - ஆசி). இல்லை! ஆனால், பாருங்கள், அவ்விதம் கூறினதற்காக உங்களை நான் நேசிக்கிறேன், ஆனால்இன்றிரவு நூற்றுக் கணக்கான மைல்கள் காரோட்டி செல்ல வேண்டிய இந்த ஏழை மக்களை எண்ணிப் பார்க்கிறேன். என்ன, அநேக கேள்விகள் இங்குள்ளன. . 112கேள்வி: சகோ.பிரான்ஹாமே, நான் ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து அறிய விரும்புகிறேன். அது கலியாண விருந்துக்குப் பிறகா அல்லது அது பூமியில் இருக்குமா?இவையெல்லாவற்றையும் குறித்து என்னால் அதை புரிந்துகொள்ள இயலவில்லை. நல்லது, சகோதரனே அல்லது சகோதரியே, எனக்கே இதை புரிந்து கொள்வது கடினமாயுள்ளது. நான் கூறக்கூடிய ஒன்றே ஒன்று இது : அதாவது கலியாண விருந்து ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு வருகிறது. இப்பொழுது. பாருங்கள், இங்கு எங்கோ உள்ள. ஒருவருக்கு அதன் பேரில் ஒரு கேள்வி உள்ளது என்று எனக்குத் தெரியும். அவர், “சகோ. பிரான்ஹாமே, அந்த தானியேலின் எழுபது வாரங்களின் பேரில் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள். இன்னும் ஏழு வாரங்கள் இருக்கும்” என்கிறார். இல்லை, மேசியா வந்து தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும், அந்த எழுபதாம் வாரத்தின் மத்தியில் - அது ஏழு வருடங்கள் - அவர் ஜீவனுள்ளோர் மத்தியிலிருந்து பலியாக சங்கரிக்கப்பட வேண்டும். எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? சரி, அப்படியானால் எத்தனை ஆண்டுகள் இயேசு, அந்த மேசியா, பிரசங்கித்தார்? மூன்றரை ஆண்டுகள். அப்படியானால் இன்றும் மூன்றரை ஆண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில், இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். புறஜாதிமணவாட்டி போய்விட்ட பிறகு, இஸ்ரவேலருக்கு மூன்றரை ஆண்டுகள் வாக்களிக்கப்பட்டடுள்ளது. எத்தனை பேர் அதை புரிந்துகொண்டீர்கள்? பாருங்கள்? சரி, சரி. 113கேள்வி: இது ஒரு... நான் பகல் உணவு விடுதி ஒன்றை நடத்தி பெரும்பாலும் உயர்நிலை பள்ளிமாணாக்கர்களுக்கு உணவு வழங்குகிறேன். நான் வெளிச்சத்துக்கு வந்த முதற்கு, நான்' பின் பால் மெஷினை'யும், 'ஜக் பாக்ஸையும் அகற்றி விட்டேன் (அவர்களிடமிருந்த ஜூக்பாக்ஸ்). இளைஞர்கள் புகை பிடித்து, வானொலியில் 'ராக் அண்டு ரோல்' இசையை கேட்க விரும்புகின்றனர். நான் ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே திறந்து வைக்கிறேன். நான் புகை பிடிப்பதையும் குடிப்பதையும் ஆதரிப்பதில்லை, ஆனால் அந்த இடத்தில் வைத்திருப்பதைக் குறித்து நான் கவலையடைந்துள்ளேன். உங்களுக்குத் தெரியுமா, அது ஒரு பிரச்சினை. பாருங்கள்? காரியம் என்னவெனில், நீங்கள் பிழைப்புக்கு ஒருக்கால் இதை செய்தாக வேண்டும். ஆனால் இது எனக்கு என்ன செய்து விடும் தெரியுமா? அது என்னை நரம்பு தளர்ச்சிக்குள்ளாக்கும். அதனால் நான்... நான்... உங்களால் ஒருக்கால் அதை பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால்அந்த சிறு கூட்டம் 'ரிக்கி' களும் 'ரிக்கெட்டாக்களும் அந்தவிதமாக நடந்துகொள்ளும்போது, அது என்னை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கும். பாருங்கள்? நான் உங்களிடம் கூறுகிறேன்; நான்... அது நானாக இருந்தால், நான் என்ன செய்வேனென்று எனக்குத் தெரியும். நான், “அதை நிறுத்துங்கள், இல்லையென்றால் வெளியே போங்கள்” என்பேன். பாருங்கள்? நான் சரியான விதமான இடம் ஒன்றை நடத்துவேன், இல்லையென்றால் அதை நடத்தவே மாட்டேன். ஆனால் நீங்கள், உங்கள் பிழைப்புக்கு அதைசெய்ய வேண்டுமென்றால், உங்களை அவமதிக்க நான் விரும்பவில்லை, சகோதரனே அல்லது சகோதரியே. இவைகளை கூறுவது கடினமென்று நான் அறிவேன்; ஆனால் அது - அது வெறுமனே.... அது சரியல்ல (பாருங்கள்?), ஏனெனில் அது ஒருவிதமாக காணப்பட்டது..... 114 இன்று காலை யாரோ ஒருவர் நமது ஸ்திரீகள் தங்கள் உடைகளை குட்டையாக அணிகிறார்கள் என்று கூறினது போல, வயதான நமது ஸ்திரீகள். அது வாலிப் பெண்களுக்கு ஒரு மோசமான உதாரணமாயுள்ளது. அவர் கூறினது சரியென்று நான் எண்ணுகிறேன். பாருங்கள்? அதேவிதமாகத்தான் இதையும் எண்ணுகிறேன். புகைபிடித்தலும் மற்றவைகளும் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் உங்களைக் காணும்போது, உங்கள் சாட்சியை அவர்கள் அறியும் போது, இந்த பிள்ளைகள் சுற்றிலும் வந்து கெட்ட வார்த்தைகளை உபயோகித்து, அவ்விதம் நடந்து கொண்டு, அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்யாமலிருந்தால், அது உங்கள் சாட்சிக்கு கேடுண்டாக்குகிறது. கர்த்தர் உங்களை எப்படி நடத்துகிறாரோ அப்படி செய்யுங்கள். தேவன் உங்களை சரியான வழியில் நடத்தும்படியாக ஜெபிக்கிறேன். 115 கேள்வி: சபைக்குள் செல்வதற்கு வரிசையில் நிற்பது ஞாபகார்த்தமாக மட்டுமே இருக்குமானால், நாம் உபத்திரவ காலத்தின் வழியாக பிரவேசிக்காமல் போனால், என்ன நடக்கும்? நாம் சில கஷ்டங்களை காண வேண்டுமா? பாருங்கள்? நான்... இந்த கேள்வி ஒருக்கால் இதுவாக இருக்கலாம். நான் துரிதப்பட முயல்கிறேன். நான் அவ்விதம் செய்யக் கூடாது. இவைகளை வைத்து விட வேண்டும். ஏனெனில் ஒரு மணி நேரம் கழிக்க வேண்டிய சில இடம் கேள்வியில் வருகிறது, அதை விரிவாகக் கூற வேண்டும். நான் நிறுத்திக் கொள்கிறேன். பாருங்கள்? ஜனங்கள் இதை கூற விரும்புகின்றனர், அதாவது சபையானது உபத்திரவ காலத்தை சந்திக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? அது சந்திக்காது, அது சந்திக்க முடியாது (பாருங்கள்), ஏனெனில் அது ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது. இப்பொழுது, சபையானது, லோத்தைப் போல் பெயர் விசுவாசிகள், அவன் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று, அக்கியினின்று இரட்சிக்கப்பட்டான். நோவா உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று, அதற்கு மேல் தூக்கப்பட்டு, ஆபிரகாமுடன் வெளிவந்து, அவனும் பூமியை மறுபடியும் மாசுபடுத்தினான். பாருங்கள்? லோத்து வெளியே வந்தான், அவனுடைய சொந்த குமாரத்திகள் அவனுடன் படுத்தனர், அவனுடைய குமாரத்திகளின் மூலம் அவனுக்கு பிள்ளைகள் பிறந்தனர். பாருங்கள்? ஆனால் ஆபிரகாமோ ராஜரீக சந்ததியை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியை, பிறப்பித்தான். ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுதலில் மகிமைக்கு சென்றான். அவன் நடக்கச் சென்று வீட்டுக்கு சென்றுவிட்டான். அவன் உபத்திரவ காலத்தின் வழியாக செல்லவில்லை. பார்த்தீர்களா? பாருங்கள்? வேதம் முன்னடையாளத்தின் மூலம் ஒருபோதும்...முன்னடையாளங்கள் ஒருபோதும் தவறாவதில்லை. பாருங்கள் ? மணவாட்டி உபத்திரவ காலத்தின் வழியாக செல்வாள் என்று முன்னுரைக்கவில்லை... சபையானது உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும். 116இப்பொழுது, ஜனங்கள், “ஆதிகாலத்து பரிசுத்தவான்களைக் குறித்தென்ன?” என்று கேட்கின்றனர். அது யுகங்கள் மாறுதலாகும். அது துன்புறுத்தலின் கீழ், சபை காலங்களின் செய்தியைக் கேட்க நீங்கள் இங்கு இருந்திருந்தால், அவர்கள் எவ்விதம் இருளின் காலங்களின் வழியாக செல்ல வேண்டியிருந்ததென்றும், அவர்கள் துன்புறுத்தலை சகிக்க வேண்டியிருந்ததென்றும் அது காண்பிக்கிறது. ஏனெனில் சபை காலங்கள் ஒவ்வொன்றும் மேலும் மேலும் இருளடைந்து, முடிவில் அவர்கள் அவருடைய நாமத்தை மறுதலிக்கும் நிலையையடைந்து, வேறொரு நாமத்தை எடுத்துக்கொண்டு வாழ்ந்து, ஆனால் மரித்தவர்களாயிருந்தனர் என்பதை அது காண்பிக்கிறது - சர்தை சபையின் காலத்தில். அதன்பிறகு அது பிலதெல்பியா காலத்துக்குள் வந்து, முடிவில் மணவாட்டியை வெளியே அழைக்கும் நேரத்தை அடைகிறது. மணவாட்டி எல்லா ஆக்கினைக்கும் தப்புகிறாள். பூமியின் மேல் வரவிருக்கும் ஆக்கினைக்கும் கோபாக்கினைக்கும் தப்பித்துக்கொள்ள அவள் பாத்திரராயிருக்கிறாள் - அதன் வழியாக செல்வதற்கு அல்ல, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள. பாருங்கள்? இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? ஒவ்வொருவரும்? பாருங்கள்? 117சபை, வெதுவெதுப்பான சபை, தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு புறம்பேயுள்ள எதுவுமே உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சொல்லும். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருக்கமாட்டார்கள். “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” (வெளி.19:5). முன் குறிக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட , தேவனால் சொந்தமாக தெரிந்து கொளப்பட்ட மணவாட்டி மட்டுமே. அது யார். சகோ. பிரான்ஹாமே?“ எனக்குத் தெரியாது. அது யாரென்று என்னால் கூற இயலாது, ஆனால் அது இருக்கப்போகிறதென்று எனக்குத் தெரியும், ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்துள்ளார். பாருங்கள்? அவர்கள் தான் உபத்திரவ காலத்துக்கு தப்பி மேலே எடுத்துக்கொள்ளப்படுவார்கள், மற்றவர்களோ உபத்திரவ காலத்தின் வழியாக இங்கு கீழே கடந்து செல்வார்கள். எல்லாமே ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு கொல்லப்படும். அதன்பிறகு நீதிமான்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது வந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள் . . . இந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வருகிறது. அப்பொழுது மரித்தோர், நல்லோர் தீயோர் இருவரும், உயிரொடெழுவார்கள். புத்தகங்கள் திறக்கப்படுகின்றன, ஜீவபுஸ்தகமும் திறக்கப்படுகிறது; அப்பொழுது பரிசுத்தவான்கள் - மனைவியும் கணவனும் - உட்கார்ந்து கொண்டு நியாயந்தீர்ப்பார்கள். அப்பொழுது “அவர் இருப்புக் கோலால் சகல ஜாதிகளையும் நியாயந்தீர்ப்பார்” என்னும் வசனம் நிறைவேறுகிறது. எல்லா தேசங்களும் அங்கு அவருக்கு முன்பாக நிற்கும், அவர் இருப்புக் கோலால் அவர்களை நியாயந்தீர்ப்பார். அவர் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரித்து, வெள்ளாடுகளை நோக்கி “அகன்று போங்கள்” என்றும், செம்மறியாடுகளிடம், “வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே” என்பார். 118பூமியின் பரப்பு முழுவதிலும் பரிசுத்தவான்களின் காம்ப் கூட்டம் ஒன்று நடைபெறும். சாத்தான் தன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணச்செல்கிறான் - அவன் தொடக்கத்தில் மகிமையில் செய்த அதே விதமாக. அப்பொழுது தேவன் வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷப்பார் . முழு பூமியும் அகற்றப்படுகிறது... அது எரிந்து அழிக்கப்படுகிறது. அப்பொழுது சமுத்திரம் இனி இல்லாமல் போகும், தண்ணீர் இனி இல்லாமல் போகும், ஒன்றுமே பூமியின் மேல்விடப்பட்டிருக்காது. எரிமலைகள் வெடித்து சிதறித் தெளித்து, எல்லாமே.... “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான் பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக்கண்டேன்; அதுதான் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” (வெளி 21:1-2). அது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? இந்த மணவாட்டியில்... “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது” (வெளி. 21:3). தேவன் அவர்களிடத்திலே கூர் நுனிக் கோபுர வடிவிலுள்ள ஆயிரத்தைந்நூறு சதுர மைல்பரப்புள்ள அந்த நகரத்திலே வாசமாயிருப்பார். நகரத்தின் உச்சியில் வெளிச்சம் இருக்கும். ஆமென். ஓ, சீயோன் மலையின் மேலுள்ள அந்நகரம் அந்நியனாயிருந்தும், அதை இன்னும் நேசிக்கிறேன் நான் மலையின் மேலுள்ள அந்நகரத்தை அடையும்போது காலாகாலங்களில் உம்மை சந்திப்பேன். . . 119சீயோன் மலையின் உச்சியில் ஆட்டுக்குட்டியானவர் வீற்றிருப்பார். நகரத்துக்கு வெளிச்சம் தேவையில்லை, ஆட்டுக் குட்டியானவரே அதற்கு விளக்கு. ஆட்டுக் குட்டியானவருக்கு மேல் பிதா, அந்த 'லோகாஸ் இருப்பார். தேவன், அந்த மகத்தான வெளிச்சம், நித்தியவெளிச்சம், சிங்காசனத்துக்கு மேலே பிரகாசிப்பார். இயேசு அவருடைய பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்கமாட்டார், தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பார். பிதா குமாரனின் மேல் வட்டமிட்டுக் கொண்டிருப்பார், பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்“ (ஏசா. 65:24). அது உண்மை . இயேசு ஒரு பரிபூரண, பரிபூரண காலத்தை, பரிபூரணமான ஜீவனுள்ள தேவனுக்கு ஒப்புவிப்பார் - அவர் மீட்டுக் கொண்டதை பிதாவினிடம் ஒப்புவிப்பார். அது சரியா? ஆவியாயிருக்கிற பிதாவாகிய தேவனிடம் ஒப்புவிப்பார், மனிதனிடம் அல்ல, ஆவியாயிருக்கிற பிதாவினிடம். நன்மையானவைகளின் எல்லா சுபாவமும் ஒன்று திரண்டுள்ளது தான் தேவன். நன்மையானவைகளில்... நன்மை தாறுமாறாக்கப்படுதலே பொல்லாங்கு; அது சாத்தானின் ராஜ்யம். நன்மையான எல்லாமே தேவனுக்குச் சொந்தமானது. பொல்லாங்கு அனைத்தும் சாத்தானுக்கு சொந்தமானது. 120அதன் பிறகு தேவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனுக்குள் திடமான பொருளானார். அது தான் அவருடைய குமாரன். இந்த குமாரன், மற்ற குமாரர்களைக் கொண்டுவரும் பொருட்டு தம்முடைய ஜீவனை ஈந்தார் - தேவன் காணக்கூடியவராய் அவர்கள் எல்லோரிலும் கிரியை செய்யும் பொருட்டு, “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள் யோவான்:14:20. ஓ, சகோரதரனே, அது ஒரு உண்மையான நாளாயிருக்கும். நீங்கள் செய்தியைக் கேட்பதற்காக பர்மிங்ஹாமிலிருந்து காரோட்டிக் கொண்டு வரவேண்டிய அவசியமிராது; அப்பொழுது செய்தி நம்முடனே கூட இருக்கும். இல்லையா? ஓ, அது மிகவும் அருமையான, அற்புதமான தருணமாயிருக்கும். நாம் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்; அந்த நாள் வர தேவன் துரிதப்படுத்துவாராக. அங்கு அமர்ந்திருக்கும் அந்த மகத்தான நகரம் (இப்பொழுது, பாருங்கள்?), அது... நீங்கள் நினைக்கலாம் “ஆயிரத்தைந்நூறு மைல் உயரமா?” என்று. அப்படித்தான் வேதம் கூறுகிறது. இப்பொழுது, அது செங்குத்தாக இப்படி ஆயிரத்தைந்நூறு மைல் இருக்காது. பாருங்கள்? எல்லா பாகங்களும் சமமாயுள்ள மற்றொரு பூகோள் அளவு நமக்குள்ளது; அது தான் கூர்நுனிக் கோபுரம். பாருங்கள்? அந்த நகரம் ஒருக்கால் ஏறக்குறைய அறுபது டிகிரியில் துவங்கும். அவ்விதம் அது தொடங்குமானால், அதன் ஆயிரத்தைந்நூறு மைல்கள், அது எவ்வளவு உயரம் என்றும், அங்கு அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ஆனால் மலையின்மேல் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவே தெரியாது. அறுபது டிகிரி சரிவில் ஆயிரத்து ஐந்நூறு மைல் உயரம். நீங்கள் இப்படி இருப்பீர்கள். பாருங்கள்? நகரம் அனைத்தும் இந்த மலையின் மேல் தான் இருக்கும். அது எவ்வளவு உயரமோ அவ்வளவு நீளமும் கூட; அது எவ்வளவு நீளமோ அவ்வளவு அகலமும் கூட - உயரம், ஆழம், உயரம் எல்லாமே சமம்; எல்லா சுவர்களும் சமம் . கூர்நுனிக் கோபுரத்துக்கு நான்கு சுவர்கள் உள்ளன. இந்த நான்கு சுவர்களும்..... 121இப்பொழுது. நகரத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் 216 அடி உயரம், 144 முழங்கள், அவை ஒவ்வொன்றும் ஒரு கல் - அந்த நகரத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே. ஓ.என்னே! நாம் ஏன் இந்த உஷணமான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் இந்த காரியங்களைச் செய்கிறோம்? நாம் ஏன் இவ்விதம் காரோட்டி வருகிறோம்? நான் ஏன் கஷ்டப்படுகிறோம்? அது வழியில் ஒவ்வொரு அங்குலமும் தகுதியுள்ளது. ஓ, நான் வழியின் முடிவை அடையும் போது பாதையில் பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லாதது போல் தோன்றும். அது உண்மை . ஓ, அது எவ்வளவு இனிமையான நேரமாயிருக்கும்! 122அங்கு இயேசு சிங்காசனத்தில் வீற்றிருப்பார். 'சிங்காசனத்துக்கு கீழே ஜீவ நதி ஓடி, இந்த நான்கு சுவர்களின் வழியாக பாய்ந்து சிறு ஓடைகளாகப் பிரிந்து, பிறகு நதியாக உருவாகி. நகரத்தின் வழியாக ஓடும். அது இப்படி தெருக்களின் வழியாக பாய்ந்தோடும். நதியின் இரு பக்கங்களிலும் ஜீவ விருட்சங்கள் நின்று கொண்டிருக்கும், அவை முப்பது நாட்களுக்கு ஒரு முறை தங்கள் கனியை மாற்றி வேறொரு கனியைக் கொடுக்கும், ஓ, என்ன ஒரு நகரம்! வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தராகிய தேவன் இப்பொழுது மகிமையில் இருந்து கொண்டு அந்த நகரத்தை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாம் அந்த நகரம் வருவதற்காக காத்திருந்தான்.... ஏன்? அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் ஆவியுடன் தொடர்பு கொண்டிருந்து, ஆவியின் ஒரு பாகமாயிருந்தான். அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனிடம், “ஒரு நகரம் உண்டு' என்று உரைத்தது. அவன் அது வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அவன், ''நான் ஒரு அந்நியன், ஒரு சஞ்சாரி. தேவன் கட்டி உண்டாக்கின நகரத்துக்காக நான் காத்திருக்கிறேன்” என்றான். அந்த நகரம் எங்கோ உள்ளது என்று அவன் அறிந்திருந்தான். ஒ, என்னே! அவன் அது எந்த இடத்தில் வரும் என்று காத்திருந்தானோ. அந்த பாலஸ்தீனாவில், அங்கு தான் அது எழும்பும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அது சீயோன் மலையின் மேல் உள்ளது. அங்குதான் அந்த நகரம் இருக்கும். அது எங்கு பரம்புகிறது என்று பாருங்கள் - சமுத்திரத்துக்குள், ஒரு சமுத்திரத்திலிருந்து மறு சமுத்திரம் வரைக்கும். கர்த்தருடைய பர்வதத்தின் மேல் ஆயிரத்தைந்நூறு மைல் நகரம் அமர்ந்திருப்பதை எண்ணிப் பாருங்கள். ஓ, அது அற்புதமாயிருக்கும்! 123அங்கு சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும். சிங்கம் மாட்டைப்போல் வைக்கோலைத் தின்னும். கரடி சாந்தமாயிருக்கும், ஓனாய் அடங்கியிருக்கும். அது எப்படிப்பட்ட நேரமாயிருக்கும்! எதுவுமே தீங்கு செய்து அழிக்காது; எல்லாமே சமாதானத்திலும் அன்பிலும் இருக்கும். அங்கு வயோதிபம் இருக்காது, அங்கு வியாதியோ மரணமோ இராது. ஜனங்களே, இது சாண்டா க்ளாஸ் கதை அல்ல, ஏதோ ஒரு கட்டுக்கதை அல்ல, இது வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது. வார்த்தை ஒருபோதும் தவறினதில்லை. அந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து எண்ணிப் பார்க்கும் போது... இது வேதாகம நாட்களில் அல்ல, இந்நாளில், தேவன் நியமித்துள்ள இந்நாளில் நிறைவேறும். அவருடைய வார்த்தையில் ஒரு சிறு அணுவும் கூட ஒருபோதும் தவறினதில்லை. ஓ, அந்த நகரத்தை நோக்கி நான் சென்றுகொண்டிருக்கிறேன். அதை நான் நேசிக்கிறேன், நீங்களும் நேசிக்கிறீர்கள் அல்லவா? 124இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, கடிகாரம் ஒன்பது மணி இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது என்று காண்பிக்கிறது. என்னுடைய சில நண்பர்கள் கென்டக்கியிலிருந்து வந்துள்ளனர். சில நண்பர்கள் நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்துள்ளனர் என்று எனக்குத் தெரியும். இன்றிரவு முழுவதும் நீங்கள் தங்க எண்ணினால், உங்கள் அறைக்கான கட்டணத்தை நான் செலுத்தி விடுகிறேன். உங்கள் இரவு உணவு உங்களுக்காக காத்திருக்கிறதென்றும், நீங்கள் தங்க விரும்பினால் விடுதி கட்டணத்தை நான் செலுத்தி விடுவேன் என்றும் ஏற்கனவே நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, பின்னால் உள்ள பில்லியை சந்திக்க வேண்டும். நான் நிச்சயம் அதை செய்வேன். உங்களுக்கு உதவிசெய்ய 'நான் எதையும் செய்வேன். உங்களை நான் நேசிக்கிறேன் இந்த கேள்விகளுக்கு முரணாக பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நீங்கள் நம்பாவிட்டால், அதனால் பரவாயில்லை. நீங்கள் எப்படியானாலும் என்னை நேசிக்க வேண்டும்மென்று விரும்புகிறேன், ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிவார். எனக்குத் தெரிந்த வரையில் இந்த கேள்விகளுக்கு நான் சிறந்த முறையில் பதிலளிக்கிறேன். நண்பர்களே, சில கேள்விகளுக்கு நான் தவறாக பதிலுரைக்கக் கூடும். ஆனால் வேண்டுமென்றே நான் தவறாக பதில் கூறவில்லை. எனக்கு ஆறு அல்லது எட்டு கேள்விகளே இருந்திருக்குமானால் அவைகளில் நீண்ட நேரம் நிலைத்திருந்து அவைகளை விவரித்திருப்பேன். ஆனால் அவைகள் அனைத்தையும் இப்பொழுது வேகமாக , பார்ப்பதற்கு பதிலாக... விவாகமும் விவாகரத்தும் என்னும் பேரில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. அவைகளில் சிலவற்றிற்கு பதிலுரைக்கலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் இந்த கேள்விகள் குவியலிலிருந்து அவைகளை என்னால் பொறுக்கி எடுக்க முடியவில்லை. என்னிடம் மிகவும் முக்கியமான சில கேள்விகள் உள்ளன, மிகவும் முக்கியமான கேள்விகள். என்னால் கூடுமானால், அவைகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். 125இப்பொழுது, நீங்கள் அருகில் வசிக்க நேர்ந்தால் பில்லியை புதன் கிழமையன்று தொலைபேசியில் கூப்பிடுங்கள். நான் திரும்பி வந்து விடுவேனா என்று அதற்குள் எனக்குத் தெரிந்துவிடும். இந்த வாரம் நான் ஜெபத்தில் தரித்திருப்பேன். ஆனால் எனக்கு நிறைய தனியார் பேட்டிகள் உள்ளன, ஓ, இவ்வளவு பெரிய குவியல். அரிசோனாவிலும் ஏறக்குறைய இவ்வளவு உள்ளன. இந்நாட்களில் ஒன்றில், என்னால் முடியும் போது, அவைகளை நான் கவனிக்க வேண்டும். அது அதிகமாக வியாதிப்பட்டுள்ள ஜனங்கள். அவர்களில் சிலருக்கு பிரச்சினைகள் உள்ளன, அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை - பிரச்சினைகள் உள்ள கணவன்' மார்களும் மனைவிமார்களும். இங்குள்ள சில கேள்விகள் தனியார் பேட்டிகளுக்கு திருப்பப்பட வேண்டும். ஏனெனில் ஜனங்கள் தங்கள் திருமண விவகாரங்களைக் குறித்து கூறியுள்ளவைகளை என்னால் வெளிப்படையாய் படிக்கமுடியவில்லை - அப்படிப்பட்ட காரியங்கள். நான் பில்லியை அனுப்பி, அவர்கள் யாரென்று கண்டறிந்து, அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, இந்த விவகாரங்களைக்குறித்து நான் நேர்முகமாக பேசுவதற்காக அவர்களை பேட்டியில் சேர்த்திருக்கிறேன் என்று அறிவித்தேன். சில கேள்விகள் மிகவும் பிரச்சினைக்குரியவை, இவை பதில் சொல்லப்பட வேண்டிய கேள்விகள். 126உங்களுக்கு உதவி செய்ய முயலவே நான் இங்கிருக்கிறேன், ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்த என் பிள்ளைகள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் உரிமை கோருகிறேன். இன்றிரவு உங்களை நான் உரிமை கோருகிறேன், எல்லா நேரத்திலும் உங்களை நான் உரிமை கோருகிறேன். உங்களை நான் எப்பொழுதும் என் சகோதரனும் என் சகோதரியுமாக உரிமை கோருகிறேன். நீங்கள் என் பிள்ளைகள். நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், குருவானவர்களை பிதா (father) என்று அழைக்கின்றனரே, அவ்விதம் அல்ல. நான், பவுல் கூறியதுபோன்று, சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், கிறிஸ்துவுக்கு உங்களை நான் பெற்றெடுத்தேன், இப்பொழுது நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன் (espouse). அதாவது உங்களை கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்! என்னை ஏமாற்றி விடாதீர்கள்! நீங்கள் கற்புள்ள கன்னிகையாக நிலைத்திருங்கள்.. “அதை நான் எவ்விதம் செய்வேன், சகோ.பிரான்ஹாமே?” வார்த்தையில் நிலைத்திருங்கள்: சுத்தமாகவும் தூய்மையாகவும் வாழுங்கள்; உலகத்தின் காரியங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாதிருங்கள். உலகத்தின் மேல் அன்பு உங்கள் உள்ளத்தில் இருக்குமானால், “ஓ, இயேசுவே, அதை என்னிடமிருந்து விலக்கிவிடுவீராக. நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை” என்று கூறுங்கள். ஏதோ இதை வெறுமனே கூறுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. நீங்கள் உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டும் என்றே நான் கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்காக ஒவ்வொரு நாளும் வாழுங்கள். எந்த பொல்லாப்பையும் செய்யாதிருங்கள். 127அநேக சமயங்களில் நான் கால்வீனிய விசுவாசத்தைக் குறித்து பேசுகிறேன். அதனால், நீங்கள் விரும்பின் எதையும் செய்வதற்கு அது உங்களை அவிழ்த்து விட்டுள்ளது என்று எண்ணி விடாதீர்கள். அன்றொரு நாள் ஒருவன்... நான் அவனிடம், “நீ சபைக்கு செல்லவில்லையா?' என்று கேட்டேன். அவன், “நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன்” என்றான். அந்த மனிதனின் மனைவி என்னிடம் வந்தாள், அவள் துணிகளை சலவை செய்யுமிடத்திலிருந்து ஞாயிறன்று வந்து கொண்டிருந்தாள். நான், “நீ ஏன் சபைக்குச் செல்லவில்லை?” என்று கேட்டேன். அவள், “நான் துணிகளை சலவை செய்து கொண்டிருந்தேன்” என்றாள். நான், “நீ அவ்விதம் செய்திருக்கக் கூடாது” என்றேன். அவள், “நான் சட்டங்களை கைக்கொள்பவள் (legalist) அல்ல: என்றாள். நான், “நீ கிறிஸ்தவள் என்று நான் எண்ணினேன். வேறொருவருடைய வழியில் நீ இடறலைப்போடுகிறாய் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். பாருங்கள்? அவள் “நல்லது , ஆ, இதை நான் விசுவாசிக்கிறேன். இவைகளை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. நான் சட்டங்களை கைக்கொள்பவள் அல்ல” என்றாள். நல்லது. பாருங்கள் என் சகோதரனே, சகோதரியே, இங்கு பாருங்கள். “மாம்சம் புசிப்பது, என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்குமானால், இந்த உலகம் உள்ள வரைக்கும் நான் மாம்சம் புசியேன்” என்று பவுல் கூறியுள்ளான். நான் நினைக்கிறேன், இது. மிகவும் சிறந்ததாயிருக்கும்...., 128இப்பொழுது நீங்கள், “சகோ.பிரான்ஹாமே, நீங்கள் வேட்டையாடுகிறீர்கள். நீங்கள் ஞாயிறன்று ஒருபோதும் வேட்டையாடினதில்லையா?” எனலாம். உங்களுக்கு ஒன்றை கூறவிரும்புகிறேன். நான் இதைக் குறித்து என்னை புகழ்ந்து கொள்வதில்லை, ஆனால் நான்...நான் ஓய்வு நாளை ஆசரிக்கும் ஒருவன் அல்ல, பரிசுத்த ஆவியே நமது இளைப்பாறுதல் என்று விசுவாசிப்பவன் நான். அதை நான் விசுவாசிக்கிறேன், ஆனால் உயிர்த்தெழுதலை ஒரு ஞாபகார்த்தமாக நாம் மதிக்க வேண்டும் என்பது என் கருத்து. அது ஒரு ஞாபகார்த்தம்... நீங்கள் ஏதாவதொரு நாளை கெளரவிக்க விரும்பினால், உயிர்த்தெழுதல் நாளை கௌரவியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளை ஆசரிக்க வேண்டும் என்னும் பிரமாணம் எதுவும் கிடையாது. ஏனெனில் நாம் அவருக்குள் பிரவேசிக்கும் போது, சமாதானத்தின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறோம். ஓய்வு நாள் என்றால் என்ன என்னும் கேள்வி என்னிடம் உள்ளது. கர்த்தருக்கு சித்தமானால் அந்த கேள்விக்கு வெகுவிரைவில் பதில்கூறுவேன். தேவனுக்கு சித்தமானால் அதை நான் விவரிப்பேன், இப்பொழுது கவனியுங்கள், இதை ஞாபகம் கொள்ளுங்கள் பாருங்கள்? நான் சிறுபையனாக இருந்த போது, இந்த சாலையில் எய்க் குடும்பத்தினர் வசித்துக் கொண்டிருக்கும் இடத்தில் நான் இருந்த போது, எனக்கு ஏறக்குறைய பதினான்கு வயது இருக்கும் நான் பிழைப்புக்காக சிறு மிருகங்களை கண்ணி வைத்து பிடித்து வந்தேன் (trapper). எங்கள் வீட்டுக்கு தேவையான ஆகாரத்தை நான் வாங்குவதற்கு உதவி செய்த ஒரே வழி, ஸ்கங்க்கள் (skunks). மஸ்க்ராட்டுகள்(muskrats), ஒப்பஸம்கள் (oppossums) போன்றவைகளை பிடித்தலின் மூலமாகவே. எனக்கு மிருகங்களைப் பிடிப்பதில் மிகவும் பிரியம். அதை நான் செய்ய வேண்டியதாயிற்று. எனக்கு ஒரே ஒரு உடுப்பு மாத்திரம் இருந்தது. எனக்கு உடுக்க அவ்வளவுதான் இருந்தது. அம்மா அதை கழற்றி துவைத்து, மறுபடியும் அணிய வைப்பார்கள். அப்படித்தான் நான் சிறுபையனாயிருந்த போது பள்ளிக்குச் சென்றேன். ஒரு இரவு நான் அங்கு நின்று கொண்டிருந்தபோது, “வாத்தன் என்னுமிடத்தில் சற்று மேலே நான் கண்ணியை வைத்திருக்கிறேன்” என்று கூறினேன். இந்த கண்ணிகளை வைக்க நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சுமார் 2 மணிக்கு கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்துக்கு நேரத்தோடே செல்வதற்காக திரும்பி வருவது வழக்கம். நான் ஒரு முயலைப் பிடித்தால் எனக்கு பதினைந்து சென்டுகள் கிடைக்கும். அந்த பணத்தை கொண்டு ஒரு பெட்டி வெடிமருந்துகள் வாங்குவேன். அது மூன்று அல்லது நான்கு முயல்களைக் கொல்லும். நாங்கள் குழம்புக்காகவும் இரவு உணவுக்காகவும் வேண்டிய முயலை வைத்துக்கொண்டு, மற்றதை விற்று விடுவேன். அதில் கிடைக்கும் பணம் ரொட்டி அல்லது சிறிது ஆகாரம் வாங்கவோ அல்லது குழம்பு செய்வதற்காக கொஞ்சம் மாவு வாங்கவோ போதுமானதாயிருக்கும். நீங்கள் அவ்வளவு வறுமையான வாழ்க்கை வாழ நேரிட்டதோ என்னமோ, எனக்குத் தெரியாது. 129நான் ஆற்றில் ட்ரவுட் (trout) மீன்களைப் பிடிப்பதற்காக கண்ணி வரிசைகளை போட்டு, அவைகளைப் பிடித்து ஒரு பவுண்டு மீனை பத்து சென்டுகளுக்கு விற்பது வழக்கம். கண்ணி வரிசைகளை அமைக்க என்னிடம் படகு இருக்கவில்லை. நான் ஒரு மரக்கட்டையுடன் நீந்திச்செல்வேன். நான் ஆற்றில் இறங்கும்போது அது மிகவும் குளிராக இருக்கும். கண்ணிகள் உள்ள பக்கெட்டை நான் மரக்கட்டையின் மேல் வைத்து, உடுப்பில்லாத என் உடல் ஆற்றில் இருக்க, இப்படி நீந்தி நீந்திச் சென்று, கண்ணியை போடுவேன். இந்தப் பக்கத்தில் உள்ள கயிற்றில் நான் என் மீனைக் கட்டுவேன். நான் நீந்திக் கொண்டிருக்கும் போது 'காட்ஃபிஷ் மீன்கள் என் காலை உராய்ந்து கொண்டு போகும். அந்த விதமாக நான் கண்ணியைப் போடுவது வழக்கம். ஆனால் பாருங்கள், எத்தனையோ இரவுகளில் நான் 11 மணிக்கு அந்த ஆற்றுக்குச் சென்று அந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு கண்ணியையும் குலுக்கிப் பார்த்திருக்கிறேன். ஆறு நாட்களில் நான் போதிய மீன்களைப் பிடிக்காமல் போனால், அது ஏழாம் நாளில் கிடைப்பதை நான் விரும்பினதில்லை. நான் மழையில் அங்கு நின்றதுண்டு. 130ஒரு இரவில் நான் நின்று கொண்டு நிலைக்காலின் மேல் சாய்ந்து கொண்டிருந்ததை எண்ணிப்பார்க்கிறேன்... நான் ஒரு பாவியாய் இருந்தேன், ஆனால் நான் நின்று கொண்டு இப்படி வாசலின் நிலைக்காலின் மேல் சாய்ந்து கொண்டிருந்தேன். ஓ , மழை அதிகமாக பெய்துகொண்டிருந்தது. அப்பொழுது சுமார் 11 மணி இருக்கும். நான், “இன்றிரவு எனக்கு நேரமாகி விடும். நான் போய் அந்த கண்ணிகளில் ஒவ்வொன்றையும் வெளியே எடுத்துவிடுவேன். நான் ஓய்வு நாளன்று மீனைப் பிடிக்கமாட்டேன். அன்று நான் கண்ணியை போடமாட்டேன்” என்றேன். தேவன் அதை கெளரவித்தார். நான் எப்போதும் விரும்பிய நேரத்தை நினைவில் கொள்கிறேன், நான் எப்போதும், என் வாழ்நாள் முழுவதும் வேட்டையாட விரும்பினேன். என் தாத்தா இருந்தார். உங்களுக்கு தெரியும், என் பாட்டி அவள் ஓய்வூதியம் பெற்றாள். நான் வெளிப்புறங்களில் செல்வதை விரும்புகிறேன். நான் என் வாழ்நாள் முழுவதும் வேட்டைக்காரனாயிருக்க விரும்பினதை எண்ணிப் பார்க்கிறேன்..... 30 - 30 துப்பாக்கியை சொந்தமாகப் பெற எனக்குப் போதிய பணம் கிடைத்தால், அப்பொழுது நான் சில வெடிமருந்துகளை வாங்கிக் கொண்டு, மலைகளுக்குச் சென்று உலகத்தையே மறந்து விடுவேன்' என்று எண்ணினேன். “சில சமயங்களில் என்.22 துப்பாக்கியை எடுத்துச் சென்று நன்றாக சுடப் பழகினால், வேட்டைக்காரன் எவனாகிலும் அவனுடன் கூடச் செல்ல என்னைக் கேட்டுக்கொள்ளக் கூடும். நான் குறி தவறாமல் சுடுபவனாயிருந்தால், அவனுடைய பாதுகாப்புக்காக என்னை கூடக் கொண்டு செல்வான்; நான் வேட்டைக்குச் செல்ல வாய்ப்புண்டாகும்” என்று எண்ணியதுண்டு. இப்பொழுது நான் பார்க்கும் போது, பணத்தால் வாங்கக் கூடிய மிகச் சிறந்த துப்பாக்கிகள் என் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஜனங்கள் வேட்டைக்குச் செல்வதற்காக என் துப்பாக்கிகளை அவர்களுக்கு கடனாகக் கொடுக்கிறேன். 131நான் மலைகளுக்குச் சென்று பிரசங்கிக்க அவர் என்னை அனுமதிக்கிறார்; உலகிலேயே மிகச்சிறந்த வழிகாட்டிகள் என்னை இலவசமாக வேட்டைக்கு கொண்டு செல்கின்றனர். 'திகைப்பூட்டும் கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது.' நான்.... இன்று காலையிலும் கூட இங்குள்ள மான் வேட்டையாடும் ஒரு முதியவர் அவருடைய 35 ரெமிங்டன் துப்பாக்கியை கொண்டு வந்து - அந்த துப்பாக்கி உண்மையில் எனக்குத் தேவையும் கூட இல்லை — தமது கரங்களை என் தோள் மேல் போட்டு, வேட்டையாடுவதற்கு அவருக்கு வயது அதிகமாகி விட்டதென்று கூறி “என் துப்பாக்கியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்” என்றார். நான் சிறுவனாயிருந்த போது, அப்படிப்பட்ட ஒரு துப்பாக்கியை சொந்தமாக வாங்க வேண்டுமென்று எண்ணியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுது என் சுவற்றில் மிகச்சிறந்த துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருப்பதையும், வேட்டைக்காக பல இடங்களுக்குச் செல்வதையும் எண்ணிப் பார்க்கிறேன். நான் சிறுவனாயிருந்த போது நடந்தது என் நினைவுக்கு வருகிறது. பையன்கள் 'ஐஸ்கிரீம் கோன்கள் வாங்குவார்கள். சில சமயங்களில் சில பையன்களுக்கு கூடுதல் காசு இருந்தால், அவர் கள் எனக்கு ஒரு 'கோன்' வாங்கித் தருவார்கள். அவர்களுக்கு திருப்பி வாங்கித்தர என்னிடம் காசு இருந்ததில்லை. நான் நினைத்தேன், “நான் மட்டும்...'' 132சில சமயங்களில் அவர்கள் எனக்கு “மட்லார்க் ஹாம்பர்கர்” என்று நாம் அழைப்பதை வாங்கித் தருவது வழக்கம். உங்களுக்கு அது ஞாபகமுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பழங்காலத்தவரான உங்களில் சிலருக்கு.... அது ஐந்து சென்டு காசுக்கு கிடைக்கும், அதனுடன் கூட நிறைய பொறித்த வெங்காயம் கொடுப்பார்கள். ஓ, அப்படிப்பட்டவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சிறுவனாயிருந்த போது எங்களுக்கு அது கிடைக்கவில்லை .... வெறும் சோள ரொட்டியும் (Cornbread) சர்க்கரை குழம்பும்(molasses). அதை சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். யாராகிலும் ஒருவர் எனக்கு ஒரு ஹாம்பர்கர் வாங்கிக் கொடுத்தால், அதைப்பிடித்திருந்த என் விரல்களையும் கூட நான் நக்குவது வழக்கம். அது அவ்வளவு ருசியாக இருக்கும். “அந்த மனிதனுக்கு நான் திருப்பி ஒரு ஹம்பர்கர் வாங்கிக் கொடுக்க முடிந்தால் என்று நினைத்ததுண்டு'' ஆனால் இப்பொழுதோ சபை முழுவதுக்கும் அவர்களுடைய இரவு உணவை வாங்கித் தர என்னால் முடிகிறது. இவையனைத்தையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். இவை எங்கிருந்து வந்தன? தேவனுடைய கிருபை, நான் செய்தது ஒன்றுமில்லை. 133நான் இங்குள்ள தெருவில் நடந்து சென்று யாராகிலும் ஒருவருடன் பேசுவதை எண்ணிப்பார்க்கிறேன். என் தகப்பனார் குடிப்பது வழக்கம், அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் விஸ்கி தயாரிப்பார். யாருமே என்னுடன் சாவகாசம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். நான் தெருவில் நடந்து சென்று மனிதர்களுடன் பேச முயற்சிப்பேன்; அந்த மனிதர்களை நான் இன்றைக்கும் சந்திக்கிறேன். நான் யாரிடமாவது பேச முயன்றால், பேசுவதற்கு அவர்களுக்கு வேறு யாருமில்லை என்றால் அவர்கள் நின்று கொண்டு, “ஆம், உ, ஊ” என்று மட்டும் சொல்லுவார்கள். பாருங்கள்? ஏனெனில் நான் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் மிகவும் வருத்தப்பட்டு நடந்து சென்று விடுவேன். “அதைக் குறித்து நான் குற்றவாளியல்லவே. என் தகப்பனார் செய்து கொண்டிருப்பதை நான் செய்யவில்லையே. என் வாழ்நாளில் நான் குடித்ததே கிடையாது. அப்படியிருக்க நான் ஏன் இதை சகித்துக் கொள்ளவேண்டும்?” என்று எண்ணியதுண்டு. அண்மையில் நான் என் மனைவியிடம், “ஜனங்களை சந்திக்காமலிருக்க, நான் நகர்புறத்தில் தங்க வேண்டியுள்ளது” என்று கூறினேன். தேவன் எனக்கு மிகவும் நல்லவராக இருந்து வருகிறார். 134ஒருமுறை தாவீது நாத்தான் தீர்க்கதரிசியிடம் கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். நாத்தான்... தாவீது அவனிடம், “நான் கேதுரு மர வீட்டிலே வாசம் பண்ணுகையில் என் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி திரைகளின் கீழ் இருக்கிறது சரியா யிருக்குமோ” என்று கேட்டான் (1 நாளா. 17:1) அதற்கு தீர்க்கதரிசியாகிய நாத்தான். “உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார்” என்றான். தீர்க்கதரிசி தவறு செய்தான், ஆனால் வேண்டுமென்று இல்லை. அன்றிரவு கர்த்தர் தீர்க்கதரிசியிடம் வந்து, “நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: ஆடுகளின் பின்னே நடந்து, ஒரு சில ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் எடுத்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன் (அவர் அவனுக்கு மிகப் பெரிய நாமத்தை கொடுத்ததாக கூறவில்லை, அவர் பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை கொடுத்ததாக மட்டும் கூறினார்). தாவீதே, இவையெல்லாம் உனக்கு நான் செய்தேன். நீ போன இடமெல்லாம் உன் சத்துருக்களையெல்லாம் நான் நிர்மூலமாக்கினேன். நான் உன்னோடே இருந்தேன். நான் உனக்கு எந்த விதத்திலும் தவறவில்லை, நான் ஒருபோதும் தவறவும் மாட்டேன். ஆனால் நீ எனக்கு ஒரு வீட்டைக்கட்ட நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார் (1நாளா.17:4-10). 135அதைக்குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன், தேவன் எனக்குதவி செய்து, பெரிய மனிதர்களை நான் அறியவும், உலகம் முழுவதும் சென்று வரவும் தக்கதான ஒரு நிலைக்கு என்னை கொண்டுவந்துள்ளார். உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்கள் தங்களுக்காக ஜெபம் பண்ணும்படி என்னை அழைக்கின்றனர். வியாதிப்பட்டோர் அவர்களுடன் சில நிமிடங்கள் நான் செலவிடவேண்டுமென்று விரும்புகின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் என்னைத் தெருவில் ஏறெடுத்தும் பாராமல் தலையைத் திருப்பிக் கொண்டு சென்றனர். இப்பொழுது என் மூலம் நகருக்கு வரும். ஜனங்களினால், அவர்களுக்கு உணவளித்து அவர்கள் விடுதிகளில் அவர்கள் தங்குவதன் மூலம், வியாபாரிகள் செழிக்கின்றனர். ஜனங்கள்... ஜனங்கள் என்னை முன்பு நேசிப்பதில்லை, என்னால் அவர்களுக்கு ஒருஉபயோகமும் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நான், தேவனுடைய உதவியைக் கொண்டு, இயேசுகிறிஸ்துவின் மணவாட்டியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். ஓ. “திகைப்பூட்டும் கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது”. . 136இது எங்கிருந்து வந்தது? என் கல்வியா? எனக்கு கல்வி எதுவுமில்லை. இது எங்கிருந்து வந்தது? என் குறிப்பிடத்தக்க தோற்றமா? எனக்கு அது ஒன்றும் கிடையாது. அது என் வேதசாஸ்திர அறிவினால் உண்டானதா? எனக்கு அது ஒன்றும் தெரியாது. அப்படியானால் இதற்கு காரணம் என்ன? என்னை இரட்சித்த தேவனுடைய கிருபையே. கிருபையே என் இருதயம் பயப்பட போதித்தது கிருபையினால் என் பயங்கள் நீங்கின. நான் முதலில் விசுவாசித்த அந்த நேரத்தில் அந்த கிருபை எவ்வளவு சந்தோஷமாக காணப்படட்து. பல ஆபத்துகள், கஷ்டங்கள், கண்ணிகள் வழியாக நான் ஏற்கனவே வந்து விட்டேன் கிருபையே என்னை இதுவரை பாதுகாப்புடன் கொண்டு வந்தது கிருபையே என்னை வீடு கொண்டு செல்லும். சூரியனிலும் பிரகாசமுள்ள அந்த நகரில் நாம் பத்தாயிரம் ஆண்டுகள் இருந்த பிறகும் அவருடைய துதியைப் பாட நாம் முதலில் தொடங்கின முதற்கொண்டு நமக்கு நேரம் போதாமல் இருக்கும். ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், நான் பாவியாயிருந்தபோது என்னை இரட்சித்ததும். நான் வியாதியாயிருந்தபோது என்னை சுகமாக்கினதும், அந்த நகரத்தில் எனக்கு ஒரு வீட்டை வாக்குத்தத்தம் செய்ததுமான அந்த அழகான நாமம். அந்த கன்மலையில் எனக்கு ஒரு வீடு உண்டு. தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, “நாம் போவோம்” என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் இப்பொழுது முக்கியம் வாய்ந்ததல்ல. நள்ளிரவு நேரம் வந்திருக்கின்றது; நாம் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகி விட்டது. நாம் ஜெபம் செய்வோம்: 137கர்த்தராகிய இயேசுவே, ஒரு பரிபூரண நாளின் முடிவு. நாங்கள் மலை உச்சியில் நின்றுகொண்டு சூரியனைக் கவனிக்கையில், அதன் சிகப்பு கதிர்கள் தூரத்திலுள்ள அந்த மகத்தான மேற்கு மலைகளில் வந்து படரும் போது, அந்த மகத்தான கண் தன்னை மூடிக்கொண்டு, பறவைகள் தங்கள் கூடுகளுக்கு பறந்து செல்லத் துவங்குகையில், இராக்காலம் வருகிறது. பரிசுத்த ஆவியானவர் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எங்களுக்கு உதவின மற்றொரு மகத்தான ஆவிக்குரிய நாளை நாங்கள் கண்டோம். இப்பொழுது, நாங்கள் எங்கள் கூடுகளுக்குச் செல்கிறோம், கர்த்தாவே. எங்களைக் காத்துக்கொள்ளும்; எங்களை ஒன்றும் தாக்குவதற்கு இடம் கொடாதிரும்; கர்த்தாவே. எல்லா நேரங்களிலும் தேவன். தாமே எங்கள் அருகில் இருந்து கொண்டு எங்களைப் பாதுகாத்து, எங்களுக்கு உதவி செய்வாராக. பரலோகப் பிதாவே, இந்த கூட்டத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும், வரக் கூடாதவர்களையும், ஒலிநாடாக்களை கேட்பவர்களையும் நீர் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். கேள்விகள் அதிககடினமாயிராமல் இருப்பதாக நான் தவறு செய்திருந்தால், கர்த்தாவே, என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர்; நான் வேண்டும்மென்று தவறு செய்யவில்லை. தேவனே, ஏதாகிலும் தவறாயிருந்திருந்தால், அது அப்படியே செல்லும்படி விட்டுவிடாதேயும் என்று ஜெபிக்கிறேன்; ஒலிநாடா அப்பொழுது நின்று விடட்டும். நான் யாரையும் ஏமாற்ற விடாதேயும், கர்த்தாவே . நான் உமக்கு உண்மையுள்ள ஊழியக்காரனாய் இருப்பேனாக. அதுவே என் இருதயப் பூர்வமான வாஞ்சையாயுள்ளது. அவர் வரும்போது நான் பிழைத்திருந்தாலும் மரித்துப்போயிருந்தாலும், நான் தங்கினாலும் புறப்பட்டுச் சென்றாலும், நான் உறங்கினாலும் விழித்திருந்தாலும், அதனால் எனக்கு ஒன்றுமில்லை, பிதாவே, உமது சித்தம் செய்யப்படுவதாக. “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன். (யோபு - 19:25-26). கர்த்தருடைய வருகையை தீர்க்கதரிசி யோபு கண்ட போது இதை உரைத்தான். 138கர்த்தாவே, இன்றைக்கு உம்முடைய ஊழியக்காரர்களாக நாங்கள் உமது வருகையைக் காண எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அது எப்பொழுது, எப்படி, எங்கே இருக்கும் என்பதைக் குறித்தெல்லாம் பாதகமில்லை, கர்த்தாவே, நாங்கள் உம்மைப் பிரீதிப்படுத்தவே விரும்புகிறோம். நாங்கள் உமது கரங்களில் இருக்கிறோம். சூரியன் உதிக்கும் வரையிலும் எங்களைக் காத்துக்கொள்ளும், கர்த்தாவே . அதை அருளுவீராக. அதன் பிறகு நாங்கள் எல்லோரும் ஆட்டுக்குட்டியானவரே விளக்காயிருக்கும் அந்த சீயோன் நகரத்துக்கு அணிவகுத்து செல்வோம்.' இங்குள்ள என் அருமையான பிள்ளைகள், கர்த்தாவே, இவர்களை நான் வேதாகம இணைப்பின் மூலம் உமக்கு நான் பெற்றெடுத்தேன். இவர்கள் இந்த வார்த்தையினால் உண்டான கனிகள். இவர்கள் என்னை நேசிக்கின்றனர், நானும் அவர்களை நேசிக்கிறேன். நீர் எங்கள் அனைவரையும் நேசிக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். தேவனே, நாங்கள் அவரை மட்டும் காணத்தக்கதாக, எங்களை உமது வார்த்தையினால் கருத்தரிக்கச் செய்யுமாறு ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இதை அருளும். நாங்கள் அவருடைய வார்த்தையினால் முற்றிலும் நிறையப்பட்டு, ஆவியானவர் தாமே, எங்களை எங்கும், எந்தவிடத்திலும் உபயோகித்து, அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள எந்த வார்த்தையையும் வெளிப்படுத்துவாராக. இதை எங்கள் அனைவருக்கும் அருளுவீராக. இந்த கூட்டத்தின் மத்தியில் உள்ள இந்த..... 139என் சகோ. ஜாக்சன் இப்பொழுது தொலைவிலுள்ள தென் ஆப்பரிக்காவுக்கு திரும்பிச் செல்கிறார். அவருடனும் அவருடைய மனைவியுடனும் செல்வீராக. அவர்களோடு கூட இருப்பீராக, கர்த்தாவே, அவர்களுடைய பிரயாணத்தில் அவர்களை வழி நடத்தும். இங்குள்ள சகோ. வேயில் நான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் குறித்துக் கொண்டு, ஒரு புத்தகம் எழுத முயன்று கொண்டிருக்கிறார். ஓ, தேவனே, சகோதரன் சகோதரி வெயிலுக்கு உதவி செய்வீராக. “ஆர்கன்ஸாவிலிருந்து வந்துள்ள இந்த சகோதரர் இங்குள்ளனர் - மார்டின் சகோதரரும் இன்னும் மற்ற சகோதரர்களும். அவர்கள் ஒவ்வொருவரோடும் கூட நீர் இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். சகோ. நெவில், சகோ. காப்ஸ், சகோ. ரட்டல், சகோ. ஜூனியர் ஜாக்சன், இவர்கள் அனைவருடனும் இருப்பீராக. ஓ, தேவனே, நிறைய பேர் உள்ளனர். இவர்கள் ஜார்ஜியா, அலபாமா, நாட்டின் எல்லாவிடங்களிலுமிருந்தும், உலகம் முழுவதிலுமிருந்தும் வந்துள்ளனர். இந்த பாடலை நினைவு கூருகிறோம். ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் அவர்கள் தூர தேசங்களிலிருந்து வருகின்றனர் நமது ராஜாவுடன் விருந்துண்ண அவருடைய விருந்தாளிகளாய் புசிக்க (அவரில் பங்குகொள்ள அவர் நம்மை அழைத்திருக்கிறார்) இந்த யாத்திரீகர் எவ்வளவாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் திவ்ய அன்பினால் பிரகாசிக்கும் அவருடைய பரிசுத்தமான முகத்தை நோக்கினவர்களாய் அவர் கிருபையில் பங்கு கொண்டு அவர் கிரீடத்தில் இரத்தினங்களாய் ஜொலிக்க 140ஓ, தேவனே, மற்றவர்கள் அவரைக் கண்டு அவரை சேவிக்க வாஞ்சை கொள்ள, அவருடைய கிரீடத்தில் நாங்கள் இரத்தினங்களாய் ஜொலிப்போமாக. கர்த்தாவே, இதை அருளும். அவர்கள் பிரயாணப்பட்டு போகும் வழியில் அவர்களைப் பாதுகாரும். ஒவ்வொருவரையும் ஆசிர்வதியும். பிதாவே, நீர் குறித்துள்ள நேரத்தில்... நான் உம்முடைய ஊழியக்காரன் . நான் அடுத்த வாரம் இங்கு தொடர்ந்து இந்த பேட்டிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நீர் விரும்பினால், கர்த்தாவே, அதை எனக்கு வெளிப்படுத்துவீராக. இப்பொழுது முதல் புதன்கிழமைக்குள் அதை எனக்குத் தெரியப்படுத்துவீராக, அப்பொழுது நாங்கள் அறிந்து கொள்வோம். கர்த்தாவே, ஜனங்கள் வரத்தக்கதாக இதை அருளுவீராக. நீர் எங்களுக்கு உதவிசெய்து, அடுத்த கூட்டத்தின் சமயத்தில் எங்களை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்னும் இந்த ஆசீர்வாதத்துக்காக ஜெபிக்கிறேன். சகோ.நெவிலோடும், வார்த்தையை டெக்ஸாஸிலும், ஆர்கன்ஸாவிலும் இன்னும் பல்வேறு இடங்களிலும் கொண்டு வரும் இந்த மனிதரோடும் இருப்பீராக; பிதாவே, அவர்களோடு கூட இருப்பீராக. சகோ.பெர்ரீ கீரீனுடனும் அங்குள்ள அந்த குழுவின் ருடனும் இருப்பீராக. இவர்கள் அனைவருடனும் இருப்பீராக, கர்த்தாவே; அவர்கள் உம்முடைய சிறு பிள்ளைகள். அவர்கள் உலகம் பூராவிலும் உம்முடைய வருகையை எதிர்நோக்கியிருக்கின்றனர். பிதாவே, எங்களை உம்மிடம் இப்பொழுது ஒப்படைக்கையில், எங்களுக்கு உதவி செய்வீராக. இயேசுவின் நாமத்தில் எங்களை உபயோகியும். ஆமென். 141அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் என்னும் பாடல் எனக்கு மிகவும் பிரியம். எத்தனை பேருக்கு அது தெரியும்? எனக்கு முழு பாடலுமே பாராமல் தெரியாது. ஆனால் ஒரு சரணம் எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சகோதரியே, நீ அதை பிடித்துக்கொள்ளலாம். அவர்கள் அவ்விதம் செய்வார்களோ என்று எனக்குத் தெரியவில்லை. ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் அவர்கள் தூர தேசங்களிலிருந்து வருகின்றனர் நமது ராஜாவுடன் விருந்துண்ண அவருடைய விருந்தாளிகளாய் புசிக்க இந்த யாத்திரீகர் எவ்வளவாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - திவ்ய அன்பினால் பிரகாசிக்கும் அவருடைய பரிசுத்தமான முகத்தை நோக்கினவர்களாய் அவர் கிருபையில் பங்கு கொண்டு, அவர் கிரீடத்தில் இரத்தினங்களாய் ஜொலிக்க. ஓ, இயேசு சீக்கிரம் வருகிறார் அப்பொழுது நமது துன்பங்கள் முடிவுறும் பாவத்திலிருந்து விடுதலையடைந்தவர்களுக்காக ஒ, இந்த க்ஷணத்திலே நமது கர்த்தர் வருவாரானால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருமா, அல்லது துயரையும் மிகுந்த நம்பிக்கையின்மையுமா? மகிமையில் நமது கர்த்தர் வரும் போது நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம் (உங்களுக்கு அது பிடிக்கிறதா? நாம் மறுபடியும் இதை பாட முயல்வோம்.) . ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் ஓ, அவர்கள் தூர தேசங்களிலிருந்து வருகின்றனர் நமது ராஜாவுடன் விருந்துண்ண அவருடைய விருந்தாளிகளாய் புசிக்க இந்தயாத்திரீகர் எவ்வளவாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் திவ்ய அன்பினால் பிரகாசிக்கும். அவருடைய பரிசுத்தமான முகத்தை நோக்கினவர்களாய் ஓ, அவர் கிருபையில் பங்கு கொண்டு அவர் கிரீடத்தில் இரத்தினங்களாய் ஜொலிக்க ஓ, இயேசு சீக்கிரம் வருகிறார் அப்பொழுது நமது துன்பங்கள் முடிவுறும் பாவத்திலிருந்து விடுதலையடைந்தவர்களுக்காக ஓ, இந்தக்ஷணத்திலே நமது கர்த்தர் வருவாரானால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருமா, அல்லது துயரையும் மிகுந்த நம்பிக்கையின்மையுமா? மகிமையில் நமது கர்த்தர் வரும்போது நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம் (எத்தனை பேர் அவரை ஆகாயத்தில் சந்திக்க விரும்புகிறீர்கள்? 'ஓ, என்னே!) ஒ, இயேசுசீக்கிரம் வருகிறார் (உங்கள் கண்களை மூடி எக்காள சத்தத்தை கேட்பதாக கற்பனை செய்யுங்கள்) அப்பொழுது நமது துன்பங்கள் முடிவுறும் பாவத்திலிருந்து விடுதலையடைந்தவர்களுக்காக ஓ, இந்த க்ஷணத்திலே நமது கர்த்தர் வருவாரானால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவருமா, அல்லது துயரையும் மிகுந்த நம்பிக்கையின்மையுமா? மகிமையில் நமது கர்த்தர் வரும்போது நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம் (அது உங்களுக்கு பிடிக்கிறதா?) 142பாட், தைரியமாயிருங்கள்! இக்காலை வேளைகளில் ஒன்றில் உங்களுக்கு காலை விடியும். அது எங்கு சென்றது என்று நான் காணவில்லை, ஆனால் அது நன்றாக காணப்பட்டது. ஆமென்! சகோதரனே உங்களுக்கு நீண்ட காலம் உள்ளது, அது திரும்பி வரும். தண்ணீரின் மேல் போடப்பட்ட ஆகாரத்தைப் போல, என்றாவது ஒருநாள் அது உங்களிடம் திரும்ப வரும். அது உண்மை . சரி. ஓ, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, ஓ, திவ்ய இரட்சகரே! நான் ஜெபிக்கும்போது எனக்கு செவிகொடும், என் பாவங்கள் அனைத்தும் நீக்கியருளும், உம்மை நான் ஒருபோதும் விட்டு விலக விடாதேயும். இருள் சூழ்ந்த வாழ்க்கையில் நான் நடந்து சென்று என்னைச் சுற்றிலும் துயரம் பரவியிருக்கையில் என் வழிகாட்டியாயிரும் இருள் வெளிச்சமாக கட்டளையிடும் துயரின் பயங்களை, போக்கியருளும் ஓ, இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருப்பேனாக!. (அது உங்களுக்கு பிரியம் அல்லவா?) என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது . கல்வாரியின் ஆட்டுக்குட்டியே ஓ, திவ்ய இரட்சகரே! நான் ஜெபிக்கும்போது எனக்கு செவிகொடும் என் பாவங்கள் அனைத்தும் நீக்கியருளும் உம்மைநான் ஒருபோதும் விட்டு விலகவிடாதேயும். நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக (ஓ., என்னே !) ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும் நமது பிதாவின் சிங்காசனத்தின் முன்னிலையில் நமது ஊக்கமான ஜெபத்தை நாம் ஊற்றுகிறோம் நமது பயங்கள், நமது நம்பிக்கைகள், நமது நோக்கங்கள் நமது ஆறுதல்கள், நமது கவலைகள் அனைத்தும் ஒன்றே நாம் பிரிந்து செல்லும் போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது ஆனால் நாம் இருதயத்தில் இன்னும் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 143சகோதரி வில்ஸன், உங்களுக்கு ஞாபகமுள்ளதால், ஏறக்குறைய முப்பத்து மூன்று அல்லது முப்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பு நாம் நடத்தின சிறு வீட்டு கூட்டத்தில் நாம் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக் கொள்வோமே? அது உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று எனக்குத் தெரியும். ஓ, நாம் கையை நீட்டி வேறொருவர் கையைப் பிடித்துக் கொள்வோம். நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும் நமது பிதாவின் சிங்காசனத்தின் முன்னிலையில் நமது ஊக்கமான ஜெபத்தை நாம் ஊற்றுகிறோம் நமது பயங்கள், நமது நம்பிக்கைகள், நமது நோக்கங்கள் நமது ஆறுதல்கள், நமது கவலைகள் அனைத்தும் ஒன்றே நாம் பிரிந்து செல்லும்போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது ஆனால் நாம் இருதயத்தில் இன்னும் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்களா?“ “சிறு பிள்ளைகளே. ஒருவரிலொருவர் அன்புகூருங்கள். நாம் சந்திக்கும் வரை. நாம் சந்திக்கும் வரை நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை தேவன் உங்களுடன் இருப்பாராக. 144நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? நீங்கள் ஒருவரிலொருவர் அன்புகூருகிறீர்களா? நீங்கள் கை குலுக்கி, ஒருவருக்கொருவர் ஏதாவதொன்று சொல்லுங்கள். “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே” என்று சொல்லுங்கள். சகோதரி வில்ஸன், நதிக்கப்பால் அவர்கள் இன்றிரவு நமக்கு செவிகொடுத்துக்கொண்டிருக்கின்றனர். சகோ.சூவர்ட் தரையில் நடந்து, தமது கரங்களைக் கொட்டுவதை என்னால் காண முடிகிறது. தாடி வைத்துள்ள நமது சகோதரன் தமது கரங்களையுயர்த்தி, தேவனைத் துதிப்பதை நான் கண்டேன். நான் சகோ.ரையனை நினைத்துக் கொண்டேன், அவர் எவ்விதம் அந்த பழைய கூடாரத்தில் நீண்ட தாடியை வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார் என்று. அவர் இன்றிரவு மகிமையின் வாசலில் நின்று கொண்டு நமக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார், ஒரு அருமையான பரிசுத்தவான். அவர் அற்புதமானவர் அல்லவா? இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரும் துக்கமும் நிறைந்த பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும் ஓ , நீ செல்லும் எல்லாவிடங்களுக்கும் அதை கொண்டு- செல் “விலையுயர்ந்த நாமம், ஓ. என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் (எதற்காக?) ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக (என்ன நடக்கிறது?) சோதனைகள் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் போது அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம். விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் - - - - - (சகோ.பிரான்ஹாம் சபையிலுள்ள யாரோ ஒருவரிடம் பேசுகிறார் -ஆசி). 145பேட்டிகளுக்காக : வரவிருக்கும் பேட்டிகளுக்காக இன்றைக்கும் புதன் கிழமைக்கும் இடையில் அல்லது புதன் கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடையில் பில்லியிடம் தொடர்பு கொள்ளுமாறு அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான். புதன் கிழமைக்கு பிறகு நமக்கு கூட்டங்கள் இல்லாமல் போனால், பேட்டி உள்ளவர்கள் அவனுடன் தொடர்பு கொள்ளவும். உங்களிடம் எவ்விதம் தொடர்பு கொள்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எனவே அவன்....பேட்டியை விரும்பும் அனைவரும் பில்லியுடன் தொடர்புகொள்க. அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? சரி. நாம் சந்திக்கும் வரை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் தலை வணங்குவோம், நான் என் நல்ல விசுவாசமுள்ள நண்பரை, ஒரு காலத்தில் கர்த்தருடைய நாமத்தில் நான் மிஷனரி ஊழியம் செய்த ஆப்பிரிக்காவுக்கு கடல் கடந்து செல்லவிருக்கும் சகோ. ஜாக்சனை... அவரும் அவருடைய மனைவியும் இந்த கடந்த சில ஆராதனைகளின் போது நம்முடன் இருந்ததற்காக நாம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தோம். தேவன் அவரை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்! நான் சகோ.ஜாக்சனிடம், அவர் ஜெபம் செய்து இக்கூட்டத்தை முடிப்பாரா என்று கேட்டுக்கொள்ளப் போகிறேன். சகோ.ஜாக்சன், உமக்கு விருப்பமானால். கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA COD 21 64-0830M 1நாம் தலை வணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, உமது சமூகத்தில் வருவதற்கு கிடைத்த தருணத்துக்காகவும், இந்த ஐக்கியத்தின் நேரத்துக்காகவும், கிறிஸ்து இயேசுவுக்குள் இங்கு உன்னதங்களிலே உட்கார்ந்திருப்பதற்காகவும் இக்காலை வேளையில் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, கர்த்தாவே, உம்மைக் குறித்து நாங்கள் பேசும்போது, எங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். உமது வசனத்தையும் எங்களுக்கு நீர் செய்துள்ள வாக்குத்தத்தங்களையும் நாங்கள் நோக்கிப் பார்க்கையில், எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் பொங்குவதாக எங்கள் மேய்ப்பரையும். எங்கள் கூட்டாளிகளையும், உமக்கென்று 'நாங்கள் நியமித்துள்ள இந்த ஒன்றுகூடும் சிறிய இடத்தில் எங்களை சந்திப்பதற்கென இங்கு வருகின்ற சகோதரர் சகோதரிகள் அனைவரையும் ஆசிர்வதிப்பீராக. இந்த நாள் முழுவதும் நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எங்களை ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். (உட்காரலாம்). (சகோ. பிரான்ஹாம் மேடையின் மேலுள்ள ஒருவருடன் உரையாடுகின்றார் - ஆசி). 2இது எனக்கு ஒருவிதமான சிறு இளைப்பாறுதலாயிருக்கிறது. இங்கு எனக்கு ஆராதனைகளும், பேட்டிகளும் உண்டாயிருந்தன; நான் பேட்டிகளை நடத்த வேண்டும். அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதாய் இருந்தது. இன்று காலையில் எனக்கு கிடைக்கப் பெற்ற ஏறக்குறைய எல்லாமே தரிசனங்களே. நான் ஒருவிதமான ... நான் பில்லியிடம், சகோ. நெவிலுக்கு அதிக வேலை இராவிடில், இந்த கேள்விகளை எடுத்துக் கொண்டு அவைகளுக்கு பதிலளித்து, என் சிந்தையை சற்று இளைப்பாற்ப்பண்ணுவேன் என்று கூறினேன். இந்த தரிசனங்கள் என்னை ஒருவிதமான ... ஆனால் ஜனங்களுக்கு அது உதவியாயுள்ளது; அதுவே முக்கியமான காரியம். முக்கியமான காரியம் என்னவெனில், ஜனங்களுக்கு உதவியளிக்கப்படுகின்றது; அதுவே இதன் நல்ல பாகம். எனவே இன்று பிற்பகலில், நான் சற்று நேரத்தோடே எனக்கு விசேஷமாயுள்ள பேட்டிகளைத் தொடங்கப் போகின்றேன்.. 3இக்காலையில் நமது நண்பர்களைக் காண்பதில் நமக்கு மகிழ்ச்சியுண்டாகிறது. இப்பொழுது, இது ... இதற்காக நீங்கள் பில்லியின் மீது வருத்தப்பட வேண்டாம். எனவே அப்படியானால்.. இந்த கேள்விகளுக்கு நான் தொடர்ந்து பதிலளிப்பதாக இருந்தால், பில்லி ஜனங்களுக்கு தெரிவிப்பதாக இருந்தது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு ஒரு மணி நேரம் கிடைக்குமென்று எண்ணினேன். என்னுடைய சில.... எனக்கு விட்டுவிட பிரியமில்லை; என் 'சிலேட்' பலகையை நான் சுத்தமாக துடைக்க விரும்புகிறேன். பாருங்கள்? இந்த கேள்விகள் போன்றவைகள், இவைகளை நான் செய்து முடித்து விட்டேன் என்று கூற விரும்புகிறேன். என் மனதில் நிறைய காரியங்கள் உள்ளன; அது எனக்கு நரம்பு தளர்ச்சியுண்டாக்குகிறது. நான் எதைக் குறித்தும் நரம்பு தளர்ச்சியடைய விரும்பவில்லை. இந்நாட்களில் ஒன்றில் நான் மகிமைக்கு வீடு செல்லப் போகிறேன் 4இரண்டு நாட்களுக்கு முன்பு என் பழைய நண்பர் ஒருவர், “ஒரு 'சூட்கேஸ்ஸில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு அலுப்பு உண்டாக்குகிறது” என்றார். நான், “அருமை சகோதரனே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்; உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எனக்கு வீடு செல்ல வேண்டுமென்று ஆவல் தோன்றுகிறது. இருபதுஆண்டுகளாக எனக்கு அந்த ஆவல் இருந்து வருகிறது, ஆனால் செல்வதற்கு தான் எனக்கு எந்த ஒரு வீடும் இல்லை” என்றேன். பாருங்கள்? அது உண்மை. அவ்விதம் கூறுவது ஒரு பயங்கரமான காரியமாய் உள்ளது. நான் உட்கார்ந்து கொண்டு, எங்கோயுள்ள வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அழ முடியும். ஆனால் செல்வதற்கோ எனக்கு எந்த ஒரு வீடும் இல்லை. நான் எங்கு சென்றாலும், நான் சில நாட்கள் அங்கு தங்க முடியாது; நான் வேறிடத்துக்கு செல்ல ஆயத்தமாயிருப்பேன். நான் அந்த விதமாக இருந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன், நான் அந்த விதமாக பிறந்திருக்கிறேன். என் மனைவி என்னை , “ஓரிடம் தங்கி இளைப்பாறாத காற்று' என்று அழைக்கிறாள். நான் இங்கும் அங்குமாக இருக்கிறேன். அவ்விதம் உள்ளது ஒரு பயங்கரமான நிலையாகும். ஆனால் என் ஊழியத்தின் நிமித்தம் நான் அவ்விதம்தான் இருக்க வேண்டும் மென்று எண்ணுகிறேன். ஆனால் உங்களில் அநேகர் பாராட்டுகிறீர்கள். நல்லது, தேவனுக்கென்று எதைச் செய்தாலும் நாம் பாராட்டுகிறோம், ஆனால் நீங்கள் ஒருபோதும்... 5இப்பொழுது, இன்று காலையில் நாம் வீட்டில் தங்கியுள்ள ஒரு கூட்டம் மக்களாய் இருக்கிறோம். பாருங்கள்? ஆனால் நான் வீடு செல்ல வேண்டுமெனும் ஆவல் கொண்டவனாயிருக்கிறேன். நான் வீடு செல்ல விரும்புகிறேன், ஆனால் எங்கு செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள், “நீங்கள் அரிசோனாவுக்குப் போகலாமே, உங்கள் குடும்பத்தினர் அங்கு தானே உள்ளனர்?” எனலாம். அங்கு நான் சென்றால், இரண்டு மூன்று நாட்கள் நன்றாயிருப்பேன், அதன்பிறகு எனக்கு வேறெங்காவது செல்ல வேண்டும். எனவே எனக்கு செல்வதற்கு வீடு ஏதுமில்லை, நான் வீட்டைக் குறித்த நினைவுள்ளவனாயிருக்கிறேன். நல்லது. ஒரு வீடு உண்டு, என்றாவது ஒரு நாள் நான் அந்த வீட்டிற்குச் செல்லுவேன், ஆனால் முதலில் நான் உங்களுக்கு உதவி செய்தாக வேண்டும். பாருங்கள்? அதற்காகவே நான் இங்கிருக்கிறேன், உங்களுக்கு உதவி செய்யவே. உங்களுக்கு இனி ஒரு போதும் நான் உதவி செய்ய இயலாது என்னும் நேரம் வரும் போது, நான் வீடு செல்ல விரும்புகிறேன். நான் மிகவும் விரும்பப் போகும் ஒரு ஸ்தலம் எங்கோ உள்ளது, அங்கிருந்து திரும்பி வர எனக்குப் பிரியமிராது. 6நான் சில வாரங்கள் ஜெபர்ஸன் வில்லை விட்டு சென்றிருப்பேன்; ஆனால் நான் திரும்பி வர விரும்புவேன். நான் அரிசோனாவுக்குச் செல்கிறேன்; அது மிகவும் அற்புதமானது என்று எண்ணுகிறேன்; ஆனால் நான் திரும்பி வர விரும்புகிறேன். நான் வேறெங்காகிலும் செல்கிறேன்; நான் திரும்பி வர விரும்புகிறேன். நான் இங்கும் அங்கும் செல்கிறேன்; இங்கு திரும்பி வர வேண்டுமெனும் எண்ணம் எனக்கு உண்டாகின்றது. நான் இங்கு வருகிறேன். சில நாட்கள் தங்கியிருந்து உங்கள் எல்லோரையும் காண்கிறேன். வேறெங்காகிலும் செல்ல வேண்டுமெனும் விருப்பம் எனக்கு உண்டாகின்றது. பாருங்கள், என் பிள்ளைகள் உலகெங்கிலும் சிதறியுள்ளனர் - நான் கிறிஸ்துவுக்கென்று பெற்றெடுத்த பிள்ளைகள். நான் .... எனக்கு வீடு எதுவுமில்லை. இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட விரும்புகிறேன் (பாருங்கள்?) பிதாவானவர் அவ்விதம் செய்வார். அப்பொழுது நமக்கு ஒரு வீடு உண்டாகும். அப்பொழுது நாம், ஒருபோதும் அலைந்து திரிய வேண்டிய அவசியமிராது. பாருங்கள்? சுற்றித் திரிவதனால் களைப்பு உண்டாகிறது. தங்குவதற்கு இடம் ஏதுமில்லை. 7நீங்கள் உருண்டு செல்லும் கல்லைப் போல் ஓரிடம் விட்டு வேறோரிடம் சென்று கொண்டிருக்காதீர்கள் என்பதே நான் எவருக்கும் அளிக்கும் ஆலோசனையாகும் (பாருங்கள்?) - அத்தகைய ஒரு ஊழியம் உங்களை அவ்விதம் செல்ல அழைத்தாலொழிய, ஏனெனில் ... இந்த பூமியில் எனக்கு ஒரு இடம் இருந்து, அங்கு நான் சென்று “இது என் வீடு” என்று என்னால் சொல்ல இயலுமானால், அதற்காக இன்று காலையில் நான் எதையும் கொடுப்பேன். நான்.. எனக்கு அது இருக்குமானால், நான் பத்து லட்சம் டாலர்கள் தருவேன். “இதை நான் மிகவும் நேசிக்கிறேன், இதை நான் இனி விட்டுச் செல்ல எனக்குப் பிரியமில்லை” என்று என்னால் சொல்லக் கூடிய ஒரு இடம் இருக்குமானால், அதற்காக நான் எதையும் தருவேன். ஆனால் அதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் ஆபிரகாம் இருந்ததைப் போல் இருக்கிறேன். நான் ஒரு நகரத்துக்காக காத்திருக்கிறேன். பாருங்கள்? அதை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை, ஆனால் அது உள்ளதென்று எனக்குத் தெரியும். இந்த பூமியில் எந்த ஒரு இடத்திலும் என்னை பொருத்திக் கொள்ள என்னால் நிச்சயமாக முடியாது. அப்படி தோன்றவில்லை... அருமையான, அருமையான இடங்கள், இங்குசென்றால் அது மிகவும் ஈரமாக உள்ளது; அங்கு சென்றால், அது மிகவும் உலர்ந்துள்ளது; அங்கு மேலே சென்றால், அது மிகவும் குளிராயுள்ளது; கீழே சென்றால் அது மிகவும் வெப்பமாயுள்ளது. பாருங்கள்? நீங்கள்... இடம் எதுவுமில்லை; அது வீடேயல்ல. இதை உங்களிடம் அழுது கூறி, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, ஆனால் நான்... நல்லது, நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக் கிறோம். ஆமென்! எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவர்களாயிருங்கள். நான் அவ்விதமாக இருப்பதன் காரணத்தால், நான் அவ்விதமாக இருக்கிறேன். நான் உள்ளவிதமாக தேவன் என்னை படைத்திருக்கிறார். அவர் என்னை உண்டாக்கின விதமேயல்லாமல், வேறு எவ்விதமாகவும் என்னால் இருக்க முடியாது. சோகமுடையவனாய், அவ்விதமான தன்மைகளை உடையவனாய். நான் உதவியாயிருக்க எந்த விதமாக அவர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறாரோ, அந்த விதமாகவே என்னால் இருக்க முடியுமென்று அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். நான் அந்தவிதமான நபராகவே இருக்க விரும்புகிறேன். தேவனுடைய ராஜ்யத்தின் சித்தம், அல்லது தேவனுடைய சித்தம் எதுவோ, அவ்விதமாகவே நான் இருக்க விரும்புகிறேன். 8நாம் மறுபடியும் ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, இந்த கேள்விகள் எங்களுக்கு முன்பாக கிடக்கின்றன, பிதாவே, இவைகளுக்கு என்னால் விடையளிக்க இயலாது, கர்த்தாவே, இந்த கேள்விகளுக்கு விடையளிக்க எனக்கு போதிய ஞானம் கிடையாது. ஆனால் நீர் எல்லாவற்றிற்கும் போதுமானவராயிருக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். இவை ஜனங்களின் இருதயங்களில் உள்ளவை. அவர்களுடைய அழுத்தத்தை நீக்க என்னை உபயோகியும், கர்த்தாவே. அவ்விதம் செய்யமாட்டீரா, பிதாவே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறேன். ஆமென். 9இப்பொழுது, நாம் தொடங்கப் போகிறோம் .... அவர்கள் இதை ஒலிநாடாவில் பதிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன், எனவே இது ஒரு ... அதனால் பரவாயில்லை என்று எண்ணுகிறேன். இப்பொழுது, ஒரு காரியம் என்னவெனில்... கேள்விகளைக் குறித்து நான் கவலைப்படுவதற்கு காரணம் என்னவெனில், என்னை தொல்லைப்படுத்துகிற தீவிரமான காரியம் ஒன்றுண்டு:அது தான் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் உள்ள கேள்விகளுக்கு விடையளிப்பதே. ஒ என்னே, தொலைபேசியில் கூப்பிடுதல், கடிதங்கள். ஒரு சகோதரன் கம்பளியால் தன்னை போர்த்துக் கொண்டு, என் முற்றத்தில் இரவு 12 மணியிலிருந்து அடுத்த நாள் விடியும் வரைக்கும் உட்கார்ந்து கொண்டிருந்தார். போதகர்கள் எல்லாவிடங்களிலுமிருந்தும் தொலைபேசியில் கூப்பிடுகின்றனர், இரண்டு மூன்று முறை விவாகம் செய்தல் போன்றவை. ஊழியங்கள். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அதன் பேரில் இன்னும் அநேக கேள்விகள் இங்குள்ளன என்று நானறிவேன். அவைகளை நான் ஆராய்ந்து பார்க்கவில்லை, ஆனால் அதன் பேரில் அநேக கேள்விகள் இங்கு இன்னும் உள்ளன. 10இதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள்! விவாகம் செய்து, விவாகரத்து செய்து விட்டு மீண்டும் விவாகம் செய்து கொண்ட ஜனங்களாகிய நீங்கள் எனக்கு ஒன்றை வாக்கு பண்ணிக் கொடுங்கள். பாருங்கள்? நீங்கள் என் மேல் உங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறீர்கள் (இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படவில்லை என்று எண்ணுகிறேன்.) நான் தேவனால் அனுப்பப்பட்ட உங்கள் தீர்க்கதரிசி, உங்கள் ஊழியக்காரன் என்று என்னை நீங்கள் விசுவாசித்தால், இதன் பேரில் நான் சொல்லும் சொற்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்விதம் செய்வீர்களா? இப்பொழுது நீங்கள் உள்ள விதமாகவே தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் அது போன்ற எதையும் செய்ய முயல வேண்டாம். ஆனால் தொடர்ந்து அந்த விதமாகவே வாழ்ந்து, சந்தோஷமாக வாழுங்கள். உங்களுக்கு... நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், தொடர்ந்து கிறிஸ்துவுக்காக வாழுங்கள். உங்களை இரட்சிக்க அவருக்கு ஒரு காரணமுண்டு. . இப்பொழுது. நான் திரும்பி வரும் போது, கர்த்தருக்கு சித்தமானால், அதை உங்களுக்கு வேதத்திலிருந்து விளக்கிக் காண்பிக்கிறேன். பாருங்கள்? நீங்கள் சோர்ந்து போகாதீர்கள். அநேக மனிதர் என்னிடம், “நல்லது, என் மனைவியை நான் நேசிக்கிறேன், ஆனால் அவளை நான் விட்டுப் பிரிய வேண்டும், ஏனெனில் எடுத்துக் கொள்ளப்படுதலை இழந்து போக நான் விரும்பவில்லை' என்று கூறியிருக்கின்றனர். அவ்விதம் செய்யாதீர்கள்! இந்த பொருளின் பேரில் நான் சொல்வதை நீங்கள் மீண்டும் கேட்கும் வரைக்கும், நீங்கள் இப்பொழுது உள்ள விதமாகவேஇருங்கள். அதன் பிறகு நான்... இதை நான் பத்து பதினைந்து நிமிடங்களில் விளக்க முடியாது; இதை விளக்க சிறிது நேரம் தேவைப்படும், ஏனெனில் அது வேதவசனமாக இருக்க வேண்டும் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்க வேண்டும் இல்லையென்றால், அது சரியல்ல. 11இயேசு இங்கு, “வேசித்தன முகாந்திரத்தினாலொழிய தன் மனைவியை வேறு காரணத்தினால் தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் அப்படித் தள்ளி விடுகிறவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் என்று கூறியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும் (மத். 5:22). இவைகளைக் கூற அவருக்கு ஒரு காரணமிருந்தது. அவர் தேவன்; அது அவருடைய வார்த்தை . நாம் தொடக்கத்திற்கு சென்று இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன (பாருங்கள்?) என்று கண்டுபிடித்து, இவைகளைக் கொண்டு வருவோம். ஆனால் நாம் அவ்விதம் செய்யும் வரைக்கும், நீங்கள் கிறிஸ்தவர்களானால், இப்பொழுது நீங்கள் உள்ளபடியே இது வரைக்கும் நீங்கள் செய்து வந்தபடியே, தொடர்ந்து வாழுங்கள் நீங்கள் கிறிஸ்தவ தம்பதிகளாயிருந்து, விவாகம் செய்து, பிள்ளைகள் இருக்குமானால், உங்களைப் பிணைக்கும் சிறு இணைப்புகள் இருக்குமானால், உங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ விட்டுப் பிரிந்து விடாதீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். பாருங்கள்; இந்த பொருளின் பேரில் நான் மீண்டும் பேசுவதைக் கேட்கும் வரைக்கும் காத்திருங்கள். அதை நீங்கள் எனக்கு வாக்கு பண்ணிக் கொடுப்பீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! நீங்கள் என் பேரில் விசுவாசம் கொண்டு என்னிடம் இந்த காரியத்தை கூறியிருக்கிறீர்கள். இது வரைக்கும் நீங்கள் என்னை விசுவாசித்து வந்திருக்கிறீர்கள். இந்தப் பொருளின் பேரில் இன்னும் சிறிது கூட என்னை விசுவாசியுங்கள். இப்பொழுது, நாம் பார்ப்போம். இன்று காலையில் உண்மையில் சில நல்ல கேள்விகள் என்னிடம் உள்ளன. சில.... 12மணவாட்டியில் செல்லுகின்ற அனைவருமே கூடாரத்தின் ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் பரப்புக்குள் வாழ வேண்டுமா (இதற்கு சென்ற ஞாயிறு நான் விடை கூறினேன் என்று நினைக்கிறேன். இவைகளைப் பொறுக்கியெடுத்து என்னால் முடிந்த வரையில் உபயோகிக்க வேண்டும்)... “மணவாட்டியின் வருங்கால இருப்பிடம்” என்னும் செய்தியின் இரண்டாம் ஒலிநாடாவில் தொனிப்பது போல் ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் பரப்புக்குள் வாழ வேண்டுமா? எடுத்துக் கொள்ளப்படுதலின் போது மணவாட்டி உலகின் எல்லா பாகங்களிலிருந்து வருவாள் என்று நான் எப்பொழுதும் எண்ணியிருந்தேன். நான் தவறா? இல்லை, என் அருமை நண்பனே, நீர் தவறல்ல, அது சரியே. இப்பொழுது, நீங்கள் அவ்விதம் நினைக்கத்தக்கதாக நான் ஒலிநாடாவில் ஏதாகிலும் கூறியிருந்தால்... இப்பொழுது, நான் அவ்விதம் கூறவில்லை. இவையெல்லாம் எனக்கு இப்பொழுது புதிதாக உள்ளன. இந்த கேள்விகள் என்னவென்று நான் பார்க்கவில்லை. பாருங்கள்? இந்த கேள்வித் தொகுப்புகளை நான் போன ஞாயிறன்று பெற்றுக் கொண்டேன். இவைகளை இந்த காகித உறையில் போட்டு அங்கு வைத்து விட்டேன். 13இப்பொழுது, இதில்... இல்லை, மணவாட்டி எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் அநேகர் பூமியின் தூளில் இருப்பார்கள். அவர்கள் உலகம் முழுவதிலும் இருப்பார்கள்; அவர்கள் வடக்கில் பனியினால் உறைந்திருப்பார்கள், வெப்பமான காடுகளின் மண்ணில் இருப்பார்கள் - உலகம் பூராவிலும் இருப்பார்கள். ஆனால் தேவ எக்காளம் முழங்கும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருந்து, நித்திரையினின்று விழித்து, அவர்கள் எங்கிருந்த போதிலும் பூமியின் தூளிலிருந்து வெளியே வருவார்கள். இப்பொழுது, இதில், உயிர்த்தெழுதல் உலகம் முழுவதும் நடக்கும். பாருங்கள்? எல்லா விடங்களிலிருந்தும், பூமியின் உருண்டையில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும், அவர் வரும் போது அவரோடு கூட வருவார்கள் (பாருங்கள்), நீங்கள் எங்கிருந்த போதிலும். ஆதி காலத்து இரத்த சாட்சிகளின் நாட்களில் இருந்த அரங்கத்தை எண்ணிப் பாருங்கள். அந்த கிறிஸ்தவர்கள் சிங்கங்களின் கெபியில் எறியப்பட்டனர். அந்த சிங்கங்கள் அந்த கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுடைய உடல்களைப் புசித்தன. பாருங்கள்? அவர்கள் சிதறப்பட்டிருந்தனர், அவர்களுடையஉடல்கள் பூமியின் மீது சிங்கங்களின் கழிவுப் பொருட்களில் இருந்தன. அது எங்கிருந்த போதிலும், உங்களால்... பாருங்கள், நீங்கள் ஒரு பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள், அது காணக்கூடாத பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. தேவன் அந்த பொருளை உங்களுக்குத் திரும்ப அளிப்பார். பாருங்கள்? 14இப்பொழுது, நீங்கள் ஒரு இரத்த அணுவை (cell) எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இரத்த அணுவை நீங்கள் பிளந்தால், அது இரத்த அணுவுக்குள் ஒரு இரத்த அணுவாக, பிறகு அணுவாக, மூலக்கூறாக பிளந்து, முடிவில் காணக்கூடாததாக ஆகிவிடும். அது நீங்கள் தொடக்கூடிய ஒரு இயற்கை பொருளிலிருந்து, வாயுக்களாகவும்; வாயுக்களிலிருந்து அமிலங்களாகவும் - அமிலங்களிலிருந்து வாயுக்களாகவும் ஆகி, கடைசியாக ஒரு சிறு காரியத்தில் முடிவடைகிறது, அதுதான் ஆவி. இந்த வாயுக்களில் குடி கொண்டிருந்த இந்த ஆவி.... அது அதே வாயுக்களாக இருக்காது, ஆனால் நீங்கள் எந்த விதமான தோற்றத்தை இப்பொழுது உடையவர்களாக இருக்கிறீர்களோ, அது அப்படியே மறுபடியும் இருக்கும். பாருங்கள்? ஆவி அதை கட்டுப்படுத்தியிருந்தது. இப்பொழுது, வேறு சொற்களில் கூறுவோமானால், நீங்கள் வாலிபனாகவோ அல்லது வாலிபப் பெண்ணாகவோ ஆகும் போது, தேவன் உங்களைப் படமெடுக்கிறார். இப்பொழுது, நீங்கள் எவ்வளவு வயோதிபனாகி சுருக்கம் விழுந்த போதிலும்; எவ்வளவாக உருக்குலைந்தாலும், அது மீண்டும் பழைய நிலைக்கு வரும். அந்த சரீரம் அழிக்கப்பட்டு, உருக்குலைந்து, சுட்டெரிக்கப்பட்டு, சிங்கங்களுக்கு இரையாகி, அவ்விதம் என்னவான போதிலும், அது வாயுக்களால், பூமியிலுள்ள பதினாறு மூலப்பொருட்களால் உண்டாக்கப்பட்டது. அது கால்சியம், பொட்டாஷ், பெட்ரோலியம், விண்வெளி ஒளி போன்ற அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த சரீரம் உண்டாக்கப்பட்டது. இப்பொழுது, என்னவானாலும், பூமி அனைத்துமே அவைகளால் நிறைந்துள்ளது. 15ஆனால் இப்பொழுது, இந்த படம் தான் முக்கியமான காரியம். உயிர்த்தெழுதலின் போது, அந்த வாயுக்களும், அமிலங்களும் அவைகளுக்குரிய இடத்தில் மீண்டும் வந்து அந்த படத்தை மறுபடியும் உண்டாக்குகிறது. இந்த படமானது உங்களுக்கு பதினாறு.பதினெட்டு அல்லது இருபது வயதாயிருந்த போது, நீங்கள் காண்பதற்கு சிறந்தவர்களாயிருந்த போது எடுக்கப்படவில்லை. அது எப்பொழுது எடுக்கப்பட்டது? உலகத்தோற்றத்திற்கு முன்பே அது தேவனுடைய மகத்தான தஸ்தாவேஜுகளில் வைக்கப்பட்டது. அதன் பிறகு, அது செய்த ஒரே காரியம், நீங்கள் தெரிந்து கொள்வதற்கென அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. பாருங்கள்? அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஊழியக்காரராகின்றீர்கள். அவர் அதை முன்னறிதல், அவரை மீட்பராகச் செய்கின்றது. அதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம். அப்பொழுது அந்த படம் முற்றிலுமாக... இது 'நெகடிவ்' இப்பொழுது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வாழ்க்கையின் 'நெகடிவ் பாகம். 'நெகடிவ்' ஒன்று இருக்குமானால், அதற்கான 'பாஸிடிவ்', 'நெகடிவ் ஒன்று உண்டாவதற்கு முன்பே இருக்க வேண்டும். இது உண்மையானது அல்ல. இது வரப் போகும் உண்மையான காரியத்துக்கு ஒரு முன்நிழலாக மாத்திரம் உள்ளது. நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? எனவே, அவர்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் அந்த தோற்றத்தை, தேவனுடைய மகத்தான மண்டபத்தில் உள்ள அந்த படத்தை அழிக்க முடியாது. அது அதை அழிக்க முடியாது, அது பரலோகத்தில் உள்ளது. அந்த சரீரத்தை நீங்கள் சுட்டெரிக்கலாம், சிங்கங்களுக்கு இரையாக கொடுக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டை இரண்டால் பெருக்கினால் நான்கு என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அது மீண்டும் தோன்றும். தேவன் அதை நிச்சயமாக உரைத்திருக்கிறார், அது மீண்டும் தோன்றும். எனவே, நீங்கள் எங்கிருந்தாலும், 16இப்பொழுது, நான்... நான் நினைக்கிறேன் நீங்கள் ஒலிநாடாவைப் போட்டுக் கேட்பீர்களானால்.... (இந்தக் கேள்வியை யார் எழுதினார் என்று தெரியவில்லை; அதில் பெயரை கையொப்ப மிடவில்லை. ஒரு சிறு காகிதத் துண்டு 'நோட் புக்கிலிருந்து கிழிக்கப்பட்டு ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளது. அது 'நோட்புக்கிலிருந்து கிழிக்கப்பட்டது போல் தோன்றுகிறது). ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், இந்த கேள்வியில், நீங்கள் கவனிப்பீர்களானால், நான் ஒலிநாடாவில் இதை தான் கூறியுள்ளேன் (இதைநீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் இது ஒருக்கால் நான் ஒலிநாடாவில் உபயோகித்த அதே சொற்களாக இருக்காது). நான் என்ன கூறினேன் என்றால், “உதாரணமாக, இன்று காலை நாம் இங்குள்ளோம். நாம் காண வாஞ்சிக்கும் நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும். அதன் பரப்பு ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து ஃபிளாரிடா வரைக்கும், கிழக்கு சீபோர்ட் (Eastern Seaboard) டிலிருந்து எண்ணூறு மைல் மிஸிஸிபி நதிக்கு மேற்கேயும் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும். அதை யோசித்துப் பாருங்கள். இன்று காலையில் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மக்கள், அவ்வளவு தூரத்திலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரத்திலிருந்து வந்துள்ளனர். இப்பொழுது.. அந்த ஆலயம் பூமியில் எங்கிருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது தற்பொழுது பாலஸ்தீனா உள்ள இடத்தில் இருக்கும் என்னும் கருத்து எனக்குண்டு. அது ஒருக்கால் அங்கு மலையின் உச்சியில் இருக்கும். அப்பொழுது சமுத்திரம் இருக்காது. பாருங்கள், 17இந்த உலகின் சுற்றளவு 25,000 மைல்கள், எனவே ஆயிரத்து ஐந்நூறு மைல் ஒன்றும் அதிகமல்ல. ஆனால் இந்த மகத்தான நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமுள்ளதாய் மலையின் மேல் இருக்கும். அவ்விதம் நான் விசுவாசிக்கும் காரணம், எருசலேமிலுள்ள சீயோன் மலையையும் அந்த நகரங்களையும் குறித்த தீர்க்கதரிசனங்களின் நிமித்தமாகவே. அங்குதான் தீர்க்கதரிசியாகிய ஆபிரகாம் தேவன் கட்டி உண்டாக்கின அந்த நகரத்துக்காக காத்திருந்தான். அந்த தேசத்தில் அவன் அந்த நகரத்தை எதிர் நோக்கியிருந்தான். அந்த தேசம் எங்குள்ளதோ அங்கு தான் அது இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த தேசத்தை நீங்கள் வரைபடத்தில் கண்டுபிடிப்பது கடினம். அது ஒரு சிறு புள்ளியைப் போல் உள்ளது. ருஷியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளைப் பாருங்கள். அங்குள்ள அந்த இடங்கள் அனைத்தும்.... தேவன் ஏன் அந்த ஒரு இடத்தின் மேல் அவ்வளவு வைராக்கியமுள்ளவராய் இருந்தார்? அது தான் கேள்வி. அதை என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் அப்படித்தான் எனக்குத் தென்படுகிறது. அது எங்கிருந்தாலும், அதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். எனவே அதற்காக நாம் கர்த்தரைத் துதிப்போம். 18கூடாரத்தை சுற்றிலும் அது ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் இருக்கும் என்று நான் கூறினதாக நீங்கள் அபிப்பிராயம் கொண்டிருந்தால், அது தவறான அபிப்பிராயம் (பாருங்கள்?), ஏனெனில் அது இருக்காது. இந்த கூடாரம்.... இது அழிந்து போக வேண்டிய ஒரு சிறு இடம். உலகமானது சுட்டெரிக்கப்படும், அப்பொழுது இவையனைத்தும் ஒழிந்து போகும். இந்த இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்தும் எரிமலைக் குழம்பினால் வெந்து உருகிப் போகும். பாருங்கள்? எல்லா பாவமும், எல்லா வியாதிகளும், எல்லா கிருமிகளும், மற்றெல்லாம் அழிக்கப்படும். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முந்தின ...” (வெளி 21:1). .. சிந்தித்துப் பாருங்கள்! தேவன் ஆறாயிரம் ஆண்டுகளாக இந்த உலகத்தை கட்டிக் கொண்டு வந்தார். அவர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, இதை உருவாக்கினார். அவர் எவ்விதம் அதை செய்தார்? “அவர் தோன்றப்படாதவைகளினால் அதை உண்டாக்கினார்” (எபி. 11:3) என்று வேதம் உரைக்கிறது; அதாவது, அவர் பூமியை இந்த விதமாக உண்டாக்கினார். இப்பொழுது கவனியுங்கள்: இது அழகாயுள்ளது. சிருஷ்டி கர்த்தர் பூமியை ஒரு நோக்கத்துக்காக உண்டாக்கினார், சாத்தான் அதை அசுசிப்படுத்தினான், இங்கு விடப்பட்டுள்ளதை மீட்பதற்காக அவர் கீழே இறங்கி வந்தார். அவர் வேறெங்கோ சென்று. இப்பொழுதும் சிருஷ்டிப்பின் பணியில் ஈடுபட்டிருக்கிறார், 19பூமியை உண்டாக்க அவருக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்தது. ஆனால் பூமிக்கு வரவிருக்கும் அந்த நகரத்தை சிருஷ்டிக்க அவர் இரண்டே நாட்கள் எடுத்துக் கொள்வார். அவர்... “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படி யில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் (பளிங்கான பொன்னால் நான் ஒரு நகரத்தைக் கட்டப் போகிறேன், வீதிகளில் பொன் தளம் போடுவேன்)” (யோவான் 14:2). என்ன ஒரு அழகான இடம்! அவர் எங்கு அதை பெறுவார்? மற்ற பூமிகளில் அல்லது சந்திரன்களில், அல்லது நட்சத்திரங்களில் பொருட்கள் உண்டா? அவருக்கு அவை தேவையில்லை, அவர் சிருஷ்டி கர்த்தர். அவர் -நகரத்தைக் கட்ட சென்றிருக்கிறார். ஆமென்! அது எனக்கு போதுமானது, உங்களுக்கும் அல்லவா? அது நல்லது. அவர் இதை கட்டி, இதை நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்தால், அவர் இந்த புதிய ஒன்றைக் கட்டும்போது அது எப்படிப்பட்டதாய் இருக்கும்? ஓ என்னே, என்ன அற்புதமான காரியம்! அந்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 20சகோ. பிரான்ஹாமே, நான் கர்த்தரை நேசிக்கிறேன், ஆனால் கடந்த ஆண்டில் ஒரு பிரச்சினையை நான் சந்திக்க நேர்ந்தது, சில நேரங்களில், எனக்கு ஏறக்குறைய மனநிலைக் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்பது போல் தோன்றுகிறது. அது என்ன? தயவு செய்து எனக்காவும் என் கணவருக்காகவும் ஜெபிக்கவும். நல்லது, அங்கு ஒன்றும்... இன்று காலையில் ஜனங்களாகிய உங்களில் சிலருக்கு நேர்முகப் பேட்டி இருந்த விதமாக இந்த நபருக்கும் இருந்திருந்தால், அது என்னவென்பதை, அது என்னவாயிருப்பினும், அது வெளியே இழுத்துக் கொண்டு வந்திருக்கும். பாருங்கள்? அது என்னவென்பதை தேவன் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது, நீ யாரென்று எனக்குத் தெரியாது, நீ இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை; அது வெறுமனே கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரி என்றுரைக்கிறது... இப்பொழுது, இப்பொழுது, நீ ஏதாகிலும் ஒரு தவறைச் செய்து, அது உன்னைத் தொல்லைப்படுத்துகிறதென்றால், நீ வேதத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்த்து, என்ன செய்ய வேண்டும் மென்பதை அறிந்து கொள். ஆனால் நீ ஒன்றுமே செய்யாதிருந்து, எதுவுமே உன்னைக் குற்றப்படுத்தாதிருந்தால், ஒருக்கால் அது உன் நரம்பு சம்பந்தமானதாக இருக்கக் கூடும். பார்? அநேக காரியங்கள் நடந்திருக்கக் கூடும்; ஒருக்கால் உன் முன் கால வாழ்க்கையில் ஏதாகிலும் தொல்லை நேர்ந்திருக்கக்கூடும். ஒருக்கால் இங்குள்ள ஒரு ஸ்திரீக்கு அது ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரமாயிருக்கக் கூடும். அப்பொழுது அவளுக்கு எல்லாமே தவறாயிருக்கும். அவளுக்கு ஒன்றும் தவறாயிருக்கவில்லை, இருப்பினும் எல்லாமே அவளுக்கு தவறாயிருக்கும். அவள் நடிக்கவில்லை, அவள் உண்மையில் அவ்விதம் உணருகிறாள். அது உண்மையானதைப் போலவே இருக்கும். நரம்பு கோளாறு உள்ள எவரும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுடன் இணங்காமலிருக்க வேண்டாம். 21கணவன்மார்களே, உங்கள் மனைவிமார்கள் வாழ்க்கையின் அந்த நேரத்தை அடையும்போது, அவள் எப்பொழுதாகிலும் உங்கள் இருதயத்துக்கு இனியவளாக இருந்திருப்பாளானால், அவள் சரியாயிருக்க விட்டு விடுங்கள், ஏனெனில் அவளுக்கு நீங்கள் தேவை அவளுக்கு உண்மையில் உங்கள் உதவி தேவையாயுள்ளது. அவளுக்கு உதவி செய்ய யாராகிலும் அவளுக்குத் தேவைபடுகிறது. அவளைப் புரிந்து கொள்ளுங்கள். அவளுடன் பேசுங்கள். அவள் உங்கள் இருதயத்துக்கு இனியவளைப் போல அவளை உங்கள் கரங்களில் தழுவிக் கொள்ளுங்கள், அவள் அவ்விதமாகத்தான் உங்களுக்கு இருக்க வேண்டும். அவளைப் புரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் அவள் தன் முழு அமைப்பும் மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இருக்கிறாள். நீங்கள் அந்நேரத்தில் அவளிடம் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும். - அங்குதான் திரு. ராக்ஃபெல்லர் மிகப் பெரிய தவறைச் செய்தார் என்று நினைக்கிறேன். அவர் தேசத்தின் மக்களால் நேசிக்கப்பட்டார், அவர் ஒருக்கால் நமது அடுத்த ஜனாதிபதியாக ஆகியிருக்கக் கூடும். ஆனால் அவருடைய மனைவிக்கு ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரம் வந்தபோது, அந்த கட்டத்தை அவள் அடைந்த போது, அவர் அவளை விட்டுப் பிரிந்து தன் பெண் செயலாளரை மணந்து கொண்டார். என்ன நடந்தது பார்த்தீர்களா? உண்மையில் நல்லவிதமாக நிதானிக்கும் அமெரிக்கர்கள் இன்னும் உள்ளனர் என்பதை அது காண்பிக்கிறது. இப்பொழுது, எனக்கு திரு. கோல்ட் வாட்டரை, இல்லை, திரு. ராக் ஃபெல்லரைப் பிடிக்கும் (சகோ. பிரான்ஹாம் தன் விரல்களை சொடுக்குகிறார் - ஆசி). அவர் ஒரு... எனக்கு திரு. கோல்ட் வாட்டரையும் பிடிக்கும்; எனக்கு எல்லோரையும் பிடிக்கும். ஆனால் நான் - நான் விரும்பவில்லை. அங்கு உட்கார்ந்திருக்கும் என்னுடைய சில ரிப்பப்ளிக்கன் சகோதரர்கள் நான் கூறும் இதைக் கேட்பார்கள். நான். 22கவனியுங்கள், நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன். பாருங்கள்? இது அரசியலுக்கு இடமல்ல. பாருங்கள்? முழு காரியமும் எப்படியும் அந்த வழியே சென்று விட்டது, ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது நித்தியத்தைக் குறித்ததாகும். டிமாக்ரட் ஆனாலும் ரிப்பப்ளிக்கன் ஆனாலும்... ஒ, அது ஒரே குழப்படியாயுள்ளது; அது ஒருக்காலும் மீள முடியாது. அது முடிந்து போய் விட்ட. ஒன்று, எனவே அதைக் குறித்து வாக்குவாதம் செய்யாதீர்கள். செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், இந்த ராஜ்யத்துக்காக வாழ்வதே. “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை: வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்” (எபி.13:14). ஆமென்! அது உண்மை . ஆம், ஐயா! எனவே அரசியல், வேலிக்கு ஒரு பக்கம் உள்ளது, நான் மறு பக்கத்தில் இருக்கிறேன். “நான் ஒரு முறை வோட்டு போட்டேன்; அது கிறிஸ்துவுக்காக; நான் நிச்சயம் ஜெயிப்பேன்” என்று கூறினேன். அது உண்மை . பாருங்கள்? உங்களுக்கு ஒரு வோட்டு வந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்? தேவன் உங்களுக்கு வோட்டு போட்டார், பிசாசு உங்களுக்கு எதிராக வோட்டு போட்டான். இப்பொழுது, நீங்ள் எந்தவிதமாக வோட்டு போட்டீர்களோ, அந்த வழியாகவே வெளிவருவீர்கள். எனவே இப்பொழுது, நான் நினைப்பது என்னவெனில் இந்த நபர்... அது நரம்பு சம்பந்தமானது மட்டுமே என்றுதான் நான் நினைக்கப் போகிறேன். உன்னை ஒன்றும் குற்றப்படுத்தாமல் இருக்குமானால், நீ தொடர்ந்து சென்று, “சாத்தானே, என்னை விட்டுப் போ” என்று சொல். நீ தொடர்ந்து முன் செல். நீ தைரியமாக நின்று, தேவனுக்காக வாழ்வாயாக. 23இப்பொழுது. விவாகரத்துக்குப் பிறகு மறுபடியும் விவாகம் செய்து கொள்ள வேதத்தின்படி அனுமதி வழங்கும் ஏதாகிலும் ஒரு நிலைமையுண்டா? (இப்பொழுது இது என்ன வென்று பார்க்கலாம்... - இதில் இரண்டு மூன்று கேள்விகள் அடங்கியுள்ளன என்று நினைக்கிறேன்). முன்பு விவாகமாகியிருந்து, இப்பொழுது விவாகமான நிலையில் இல்லாமல் இருந்தால், மீண்டும் விவாகம் செய்து கொள்வதற்கென அனுமதி வழங்கும் விவாக ரத்துக்கான ஆதாரம் ஏதாகிலும் உண்டா ? இதற்கான விடையைப் பெற நான் ஒலிநாடாவை வாங்கிக் கொள்வேன். மிக்க நன்றி. ஞாயிறன்று இதை எதிர்பார்ப்பேன். நல்லது, இப்பொழுது, இதை நான் கூறி விட்டேன், பாருங்கள்... வேண்டாம்... நான் - நான்... இவையெல்லாம்நேராக்கப்படும் ஒரு நிலையை நாம் அடையும் வரைக்கும், இதை நான் தனியே விட்டு விடுகிறேன் (பாருங்கள்). இப்பொழுது இதை ஞாபகம் கொள்ளுங்கள், தேவனுக்கு சித்தமானால், நான் திரும்பி வந்தவுடன். அடுத்த முறை நான் வரும்போது, கர்த்தருக்குச் சித்தமானால், இந்த பொருளின் பேரில் நான் பிரசங்கிப்பேன். பாருங்கள்? இப்பொழுது... அப்பொழுது, அதை நாம் எப்படியும் ஒலிநாடாவில் பதிவு செய்வோம். அது நோக்கப் பண்ணினால், அது நோகப் பண்ணும்; அது தெளிவாக்கினால், அது தெளிவாக்கும். நீங்கள் தைரியமாயிருங்கள், பாருங்கள். 24அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட ஒருவருக்கு அடையாளங்கள் தொடராமல் இருப்பது சாத்தியமா? அல்லது நாம் வருங்காலத்தில் ஆவியானவர் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டுமா? இது ஒரு குழப்பமான கேள்வி போன்று தொனிக்கக் கூடும், ஆனால் இது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. பாருங்கள்? இங்குள்ள என் குடும்பத்திலும் உங்களை என் குடும்பமாக குறிப்பிடுகிறேன் - நமது ஒலிநாடாக்கள் செல்லுகின்ற உலகிலுள்ள குடும்பத்திலும் கிரியை செய்து வருகின்ற இதைக் குறித்து விளக்க இந்த கேள்வி எனக்கு சிறிது தருணம் அளித்துள்ளது. 25இப்பொழுது, என் சபையோரில் பெரும்பாலார் பெந்தெகொஸ்தேயிலிருந்து வந்த ஜனங்களாயுள்ளனர். ஏனெனில் ஸ்தாபனங்களின் வரிசையில் பெந்தெகொஸ்தே தான் நாம் கொண்டுள்ள கடைசி செய்தி. என்னைப் பொறுத்தவரையில், மற்ற ஸ்தாபன சபைகளைக் காட்டிலும் நான் இவர்களுடன் தான் அதிகமாக நிச்சயம் இணங்குகிறேன். நான் பெந்தெகொஸ்தேயைப் பற்றிக் கொண்டிருப்பதன் காரணம் என்னவெனில், அதுவே பின்னால் வந்த செய்தி. நான் கிறிஸ்துவினிடம் கொண்டு வரும் மக்களிடம், ஏதாகிலும் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் செல்லும்படி அங்கு வழி நடத்துகிறேன். இருப்பினும் நான் எல்லா வகையிலும், எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் ஸ்தாபனமாயிருப்பதால் அவர்கள் வேதத்தின்படி தவறு செய்கின்றனர் என்றும், ஒளியை அவர்களுக்கு முன்பாக வைத்த போது அந்த ஒளியில்நடக்க அவர்களுக்குப்பிரியமில்லை என்றும் அவர்களைக் குற்றஞ்சாட்டியிருக்கிறேன். இருப்பினும், உலகிலுள்ள எந்த ஒரு சபையையும் தெரிந்து கொள்ள இன்று என்னிடம் கூறப்பட்டால், ஸ்தாபன சபைகளைப் பொறுத்தவரையில் நான் பெந்தெகொஸ்தே சபையையே தெரிந்து கொள்வேன். ஆனால் தனிப்பட்ட நபர்கள் - ஆண்களும் பெண்களும் - என்று வரும் போது, உத்தமமான கிறிஸ்தவர்கள் எல்லா ஸ்தாபனங்களிலும் உள்ளனர். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லுத்தரன்கள் போன்றவர். ஆனால் நான் ஜனங்கள் இருக்கின்ற இந்த முறைமைகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட நபரைக் குறித்தல்ல, ஆனால் இந்த ஜனங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் முறைமைகளான இந்த ஸ்தாபனங்களைக் குறித்து. இதை நீங்கள் இப்பொழுது தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (பாருங்கள்?). நான் நினைக்கிறேன் ஜனங்கள்.... அவர்கள் ரோமன் கத்தோலிக்கர், யேகோவா சாட்சி, வைதீக யூதர், யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களை இரட்சிப்பதற்கென கிறிஸ்து மரித்த தனிப்பட்ட நபர்கள் அவர்கள். 26இப்பொழுது. நான்... அவர்கள் இருக்கின்ற முறைமைகளுடன் இணங்குகையில்... மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், போன்ற ஸ்தாபனங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாப்டிஸ்டு ஸ்தாபனத்திலும் உண்டு என்று நான் நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்தவர்கள், உண்மையான விசுவாசிகள். ரோமன் கத்தோலிக்க சபையிலும், கர்த்தரை உண்மையாக நேசிக்கும் உத்தமமான ஆண்களும் பெண்களும் உள்ளனர். அவர்கள் தவறு செய்ய வேண்டும் என்பதற்காக அந்த சபையைச் சேர்ந்து கொள்வதில்லை. ஆனால் அங்குள்ள அந்த முறைமையோ அவர்களுடைய சிந்தையை தவறான வழியில் நடத்துகிறது. நான் ஸ்தாபனம் உண்டாக்கும் ஒரு நேரம் எப்பொழுதாகிலும் வருமானால், உங்களை நான் வஞ்சித்து ஒரு முறைமைக்குள் உங்களைக் கொண்டு வந்து விட்டவனாயிருப்பேன். அது எனக்கு தூரமாயிருப்பதாக. உங்களை வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவினிடம் வழிநடத்த தேவன் என்னை சரியான மன நிலையில் வைப்பராக. அந்த வார்த்தையில் , நிலைத்திருங்கள். பாருங்கள்? 27ஆனால் இப்பொழுது, இங்குள்ள இந்த நபர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்தும் அடையாளங்கள் தொடராமலிருக்க சாத்தியம் உண்டா என்னும் கேள்வியைக் கேட்டிருக்கிறார். இப்பொழுது அது .... நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால், அதாவது நீங்கள் முதலில் ஒரு சாதாரண மானிடனாகப் பிறந்து... இப்பொழுது நான் இதற்கு சிறுவர்களுக்கு உரைப்பது போல் விடையளிக்கிறேன். நீங்கள் சாதாரண ஒரு மானிடனாகப் பிறந்தால், சாதாரண ஒரு மானிடன் செய்யும் கிரியைகளைச் செய்வீர்கள். அது சரியா? 42, நீங்கள் மானிடனாகப் பிறக்கும் போது, மானிட இயல்பு உங்களைத் தொடருகிறது. நீங்கள் மரத்தின் மேல் வசித்து பறவையைப் போல பறந்து செல்ல முயற்சி செய்ய மாட்டீர்கள். அது மானிட இயல்பு அல்ல, அது மனிதனின் சாதாரண செயல் அல்ல. ஒரு மனிதனின் வழக்கமான செயல், அவன் வேலை செய்து.... மணம் புரிந்து குடும்பம் அமைத்து, இப்படிப்பட்ட செயல்களைப் புரிவதே. அது வழக்கமான மானிட இயல்பு, ஏனெனில் நீங்கள் அந்த விதமாக பிறந்திருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் கிறிஸ்தவர்களாகப் பிறந்திருந்தால், தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், நீங்கள் கிறிஸ்துவின் தன்மைகளைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள். பாருங்கள்? 28ஒவ்வொரு நாளும் இங்கு உட்கார்ந்து கொண்டு போதகத்தைக் கேட்கும் ஜனங்கள் கொண்ட இந்த சபையோரை நாம் இன்று காலையில் எடுத்துக் கொள்வோமானால், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் வித்தியாசப்பட்டவர்கள், நீங்கள் வித்தியாசமாக உண்டாக்கப்பட்டவர்கள், உங்களுக்கு பசி வெவ்வேறு விதமாக இருக்கும், நீங்கள் வித்தியாசமாக உண்கிறீர்கள்; ஆனால் நீங்கள் அனைவரும் உணவே உண்கிறீர்கள். ஆனால் இப்பொழுது... ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் காண்பதற்கு மற்றவரைப் போல இருந்தாலும், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள். கிறிஸ்தவர்களும் அவ்வாறேயுள்ளனர். “இப்பொழுது, எல்லாரும்...' என்று நீங்கள் கூற முடியாது. எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்களா? எல்லாரும்..? (1 கொரி 12:29-30). பாருங்கள்? இவைகளை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்தவனின் பழக்கங்களைப் பெற்றுக்கொள்கிறான்; அவர்கள் கிறிஸ்தவரைப் போல் வாழ்கின்றனர் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்“ என்று இயேசு உரைத்தார். கவனியுங்கள்: ”என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்.... சாவுக்கேதுவானவைகளைக் குடிப்பார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்“ இவைகள் உண்மையில் கிறிஸ்தவர்களைத் தொடருகின்றன. 29இப்பொழுது, இந்த நபர் மிகவும் நல்ல ஒரு காரியத்தை இங்கு கூறியிருக்கிறார்: “.... நாம் வருங்காலம் வரைக்கும், அல்லது பரிசுத்த ஆவியானவர் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டுமா?” அது எனக்குப் பிரியம். பாருங்கள்? உங்களுக்கு அதன் கருத்து புரிகிறதா? பரிசுத்த ஆவியானவர் நியமிக்கும் போது! தேவன் காரியங்களை நியமிக்கிறார்.. அங்கு, பெந்தெகொஸ்தே ஜனங்கள் மட்டும் முயற்சி செய்வார்களானால் (இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்கள்), எல்லோரும் அந்நிய பாஷைகள் பேச வேண்டும் என்னும் உங்கள் கருத்தை வலியுறுத்துவதன் பேரில் நான் ஏன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது சரியென்று எனக்குத் தோன்றவில்லை, ஏனெனில் அது... எனக்கு 'செர்ரி பை பிடிக்கும், நான் ஒரு மானிடன். ஆனால் நான் உங்களிடம், “நீங்கள் 'செர்ரி பை சாப்பிடாவிட்டால் மானிடர் அல்ல” என்று கூற வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? 'செர்ரி பை' சாப்பிடுவது என்பது ஒரு மானிடனின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். பாருங்கள்? அதன் பேரில் நீங்கள் என்னிடம் இணங்காமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை . இப்பொழுது, ஒருவன் இதை புசிக்கிறான், மற்றவன் வேறொன்றை செய்கிறான். 30இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இந்த உத்தியோகங்களை நியமிக்கிறார். ஆனால் நீங்கள் அதற்கு உள்ளே உங்களை உந்திக் கொள்ள முயற்சித்தால்... நீங்கள் 'செர்ரி பை' உண்ண வேண்டும் என்று நான் உங்களிடம் கூறி, ஆனால் 'செர்ரி பை' உண்பது உங்களுக்கு வாந்தி உண்டாக்கினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் வாந்தி எடுத்து, மறுபடியும் செர்ரி பை' உண்டு, மறுபடியும் வாந்தி எடுப்பீர்களா? பாருங்கள்? அது உங்களுக்கு கெடுதியை விளைவிக்கும். அது போலத்தான் ஆவிக்கு முரணான ஏதாவதொன்றை நீங்கள் செய்ய உங்களை நிர்ப்பந்தம் பண்ணிக் கொள்ளும் போதும்.உங்கள் வாழ்க்கையில் அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்தை உங்களுக்கென நியமித்திருக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? நீங்கள் ஆவியினால் நிறையப்படும் போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும், அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து, அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். பாருங்கள்? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, எல்லாமே முன்னைக் காட்டிலும் வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்த ஆவி. 31இப்பொழுது, இந்த வரங்கள் பரிசுத்த ஆவியில் உள்ளன. இப்பொழுது, இன்று காலையில் இங்குள்ள இந்த சபையோர், இது நல்ல, ஜனங்களால் நிறைந்துள்ள நெருக்கமான சபை. ... (அறைகள் ஜனங்களால் நிறைந்து நிரம்பி வழிகின்றன). ஆனால் இந்த .... இது ஒரு... (இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கப் போகிறோம் என்று அறிவிக்காமலேயே இந்த ஜனங்கள் வந்துள்ளனர்). கவனியுங்கள், இங்குள்ள ஒவ்வொரு நபரும் பரிசுத்த ஆவியுடன் பரிபூரணமாக இசைந்து, நீங்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, பரிசுத்த ஆவியுடன் இசைவாக இணைந்திருப்பீர்களானால், இந்த அடையாளங்கள் எல்லா நேரங்களிலும் உங்கள் மத்தியில் பெருகிக் கொண்டேயிருக்கும். அது சதாசென்று கொண்டேயிருக்கும். ஆனால் குழப்பம் இருக்கும் போது, நாம் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில் கருத்து வேற்றுமை இருக்குமானால், பரிசுத்த ஆவியால் அசைவாட முடியாது. பாருங்கள்? அது ஜனங்களின் மூலமாய் இயங்க முடியாது. பாருங்கள்? 32நான் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசினீர்களா? என்று கேட்டால், ”ஆம்“ “நல்லது, நீ அதை பெற்றுக் கொண்டிருக்கிறாய்”. “நீ அந்நிய பாஷையில் பேசினாயா?” “ ”இல்லை. “அப்படியானால் நீ அதை பெற்றுக் கொள்ளவில்லை”. இப்பொழுது நான் என்னை ஒரு நியாயாதிபதியாக்கிக் கொள்கிறேன். தேவனே இந்த காரியங்களுக்கு நியாயாதிபதியாயிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று உரைத்தார். பாருங்கள்? விசுவாசிக்கிற குழுக்களின் மூலமாக பரிசுத்த ஆவியின் முழு சுபாவமும் பாய்ந்தோடுகிறது. அவர்கள் அன்பினால் நிறைந்தவர்களாய் உள்ளனர். பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. அவர்கள் தங்களுக்கு அந்நிய பாஷைகள் உண்டாகும் தருணத்தில் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். அதற்கு அவசியம் உள்ள போது அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். ஒரு தீர்க்கதரிசனம் உண்டாகுமானால், அதை உரைக்கின்றனர். ஓ. அது ஒவ்வொரு முறையும் மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது. 33இன்று காலையில் நேர்முகப் பேட்டிக்காக உள்ளே வந்த அந்த பதினைந்து இருபது பேர்கள் முற்றிலும் அந்நியர்கள். அவர்களைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு வார்த்தையும் தவறாகப் போகவில்லை. பரிசுத்த ஆவியானவர் அங்கே தோண்டியெடுத்து. அவைகளை அறிந்து கொண்டு வெளியே கொண்டு வந்து, அவர்களிடம் கூறினார். பாருங்கள், பாருங்கள்? அங்கு ஒரு பிழையும் இருக்கவில்லை. இது என்ன, அது என்னவென்று அவர்களிடம் கூறி, இதைக் குறித்து அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் மென்றும் உரைத்தார் - அவர்கள் செய்தது என்னவென்றும், அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றும். பாருங்கள்? அது வெறும்... அது அதை ஒழுங்கில் கொண்டு வந்தது. இப்பொழுது, அவர்கள் அதன்படி செயல்பட வேண்டும். 34அன்றொரு நாள் இரவு நான் ஒரு தம்பதிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். கூட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு வீட்டுக்கு நான் சென்றிருந்தேன், இல்லை, நாங்கள் மேசையைக் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென்று பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியில் இறங்கினார். அப்பொழுது நான் அங்கிருந்த ஒருவரிடம், “நான் ஒரு குறிப்பிட்ட மனிதனைக் காண்கிறேன், அவர் சில காரியங்களைக் குறித்து மனதில் குழப்பமுற்றிருக்கிறார். அது இங்கேயே உள்ளது. நீர் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர் என்று எனக்குத் தெரியும்' என்றுசொல்லிவிட்டு, நான் சுற்றி வளைத்து, அந்த மனிதனின் மனதில் இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் அவரிடம் பதில் சொன்னேன். அவரைத் தவிர வேறு யாருக்குமே நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று தெரியவில்லை. பாருங்கள்? ஆனால் அவர் கிரகித்துக் கொண்டார். அது என்னவென்று அவர் அறிந்து கொண்டார். பார்த்தீர்களா? அது அவருக்கு என்னவாயிருந்தது? அவருடைய மனதில் என்ன இருந்தது என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்று அவருக்குக் காண்பித்து, அவருக்கு உறுதிப்படுத்தினது. பார்த்தீர்களா? அதை நான் அங்கிருந்து மற்றவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நான் கூறுவதை இப்பொழுது அந்த மனிதன் இங்கு கேட்டுக் கொண் டிருக்கிறார். அது உண்மை . அது எப்படியென்பதை பார்த்தீர்களா? அது ஒரு உறுதிப்பாடு. 35இப்பொழுது. முழு சபையும் இப்படி இசைவாய் செயல்பட்டால், அப்பொழுது நமது மத்தியில் நாம் பிசாசுகளைத் துரத்துவோம், சர்ப்பங்களை எடுப்போம், சாவுக்கேதுவானவைகளைக் குடிப்போம், எல்லாவிதமான காரியங்களும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் அதை தனிப்பட்ட நபர்களின் மேல் நீங்கள் கட்டாயப்படுத்த முயன்றால், அப்பொழுது நீங்கள் உங்களை அது மறுபடியும் பெந்தெகொஸ்தேயாகி விடுகின்றது. அப்பொழுது உங்களுக்கு கிடைப்பது பாபிலோன் குழப்பம். உங்களால் அதை நியாயந்தீர்க்க முடியாது. பாருங்கள்? நமது இருதயங்கள் களிப்பினால், மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, பறவைகள் பாடுகின்றன, எல்லாமே அருமையாக இருக்கும், என்னே , தேவனுடைய ஆவியினால் நிறைந்திருக்கும். நாம் இயேசுவில் மிகவும் அன்புகூர்ந்து, இரவு முழுவதும் ஜெபிக்க விரும்புவோம். இப்பொழுது, இந்த கூட்டத்தை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, என்னையும் உங்கள் முன்னிலையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இன்று காலையில் நான், இக்கூட்டத்தில் யாருக்கெல்லாம் பரிசுத்த ஆவி உள்ளதென்று கேட்டால், ஒருக்கால் உங்களில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று கரங்களை உயர்த்தக்கூடும். அதன் பிறகு நான் உங்களுக்கு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதற்கான வேத அத்தாட்சியை கொடுத்தால் - ஒரே ஒரு வேத அத்தாட்சி - ஒன்றிரண்டு கைகளும் உயர்த்தப்படுமாஎன்பது எனக்கு சந்தேகம் தான். பாருங்கள், பாருங்கள்? அந்த விதமான ஓரிடத்தில் உங்களை கட்டி விடுதல். ஆனால் அவ்விதம் நீங்கள் செய்யும் போது, உங்கள் சபையோரை நீங்கள் புண்படுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் குழந்தை பருவத்தை விட்டு மனித பருவத்துக்கு கொண்டு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்? 36அன்றொரு நாள் ஒருவர் எழுதின கேள்வியைப் போல. அவர் இங்கிருந்தார், அவர் ஜூனியர் ஜாக்சனைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறினார். யாரோ ஒருவர் ஜூனியர் ஜாக்சனின் சபைக்குச் சென்றாராம். அவர்கள் அவரிடம், “நீர் செத்த பீன்ஸுக்கு செல்கிறீர்” என்றனராம், அப்படி ஏதோ ஒன்று. சகோ. ஜாக்சன்... ஏனெனில் சகோ. ஜாக்சன் சபையில், அவர்கள் சபையில் அந்நிய பாஷைகளில் பேச அனுமதிக்கின்றனர். எங்கெல்லாம் அவர்கள் ஆவியை உணர்ந்து அந்நிய பாஷைகளில் பேச விரும்புகிறார்களோ, அவர்கள் முன் சென்று அதை செய்கின்றனர். நல்லது, அது சகோ. ஜாக்சனின் சபை. அதனால் பரவாயில்லை. அதற்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. சகோ. ஜாக்சன் என் சிறந்த நண்பர்களில் ஒருவர்; அவர் உண்மையான தேவபக்தியுள்ள மனிதன். அவர் தேவனுடைய ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறார், நாங்கள் சகோதரர். இப்பொழுது, அவர் என் 'செர்ரி பையை புசிக்க வேண்டியதில்லை (பாருங்கள்?), ஆனால் நாங்கள் இருவருமே பையை தின்கிறோம். நாங்கள் இருவரும். இச்செய்தியை முற்றிலுமாக விசுவாசிக்கிறோம். அது சபையின் ஒழுங்கு. நான், “என் சபை ஒன்றாக வர முயல வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றேன். நான் சொன்னேன்... இங்கு நாம் அந்நிய பாஷையில் பேசுவது போன்றவை, நான் சொன்னேன்... ஒருவர் என்னிடம் “சகோ. பிரான்ஹாமே, இதெல்லாம் உண்மையானது தானா?” என்று கேட்டார். 37“நான் நியாயாதிபதி அல்ல' என்று பதிலளித்தேன், நான் அவரிடம், ”நான் உங்களிடம் ஒன்று சொல்லுகிறேன், இதை நாம் ஓரிடத்துக்கு கொண்டு வருவோம். சிறிது காலம் நாம் இவ்விதமே தொடர்ந்து, இதை ஓரிடத்துக்குக் கொண்டு வந்து அதற்கு வார்த்தையை அளிப்போம். அதன் பிறகு அதை கவனித்து வருவோம். அது பரிசுத்த ஆவியாக இருந்தால், அது வார்த்தையுடன் ஒத்துப் போகும்; இல்லையென்றால், அது ஒத்துப் போகாது“ என்றேன். பாருங்கள்? அந்த ஒரு விதத்தில் மட்டுமே அதுஎன்னவென்று கூற முடியும்; அப்பொழுது அது தன்னை தானே நியாயந்தீர்த்துக் கொள்ளும். பார்த்தீர்களா? நல்லது, அது பரிசுத்த ஆவியாக இல்லாமல் போனால், அது பறந்து சென்று விடும், அது போய்விடும். பாருங்கள்? ஆனால் அது பரிசுத்த ஆவியாக இருக்குமானால், அது சாந்தமாக வரிசையை சரியாகப் பின் தொடரும், ஏனெனில் அதுதான் அது; அது பரிசுத்த ஆவி தன் சொந்த ஒழுங்கில் செல்வதாகும். 38இப்பொழுது, அந்நிய பாஷைகள் பேசுவது போன்ற விஷயத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷை பேச வேண்டுமென்று விரும்புகிறேன். நான் நிச்சயம் விரும்புகிறேன். அநேக சமயங்களில், நல்ல கிறிஸ்தவர்கள்.... பாருங்கள், அது அந்த திட்டத்தில் இருந்தது என்று உங்களிடம் கூறுகிறேன்... நான் ஒருவரைக் கண்டேன் - திட்டம் 'அல்ல, என்னை மன்னிக்கவும், இன்று காலை நடந்த பேட்டியில், நபர் ஒருவர் (அவர்கள் இப்பொழுதும் இந்த கட்டிடத்தில் இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்), அவர்கள். அந்நிய பாஷைகள் பேசும் விஷயத்தில்... அந்த நபர் உத்தமமானவர், உண்மையானவர், அவர்கள் சரியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி அந்நிய பாஷை பேசுவதல்ல என்று நான் கூறினதை அவர்கள் கேட்டனர் - அதுவல்ல அத்தாட்சி - அந்த நபரிடம் நான், அந்நிய பாஷை பேசவோ அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கவோ தேவனிடம் கேட்கும்படி ஆலோசனை கூறினேன், ஏனெனில் அது அவர்களுடைய சுபாவம். 39முதலாவதாக, நான் அந்த நபரிடம் சென்று அவர் பிறந்த இடத்தையும், அவர் எந்த அடையாளத்தின் கீழ் பிறந்தார் என்றும் அறிந்து கொண்டேன். அவருடைய பிறப்பு என்னவென்று கூற முடிந்தது. அவர்களுடைய இயற்கையான சுபாவம் எதுவோ, அது அவர்களை ஒரு குறிப்பிட்ட வழியில் அமைக்கிறது. அவர்கள் மறுபடியும் பிறந்தவுடனே, அவர்கள் இங்கு வேறொரு சுபாவத்தை அடைகின்றனர். அதன் பிறகு நீங்கள் அந்த சுபாவத்துக்குள் ஊடுருவிப் பார்ப்பீர்களானால், அதாவது உள்ளில், உள்ளேயிருக்கும் மனச்சாட்சியில்... வெளிப்புற மனச்சாட்சி உங்களை ஒரு வழியில் நடத்துகிறது; அது உங்கள் இயற்கை பிறப்பு. அப்பொழுது அவர்கள் ஏதோ ஒன்றை உண்டாக்கி, அது அவர்களுக்கு எதைஅளிக்கிறது? அது அவர்களை இரு வெவ்வேறு நிலையில் வைக்கிறது அப்பொழுது அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை அவர்கள், “கர்த்தர் என்னை இதை செய்யச் சொல்லுகிறார்' என்பார்கள். ஆனால் உள்ளேயிருப்பதோ, “ஓ, அது வேத வாக்கியங்களுடன் வரிசைப்படுகிறது என்று எனக்குத் தெரியும் என்கிறது அவர்கள் அதை செய்யத் தொடங்குவார்கள், முதலாவதாக என்ன தெரியுமா, வெளிப்புறத்திலுள்ள சாத்தான் அதில் எல்லா விதமான குறைகளையும் அவர்களுக்குக் காண்பிப்பான். அப்பொழுது அவர்கள் ”நல்லது, நான் நினைக்கிறேன், நான்...' என்பார்கள். பாருங்கள் பாருங்கள்? அவர்கள் சாத்தானுக்கு செவி கொடுக்கின்றனர் பாருங்கள்? நீங்கள் உள்ளேயிருக்கிற அந்த ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உள்ளேயிருப்பது தான் வேதம் பிரகாரமானது. சாத்தானை எங்கேயும் நிற்க விடாதீர்கள். அங்கு நின்று கொண்டு உங்களை தவிடுபொடியாக்கிக் கொண்டிருப்பதே அவனுடைய வேலை. அவனுக்குச் செவிகொடுக்காதீர்கள். அந்த நபரிடம் நான் கூறினேன். அவர், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட நிச்சயத்தை மட்டும் உடையவனாயிருந்தால்!” என்று கூறினார். பாருங்கள்? மிகவும் நன்றாக உடுத்தியவர், பரிசுத்த ஆவியுடன் உத்தமமாயுள்ளவர். “பிதாவே, நான் ஏதாவது ஒன்றின் மேல் நிற்க இதை எனக்களியும்” என்று கூறுவது அந்த நபருக்கு நலமாயிருக்கும். 40இப்பொழுது, நான் அவ்விதம் போதித்தால், அந்த நபருக்கு இருப்பதை பெறாமலே, ஜனங்கள் கையை நீட்டி அதை பிடித்துக் கொண்டிருப்பார்கள். பாருங்கள்? பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகள் பேசுவது உண்மைதான், ஆனால் அது அந்நிய பாஷையில் பேசுவதற்கு நீங்கள் அதை முதலில் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, நீங்கள் கையை நீட்டி அந்நிய பாஷையில் பேசும் வரத்தை மட்டும் பிடித்துக் கொண்டால்... இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அது உண்மையான வரமாயிருக்கலாம்; அது உங்களுக்குள் பரிசுத்த ஆவி அந்நிய பாஷையில் பேசுவதாயிருக்கலாம். இருப்பினும் நீங்கள் இழக்கப்பட்டு நரகத்துக்கு போகக் கூடும் வேதம் அவ்வாறு உரைக்கிறது. அதற்கான வேதவசனம் உங்களுக்கு வேண்டுமாஉங்கள் கைகளையுயர்த்துங்கள். “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் (அது சரியா? அர்த்தம் உரைக்கக் கூடியதும் அர்த்தம் உரைக்கக் கூடாததுமாகிய இரண்டுமே, உண்மையான பரிசுத்த ஆவி), நான் ஒன்றுமில்லை”. பாருங்கள், மற்றது அதனுடன் இணைந்திருந்தாலொழிய . இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் (பாருங்கள்?), எனவே இது இல்லாமல் அதை நாம் வேண்டாம். இதை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது அது அதை தொடரும். 41இப்பொழுது, மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது. சூரியன் தீயோர் மேலும் நல்லோர் மேலும் பிரகாசிக்கிறது. பயிரை முதிர்வடையச் செய்ய மழை பெய்கிறது; ஆனால் அதே மழை களையையும் முதிர்வடையச் செய்கிறது. பரிசுத்த ஆவி ஒரு கூட்டம் ஜனங்களின் மேல் விழுந்து, அந்நிய பாஷை பேசி, அது உண்மையாயிருக்கக் கூடும், அது ஜனங்களின் மத்தியில் படர்ந்து, அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும் படி செய்து, அது உண்மையாயிருக்கக் கூடும். அது முற்றிலும் உண்மை . நீங்கள் ஒரு மந்திரவாதியிடம் அல்லது பிசாசு கருவியாக உபயோகித்து அவன் மூலம் பேசும் ஒருவனிடம் (medium) செல்வீர்களானால், அவர்கள் முற்றிலும் உண்மையான ஒன்றைக் கூற முடியும். எந்தோரின் மந்திரவாதியைப் பாருங்கள். சவுல்... அது முற்றிலும் உண்மையாயிருக்கக் கூடும்; இருப்பினும் அது வல்ல அது. அவர்கள் மந்திரவாதிகள். அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசுகின்றனர். பிசாசுகள் அந்நிய பாஷைகள் பேசி, அந்நிய பாஷைகளில் எழுதுவதை நான் கண்டிருக்கிறேன். அவையெல்லாம் ஒன்றுமற்றவை. ஆனால் உண்மையான காரியம் அந்த வார்த்தை மட்டுமே. அந்த வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்! எனவே, நீங்கள் வார்த்தை இல்லாமலே இவைகளைச் செய்யக்கூடும். ஆனால் நீங்கள் வார்த்தையைப் பெற்றுக் கொண்டு, அது இதை செய்யும்போது, அது அப்படியே நிறைவேறுவதைக் கவனியுங்கள், அதுவே சரியான காரியம். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் சரியாக வரிசையில் இருக்கிறீர்கள். 42ஆம், பரிசுத்த ஆவியானவர், அவருடைய தெய்வீக ஞானம் நியமித்துள்ளபடியே, இந்த ஜனங்களை உபயோகிக்கிறார். ஆனால் முதலாவது காரியம்... இப்பொழுது என்ன? இங்கு ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு சிறு பிரச்சினையை அளிக்க விரும்புகிறேன். நான், “எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே கைகளை உயர்த்துவீர்கள். நான், “சரி, நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்று பார்க்கப் போகிறேன்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தவர்கள் நகரத்தில் நடக்கும் அருவருப்புகளினிமித்தம் இரவும் பகலும் பெருமூச்சு விட்டு கதறி அழுதனர் என்று வேதம் உரைக்கிறது. இப்பொழுது, எத்தனை கரங்கள் உயர்த்தப்படும்? உங்களில் எத்தனை பேர் தேவனுடைய வல்லமையினால் நிறைந்து மகிழ்ச்சியினால் பொங்கி, இரவில் இளைப்பாற முடியாமல், இழக்கப்பட்ட ஜனங்களுக்காக பரிதபித்து, அருவருப்புகளின் நிமித்தம் இரவும் பகலும் கதறி அழுகிறீர்கள்? நீங்கள் செய்வதில்லை... பாருங்கள்? அப்படிப்பட்டவர் நகரத்தில் யார் இருக்கின்றனர்? அப்படிப்பட்டவர் எத்தனை பேர் சபையில் இருக்கின்றனர்?' அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி என்று வேதம் உரைக்கிறது. 43அவர் அடையாளம் போடுகிற தூதர்களிடம் (எசேக்கியல் 9ம் அதிகாரம், அது சரி), “நீ நகரம் எங்கும் உருவப் போய் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு. மீதியானவர்களை சங்காரத் தூதன் சங்கரித்து கொன்று போடட்டும்” என்றார். அவர்கள் எத்தனை அங்கத்தினர்களாயிருந்தாலும், அவர்கள் என்ன செய்திருந்த போதிலும், அவர் “போடு...' என்றார். அப்பொழுது கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்து வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு புருஷன் (வெள்ளை பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயுள்ளது) புறப்பட்டுப் போய் நகரத்திற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற எல்லார் மேலும் அடையாளம் போட்டான். இப்பொழுது, நீங்கள் கூறலாம். அவர் மேலும் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். ”முதியோரையும், வாலிபரையும் கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடுங்கள்“ என்றார். குழந்தைகளையும் கூடவா? ஆம்! . யோசுவா கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது, அவன், “நீங்கள் யாரையும் உயிரோடு விடாதீர்கள். அது சிறுகுழந்தையாயிருந்தாலும் - சிறு அமலேக்கியன் அல்லது எமோரியனாயிருந்தாலும் - அதைக் கொன்று போடுங்கள். அவன் வளர்ந்து பெரிய அமலேக்கியன் ஆவான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; அவன் பாளயத்தை அசுசிப்படுத்துவான்” என்றான். அது போன்று தேவனுடைய வசனத்துடன் இணங்காத சிறு காரியங்கள் வரும் போது, அதை ஒழித்து விடுங்கள். அது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்ததாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை நீங்கள், “நல்லது, அவர்கள் நல்லவர்கள்” எனலாம். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் அந்த வார்த்தைக்கு முரணாயிருப்பார்களானால் அதை உங்களை விட்டு அகற்றி விடுங்கள். அது வளருகின்ற சிறு அமலேக்கியன். காண்பதற்கு அழகாகவும் களங்கமில்லாதவனைப் போவும் இருக்கலாம்; அது சரியாயுள்ளது போல் காணப்படலாம். ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள். அதிலிருந்து விலகியிருங்கள். “நல்லது, சகோ. பிரான்ஹாமே, அங்கு நான் ஏன் போகிறேன் என்றால்... நல்லது, நான் இதை மட்டும் ஞாபகம் கொள்ளுங்கள், எந்த அமலேக்கியனானாலும், அது வார்த்தையை மறுதலிக்கிற எதுவாயிருந்தாலும், அதை விட்டு விலகியிருங்கள்; அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ளவே வேண்டாம்! அது உண்மையென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது நிச்சயமாக உண்மையே. பாருங்கள்? அதை விட்டு விலகியிருங்கள்! 44நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்கள். அதை எங்கு காண்கிறீர்கள்? அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு: உண்மையில் பாவத்துக்காக பாரப்பட்ட ஒருவரை மட்டுமே நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்... ஒரு மணி நேரமாவது ஜெபிப்பவர். ஆனால் வேதம் அதை உரைத்துள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா... நகரத்தில் செய்யப் படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் மட்டும் அடையாளம் போடு என்று? அதை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. அது ஜனங்களை அடையாளமிடுவதற்காக புறப்பட்டு வருகிற பரிசுத்த ஆவி. அவர் சங்காரத் தூதனிடம், “நீ புறப்பட்டுப் போய், நெற்றிகளில் அடையாளமில்லாத எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடு” என்றார்.தேவனுடைய அடையாளம் பரிசுத்த ஆவி; அதுதான் தேவனுடைய முத்திரை. இப்பொழுது. அவ்வளவு அக்கறை கொண்டுள்ள ஜனங்கள் இன்று எங்கே? மேலும் கீழும் குதித்து சபையில் அழும் மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். கூச்சலிட்டு கட்டிடம் முழுவதும் ஓடுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். தீர்க்கதரிசனம் உரைத்து அது நிறைவேறுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களையும், கட்டிடத்தில் மேலும் கீழுமாக ஓடுகிறவர்களையும், தீர்க்கதரிசனம் உரைத்து, அதற்கு அர்த்தம் உரைத்து, அது நிறைவேறுகின்ற மக்களையும் என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற நபர் எங்கே? அந்த பாரப்பட்ட ஆத்துமா எங்கே? நீங்கள் அதன் பேரில் புதிதாக தொடங்கலாம். நான் கூறுவது விளங்குகிறதா? 45என்னால் முடிந்த அளவுக்கு ஜனங்களாகிய உங்களுக்கு நான் எடுத்துக்கூறி, ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவது போல் உங்களை நடத்தி வந்திருக்கிறேன். நீங்கள் என் பிள்ளைகள்; நான் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தின் மூலம் உங்களை நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். பாருங்கள்? நீங்கள் முற்றிலும் முதிர்ந்த பிள்ளைகளாக ஆக வேண்டுமென்று விரும்புகிறேன். பவுல் கூறின வண்ணமாக, அந்த நாளில் உங்களை நான் கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்க விரும்புகிறேன். உங்கள் இருதயம் “ஆமென்” என்று சொல்லி ஆமோதிக்காதது எதுவும் - அந்த வார்த்தையில் கிடையாது. பாவம் உங்கள் பேரில்... நாம் தவறான காரியங்களைச் செய்கிறோம் என்பது உண்மையே. ஆனால் அது உங்களைக் குற்றப்படுத்தினவுடனே முதலாவதாக நீங்கள் செய்வது, “பிதாவே, என்னை மன்னியும்” என்று ஜெபிப்பதே. 46இதை நான் கூறப் போகிறேன். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு நபரை நான் உற்று நோக்கினேன். அன்றொரு நாள் அவர் ஒரு அருமையான வாலிபனைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன. இன்னும்ஒன்றைப் பெற நான் பிற்பகல் வரைக்கும் காத்திருக்கலாம் என்று எண்ணினேன். கென்டக்கி நாட்டில் நீங்கள் ஆறு அணில்களை மட்டுமே சுட்டு எடுத்துக் கொள்ளலாம்; அதுதான் அங்குள்ள வரம்பு. எனவே இந்த குறிப்பிட்ட நபர் என்னிடம், “எனக்கு ஒன்பது அணில்கள் கிடைத்தன” என்றான். கிறிஸ்தவ வாலிபன், நல்ல பையன். நான் அவனிடம், “நீ செய்தது தவறு” என்றேன். அவன், “நல்லது...” என்றான். நான், “இன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன. ஒன்றை நான் பிற்பகல் வரைக்கும் விட்டு வைத்தேன். அந்த ஒரு அணிலை நான் சுட்டு வீழ்த்திவிட்டு, மரத்தின் மேல் பார்த்த போது, அங்கு ஐந்து அல்லது ஆறு அணில்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதை என்னால் எண்ண முடிந்தது- அவைகளை நான் கண்ணால் பார்த்தேன். ஆனால் அவைகளை விட்டு விட்டு நான் நடந்து சென்று விட்டேன். அண்மையில் இங்கு நான் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏறக்குறைய பதினைந்து அல்லது இருபது அணில்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் வரம்பு வரைக்கும் பெற்றுக் கொண்டு, மீதியானவைகளை விட்டு விட்டு, அங்கிருந்து நடந்து வந்து விட்டேன். இந்த நாட்டுக்கு நான் வந்து, பையன்களாகிய உங்களிடம் நான் பிரசிங்கிக்கும் போது, ஜனங்களாகிய நீங்கள் அது உண்மையென்று நம்புகிறீர்கள். நான் வாழும் வாழ்க்கை உங்களுக்கு உதாரணமாயிருக்க வேண்டும்” என்றேன். கிறிஸ்தவ மார்க்கம் என்பது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அது ஒரு உதாரணம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நான் அந்த பையனிடம், “சட்டம் என்ன கூறுகிறதென்றால் .... இயேசு, 'இராயனுடையதை இராயனுக்கு செலுத்து' என்றார். நீ வேகம் சட்டத்தை மீறினால் என்ன செய்கிறாய்? நீ தவறு செய்கிறாய்; நீ பாவம் செய்கிறாய். இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்து” என்றேன். 80, நீங்கள், “நல்லது, அந்த சட்டம் தவறு” எனலாம். அது தவறாயிருந்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இயேசுவின் கட்டளையை மீறுவது தவறாகும். நீங்கள் இராயனுடையதைஇராயனுக்கு செலுத்தாமல் போனால், நீங்கள் செய்யக் கூடாது என்று இயேசு உங்களிடம் சொன்னவைகளை நீங்கள் செய்கின்றவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது பாவத்தின் கட்டளையை மீறினவர்களாயிருப்பீர்கள். அது சரியா? நாம் எல்லோருமே குற்றவாளிகளாயிருக்கிறோம்; அதை நாம் செய்கிறோம். ஆனால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று காணும் போது, அதை நிறுத்தி விடுங்கள். ஜனங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனங்கள் சபைக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் அவர்கள் உங்களை எடை போட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 47எனவே, கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்; அதுதான் உண்மையான ... கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் ஒன்றே. பரிசுத்த ஆவி, கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள். பரிசுத்த ஆவி என்பது அந்த அபிஷேகமே, நீங்கள் தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து தான் உங்களை அபிஷேகிக்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அப்பொழுது நீங்கள் சரியான காரியத்தைப் பெறுகிறீர்கள். அப்பொழுது அவர் உங்களை உபயோகிக்க விரும்பும் எந்த விதத்திலும் உபயோகிக்க முடியும். அவர் உங்களை உபயோகிக்க விரும்புகிறார். ஏனெனில் நீங்கள் அந்த சரீரத்தில் இருந்து கொண்டு அந்த வரங்களில் எந்த ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடிந்தவர்களாயிருக்கின்றீர்கள். பாருங்கள், சரீரத்தின் வெளிப்புறத்தில் இருந்து கொண்டு இந்த வரங்களில் ஒன்றை பெற்றுக் கொண்டால், அது உங்களுக்கு எந்த நன்மையும் பயக்காது. “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. நான் விசுவாசமுள்ளவனாயிருந்து, தேவனுடைய சகல இரகசியங்களையும் அறிந்திருந்தாலும், என் சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், நான் ஒன்றுமில்லை. பாருங்கள், இப்படிப்பட்ட காரியங்களின் மேல் சார்ந்திராதிருங்கள். பரிசுத்த ஆவி ஒரு நபர்; அது தேவன், உங்களுக்குள் இருக்கும் தேவன், ஒருநபர், தேவன், உங்கள் சரீரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவர். நீங்கள் மாறுகின்றீர்கள். நீங்கள் புது சிருஷ்டியாகின்றீர்கள். ஏதாகிலும் ஒரு சிறு தவறு இருந்தாலும், அவர் உங்களிடம் அது தவறென்று கூறுவார், அப்பொழுது அதை விட்டு விலகுங்கள். அதைச் செய்யாதீர்கள். ”பிதாவே, அதைச் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கவில்லை, என்னை மன்னியும்“ பாருங்கள்? அது தான் பரிசுத்த ஆவி. 48நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசினாலும், எவ்வளவாக குதித்தாலும், எவ்வளவாக ஓடினாலும், எவ்வளவாக இதை, அதை; மற்றதை செய்தாலும் (பாருங்கள்?), நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் செய்யும் தவறான காரியங்களினிமித்தம் உங்களை கண்டித்துணர்த்தும் பரிசுத்த ஆவி அங்கு இல்லாமல் போனால், அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை. இப்பொழுது, ஆகையால்தான் இங்குள்ள இந்த நபர் சரியாயிருக்கிறார். பரிசுத்த ஆவி அதை செய்யட்டும். ஆனால் இப்பொழுது (பாருங்கள்?), இப்பொழுது., இது நேரிட காரணமாயிருப்பது... இதை நான் அன்போடும், அன்பினால் தெளிக்கப்பட்டும், வார்த்தையில் அபிஷேகம் பண்ணப்பட்டும் கூறுகிறேன். பாருங்கள்? உண்மையான பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்குமானால், அதை சந்தேகிக்க மாட்டீர்கள். அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அது உங்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ள தனிப்பட்ட விவகாரம். பாருங்கள்? ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். வேறெதாகிலும் இருந்தாலும் இல்லாமற் போனாலும், நீங்களே அந்த மாறுதல். பாருங்கள்? நீங்கள்தான் அந்த மாறுதலை உங்களில் உண்டாக்கிக் கொண்டீர்கள், அதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷை பேசினாலும், நீங்கள் குதித்தாலும், கூச்சலிட்டாலும், என்ன செய்தாலும், தேவன் உங்களில் வாசம் செய்கிறார் என்றும், நீங்கள் உங்கள் சொந்த சிந்தையில் நடக்கவில்லை என்றும், கிறிஸ்துவின் சிந்தையே அந்த வார்த்தையுடன் உங்களை நடத்துகிறதென்றும், அவ்விதம் தான் அது முற்றிலுமாக நடக்கிறதென்றும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். 49இப்பொழுது! ஆனால் நான்... ஜனங்கள், “ நல்லது, சகோ. பிரான்ஹாமே, அப்படியானால் நாங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்பதில் உமக்கு நம்பிக்கையில்லையா?” என்று கேட்கலாம். பாருங்கள்? அப்படியானால் நான்! ப்பொழுது கூறினதை நீங்கள் அப்படியே திரித்து விட்டீர்கள், நீங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். ஜனங்களாகிய உங்களில் சிலர். பாருங்கள்? நான் இதை சொல்கிறேன், நீங்கள் அவ்விதம் புரிந்து கொள்கிறீர்கள், கூடாரத்தை சுற்றிலும் ஆயிரத்தைந்நூறு மைல் என்னும் விஷயத்தைப்போல. உங்களுக்குப் புரியவில்லை என்றால், என்னைக் கேளுங்கள். பாருங்கள்? உங்களுக்குப் புரியவில்லை என்றால், எனக்கு கடிதம் எழுதிக் கேளுங்கள். நான் இங்கு என்ன சொல்கிறேனோ, அதை அப்படியே சொல்லுங்கள். பாருங்கள்? நான்... நீங்கள்.... பவுல் சொன்னது போல, “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” (1 கொரி. 11:1). பாருங்கள்? நான் தவறென்று நீங்கள் கண்டால், என்னிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வளவுதான். ஏனெனில் நான் தவறு செய்கின்ற மனிதனாயிருப்பேன். பாருங்கள்? 50தயவு கூர்ந்து விளங்குங்கள். சகோ.பிரான்ஹாம் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்றும், அவரால் சிருஷ்டிக்க முடியும் என்றும், இயேசு காண்பதற்கு சகோ.பிரான்ஹாமைப் போலவே இருக்க வகையுண்டு என்றும் ஜனங்கள் கூறுகின்றனர். இப்பொழுது, நான் ... இந்த நபர் இதைக் கேட்டிருக்கிறார். அது யாராயிருப்பினும், அது யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்கள் சகோதரனே, பாருங்கள்? இயேசு உங்கள் இரட்சகர். நான் உங்கள் இரட்சகராக இருக்க முடியாது, ஏனெனில் அவர் உங்களை ஏற்கனவே இரட்சித்து விட்டார். இப்பொழுது. அங்கு நீங்கள் உண்மைக்கு மிக அருகில் இருக்கிறீர்கள். ஆயினும் நீங்கள் உண்மைக்கு மிகத் தொலைவில் இருக்கிறீர்கள் - அதாவது, இந்த நபரிடம் இவ்விதம் கூறிய அந்த நபர். இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்து போல் எனக்கு தோன்றுகிறது. மிகவும் அழகான கையெழுத்து. இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்து என்று என்னால் கூற முடியும். சகோ. காப்ஸ், இது ஸ்திரியின் கையெழுத்து என்று நீங்களும் நினைக்கிறீர்கள் அல்லவா? அழகான கையெழுத்து. அது யாரென்று எனக்குத் தெரியாது. பாருங்கள். 51இப்பொழுது, “சகோ. பிரான்ஹாமே, காண்பதற்கு இயேசு உங்களைப் போல் இருக்க வகையுண்டா, அல்லது நீங்கள் இயேசுவா? அப்படி ஏதோ ஒன்று ஒரு விதத்தில் அது முற்றிலும் உண்மையே. மற்றொரு விதத்தில் அது அந்திக்கிறிஸ்து. அது உண்மைக்கும் தவறுக்கும் உள்ள வித்தியாசம். என்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நபராகச் செய்வது அந்திக் கிறிஸ்து (பாருங்கள்?) , ஏனெனில் காத்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் அந்த நபர் உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து கொண்டு, மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மறுபடியும் வருவார். ஆனால் அவருக்குள் இருந்த அவருடைய ஜீவன் என் மேலும், அவரைப் பெற்றுள்ள உங்கள் மேலும் தங்கியிருக்கும் விஷயத்தில், அது முற்றிலும் உண்மை; அப்பொழுது நாங்கள் கிறிஸ்துவாகி விடுகின்றீர்கள். குட்டி மேசியாக்களின் பேரில் நான் அளித்த செய்தி உங்களுக்கு ஞாபகமுள்ளதா? பாருங்கள்? நீங்கள்... மேசியா என்னும் சொல் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்னும் அர்த்தம் கொண்டது. இப்பொழுது, நீங்கள், உங்களுக்கு பரிசுத்த ஆவி இருக்குமானால், நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவராகி விடுகின்றீர்கள். பாருங்கள்? அங்கு எல்லாவிதமான அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் உள்ளனர். 52இப்பொழுது கவனியுங்கள், அது வேதப்பிரகாரமாக அபிஷேகம் பண்ணப்பட்டவராக இருந்தால். அவர்களில் அநேகர் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்... பாருங்கள்? இது முழுவதுமே ஒரு பெரிய கதம்பமாக இருப்பதால்... எல்லாவிதமாகவும் கலந்துள்ள ஒன்றாக உள்ளது. சாத்தான் தன் சூழ்ச்சிகள் அனைத்தோடும் வந்து அதை முற்றிலும் பாவனை செய்து விடுகிறான். நீங்கள் முழுவதும் நிச்சயமாயிருக்க ஒரே ஒருவழி; வார்த்தையை வார்த்தையின் மூலம் ஒப்பிட்டுப் பாருங்கள், ஒவ்வொரு வார்த்தையாக ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த ஒரு வழியில்தான் உங்களால் முடியும். வில்லியம் பிரான்ஹாம் என்னும் நபராகிய நானோ, அல்லது வேறெந்த மனிதனோ ஸ்திரீயோ நமது இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருப்பதென்பது மிகப் பெரிய தவறாகும். ஆனால் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவருடைய ஜீவன் உங்களுக்குள் வருவதென்பது ... 53அது மிகவும் அழகாக எலியாவிலும் எலிசாவிலும் முன்னடையாளமாக காட்டப்பட்டுள்ளது. எலியா மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான், அந்த வயதான தீர்க்கதரிசியாகிய எலியா வீடு சென்றான். அவன் மிகவும் களைப்புற்றிருந்தான். அவனை வீடு கொண்டு செல்ல நதிக்கு அக்கரையில் அக்கினிக் குதிரைகளால் பூட்டப்பட்ட ஒரு இரதம் இருந்தது. அப்பொழுது நீங்கள் கவனித்தீர்களா, எலியாவும் எலிசாவும் நதியைக் கடந்த போது (தீர்க்கதரிசிகளின் புத்திரர். அங்கிருந்து கொண்டு அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர்); எலியா தன் சால்வையை எடுத்து நதியை அடித்தான். அவன் அவ்விதம் செய்தபோது அது பிரிந்தது; அவன் அதன் வழியாகக் கடந்து சென்றான். அவன் அந்த இளம் தீர்க்கதரிசியை நோக்கி, “என்னை எதற்காகப் பின்தொடருகிறாய்? உன்னுடைய வேண்டுதல் என்ன?” என்று கேட்டான். அதற்கு அவன், “உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு என் மேல் வரவேண்டும்” என்றான். அந்த மகத்தான தீர்க்கதரிசியின் இரட்டிப்பான பங்கு அவன் மேல் வர வேண்டுமா? எலியா, “நீ கடினமான ஒரு காரியத்தைக் கேட்டிருக்கிறாய்; ஆனால் நான் போகையில் என்னைக் காண்பாயானால், அது உன் மேல் வரும் என்றான். 54இப்பொழுது, அந்நாளிலே, அந்த தீர்க்கதரிசி வார்த்தையாயிருந்தான், ஏனெனில் அவன் உலகத்துக்கு வார்த்தையை வெளிப்படுத்துபவனாக இருந்தான். பாருங்கள்? அதைக் காட்டிலும் ஒரு பெரிய ஊழியம் வர வேண்டும் என்பதை அவன் அங்கு அறிந்திருந்தான். அதற்கு இதைக் காட்டிலும் ஒரு பெரிய காரியம் அவசியமாயிருந்தது. இயேசு இவ்வுலகில் இருந்தபோது, அவர் எலியாகவாக இருந்தார். நான் பிதாவினிடத்திற்குப் போகிற படியால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள். (யோவான் 14:12). இப்பொழுது, நீங்கள் அதை எவ்விதம் செய்யப் போகிறீர்கள்? அவரைக் கவனியுங்கள்! அவர் யார்? வார்த்தை ! பாருங்கள்? அவரைக் கவனியுங்கள்! 55இப்பொழுது, சிருஷ்டிப்பு போன்ற காரியத்துக்கு வரும் போது, அது உண்மை. இயேசு நேரடியாக எதையும் சிருஷ்டித்து உருவாக்கவில்லை. அவர் ஒரு பொருளை முதலில் எடுத்தார். அவர்தண்ணீரை முதலில் எடுத்து திராட்சரசம் உண்டாக்கினார். அவர் அப்பத்தை எடுத்து அதிக அப்பங்களை உண்டாக்கினார். அவர் மீன்களை எடுத்து அதிக மீன்களை உண்டாக்கினார். ஆனால் இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள் செய்யப்படுமென்று அவர் வாக்களித்தார். பாருங்கள்? பார்த்தீர்களா? இப்பொழுது ஏன்? அவர் இங்கிருந்ததைக் காட்டிலும் மிகவும் பொல்லப்பான நாளில் இது நடைபெறும். பாருங்கள்? அது இன்னும் அவரே, ஆனால் அவர் உங்கள் சரீரமாகிய கூடாரத்தை உபயோகிக்கிறார். பாருங்கள்? 'உங்களில் இருக்கும் இந்த நபர், அது உங்கள் பிறப்பு ... நீங்கள் ஜான் டோ; நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தீர்கள்; ஒரு குறிப்பிட்ட காரியத்தின் கீழ் நீங்கள் பிறந்தீர்கள், அது உங்களுடன் சம்பந்தப்பட் டுள்ளது. நிச்சயமாக சம்பந்தப்பட்டுள்ளது. 56எனக்குத் தெரியும் நான் முன்பு... அப்பா, “இந்த காலத்தில் நான் உருளைக் கிழங்குகளை நட முடியாது; ஏனெனில் சந்திரன் இப்பொழுது சரியாக இல்லை” என்று சொல்வது வழக்கம். “பில்லி, நீ உருளைக் கிழங்குகளை நடமுடியாது” என்பார். அதற்கு நான், “நான் உருளைக் கிழங்குகளை சந்திரனில் நடவில்லை, இங்குள்ள தரையில் தானே நடுகிறேன்” என்றேன். அவர், “சரி புத்திசாலியே, போய் செய்! நீ முட்டிக் கொண்டு உனக்கு தலையில் சில வீக்கங்கள் வந்தால் தான் பாடம் படிப்பாய்” என்றார். நான் உண்மையில் பாடம் படித்தேன். உங்களிடம் இதைக் கூறுகிறேன்: ஒரு பலகையை எடுத்து அமாவாசையின் போது வெளியிலுள்ள புல்லின் மேல் வைத்துப் பாருங்கள். அந்த புல் உடனே காய்ந்து போகும். பெளர்ணமியின் போது வைத்துப் பாருங்கள்? ஒரு வாரமாக அதை நீங்கள் வைத்திருந்தாலும் அது புல்லுக்கு ஒரு கெடுதியும் செய்யாது. 57சந்திரன் மாறுகையில், கடலைக் கவனியுங்கள். சந்திரன் மறையும் போது, பேரலையும் அதை தொடர்ந்து மறைந்து விடுகிறது. சந்திரன் பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள்தொலைவில் உள்ளது. அது மட்டுமல்ல, கென்டக்கி நாட்டில், உப்புத் தண்ணீர் கிடைக்கும் வரைக்கும் ஒரு இரும்புக் கம்பியை நிலத்தின் கீழ் அடியுங்கள். அந்த குழாயை கவனித்துக் கொண்டே வாருங்கள். சந்திரனின் ஈர்ப்பு சக்தி உள்ள போது அது எவ்வளவு ஆழம் உள்ளது என்பதை கவனியுங்கள். சந்திரன் மறையும் போது அது பூமிக்கடியில் எவ்வளவு கீழே போய் விடுகிறது என்பதை பாருங்கள். நிச்சயமாக! நீங்கள் பூமிக்கு மேலே வருகின்ற ஒன்றை நடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அமாவாசையின் போது, அதை நட்டால் அது முள்ளங்கி அல்லது 'டர்னிப் பை போல பூமிக்கு கீழே இறங்கி விடுவதை பாருங்கள். ஆனால் அதையே பெளர்ணமியின் போது நட்டால், அது நிலத்துக்கு மேலே படர்வதை கவனியுங்கள். நிச்சயமாக, அதற்கும் இதற்கும் சம்பந்தமுண்டு. 58ஆரோன் ஏன் தன் மார்க்கவசத்தில் அந்த கோத்திரப் பிதாக்களின் பிறப்பு கற்களை வைத்திருந்தான். அந்த தாய்மார் கூறினதை கவனியுங்கள். பிரசவ வேதனையிலிருந்த அந்த எபிரேயத் தாய்மார்கள் பிள்ளைகள் பிறக்கும்போது கூறினது. அவர்களுக்கு பெயரைச் சூட்டினது; அவர்களுடைய பிறப்பை அறிவித்தது; அது அவர்களுடைய சொந்த தேசத்தில் அவர்களை வைத்தது; அவர்களை நித்தியத்துக்கு அமைத்தது. இந்நாட்களில் ஒன்றில் நான் சிறிது காலம் இங்கு தங்க நேரிட்டால், அந்த பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நிச்சயமாக! பிறகு யாக்கோபைக் கவனியுங்கள். அவன் அங்கு மரணத் தருவாயில் இருந்த போது, அவன் கைகளை கோத்திரப் பிதாக்களின் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்த போது, அவர்கள் எங்கிருப்பார்கள் என்பதை சரியாக கூறினான். அது அவர்களுடைய பெயரின்படியும், அவர்களுடைய பிறப்பின்படியும் சரியாக அமைந்திருந்தது. நிச்சயமாக, அது உங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. 59இப்பொழுது, அது உங்கள் பிறப்பின் பாதை; அதற்கேற்றவாறு தான் மாம்சப் பிரகாரமான மனிதரும் ஸ்திரீகளுமாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது. அது வெளிப்புறமான புலன் அல்ல. வெளிப்புறத்தில் நீங்கள் பார்த்து, உணர்ந்து, முகர்ந்து. காதுகளினால் கேட்கிறீர்கள். ஆனால்உங்கள் உள்ளில் உள்ளதுதான் நிஜமான நீங்கள். இப்பொழுது, இங்குள்ள வெளிப்புறத்தில், சாத்தான் உங்களை சோதித்து, எல்லா வகைகளிலும் உங்களை கீழே விழத்தள்ளுகிறான்; ஆனால் உள்ளில் உள்ள இங்கேயோ, அவனை நீங்கள் அனுமத்திலாலொழிய அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் இங்கு உள்ளில் உங்களுக்கு விசுவாசம் உள்ளது. விசுவாசம் வெளிப்புற புலனின் மூலம் வருவதில்லை, அந்த வெளிப்புறப் புலன் அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கிறது. ஆனால் விசுவாசத்தில் அவ்விதம் சிந்தித்தல் எதுவுமில்லை. அதை நீங்கள் தேவனிடத்திலிருந்து பெற்றிருக்கிறீர்கள், அது அங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது எவ்வளவு தவறாகக் காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அது சரியென்று நீங்கள் அப்பொழுதும் அறிந்திருப்பீர்கள்; அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பது. பாருங்கள்? அதை எதுவுமே தொல்லைப்படுத்த முடியாது. அது நேராக சென்று கொண்டிருக்கிறது. கடினம் என்பது அதற்கு கிடையவே கிடையாது. அது அதன் வழியாக கடந்து சென்று விடுகிறது. ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. வார்த்தை என்பது பட்டயம், அது வெட்டுகிறது. அந்த பட்டயம் வெட்டி தன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் கொள்கிறது. பார்த்தீர்களா? அந்த வார்த்தையாகிய பட்டயத்தைப் பிடிக்க விசுவாசம் என்னும் கரம் தேவைப்படுகிறது. அந்த விசுவாசம் எப்படி இருக்க வேண்டுமென்றால்.... 60இப்பொழுது பாருங்கள், அந்த உட்புறப் புலனில்... இது உட்புறம்; இது வெளிப்புறம். சத்தியம் இங்கு உட்புறத்தில் வெளிப்படுகிறது: வெளியே அது அறிவைப் பயன்படுத்தி சிந்தித்தல். “நாம் எல்லோரும் சென்று அசெம்பிளீஸ் சபையை சேர்ந்து கொள்ளலாம்' என்பது நியாயமாகத் தோன்றவில்லையா? எனக்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை பிடிக்கும், எனக்கு ஒருத்துவம் சபை பிடிக்கும், எனக்கு எல்லா சபைகளுமே பிடிக்கும். ஏன் நாம் எல்லோரும் சென்று அவர்களுடன் இணைந்து கொள்ளக் கூடாது. அது ஒருக்கால் நமக்கு நன்மை பயக்கும். அது அறிவை பயன்படுத்தி சிந்தித்தல், அது வெளிப்புறம். ஆனால் உள்ளிலோ, அதை கவனியுங்கள். நீங்கள் வேதத்துடன் ஒத்துப் போகாமலிருக்கும் சில காரியங்களை காணும் போது; அசெம்பிளீஸ் சபையைப் பாருங்கள். அவர்கள் செய்யும் அநேக காரியங்கள் வேதப் பிரகாரமானவை அல்ல என்பது என் கருத்து. அவை வேதப்பிரகாரமானவை அல்ல என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும். ஆனால் அதில் அநேகருடைய சிந்தைகள் ஈடுபட்டுள்ளன. அசெம்பிளீஸ் சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கான சகோதரர்களும் சகோதரிகளும் வார்த்தையை விசுவாசிக்கின்றனர், அவர்கள் அசெம்பிளீஸ் போதனைகளை நம்புவதில்லை, ஆனால் அவர்கள் வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். 61பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், ஒருத்துவக் காரர்கள் மற்ற எல்லோருமே இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு ஒரு கூட்டம் மக்கள் ஒன்று சேர்ந்து அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கின்றனர். மனிதனுக்கு அதிகமான கெளரவம் உண்டு. இங்கு ஒரு பேராயர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், பொதுவான மேற்பார்வையாளர். அவர் ஏதாவதொன்றைச் சொன்னால், ஒரு சின்ன ஆள் என்ன சொல்ல முடியும்? அவன் ஏதாவதொன்றைச் சொல்ல பயப்படுவான். “நீர் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். ஆம், அது உண்மை ! உ ஊ ! ஆம், பேராயர் அவர்களே, போதகர் அவர்களே, அது முற்றிலும் உண்மை” என்பான். அவன் அவருடன் ஒத்துப் போகிறான். இங்கு, தெருவில் உள்ள ஒரு குடிகாரனை எடுத்துக் கொள்வோம். தெருவில் செல்கின்ற ஒரு சாதாரண குடிமகன் அவனைக் காணும் போது, “அவன் ஒன்றுக்கும் உதவாதவன்” என்பான். ஆனால் அந்த குடிகாரனை இங்கு நீங்கள் கொண்டு வந்து, அவனைக் காவல் துறையில் சேர்த்து அவக்கு ஒரு 'பாட்ஜ்ஜை குத்தி, அவன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால், நீங்கள், “காலை வணக்கம், ஜான். உம்மை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி” என்பீர்கள். பாருங்கள்? ஒருவருக்கொருவர் மரியாதை. இயேசு, “நீங்கள் இந்தவிதமான மரியாதை கொண்டிருப்பீர்களானால், உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்கும்?” என்றார், உங்களுக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்து தல் (அந்த வசனத்தை அப்படியே என்னால் கூற முடியவில்லை), ஆனால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்த விரும்புகின்றனர். அப்படி செய்யக் கூடாது. ஒரு ஸ்தாபனத்தில் மனிதர் ஒன்று கூடும் போது, அவர்கள் உட்காருகின்றனர்; சிறிய ஆட்கள் ஏதாவது சொல்ல பயப்படுகின்றனர், ஏனெனில் பேராயர் இவ்விதம் உரைத்துள்ளார்.அந்த மனிதனை அவமதிக்க வேண்டாம். அவர் நல்லவர் என்று நம்புங்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையே சரியென்றும் அதற்கு முரணான மற்ற எல்லாமே தவறு என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். “என் வார்த்தையே சத்தியம், மற்றெந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்” (ரோமர் 3:4). அதை கண்டீர்களா? அதை தான் நாம் செய்ய விரும்புகிறோம், அதை நாம் விசுவாசிக்க விரும்புகிறோம் 62இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நாம் வார்த்தை அல்ல, ஆயினும் நாம் வார்த்தை. உ ஊ! உங்களுக்கு புரிகிறதா? இயேசு தேவன் அல்ல, ஆயினும் அவர் தேவன். அவர் ஒரு மனிதன், ஆயினும் அவர் தேவன். அவர் அழுதார், ஆயினும் அவர் மரித்தோரை உயிரொடெழுப்பினார். மரித்த ஒருவனுக்காக அவர் அழுதார். ஆயினும் அவனை உயிரொடெழுப்ப அவரால் முடிந்தது. அவர் யேகோவாயீரே, யேகோவா ராஃபர், யேகோவா மனாசே; அவர் யேகோவா, எல்லாவற்றையும் முழுவதுமாக கொண்டிருந்தவர். அவர் யேகோவா, ஆயினும் அவர் ஒரு மனிதன். அவர் பூமிக்கு சொந்தக்காரர், அவர் பூமியை படைத்தவர், ஆயினும் அவருக்குத் தலை சாய்க்க இடமில்லை. அவர், “நான் உண்டாக்கின பறவைகளுக்குக் கூடுகள் உண்டு, ஆனால் எனக்கோ தலை சாய்க்க நான் உண்டாக்கின நரிகளுக்கு தரையில் குழிகள் உண்டு, ஆனால் எனக்கோ அடக்கம் பண்ணப்படக்கூட இடமில்லை“ என்றார் (மத்.8:20). அது உண்மை. அவரை அடக்கம் பண்ண அவர் வேறொருவரின் கல்லறையை கடன் வாங்க வேண்டியிருந்தது. 63அவர் ஸ்திரீயிலுள்ள கர்ப்பப்பையை உண்டாக்கினவர். ஆனால் பிறப்பதற்கு அவருக்கு கர்ப்பப்பை இருக்கவில்லை; அவர் ஒரு கர்ப்பப் பையை கடன் வாங்க வேண்டியிருந்தது. அவர் பூமியை சிருஷ்டித்தார், ஆனால் அவரை அடக்கம் பண்ண அவருக்கு இடம் எதுவுமில்லை. அவரை அடக்கம் பண்ணுவதற்காக அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்கு இருந்த தரையிலுள்ள குழியை கடன் வாங்க வேண்டியிருந்தது. பாருங்கள்? அவர்கள் ஓரிடத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது; இருப்பினும் அவர் தேவன், அவர் தேவன் என்பதை நிரூபித்தார். இப்பொழுது, உங்களுக்குப் புரிகிறதா? நாம். நாம் குட்டி மேசியாக்கள், ஆனால் அந்த இயேசு அல்ல. அவர் நம்முடையபிதா; நாம் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆகையால் தான் அவருடைய ஜீவன்... அது ஜனங்களை அவ்விதம் நம்பச் செய்கிறது. பாருங்கள், நீங்கள் உட்கார்ந்து கொண்டு சிந்திக்காவிட்டால், “நல்லது, இந்த ஆள் மேசியாதான், அவர் நிச்சயம் அவர்தான்” என்று ஜனங்கள் நம்பும்படி செய்கிறது. “இங்குள்ள இவர் ஒருக்கால் இருக்கக்கூடும்”. அவர்கள் இருவருமே. பாருங்கள்? “அவர்கள் இரண்டு பேர் எவ்விதம் இருக்க முடியும்?” பாருங்கள்? அங்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பாருங்கள்? ஆனால் பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில் அவருடைய ஜீவன் வெவ்வேறாகப் பிரிந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்தபோது, அது அக்கினி நாவுகளாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. தேவன் ஜனங்களின் மத்தியில் தம்மை பிரித்துக் கொள்ளுதல். ஏனெனில் கணவனும் மனைவியும் ஒருவர் போல, சபையும் கிறிஸ்துவும் ஒருவரே 64சகோ.பிரான்ஹாமே, நான் வார்த்தையில் நிலை நின்று, அதே சமயத்தில் என் மனைவிக்காக நான் உண்மையில் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை எவ்வாறு அவளுக்குக் காண்பிக்க முடியும்? ஏனெனில் “நீ விசுவாசிப்பதை அல்லது பிரசங்கிப்பதை ஏன் செயல்படுத்தக் கூடாது?” என்னும் கேள்வி எழுந்துள்ளது. நல்லது, இந்த கேள்வி கேட்டது. உங்கள் மனைவியானால், அதைக் கேட்க அவளுக்கு எல்லா உரிமையுமுண்டு, நீங்கள் உங்களை சரிபடுத்திக் கொள்வது நலம். பாருங்கள்? ஆனால் அவள் பொல்லாதவளாய் இருக்க இதைக் கூறுவாளானால், “இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், உன்னுடைய கழுத்தில் எந்திரக் கல் கட்டப்பட்டு, நீ சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது உனக்கு நலமாயிருக்கும்.” (லூக்.17:2). இப்பொழுது, அதுதான் உங்கள் கேள்வி. ஒருக்கால் இந்த மனைவி அந்த விதமானவளாய் இல்லாமல் இருக்கக்கூடும். அவள் ஒருக்கால் வித்தியாசமானவளாய், நல்லவளாய் இருக்கக் கூடும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க அவள் உங்களை பரிசோதிக்கக்கூடும். 65இப்பொழுது நீங்கள் அவளுடன் அன்பில் நிலைத்திருங்கள், அவள் இயேசுவை உங்களில் காணட்டும். அப்படிச் செய்யுங்கள். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். சில... இக்காலையில் ஒரு நபரைக் குறித்து ஒரு சிறு விவரணத்தை அளிக்க விரும்புகிறேன்.... ஒரு சமயம் இந்த ஸ்திரீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அவள் மிகவும் இனியவள். அவர்கள்... அவள் சொன்னாள். நல்லது, அவளுடைய வாழ்க்கை கடுமையாயிருந்தது. அவளுடைய கணவன் ஒரு குடிகாரன். எனவே, அவள் தொடர்ந்து சகித்துக் கொண்டே வந்தாள். அவன், “தேனே, சபைக்குச் செல்ல விரும்பினால், போய் வா. நான் ப்ரவுன் டெர்பி மதுக்கடைக்கு சென்று வருகிறேன். நீ போய் விட்டு வா” என்பான். எனவே அவர்கள் இவ்விதம் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த மதுக்கடை முன்பு போனிஃப்பர் என்று அழைக்கப்பட்டது. பழங் காலத்தவராகிய உங்களில் அநேகருக்கு மூலையில் இருந்த போனிப்பர் ஞாபகமிருக்கும். இப்பொழுது அது ப்ரவுன் டெர்பி என்று அழைக்கப்படுகிறது. அப்படித்தான் என்று நினைக்கிறேன். 66அந்த மதுக்கடையில் அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது, முதலாவதாக என்ன தெரியுமா, ஒரு இரவு சபையைக் குறித்தும் கிறிஸ்தவர்களைக் குறித்தும் ஒரு கேள்வி எழுந்தது. அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த குடிகாரர்களில் ஒருவன், “இனிமேல் கிறிஸ்தவர்கள் என்று யாரும் கிடையாது. அப்படி யாருமே கிடையாது. இந்த கூட்டம் அனைத்தும் மாய்மாலக்காரரே: அவர்கள் இங்கு புகைபிடித்துக் கொண்டும் குடித்துக் கொண்டும், நாம் செய்கிறதையே செய்து கொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அப்படி யாருமே கிடையாது” என்றானாம். இந்த குடிகாரன் உடனே எழுந்து நின்று, “ஒரு நிமிடம் பொறு. எனக்குத் தெரிந்த அப்படிப்பட்ட ஒருத்தி இருக்கிறாள்” என்றானாம். அவர்கள், “அது யார்” என்று கேட்க, அவன் “அது என் மனைவி என்றானாம். பாருங்கள்? அவள் உப்புத் தன்மை கொண்டவளாயிருந்தாள். அவன் அதை எந்நேரமும். கிரகித்துக் கொண்டே வந்தான்.மற்ற குடிகாரன், ”அவளுக்கு இறுக்கம் நேரிட்டால், நான் பந்தயம் கட்டுகிறேன், அவள் கிறிஸ்தவளாக இருக்க மாட்டாள்“ என்றானாம்.. . இவனோ, “இல்லை, அவள் அப்பொழுதும் கிறிஸ்தவளாயிருப்பாள்; அதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன். நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுகிறேன். நாம் வீட்டுக்குப் போவோம், அவள் கிறிஸ்தவளா இல்லையா என்பதைக் காண்பிக்கிறேன். நாம் வீட்டுக்குச் சென்று குடித்தவர்களைப் போல் நடிப்போம்” என்றானாம். அவன் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினான். எல்லோருமே தள்ளாடிக் கொண்டு உள்ளே வந்தனர். அவன், “நீங்கள் ஏன் இப்படி சுற்றிலும் உட்காரக் கூடாது?” என்று விருந்தாளிகளைப் பார்த்துக் கேட்டு, அவர்களை மிகவும் அன்பாக வரவேற்றான். அவன், மனைவியிடம், “எங்களுக்கு இரவு உணவு சமைத்து தா. எங்களுக்கு பன்றி இறைச்சியும் (ham) முட்டைகளும் வேண்டும்” என்றான். வீட்டில் இவை உண்டு என்று அவன் அறிந்திருந்தான். எனவே அவள் பன்றி இறைச்சியும் முட்டைகளும் சமைத்துக் கொண்டு வந்தாள். அவன் மேசையின் அருகில் வந்து அவர்களைப் பார்த்து விட்டு, அவனுடைய தட்டை எடுத்து அதில் வைக்கப்பட்டிருந்த உணவை தரையில் ஓங்கியடித்து, “இந்த விதமாக முட்டைகளை சமைத்தால் எனக்குப் பிடிக்காது என்று உனக்குத் தெரியுமல்லவா? வாங்கள், இங்கிருந்து போவோம்” என்று தன் சகாக்களைப் பார்த்துசொன்னான். 67அவர்கள் வெளியே சென்று அங்கு உட்கார்ந்து கொண்டனர். அவள் வெளியே வந்து, “அன்பே, நான் வருந்துகிறேன். அதை நான் சரியாக சமைக்கவில்லை. நான் வேறு முட்டைகளை சமைத்து கொண்டு விடுகிறேன்” என்றாள். அவன், “ஓ, முட்டாள்தனம், அந்த விதமாக முட்டைகளை சமைப்பது எனக்கு பிடிக்காது என்று உனக்குத் தெரியுமே” என்று இவ்விதமாக அவளைத் திட்டிக் கொண்டேயிருந்தான். அவர்கள் அங்கு வெளியே உட்கார்ந்து கொண்டு குடித்தவர்களைப் போல் நடித்துக் கொண்டிருந்தனர். அவள் தன்னையே கண்டனம் செய்து கொண்டு, மிருதுவான குரலில், இயேசு சிலுவையை தனியே சுமந்து உலகிலுள்ள அனைவரும் சும்மாயிருக்க வேண்டுமா? ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவையுண்டு எனக்கும் ஒரு சிலுவையுண்டு மரணம் என்னை விடுவிக்கும் வரைக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலுவையை சுமப்பேன் . என்று பாடிக் கொண்டிருந்தாளாம். ஒரு குடிகாரன் மற்றொரு குடிகாரனைப் பார்த்துக் கொண்டு, “அவள் உண்மையில் கிறிஸ்தவள், அவள் அதை பெற்றிருக்கிறாள்” என்றானாம். அந்த ஸ்திரீ அவளுடைய கணவனையும் அங்கிருந்த மற்ற அனைவரையும் கிறிஸ்துவினிடம் அன்றிரவு வழிநடத்தினாள். பார்த்தீர்களா? ஏன்? பாருங்கள்? உண்மையில் இனியவராயிருங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அதைக் குறித்து அவருக்கு எல்லாம் தெரியும். எனவே, சகோதரியே, அல்லது சகோதரனே, அது சகோதரன் தான். ஏனெனில் இங்கு தன் மனைவியைக் குறித்து அவர் கேட்டிருக்கிறார். நீங்கள் உப்புத்தன்மை கொண்டவராயிருங்கள். தாகமடைவதற்கு அங்கு ஏதாகிலும் இருக்குமானால் அவள் தாகமடைவாள். இல்லையென்றால், இதை ஞாபகம் கொள்ளுங்கள், உங்களுக்குத் தவறான நபர் இருந்தால், ஆயிர வருட அரசாட்சியின் போது சரியான ஒன்று கிடைக்கும். நீங்கள் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். எல்லா தவறுகளும் அங்கு சரியாக்கப்படும். 68சகோ. பிரான்ஹாமே, மணவாட்டி எந்த சபைக்கும் செல்லக்கூடாது, நீர் அங்கு பிரசங்கம் பண்ணினாலொழிய, அல்லது இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா? 69மேலும், வேலை செய்தல், மீன் பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம் ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறைகளையும் ஆசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீர் போதிக்கிறாரா? (அது ஞாயிற்றுக்கிழமை என்பது போல் தான் காணப்படுகிறது. கீழ் பாகத்தில் - அது ஞாயிற்றுக்கிழமை. அது விடுமுறைகள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகள் என்று நினைக்கிறேன். ஆம், ஞாயிற்றுக் கிழமைகள், அப்படித்தானே அது காணப்படுகிறது? (சகோ. பிரான்ஹாம் யாரோ ஒருவரிம் பேசுகிறார் - ஆசி]. பரிசுத்த நாட்கள், ஞாயிற்றுக்கிழமையும், பரிசுத்த நாட்களும்). இல்லை, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? அதை மறுபடியும் படித்து அதற்கு ஒவ்வொன்றாக பதிலளிக்க விரும்புகிறேன். “மணவாட்டி எந்த சபைக்கும் செல்லக் கூடாது. நீர் அங்கு பிரசங்கம் பண்ணினாலொழிய, அல்லது இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா?” இல்லை! நான் அவ்விதம் போதிப்பதில்லை. அதை நான் நம்புவது கிடையாது. இங்கு ஊழி யக்காரர் அமர்ந்துள்ளனர், அவர்கள் நாடெங்கும் பரவியுள்ளனர், அவர்கள் அந்த மணவாட்டியின் பாகம் என்று நான் நம்புகிறேன். வார்த்தையை போதிக்கின்ற . அவர்களுக்கு விருப்பமான எந்த சபைக்கும் ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ செல்லலாம் என்பது என் கருத்து. அவர்கள் முழு வார்த்தையைப் போதிக்கின்ற, வேறெந்த சபைக்கும் உங்களால் போக முடியாமல் போனால், நீங்கள் முழு வார்த்தையைப் போதிக்கின்ற இடத்துக்கு செல்லும் வரைக்கும், பாதி வார்த்தையை அவர்கள் போதிக்கும் அந்த இடத்துக்குச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்த போதிலும், சபைக்குச் செல்லுங்கள். அதைச் செய்யுங்கள். 70“மேலும் வேலை செய்தல், மீன் பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம் ஞாயிற்றுக்கிழமையை அனுசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீர் போதிக்கிறீரா?' நீங்கள் ஞாயிற்றுக்கிழமையில் சபைக்குப் போவதற்கு பதிலாக, மீன் பிடித்தல், வேட்டையாடுதல், வேலை செய்தல் போன்றவைகளை செய்தால், அது பாவம் என்பது என் கருத்து. நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மீறுகிறவர்களாய் இருப்பீர்கள். அப்படி ஒரு கட்டளை உள்ளதா? ஆம், ஐயா! பழைய ஏற்பாட்டில் ஒய்வு நாள் ஒரு முன்னடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது அனைத்தும்... நீங்கள் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்பதற்காக இயேசு வரவில்லை. பழைய ஏற்பாட்டின் ஓய்வு நாள் சனிக்கிழமை, அது வாரத்தின் முடிவு. ' ஞாயிற்றுக்கிழமை எட்டாம் நாள். அல்லது வாரத்தின் முதலாம் நாள், அந்த நாளில் தான் இயேசு உயிரோடெழுந்தார். நான் நினைக்கவில்லை அது சரியென்று... நீங்கள் தொலைவில் காட்டில் எங்காவது வேட்டை பயணத்தை மேற்கொண்டு சென்றிருந்தால், அதை சுற்றிலும் சபை எதுவுமில்லை என்றால், உங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை என்றால்; அப்பொழுது நீங்கள் மீன் பிடித்தால், அதனால் பரவாயில்லை என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் நகரில், அல்லது சபை நடந்து கொண்டிருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருந்தால், நீங்கள் எப்படியாவது எங்காவது சபைக்கு சென்றே ஆக வேண்டும்... வேலை செய்யும் விஷயத்தில், காளை குழியில் விழுந்து விட்டால், அல்லது ஏதாவதொன்றை ஞாயிற்றுக்கிழமையன்று செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நீங்கள் அதைச் செய் யுங்கள், உங்களால் தவிர்க்க முடியாமல் அதை செய்ய வேண்டும் மென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால். ஆனால் ஒரு வேலையைச் செய்ய நீங்கள் ஞாயிறு வரை காத்திருப்பீர்களானால், அதை அவ்விதம் செய்வீர்களானால், நீங்கள் தவறு செய்கிறவர்களாயிருப்பீர்கள். பாருங்கள்? நாம் அவ்விதம் செய்யக் கூடாது, நாம் பரிசுத்த நாளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் 71இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், எங்காவது, எந்த இடத்திலாவது சபைக்குச் செல்லுங்கள்... நான் குறிப்பிட்ட ஒரு ஸ்தாபன சபையின் பெயரைக் கூற முடியும், ஆனால் அவ்விதம் நான் செய்ய மாட்டேன், ஏனெனில் இந்த சபை, அவர்கள் போதிப்பதாக நான் அறிந்துள்ள ஒரே ஒரு காரியம் என்னவெனில், அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக அறிக்கையிடுகின்றனர். நல்லது, நானும் அதை செய்கிறேன். அவர்களுடைய மற்ற. போதகம் அனைத்தும்... தண்ணீர் பாவத்தைப் போக்குகிறது என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் ஒருத்துவக்காரர் அல்ல. தண்ணீர் மறு ஜென்மம் அளிப்பதாக அவர்கள் விசுவாசிக்கின்றனர். நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை. ஓ, அவர்கள், எங்காகிலும் தெய்வீக சுகமளித்தல் காணப்பட்டால், அது பிசாசினால் உண்டானது என்று விசுவாசிக்கின்றனர். அவர்கள் விசுவாசிப்பது அனைத்தும்.... அவர்களிடம் உள்ள ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அந்த புத்தகத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்வதே. உங்கள் பெயர் அங்கு பதிவு செய்யப்படா விட்டால், நீங்கள் இழக்கப்படுவீர்கள் என்பது அவர்கள் கருத்து. இப்பொழுது, நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை. ஆனால்உங்களுக்குப் போக வேறெந்த சபையும் இல்லாமல் போனால், (அவர்களைக் குறை கூற நான் அங்கு செல்லமாட்டேன்), ஆனால் நான் யார் பக்கத்திலாவது உட்கார்ந்திருக்கும்போது என் இருதயத்திலுள்ள கிறிஸ்து அங்குள்ள யாரிடத்திலாவது பாதிப்பை உண்டு பண்ணுவார் என்னும் அந்த நோக்கத்துடன் செல்வேன். அவர்கள் மத்தியில் செல்லுங்கள், ஆனால் அவர்கள் அவிசுவாசத்தில் பங்கு கொள்ளாதீர்கள். 72சகோ. பிரான்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று நான் அறிய விரும்புகிறேன். என் குடும்பம் இரட்சிக்கப்பட வேண்டுமென்று நான் பாரப்பட்டிருக்கிறேன். நீ பரிசுத்த ஆவியைப் பெற விரும்பினால் உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும், அருமை சகோதரியே, நீ இங்கு இருப்பாயானால். நான்... சகோ. நெவில், இது இங்குள்ள சபையின் அங்கத்தினரா? (சகோ. பிரான்ஹாம் சகோ. நெவிலிடம் உரையாடுகிறார் - ஆசி). எனக்கும் கூட அவர்களை ஞாபகமில்லை. நீ இங்கு இருப்பாயானால், சகோதரி பெள, இதை நான் உன்னிடம் கூறட்டும். “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று வேதம் உரைக்கிறது. அதை நீ பெற்றுக் கொள்ள விரும்பும் காரணத்தினாலேயே நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். பார்? இப்பொழுது, ஞாபகம் கொள், நீ அதை பெற்றுக் கொண்டாய் என்று அர்த்தமல்ல, ஆனால் அதற்காக பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (ஆங்கில வேதாகமத்தில் blessed அதாவது 'ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்“ என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). ”அவர்கள் திருப்தியடைவார்கள்“. அதில் நிலைத்திரு. “என் குடும்பத்துக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” உனக்கு நீ உபயோகிக்கிற அதே விசுவாசத்தை உன் குடும்பத் துக்கும் உபயோகிப்பாயாக. அவர்களை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயாக. அது.. அது இங்குள்ள உன் மாம்சசிந்தையில் வருவதற்கு இடங்கொடாதே. அது உள்ளில் உள்ள உன் உள்ளுணர்வில் இறங்கட்டும், அப்பொழுது அவர்கள் உன்னுடையவர்களாகி விடுவார்கள். அதை நீ அங்கு இறங்க விட்டிருந்தால், தேவன் அவர்களை உனக்கு கொடுத்து விட்டார். இங்குள்ள உன் இருதயத்தில் நீ எதையாகிலும் கொண்டிருந்து, நீ ஜெபம் பண்ணும்போது அதை கேட்பாயானால், நீ கேட்டதை பெற்றுக் கொண்டாய் என்று விசுவாசிப்பாயாக. அதை நீ ஒருக்காலும் இனி சந்தேகிக்க முடியாது. நீ ஒரே நேரத்தில் அதை விசுவாசிக்கவும் சந்தேகிக்கவும் முடியாது. எத்தனை பேருக்கு அது தெரியும்? நீ கேட்டுக் கொண்டதை பெற்றுக் கொண்டாய் என்று விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது அது உனக்குக் கொடுக்கப்படும் என்று அவர் உரைத்திருக்கிறார். எனவே, உன் குடும்பத்துக்காக நீ விசுவாசிப்பாயாக அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள். 73சகோ. பிரான்ஹாமே, நீர் எக்காளங்களைக் குறித்து பிரசங்கிக்கப் போகாததனால், எங்கள் மகனைக் குறித்தென்ன? அவனையும் ஏழு எக்காளங்களையும் இணைத்து எனக்கு நீர். தொலைபேசியில் அளித்த வாக்குத்தத்தம் ஞாபகமுள்ளதா? எனக்கு ஞாபகமில்லை, அது என்னவென்று எனக்கு ஞாபகமில்லை. அது என்னவாயிருந்தாலும், அது என்னவென்று பில்லி பாலுக்குத் தெரியப்படுத்தவும். நான் என்ன வாக்களித்திருந்தாலும், அதை நான் செய்வேன். எனக்கு ஞாபகமில்லை. உங்களுக்குத் தெரியும், சில நேரங்களில் ஒரே இரவில் முப்பது அல்லது நாற்பது தொலைபேசி அழைப்புகள் எனக்கு வருகின்றன (பாருங்கள்?), நான் இங்கிருக்கும் போது இவ்வாறு ஒவ்வொரு இரவும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருப்பதால், அது என்னவென்று ஞாபகம் இருப்பதில்லை - என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? நன்றி? - 74ஓ. இந்த நபர் நகரத்துக்கு புறம்பே இருந்து வருகிறவள். தொலைவிலுள்ள டெக்ஸாஸிலிருந்து. நான் .... நல்லது. சகோதரியே, நீ டெக்ஸாஸை சேர்ந்தவளாயிருந்து, இந்த ஒலிநாடாவை நீ பெற நேர்ந்தால் (இதை பதிவு செய்த ஒலிநாடா இருக்காது என்று எண்ணுகிறேன்), ஆனால் அது இருக்கமானால்... (சகோ. பிரான்ஹாம் ஆராதனைகளை ஒலிநாடாவில் பதிவு செய்வதைக் குறித்து விசாரிக்கிறார் - ஆசி). அவர்கள் ஒலிநாடாவில் பதிவு செய்கின்றனரா? நீங்கள் பதிவு செய்கின்றீர்களா? சரி, நீங்கள்... இந்தஒலிநாடா... என்ன செய்ய வேண்டுமென்று நான் உன்னிடம் கூறுகிறேன். நீ... இந்த ஒலி நாடாவில் இதை நீ காணும்போது, “எங்கள் மகனையும் ஏழு எக்காளங்களையும் குறித்தென்ன?” என்பதை ஞாபகம் கொள். அதைக் குறித்து எனக்கு ஞாபகமில்லை, ஏழு எக்காளங்களைக் குறித்து பேசும் போது அவனை நான் காண்பேன் என்று வாக்களித்திருந்தாலொழிய. நான் அதன் பேரில் பிரசங்கித்தால், அவனைக் காண்பேன்; ஏனெனில் நான் ஏழு எக்காளங்களின் பேரில் பிரசங்கிக்கவில்லை, எக்காளப் பண்டிகை என்னும் பொருளின் பேரில் தான் பிரசங்கித்தேன். அதைக் குறித்து புரிந்து கொண்டாயா? “என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? நன்றி.” நான் உன்னிடம் சொல்லுகிறேன், திருமதி கார்னில்ஸன்... அந்த ஸ்திரீ இங்கு இருப்பாளானால், இன்று காலையில் பில்லி பாலைப் பார். இல்லையென்றால், நல்லது, அது என்னவென்று எனக்குப் புரியவில்லை (பார்?); அது ஒரு கேள்வி. அது என்னவென்று என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை (பார்?), ஏனெனில் நான் அவளுடைய மகனைக் குறித்தும், எக்காளங்களைக் குறித்தும், அவளுடைய கத்தோலிக்க சகோதரியைக் குறித்தும் ஏதோ ஒன்றை வாக்களித்திருக்கிறேன். அது என் நினைவில் இப்பொழுது இல்லை. பில்லியைப் பார். இது... இது ஒரு ஜெப வேண்டுகோள். அது அந்த நபரின் பெயரைக் கூறிவிட்டு, “தலைவலியும் மண்டை சளியும்” என்று குறிப்பிடுகிறது. அது வெறும் ... அவர்களுக்காக ஜெபம் பண்ணும் படி கேட்கின்றனர் என்று எண்ணுகிறேன். சரி. 75விவாகமும் விவாகரத்தும் என்பதை தயவுகூர்ந்து விளக்கவும் (அதை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். ஒரு தாளில் ஏழு கேள்விகள் - எட்டு கேள்விகள் உள்ளன). விவாகமம் விவாகரத்தும் என்பதை தயவுகூர்ந்து விளக்கவும். நான் விளக்கி விட்டேன். 76இப்பொழுது மோசேயும் எலியாவும் பூமியில் இருக்கின்றனரா? அவர்கள் அமெரிக்காவில் உள்ளனரா? இல்லை! பாருங்கள்? இல்லை, அவர்கள் இங்கில்லை. சபை எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கும் அவர்கள் இங்கிருக்கமாட்டார்கள், அப்பொழுது மோசேயும் எலியாவும்... அதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? சரி, நாம் பார்ப்போம். இதில் அவர்கள் எந்த பெயரையும் கையொப்பமிடவில்லை, எனவே... சரி. இந்த கேள்விகளை யார் கேட்டிருந்தாலும்... ஏழு கேள்விகள் உள்ளதென்று நினைக்கிறேன். நான் ஏழு எண்கள் இட்டிருக்கிறேன். 77“இயேசு” என்னும் நாமத்திற்கும் “இயேசுவின் நாமம்” என்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கவும். இவையிரண்டும், ஒரே நபரைக் குறிப்பிடுவதனால், இயேசு என்னும் நாமமும் “இயேசுவின் நாமமும்” ஒன்றேதான். அவர் இயேசு. இயேசுவின் நாமம் அந்த நபரைக் குறிப்பிடுகின்றது, இரண்டும் ஒன்றே.... நான் நினைக்கிறேன் அது... அது சரியென்று தோன்றுகிறதல்லவா? இயேசு என்னும் நாமம் அந்த நபரே. இயேசுவின் நாமம் நீங்கள் அந்த நபரைக் குறிப்பிடும் போது. பாருங்கள். உதாரணமாக என் பெயர் வில்லியம். அது தான் சரி. இப்பொழுது நீங்கள் கூறலாம்... நான் பேசிக் கொண்டிருக்கிறேன். வில்லியத்தின் நாமம் என்னும்போது, நீங்கள் என்னைக் குறிப்பிடுகின்றீர்கள். அது என் பெயர். பாருங்கள்? இப்பொழுது. 78வெவ்வேறு யுகங்களில் கர்த்தருடைய நாமம் மாறிப் போனதா? ஆம், ஆம்! அது ஒரு காலத்தில் - அவர் இருக்கிறேன் என்று அழைக்கப்பட்டார். அவர் யேகோவா என்று அழைக்கப்பட்டார். அது அநேக முறை மாறினது. அது மாறின் கடைசி முறை, தேவன் மாம்சமாகி மனித நாமத்தைக் கொண்டிருந்த போது. யேகோவா, இருக்கிறேன், இவையனைத்தும் ஒரு - நாமத்துக்கான பட்டப் பெயர்கள். பாருங்கள்? நீங்கள் யேகோவாவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமானால், அது இயேசுகிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். நீங்கள் யேகோவா - ராஃபா, யேகோவா - மனாசே,யேகோவாயீரே போன்ற நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமானால், அதுஇயேசு கிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். இருக்கிறேன் என்பவர் இயேசு கிறிஸ்துவே. ஞாபகம் கொள்ளுங்கள், அன்றொரு நாள் அவர் அங்கு நின்று கொண்டு, “நீங்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தீர்கள் என்று சொல்லுகிறீர்கள்...” என்றார். “எங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்தார்கள்.” “அவர்கள் மரித்தார்கள்” என்று கூறினார். அவர்கள், “நல்லது, நீ பைத்தியம் பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்து கொண்டோம். உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்லுகிறாயே” என்றனர். அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். (யோவான் 8:58). பாருங்கள்? அவர் இருக்கிறேன் என்பவராக இருந்தார். தேவனுக்கு சொந்தமாயிருந்த எல்லா பட்டப்பெயர்களும் நாமங்களும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனித நாமமாக ஆனது. சரி. 79முத்திரைகள் திறக்கப்பட்ட போது காலம் முடிவுறுகிறது என்றால், அப்பொழுது... முத்திரைகள் திறக்கப்பட்ட போது காலம் முடிவுற்றது என்றால் (என்னை மன்னிக்கவும்), அப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி காலமும் முடிந்திருக்க வேண்டுமே, இல்லையா? இல்லை, இல்லை! முத்திரைகள் திறக்கப்பட்ட போது, காலம் முடிவுறவில்லை. அதை தவறாகப் புரிந்து கொண்டீர்கள். அப்பொழுது என்ன நடந்ததென்றால், இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன, காலம் முடிவுறவில்லை. பாருங்கள்? இப்பொழுது உன்னிப்பாக கவனியுங்கள், நீங்கள் இதை ஒலிநாடாவிலிருந்து பெறுவீர்களானால், ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள். 80காலம் முடியவில்லை... இந்த கேள்வியைக் கேட்டவர் ஆயிரம் வருட அரசாட்சி முடிவடைந்து விட்டது என்னும் நம்பிக்கை கொண்ட கூட்டத்தாரில் ஒருவராக இருக்க வேண்டும். ஏனெனில் பாருங்கள்? சபையானது வீடு சென்று பூமிக்குத் திரும்ப வந்த பிறகுநமக்கு ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் புதிய வானம் புதிய பூமியின் போது காலம் முடிவடைகின்றது. இப்பொழுது, ஆயிரம் வருட அரசாட்சியின் காலம் புதிய வானமும் புதிய பூமியும் அல்ல. ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகும் பாவம் இருக்கும். ஆயிரம் வருட அரசாட்சி, நோவா பேழைக்குள் பிரவேசித்து, தண்ணீருக்கு மேலே உயர்த்தப்பட்டு, மற்ற பக்கத்தில் காமையும் மற்றவர்களையும் கொண்டு வந்ததற்கு முன்னடையாளமுள்ளது. பாவமும் கூட பேழைக்கு வெளியே வந்தது. பாருங்கள்? - ஆனால் ஏனோக்கோ மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான், அவன் மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருக்கிறான், மற்ற பக்கத்தில் கொண்டு வரப்பட்டவர்களுக்கு அல்ல. எனவே பாவம் ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்திலும் இருக்கும், ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின் போது அல்ல. பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் போது சமாதானம் நிலவும். பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்தில் பாவம் ஒழிக்கப்படும், அதன்பிறகு காலம் என்பது மறைந்து விடும். இப்பொழுது, பரிசுத்த ஆவியால் அருளப்பட்ட ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல், நமக்கு முன்பிருந்த காலங்களில் விடப்பட்டிருந்தவைகளை நமக்கு தெரியப்படுத்துவதற்காகவே. 81இப்பொழுது, ஒரு பெரிய வேத பண்டிதர் அதன் பேரில் என்னை மடக்கப் பார்த்தார். அவர், “சகோ. பிரான்ஹாமே, என்றாகிலும் ஒரு நாள் தேவன் அந்த ஏழு முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியத்தை உமக்கு வெளிப்படுத்துவார். அவை நாம் இதுவரைக்கும் அறிந்திராத ஒன்றாக இருக்கும், அது வேதத்திலும் கூட எழுதப்பட்டிராத ஒன்றாக இருக்கும்” என்றார். இல்லை, இல்லை! அது அப்படியிருக்காது. ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்வீர்களானால், அது நம்மை. அவ்விதம் நான் உங்களிடம் கூறினால், நான் கள்ளத் தீர்க்கதரிசியாயிருப்பேன், ஏனெனில் (பாருங்கள்?), இந்த வார்த்தை ... அங்கு... எல்லாமே... இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு முழுவதும் இந்த வார்த்தையில் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? ஏழு முத்திரைகள் ஏழு சபைகளைக் குறித்ததாயிருக்குமானால், அது ஏற்கனவே முடிந்து விட்ட ஒன்றாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் லவோதிக்கேயாசபையின் காலத்தில் இருக்கிறோம். இந்த ஏழு முத்திரைகள் அவர்கள் முன் காலத்தில் கூறாமல் விட்டவைகளை வெளிப்படுத்து வதாயுள்ளன. அவர்கள் விட்டவைகளை அது திறந்து கொடுத்தது. லூத்தர் விட்டவைகளை, வெஸ்லி விட்டவைகளை, நமது காலம் வரைக்கும் இருந்து வந்த சீர்திருத்தக்காரர்கள், பெந்தெகொஸ்தேகாரர்கள் விட்டவைகளை. 82அடுத்தபடியாக நடக்கவிருப்பது. சபை எடுத்துக் கொள்ளப்படுதலும், மோசேயும் எலியாவும் திரும்ப வருதலும், மணவாட்டியும் மணவாளனும் பூமியில் ஆயிரம் வருட காலம் அரசாட்சி செய்தலும், அதன் பிறகு நியாயத் தீர்ப்பும், பிறகு பாவம் முழுவதுமாக அழிக்கப்படுதலும். அப்பொழுது காலம் என்பது இருக்காது. இப்பொழுது... முடிவடையவில்லை... முத்திரைகள் காலத்தை முடித்து விடவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகு காலமும் காலங்களும். இல்லை! ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகும் காலம் என்பது இருக்கும். 83ஆயிரம் வருட அரசாட்சி என்பது ஆயிரம் வருடங்களாக இருக்குமா? அது ஒரு சந்ததியின் காலமாக இருக்கக் கூடாதா? இல்லை! வேதத்தில் ஒரு சந்ததிக்கு நியமிக்கப்பட்ட காலம் நாற்பது ஆண்டுகளே. ஆனால் வேதமோ, “அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” என்று உரைக்கிறது (வெளி.20:4). அது பூமியில் ஆயிரம் வருட காலமாக இருக்கும், ஏனெனில் பூமியில் நாம் கணக்கிடும் ஆயிரம். வருடம் தேவனுடைய கணக்கில் ஒரு நாள் மட்டுமே. பூமியில் ஆயிரம் வருடம் தேவனுக்கு ஒரே நாள், அவருடைய கணக்கின்படி. இதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? எனவே அது ஓய்வு நாள், அப்பொழுது சபை பாவத்துக்கு எதிராக பாடுபடாது. சாத்தான் சிறிது காலத்திற்கு, ஆயிரம் வருடங்களுக்கு கட்டப்பட்டிருப்பான், ஏனெனில் அவனுடைய பிரஜைகள் அனைவரும் அப்பொழுது நரகத்தில் இருப்பார்கள், அவனுடைய ... பூமியிலுள்ள சபை மீட்கப்பட்டு கிறிஸ்துவின் சமூகத்தில் இருக்கும், எனவே அவனுக்கு கிரியை செய்ய ஒன்றும்இருக்காது. எனவே, நான் ஏற்கனவே கூறினபடி, அது ஒரு சங்கிலியாக இருக்காது, ஒரு நீண்ட சங்கிலியாக. அது சூழ்நிலை என்னும் சங்கிலி. அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் உதவியற்றவனாகவும், நம்பிக்கையற்றவனாகவும், அவனுடைய பிரஜைகள் உயிரோடெழ காத்துக் கொண்டிருப்பான்; அப்பொழுது அவர்கள் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளுமாக பிரிக்கப்படுகின்றனர். 84கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன்தானா என்று சோதித்து தனக்குத் தானே அறிந்து கொள்வதற்காகத் தானே சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் வந்தாள்? இல்லை! தேவனுடைய நாமம் - சாலெமோன் தானா என்று அறிந்து கொள்வதற்காக அவள் சோதிக்கவில்லை. சாலொமோன் ஒரு ராஜா. அவள் அவனிடம் வந்து, “மெய்யாகவே தேவன் அவருடைய ராஜாவோடும் அவருடைய ஜனங்களோடும் இருக்கிறார்” என்றாள். பாருங்கள்? அவள் வந்து, சாலொமோனுக்கு இருந்த வரங்களை சோதித்தாள். அவளுடைய இருதயத்தில் மறைந்திருந்தவைகளை சாலொமோன் அவளுக்கு வெளிப்படுத்தினான். அது, அவன் பூமியில் தேவனுடைய ராஜாவாக இருந்தான் என்பதைக் காண்பித்தது. 85இதை ஞாபகம் கொள்ளுங்கள், நான் நினைக்கிறேன் அவள் வாழ்ந்த சேபா நாட்டில் ஜனங்கள் வந்து அங்கு நடக்கிற மகத்தான காரியங்களை அறிவித்திருப்பார்கள்; அவர்களுடைய ராஜாவை அபிஷேகம் செய்துள்ள தேவன் ஒருவர் அங்கிருக்கிறார் என்றும், எவ்வாறு அந்த ராஜா தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். சாலொமோனின் நாமம் - தேவனுடைய நாமம் சாலொமோன் என்று அவள் கருதின தாக நான் நினைக்கவில்லை; ஏனெனில் அது அவளை அஞ்ஞானியாக்கிவிடும். பாருங்கள்? ஒருக்கால் அவள் அவ்விதம் செய்திருக்க கூடும். அவளுடைய இருதயத்தில் அவள் தேவன் தான் சாலொமோன்— சாலொமோன் தான் தேவன் என்று எண்ணியிருக்கக்கூடும், ஏனெனில் அவள் ஒரு அஞ்ஞானியாயிருந்தாள். ஆனால் சாலொமோன் தனக்கிருந்த சிந்தனைகளைப் பகுத்தறியும் வரத்தினால் - அப்பொழுது அது ஞானம் என்றழைக்கப்பட்டது - அவளுடைய இருதயத்தில் இருந்த இரகசியங்களை வெளிப்படுத்தின போது, தேவன்சாலொமோனுடன் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஏனெனில் அப்பொழுது... அவர்களுக்கு.... அவள் கண்டு கொண்டாள். அவள் அந்த எண்ணத்துடன் வந்திருப்பாளானால்.... 86இங்கு இந்த கேள்வியைக் கேட்டவர், “உண்மையில் சாலொமோன் - உண்மையில் கர்த்தருடைய நாமம் சாலொமோன் என்பது அவளுக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். பாருங்கள்? சாலொமோன் கர்த்தர் அல்ல, அவள் அதை ஜனங்களிடமிருந்து அறிந்து கொண்டாள், ஏனெனில் அவர்கள் யேகோவாவை தொழுது கொண்டனர், அங்கு அந்த மகத்தான உடன்படிக்கை பெட்டி இருந்தது, அதற்குள் அந்த மகத்தான கற்பலகைகள், அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் கர்த்தருடைய கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் சீனாய் மலையைக் குறித்தும், அவர்கள் சென்ற வெவ்வேறு இடங்களைக் குறித்தும், அவளிடம் கூறினார்கள். அப்பொழுது, அந்த கட்டளைகளை அளித்த தேவன் இந்த மனிதனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள், ஏனெனில் தேவனுக்கு மட்டும் உரிய சிந்தனைகளைப் பகுத்தறிதல் இவனிடம் இருந்தது. பாருங்கள்? எனவே தேவன் சாலொமோனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். கேள்வி கேட்டவர் இந்தவிதமாகத்தான் கேட்டிருக்கக் கூடும். ஆனால், “கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன் என்பதை அவள் அறிந்திருந்தாளா?” என்றுதான் அவர் கேட்டிருக்கிறார். ஒருக்கால் அவர் தன் மனதில் இருந்தவிதமாகவே அதை எழுதவில்லை போலும். பாருங்கள்? எனவே நான் என்ன நினைக்கிறேன் என்றால், “கர்த்தர் சாலொமோனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாளா?” என்று கேட்க வேண்டுமென்று அவர் நினைத்திருப்பார். ஆம், அவள் நிச்சயம் அறிந்திருந்தாள். அதுதான் கேள்வி என்றால், நிச்சயமாக! அவள் தேவனை அறிந்திருந்தாள், அவள் அதை குறிப்பிட்டாள், அவள் வேறெந்த தேவனையும் வழிபட மறுத்து விட்டாள். நான் நினைக்கிறேன், அவள் சொன்னாள் அவள் எப்பொழுதும்... அவள் ஏனென்று அறிந்து கொண்டாள். அவளுக்குள் மூச்சு இருக்கவில்லை; கேட்க அவளுக்கு வேறு கேள்விகள் எதுவும் இருக்க .. வில்லை. சாலொமோன் எல்லாவற்றையும் அவளுக்கு வெளிப்படுத்தினான், தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். 87நாங்கள் இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால் விவாகம் செய்து வைக்கப்பட்டோம். அது தவறா? ஆம், அவ்விதம் நீங்கள் செய்தது தவறாகும். விவாகம் என்பது தேவனுடைய வீட்டுக்கு உரிய ஒன்று. ஆனால் உங்களுக்கு ஏற்கனவே விவாகமாகி விட்டதால், நீங்கள் எப்பொழுது உண்மையில் விவாகம் செய்து கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்வதாக ஒருவருக்கொருவர் வாக்களித்துக் கொள்ளும் போதே. திருமணம் பதிவு செய்யும் நீதிபதி உங்களுக்கு விவாக சான்றிதழ் கொடுத்து, விவாகமாகாமல் நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, சட்டப் பூர்வமாக நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழும்படி செய்கிறார். ஆனால் நீங்கள் அந்த பெண்ணுக்கு வாக்களித்து, அவளும் உங்களுக்கு உண்மையாக வாழ்வதாகவும் உங்களை கணவனாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்களிக்கும் அந்த நேரத்திலேயே உங்களுக்கு விவாகமாகி விடுகிறது. உங்களுக்கு ஞாபகமுள்ளதால், அதை நான் போன வாரம் விளக்கிக் காண்பித்தேன். அது போன வாரம் என்றுதான் நினைக்கிறேன். பாருங்கள்? வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும் கூட, ஒரு மனிதன் விவாகம் செய்து கொள்ள ஒரு பெண்ணுக்கு நியமிக்கப்படும் போது (அதைக் குறித்த கட்டளைகள் உங்களுக்கு தெரியும். அதை மீறினால், அது விபச்சாரத்துக்கு சமானம்.நிச்சயமாக). அவன் வாக்களித்தால், அவ்வளவுதான். 88அன்றொரு நாள், “ஆன்னல்மண்ட்'டும் விவாகரத்தும் ஒன்றா?” என்னும் கேள்வி கேட்கப்பட்டது. பாருங்கள் நண்பனே, இவ்விதமான கேள்விகளை நீங்கள் என்னைக் கேட்கும் போது, அது எனக்கு என்ன செய்கிறது என்பதை நீங்கள் அறிவதில்லை. இரண்டு மூன்று முறை விவாகமான என் நண்பர்கள் பலர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் என் சொந்த மகன் பில்லி பாலையும் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் உணருகிறீர்களா? நான் பில்லி பாலை மட்டும் சும்மா விட்டு விடுவேனா? இல்லவே இல்லை. பில்லி பால் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொண்டான். அவன் என்னிடம் வந்து, “அப்பா, நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்” என்றான். நான் என் காரைக் கழுவிக் கொண்டிருந்தேன். நான், “உன் தலையை சுவற்றில் மோதிக்கொள்” என்று சொல்லிவிட்டு, என் காரைக் கழுவிக் கொண்டேயிருந்தேன். “நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்” என்றான். , நான்.. “ஓ, போடா” என்று சொல்லிவிட்டு வேலையில் ஈடுபட்டிருந்தேன். அவன் தன் தாயிடம் சென்றான், அவள் அவனைப் பார்த்து கேலியாக சிரித்தாள். அவன் என்ன செய்தான் தெரியுமா? பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு பெண்ணுடன் அவன் ஓடிப் போய் விவாகம் செய்து கொண்டான். நாங்கள் அந்த விவாகத்தை 'ஆன்னல் செய்தோம் - அந்த பெண்ணின் தகப்பனும் நானும். நாங்கள் அந்த விவாகத்தை 'ஆன்னல்' செய்தோம், இருப்பினும் அவன் விவாகம் செய்து கொண்டதாகவே கருதப்பட வேண்டும். அவன் என் பையன், அவன் இங்கு உட்கார்ந்து கொண்டு நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இப்பொழுது, அது முற்றிலும் உண்மை . அவன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த பெண்ணுடன் என்னிடம் வந்து, என் மருமகள். என் பேரன்... அவன், “அப்பா, எனக்கு விவாகம் செய்து வையுங்கள்” என்றான். நான் “முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டேன். அது என் சொந்த மகன். அவனை நான் தூக்கி சுமந்து, என்னால் முடிந்த எல்லாவற்றையும் அவனுக்குச் செய்து, அவனுக்கு நான் தாயும் தகப்பனுமாய் இருந்து வந்திருக்கையில், இது என் இருதயத்தை ஊடுருவிக் குத்தவில்லை என்றா நினைக்கிறீர்கள்? அதை கூறுவது என்னைக் கொல்லவில்லை என்றா நினைக்கிறீர்கள்? ஆனால் அது உண்மை. நிச்சயமாக! என மகன் இங்கு உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறான். என் மருமகளும் என் சிறு பேரனும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அது தவறென்று நான் அவனிடம் கூறுகிறேன் (பாருங்கள்?), ஏனெனில் நான் கூறியாக வேண்டும். அந்த வார்த்தைக்கு நான் கடமைபட்டவனாயிருக்கிறேன். 89நீங்கள் திருமணம் பதிவு செய்யும் மாஜிஸ்ட்ரேட்டினால் விவாகம் செய்து வைக்கப்பட்டீர்களா? சபை உங்களை விவாகம் செய்து வைத்திருக்க வேண்டும் - சபையிலுள்ள போதகர். அதுவேஒரு கிறிஸ்தவன் செய்யக் கூடிய நாணயமான காரியம். ஆனால் நீங்கள் ஏற்கனவே அந்த வாக்குத்தத்தத்தை, அந்த பொருத்தனையை செய்து கொண்டு, இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்து கொண்டதால், அதனால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். நீங்கள், “நல்லது. நான்...' எனலாம். ஒருக்கால், “நான் வந்து, மீண்டும் விவாகம் செய்து கொள்ள வேண்டுமா?” என்னும் கேள்வி எழலாம். உங்களுக்குப் பிரியமானால் செய்யுங்கள். உங்கள் விசுவாசத்துக்கு இடையூறாக இருக்கும் எதையும் மனதில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஏதாகிலும் இருந்தால், நீங்கள் இங்கிருந்து முன்னேற முடியாது; நீங்கள் இங்கேயே நின்றுவிடுவீர்கள். அந்த கேள்விக்குறி வரும்போது, இந்த இடத்திலேயே நீங்கள் முடிந்து விடுவீர்கள். ஆனால் இப்பொழுது, என்னைப் பொறுத்தவரையில், அதனால் பரவாயில்லை. 90ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், இது என்னை நோகப் பண்ணுகிறது. நான் கேட்டால் அவர்கள் கண்ணையும் பிடுங்கி எனக்குத் தரக்கூடிய மிகவும் நெருங்கிய நண்பர்கள் - ஆண்களும் பெண்களும் - இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் (ஆம், ஐயா!), அவர்கள் இருமுறை விவாகமானவர்கள், சிலர் மூன்று முறையும் கூட. அவர்கள் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் நேசிக்கின்ற என் சொந்த மகன், என் சொந்த பேரன், மற்றும் என் மருமகள்..... பில்லியைப் பாருங்கள், அவனை நான் எவ்வளவாக ஆதரித்தேன், அவன் எனக்கு என்ன செய்தான் பாருங்கள். உண்மையைச் சொன்னாலும் சொல்லாமல் போனாலும், உண்மை உண்மைதான். எனக்கு... இன்று நான் வெளியே சென்று, அசெம்பிளீஸ் ஆப் காட் சபை அல்லது வேறு சபையிலுள்ள ஜனங்களை அழைத்து, “நான் சொன்னதெல்லாம் தவறு, அந்த வார்த்தையுடன் நான் நிலைத்திருக்கப் போவதில்லை, நான் உங்களுடன் நிலைத்திருக்கப் போகிறேன்” என்று என்னால் கூற முடியும். அவ்விதம் நான் செய்தால், எனக்குள்ள இந்த தேவனுடைய வரத்தைக் கொண்டு நான் வெகு விரையில் மிகவும் பிரபலமான ஒருவனாகி விட முடியும். எனக்குள்ள செல்வாக்கு அனைத்தையும் இந்த ஸ்தாபனங்களில்ஒன்றுக்கு அளித்தால், அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும். அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்க வேண்டுமென்ற கவலை எனக்கில்லை. அவர்களை நான் நேசிக்கிறேன், அது உண்மை. ஆனால் நான் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். அவ்விதம் நான் செய்தால், நான் ஒரு மாயமாலக்காரனாக இருப்பேன். 91இங்கு நான் நின்று கொண்டு, ஒரு பெண்ணுக்கு வாக்களித்த என் சொந்த மகன் இங்கு உட்கார்ந்திருக்கையில், நான்:உண்மையைக் கூறாமல் போனால். ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன். நான் சொன்னேன். அவனுக்கு அந்த திருமண வைபவம் நடந்திராமல் போனாலும், அவன் அந்த ஸ்திரீயுடன் வாழ்ந்து, அவளுடன் உறங்கி, அவன் என்ன செய்திருந்தாலும், அவன் அவளுக்கு வாக்களித்த போது அவளை மணந்து கொண்டான் - அது பில்லி பாலாயிருந்தாலும் வேறு யாராயிருந்தாலும், அது முற்றிலும் உண்மை. அவன் வாக்களித்த போதே அவன் மணந்து கொண்டான். அது நானாயிருந்தாலும், அதுவேதான். நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். நான் என் மகனுடன் உண்மையுள்ளவனாயிராமல் போனால், உங்களுடன் உண்மையுள்ளவனாயிருக்க முடியாது. நான் உங்களிடம் கூறுவது என் உண்மையுள்ள கருத்து என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதிலிருந்து எதையும் உண்டாக்கி விடாதீர்கள், நான் சொன்னவிதமாகவே அதை சொல்லுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் நான் உங்களுக்கு உண்மையையே உரைக்கிறேன். 92இப்பொழுது, நான் உங்களிடம் இவ்விதமாக அடிக்கடி பேசுவதில்லை, ஏனெனில் நீங்கள் என் பிள்ளைகள், அவ்விதமே உங்களை நான் அழைக்கிறேன். நான் சுவிசேஷத்தின் மூலம் உங்களை கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். நாம் இங்கு ஒன்றாய் இருக்கும் போது, நம்முடைய சொந்த குழு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, உங்களை சிறிது கடிந்து கொள்கிறேன். ஆனால் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் என்னிடம் வந்து ஏதாவதொன்றை கேட்பீர்களானால், எனக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சிறந்த முறையில் எடுத்துரைப்பேன். அது வார்த்தையில் இருக்குமானால், அது என்னைக் குற்றப்படுத்தினாலும்எனக்குக் கவலையில்லை, என்னிடமிருந்தும் அநேக காரியங்கள் அகற்றப்பட வேண்டியதாயுள்ளது. நிச்சயமாக! நீங்கள் என்னிடம் ஏதாவதொன்றைக் கேட்டால், நான் உங்களுக்கு பதில் கூறுவேன். உங்களுக்கு நான் ஏதாவதொன்றைக் கூறினால், உங்களுக்கு நான் சத்தியத்தையே கூறுவேன். அவ்விதமாகவே வாழ நான் எப்பொழுதும் முயன்று வந்திருக்கிறேன். அவ்விதமாவே நான் வாழ்ந்து அவ்விதமாகவே நான் மரிக்க விரும்புகிறேன் - எவரிடத்திலும் உண்மையுள்ளவனாயிருக்க. 93அண்மையில் ஒரு இளம் பெண் என்னிடம் வந்தாள்; அந்த ஸ்திரீ இப்பொழுது இங்கில்லை. டாம் சிம்ப்ஸன், உங்களில் பலருக்கு அவரைத் தெரியும். டாம் நல்லவர்; அவருடைய குடும்பத்தினர் இங்கில்லை (அவர்கள் எல்லோரும் திரும்பி போய் விட்டனர் என்று நினைக்கிறேன், ஃபிரட் இன்னும் இங்கு இருந்தாலொழிய . நான் .... பிரட் சாத்மன், அவர் இங்கிருக்கிறாரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. அவா இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்) டாம் சிம்ப்ஸன், அவர் ஃபிரட்டுடன் கூட கனடாவிலிருந்து வந்தவர். அவர்கள்... (உங்களுக்கு நமது தர்மகர்த்தா ஃபிரட்டைத் தெரியும்). உங்களில் பலருக்கு சகோ.டாம்மைத் தெரியும். டாம்“ அருமையான ஒரு மனிதன்; அவர் சிறந்த உடை உடுப்பவர்; திருமதி சிம்பஸனும் கூட. அவள் மட்டும் நான் சொல்வதற்கு செவிகொடுத்தால், அவள் மீண்டும் நடப்பாள். அவள் ஊனமுற்றவளாய் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டதை அவள் மட்டும் செய்வாளானால், அவள் நடப்பாள். அது உண்மையா என்பதை கவனித்து அறிந்து கொள்ளுங்கள் . பாருங்கள்? இப்பொழுது அவள் அதை எதிர்பார்த்தால், அவள் என்ன செய்ய வேண்டுமென்று கூறப்பட்டதோ, அவள் அதை செய்ய வேண்டும். 94அவளுடைய பெண்களில் ஒருத்தி, அழகான சிறு பெண்கள்... நான்.... அவர்கள் சிறுமிகளாயிருந்த போது, அவர்களை என் தொடையின் மேல் வைத்து அவர்களுடன் விளையாடுவது வழக்கம். இப்பொழுது அவர்கள் பெரியவர்களாகிவிட்டனர்; அவர்கள் ஏறக்குறைய ஸ்திரீகள், பத்து பன்னிரண்டு வயதுடையவர்கள். எனவே அவர்களில் ஒருத்தி என்னிடம் வந்து, “சகோ. பிரான்ஹாமே, நான் ஒரு சொப்பனம் கண்டேன்“ என்றாள். அவள் என்னிடம் அந்த சொப்பனத்தை உரைத்தாள். ”அதன் அர்த்தம் என்ன?“ என்று அவள் கேட்டாள். நான், “தேனே, எனக்குத் தெரியாது. நான் ஜெபிக்கிறேன், கர்த்தர் எனக்கு அதை அருளுவாரானால், நான் உன்னிடம் கூறுகிறேன்” என்றேன். அவள், “சரி” என்றாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் என்னிடம் வந்து, “அந்த சொப்பனம் கிடைத்து விட்டதா?” என்று கேட்டாள். நான், “இல்லை, தேனே, எனக்குக் கிடைக்கவில்லை; அவர் எனக்கு வெளிப்படுத்தி தரவில்லை என்றேன். ஓரிரண்டு வாரம் கழித்து அவள் திரும்பவும் வந்து, “சகோ.பிரான்ஹாமே, அந்த சொப்பனத்தைக் குறித்தென்ன?” என்று வினவினாள். நான், “எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அவள் ஏமாற்றமடைந்தது போல் காணப்பட்டாள். நான் ... 95இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் என்னிடம் ஏதாவதொன்றைக் கேட்டு, அதை நான் தேவனிடத்திலிருந்து பெறவில்லை என்றால், எனக்கும் கூட ஏமாற்றம் உண்டாகிறது. ஆனால் நான் மாய்மாலக்காரனாக அல்லது பொய்யனாக இருக்க மாட்டேன், உங்களிடம் நான் உண்மையே எடுத்துரைப்பேன். அவர் என்னிடம் கூறுவாரானால், அதை நான் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; அவர் கூறாமல் போனால், நானும் கூறமாட்டேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். அவ்விதமாக நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று என் மனதில் அறிந்திருந்தேன். ஆனால் அது சரியென்று எனக்கு எப்படித் தெரியும்? அதை நான் மறுபடியும் காண வேண்டும். கர்த்தருடைய நாமத்தில் நான் சொப்பனத்துக்கு அர்த்தம் உரைத்து, அது அவ்விதமாக இருக்கவில்லை என்று எப்பொழுதாவது எந்த ஒரு இடத்திலுள்ள யாருமே தன் விரலைச் சுட்டிக் காட்டி என்னைக் குற்றப்படுத்த முடியாது. ஆம், ஐயா! நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்தஏதொன்றும் அதேவிதமாக நிறைவேறாமல் போனதில்லை. ஏனெனில் நான் - அது அவர். அப்பொழுது அது என் பொறுப்பல்ல, அது அவருடைய பொறுப்பாகி விடுகிறது. - 96நான், “பார். ட்ரூடி, நாம் அரிசோனாவுக் குப்போகிறோம் என்று வைத்துக்கொள்வோம், நீ அங்கு அடைந்த பிறகு நான் உன்னிடம் வந்து, ”கர்த்தர் உரைக்கிறதாவது; உன் தம்பி (சிறு ஜானி, அவனுடைய வயிறு எப்பொழுதும் திறந்திருக்கிறது என்று நான் கேலி செய்வது வழக்கம்)... நான் அவளிடம், “அவன் தெருவில் வாகனம் ஏறி மரித்துப் போனான் என்று வைத்துக் கொள்வோம். நான் உன்னிடம் என்ன நடக்கப்போகிறதென்று உனக்குத் தெரியும், அவன் தெருவில் வாகனம் ஏறி மரித்துப் போவான்' என்கிறேன். நீ என்னிடம் வந்து, ”சகோ. பிரான்ஹாமே...' என்பாய். அல்லது அவனை சகோ. பிரான்ஹாமிடம் கொண்டு செல்லுங்கள்' என்பாய். அதன் பிறகு நீ என்னைத் தேடிக் கொண்டு வந்து, அப்பொழுது நான் வெள்ளை சூட் அணிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் படிக்கட்டில் நின்று பேசிக்கொண்டிருப்பேன். நான் ஜானியின் மேல் கை வைப்பேன். அவன் உயிர் பெற்று ஓடிப்போவான்“ என்று சொன்னேன். நான் அவளிடம், ”அதே விதமாக நீ மேற்கு பிரதேசத்துக்கு செல்கிறாய், முதலாவதாக என்ன தெரியுமா, ஒரு நாள் உன் தாயார் கதறுவதையும், உன் தந்தை கதறுவதையும் நீ கேட்கிறாய். நீ பார்த்த போது, ஜானி வாகனம் ஏறி மரித்துப் போயிருப்பதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்?' என்று கேட்டேன். பாருங்கள்? நீங்கள் என்னை நம்புகிறீர்கள். பாருங்கள்? உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் எதையும் ஊகித்து உங்களிடம் கூறப் போவதில்லை. உங்களிடம் நான் உண்மையைக் கூறுவேன், இல்லையென்றால் ஒன்றையும் கூற மாட்டேன். நான் அவளிடம், “அதன் பிறகு நீ என்னிடம் வந்து, 'ஓ, சிறு ஜானி' - அல்லது நீ உன் தாயிடம் வந்து, 'ஓ, சிறு ஜானி வண்டி ஏறி கொல்லப்பட்டான். அவன் மரித்துப் போனான், அவன் மரித்துப் போனான்' என்று கூறுகிறாய் என்று வைத்துக் கொள்வோம். 97டாக்டர் வருகிறார், அவனுடைய கண்களை திறந்து பார்க்கிறார், அவனுடைய இருதயத்தை, அவனுடைய மூச்சை பரிசோதிக்கிறார். அவர், “அவன் இறந்துவிட்டான், அவனை சவக் கிடங்குக்கு கொண்டு செல்லுங்கள்' என்கிறார், அப்பொழுது நீ , ”ஒரு நிமிடம் பொறுங்கள்! ஒரு நிமிடம் பொறுங்கள்! அவனை என் கரங்களில் ஏந்திக் கொள்கிறேன்; நாம் நடப்போம்“ என்கிறாய். ஆமென் “ட்ரூடி, நீ எங்கே போகிறாய்?” “எனக்குத் தெரியாது” “உன் கரங்களில் என்ன?” இறந்து போன உன் தம்பியை நீ கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். நீ தெருவில் நடந்து சென்று கொண்டேயிருக்கிறாய். ஜனங்கள் “அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?” என்று கேட்கின்றனர். இல்லை, ஐயா! அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறாள். என்ன நடக்கப் போகிறது? முதலாவதாக என்ன தெரியுமா? நீ உன் தகப்பனிடமும் தாயினிடமும், “பொறுங்கள், நாம் சகோ.பிரான்ஹாமைக் கண்டு பிடிப்போம். அவர் வெள்ளை சூட் அணிந்துள்ள ஒரு மனிதனுடன் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பார். அதோ அவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறதென்று பாருங்கள்” என்பாய். உன் மனதில் எவ்வித சந்தேகமுமில்லை. நீ என்னிடம் நடந்து வந்து, “சகோ.பிரான்ஹாமே, நீங்கள் என்னிடம் என்ன கூறினீர்கள் என்று ஞாபகம் உள்ளதா?” என்பாய். “ஆம், ட்ரூடி, ஜானி எழுந்திரு” அவன்குதித்தெழுந்து தெருவில் ஓடிப் போவான். 98நான் என் மனதில் சரியென்று படும் சில காரியங்களை ஊகித்து உங்களிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்லி விட்டு, அது தவறாயிருந்து, அது நடக்காமல் போனால், அது நிறைவேறாமல் போனால், அந்த பையனைக் குறித்து நீ பயம் கொண்டிருப்பாய். அவனைக் கொண்டு வர வேண்டுமா வேண்டாமா என்று உனக்குத் தெரியாது. உங்களுக்கு உதவி செய்ய தேவன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். அது உங்களை வெட்டினாலும், நோகப் பண்ணினாலும், என்ன செய்தாலும், அதை நான் கூறியே ஆக வேண்டும். 99இப்பொழுது விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில், நான் அதைக் குறித்து பேசுவதை நீங்கள் கேட்கும் வரைக்கும் அமைதியாயிருங்கள் என்று ஒரு சகோதரனைப் போல உங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா? நீங்கள் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே வாழ்ந்து கொண்டிருங்கள் (நான் இதன் பேரில் அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன்). “நாங்கள் இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்து கொண்டோம் (ஆம்) - திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால்” அருமை சகோதரியே, அருமை சகோதரனே, ஒரு முறை விற்பனையாளன் (Salesman) ஒருவர் என்னிம் இதைக் கூறினார், அவர் கனெக்டிகட் என்னுமிடத்தில் அல்லது அங்கிருந்த ஏதோ ஓரிடத்தில் ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தாராம் (அவர் ஒரு கிறிஸ்தவர்). அது ஒரு பெரிய ஆலயம், அவர் ஜெபிப்பதற்காக உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்து, ஜெபம் பண்ணுவதற்காக அந்த ஆலயத்தில் முழங்கால்படியிட்ட போது... அவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார், அவர்களைப்புற்றிருந்தார் வீட்டைக் குறித்த ஞாபகம் வேறு அவருக்கு வந்து விட்டது. அவர் ஒரு விற்பனையாளர். அவர் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து கொண்டே செல்பவர். அவர் ஏதோ ஒன்றை வாங்குவதற்காக அந்தப் பக்கம் சென்றிருந்த போது, இந்த ஆலயத்தைக் கண்டாராம். “நான் போவேன். நான் உள்ளே போய் ஜெபம் பண்ணுவேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டாராம். ஆலயத்தின் கதவுகள் திறந்திருந்தன, அவர் உள்ளே சென்றாராம். அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை, அவர் முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணத் தொடங்கினார். அவர் ஏறக்குறைய ஒரு மணி நேரமாக அங்கு ஜெபித்துக்கொண்டிருந்த பிறகு, கதவுகள் படாரென்று அடைக்கப்படும் சத்தத்தை அவர் கேட்டாராம். அது ஒருவேளை ஆலயக் காப்போனாக இருக்குமென்று எண்ணினாராம். சிறிது நேரம் கழித்து யாரோ பேசுவதை அவர் கேட்டார். அவர் மெல்ல நழுவி, அது ஆலயக் காப்போனா என்று கண்டுகொள்ள, சுற்று முற்றும் பார்த்தாராம். அங்கு ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் பீடத்துக்கு முன்பாக நின்று கொண்டு ஒருவர் கையை ஒருவர்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த மனிதன் அந்த ஸ்திரீயிடம், “அன்பே, உன்னை நான் சட்டப்படி விவாகமான என் மனைவியாக ஏற்றுக் கொள்ளுகிறேன்” என்றாராம்.அவளும், “அன்பே, உம்மை நான் சட்டப்படி விவாகமான என் .கணவனாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றாளாம். “இது என்ன விசித்திரமாயுள்ளதே, இந்த மனிதனும் ஸ்திரீயும் போதகர் இல்லாமலேயே விவாகம் செய்து கொள்கின்றனரே” என்று இந்த பெந்தெகொஸ்தேகாரன் நினைத்தாராம். பாருங்கள்? எனவே அவர் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழ்வார்கள் என்றும், மரணம் தவிர வேறொன்றும் அவர்களைப் பிரிக்காதென்றும் அவர்கள் பொருத்தனை செய்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்தாராம். அதன் பிறகு அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கை போட்டு, ஒருவரை யொருவர் முத்தமிட்டு, சிரித்துக் கொண்டே ஆலயத்தை விட்டு வெளி நடந்தனராம். அவர் அவர்கள் பின்னால் ஓடிச் சென்று “ஒரு நிமிடம், இது என்னவென்று அறிந்து கொள்ள எனக்கு ஆர்வம் தோன்று கிறது. நீங்கள் இருவரும் விவாகமா செய்து கொண்டீர்கள்?” என்று கேட்டாராம். அவர்கள் “ஆம்” என்றனராம். “போதகர் இல்லாமலா?” அதற்கு அந்த மனிதன், “இல்லை! எங்களுக்கு விவாகமாகி நாற்பது ஆண்டுகளாகி விட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பீடத்துக்கு முன்பாக நாங்கள் விவாகம் செய்து கொண்டோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விவாகத்தினத்தன்று நாங்கள் இங்கு வந்து எங்கள் விவாகப் பொருத்தனைகளை புதுப்பித்துக் கொள்கிறோம்” என்றாராம். பாருங்கள். ஆனால் விவாகம் செய்து கொள்ளுதலைப் பொறுத்த வரையில், நீங்கள் அவளுக்கு வாக்களிக்கும் போதே, அவள் உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறாள்; நீங்களும் அவள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறீர்கள். தேவன் உங்கள் இருவருடைய வார்த்தையையுமே ஏற்றுக்கொள்கிறார் பாருங்கள்? எனவே நீங்கள் வெறுமனே வாக்கு கொடுக்காதீர்கள்... (ஒலிநாடாவின் முதல் பக்கம் முடிகின்றது - ஆசி). 100அவர்கள் அதைக் கத்தரிக்கும் போது.. முன் பாகத்தில் தலை மயிரைக் கத்தரித்தால், அது நீண்ட தலைமயிராகக் கருதப்படுமா? (இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள், இதை நான் புரிந்து கொள்ளட்டும்) அவர்கள்... அது நீண்ட தலைமயிராக நல்லது, ஒருக்கால் அவர்கள், “அவர்கள் தலைமயிரை முன்பாகத்தில் கத்தரிக்கும் போது, அது அப்பொழுதும் நீண்ட தலைமயிராக கணக்கிடப்படுமா?” என்னும் அர்த்தத்தில் கேட்டிருக்கக் கூடும். அது ஒருபோதும் இனி நீண்ட தலைமயிராக கணக்கிடப் படாது, ஏனெனில் அவர்கள் அதை கத்தரித்து விட்டார்கள். பாருங்கள்? ஆனாலும் ஒரு மனிதன் தன் நீண்ட கால் சட்டையை மூன்று முறை வெட்டி அப்பொழுதும் அது மிகவும் குட்டையானதாக இருந்தது போல. என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல்கிறீர்கள்? (சகோ.பிரான்ஹாம் கூடியிருந்தவர்களில் யாரோ ஒருவரிடம் உரையாடுகிறார் - ஆசி). ஓ, அதைக் குறித்து தான் அவர்கள் கேட்டிருக்கிறார்களா? என் மகளை நான் கேலி செய்வதுண்டு. அவைகளை நான் “பூம்ஸ்” என்று அழைப்பதுண்டு, “பாங்ஸ்”, அது என்ன பெயரானாலும், இப்படி முன்பாகத்தில் கத்தரித்து விடுதல், அது உங்களுக்குத் தெரியும். நல்லது, நான் நினைக்கிறேன், முன் பாகத்தில் தலை மயிரைக் கத்தரித்துக் கெண்டிருக்கும் சிறு பெண்கள்... ஒருக்கால் உங்கள் தாயார் அதைக் குறித்து உங்களிடம் கூறக் கூடும் (பாருங்கள்), நீங்கள் அவ்விதம் கத்தரித்துக் கொள்ள வேண்டும் மென்று அவள் விரும்பினால். நான் நினைக்கிறேன், இருபத்தைந்து வயது பெண் முன் பாகத்தில் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, சிறு பெண்ணைப் போல் காணப்பட விரும்பினால், அவள் காரின் கண்ணாடி வழியாக ஏற்கனவே கடந்து வந்ததை பின் நோக்க முற்படுகிறாள். சகோதரியே, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பதை பார், நீ ஏற்கனவே கடந்து வந்ததை அல்ல. பார்? 101இப்பொழுது, தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும் விஷயத்தில் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் இவ்வளவுதான் கத்தரித்துக் கொள்ள வேண்டும், இதற்கு மேல் அல்ல என்பதை ஆதரிக்கும் எந்த வேத வசனமும் எனக்கு இல்லை. அதற்கு என்னிடம் எந்த வேத வசனமும் கிடையாது. சகோதரியே, சகோதரனே, யார் இந்த கேள்வியைக் கேட்டிருந்தாலும், என்னால் உங்களிடம் கூற இயலாது. ஆனால் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். நான் விரும்புவது என்னவெனில்.... என் மகள்கள் ரெபேக்காவும் - சாராவும் கூட சிறு பிள்ளைகளாயிருந்த போது அவ்விதம் கத்தரித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் முன் பாகத்தில் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, பின்பாகத்தில் தலைமயிரைப் பின்னியிடுவதை நான் கண்டிருக்கிறேன், முன்பாகத்தில் தலைமயிரை இவ்விதம் வாரி விட்டுக் கொள்வார்கள். இப்பொழுது, அவர்களின் சார்பாக நான் பேச வரவில்லை. பாருங்கள்? இல்லை, ஐயா! என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் தலைமயிரில் கத்தரிக்கோலை வைக்காமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் தலைமயிர் இவ்விதம் நீளமாக தொங்கிக்கொண்டிருந்து, தங்கள் கண்களின் மேல் விழாதபடி முன் பாகத்தில் மட்டும் ஒருக்கால் சிறு பெண்கள் கத்தரித்துக் கொண்டால், அது தவறா என்று என்னால் கூற இயலவில்லை. அது தவறில்லை என்று நான் நினைக்கிறேன், பாருங்கள்? ஆனால் நீங்கள்... சகோதரிகளாகிய நீங்கள், உங்களால் முடிந்தால், கர்த்தர் அதை எவ்விதம் உண்டாக்கியிருக்கிறாரோ அவ்விதமே அதை விட்டு விடுவதை நான் விரும்புவேன். பாருங்கள்? 102பெண்கள் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர் என்று அறிவேன்; அது அவர்களுடைய இயல்பு. அவர்கள் அப்படித்தான் காணப்பட வேண்டும். பாருங்கள்? அது நல்லதுதான், ஆனால் உலகத்தாரைப் போல் காணப்படாதீர்கள் (பாருங்கள்?) உலகத்தாரின் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். அது தவறு... அதை நீங்கள் அவ்விதம் கத்தரித்துக் கொள்ள விரும்பினால், அதை கத்தரிக்காதீர்கள். உங்கள் தலைமயிர் பின்னப்பட்டு நீளமாக தொங்கி கொண்டிருந்தால், அதை நீளமாகவே விட்டு விடுங்கள். நீங்கள் சிறுமிகளாக இருக்கும் பட்சத்தில்...... 103நியூயார்க்கில் இருக்கும் என் மாமனுக்கு ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மிகவும் அழகான தலைமயிர் இருந்தது. அது ஆழ்ந்த பழுப்பு நிற தலைமயிர். அவள் தலைமயிரை பின்னி விடுவது வழக்கம். என் தாயாருக்கு... அவர்களுக்கு பின்னின் தலைமயிர் முழங்கால் வரை நீண்டிருக்கும். இந்த சிறுமிக்கும் அதே விதமான பின்னின தலைமயிர் இருந்தது; அவளுடைய பெயர் ஜாக்வலின். அவள் அதன் ஒரு பாகத்தை இப்படி நீளமாக வாரி விட்டு, இதை இப்படி கத்தரித்துக் கொண்டிருப்பாள். அது ஏறக்குறைய பதினைந்து, பதினெட்டு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு. அவள் ஏன்தலைமயிர் முழுவதையும், இப்படி பின்னால் வாரிக் கொள்ளவில்லை, அது இந்த நவீன 'பீட்டில்ஸ்' வைத்திருப்பது போன்று இருப்பதைக் காட்டிலும் இன்னும் அழகாயிருந்திருக்குமே என்று நான் வியந்த துண்டு .... ஓ, அது உண்மை; நானாயிருந்தால் அவ்விதம் செய்ய மாட்டேன். 'பீட்டில்ஸ்'களைப் போல் காணப்படும் எதுவும், உலகத்தாரைப் போல் தோற்றமளிக்கும், அதை விட்டு விடுங்கள். ஆம்! 104என் கணவருக்கும் எனக்கும் வேதத்தின் பேரில் கருத்து ஒருமைப்பாடு இல்லை - உதாரணமாக நீங்கள் பிரசங்கிக்கும் இந்த சத்தியத்தின் பேரில் அவருக்குப் புரியவில்லை. நான் விசுவாசிக்காத போதகங்களைக் கொண்டிருக்கும் சபைகளுக்கு நான் அவருடன் செல்ல வேண்டுமா? இதைக் குறித்து நான் அதிகம் கலக்கமடைந்துள்ளேன். ஆம்! இந்த கணவனுக்கு நீ மனைவியாயிருப்பாயானால். அவர் உன்னைக் குற்றப்படுத்தவில்லை, நீ அவரைக் குற்றப்படுத்தக் கூடாது (பார்?), ஏனெனில், புருஷன் மனைவியினால் பரிசுத்தமாக்கப்படுகிறான். பார்? நான் நினைக்கிறேன், அவர் ஏதாகிலும் ஒரு ஸ்தாபன சபைக்குச் சென்று, நீ அவருடன் செல்ல வேண்டுமென்று அவர் விரும்பினால். பார்? நீ வேண்டாமென்று ... பார், அங்குள்ள எதுவும் உனக்கு கேடுண்டாக்காது, ஏனெனில் அவர்கள் போதிக்கிறதற்கு நீ எப்படியும் செவிகொடுக்கப் போவதில்லை, ஏனெனில் அவர்களுடைய போதகத்தை நீ விசுவாசிப்பதில்லை என்று நீ இங்கு கூறியிருக்கிறாய். பார்? எனவே அது உனக்கு கெடுதி விளைவிக்காது, ஆனால் நீ உன் கணவருக்கு மரியாதை செலுத்துகிறாய். அவருக்கு உன்னை ஒப்புக் கொடுக்கிறாய், ஒருக்கால் அவ்விதம் செய்வதனால் நீ... அவர்கள் இந்த காரியங்களை அங்கு போதிப்பார்களானால்... உனக்கு அதைக் காட்டிலும் மேலான காரியங்கள் போதிக்கப்பட்டுள்ளது; நீ உப்புத்தன்மை கொண்டவளாய் இருப்பாய்; அவர் உன்னைக் கண்டு கர்த்தரிடத்தில் வருவார். நான் மற்ற கேள்விகளுக்கு செல்கிறேன். என்னே இது. இப்பொழுது மணி என்னவென்று பாருங்கள்? 105சகரியா 4ம் அதிகாரமும், வெளிப்படுத்தல் 11:3-12 வசனங்களும் குறிப்பிடுவது ஒரே நபரையா? சகரியா 4:12-14 வசனங்களையும் வெளிப்படுத்தல் 11:4 ஐயும் பார்க்கவும். அவர்கள்தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர். இங்குள்ள இந்த சபையைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும். நாம் சகரியா 4ம் அதிகாரத்தைப் பார்ப்போம். ஓ, ஆம், அது அந்த இரு ஒலிவமரங்கள். ஆம். அந்த இரு ஒலிவமரங்கள், வெளிப்படுத்தல் 11 ... ஓ, ஆம், அதுதான் அதே காரியம். அது அவர்கள் இருவரும். அது மோசேயும் எலியாவும், இரு ஒலிவ மரங்கள். எங்களுடைய ஜெபிக்கவும், அது ஜெப விண்ணப்பம். நான் வருந்துகிறேன், இதை உங்களுக்கு முன்னால் படிக்க முடியாது. அது குடும்ப விவகாரம். ஆம், அங்குள்ளதுடன் இதை சேர்த்து விடுகிறேன். இதை எல்லோருக்கும் முன்பாக படிக்க முடியாது. எப்படியும், அவர்கள் தனிப்பட்ட பேட்டிக்கு வருகின்றனர். 106சகோ.பிரான்ஹாமே, இது தவறா.. (சகோ.பிரான்ஹாம் மேடையின் மேலுள்ள ஒருவருடன் உரையாடுகிறார் - 'ஆசி). ஞாயிற்றுக் கிழமையில் வேலை செய்வது தவறா? 107இதை சற்று முன்புதான் விளக்கினேன். மாடு குழியில் விழுந்து விட்டால், அதை தூக்கி வெளியே எடுக்கலாம், ஆனால் அதை ஞாயிறன்று வெளியே எடுப்பதற்காக அதை குழியில் தள்ளி விடாதீர்கள். சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அடுத்த ஞாயிறு இங்கு பிரசங்கம் செய்வீர்களா? அது ஒரு கேள்வி மட்டுமே. இல்லை, சகோதரியே, சகோதரனே, அது யாராயிருந்தாலும். இப்பொழுது. இவை இங்கு கிடந்திருந்தன. யாராவது அதை உறையில் போட்டிருப்பார்கள். சகோதரனே... இது உங்களுக்கு, சகோ. காப்ஸ், “நீங்கள் 'நாம் ஒருக்காலும் வயோதிபமாவதில்லை' என்னும் பாடலைப் பாடுவீர்களா? நான் இதை... இது எப்படியோ மற்றவைகளுடன் கலந்து விட்டது. 108சகோ.பிரான்ஹாமே, நீங்கள் ஏன் வேதத்தில் சொல்லப்படவில்லை என்று ஒருவர் அறிய விரும்புகிறார். நீங்கள்ஆபகூக்2:1-4 என்று நான் விசுவாசிக்கிறேன். (அதை எடுங்கள், சகோ .நெவில், ஆபகூக் 2:1-4). அவர்கள் இதையும் 3ம் அதிகாரத்தையும் படிக்கட்டும்... நான்கு அதிகாரங்களில் உள்ள பெயர்களும் முன்னடையாளங்களும், நீங்கள்தான் என்று நம்புகிறேன். இப்பொழுது, அவர் அந்த வேத பாகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது, அது ஆபகூக் 2:1-4. சகோதரனே, சகோதரியே, இந்த கேள்வியைக் கேட்டது யாராயிருந்தாலும் (பெயர் எதுவுமில்லை, அது நல்லது). இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், உங்கள் இருதயத்தில் என்ன உள்ளதென்று நான் அறிந்து கொள்வேன். (பாருங்கள்?), அதன்பிறகு நான் உங்களிடம் கூறுவேன். இல்லை. பாருங்கள்? உங்கள் பெயர் வேதத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை (பார்த்தீர்களா, பாருங்கள்?), ஆனால் நீங்கள் வேதத்தில் உள்ள வரைக்கும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், நீங்கள் வேதத்தில் இருக்கின்றீர்கள்; நீங்கள் அவருக்குள் வேதத்தில் இருக்கிறீர்கள் (பார்த்தீர்களா?), நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், நீங்கள் வேதத்தின் பரிபூரணத்தில் இருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, உங்கள் முழு நிலையில் இருக்கிறீர்கள். எல்லோரும் இதை புரிந்து கொண்டீர்களா? 109அதை வைத்திருக்கிறீர்களா, சகோ.நெவில்? என்ன? ஆம். ஆபகூக்... இதை நான் படிக்கவில்லை, இது இங்கே போடப்பட்டிருந்தது, இன்று காலையில் என்று நினைக்கிறேன். ஆபகூக் 2:1-4. அதுதான் இது. ஆபகூக் 2:1 முதல் 4 வசனங்கள். நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலை கொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும் போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும் படிக்குப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். 110நல்லது, நான் நினைக்கிறேன், இதைக் கேட்ட இந்த அருமையான நபர்... பார்த்தீர்களா? இது என்னை நேசிக்கின்ற யாரோ ஒருவர், இல்லையென்றால் அவர் இதை எழுதியிருக்க மாட்டார். பாருங்கள்? இப்பொழுது, நான் கூற முடியாது என்... வேதம் என் பெயராகிய வில்லியம் பிரான்ஹாம் என்பதை கூறவில்லை, அல்லது உங்கள் பெயரையும், நீங்கள் யாராயிருந்தாலும் நாம் எப்படியும் அவருக்குள் இருக்கிறோம். இவைகள்... இப்பொழுது, வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள நன்றாகத் தெரிந்த சில பாகங்கள், குறிப்பிட்ட காரியங்களை உரைப்பதை நீங்கள் காணலாம். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், வேதத்தில் சரித்திரம் மீண்டும் நிகழ்கிறது. பாருங்கள்? வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன். (உங்களில் பலர் எழுதிக் கொள்வதைக் காண்கிறேன்). இப்பொழுது, மத்தேயு 3ம் அதிகாரத்தில் “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது' என்று கூறப்பட்டுள்ளது. (மத்.2:15) . உங்களுக்கு ஸ்கோ ஃபீல்ட் அல்லது வேறெந்த ஒத்துவாக்கிய வேதாகமம் இருக்குமானால், நீங்கள் ஒத்து வாக்கியங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருவீர்களானால், அது யாக்கோபை, இஸ்ரவேலை எகிப்திலிருந்து வரவழைத்த வேத வசனத்துக்கு உங்களை கொண்டு சேர்க்கும். பாருங்கள்? யாக்கோபு அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன்; இயேசுவும் கூட அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன். எனவே (பாருங்கள்?) தேவனுடைய வார்த்தை ஒரு போதும் முடிவு பெறுவதில்லை. பாருங்கள், நாம் வேதத்தில் நம்மை வெவ்வேறு விதமாக அடையாளம் கண்டு கொள்கிறோம்.... கிறிஸ்தவ கதாபாத்திரங்களுடன் உங்களை அடையாளம் கண்டுகொள்ளுதலின் பேரில் நான் அரிசோனாவிலுள்ள, பீனிக்ஸில் பிரசங்கித்தது எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? ஆம், உங்கள் அநேகரிடம் அந்த செய்தியின் ஒலிநாடா உள்ளது. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் உங்களை வேதத்தில் அடையாளம் கண்டு கொள்ள இயலும். நீங்கள் கிறிஸ்தவரல்லாத போதிலும், உங்களை நீங்கள் வேதத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பாருங்கள்? எனவே அது உங்களுக்கு உதவியாயிருக்குமென்று நினைக்கிறேன். என்னால் முடிந்த வரையில் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறேன். 111சகோ.பிரான்ஹாமே, கிருபை முடிந்து விட்டதென்றும் இனிமேல் வேறு யாரும் இரட்சிக்கப்பட முடியாதென்றும் சிலர் கூறுகின்றனர் (இது என் கையில் கிடைத்ததைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி). நாங்கள் ஜெப வரிசைகளை கவனித்துக் கொண்டு வருகிறோம், சிலர் இன்னும் கிருபையைப் பெறுகின்றனர் என்பது போல் தோன்றுகிறது.இப்பொழுது, இது முதல் கேள்வி, இரண்டு கேள்விகள் உள்ளன. “கிருபை முடிந்துவிட்டதா? அப்படி ஒரு போதும் நினைக்காதீர்கள். பாருங்கள்? நீங்கள் எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருங்கள். பாருங்கள்? “ஜெப வரிசைகளில் சிலர் கிருபை பெறுவதை நாங்கள் கவனிக்கிறோம்”. நிச்சயமாக! கிருபை - கதவுகள் திறக்கப்பட்டுள்ளன பாருங்கள்? நான் நினைக்கிறேன் நீங்கள் போகுமிடத்தில் இந்த எண்ணம்... பாருங்கள், இந்த வேத வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த எனக்கு நேரமில்லை (பாருங்கள்?). இவை ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த. அவர்கள்... ஜெப வரிசையில் நீங்கள் கிருபையைப் பெறுகின்றீர்கள், நிச்சயமாக இயேசு இன்று பிற்பகல் வரப் போகிறார் என்று நான் அறிந்தால், இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பதைஅப்பொழுதும் செய்து கொண்டிருப்பேன் (பாருங்கள்?), அதை அப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். கிருபை எப்பொழுதும் திறந்துள்ளது. பாருங்கள்? 112இப்பொழுது, நான் நினைக்கிறேன், இந்த எண்ணம் எங்கு உங்களுக்கு கிடைத்ததென்றால், ஏழு சபை காலங்களுடனும், ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு முடிக்கப்பட்டதுடனும் இது சம்பந்தப்பட்டது. பாருங்கள்? ஏழு முத்திரைகள், என்ன நடக்கிறது - என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தினது. ஏழாம் சபை காலம், நாம் ஏழாம் சபை காலத்தின் முடிவில் இருக்கிறாம். நான் முடிவு என்று கூறும்போது, இந்த மணி நேரத்தில், இந்த நிமிடத்தில் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்திலேயே வேதம் என்ன உரைத்ததென்றால்; பவுல், “காலம் சமீபமாயிருக்கிறது” என்று கூறினான். அது தேவனுடைய நேரத்தின்படி எவ்வளவு காலம் என்று நீங்கள் உணருகிறீர்களா? அது நேற்று. என் காலத்தின்படி அது இரண்டாயிரம் ஆண்டுகள். பாருங்கள்? காலம் சமீபமாயிருக்கிறது. பாருங்கள்? சமீபமாயிருக்கிறது என்று தேவன் அழைப்பது, நாம் சமீபமாயிருக்கிறது என்று அழைப்பது போன்ற ஒன்றல்ல. பாருங்கள்? எனவே தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து... தேவன் இன்னும் கிருபையை திறந்துதான் வைத்திருக்கிறார். உங்களால் முடிந்தவரை, அதற்குள் வேகமாக பாய்ந்தோடுங்கள். நிறுத்துவதற்கு நேரம் வரும்போது, தேவன் அதை நிறுத்துவார் .பாருங்கள்? 113இப்பொழுது, சகோ.பிரான்ஹாமே, உம்மைத் தவிர வேறு யாரும் பிரசங்கம் பண்ணக் கூடாதென்பது உண்மையா? நீர் மனிதரை அபிஷேகித்து போதகர்களாக நியமிப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அவர்கள் பிரசங்கம் பண்ணக் கூடாதென்றால் நீர் அவ்விதம் செய்திருக்க மாட்டீர் என்பது எங்கள் கருத்து. இரக்கம் வேண்டுகிறேன்!' சகோதரனே, சகோதரியே, என்னைத் தவிர வேறு யாருமே பிரசங்கிக்கக் கூடாதென்று யார் உங்களுக்குச் சொன்னார்களோ! அப்படியானால் நான் தேவனுக்கு மிகவும் மோசமான பிரஜையாயிருப்பேன். இல்லை! தன் வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பை உணரும் ஒவ்வொரு மனிதனும் ஊழியத்தில் பிரவேசித்து பிரசங்கம் பண்ணத் தொடங்க வேண்டும்; அவர்கள் நமக்குத் தேவை. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவனுடைய மனிதர் உலகெங்கிலும் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர். பாருங்கள்? நான் கடற்கரையில் உள்ள அநேக பெரிய கற்களின் மத்தியில் ஒரு சிறு கூழாங்கல் மட்டுமே. பாருங்கள்? எனவே நான் .... பிரசங்கிப்பதற்கு என்னைக் காட்டிலும் அதிகம் தகுதி வாய்ந்த, மற்றவைகளை அதிகம் பெற்றுள்ள அநேகர் உள்ளனர்; நான் இங்கு கிடக்கின்ற மிகவும் சிறிய, எளிய ஒருவன். களஞ்சியம் முழுவதிலுமுள்ள கோதுமையில் நான் ஒரு சிறு கோதுமை மணியே. பாருங்கள்? எனவே அது ஒரு... நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? தேவனால் அழைக்கப்பட்ட எந்த ஒரு மனிதனும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியது அவசியம். 114ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய அன்பில் ஆழமாகச் செல்லக் கூடிய வழி' எது? வேதாகமத்தைப் படித்து ஜெபிப்பதே. தேவனுடைய வசனத்தைப் படித்து ஜெபியுங்கள். நான் வேகமாக செல்லப் போகிறேன். என்னால் கூடுமான வரையில் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகிறேன், ஒரு கேள்வியை நான் அனுப்பியிருந்தேன், ஆனால் அதை தவறாகக் கேட்டு விட்டேன். நகரத்தை விட்டுச் செல்லும் முன்பு சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்துவீர்களா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில், உம்மிடத்தில் தனிப்பட்ட பேட்டி ஒன்றைப் பெறுவது எப்படி? இப்பொழுது, இந்த நபர் காலையில் பேட்டிக்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன். நாங்கள் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்தினோம். எங்களுக்கு சுகமளிக்கும் ஆராதனை ஒன்று இருந்தது. 115சகோ.பிரான்ஹாமே, 1 கொரிந்தர் 11ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்களை தயவு கூர்ந்து விளக்கவும். அது தலைமயிரைத்தவிர வேறு ஒரு முக்காட்டைக் குறிக்கவில்லையா?அல்லது, நமக்குத் தேவையான ஒரே முக்காடு நீண்ட தலைமயிர் மட்டுமா? (1 கொரிந்தியர் 11ம் அதிகாரத்தை எனக்கு எடுத்துத் தாருங்கள், நாம் பார்ப்போம். 1 கொரிந்தியர் 11:4). அது உரைக்கிறது நாம் ஜெபிக்கும் போது... (ஓ, ஆம் அவர்கள் அதை இங்கு கூறியுள்ளனர். அவர்கள் கூறுகின்றனர்). ஜெபிக்கும்போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, நமது தலைமயிரை நாம் எடுத்துவிடலாமா... (நாம் பார்ப்போம், அவர்கள் இங்கு ஒன்றை கோடிட்டுள்ளனர்.) தீர்க்கதரிசனம் உரைக்கும் போது நமது தலைமயிரை நாம் எடுத்துவிடலாமா... (நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்றால்), நாம் தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, தலைமயிரை எடுத்து விடவும் போட்டுக் கொள்ளவும் செய்யலாமா? நீங்கள் தலைமயிர் துண்டு (hair piece) ஒன்றை அணிந்திருப்பீர்களானால், அவ்விதம் செய்யலாம், ஆனால் வீட்டில் டோப்பாக்கள் அல்லது அது போன்ற ஒன்றை அணிந்து கொள்ளும் விஷயத்தில்... நான் அதில் சரியாக காட்சியளிக்கக் கூடுமானால், நானும் கூட ஒருக்கால் ஒன்றை அணிந்து கொள்வேன், ஆனால் பீட்டில் டோப்பாவை அல்ல, ஒரு தலைமயிர் துண்டை. 116அது உண்மை. உங்களுக்குத் தலைமயிர் இல்லாமல் இருந்து, நீங்கள் ஒன்றைப் பெற விரும்புவீர்களானால், உங்களால் அதை செய்ய முடியுமானால், அதனால் தவறொன்றுமில்லை. ஆம், ஐயா! ஒரு ஸ்திரீக்கு தலைமயிர் போதுமான அளவுக்கு நீளமாக இல்லையென்றால், அவள் சவரி மயிர் போன்ற தலைமயிரை அதனுடன் இணைத்துக் கொள்ள விரும்பினால், அதைப் போட்டுக் கொள்ளுங்கள், சகோதரியே, என்று நான் கூறுவேன். ஒரு மனிதனுக்கு பயங்கர ஜலதோஷம் பிடித்து, ஏதாவதொரு விதத்தில் அதை தடுக்க விரும்பினால், அல்லது தன் மனைவிக்கு நன்றாக காணப்பட விரும்பினால், அவர் ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொள்ள விரும்பினால், அப்படியே செய்யுங்கள். அதனால் தவறொன்றும் இல்லை (இல்லை, ஐயா!) நீங்கள் பல் கட்டிக் கொள்வது அல்லது செயற்கை கை வைத்துக் கொள்வது போல. இயற்கை உங்களிடமிருந்து ஏதாவதொன்றை எடுத்து விட்டு, இவைஅதற்கு பதிலாக நமக்கு கிடைக்கிறதென்றால், அதை செய்யுங்கள். அது முற்றிலும் சரி. ஆனால் அது இங்கு என்ன கூறுகிறதென்றால், “ஜெபிக்கும் போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, நாம் தலை மயிரை எடுத்துவிடவும் போட்டுக் கொள்ளவும் செய்யலாமா?” இதன் அர்த்தம் என்ன? 117சரி, அதை படியுங்கள் சகோ. நெவில்.. 4 முதல் 6 வசனங்கள். சரி, சரி. ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக் கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். (அதாவது. அவனுக்கு நீண்ட தலைமயிர் இருக்குமானால். சரி). ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக் கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும், தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்... (அது அவளுடைய கணவன்). அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள்.. (அவள் தலைமயிரை 'பாப்' செய்து கொள்ள விரும்பினால், அதை முழுவதும் சிரைத்து விடக்கடவள். பாருங்கள்? அவளுக்கு முடியாதென்றால்...); தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக் காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள். அங்கு, தலைமயிரை எடுத்து விடுவதையும் போட்டுக் கொள்வதையும் குறித்து எதுவும் சொல்லப்பட்டதாக என்னால் காண. முடியவில்லை. அவள் தலைமயிரை கத்தரித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை முழுவதுமாக சிரைத்துப் போடக்கடவள் என்றுதான் அவர் கூறியிருக்கிறார். பாருங்கள்? ஏனெனில், அவள் தலைமயிரை வைத்துக் கொள்ள விரும்பாமல் போனால்; ஏனெனில் தலைமயிர்தான் அவள் முக்காடு. ஆனால் ஒரு மனிதன் தன் தலையை மூடிக் கொண்டால், ஸ்திரீயைப் போல் நீண்ட தலைமயிர் வைத்துக் கொண்டு பிரசங்க பீடத்தில் நின்றால், அங்கு அவன் ஸ்திரீயைப் போல் காணப்படுவான். பாருங்கள்? ஆகையால் அவன் அவ்விதம் வைத்துக் கொள்ளக் கூடாது. பாருங்கள்? 118தலைமயிரை எடுத்து விடுவதும் போட்டுக் கொள்வதும் என்பதை என்ன அர்த்தத்தில் கூறியிருப்பார் என்றால்.... ஒரு மனிதன் தன் தலையை முக்காடிட்டுக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைப்பதென்றால், அவன் அந்த முக்காட்டை எடுத்து விட வேண்டும் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கக் கூடும். பாருங்கள் இல்லை. அதுவல்ல. அவனுக்கு நீண்ட தலைமயிர் இருந்தால் அவன் தலையை மூடிக் கொண்டதாக அர்த்தம். இப்பொழுது, இந்த கேள்வியைக் கேட்டவரே, நீங்கள் இன்னும் சிறிது கீழே வாசிப்பீர்களானால், ஸ்திரீக்குத் தலை புருஷன் என்பதாக நீங்கள் கண்டு கொள்ளலாம். எத்தனை பேருக்கு அது தெரியும்? புருஷனின் தலை கிறிஸ்து; எனவே கிறிஸ்துவுக்காக ஒரு மனிதன் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவருக்குள் மனிதன், ஸ்திரீ, எல்லாருமே உள்ளனர். அவர் தகப்பன், தாய், சகோதரி எல்லாமுமாய் இருக்கிறார். ஆனால் ஒரு மனிதனுக்குள் ஆண்மை மட்டுமே உள்ளது. எனவே அவன் கிறிஸ்துவின் நிமித்தம் அதை கத்தரித்து விட வேண்டும். ஆனால் ஒரு ஸ்திரீக்குள் பெண்மை மட்டுமே உள்ளது. எனவே அவள் தன் தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில் அவளுடைய புருஷன் அவளுக்கு மேல் இருக்கிறான். அவன் அவளுடைய ஆண்டவன், ஆளுகை செய்பவன்; எனவே அவள் நீண்ட தலைமயிர் வைத்திருக்க வேண்டும். பிறகு, அவள் அதை கத்தரித்து விட வேண்டுமென்று சொன்னால், அதை முழுவதும் சிரைத்து விடக்கடவள். ஆனால் அழகாக காணப்பட வேண்டிய ஒரு ஸ்திரீக்கு தன் தலைமயிரை சிரைத்துக் கொள்வது வெட்கமாகவோ அல்லது அவமானமாகவோ இருந்தால், அவள் தன் தலையை மூடிக் கொள்ளக் கடவள்; அவள் நீண்ட தலைமயிரை வைத்துக் கொள்ளக் கடவள். பாருங்கள். எனவே அது... எவருக்குமே... எல்லாருக்கும் விளக்கப்பட்டு விட்டதா? அது சரியாக தொனிக்கிறதா? அப்படியானால், அது உங்களுக்கு விளங்கி விட்டால் “ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி), சரி. 119சகோ.பிரான்ஹாமே, நமக்கு இன்னும் பத்து நிமிடம் மட்டுமே உள்ளது) - சகோ.பிரான்ஹாமே, நாங்கள் வாழுமிடத்தில் பிரசங்கி எவருமில்லை, ஆனால் ஞாயிறு இரவு மட்டும் நாங்கள் ஒலிநாடா ஆராதனை நடத்துகிறோம். எங்கள் பிள்ளைகளை ஞாயிறுபள்ளிக்காக வேறொரு சபைக்குக் கொண்டு செல்ல வேண்டுமா? ஒலிநாடா ஆராதனைகள் போதுமானதா? நல்லது, உங்கள் பிள்ளைகள் செல்லும் வழியை அனுசரித்து அது இருக்கட்டும். பாருங்கள்? உங்கள் பிள்ளைகள் வாலிபமுள்ளவர்கள்; அவர்கள் அறியத்தகாததை திணிக்கின்ற ஏதாவது ஒரு கூட்டம் மக்களிடையே நீங்கள் அவர்களைக் கொண்டு செல்வீர்களென்றால், நான் அவ்விதம் செய்ய மாட்டேன். அவர்கள் ஒலிநாடாக்களின் வாயிலாக போதுமானதை அறிந்து கொள்வார்களானால்... நீங்கள் அவர்களை ஒரு கத்தோலிக்க சபைக்கோ அல்லது அத்தகைய வேறொரு சபைக்கோ கொண்டு செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; அந்தவிதமான ஆலோசனையை நான் உங்களுக்கு கூற மாட்டேன். பாருங்கள்? அவர்கள்... ஆனால், அங்கு ஒரு நல்ல சபை உங்களுக்கிருந்து, அவர்கள் ஒருக்கால் உங்களுடன் இரண்டு மூன்று காரியங்களில் ஒத்துப் போகாமல் இருந்தாலும், அவர்கள் முழு சுவிசேஷ ஜனங்களாக இருந்து, உங்கள் பிள்ளைகள் அங்கு ஞாயிறு பள்ளிக்கு செல்ல விரும்பினால், அது முற்றிலும் சரி. ஆனால், பாருங்கள், நீங்கள் ஒரு இடத்தை அடைவீர்களானால்... உங்கள் பிள்ளைகள் அதை எவ்விதம் எடுத்துக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தது. பாருங்கள்? உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர், அவர்களில் ஏற்படும் விளைவு என்னவென்பதை கவனித்து வாருங்கள். 120நாம் பார்ப்போம். உங்களுக்கு போக ஒரு சபை இல்லாவிட்டால், நீங்கள் ஒலிநாடாக்கள் மட்டும் கேட்கலாமா? ஆம்! அது - நான் .... அது நல்லதாயிருக்கும்.... 121உங்கள் பிள்ளைகள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு அனுபவம் தேவையா? அவர்கள் கடைசி கால செய்தியைப் புரிந்து கொண்டால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனரா? ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் தேவை. நீங்கள் செல்லும் அதே வழியைத் தவிர வேறு வழியில் உங்கள் பிள்ளைகள் செல்ல முடியாது. பாருங்கள்? அவர்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் பேரப்பிள்ளைகள் கிடையாது, அவர்கள் அனைவரும் பிள்ளைகளே. அவர்கள் அதைப் பெற்றிருக்க வேண்டும், உட்பிரவேசிப்பதற்கு அவர்கள் தேவனிடம் ஒரு அனுபவத்தைப் பெற்றிருத்தல் அவசியம், நீங்கள் பெற்றிருப்பது போல். நான் புரிய வைத்துவிட்டேன் என்று நம்புகிறேன். அது .. 122அன்பார்ந்தவரே (நாம் பார்ப்போம்), எபேசியர் 4ம் அதிகாரம் 11 முதல் 13 வசனங்களில் உரைக்கப்பட்டுள்ளபடி (நாம் பார்ப்போம்) - ஒலிநாடாக்களின் மூலமாக நாம் பரிசுத்தவான்களின் சீர்பொருந்துதல் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறோமா, அல்லது நாங்கள் சீர்பொருந்துவதற்கு எங்களுக்கு உதவ, நாங்கள் ஆவியின் வரங்களும் சபையின் வெவ்வேறு உத்தியோகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்த இடத்துக்கு வர வேண்டுமா, எங்கள் இருதயங்கள் கர்த்தருடைய வார்த்தை அனைத்தும் விசுவாசித்து விட்டன. இந்த நபர் ஆரிகானைச் சேர்ந்தவர். இப்பொழுது, என் . அருமை... இது யாரென்று எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அது... ஓ, ஆமாம், எனக்குத் தெரியும், எனக்கு நிச்சயமாகத் தெரியும். உங்கள் மகன்... அந்த நபர் இங்கு இருப்பாரானால்... நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். இல்லையென்றால், நீங்கள் போன வாரம் இருந்திருப்பீர்கள். பாருங்கள்? அது போன வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுடன் வந்திருக்கும். உங்கள் மகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார், பாருங்கள், அது - அவர் கட்டுப்படுத்துகிறார். அவர்தான் உங்களுடன் ஆரிகானில் வேட்டைக்கு செல்ல எனக்கு அழைப்பு விடுத்தார் என்று நினைக்கிறேன். அங்கு... அது சரியென்று எண்ணுகிறேன். எனக்கு இந்த நபரை கடிதம் மூலமாகத் தெரியும். எனவே... - இல்லை! சீர்பொருந்துதலுக்காக (perfecting) அவர்கள் இந்த சபைக்கு வர விரும்புகின்றனர். பாருங்கள்? நாங்கள் இங்குள்ள இந்த சபையில் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்கிறோம், ஆனால் சீர்பொருந்துதல் நமக்கும் தேவனுக்குமிடையே உண்டாகின்ற ஒன்று. கிறிஸ்துவின் இரத்தமே நம்மை பரிசுத்த ஆவியில் சீர்பொருந்தப் பண்ணுகிறது. பரிபூரணப்படுத்துகிறது. 123220, இப்பொழுது சபையில், “வரங்கள் இயங்குகின்றன” என்று அவர் கூறியுள்ளார். இங்கு நிறைய வரங்கள் இயங்குவதில்லை, ஆனால் சில வாரங்கள் எங்களிடையே காணப்படுகின்றன. எங்களிடையே அந்நிய பாஷை பேசும் வரங்களும், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் உள்ளன (இரண்டு மூன்று வரங்கள்). நான் நினைக்கிறேன் இங்குள்ள சகோ.ஹிக்கின்பாதம், அவர் இப்பொழுது எங்கிருந்தாலும், அவருக்கு அந்நிய பாஷை பேசும் வரம் உள்ளது. சகோ. ஜூனியர் ஜாக்சன் இன்று நம்முடன் 'இருக்கிறார், அவரும் அந்நிய பாஷை பேசுவார். பிறகு பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் இரண்டு மூன்று பேர் நமக்குள்ளனர். நமது போதகர் சகோ.நெவிலும் கூட அந்நிய பாஷை பேசுகிறார், சில நேரங்களில் தீர்க்கதரிசனமும் உரைக்கிறார். கர்த்தர் அவர் மேல்... அன்றொரு நாள் அவர் ஒன்றை தீர்க்கதரிசனமாகக் கூறினார். நான் சென்றிருந்த ஒரு வீட்டில் அவர் தொலைபேசியில் கூப்பிட்டு, அவர் ஒருவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாகவும், குடிகாரன் ஒருவனின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதல் உடனே உண்டாகும் என்றும் அவர்களிடம் கூறினார், அப்படி ஏதோ ஒன்று. அந்த மனிதன் குடிபழக்கம் உள்ளவர்களை சீர்திருத்தம் பண்ணும் விடுதியிலிருந்து குடிகாரனாகவே வெளியே வந்து, அறுபத்தெட்டு நாட்களாக மதுவைத் தொடவேயில்லை, அதற்கான மருந்து ஒன்றும் சாப்பிடவேயில்லை. அது சகோ.நெவில் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாகும். ... எனவே, எங்கள் மத்தியில் சில வரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, உங்கள் எவரோடும் எங்களுக்கு ஐக்கியங் கொள்ள மிக்க மகிழ்ச்சி. அதற்கான ஒரு வாய்ப்பு இருக்குமானால், உங்களுக்கு வேலை அருகில் எங்காகிலும் இருக்குமானால், அல்லது எங்களிடம் வந்து ஐக்கியம் கொள்ள விரும்பினால், எங்களால் எதை செய்ய முடிந்தாலும், அதைக் குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைவோம். பாருங்கள்? ஆனால் பரிபூரணப்படுதல் கிறிஸ்துவுக்கே உரியது. இப்பொழுது, பார்ப்போம், இன்னும் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள். 124சகோ.பிரான்ஹாமே, சகோ. ஆர்கன்பிரைட் எடுத்த படத்தை தயவாய் விளக்குவீர்களா? முதல் கேள்வி. சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிற இரண்டாம் படம், உங்களைச் சுற்றியுள்ள ஒளி, வார்ப்பூட்டு (buckle) போன்றவை. நல்லது, இப்பொழுது, நான் என்னவென்று உங்களுக்கு கூறுகிறேன். அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்ப மிட்டுள்ளனர், அவர்கள் இப்பொழுது இங்கில்லை. அது என்னவென்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஜாக்சன். அவர்கள் திரும்பிப் போய் விட்டனர். நமக்கு அது என்னவென்று தெரியும்; அதை நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.' 125சபை எப்பொழுது - உபத்திர காலத்தில் மரித்த சபை எப்பொழுது உயிரோடெழுந்திருக்கும்? அவர்களும் தேவ பக்தியில்லாதவர்கள் உயிரோடெழும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா? அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது மறுபடியும் உயிரோடிருப்பார்களா? இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி. என்னால் இதற்கு கொடுக்கக் கூடிய நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பெற இது தகுதி வாய்ந்தது. ஆனால் நான்... பாருங்கள்? எனக்கு நேரமில்லை... நான் காலையில் தொடங்கி இரண்டு மணி நேரமாகியும், இன்னும் மூன்றில் இரண்டு பாகம் கேள்விகள் உள்ளன. அதிகமான கேள்விகள், அவை அனைத்தையும் பார்க்க முடியாது. பாருங்கள்? என்னால் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ, அவைகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவை எங்குள்ளது என்று காணாமலே, அவைகளை பொறுக்கி எடுக்கிறேன், இதில் மிகவும் நல்ல சில கேள்விகள் உள்ளன என்று அறிவேன், அவைகளுக்கு விடை தெரிய வேண்டும் - உதாரணமாக சர்ப்பத்தின் வித்து போன்றவை விளக்கப்பட வேண்டும். ஆனால் நான் துரிதப்பட்டு, இவைகளை வேகமாகப் பார்க்கப் போகிறேன். 126“உபத்திரவ காலத்தில் மரித்த சபை (பாருங்கள்?) உயிர்தெழுதலில் இருக்குமா? - இரண்டாம் உயிர்த்தெழுதலில். “அவர்களும் தேவபக்தியில்லாதவர்கள் உயிரோடெழும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா?” நீதியுள்ளவர்களும் அநீதியுள்ளவர்களும் ஒரே நேரத்தில் எழுந்திருப்பார்கள். “அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது மறுபடியும் உயிரோடிருப்பார்களா?” இல்லை! மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை“ (வெளி. 20:5). இப்பொழுது, இது மிகவும் சுருக்கமான பதில், ஆனால் நான் உறுதி கொண்டிருக்கிறேன்... 127கிறிஸ்துவுக்குள் சுதந்தரம் என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன? நியாயப்பிரமாணத் திலிருந்து விடுதலையாக்கப்படுதல் எப்படி? நல்லது, நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. உதாரணமாக, இங்கு அதே காரியம்; இதை நான் இயற்கை வழியில் வேகமாக விளக்குகிறேன். உதாரணமாக, நீங்கள் தெருவில் அதிகபட்சம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில்தான் 'செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். சரி, இப்பொழுது நான் தெருவில் மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் செல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நான் சட்டத்தினால் (பிரமாணத்தினால்) குற்றவாளி யென்று தீர்க்கப்படுகிறேன். ஆனால் நான் தெருவில் மணிக்கு முப்பது மைல் மட்டும் செல்வேனானால், நான் பிரமாணத்தின் கீழ் இல்லை. பாருங்கள்? அதுதான் கிறிஸ்துவுக்குள் சுதந்தரம் (பாருங்கள்?) அதே காரியம். நீங்கள் செய்யாத வரைக்கும் பிரமாணத்துக்கு கட்டுப் பட்டவர்கள் அல்ல... நான் திருடாமல், பொய் சொல்லாமல், புகை பிடிக்காமல், விபச்சாரம் செய்யாமல், இவை ஒன்றையும் நான் செய்யாமலிருந்தால், நான் பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவன் அல்ல. பாருங்கள்? நான் நியாயப் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப் பட்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் ... 128குடும்பக் கட்டுப்பாட்டைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இன்று காலையில் நடந்த பேட்டிகளில் இது போன்ற சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. இப்படிப்பட்டகாரியங்களைக் குறித்து நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேசுவது நலம் (பாருங்கள்?), ஏனெனில் நான் கூற வேண்டிய சொற்களும் காரியங்களும்.... இதை நான் கணவன் மனைவியிடம்... இதை சரியான முறையில் செய்வதற்குரிய வாய்ப்புண்டு. இதை நான் பொதுவாக கூறுகிறேன். ஒரு ஸ்திரீயின் வாழ்க்கையில், அவள் கருத்தரிக்க இயலாத எத்தனையோ நாட்கள் உண்டு உங்களுக்குப் புரிகிறதா? சரி, ஏன்... இப்பொழுது, சில நேரங்களில் வயிற்றிலுள்ள குழந்தை ஸ்திரீயின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடும். அவளுக்கு குழந்தை உண்டானால், அது அவளைக் கொன்று விடக் கூடும். எனவே அதன்பேரில் நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். பாருங்கள்? எனவே அதைக்குறித்து மிகவும் கவனமாயிருங்கள். பாருங்கள், அது உயிரைத் தோன்றச் செய்தல், நீங்கள் பூமியில் எதை தோன்றச் செய்கிறீர்களோ, அதைப் பொறுத்தது. உங்கள் மனைவி வியாதிப்பட்டவளாயிருந்து, அவள் கருத்தரித்தல் அவளை கொன்று விடுமானால், அதை நான் செய்யவே மாட்டேன். நீங்கள் அவ்விதம் செய்ய கர்த்தர் விரும்புவார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியங்களைக் குறித்து என்னிடம் தனியே வாருங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி காணுங்கள். உங்களிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசட்டும், (பாருங்கள்?), அப்பொழுது நான்... 129பாருங்கள், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், அவர்கள் என்னிடம் பொய் சொல்லுகிறீர்களா இல்லையா என்று என்னால் கூற இயலும். பாருங்கள்? அவர்கள் என்னிடம் வித்தியாசமான காரியங்களைக் கூறுகின்றனர். நான் உங்களை தனிப்பட்ட முறையில்... பாருங்கள்? ஏனெனில் நீங்கள் இவ்விதமாக தெரியப்படுத்துகிறீர்கள். உங்களுக்குத் தெரிவதில்லை. அது ஏனென்றால், ஒரு தனிப்பட்ட நபர் அதில் ஈடுபட்டிருக்கிறார், அப்படிப்பட்ட காரியங்கள்; அதை என்னால் கூற முடியும், நீங்கள் உண்மையை கூறுகிறீர்களா இல்லையா என்று. பாருங்கள்? 130சாத்தான் ஏன் வெளி. 20:3ன்படியும் 20:7ன்படியும் அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக வேண்டும்? அவன் ஏன் விடுதலையாக வேண்டும்? இரண்டாம் உயிர்த்தெழுதலின் போது அவனுடைய ஜனங்களை ஒன்று சேர்க்க.ஏனெனில் சாத்தானும் நியாயத்தீர்ப்பின் போது. நிற்க வேண்டும். பாருங்கள்? அவன் குற்றவாளியென்று தீர்க்கப்பட வேண்டும். . ஓ, என்னே, ஒரு புத்தகம் முழுவதும் கேள்விகள். நான் நினைக்கவில்லை. இங்கு வேறொரு கடிதம் நிறைய கேள்விகள். இங்கு நான் மிகவும் வேகமாக பார்க்கட்டும்.. 131361: சகோ.பிரான்ஹாமே, அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் 7ம் வசனத்தையும், அப்போஸ்தலர் 20ம் அதிகாரம் - 22ம் அதிகாரம் 9ம் வசனத்தையும் தயவு கூர்ந்து விளக்குங்கள் (சகோ.நெவில், அதை எனக்காக எடுப்பீர்களா?). அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் 7ம் வசனத்தை விளக்குங்கள். இப்பொழுது, அவர் அதை எடுக்கும்போது, வேறொரு கேள்விக்கு வேகமாக பதிலளிக்க முடியுமா என்று பார்க்கிறேன். உங்களுக்கு களைப்பாயிருக்கிறதா? நீங்கள் களைப்புற்றிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும். அது எப்படி எங்கே நடக்கும்? மணவாட்டி எந்த இடத்துக்கு செல்கிறாள்? இவை அருமையான கேள்விகள் அல்லவா? இவை உண்மையில் நல்ல கேள்விகள். இங்கு என்னால் நாள் முழுவதும் நின்று கொண்டு... (சகோ பிரான்ஹாம் 361ம் கேள்விக்கு விடையளிக்கிறார் - ஆசி) இப்பொழுது ஒரு நிமிடம், வசனம்... அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் 7ம் வசனம் (நன்றி, சகோ. நெவில்). அவனுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். 132நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கண்டு கொண்டேன். பாருங்கள்? மற்ற வசனத்தில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாதுஎன்னால் கூற இயலாது. ஏனெனில் மற்ற வசனத்தில் அவர்கள் சத்தத்தை கேட்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஓரிடத்தில் அவர்கள் அதை காணவில்லை என்றும் மற்ற இடத்தில் அவர்கள் கண்டனர், ஆனால் சத்தத்தைக் கேட்கவில்லை என்றும் கூறுகிறது. இதை எத்தனை பேர் முன்பு வேதத்தில் கண்டிருக்கிறீர்கள்? நான் கண்டிருக்கிறேன், ஆனால் என்னால் அதை விளக்க இயலாது. பாருங்கள். எனக்குத் தெரியாது, நான் வருந்துகிறேன், என்னால் விளக்க முடியாதென்றால், என்னால் விளக்க முடியாதென்று உங்களிடம் கூற நான் போதிய அளவுக்கு உண்மையுள்ளவனாயிருப்பேன். எனக்குத் தெரியாத போது அதற்கு நான் பதில் கூற முயற்சி செய்ய மாட்டேன். என்னால் அதை விளக்க முடியாது. ஏனெனில் ஓரிடத்தில் வெளிச்சத்தைக் கண்டார்கள், ஆனால் சத்தத்தைக் கேட்கவில்லை என்றும், அப்படி ஏதோ ஒன்று: மற்ற இடத்தில் அவர்கள் சத்தத்தைக் கேட்டனர்,' . ஆனால் வெளிச்சத்தைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. என்னால் அதை விளக்க இயலாது. பாருங்கள்? என்ன நடந்தென்று எனக்குத் தெரியாது. கர்த்தர் எனக்கு அதை வெளிப்படுத்தும் வரைக்கும் எனக்குத் தெரிய வழியில்லை; விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தைக் குறித்து என்னால் உங்களால் கூற முடியாதிருந்தது போல. அவர் அதை எனக்கு வெளிப்படுத்தும் வரைக்கும் நான் அறிந்திருக்கவில்லை . 133இன்று காலையிலும் கூட - வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர் இது உண்மையென்று அறிவார் - இன்று காலையில் அவர் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் என்னிடம் முழுவதும் கூறி முடித்து விட்டார். அது உண்மை. ஆகையால்தான், இவையெல்லாவற்றையும் ஒன்றாக கோர்க்கட்டும் என்கிறேன். ஆராய்ந்து... சர்ப்பத்தின் வித்தைப் போன்ற ஒன்று எனக்கு முன்பாக வைக்கப்பட்ட போது, என்னால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் அதை நான் பின்தொடர்ந்து கொண்டே வந்தேன். முதலாவதாக என்ன தெரியுமா... நீங்கள் தனியான ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை திறந்து கொடுக்கத் தொடங்குகிறார். இப்பொழுது, சர்ப்பத்தின் வித்து தவறென்று யாராகிலும் குறை கூறட்டும் பார்க்கலாம். பாருங்கள்? அவர்களால் முடியாது. 134மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும். அது ஒரு மாறுதல் மட்டுமே (பாருங்கள்?), நமது சரீரங்கள்... நமது என்று நாம் சொல்வோம். அதை நான் கூறும் போது என்ன குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? நான் அவபக்தியாய் இருக்க விரும்பவில்லை; நான் இந்த சபை மட்டும் என்று கூறவில்லை; ஒவ்வாரு விசுவாசியும் என்றுதான் குறிப்பிடுகிறேன். ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கியிருந்தான். அது அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருந்தது. அது சரியா? சபையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்திருக்கிறது. மணவாட்டி (அதுசரியா?), மணவாட்டி அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்திருக்கிறாள். சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட குமாரன் வருவதற்கு முன்பு, அவர்களுடைய சரீரங்கள் மாற வேண்டும். அது சரியா? குழந்தை பெறுவதற்கு சாராள் மிகவும் வயது சென்றிருந்தாள். அவளுடைய மார்பகத்தில் பால் சுரப்பிகள் இருக்க வில்லை; அவளுடைய மார்பகம் உலர்ந்து போயிருந்தது. அவளுடைய கர்ப்பப்பை கருத்தரிக்க முடியாத நிலையில் இருந்தது; அவள் மலடியாயிருந்தாள். அவளுக்கு குழந்தை பெற முடியாது; பிரசவ வேதனையைத் தாங்கிக் கொள்ள அவளுடைய இருதயம் மிகவும் வயது சென்று பலவீனமடைந்திருந்தது. எனவே என்ன நடந்தது? தேவன் அவளை மீண்டும் இளம் பெண்ணாக மாற்றினார். அவர் ஆபிரகாமுக்கும் அதையே செய்தார். ஏனெனில் அவனுடைய சரீரம் செத்துப் போயிருந்தது என்று அவர் கூறினார். பாருங்கள்? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொள்வதற்கென, அவர் அவர்களுடைய சரீரத்தை மாற்ற வேண்டியதாயிருந்தது. நாமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த சரீரங்களில், நமக்கென இன்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள குமாரனைப் பெற முடியாது; இந்த சரீரங்கள் பாவமுள்ளவை. 135முதலாம் மனச்சாட்சி, பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்னும் புலன்களைக் கொண்ட இந்த சரீரத்தை கட்டுப்படுத்துகிறது, அது நம்மெல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாம் அறிவைப் பயன்படுத்தி யோசிக்கிறோம், மற்றெல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால் மறுபடியும் பிறந்ததனால் உண்டான அந்த புது சரீரமோ (இந்த முதலாம் மனச்சாட்சி அல்ல, அது கடந்து போகும்)..... அது ஜீவிக்கின்ற, உள்ளில் உள்ள ஒன்று. இதைப் புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அது இந்த வெளிப்புறத்தில் உள்ள பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் அல்ல. அதுவல்ல. அது மரணத்துக்குக் கீழ்ப்பட்டுள்ளது. அது மரித்து விடும். ஆனால் உங்களுக்குள் இருக்கும் அந்த பாகம், உள்ளே உள்ளது, அந்த நபர் மரிக்கவே முடியாது. பாருங்கள்? அந்த நபரிலிருந்துதான், இந்த புதிய பிறப்பின் மூலமாக, புது ஜீவன் தொடங்குகிறது. அது உங்கள் சாயலிலே வேறொரு நபரை, அந்த ஜீவனைச் சுற்றிலும் உண்டாக்குகிறது. உங்களுக்குப் புரிகிறதா? 136எனவே அது இங்கு மறைவாக உள்ளது. அது என்ன? உலக தோற்றத்துக்கு முன்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை . இது 'நெகடிவ்'வையே பிரதிபலிக்கிறது; - ஆனால் அதுவோ 'பாஸிடிவ்வை, வார்த்தையை, பிரதிபலிக்கும். பாருங்கள்? அதே காரியம் தான் - மணவாட்டி மறுரூபப்படுதலும் அதே காரியமாகத் தான் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் அந்த வார்த்தையைச் சுற்றிலும் ஒரு சரீரம் உருவாகும், சாராளுக்கு நேர்ந்தது போல். அதற்கு முன்பு ... அவள் பெற்றிருந்த அந்த பழைய சரீரம், அந்த முதல் சரீரம், ஒரு குமாரனைப் பெறுவதற்காக மாற வேண்டியதாயிருந்தது உங்களுக்கு விளங்குகின்றதா? அந்த சரீரத்தினால் அதை செய்ய முடியவில்லை. அது போன்று நம்முடைய இந்த சரீரமும் அதை செய்ய முடியாது. குமாரனைப் பெற்றுக் கொள்ள இதுவும் அதே விதமாக மாற வேண்டும். 137அது எப்படி எங்கே நடக்கும்? மணவாட்டி எந்த இடத்துக்குச் செல்கிறாள்? அது மகிமைக்கு, பரலோகத்துக்கு, கலியாண விருந்துக்கு செல்கிறது. ஈசாக்கும் ரெபேக்காளும் அதற்கு முன்னடையாளமாயுள்ளனர், ஈசாக்கை சந்திக்க ரெபேக்காள் புறப்பட்டுச் சென்ற போது. ஆபிரகாமிடமிருந்து புறப்பட்டுச் சென்ற செய்திக்கு எலியேசர் எடுத்துக்காட்டாய் இருக்கிறான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஈசாக்குக்கு மணவாட்டியை கண்டு பிடிக்க எலியேசர் புறப்பட்டுச் சென்றான். அவன் குளிர்ச்சியான சாயங்கால வேளையிலே அழகான ரெபேக்காளைக் கண்டான் - தண்ணீர் குடம் சுமந்து கொண்டு வருகின்ற கறுப்பு நிறத் தோலைக் கொண்ட பெண்ணை எலியேசர், “தேவனாகிய கர்த்தாவே, என் பிரயாணத்தை வாய்க்கச் செய்து என் ஆண்டவன் ஆபிரகாமுக்கு வெற்றியைத் தருவீராக” என்று ஜெபம் பண்ணினான். ஆபிரகாம் “நீ பெலிஸ்தியரின் மத்தியில் பெண் கொள்ளாமல் என் ஜனத்தாரிடம் போ” என்றான் - கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் கிறிஸ்துவுக்கும் இரத்த சம்பந்தமான உறவு என்பதை இது காண்பிப்பதாய் உள்ளது, ஏனெனில் ஈசாக்கும் ரெபேக்காளும் இரத்த சம்பந்தமான உறவினர். 138எனவே அவன் புறப்பட்டுச் சென்றான், அப்பொழுது இந்த அழகான ரெபேக்காள், வெளியே வந்து தண்ணீர் மொண்டாள். அவன், “அவள் 'ஒட்டகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பேன் என்று சொன்னால்' என்று ஜெபித்தான். அதன் பிறகு, நீங்கள் கவனிப்பீர்களானால், ரெபேக்காளுக்கு... முடிவான தீர்மானம் ரெபேக்காள் தான் செய்ய வேண்டும். எலியேசர் அவள் தகப்பனிடம் பெண் கேட்டான்; அவன் தாயிடமும் பெண் கேட்டான். அவர்கள் இருவருமே இணங்கவில்லை. அவள் சிறிது காலம் தங்கியிருக்க வேண்டு மென்று அவர்கள் விரும்பினர். அவன், ”என் பணியில் என்னைத் தடை செய்யாதீர்கள்“ என்றான். அப்பொழுது ரெபேக்காள் தான், தீர்மானத்தை தெரிவிக்க வேண்டும். அவன், “அவள் தான் பெண்; அவளே சொல்லட்டும்” என்றான். அவளைக் கேட்டவுடனே, வேகமாக அவள் மனதில் தீர்மானித்தாள். அவள், “நான் போகிறேன்” என்றாள். அவள் ஓட்டகத்தின் மேலேறி ஈசாக்கைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றாள்..... பாருங்கள், அவள் தண்ணீர் வார்த்த அதே ஒட்டகம் அவளை தன் மணவாளனிடம் கொண்டு சென்று, அவளுடைய வெற்றி அனைத்துக்கும் காரணமாயிருந்தது. அவ்வாறே நாம் தண்ணீர் வார்த்து துதியை ஏறெடுக்கும் (ஆமென்! பாருங்கள்?) அதே ஒட்டகம், அதே வல்லமை தான் (வேதத்தில் மிருகம் வல்லமைக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது), தண்ணீர் ஜீவனைக் குறிக்கிறது. துதி வார்த்தைக்கு ஏறெடுக்கப்படுகிறது - நாம் மணவாளனைச் சந்திக்க நம்மை மகிமையின் தேசத்துக்கு கொண்டு செல்கிறது. ஆம். ஐயா! ஆமென்! அந்த மகிழச்சியான ஆயிரம் வருட அரசாட்சி நாள் வரக் காத்திருக்கிறோம். அப்பொழுது ஆசிர்வதிக்கப்பட்ட நமது கர்த்தர் வந்து, காத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்துச் செல்வார் 139இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஈசாக்கு தன் கூடாரத்தை விட்டுப் புறப்பட்டு வந்து பிற்பகலில் வயலில் தியானித்துக் கொண்டிருந்தான். (ஆமென்!) ரெபேக்காள் வருவதை அவன் கண்ட போது .... அவள் அவனை கண்டதில்லை, அவனும் அவளைக் கண்டதில்லை, அது முதற்பார்வையிலே அன்பு. அவள் அவன் மேல் அன்பு கொண்டாள். அவனும் அவள் மேல் அன்பு கொண்டான், அவள் திரையிட்டு முகத்தை மறைத்திருந்தாள். ஆமென்! ஓ, என்னே! கவனியுங்கள். அவள் அவனைக் கண்டபோது, அவள் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கினது. அவள் யாரை விவாகம் செய்து கொள்ளப் போகிறாள் என்று அறிந்திருக்கவேயில்லை, ஆனால் விசுவாசத்தில் புறப்பட்டுச் சென்றாள். ஆமென்! அவன் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று, விவாகம் செய்து கொண்டு, தன் தகப்பனுக்கிருந்த சர்வத்துக்கும் சுதந்தரவாளியானான். ஆமென்! ஓ, பரிபூரணமாயுள்ளது, மிகவும் பரிபூரணமாயுள்ளது. சரி. கேள்வி: தேவன் மனிதனையும் மனைவியையும் பிரிக்கிறாரா.. 140258..இதை நான் படிக்காமல் விட்டு விடுவது நலம். பாருங்கள்? பாருங்கள்? நான் ஒரு வார்த்தை சொல்ல நேரிடும். பாருங்கள்? உங்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும், ஆனால்இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது (பாருங்கள்?), எனவே நான் விட்டு விடுவது நலம். அது எதைக் குறித்தது என்றால்... இந்த கேள்வியை எழுதின நபரே, உங்களுக்கு அது என்னவென்று தெரியும்; உங்களை நான் தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலம். இதை படிப்பது நன்றாயிருக்காது என்று எண்ணுகிறேன். பாருங்கள்? அந்த நபர் இந்த கேள்வியைக் கேட்டதில் எந்த தவறுமில்லை; அவர் ஒரு நியாயமான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார், ஆனால் அதற்கு தனிப்பட்ட பேட்டியில் அவரைக் கண்டு விடையளிப்பது நலமென்று கருதுகிறேன். நீங்களும் அவ்வாறு கருதுகிறீர்கள் அல்லவா? அது யாராயிருந்தாலும்... அது நன்றாயிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும், அது யாராயிருந்தாலும். 141ஓ. என்னே! ஓ, நண்பர்களே, நமது நேரத்தை நாம் எப்பொழுதோ கடந்து விட்டோம். நாம் முடித்து விட்டு, பகல் உணவு அருந்தச் செல்வது நலம். நான் இன்னும் எவ்வளவு நேரம் இங்கு கழிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? ஓ, என்னே, என்னே! இன்னும் சிறிது நேரம். யாருக்காகிலும் உடனே செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்குமானால், உங்கள் பகல் உணவு கரிந்து போகும்படி விடாதீர்கள். நான் ஒருக்கால் ப்ளு போர் அல்லது ப்ரையார்ஸ் அல்லது வேறெந்த இடத்திலாகிலும் உணவு உண்பேன். நாம் தாமதித்து சென்றால், அவர்கள் நம்மை ஒருக்கால் தொல்லைப்படுத்த மாட்டார்கள். நீங்கள் போக வேண்டு மென்றால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்குப் புரிகிறது. பாருங்கள்? நான் இன்னும் சிறிது நேரம் மட்டுமே எடுத்துக் கொள்வேன். இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு மட்டுமே நான் விடையளிக்கப் போகிறேன். அதன் பிறகு நான்.... இங்குள்ளவை... எனக்கு பதினைந்து நிமிடங்கள் அல்லது சற்று அதிகமான நேரம் பிடிக்கும், அதன் பிறகு நான் உணவு உண்ண செல்லப் போகிறேன். 142எனக்கு இரண்டு குமாரத்திகள் உண்டு, அவர்கள் ஸ்தாபனங்களிலுள்ள மனிதர்களை விவாகம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் இந்த செய்தியை விசுவாசித்து, இதற்கென்று உறுதியாக நிற்கின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு உள்ளது. அவர்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் உறுதியாய் நில்லுங்கள்! முற்றிலுமாக. உங்கள் நிறத்தைக் காண்பியுங்கள். அதுதான்; அவர்களுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். வேண்டாம், ஐயா! நீங்கள் அவர்கள் மத்தியில் சென்று ஐக்கியம் கொள்ள வேண்டும், அப்படி ஒன்றும் செய்ய வேண்டாமென்று நான் கூற வரவில்லை. உங்களால் அவர்களுடன் ஐக்கியம் கொள்ள முடியுமானால். ஆனால் அவர்கள் உங்கள் ஆகாரத்தை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்களானால், ஒரு புறா ஒரு பருந்துடன் ஆகாரம் புசிக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியும். 143சகோ.பிரான்ஹாமே, தயவு கூர்ந்து மாற்கு 13:27ஐ விளக்குவீர்களா? மேலும் சகோ.பிரான்ஹாமே, வெளி20:7-9ல் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணும் ஜனங்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகின்றனர்? நோவாவின் குடும்பத்தைப் போல அவர்களும் உபத்திரவக் காலத்தில் உயிர் தப்பினவர்களா? வெளிப்படுத்தல் 16 - இல்லை, மாற்கு 13:27, சகோ. நெவில். வெளிப்படுத்தல் 20: சகோ. காப்ஸ், உங்களிடம் வேதாகமம் உள்ளதா? வெளிப்படுத்தல் 20, 7 முதல் 9 வசனங்கள் என்பது போல் தான் தோன்றுகிறது. நான் நினைக்கிறேன், நான், அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கும் போது... இதோ, அவர் அதை எடுத்து விட்டார். வெளிப்படுத்தல், அது என்ன? மாற்கு 13:27, 13ம் அதிகாரம் 27ம் வசனம். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி தாம் தெரிந்து கொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற் கொண்டு, வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். அது உயிர்த்தெழுதலை, மறுரூபப்படுதலை, மேலே செல்வதைக் குறித்துப் பேசுகிறது. அவர் கூட்டிச் சேர்ப்பதற்காக. தமது தூதர்களை அனுப்புவார். இந்த தூதர்கள் யாரென்று நீங்கள் எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? அவர்கள் செய்தியாளர்கள். அவர் அவர்களை கூட்டிச் சேர்ப்பார், ஒன்றாக கூட்டுவார் (பாருங்கள்?), அவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள திசைகளிலிருந்து கொண்டு வந்து, பூமியில் வெளிப் படுத்தப்பட்டுள்ள வார்த்தையாகிய அவர்களை ஒன்றாக கட்டி இணைப்பார். பாருங்கள்? விளங்குகிறதா? வார்த்தை உரைக்கப்பட்டது; இதோ அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாருங்கள்? சரி, சகோ.காப்ஸ், நாம் பார்ப்போம். அந்த ஆயிரம் வருஷம் முடியும் போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, சரி சற்று முன்பு தான் அதை விளக்கினேன், இல்லையா, அவன் எவ்வாறு ஆயிரம் வருஷம் முடியும் போது காவலிலிருந்து விடுதலையாவான் என்று? சரி வேறொரு கேள்வி இங்குள்ளது ஒரு நிமிடம். 144சகோ. பிரான்ஹாமே, நடந்த காரியங்கள் தேவனால் உண்டானதா, அல்லது நானே உண்டாக்கிக்கொண்டதா; சோதிக்கப்பட்ட போது... அது... (உங்களால் படிக்க முடிகிறதா என்று பாருங்கள், அது நல்ல கையெழுத்து, ஆனால் என் கல்வி குறைவுள்ளது அங்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறது? [சகோ பிரான்ஹாம் சகோ. நெவிலுடன் உரையாடுகிறார் - ஆசி) என்னால் இதற்கு விடையளிக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை. சகோ. காப்ஸுக்கும் எனக்கும் என்ன எழுதியிருக்கிறதென்று படிக்க முடியவில்லை .... அது என்ன சொல்கிற தென்றால்). அது... (நாம் பார்ப்போம், அது ஒரு நாஸ். அது நாஸ் பணியைக் குறித்து ஏதோ ஒன்று). நான் நர்ஸ் வேலையை விட்டு நின்றது தேவனால் உண்டானதா, அல்லது அது என் தவறா? 264, எனக்குத் தெரியாது. அதை நான் தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலமாயிருக்கும். பாருங்கள்? இப்பொழுது, நாள் வேலை நியாயமான ஒன்று, நர்ஸ் வேலை பார்ப்பது. நான் என்ன சொல்கிறேன் என்றால்... இப்பொழுது, அந்த நபர் ஒன்றும் கூறவில்லை. அதற்கு விடையளிக்கக் கூடாது என்பதற்காக அந்த கேள்வியை நான் எறிந்து விடவில்லை, ஏனெனில் உங்கள் கேள்வி உங்களுக்கும் அல்லது என் கேள்வி எனக்கும் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அப்படித்தான் இந்த கேள்வியும் இந்த ஸ்திரீக்கு முக்கியம் வாய்ந்தது. பாருங்கள்? ஆனால் இப்பொழுது, அது ஒரு நர்ஸ் ஆக இருக்குமானால், நீ வேலை செய்யக் கூடாது என்பதற்காக நர்ஸ் வேலையை விட்டு நீங்கி விட்டாய்... நல்லது, நர்ஸ் வேலை பச்சாதாபத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பது என் கருத்து. நீங்கள் டாக்டரைப் போல் சேவை மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். 145ஒரு டாக்டர், ஒரு நல்ல டாக்டர், நோயாளியிடம் பணம் இருந்தாலும் இல்லாமல் போனாலும், அவனுக்கு சிகிச்சை அளிப்பார், அவர்தான் உண்மையான டாக்டர். பாருங்கள்? ஒரு ஊழியக்காரன், அல்லது யாரானாலும், நாம் ஒருவருக்கொருவர் சேவை செய்து, ஒருவர் மற்றவருடைய வாழ்க்கையை சிறிது மேம்படுத்த வேண்டும் என்பது என் கருத்து. நான்... இந்த சபையிலிருந்து வார்த்துக்கு நூறு டாலர் நான் ஊதியமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் ' என்னிடம் கூறின போது, அது என்னைக் கொன்றே போட்டு விட்டது. இப்பொழுது, எனக்குத் தெரியும், திருமதி. வில்ஸனும், ஒருக்கால் அவர்களுடைய மகனும், இங்கு உட்கார்ந்திருக்கிற மற்றவர்களும், அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை ஞாபகம் வைத்திருப்பார்கள். இங்கு நான் பதினேழு ஆண்டுகள் பிரசங்கித்து, ஒரு காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை. நான் சம்பாதித்த சிறு தொகையுைம் கூட நான் இதற்கே கொடுத்து விட்டேன். பாருங்கள்? இந்த கூட்டங்களில் நான் பங்கு கொள்ள வேண்டுமானால், நான் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறின போது, அது என்னை அழித்துவிடும் போல எனக்குத் தோன்றினது. பாருங்கள்? அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரையில் (பாருங்கள்?) எனக்கு எதுவுமே, எந்த பணமுமே வேண்டாம். எனக்குத் தேவையான ஒன்றே ஒன்று உங்கள் நட்பும், நம்மிடத்தில் உள்ள தேவனுடைய கடாட்சமே. உங்களை நான் நேசிக்கிறேன் (பாருங்கள்?), உங்களை நான் நேசிக்கிறேன், நீங்கள் சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நானும்கூட சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் இப்பொழுது, நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று விரும்புகிறேன், நானும் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியுடன் வருவீர்களானால், நான் உங்களிடம் உண்மை யுள்ளவனாயிருக்க விரும்புகிறேன். நான் உங்களிடம் கர்த்தருடைய நாமத்தில் எதையாகிலும் உரைத்தால், நான் உங்களிடம் என்ன செய்யக் கூறினேனோ, அதை நீங்கள் அப்படியே செய்ய வேண்டு மென்று விரும்புகிறேன். அதிலிருந்து சிறிதும் கூட மாறாதீர்கள், அப்பொழுது நாம் சரியாக இணைந்து செல்வோம் என்று எண்ணு கிறேன். பாருங்கள்? பிறகு, மற்றவர்கள்.... 146எனவே இப்பொழுது, அது நர்ஸ் வேலையாயிருக்கு மானால்... நான் நினைக்கிறேன், நீ உன் இருதயத்தில் நர்ஸ் ஆக. விருப்பம் கொண்டால்... எல்லோருமே நர்ஸ் ஆகி விட முடியாது. நர்ஸ் என்பவள் சாந்த குணமுள்ளவளாயும், ஜனங்களிடம் தயவா. யும் நடந்து கொள்ள வேண்டும். ஓ, நான் நினைக்கிறேன், ஒரு உண் மையுள்ள நர்ஸ்... நீங்கள் எப்பொழுதாகிலும் வியாதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால், உங்களை செளகரிய மாக வைத்துக் கொள்ளும் உண்மையான, நல்ல நர்ஸை நீங்கள் அப்பொழுது காணலாம். நான் சுடப்பட்ட அந்த சமயத்தில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது; அப்பொழுது நான் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு நர்ஸ் இருந்தாள். அவளை நான் “இனிய ஊறுகாய்” என்று அழைப்பதுண்டு. ஏனெனில் அவள் எப்பொழு துமே வாயில் ஊறுகாயை வைத்து தின்றுக் கொண்டிருப்பாள். எல்லா நேரங்களிலும் அப்படித்தான். அப்பொழுது எனக்கு வயது பதினான்கு மட்டுமே, நான் சுடப்பட்டேன். அவள் ஒரு சிறு உருவம் படைத்தவள், அவள் கால்களில் குண்டு பாய்ந்து, இரண்டு கால்களிலுமே இப்படி மாம்சம் பிய்ந்து வந்திருந்தது. அவள் ஒரு தலையணையை இங்கேயும் ஒரு தலையணையை அங்கேயும் வைப்பாள்; அவள் எந்நேரமும் எனக்கு உதவி செய்து கொண்டேயிருப்பாள். நான் அப்பொழுது சிறு பையன், அவள் என்னிடம் தயவாயும் நல்லவளாகவும் நடந்து கொண்ட காரணத்தால், அவளை விவாகம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன். நல்லது நான்... அது ... பாருங்கள். இவ்விதம் ஒரு நல்ல காரியத்தைச் செய்வது முக்கியமானது. 147உங்களை ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன். முதலாம் கேள்வி: பெண்கள் அணியும் பைஜாமாக்கள்... (இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், இதை நான் படிக்கட்டும் (சகோ.பிரான்ஹாம் கேள்வியை தனக்குள் படிக்கிறார் - ஆசி] இல்லை, இது சரியா யிருக்கும்). பெண்கள் அணியும் பைஜாமாக்கள் ஆண்களின் உடை யாகுமா? இவர்கள் என்னை கடினமான கேள்வி கேட்க முடியா தென்று என்னிடம் கூறாதீர்கள். எனக்குத் தெரியாது. அதைக்குறித்து நீங்களே தீர்மானித்து கொள்ளும்படி உங்களை விட்டு விடப் போகிறேன். அதை அணிந்து கொண்டு நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக இங்கும் அங்கும் நடக்கக் கூடாது; அது எனக்குத் தெரியும். அந்த விதத்தில் அது சரியல்ல. ஆனால் அதை அணிந்து கொண்டு படுக்கைக்குச் செல்லும் விஷயத்தில், எனக்குத் தெரியாது. அதை நான் வேத வசனங்களைக் கொண்டு ஆதாரப்படுத்த வேண்டும். எனக்குத் தெரியாமலிருந்தால், நான் உண்மையுள்ளவனா யிருப்பேன் என்று உங்களிடம் கூறினேன். என் சொந்த கருத்தை அதில் நான் நுழைக்க மாட்டேன் (சரி), நீங்கள் என் சொந்த கருத்தை அறிய விரும்பினாலொழிய, அது உங்களுக்கு வேண்டு மானால், நான் உங்களிடம் கூறுவேன். பாருங்கள்? இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது கோடிக்கணக் கான மைல்கள் தவறாயிருக்கக் கூடும். இரவில் நீண்ட ஆடை (Night gown) அணிந்து கொள்வது நலமென்று கருதுகிறேன். ஆனால் உங்களால்... அது உங்களைப் பொறுத்த விஷயம். அதை என்னால் உங்களிடம் கூற இயலாது, ஏனெனில் அதை வேத வசனங்களைக் கொண்டு என்னால் ஆதாரப்படுத்த முடியாது. இப்பொழுது, இது நான் உரைப்பது, அவரல்ல, ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள்? 148ஸ்திரியின் தலைமயிரின் முனையை கத்தரிப்பது தவறா? சில நிமிடங்களுக்கு முன்புதான் அதைக் குறித்து பார்த்தோம் என்று நினைக்கிறேன் (பாருங்கள்?), சிறு சிறு தலைமயிர் முன்னால் இப்படி தொங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் என்ன அழைக் கின்றனர் என்றால்... 149சகோ.பிரான்ஹாமே, ஏழு சபை காலங்கள் ஒலி நாடாக்கள் ஒன்றில் நீங்கள், யூதாஸ் நீதிமானாக்கப்பட்டு பரிசுத்த மாக்கப்பட்டான் என்று கூறியிருக்கிறீர்கள். அவை உண்மையான (இது ஒரு நல்ல கேள்வி - அவன் பெற்றுக் கொண்ட கிருபையின் உண்மையான அனுபவங்களா இவை? நீங்கள் மேலும், யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்ததாக கூறியிருக்கிறீர்கள். இருப்பினும், அவன் பாதாளத்துக்குச் சென்று இழக்கப் பட்டான் என்று நாமறிவோம். ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக்கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்? ஒருவன்முடிவில் இழக்கப்படுவான் என்று தேவன் அறிந்த பிறகும், அவனுடைய பெயரை ஏன் அவர் ஜீவபுஸ்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்? இப்பொழுது, இது நல்ல கேள்வி. இல்லையா? இதற்கு விடையளிக்க நான் கர்த்தர் பேரில் சார்ந்திருக்க வேண்டியவனா யிருக்கிறேன்; ஏனெனில் நான் இதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் கவனியுங்கள்! சபை காலங்கள் பிரசங்கித்த போது, யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது என்று நான் கூறினேன். இப்பொழுது, அது உண்மை . அது நமக்குத் தெரியும், ஏனெனில் இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் வெளியே அனுப்பி (மத்தேயு 10ம் அதிகாரம்), அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அவர்களுக்கு கட்டளையிட்டார். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவச மாய்க் கொடுங்கள்” என்றார். பிசாசு அவர்களுக்குக் கீழ்படிகிறதனாலே அவர்கள் சந்தோஷத் தோடு திரும்பி வந்தனர். அது சரியா? இயேசு அவர்களிடம் கூறினதாவது, அவர் அவர்களுடைய நாமங்களைக் கூறினார் (மத். 10:2-4) (அவர்கள் யாரென்றும், எத்தனை பேர் அனுப்பப்பட்டனர் என்றும்); அவர்கள் திரும்பி வந்தனர், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத் தும் அவர்களில் ஒருவன்... பாருங்கள்? அவர்கள் சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர், ஏனெனில் பிசாசு கள் அவர்களுக்குக் கீழ்படிந்தன. இப்பொழுது, பாருங்கள், அவர்களுடைய மனப்பான்மை அங்கு தவறாயிருந்தது. பாருங்கள்? பிசாசை அசைக்க உங்களுக்கு வல்லமை இருப்பதனால் நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு போதிய கிருபை பெற் றுள்ளதால் சந்தோஷப்பட வேண்டும். பாருங்கள், பாருங்கள்? நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. அப்படித் தான் ஜனங்கள்.... 150வழக்கமாக, வரங்களைப் பெற்றுள்ள ஜனங்கள் வரங் கள் பெற விரும்பாதவர்கள். பாருங்கள்? பவுல் அதை விட்டு ஓடிப் போக முயன்றான், மோசேயும் கூட. அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் அவர்களுடைய வேலையை விட்டு ஓடிப்போக முயல்கின்றனர்; அவர்களுக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். தேவன்.பாருங்கள், “ஓ, தேவனே, என்னை வல்லமையினால் நிரப்பும் நான் இங்கு செல்வேன், நான் பிசாசுகளைத் துரத்துவேன் என்று' சதா கூறும் ஒரு மனிதனை நீங்கள் எடுத்துக் கொள்வீர்களானால் அவன் அதை செய்யவே மாட்டான். அப்படிப்பட்ட எவனையும் நம்பக் கூடாது என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார் பாருங்கள்? அவன் செய்யவே மாட்டான். அதனுடன் எவ்வித தொடர்பும் வைக்க விரும்பாத மனிதன் தான். பாருங்கள்? அப்படிப்பட்ட ஒருவனை தான் தேவன் எடுத்து என்றாகிலும் ஒரு நாள் எதையாகிலும் போதிக்க முடியும். பாருங்கள்? எனவே, யூதாஸ் சந்தோஷத்தோடே திரும்பி வந்தான், அவர்கள் அனைவருமே, அவர்களுடைய பெயர்கள். அவர், “ஆவிகள் 2 ங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கு நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப் படுங்கள்” என்றார் (லூக்.10:20). இப்பொழுது, நீங்கள் கவனிப் பீர்களானால், தானியேலின் புத்தகத்தையும் எடுத்துக் கொள் ளுங்கள். பாருங்கள். உங்கள் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருப்பதனால் (அது பரலோகத்தில் இருப்பதனால், உங்கள் பெயர் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டதனால்), நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. பாருங்கள்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் இரட்சிக்கப்படவில்லை. அதை நீங்கள் ஞாபகம் கொள் ளுங்கள். நீங்கள் மறைமுகமாக (Potentially) இரட்சிக்கப்பட்டிருக் கிறீர்கள். பாருங்கள்? 151நீங்கள் என்னிடம் ஒரு 'ஓக்' மரத்தை கேட்டு நான் உங்களுக்கு அதன் விதையைக் கொடுத்தால், மறைமுகமாக உங்களுக்கு ஒரு 'ஓக்' மரம் கிடைத்துள்ளது, ஆனால் அது இன்னும் வளரவில்லை. ஆகையால் தான் நான் நித்திய! பாதுகாப்பில், நான் விசுவாசிக்கும் விதமாக விசுவாசிக்கிறேன் நான் தானிய வயலைக் கேட்டு, தானியக் கதிர்கள் இவ்வளவு.! உயரத்தில் வளர்ந்திருப்பதை நான் காணும் போது, கறைமுகமாக நான் தானியம் நிறைந்த வயலைப் பெற்றிருக்றேன். அது இன்னும் வளரவில்லை, ஏதாகிலும் ஒன்று நடக்கும். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் குதல், இவைகளின் வழியாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மை யான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே, இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, அது உண்மையா?” எனலாம். 152வேத வசனங்களை உங்களுக்கு அளிக்க எனக்கு நேர மில்லை. நீங்கள் வீடு திரும்பின பிறகு அதைப் பாருங்கள், ஏனெனில் எனக்குத் தெரியவில்லை... என் சிந்தை. அந்த வசனங்களை எடுக்க வேண்டுமானால் நான் என் கன் கார்டன்ஸில் தேட வேண்டும். இயேசு, இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருந்த பேதுருவிடம்.... அவன் இயேசுவை விசுவாசித்தான் , பரிசுத்தமாக்கப்பட்டிருந்தான் . யோவான் 17:17. இயேசு “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்று பிதாவிடம் ஜெபம் பண்ணினார். அவரும் வசனமும் ஒன்றுதான். அவர்கள் வசனமாகிய சத்தியத்தினாலே மறைமுகமாக பரிசுத்தமாக்கப்பட் டிருந்தனர். பிறகு இயேசு யூதாஸிடம், இல்லை பேதுருவிடம், அவன் மறுதலித்த அந்த இராத்திரியில், “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்றார். (லூக்.22:32) - நீ குணப்பட்ட பின்பு . 153அந்த மனிதன் அவரை மூன்று ஆண்டு காலமாக பின்பற்றினான். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப் பட்டிருந்தது. அவன் பிசாசுகளைத் துரத்தி மகத்தான கிரியைகளைச் செய்து, பிணியாளிகளை சொஸ்தமாக்கி, இன்னும் பல்வேறு காரி யங்களை... வார்த்தையைப் பிரசங்கித்து எல்லாவற்றையும் செய்த போதிலும், அவன் இன்னும் குணப்படவில்லை. பாருங்கள் அந்த நீங்கள் குணப்படுதலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? குழந்தையானது ... முட்டைக்கும் ஆண் அணுவுக்கும் இடையே அந்த செயல் நடந்த பிறகு... ஆனால் அவர்கள். அந்த செயல் நடந்த பிறகு குழந்தை மறைமுகமாக உள்ளது. அதன் பிறகு உடல் வளர்கிறது. இரண்டாம் கட்டம்; ஆனால் அந்த குழந்தை இங்கு பிறக்க வேண்டும், அப்பொழுது அது ஜீவ சுவாசத்தைப் பெறுகிறது. அதுவரைக்கும் அது ஜீவ சுவாசத்தை பெறவில்லை. ஆனால் நீங்களோ, “ஓ, அது உயிரோடிருக்கிறது” என்கிறீர்கள் இல்லை, அது இல்லை! அந்த சிறு நரம்புகள் தசைகளை அசைச் கின்றன. பாருங்கள்? குழந்தை பிறக்கும் வரைக்கும் ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் குதிக்கலாம், அசைக்கலாம், ஆனால் நீங்கள் பெற்றிருக்கவில்லை... பாருங்கள், பாருங்கள்? நீங்கள் பிறக்க வேண்டும். நான் கூறுவது விளங்குகிறதா? சரி. 154இப்பொழுது, இப்பொழுது, அவர் கேட்டிருப்பது.. “யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்ததாக கூறியிருக்கிறீர்கள் இருப்பினும் அவன் பாதாளத்துக்குச் சென்று இழக்கப்பட்டான் என்று நாமறிவோம். ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக் கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்?” இந்த அருமையான நபருக்கு நான் இன்னும் ஒரு சிறு காரியத்தை இங்கு கூறட்டும். இப்பொழுது கவனியுங்கள், வேதம் உரைக்கிறது, தானியேல் கண்டபோது... தானியேல் முதலாம் வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதினான். நாம் கவனிப்பது என்னவெனில், தரிசனத் தில் அவன் நீண்ட ஆயுசுள்ளவர் முன்பாக கொண்டு வரப்பட்டான். அவருடைய சிரசின் மயிர் பஞ்சை போல் வெண்மையாயிருந்தது. எத்தனை பேருக்கு அது படித்தது ஞாபகமுள்ளது? நீங்கள் கவனித்தீர்களா? யோவானும் அதே காரியத்தைக் கண்டான், வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரத்தில் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார், அவருடைய சிரசின் மயிர் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது, அவருடைய பாதங்கள் அது காணப்பட்ட விதமாக இருந்தன - நீண்ட ஆயுசுள்ளவர். நீண்ட ஆயுசுள்ளவர் என்றால், அவருக்கு காலம் என்பதே கிடையாது - அவர் நித்திய மானவர். அவர் வந்தார். இப்பொழுது கவனியுங்கள்! பரிசுத்த வான்கள் பூமிக்கு வந்தனர், அப்பொழுது புத்தகங்கள் திறக்கப் பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, ஒரு புத்தகம். அவர்கள் நியாயத் தீர்ப்புக்கு வந்தனர். அவர் வந்தார், அவருடன் கோடாகோடி பேர் வந்தனர். அது சரியா? அவரைச் சேவித்தனர், மணவாட்டி , ராணியும் ராஜாவும். 155உங்கள் வீட்டில் உள்ள உங்கள் சிறு ராணி யார்? அவள் உங்களுக்கு உணவு பரிமாறி சேவை செய்கிறாள். அது சரியா? (உங்களுக்கு இப்பொழுது நேரமாகிறது). அவள் உங்களுக்கு சேவை செய்கிறாள், அதுதான்... மணவாட்டியும் வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறாள். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்?. (மத் 4:4). பாருங்கள்: அவள் ராஜாவுக்கு வார்த்தையை அளித்து, அவள் வாழுகின்ற காலத்திற்கென வாக்களிக்கப்பட்டுள்ள அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துபவளாயிருக்கிறாள். ஆமென்! ஆ, நான் அப்பொழுது ஒன்றைச் சொன்னேன், நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, ஆனால்... கவனியுங்கள்! ஓ, என்னே! அது நல்ல ஒன்று. பாருங்கள்? இந்தக் காலத்தில் வார்த்தைக்கு ஊழியம் செய்தல். அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரிடம் வந்தனர்; நியாய சங்கம் உட்கார்ந்தது. புத்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, அவர்கள் அதன்படி நியாயந் தீர்க்கப்பட்டனர். வந்தது யார்? நியாயத் தீர்ப்புக்கு வர அவசியமில்லாத மணவாட்டி . அவள் நியாயத்தீர்ப்பிலிருந்து விடு பட்டிருக்கிறாள். 156ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப் பட்டது, ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருக்கிறவர்கள், அந்த புத்தகத்தில் எழுதப்பட்டவைகளின் படியே நியாயத்தீர்ப்படைந் தார்கள். யூதாஸ்காரியோத்து தன்னை விசுவாசியென்று காண்பித் துக் கொண்டான், அவனுடைய பெயர் மற்ற பெயர்களுடன் கூட ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது சரியா? அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டதாக உரிமை கோரினான். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. எனவே அவன்... அப்படியானால், அவன் ஜீவ வார்த்தையை முப்பது வெள்ளிக் காசுக்கு ஏன் காட்டிக் கொடுத்தான் என்பதற்காக நியாயத் தீர்ப் படைய வேண்டும். சிலா மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, இன்னும் மற்றவர்களாக இருக்க விற்றுப் போடுகிறார்கள். அவன் ஜீவ புஸ்தகத்திலுள்ள அவனுடைய பங்கை விற்றுப் போட்டான். அவன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பேரில் நியாயந் தீர்க்கப்பட வேண்டும். பாருங்கள்? யூதாஸ் நியாயாசனத்துக்கு முன்பாக வர வேண்டும். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது, அதன் காரணமாக அவன் இரட்சிக்கப்பட்டான் என்று அர்த்தமல்ல. அவன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டும். 157நித்திரையடைந்த கன்னிகைகளும் அதே காரியங் களுக்காக அங்கு நிற்க வேண்டும். கவனியுங்கள், இயேசு, “என் வசனத்தைக் கேட்டு (அதாவது அதை ஏற்றுக்கொள்கிறவன், அது பிரசங்கம் பண்ணப்படுவதைக் கேட்டு முட்டாள்தனம்' என்று சொல்லி விட்டு செல்பவன் அல்ல, பாருங்கள்?) , என் வசனத்தைக் கேட்டு, என்னை (அதாவது வார்த்தையை) அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (பாவனை யாக விசுவாசிக்கிறவன் அல்ல, உண்மையாக விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி (இறந்த காலம்) ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று யோவான் 5:24ல் கூறியுள்ளார் (ஆங்கிலத்தில் “Hath passed” அதாவது. அவன் ஏற்கனவே மரணத்தை விட்டு நீங்கள் ஜீவனுக்குட்பட்டு விட்டான் என்று இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) பாருங்கள்? அதுதான் 158எனவே யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது (அது முற்றிலும் உண்மை ), ஆனால் அவன் ஆக்கினைத் தீர்ப்படைந் தான், ஏனெனில், அவன் என்ன செய்தான்? தன் பிறப்புரிமையை விற்றுப் போட்டான். ஏசா தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்த குடும் பத்தில் பிறந்தான். மூத்தவனுக்கு தான் சேஷ்ட புத்திர பாகம் கொடுக்கப்பட்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும்? தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம், ஏசாவின் பெயர் சேஷ்ட புத்திரபாகம் பெற்றிருந்தவரின் பெயர்கள் அடங்கிய புத்தகத்தில் இருந்தது. (அது சரியா?), ஆனால் அவனோ ஒரு பானை கூழுக்காக அதை மாற்றிக் கொண்டான். பசியாயிருந்த அவனுடைய வயிற்றை நிரப்புவதற்கென்று, அவனுடைய ஆகாரச் சீட்டுக்காக அவன் தன் சேஷ்ட புத்திர பாகத்தை மாற்றிக் கொண்டான். அதன் விளைவாக அவன் மனந்திரும்புவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போயிற்று. தேசத்தை வேவு பார்க்க சென்றவர்கள் திரும்பி வந்து யோசுவாவும் காலேபும் கொண்டு வந்த திராட்சை பழங்களையும் தின்றனர். இருப்பினும், அவர்கள் என்ன செய்தனர்? தங்கள் சேஷ்ட புத்திர பாகங்களை விற்றுப் போட்டனர். 159இயேசு கூறினார் - இல்லை, கிறிஸ்துவின் ஏவுதலினால் பவுல் 6ம் அதிகாரத்தில், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம் ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் பாவை யில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று உரைத்திருக்கிறான். (எபி.6:4-6). அவர்கள் “தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தங்களைப் பரிசுத்தஞ் செய்த 2 டன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபை யின் ஆவியை நிந்திக்கிறவர்கள்” (எபி.10:29). அந்த நபர் திரும்பி வருவது கூடாத காரியம் யோசுவாவும் காலேபும் தவிர, மற்றவர் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்து அழிந்து போயினர். அவர்கள் விசுவாசிகளே, அவர்களுடைய பெயர்கள் புத்தகங்களில் இருந்தன. 160பவுல் இங்கு பேசுகையில், ஒரு மனிதன் இரட்சிக்கப் பட்டு, பரிசுத்தமாக்கப்படும் கட்டத்தை அடைந்து (இரத்தம் பரிசுத் தம் செய்கிறது; எபி.13:12-13. இரத்தம் பரிசுத்தம் செய்கிறதாக உரைக்கிறது), அதன்பிறகு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் வாசல் வரைக்கும் வந்து, பிரக்கியாதியின் காரணமாகவோ அல்லது ஸ்தாபனத்தின் காரணமாகவோ அதற்குள் நடக்க மறுத்தால், “அந்த மனிதன் இழக்கப்படுவான், அவன் இழக்கப்படுவான்” என்று உரைக்கிறான் (பாருங்கள்?); ஏனெனில் அவனை அந்த இடத்துக்கு அழைத்து வந்து அதை அவனுக்குக் காண்பித்த கிருபையின் ஆவியை அவன் நிந்தித்து. அங்கிருந்து திரும்பி நடந்து சென்று விடுகிறான். அவன் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் சிந்தப்பட்ட 2 டன் படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறான். ஏனெ னில் அந்த இரத்தம் தான் அவனை இரட்சித்து, நீதிமானாக்கி, பரிசுத்தப்படுத்தி, அவனை பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரைக்கும் கொண்டு வந்தது. அவனோ அதை விட்டு விலகி, நடந்து சென்று விடுகிறான். 161இப்பொழுது, மாதிரியைக் கவனியுங்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன், ஆனால் பாருங்கள்! யூதாஸ்காரி யோத்து அதே பாதையைத் தொடர்ந்தான். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நீதிமானாக்கப்பட்டான். அவன் பரிசுத்தமாக் கப்பட்டு, ஆவிகளைத் துரத்த அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட டிருந்தது. அவனுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவன் பெந்தெகொஸ்தேவுக்கு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு, வார்த்தையின் முழுமைக்கு வந்த போது, அவன் தன் உண்மையான நிறத்தைக் காண்பித்தான். கானானுக்குச் சென்ற வேவுகாரர்களும் அதைதான் செய்தனர்; ஏசாவும் அதைதான் செய்தான் அதையே தான் சாத்தானும் ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தில் செய்தான். “நிச்சயமாக தேவன் செய்ய மாட்டார்...” அவள், “தேவன் சொல்லியிருக்கிறார்” என்றாள். அவன், “ஆம், அது அதை சொல்லுகிறது, இதை சொல்லு கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் நிச்சயமாக...' என்றான். பாருங்கள், அதே காரியங்கள்தான் காலங்கள்தோறும் இன்று வரைக்கும். 162சபையானது மார்டின் லூத்தர் காலத்தில் நீதிமானாக் கப்படுதலின் வழியாகவும், வெஸ்லியின் காலத்தில் பரிசுத்த மாக்கப்படுதலின் வழியாகவும் கடந்து வந்தது. ஆனால் அது பரி சுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நேரத்தை அடையும் போது, அவர்கள் தங்கள் சுய நிறத்தைக் காண்பிக்கின்றனர், அதனுடன் அவர்கள் எந்த சம்பந்தமும் கொள்ளப் பிரியப்படவில்லை. நசரீன் கள், யாத்திரீக பரிசுத்தர், தேவ சபை, இவர்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதில் உங்கள் விரலைச் சுட்டிக் காட்ட முடியாது. அது உண்மை. ஆனால் எல்லைக் கோட்டுக்கு அது வரும் போது, புதிய பிறப்பை பெற பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அந்த கட்டத்தை அது அடையும் போது, பிசாசு என்ன செய்கிறான்? அவன் வந்து அதை திரித்து விடுகிறான். ஓ, ஜனங்களை அதிலிருந்து விலக்கிவிட தன் அதிகாரத்தில் இருக்கும் எதையும் அவன் செய்வான். அவர்கள் அதை சுற்றி வளைத்து, “நீங்கள் அந்நிய பாஷை பேச வேண்டும். உங்களுக்கு உணர்ச்சி உண்டாக வேண்டும். நீங்கள் இதை செய்ய வேண்டும்' என்று கூறுகின்றனர். நீங்கள் அதற்குள் பிறக்க வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் இரண்டும் ஒன்றுதான் என்று எவரும் உங்களிடம் கூற அனுமதிக்காதீர்கள். ஏனனில் அது அப்படியல்ல! நிச்சயமாக அல்ல! பின்னால் உள்ள நசரீன் ”அது அப்படியல்ல“ என்று கூச்சலிடுவதைக் கேளுங்கள். பாருங்கள்? அவ்விரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை அவர் அறிந்துள்ளார். ஏனெனில் நிச்சயமாக வித்தியாசம் உண்டு - சகோ காப்ஸ், நமது தீரமுள்ள சகோதரன். பாருங்கள்? 163நிச்சயமாக, நசரீன்கள். அவர்களுக்கு விரோதமாக யாரும் ஒரு வார்த்தையும் கூற இயலாது, அருமையான, மதப்பற்றுள்ள ஜனங்கள், அவர்கள் மிகவும் நல்லவர்கள். தேவ சபை யினர், நசரீன்கள், சுயாதீன மெதோடிஸ்டுகள், இவர்கள் அனைவரும் உண்மையான வர்கள், ஆனால் ஆவியின் கிரியைகளுக்கு அது வரும் போது அவர்கள், “ஓ, ஓ, அது பிசாசு” என்று சொல்லி விடுகின்றனர். அவர்கள் அங்கு என்ன செய்கின்றனர்? பரிசுத்த ஆவிக்கு விரோத மாய் தேவ தூஷணம் சொல்கின்றனர். அவர்கள் அதைச் செய்யும் போது .... இப்பொழுது, தேவ தூஷணம் என்றால் என்ன? அதற்கு மன்னிப்பே கிடையாது. அது சரியா? ஒருதரம் பிரகாசிப்பிக் கப்பட்டும், பர்ம ஈவை ருசிபார்த்தும் (தேவனுடைய பரிசுத்தமாக் கப்படுதலை ருசி பார்த்தல் : புகை பிடித்தல், அசுத்தமான பெண்களுடன் ஈடுபாடு, அத்தகைய வாழ்க்கை அனைத்தினின்றும் விடுபடுதல்), 'பரம் ஈவை ருசிபார்த்தும் (அந்த திராட்சை குலையிலிருந்து ஒரு பாகத்தை ருசித்த அந்த வேவுகாரர்கள் போல் எல்லைக்கோடு வரைக்கும் வருவதைக் கண்டு... ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களிலிருந்து விடுபட்டு இங்கு கடந்து வரவேண்டும். 'பாருங்கள்?), பரம ஈவை ருசிபார்த்தும்; தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து, தங்களைப் பரிசுத்தஞ் செய்த உடன் படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறவர்கள். 164பரிசுத்தமாக்கப்படுதல் என்பது, விசுவாசி என்னும் முறையில் உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் எழுதப்படும் போது. உங்களுடைய பெயர் அவருடைய இரத்தத்தினால் எழுதப்படுகிறது. பாருங்கள்? பரிசுத்தமாக்கப்படுதல் அதை செய்கிறது, நீங்கள் தொடர்ந்து வருகிறீர்கள். அவர் உங்களை இதுவரைக்கும் நம்பின பிறகு, நீங்கள் அங்கு அடைந்து, “நல்லது, அவருக்குத் தெரியுமா?” என்று கேட்கிறீர்கள். ஆம், அவர் அறிந்திருந்தார். நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் என்று தொடக்கத்திலேயே அவர் அறிந்திருந்தார். அவர் அவனை தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார்; அவன் கேட்டின் மகன். ஆனால் இந்த காரியங்கள் நிறைவேற வேண்டும். பாருங்கள்? வார்த்தையானது நிறைவேற வேண்டும், அவை முன்னடையாளங்களாகவும் சாயல்களாகவும் இருந்த போதிலும். ஓ, என்னே! நாம் அதில் மணிக்கணக்கில் நிலைத்திருக்கலாம். 165சகோ.பிரான்ஹாமே, நீர் எழுபது சபை வாரங்களின் பேரில் செய்தி அளித்த போது- (என்னை மன்னிக்கவும்) தானியேலின் எழுபது வாரங்களின் பேரில், முழு கடைசி வாரம் அல்லது கடைசி ஏழு வருஷங்கள் மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுக்கப்படும் போது தொடங்குகிறது என்று நீர் கூறினீரென்று நினைக்கிறேன். இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை! நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் (பாருங்கள்?) முழு வாரம் அல்லது கடைசி ஏழு வருடங்கள் அல்ல. இயேசு இவ்வுலகில் வந்த போது அந்த வாரம் தொடங்கினது- அவன், “மேசியா, அதிபதி, வந்து தீர்க்க தரிசனம் உரைப்பார், அந்த வாரத்தின் நடுவில் அவர் அறுப்புண்டு போவார்” என்றான். இயேசு சரியாக மூன்றரை ஆண்டு காலம் பிரசங்கித்தார், அது ஏழு நாட்களாகிய வாரத்தின் நடுவில். பாருங்கள்? இன்னும் மூன்றரை ஆண்டுகள் மீதமுள்ளது. இப்பொழுது, மோசேயும் எலியாவும் பூமிக்கு வரும் போது அது வெளிப்படுதல் புத்தகத்திலும் சகரியாவிலும் காணப்படுகிறது... (சகோ. கூமர், உங்கள் கேள்வியும், சகோதரி கூமரின் கேள்வியும் அதன் பேரில்தான்). இப்பொழுது, அவர் கள்... சகரியா 4ம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத் திலும் இந்த இரு ஒலிவ மரங்கள் - அது மோசேயும், எலியாவும் - அவர்கள் பூமிக்கு வரும் போது சரியாக 1260 நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் . அது என்ன? சரியாக மூன்றரை ஆண்டு காலம். அது சரியாக அதே காரியம்தான். பாருங்கள்? இதை கேட்ட அருமையான நபர் யாராயிருப்பினும், மிகவும் அழகாக தாளில் எழுதப்பட்டுள்ளது, வேத சம்பந்தமான தலைப்பு, கோடுகள் இங்கேயும் மற்றவைகளும், அது மிகவும் அழகாயுள்ளது. இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் நான் கூறினதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. அந்த முழு வாரமும் இப்பொழுது முடிவடையும் என்று நான் ஒரு போதும் நினைத்ததேயில்லை. மேசியா அறுப்புண்டு போகிறார். இதை நான் இங்கு பிரசங்கித்தது எத்தனை பேருக்கு 'ஞாபகமுள்ளது? நிச்சயமாக! பாருங்கள்? ஏழு நாட்கள். 166அப்பொழுது முதற்கொண்டு, முதல் மூன்றரை ஆண்டுகள் இயேசுவின் ஊழியத்தின் போது நிறைவேறினது போல் தோன்றுகிறது (நல்லது, இங்கு அதை நீங்கள் சரியாக கூறியிருக் கிறீர்கள்) ஆனால் “வாரத்தின் நடுவில்” என்று கூறப்படுவது அந்தி கிறிஸ்து தான் செய்த உடன்படிக்கையை முறிப்பதை குறிப்பிடுவது போல் தோன்றுகிறது... (இல்லை, அந்திகிறிஸ்து கடைசி மூன்றரை ஆண்டுகள் முடிவில் தான் தன் உடன்படிக்கையை முறிக்கிறான். பாருங்கள்?). தானியேலின் செய்தி ஒலிநாடாவை நான் எவ்விதம் புரிந்து கொண்டேன் என்றால், இயேசு எருசலேமுக்குள் கி.பி. 20ம் ஆண்டில் சவாரி செய்து சென்ற போது, முதல் அறுபத்தொன்பது வாரங்கள் முடிந்து விட்டது, எனவே அவருடைய ஊழியத்தின் அந்த மூன்றரை ஆண்டுகள் அறுபத்தொன்பது வாரங்களில் சேர்க்கப்படும்: கடைசி முழு வாரம் அல்லது ஏழு ஆண்டுகள் இனிமேல் நிறைவேற வேண்டும், அது எடுத்துக் கொகர்ளப்படுதலின் போது தொடங்கும். இதை தயவுகூர்ந்து எனக்கு தெளிவாக்கும். உங்களுக்குத் தெரியுமா, சகோதரனே ,சகோதரியே, இந்த கேள்வியைக் கேட்டவர் யாராயிருந்தாலும் மிகவும் அழ கானது (பாருங்கள்?), ஆனால் நான் கூறினதை நீங்கள் சிறிது தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பாருங்கள்? இயேசு எருசலேமுக்கு வந்த போது (அது முற்றிலும் உண்மை), அது... பாருங்கள்? அவர் அங்கிருந்து நேராக சென்று சிலுவை யிலறையப்பட்டார். பாருங்கள்? அவர் ஒரு வாரம் பாதியில் தீர்க்க தரிசனம் உரைத்தார் என்பது உண்மையே. அது மூன்றரை ஆண்டு காலம். இப்பொழுது , அவர் அறுப்புண்டு போனார், அவருடைய ஆத்துமா பலியாக செலுத்தப்பட்டது. இப்பொழுது, இன்னும் வர வேண்டியது. இந்தக் கடைசி நாட்களில் இன்னும் மூன்றரை ஆண்டுகள் யுதர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. தற்போது, எடுத்துக் கொள்ளப்படுவதற்காக பரிசுத்தவான்களின் ஒன்று கூடுதல் உண்டாகும். இப்பொழுது இவையனைத்தையும் நான் பார்க்கப் போவ தில்லை, சகோதரனே, சகோதரியே. 167தயவு கூர்ந்து 1 கொரிந்தியர் 7ம் அதிகாரம் 1 முதல் 9 வசனங்களை விளக்குவீர்களா? (சகோ.நெவில், அதை எடுங்கள், 1 கொரிந்தியர், 7ம் அதிகாரம் முதல் வசனம்). 168ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் யோவான் 14:12ல் இயேசு கூறியுள்ள அந்த கிரியைகளை செய்வானா? (அல்ல!) பிணியாளிகளை சொஸ்தப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, மரித்தோரை உயிரோடெழுப்புவானா? (அது யோவான் 14ல் அல்ல என்று நினைக்கிறேன், அதனால் பரவாயில்லை. அது மாற்கு 16). அல்லது, இதை செய்வது எலியா மட்டும்தானா? ஒரு உண்மையான விசுவாசி இவையனைத்தையும் செய்ய வேண்டுமா? அவன் உண்மையான விசுவாசியாயிருந்தால், மரித்தோரை உயிரோடெழுப்பி மகத்தான அற்புதங்களை செய்வானா? இப்பொழுது, இது விசுவாசிகளின் மத்தியில் நடை பெறும். பாருங்கள்? ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வரங்கள் அனைத்தும் இருக்காது, ஒரு மனிதன் இதைச் செய்வான் என்று அர்த்தமல்ல; அது ஒரு கூட்டம் ஜனங்களாயிருக்கும். உதாரணமாக இந்த சபையில் ஒரு சிறு பெண், அல்லது ஒரு சிறு பையன், அல்லது நாம் அதிகமாக நேசிக்கும் யாராகிலும் இருந்து, அவருடைய உயிர் பிரிந்து போனது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது முழு சபையும் ஒன்று கூடி ஜெபம் பண்ணி உபவாசித்து, “ஆண்டவரே, அந்த பிள்ளையின் மேல் இரக்கமாயிரும்” என்று விண்ணப்பிக்கும். பாருங்கள்? தேவன் அந்த பிள்ளையை உயிரோ டெழுப்பக்கூடும். எத்தனை பேர் நிசாயா பிதாக்கள் இன்னும் மற்ற புத்தகங் களைப் படித்திருக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா, அப்படித்தான் அவர்கள் ஆதிகாலத்து சபையில் செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சில நேரங்களில் போதகரையும் கூட, இன்னும் மற்றவர்களையும் உயிரோடெழுப்பின துண்டு - அதை செய்வது நலமென்று தேவன் காண்பாரானால்; அவர்கள் அதை செய்தனர். 169சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லாமல் போனாலும், அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவகாலத்தின் வழியாக சென்று இரட்சிக்கப்படுவாள் என்று நீர் போதித்தரென்று எண்ணுகிறேன். அப்படியானால் மரித்தோரைக் குறித்தென்ன? அவர்கள் எவ்விதம் சுத்திகரிக்கப்படுவார்கள்? சரி, இதை பெற்றிருக்கிறவர்கள். மணவாட்டிக்கு சுத்திகரிப்பு அவசியமில்லை. அவள் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்டு விட்டாள். முன் காலத்தில் மரித்துப் போனவர்கள். பாருங்கள்? இங்குள்ள இந்த சபை பெற்றுள்ள வெளிச்சத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; அவர்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப்படுதல் போன்றவைகளின் கீழ் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பெற்றிருந்த வெளிச்சத்தில் அவர்கள் வாழ்ந்தனர். ஒருக்கால் அவர்கள் துன்பம் அனுபவித்திருக்கக் கூடும். அவர் களுடைய உபத்திரவங்கள்... ஆனால் இப்பொழுது, எடுத்துக் கொள்ளப்படுதல் நேரம் வர வேண்டிய இப்பொழுது, மண வாட்டியின் தலை பாகத்தை புறக்கணிக்கின்றவர்கள், அவர்கள் புறக்கணித்ததன் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டிய நேரம் ஒன்று வரும். ஆனால் முன் காலத்தில் இருந்தவர்களுக்கு, இன் றுள்ளது போல சுவிசேஷமானது தெளிவாக்கப்படவில்லை. பாருங் கள்? நீங்கள் அவரைத் தெளிவாக காண்கிறீர்கள். இத்தனை ஆண்டுகள் உங்களுக்கு இருந்தது - உங்களுக்கு உதாரணங்கள் அளிக்கப்பட்ன, முத்திரைகள் திறக்கப்பட்டு விட்டன, சபை காலங் கள் உங்களுக்கு முன்பாக வெளிப்படையாக வைக்கப்பட்டது, எல்லாமே அவ்விதமாக தெளிவாக்கப்பட்டுவிட்டது. அது அவ்வளவு தெளிவாயுள்ளதால், அதை நீங்கள் காணத் தவற முடியாது. பாருங்கள்? இவையனைத்துக்கும் பிறகு, நீங்கள் முழுவதுமாக இதைப் புறக்கணிப்பீர்களானால், செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, நீங்கள் அதற்காக துன்பம் அனுபவிக்க வேண்டும். 170அதை எடுத்து விட்டீர்களா, சகோ.நெவில்? அது எதைக் குறிக்கும் ஒன்று? நான் இப்பொழுது முடித்து விட்டு போய் விடுவது நல்லது. ஏனெனில் நேரம் அதிகமாகிக் கொண்டிருக் கிறது. பாருங்கள்? ஏழு, - ஏழு ஒன்பது ... நாம் பார்ப்போம். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம் பண்ணக் கடவர்கள்; வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம், சரி, அது அசுத்தமான வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கிறது. ஒரு மனிதன், ஒரு பையன், ஒரு பெண், அப்படி யாரோ ஒருவர், அவர்கள் ஒன்றாக சென்று, அவர் விவாகம் பண்ண வேண்டுமென்று அறிந்திருந்தால், நீங்கள் போய் விவாகம் செய்து கொள்ளுங்கள். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறது என்று நினைக்கிறேன். பாருங்கள்? அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள். ஏனெனில் அது சரி யல்ல. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவாரயிருந்தால், அது ஒரு விதத்தில் உங்கள் சகோதரி. அது உலகமாயிருக்குமானால், அது உலகமே; நாய் நாயைத் தின்கிறது. ஆனால் நீங்கள் கூட சென்று கொண்டிருக்கிற இந்த பெண், அது உங்கள் சகோதரியும் கூட! அது வரப்போகிற உங்கள் பிள்ளைகளுக்குத் தாய். அவளுடன் அசுத்த மான வாழ்க்கை வாழாதீர்கள், நீங்கள் பண்புள்ள கிறிஸ்தவர் என்பதை அவளுக்குப் காண்பியுங்கள். நற்பண்புள்ள கிறிஸ்தவர் வாழ வேண்டிய விதத்தில் வாழுங்கள். பாருங்கள்? அவளை உங்கள் சகோதரி போல நடத்துங்கள், நீங்கள் அவளை விவாகம் செய்து கொண்ட பிறகும், அதே போல் அவளை நடத்துங்கள். 171இதற்கு நான் இப்பொழுதே பதில் கூறி விடலாம். பெந்தெகொஸ்தே ஜனங்கள், பரிசுத்தம் ஜனங்கள், அவர்கள் விவாகம் செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் ஆபாசமான வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இல்லை, ஐயா! சில ஆபாசமான காரி யங்கள், அவை மிகவும் பயங்கரமானவை.... சில நேரங்களில் அப்படிப்பட்டவர்கள் இங்கு வருகின்றனர். இன்று காலையில் அல்ல, அதை நான் கூறவில்லை, ஆனால் சில நேரங்களில் நான் கலி போர்னியாவுக்கும் வெவ்வேறு இடங்களுக்கும் சென்றிருக்கும் போது, அங்கு நான் போதகர்களை சந்திக்கிறேன். சிந்தனைகளைப் பகுத் தறிதலின் வரத்தின் மூலமாக அவர்களைக் காணும் போது, அவர் களை என் முழங்கால்களின் மேல் கிடத்தி, அவர்களுக்கு சுவி சேஷ அடி கொடுக்கலாம் போல் எனக்குத் தோன்றுகிறது. ஆம், ஐயா! என்னே , ஒரு மனிதன் தன் மனைவியிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயல்வதைக் காணும்போது... நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா? தேவனுடைய மனிதன் என்னும் முறையில் நீங்கள் உங்களைக் குறித்து வெட்கப்பட வேண்டுமென்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கணவனாக, இனியவராக இருங்கள். அவளை எப்பொழுதும் போல மதியுங்கள். இந்த பாலுணர்ச்சி புத்தகங்களில் காணப்படும் முட்டாள்தனமான காரியங்களில் கவனம் செலுத்தாதீர்கள் - நீங்கள் படிக்கும் அவ்விதமான ஆபாச மான காரியங்களில், அந்த ஆபாசமான காரியத்தை உங்கள் சிந்தையிலிருந்து எடுத்துப் போடுங்கள். 172நீங்கள் பரிசுத்தத்தை பெற்றுள் ள தாக கூறிக் கொள்ளும் போது, ஒரு ஆபாசமான சம்பாஷணையும் உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது என்று வேதம் உரைக்கிறது. இந்த சிறு மாது சிரோமணியை உங்கள் மனதுக்கு இனியவளாக நடத்துங்கள். அவளுக்கு அறுபது வயது இருக்குமானால், அப் பொழுதும் அவளிடம் அதே விதமாக இருங்கள். நீங்கள் அவளுக்கு தீரமான ஆண் நண்பனாக (boy friend) இருங்கள்; ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் அதுதான். இந்த புதிதான காரியங்கள் ஒன்றையும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம், நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒரு கணவனாக, ஒரு உண்மையுள்ள சகோதரனாக, உண்மையுள்ள கிறிஸ்தவனாக இருங்கள். அது மோசமாக தொனிக்கிறதென்று எனக்குத் தெரியும்... ஆனால் அந்த ... நீங்கள் என் பிள்ளைகள், உங்களிடம் கூற விரும்புவதைக் கூற எனக்கு உரிமையுண்டு, பாருங்கள்? நீங்கள் என் பிள்ளைகள்; நீங்கள் சரியாக வாழுங்கள். ஸ்திரீகளாகிய நீங்களும், உங்கள் கணவனிடம் சரியான விதத்தில் வாழுங்கள். கணவன் மாராகிய நீங்களும் உங்கள் மனைவிமார்களிடம் சரியான விதத்தில் வாழுங்கள். நீங்கள் மிக மிக அருமையாக இருந்து ஒருவருக்கொருவர் மதிப்பு செலுத் துங்கள். உங்கள் குடும்ப உறவு போன்றவை, அது மிகவும் பயபக்தியாயும், தேவ பக்தியுமுடையதாய், நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப் போங்கள். நீங்கள் தள்ளியும் திணித்தும், ஆபாசமாகவும் அவலட்சணமாகவும் நடந்து கொள்ளாதீர்கள். 173புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனைவியுடன் உரை யாடுங்கள். உங்களுக்கு ஒரு சுபாவமும் அவளுக்கு வேறொரு சுபாவமும் இருந்தால் அவளிடம் அதைக் குறித்து பேசுங்கள் சகோதரியே, நீயும் அதையே அவரிடம் செய். அதேவிதமாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, உண்மையான நற்பண்புள்ள கிறிஸ்தவராகவும், உண்மையான மாது சிரோமணியாகவும் இருந்து ஒருவருக்கொருவர் சகோதரனாயும் சகோதரியாயும் இருங்கள் நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருங்கள். நீங்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தவர்கள், நீங்கள் ராஜ குடும்பத்தின் இரத்தத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இரத்தத்தைக் காட்டிலும் உயர்ந்த இரத்தம் இவ்வுலகில் எதுவு மில்லை. அது உண்மை! ராஜ குடும்பத்தின் இரத்தம் தன்னை யாரென்று காண்பிக்கும். அதுதான் அது, அது ராஜ குடும்பத்தின் இரத்தம். அதை நம்புகிறவர் எல்லோரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). ஆம், ஐயா! நீங்கள் யாரென்று காண்பியுங்கள். நான் ராஜாவின் மகன், நான் ராஜாவின் மகன். என் மனைவி ராஜாவின் குமாரத்தி. நான் அந்த ராஜகுமாரத்தியை எப்படி நடத்துவேன்? அவள் அந்த ராஜகுமாரனை எப்படி நடத்துவாள்? நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருங்கள். 174மணவாட்டி இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு பரிசுத்த ஆவியின் அசைவு இருந்து, அவளால் அற்புதங்களும் அடை யாளங்களும் செய்யப்படுமா? அல்லது அவருடைய பிரத்தி யட்சமாகுதலுக்காக மட்டும் நாம் காத்திருக்கிறோமா? இந்தக் கேள்வியுடன் நான் முடித்துக் கொள்ள வேண்டி யிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் பதில் சொல்வதற்கு இன்னும் அநேக கேள்விகள் உள்ளன. அதிக நேரமாகிவிட்டது. இப்பொழுது நேரம் ஒரு மணிக்கு இருபது நிமிடங்கள். இங்கு இன்னும் முப்பது அல்லது ஒருவேளை நாற்பது கேள்விகள் கே. கூடும். எனக்கு உள்ள நேரத்தில் நான் இதற்கு சிறந்த முறையில் பதிலளிக்கிறேன். நான் மூன்று நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறேன். மற்ற கேள்விகளை என்னால் முடியும் போது எடுத்துக் கொள்கிறேன். பாருங்கள்? எப்பொழுது இவைகளை எடுத்துக் கொள்ள முடியும் மென்று எனக்குத் தெரியவில்லை. என்னால் முடிந்தவரையில் அதை சிறப்பாக செய்வேன். நீங்கள் இவைகளை அனுபவித்து மகிழ் கின்றீர்களா? நான் .... அது எனக்கும் உதவியாயுள்ளது. பாருங்கள்? இங்கு வந்து இக் கேள்விகளை முன்பு காணாமல் பொறுக்கி எடுக்கும் போது (பாருங்கள்?), உங்களால் பதில் கூற இயலாத சில கேள்விகள் கிடைத்து விடுகின்றன. நான் நம்பியிருந்தேன். நான் பொறுக்குவேன் என்று... சர்ப்பத்தின் வித்தைக் குறித்த ஒரு கேள்வி இங்குள்ளது என்று எனக்குத் தெரியும். அதை எப்படியாவது பொறுக்கி எடுத்து அதை விவரிக்க வேண்டுமென்று விரும்பினேன். பாருங்கள்? அதை எடுக்கத் தவறி விட்டேன், எனவே நான்.... ஒருக்கால் அதை அந்த விதமாக செய்வது கர்த்தருக்குப் பிரிய மில்லை போலும், அது சர்ப்பத்தின் வித்தின் பேரில், இந்த ஒலி நாடாவைக் கேட்கிறவர்கள் ஒருக்கால், “நல்லது, அவர் அதற்கு பதில் கூறாமல் விட்டு விட்டார்” என்று சொல்லாதபடிக்கு, அதற்காக எத்தனை பேர் இன்னும் இரண்டு நிமிடங்கள் சகித்துக் கொள்வீர் கள்? சரி. 175இப்பொழுது பொறுங்கள், இதற்கு முதலாவதாக நான் பதில் கூறட்டும். இங்குள்ள கேள்வி இது: “மணவாட்டியினால் அற்புதங்கள் செய்யப்படுமா? ஆம், ஐயா. அது இப்பொழுது செய் யப்பட்டு வருகிறது. அது உண்மை. பாருங்கள்? ஆனால் மகத்தான அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைத்தல் போன்றவைகளை. அது யூதர்களுக்கு செல்லவிருக்கிறது. பாருங்கள்? அது இங்கு சம்பந்தப்பட்டதல்ல; அது மோசேயும் எலியாவும் யூதர்களிடம் செல்லுதல், அது இந்த சபைக்கு அல்லவே அல்ல. நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள். சபை என்னவென்று அங்கு புரிந்து கொள்வீர்கள். சபைக்கு அவ்வளவு தான். அது மணவாட்டியுடன் திரும்ப வரும்போது, அவள் திரும்ப வரும் போது... படியுங்கள்... சபையைக் குறித்து நீங்கள் அறிய வேண்டுமானால், அதனுடன் சம்பந்தப்பட்டுள்ளது எதுவென்று, வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படித்து விட்டு, அங்கிருந்து 19ம் அதிகாரத்துக்கு சென்று அதிலிருந்து தொடங்கி படியுங்கள், அங்கு நீங்கள் மணவாட்டியை காணலாம். மற்றது யூதரைக் குறித்தது. 176இப்பொழுது, சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வியை என்னால் இங்கு கண்டு பிடிக்க முடியவில்லை, ஏனெனில் (பாருங்கள்), இவை இங்கு ஒரு பெரிய குவியலாக உள்ளன. ஆனால் அந்த நபர், “அது சர்ப்பத்தின் வித்தாயிருக்குமானால்... அந்த ஸ்திரீ 'நான் கர்த்தரால் ஒரு குமாரனைப் பெற்றேன்' என்று எப்படிச் சொன்னாள்?” என்று கேட்டிருக்கிறார். நல்லது, அவள் கர்த்தரால் எவ்விதம் அவனைப் பெற்றாள் என்று போன ஞாயிறு விளக்கினேன் என்று நினைக்கிறேன். அவளுக்கு அது கிடைத்திருக்குமானால், அது கர்த்தரிடமிருந்து தான் அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும் (பாருங்கள்?) ஏனெனில் அது கர்த்தரிடமிருந்து தான் வரவேண்டும். ஏனெனில் தேவனுடைய பிரமாணம்... அது தேவனுக்கு கீழ்படியும். நிச்சயமாக! சூரியன் பிரகாசிக்க வேண்டுமென்று அவர் அதை உண்டாக்கினார்; அது பிரகாசிக்கிறது. மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்ய வேண்டுமென்று அவர் தீர்மானித்தார்; அது அப்படியே நடக்கிறது. வயலில் விதைக்கப் படும் விதைகள், நல்லவையானாலும் கெட்டவையானாலும், வளர்ந்து மேலே வருகிறது; ஏனெனில் அது ஒரு விதை. ஒரு விதை நடப்பட்டால்... இந்த சர்ப்பம் தன் விதையை நடக்கூடிய ஒரே வழி, அந்த மிருகம் மட்டுமே மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது. ஏனெனில் மானிட வர்க்கத்தின் தோற்றத்தின் போது, தேவன் பூமியின் மேல் அசைவாடின் போது .... அவர் பறவைகளைத் தோன்றச் செய்தார். பறவைகளிலிருந்து அவர் வெவ்வேறு ஜீவ ராசிகளுக்கு வந்தார். பிறகு வாலில்லாக் குரங்கு (Chimpanzee), வாலில்லாக் குரங்கிலிருந்து சர்ப்பம். 177அவர் இந்த சந்ததியை குழப்பும் வகையில் அந்த சர்ப்பத்தை மாற்றிப் போட்டார் (அது அவ்விதம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது; இவர்கள் ஏதோ ஒரு மிருகத்தைப் போல் காணப்படும் ஒரு எலும்பைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். அது பாதி மனிதனும் பாதி மிருகமுமாயிருந்தது), அங்கிருந்து தான் மனிதன் தோன்றினான் என்று கூறுவதற்கு அவர்கள் வாலில்லாக் குரங்குக்குப் பிறகு இதை இழந்து போயினர், குரங்குக்கு அறிவு கிடையாது. அதற்கு ஆத்துமா கிடையாது. அதனால் சிந்திக்க முடியாது. அது... அதனால்... சத்தம் மட்டுமே உண்டாக்க முடியும். குதிரை “கீ, ”ஹா' என்று அப்படி ஏதோ ஒரு சத்த மிட்டு கனைக்கிறது. நாயிடம், “இங்கு வா, ஃபீடோ, ஒரு வித்தை (rick) காட்டு. இதைத் தாண்டு” என்றால் - கே கட்டைகள் மற்றும் அடுக்கி வைத்தால், அது உணர்ச்சியினாலும், கேட்பதனாலும், அப்படிப்பட்ட காரியங்களினாலும் செயல் புரிகிறது. ஆனால் அவைகளால் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாது. அவை நிர்வாணமாயுள்ளன என்பது அவைகளுக்குத் தெரியாது. அவை களுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. அவைகளுக்கு எந்தவித பிரமாணமும் கிடையாது. பாருங்கள்? அவைகளால் அதை செய்ய முடியாது. மனிதன் ஒருவன் மட்டுமே. மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது சர்ப்பமே. பூமியிலுள்ள எல்லா மிருகங்களைக் காட்டிலும் அது மிகவும் தந்திரமுள்ளதாய் இருந்ததாக வேதம் உரைக்கிறது. மிகவும் சாமர்த்தியமுள்ளது, அதற்கு ஏறக்குறைய ஒரு ஆத்துமா இருந்தது. அதற்கு ஆத்துமாவுக்காக ஒரு இடம் இருந்தது. ஆனால் அது என்ன செய்தது? தேவனை வஞ்சிக்க எண்ணி தன்னை சாத்தானுக்கு விற்றுப் போட்டது - தேவனை வஞ்சிக்க முயன்று. இவ்வளவு தூரம் நான் சொன்னதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? 178சாத்தான், சர்ப்பத்துக்கு, ஏறக்குறைய ஆத்துமா இருந் தது. அவர்கள் அந்த எலும்புகளைத் தேடுவார்கள் என்று தேவன் அறிந்திருந்தார். மனிதனைப் போல் காணப்படும் எந்த ஒரு எலும்பும் பாம்பில் இப்பொழுது இல்லை. அது... அது சபிக்கப் பட்டது. அது முன்பு மனிதனைப் போல் காலூன்றி நின்றிருந்தது கவனியுங்கள், அப்பொழுது அந்த வித்து அது மனித வித்துக்கு அடுத்தபடியாக இருந்தது.... சாத்தான், அந்த ஆவி, அந்த ஒரு வித்து மட்டுமே ஸ்திரீயை கர்ப்பந்தரிக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தான்; மனித குரங்கால் அதை செய்ய முடி யாது. அவர்கள் அதை கலந்து என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்; ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மனித குரங்கில் இருந்த ஜீவகிருமி ஸ்திரீயின் வயலுக்கு - அந்த முட்டைக்கு - வரமுடியா தென்று அவன் அறிந்திருந்தான். ஆனால் சர்ப்பத்தின் வித்து அதைச் செய்யுமென்று அவனுக்குத் தெரியும், எனவே அவன் சர்ப்பத்துடன் ஈடுபடத் தொடங்கினான். 179இந்த செயலைப் புரிய முடியும் என்று ஆதாம் அறிந் திருக்கவேயில்லை. பாருங்கள்? அவள் பெண்ணாக உண்டாக்கப்பட்ட டிருந்தாள். நிச்சயமாக, அவள் அதற்கு பின்னால் வந்திருப்பாள். ஆனால் பாருங்கள், தம்மை இரட்சகராக காண்பிக்க வேண்டும் என்னும் தேவனின் இராஜாதிபத்தியம்-அதை விளக்கியிருக்கிறேன். ஆனால் சாத்தான் இதை அறிந்திருந்தான், அவன் அவளிடம் சர்ப்பத்தின் ரூபத்தில் வந்தான். சர்ப்பம் ஒரு மிருகம். அவன் அவளை அணுகினான். அவள் முதலாவதாக சாத்தானால் கருத் தரிக்கப்பட்டாள். நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த செயல் இருமுறை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவள் இரட்டை பிள்ளைகளை பிரசவித்தாள். ஒருவன் சர்ப்பத்தின் வித்து; மற்றவன் ஆபேல். அவள் தன் கணவனை வசீகரித்து ஆசை காட்டி அவனிடம் கூறினாள். பாருங்கள்? அவள் தன் கணவனிடம் அது என்னவென்று காண்பித்தாள், அதன்பிறகு அவனும் அவளுடன் கூட வாழ்ந்தான், அதன் மூலமாக அவள் இந்த பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இரு வெவ் வேறு நபர்களால் அவள் இரட்டை பிள்ளைகளை கருத்தரித்தாள் என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அவள் ஒரு அவள் கன்னிகை. 180அவர்களுடைய வித்து பலம் வாய்ந்தது. உதாரணமாக இங்கு பாருங்கள். ஆபிரகாம் தன் சொந்த சகோதரியை மணந்து கொண்டான். இன்று ஒருவன் தன் சகோதரியை மணந்தால், அவனுக்குப் பிறப்பது மூடப் பிள்ளைகளாக இருக்கும். பாருங்கள்? ஆனால் மானிட... இங்கு யாக்கோபு , இல்லை ஈசாக்கு, ரெபேக்காளை மணந்து கொள்கிறான், நெருங்கின உறவு, இரத்த சம்பந்தமான உறவு, ஆபிரகாமின் சகோதரனின் மகள். கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள் (பாருங்கள்?), மானிட வர்க்கம் மிகவும் பலமுள்ளதாயிருந்தது. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அது எப்பொழுதுமே வழிவழியாக இரட்டை பிள்ளைகளாக இருந்து வந்துள்ளது. அங்கு ... காயீனும் ஆபேலும் இரட்டை பிள்ளைகள், ஏசாவும் யாக்கோபும் இரட்டை பிள்ளைகள். இயேசுவும் யூதாஸும் ஒரே கோத்திரத்திலிருந்து, ஒரே சபையிலிருந்து வந்தவர்கள். பரிசுத்த ஆவியும் அந்திகிறிஸ்துவும் கூட இரட்டை பிள்ளைகளே, “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக மிகவும் நெருக்கமாக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சரி. 181இதை நீரூபிக்க, நீங்கள் யூதா நிரூபத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அது 17ம் வசனம் என்று நினைக்கிறேன், அல்லது 14ம் வசனம்... இப்பொழுது, இப்பொழுது, இதைக் கவனி யுங்கள். நான் முடித்து விடுகிறேன். கவனியுங்கள், மற்றெல்லாவற் றையும் விட்டு விட்டு, இதை சரியாக பொருத்த முதலாவதாக அவர், “உன் வித்துக்கும் (சர்ப்பத்தின் வித்துக்கும்) அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்” என்றார் (ஆதி.3:15). பாருங்கள்? அவளுக்கு வித்து இருக்கவில்லை. எனவே அவள் பெற்றுக் கொண்ட வித்து சாத்தானின் வித்தே. காயீன் சாத்தானின் குமாரன். அவளுக்கு வித்து இருக்கவில்லை, எனவே அவள் அதை இன சேர்க்கையின் மூலம் பெற்றுக் கொண்டாள். அவள் அவ்விதம் பெற்றுக்கொண்ட போது, அது தேவனுடைய சத்துருவால் அவளுக்குக் கொடுக் கப்பட்டது. பிறகு, தேவன் அவளுக்கு ஒரு வித்தைக் கொடுத்த போது, அதில் இன சேர்க்கை சம்பந்தப்பட்டிருக்கவேயில்லை. உங்களுக்கு விளங்குகிறதா? அடிமைப் பெண்ணும் அவளுடைய பிள்ளையும் புறக்கணிக்கப்பட்டனர், ஏனெனில் சுயாதீனப் பெண்ணு டனும் அவள் பிள்ளையுடனும் இவர் கள் சுதந்தரவாளியா யிருப்பதில்லை. 182கவனியுங்கள், பிறகு அவளுக்கு ஒரு வித்து கொடுக் கப்பட்டது, அது கிறிஸ்து. அவளுடைய முட்டை... இப்பொழுது, பிராடெஸ்டெண்டுகள் அது கன்னியின் மூலம் பிறந்த 'ஹிமோ க்ளோபின்' என்று நம்புகின்றனர். அது சிருஷ்டிக்கப்பட்ட தேவ னுடைய இரத்தம் என்றும் அதில் கிருமிகள் உண்டாயிருந்தன என் றும், ஆனால் முட்டை அவளுடையது என்றும் அவர்கள் நம்புகின் றனர். இல்லை, ஐயா! உணர்ச்சி இல்லாவிட்டால், அந்த முட்டை அந்த குழாயின் வழியாக கருப்பைக்குள் வர முடியாது . அப்படியா னால் ஆவியாகிய தேவன் ஒரு ஸ்திரீயுடன் இன் சேர்க்கையில் ஈடு பட்டார் என்று நீங்கள் கூறுவது போல் ஆகிவிடுகிறது. அது எப்படி முடியும்? அது முழுவதும் தேவனுடைய சிருஷ்டிப்பினால் உண்டான பொருட்கள் - முட்டை, கிருமி இரண்டுமே. அவர் தேவனுடைய குமாரன், மரியாளின் குமாரன் அல்ல. அவர் அவளை “தாய்” என்று ஒரு போதும் அழைக்கவில்லை. “ஸ்திரீ” என்றுதான் அழைத்தார். அவர் அவளை ஒரு போதும் “தாய்” என்று அழைக்கவில்லை. அவள் அவருடைய தாய் அல்ல. அது தேவனுடைய குமாரன், தேவன் ஒருவரே. புரிந்து கொண்டீர்களா? 183இப்பொழுது, இதை நிரூபித்து ஆணித்தரமாகப் பதிய வைக்க வேறொரு காரியம், யாராகிலும் உங்களிடம் இவ்விஷயத்தில் சர்ச்சை உண்டாக்குவார்களானால், யூதாவின் நிரூபத்துக்கு செல் லுங்கள், அது 17ம் வசனம் என்று நினைக்கிறேன் (அது 14ம் வசனம் அல்லது 17ம் வசனம்). அவன், “ஏனோக்கு... நான் அதைப் படிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்களுக்கு அவ்வளவு நேரம் உண்டா? அப்படியானால், அதை நான் எடுக்கிறேன். அப்பொழுது நான் அறிந்து கொள்வேன். ஏனெனில் ஒலிநாடா இங்கு ஒடிக் கொண்டிருக்கிறது, இதில் நாம் தவறு செய்யக் கூடாது. அது எந்த வசனம் என்று பார்க்கட்டும்... பதினான்காம் வசனம். ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து ; இதோ... ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங் கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். 184இப்பொழுது. ஆதியாகமம் 5ம் அதிகாரத்துக்குச் செல்லுங் கள், பிறகு லூக்கா சுவிசேஷத்துக்கும் செல்லுங்கள் (இதை என்னால் கண்டு பிடிக்க முடிந்தால் நலமாயிருக்கும்; இதை யெல்லாம் நான் இங்கு எழுதி வைத்திருந்தேன்), அங்குள்ள வம்ச வரலாற்றில் நீங்கள் காணலாம். வேதத்தில் எங்கும் சொல்லப் படவில்லை..... பாருங்கள்! நோவா - ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந்தலை முறையானால், வேதம், “ஆதாம், அதன் பிறகு அவனுடைய குமாரன் சேத் என்றுரைக்கிறது (ஆதி. 5:3; லூக்.3:38). ஏனெனில் காயீன் ஆதாமின் சந்ததி அல்ல. அது ”ஆதாம் சேத்தைப் பெற்றான் ... என்கிறது. சேத், யாரேதைப் பெற்றான். யாரேத் பெற்றான். இப்படி வழிவழியாக ஏனோக்கு வரைக்கும். ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறை. தேவனுடைய வம்ச வரலாற்றில் காயீன் ஒருவனாக கருதப்பட்டதாக எங்கும் கூறப்படவில்லை. 185அது அப்படித்தானா இல்லையாவென்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்; அதைப் பாருங்கள், லுக்காவும் கூட ஆதாமிலிருந்து பிறந்த சந்ததியாரின் பெயரைக் குறிப்பிடுகிறான். ஒரு முறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையானால் (பாருங்கள்?), காயீன் அதில் எங்கு வருகிறான். ஏனெனில் வேதம் வம்ச வரலாற்றில் ஆதாம் தன் குமாரனாகிய சேத்தைப் பெற்றான்; சேத் யாரேதைப் பெற்றான்; யாரேத் இன்னாரைப் பெற்றான் என்று வழிவழியாக உரைக்கிறது. ஒருமுறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. அப்படியானால் அவன் ஆதாமின் குமாரனாக இருக்க முடியாது. எனவே அவன் சர்ப்பத்தின் குமாரனாக இருக்க வேண்டும். இன சேர்க்கை இல்லாமல் அவன் குமாரனாக பிறந்திருக்க முடியாது. ஆமென்! அப்படியில்லாவிட்டால், அவன் கன்னிகையின் மூலம் பிறந் திருக்க வேண்டும். அப்பொழுது அவன் தேவனுடைய குமாரனாக ஆகி விடுவான். அவர்கள் ஒரு முறையாவது இதை தவற விடக் கூடாதென்று விரும்புகிறேன். 186இப்பொழுது, இதை வெளிப்படுத்தின அதே தேவன் தான் உங்கள் விவாகமும் விவாகரத்து பிரச்சினை பற்றியும் என்னிடம் கூறினார். அவர் இந்த காரியங்களைக் கூறும் போது, என் சகோதரனே, சகோதரியே... நான் உங்கள் சகோதரன், ஒரு மனிதன். ஆனால் அவர் அதைக் கூறும் போது, அது இங்கு உள்ளே பதியும் போது, என்னால் அதை உங்களிடம் விவரிக்க முடியவில்லை. அதை நான் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் என்னால் முடியாது. ஆனால் அரு ஒரு முறையாவது தவறாய் போனதில்லை. என்னால் அதை புரிந்து கொள்ள இயலாமல் போனாலும், அதை நான் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறேன்; அதன்பிறகு அவர் அதை வெளிப்படுத்தத் தொடங்குகிறார், அப்பொழுது அது என்னை திகைப்பில் ஆழ்த்துகிறது. அது அங்கேயே உள்ளது, ஆனால் அதை நான் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் கல்வி தள்ளிவைக்கப்படு கிறது, உங்கள் யோசனை தள்ளி வைக்கப்படுகிறது. மற்றெல் லாமே; அவ்விதமாகத்தான் காயினும் தள்ளி வைக்கப்பட்டான். இப்பொழுது, நாம் ஆதியாகமத்துக்குத் திரும்பிச் சென்று அதை படிக்க நமக்கு நேரம் இருக்குமானால்... அதை நான் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கட்டும். என்னால் கண்டு பிடிக்க முடியுமா இல்லையாவென்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. திருமதி வுட், அதை நான் அன்றொரு நாள் உங்களுக்குள் காண்பித் துக் கொண்டிருந்தேனே, அந்த அதிகாரம் உங்களுக்கு ஞாபகமுள் ளதா? அது என்ன .... அது 5ம் அதிகாரமா? 5ம் அதிகாரம், உ ஊ சரி. ஆதாமின் வம்சவரலாறு; தேவன் மனுஷனைச் சிருஷ் டித்த நாளிலே அவனைத் தேவ சாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசிர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்' (ஆங்கில வேதாகமத்திலே, “அவர் களுக்கு ஆதாம் என்று பேரிட்டார்' என்று எழுதப்பட்டுள்ளது . - தமிழாக்கியோன்). ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான் (காயீன் என்ற பெயரிட்டான்? அவனுடைய பெயர் என்ன வென்று அழைத்தான்? சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்ற முதற்பேறானவன் எங்கே? அவனுடைய பெயர் இங்கு சொல்லப்படவும் இல்லை. சேத் அவன் குமாரன்). 187நாம் இங்கு மறுபடியும் வந்து அங்கு என்ன கூறப்பட்ட தென்று காண்கிறோம்... காயீன் ஆபேலைக் கொன்று போட்டதனால் ஏவாளுக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டான். நான் படிக்கையில் இதைக் கவனியுங்கள். ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தை பெற்றபின் எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து. குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான். சேத் நூற்றைந்து வயதான போது ஏனோசைப் பெற்றான். (இப்படி வழிவழியாக போய், ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலை முறையாய் பிறக்கிறான்). இப்பொழுது, அது லூக்காவில் எங்குள்ளது என்று எனக்கு ஞாபகமில்லை. திருமதி வுட், அந்த பாகத்தையும் கூட குறித்து வைத்திருக்கிறீர்களா? அவர்களும் நானும்... அன்றொரு நாள் அவர்களுக்கு நான் காண்பித்துக் கொண்டிருந்தேன்..... என்ன சொல்லுகிறீர்கள்? (சகோ.பிரான்ஹாம் சகோதரி வுட்டுடன் உரை யாடுகிறார் - ஆசி). சகோதரி வுட், நீங்கள் கூறுவது சரி. அதை நாங்கள் அவர்களுடைய வேதாகமத்தில் கோடிட்டு வைத்திருந் தோம், நான் அவர்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்த போது .. இதோ அது உள்ளது, வம்ச வரலாறு. சரி. 188இப்பொழுது, இங்கு 'நீங்கள் கவனிப்பீர்களானால்... லூக்கா 3ம் அதிகாரத்தில் அதையே நாம் காண்கிறோம்.... “நோவா லாமேக்கின் குமாரன். லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோஸின் குமாரன்; ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்” (லூக். 3:36-38) காயீன் எங்கே இங்கு காணப்படுகிறான்? முதற்பேறான காயீன் எங்கே? சேஷ்ட புத்திர பாகம் அவனுக்குத்தான் சொந்தம்; அவன் எங்கிருந்து வந்தான்? அவன் சாத்தானின் வித்து, தேவனுடைய வித்தல்ல, ஆதாமின் வித்தும் அல்ல. ஏனெ னில் ஆதாமின் குமாரனின் பெயர் சேத். சர்ப்பத்தின் வித்தாகிய காயீன் ஆபிரகாமின் முதற்பேறானவனை கொன்று போட்டான் , அது சர்ப்பம் அவனுடைய மற்றொரு குமாரனாகிய இயேசுவை கொன்று போட்டதற்கு முன்னடையாளமாகவும் சாயலாகவும் உள்ளது. வம்ச வரலாற்றில் சேத் அவனுடைய இடத்தை எடுத்துக் கொண்டான். அது உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது. தேவனுடைய வம்ச வரலாறு இவ்விதம் தொடர்ந்து கொண்டே செல்லுகிறது. 189யாராகிலும் ஒருவர் அவனை அந்த வம்ச வரலாற்றில் பொருத்தி, அவன் சர்ப்பத்தின் வித்தல்ல என்று கூறுவதைக் காண விரும்புகிறேன். அவன் தேவனுடைய வம்ச வரலாற்றில் அங்கீ கரிக்கப்படவில்லை. மனித வம்ச வரலாற்றிலும் - ஆதாமின் வம்ச வரலாற்றிலும் மற்ற வம்ச வரலாற்றுகளிலும் அங்கீகரிக்கப்பட வில்லை. அது சரியா? இதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்ற னர் - ஆசி). நிச்சயமாக அவன் அதில் கிடையாது. அவன் சர்ப்பத் தின் வித்தேயன்றி ஆதாமின் வித்தல்ல. ஏவாள் அவன் ஆதாமின் குமாரன் என்றாள். அவன் -ஆதாமின் குமாரன் அல்ல. அவள், “கர்த்தரால் நான் ஒரு மனு ஷனைப் பெற்றேன்” என்றாள். அவள் அவ்விதம் தான் கூற வேண்டும். அது ஒரு வித்து. ஆனால் அது சர்ப்பத்தின் வித்து. பாருங்கள்? நடந்த இந்த இனசேர்க்கை செயலை நீக்கிப் போட, அவர் ஒரு கன்னிகையின் மூலம் வர வேண்டியதாயிருந்தது. ஆதாம் இங்கு பூமியில் வைக்கப்பட்டான். ஆனால் அவன் தகப்பனாயிருக்க வேண்டும் என்பதை அவன் ஒரு போதும் கண்டு கொள்ளவேயில்லை. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? சாத் தான் இதை அறிந்தவனாய். ஆதாம் ஏவாளை அடைவதற்கு முன்பு அவன் அடைந்து விட்டான். அங்கு தான் முழு காரியமும் இன்று அடங்கியுள்ளது. சகோதரனே, அதுதான் விவாகமும் விவாகரத்தும் போன்றவைகளையும் மற்றவைகளையும் இன்று பிரச்சனைக்குள் ஆழ்த்தி யுள்ளது. அது மிகவும் பரிதாபகரமானது. பாருங்கள்? ஆனால் நான்... தேவன் ஒரு வழியை உண்டு பண்ணி விட்டார், அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 190நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புத மானவர் அல்லவா? இப்பொழுது. சர்ப்பத்தின் வித்து என்பது சரியா? ஒலிநாடாவைக் கேட்கிற யாராகிலும் இதைக்குறித்து விவாதிக்க நான் பயந்து விட்டேன் என்று நினைக்கக் கூடும் என்று நான் எண்ணினேன். பாருங்கள்? அவர்கள், “பாருங்கள், அவர் இரண்டு முறை அதைக் குறித்து ஒன்றும் கூறாமல் கடந்து மற்ற கேள்விகளுக்கு போய் விட்டார். அதை விவாதிக்க அவருக்கு பயம்” என்று சொல்லக் கூடும். நாங்கள் அப்படிப்பட்டவர் அல்ல. தேவன் அதில் உள்ள வரைக்கும், அது சரியானதே. உங்களுக்கு என்னவென்று தெரியுமா , அன்றொரு நாள் அந்த கழுகின் செட்டைகளில் உள்ள உணர்வை நான் கவனித்துக் கொண்டிருந்தேன், அது உங்களுக்குத் தெரியும். நான், “உனக்கு என்னை பயமில்லையா?' என்று நினைத்துக் கொண்டேன். நான் துப்பாக்கியை நிறுத்தி வைத்திருந்தேன். நான், ”என்னால் உன்னை சுட்டு விழ்த்த முடியும்“ என்றேன். அதை என்னால் சுட்டு வீழ்த்த முடியும் என்று அது அறிந்திருந்தது; நான் அந்த துப்பாக்கிக்கு அதிக தூரத்தில் இருந்தேன். நான், ”உனக்கு பயமாயிருக்கிறதா?“ என்றேன். அது தன் பெரிய கண்களினால் என்னை முறைத்துப் பார்த்தது. அங்கு ஒரு சிறு குரங்கு உட்கார்ந்து கொண்டு ”சா, சா, சா, சா, சா; உன்னை நான் துண்டு துண்டாக கிழித்து விடுவேன் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அந்த கழுகு அந்த குரங்கு போட்ட சத்தத்துக்கு எந்த கவசம் செலுத்தவில்லை. அது போடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப்போனது. எனவே சற்று கழிந்து, அது தன் செட்டைகளை விரித்து ஒரு சுற்று சுற்றி வந்தது அதன் செட்டைகளை எவ்விதம் உபயோகிப்பது என்பதை அது அறிந் திருந்தது. அது பறந்து, கண்ணுக்கெட்டாத உயரத்துக்கு சென்று விட்டது. பாருங்கள்? அது ஒரு சிறு உருவமாக, ஒரு சிறு புள்ளி போல் ஆவதை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். 191சகோ. ஃபிரட், நான் உங்களுக்குக் காண்பித்தேன் என்று நினைக்கிறேன். சகோ ஃபிரட் பின்னால் உட்கார்ந்து கொண்டு “ஆமென்” என்று சற்று முன்பு சத்தமிட்ட போது, அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை கண்டேன். மலையின் உச்சியில் இது நடந்த இடத்தை உங்களுக்கும் சகோ. வுட்டுக்கும் - அவர் இப்பொழுது எங்கிருந்தாலும் - காண்பித்தேன் என்று நினைக்கிறேன். அந்த கழுகை நான் கண்டேன்.... புயல் அடித்ததனால் அது இறங்கி வருவதற்கு நிர்ப்பந்தம் உண்டானது. நான் அங்கிருந்த ஒரு மரத் தின் பின்னால் நின்று கொண்டிருந்தேன். சற்று கழிந்து நான் கலைமான் வேட்டையாடினேன். அது அக்டோபர் மாதம், பனி பெய்து கொண்டிருந்தது. இங்குள்ள சகோ.ஜானும் மற்றவர்களும் சென்ற இலையுதிர் காலத்தின் போது எங்களுடன் அங்கு வந்திருந்தனர். அந்த இடம் கோரல் சிகரத்தின் உச்சியில் இருக்கிறது. 192அங்கு நான் ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டி ருந்தேன். சிறிது பனி பெய்கிறது, சிறிது மழை பெய்கிறதுமாயிருந்தது. அங்கு நான் நின்று கொண்டிருந்தேன். அது கீழே இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது அங்கு பறந்து கெண்டிருந்தது. மிகப் பெரிய உருவம் படைத்த பழுப்பு நிறக் கழுகு. அது ஒரிடத்தில் உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தது - நான், “நல்லது...' என்று எண்ணினேன். நான் மிகவும் நல்ல ஒரு தருணம் அனுபவித்துக் கொண்டேயிருந்தேன். நான் ”கர்த்தருக்கு ஸ்தோத் திரம். அல்லேலூயா' என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். நான் மரங்களைச் சுற்றி சுற்றி வந்து அவ்வாறு கூச்சலிட்டுக் கொண் டிருந்தேன். நான் அங்கு பார்த்தேன். அப்பொழுது ஒநாய் ஊளை யிடும் சத்தத்தைக் கேட்டேன். அவைகள் எவ்வாறு ஊளையிடும் என்று உங்களுக்குத் தெரியும். சென்ற ஆண்டு அங்கு நான் சென்றிருந்த போது, மழை பெய்யத் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவைகள் ஊளையிடத் தொடங்கின; அந்த ஊளையிடும் சத்தத்தைக் கேட்க எனக்கு மிக வும் பிரியம். 193மற்ற பக்கத்தில் கலைமான் “வீஹீ” என்று இடும் சத் தத்தை நான் கேட்டேன் (சகோ. பிரான்ஹாம் கலைமான் சத்தமிடுவது போல சத்தமிடுகிறார் - ஆசி). அவை அப்படித்தான் சத்தமிடும். உடனே அதன் ஜோடி மற்ற பக்கத்தில் சத்தமிட்டு பதிலளிக்கும். (அடுத்த வாரம், அதற்கும் அடுத்த வாரம், கர்த்தருக்குச் சித்தமானால் அவைகளை வேட்டையாடச் செல்வேன்). எனவே, இச்சத்தத்தை அங்கு கேட்கும் போது, ஓ அங்கு தெய்வீகப் பிரசன்னமாக இருக் கும். ஓ, நான் .... அங்கு தான் என் ஆலயம் உள்ளது. அங்கு நான் அவருடன் உரையாடி விட்டு, பிறகு கீழே இறங்கி வந்து, உங்க ளிடம் பேசுகிறேன். பாருங்கள்? அங்கு மேலே, ஓ, அது மிகவும் அற்புதமாயுள்ளது, அங்கு நான் நன்றாக இளைப்பாறுகிறேன். அங்கு நின்று கொண்டு நான், “ஓ, தேவனே...” என்று எண்ணினேன். நான் பார்த்த போது, மழை பெய்யத் தொடங்கின து, பசுமையானவைகளின் மேல் பனி உறைந்திருந்தது, ஒரு வானவில் கோரல் சிகரத்திலிருந்து ஆட்டு மலை வரைக்கும் வானத்தில் அவ்வளவு பெரிதாக வியாபித்திருந்தது. “ஓ, தேவனே ,இங்கு பாரும், உம்” என்று எண்ணினேன். நான், “இதோ நீர் அல்பாவும் ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறீர். இதோ அது இங்கே அங்கே கீழே வந்திருக்கிறது. நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர், நீரே ஏழு சபையின் காலங்கள், ஏழு பொன் குத்து விளக்குகள். அதிலெல்லாம் நீர் இருக்கிறீர். தேவனே, நீர் எவ்வளவு அற்புதமானவர்” என்று எண்ணினேன். 194நான் இவ்வாறு சத்தமிட்டுக் கொண்டே என் துப் பாக்கியை கீழே வைத்தேன். நான் மரத்தைச் சுற்றி சுற்றி வந்து “தேவனுக்கு மகிமை! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தேன். நான் எனக்குள் அருமையாக தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தேன், கர்த்தரும் நானும் மட்டுமே. சிறிது நேரம் கழித்து அந்த கழுகு புதர்களுக்கு வெளியே வந்து என்னை முறைத்தது. “என்ன நான் சத்தமிடுவது உனக்குப் பிரியமில்லையா?” என்று எண்ணினேன். நான், “கடக உண்டாக்கின அதே தேவனைத் தான் நான் தொழுது கொண்டிருக்கிறேன்” என்றேன். பாருங்கள்? அது தன் பெரிய சாம்பல் நிறக் கண்களை சிமிட்டி, அவ்விதம் சத்தமிட்டுக் கொண்டி ருக்கிற என்னை உற்றுப் பார்த்தது. ஒரு சிறு அணில் (யாராகிலும் எப்பொழுதாகிலும் மலைகளில் வேட்டையாடி இருந்தால், அதுதான் காட்டுக்கு போலீஸ் காரன்) அங்கு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு தாவிக் கொண்டி ருந்தது (பெரிதாக ஒன்றும் செய்வதற்கான ஒரு அமைப்பை அது பெற்றிருக்கவில்லை, ஆனால், ஓ, என்ன கூச்சல்). அது மேலும் கீழும் தாவிக் கொண்டு, “யா, யா, யா, யா, யா” என்று தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது. 195கழுகு அதை கவனித்துக் கொண்டிருந்தது; அதன் பிறகு அது என்னை உற்றுப் பார்த்தது. நான், “என் தேவனே , அப்படிப்பட்ட ஒன்றிற்காக நான் துதிப்பதை நீர் நிறுத்தின காரணம் என்ன? உம்மை நான் தொழுது கொண்டிருந்தேனே. அந்த கழுகில் நான் ஒன்றைக் காண வேண்டுமென்று நீர் விரும்புகிறீரா? அப்படியானால் நான் அதை ஆழ்ந்து படிப்பேன். அல்லது அணிலைக் கண்டு நான் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அங்கு நான் நின்று கொண்டு இரண்டையும் கூர்ந்து கவனித்தேன். “சரி, இந்த கழுகை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்” என்று எண்ணினேன். அதில் நான் கண்ட ஒரு காரியம், அதற்கு பயமேயில்லை. அது எனக்குப் பிரியம், அது எதற்கும் பயப்படுவதேயில்லை. அந்த பெரிய பறவை அங்கு நின்று கொண்டிருந்தது. நான் அதனிடம் “உனக்குத் தெரியுமா?” என் றேன். (என் துப்பாக்கி ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது). நான், “உன்னை என்னால் சுட்டு விழ்த்த முடியும் என்று உனக்குத் தெரியுமல்லவா?” என்றேன். அதற்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரியும். அதற்கு ஒரு காரியம் தெரியும், அதாவது அதை நான் செய்ய மாட்டேன் என்று. அதை நான் அதிகமாக மனதில் பாராட்டிக் கொண்டிருந்தேன். பாருங்கள்? அது அங்கு நின்று கொண்டி ருந்தது, அது சிறிதும் கூட பயப்படவில்லை. “உன்னை என்னால் சுட்டு வீழ்த்த முடியும்” என்று எண்ணினேன். இப்பொழுது, அதை நான் கவனித்துக் கொண்டே வந்தேன். அது என்னை இப்படி உற்றுப் பார்க்கும், பிறகு செட் டைகளை இப்படி விரிக்கும், அது உங்களுக்குத் தெரியும். கழுகுகள் தங்கள் செட்டைகளை எப்படி விரிக்குமென்று நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். பெரிய அகலமான செட்டைகள், இவ்வளவு நீளம். அது பெரிய உருவம் படைத்ததாயிருந்தது. அது அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது. அதை நான் உற்று நோக்கினேன். (இது இவைகளை நான் அறிந்து கொள்வதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம், ஒருக்கால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம்). 196அதை நான் கவனித்தேன்; சிறிது கழிந்து அதை நான் பார்த்தேன்.“ அது என்ன - அது என்ன... அதற்கு பயமேயில்லை, அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் அந்த கழுகுக்கு என்ன தேவ அம்சம் உள்ளது?” என்று நினைத்துக் கொண்டேன். அதன் பெரிய அலகு இப்படி வெளியே வந்து, அதன் கண்களும் பெரிதாயுள்ளன. நான், “அது உண்மையில் ஒரு கம்பீரமான பறவையே” என்று எண்ணி னேன். இப்பொழுது. யாருமே.. ஒரு பருந்து அதைப் பின்தொடர் முயன்றால், அது சுக்குநூறாகிவிடும். அதை எதுவுமே பின் தொடர முடியாது. இல்லை, இல்லை! அதை ஒரு விமானம்தான் செய்ய முடியும். அது மிகவும் உயர பறக்கிறது. பிறகு, அதன் கண்களால் அது உயரத்திலிருந்து தரை வரைக்கும் காண முடியும், அவ்வளவு தொலைவிலிருந்து. இப்பொழுது யேகோவா தம் தீர்க்கதரிசிகளை கழுகு களுக்கு ஒப்பிடுகிறார் (பாருங்கள்?) அவர் அவர்களை இப்படி உயர தூக்குகிறார். அவர்கள் விசேஷமாக உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் பார்ப்போம். முன் குறிக்கப்பட்டு, அந்த நோக்கத் துக்காக பிறந்து (பாருங்கள்?), இப்படி மேலே உயர்த்தப்படு கின்றனர். அதன்பிறகு நீங்கள்... நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று உங்களால் காண முடியாமல் போனால், அங்கு நீங்கள் போவதனால் என்ன பயன்? பாருங்கள்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள் என்று அறியாமல் போனால் அந்த இடத்துக்கு போவ தனால் என்ன பயன்? பாருங்கள், பாருங்கள்? நீங்கள் மேலும் கீழும் குதித்து, கூச்சலிட்டு, அந்நிய பாஷைகள் பேசினாலும், இதெல்லாம் என்னவென்று நீங்கள் அறியா மல் போனால் என்ன பயன்? பாருங்கள், பாருங்கள்? நீங்கள் அங் குள்ள போது, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாருங்கள்? 197எனவே, அந்த கழுகை நான் கவனித்துக் கொண்டி ருந்தேன். அது அங்கு அசைந்து கொண்டிருந்தது. அதை நான் கண்டு ரசித்தேன்; அது மிகவும் அழகான பறவை. இருப்பினும், அது ஒருக்கால் நான் கொன்ற மான் மாம்சத்தைப் புசிக்கும் என்று எண்ணினேன். அதை நான் கவனித்துக் கொண்டேயிருந் தேன். சற்று கழிந்து நான், “உங்களுக்குத் தெரியுமா? அது என்ன ...” என்று எண்ணினேன். சிறிது கழிந்து அதற்கு களைப்புண்டானது. அது என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததனால் அதற்கு களைப்புண்டாயிற்று என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த குரங்கு போட்ட சத்தத்தைக் கேட்டு தான் அதற்கு அலுப்பு உண்டாயிற்று என்று எனக்குத் தோன்றின து. இன்று பாளையத்தில் நம்மிடையே அத்தகைய அநேக குரங்குகள் உள்ளன. பாருங்கள்? “சா, சா, சா! அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன! தெய்வீக சுகம் பெறுதல் என்பது கிடையாது, இவையெல்லாம் இப்பொழுது கிடையாது” பாருங்கள்? பூமிக்குரிய அந்த குரங்கு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு, “நீ இதை சேர்ந்திருக்க வேண்டும். நாங்கள் - நாங்கள் - நாங்கள்தான்.” என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. பாருங்கள், பாருங்கள். அங்கு உட்கார்ந்து ஓயாமல் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. ஓ, அதன் உடல் அசைந்தது, அது தன் உடலை அதிகமாக குலுக்கினது. குரங்கு இடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப் போனது. அது அங்கிருந்து ஒரு பெரிய தாவு தாவினது, அப்படிச் செய்த போது அது உட்கார்ந்து கொண்டிருந்த மரக்கிளையை அது அசைத்தது. மரக்கிளை அசைந்தது. அது அங்கிருந்து பறந்து சென்றது. பாருங்கள், அது செட்டைகளை அடித்துக் கொண்டு அந்த மரத்திலிருந்த இடைவெளி வழியாய் பறந்து சென்றது. அது அவ்விதம் செய்த போது, அதை நான் கவனித்தேன். பாருங்கள்? அது பயப்பட வேயில்லை. ஏனெனில் தேவனால் அதற்கு அளிக்கப் பட்ட அந்த செட்டைகளின் பிரசன்னத்தை அதனால் உணர முடிந்தது. அந்த செட்டைகள் அதை எந்த விதமான ஆபத்தி லிருந்தும் விலக்கிக் கொண்டு செல்லும் என்பதை அது அறிந்திருந்தது. பாருங்கள்? 198எனவே, அந்த விதமாகத்தான் நாமும் உணர விரும்பு கிறோம். இதுதான் வார்த்தை; இந்த வார்த்தையை எழுதினவரே என் செட்டைகள். வார்த்தையைக் குறித்து எனக்கு பயமில்லை; அது உங்களை எந்த ஆபத்தின் வழியாகவும் கொண்டு செல்லும். அது ஒரு பட்டயம், அது வெட்டி வழியை உண்டாக்கிக் கொண்டே செல்லும். அதைக் குறித்து நீங்கள் கவலைப்படவே வேண்டாம். பாருங்கள்? அதன்பிறகு, அதை நான் கவனித்தேன். அது செட் டைகளை அடிக்கவில்லை, அது செட்டைகளை விரித்தது. பாருங்கள்? ஒவ்வொரு முறையும் காற்று அடித்த போது, அது உயர உயர சென்றது. அங்கு நான் நின்று கொண்டு, கைகளை கட்டின வண்ணமாய், அது சிறு புள்ளி போல் ஆகி என்னால் காண முடி யாமல் போன வரைக்கும் அதையே உற்று நோக்கிக் கொண் டிருந்தேன். “தேவனே, அதுதான். ஓடிப் போய் இதை சேர்ந்து கொள், அதை சேர்ந்து கொள், இதை, அதை, மற்றதை செய் என்றல்ல அது; அது செட்டைகளை விரித்தல் மட்டுமே (பாருங் கள்?); விசுவாசம் என்னும் உங்கள் செட்டைகளை தேவனுடைய வார்த்தைக்குள் எவ்விதம் பொருத்துவது என்பதை அறிந்திருந்து, இங்கும் அங்குமுள்ள இந்த அர்த்தமற்ற வீண் பேச்சுகள் அனைத் தினின்றும் பறந்து செல்வதே” என்று நினைத்துக் கொண்டேன். ஆம்! “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை” 199இன்று பிற்பகல் உங்களில் இருபது பேர் வரவிருக் கின்றனர். பிற்பகலில் தனிப்பட்ட பேட்டி உள்ள நீங்கள் பில்லியுடன் தொடர்பு கொள்ளுங்கள். ஏனெனில், நான் அவர்கள் அனைவரையும் பேட்டி கண்டு முடிப்பதற்கென, அவர்கள் சிறிது நேரத்தோடே தொடங்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். என்னால் முடியும் மானால், அவர்கள் ஒவ்வொருவரையும் என்னாலான வரையில் பேட்டி கண்டு முடிக்க விரும்புகிறேன். இதை நான் ஏன் செய்தேன் என்றால்... பில்லிக்கு இது தெரியாது (பாருங்கள்?), ஆனால் இன்று காலை நான் கண்ட ஏறக்குறைய இருபது தரிசனங்களின் விளை வாக- அது என்னவாயிருப்பினும் - என் சிந்தை இறுக்கமடைந் திருந்தது. அது உங்களை ஒரு விதமான ... பில்லி என்னிடம், “நீங்கள் ஏன் வெளியே போய் சிறிது இளைப்பாறி, அங்கு சில கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது?” என்றான். நான், “சகோ. நெவில் தன் செய்தியை ஆயத்தமாக வைத்திருப் பாரே” என்றேன். அவன், “நான் போய் அவரிடம் சொல்கிறேன்” என்று சொல்லி புறப்பட்டுப் போனான். சகோ. நெவில், “வாருங்கள்” என்றார். எனவே, நான் எழுந்து இங்கு வந்தேன். சிலர் இந்த பிற்பகலுக்காக காத்திருக்கின்றனர். உங்களை நான் 1.00 மணி வரைக்கும் பிடித்து வைத்துக் கொண்டதைக் ' குறித்து வருந்துகிறேன். ஆனால் நான் - நாளை கழித்து நான் அரிசோனாவுக்குத் திரும்பி செல்வேன் என்று நினைக்கிறேன். 200ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த முறை நான் இங்கு வரும்போது, உங்களுக்கு வேத வாயிலாக விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து பிரசங்கிக்க விரும்பு கிறேன். பிறகு நான்.... பிறகு அதை விட்டு விட்டு... அது உண்மையில் எப்படி உள்ளதோ, அதை அப்படியே உங்கள் முன் னால் வைக்க விரும்புகிறேன். அப்பொழுது முதற் கொண்டு நீங்கள் அதை கண்டு கொள்வீர்கள். எனவே அதுவரைக்கும், தைரியமா யிருங்கள்; கர்த்தர் உங்களை அபரிமிதமாய் ஆசிர்வதிப்பாராக. நாம் நிற்போமா? (சபையிலுள்ள ஒரு ஸ்திரீ தீர்க்கதரிசனம் உரைக் கிறாள் - ஆசி). கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் (நீங்கள் நேசிக்கிறீர்களா?) . முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இதை நாம் மறுபடி யும் பாடும் போது ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் ஓ, அது அற்புதமானதல்லவா? ஓ, என்னே ! ஆசிர்வாதம் கூறப்பட்ட பின்பு, தனிப்பட்ட பேட்டிகளை விரும்பும் ஜனங்களாகிய உங்களிடம், பில்லி ஏதோ ஒன்றைக்கூற விரும்பு வதாக அறிவிப்பு விடுக்கும்படி என்னிடம் கூறினான். பாருங்கள்? இன்னும் சில நிமிடங்களில் அவன் உங்களை சந்திக்க விரும்பு கிறான். ஆனால், இப்பொழுது, அவரை தொழுது கொள்ள வேண்டும் போல் எனக்கு தோன்றுகிறது. இவை.... அவரை ஆவியில் தொழுது கொள்ள உங்களுக்கு பிரியம் அல்லவா? சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் ஓ, அது அற்புதமானதல்லவா? ஓ, அவரை நான் நேசிக்கிறேன், என் இருதயத்தில் அவரை நேசிக்கிறேன், என் இருதயத்தை நான் அறிந்திருந்தால். நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனவே நாம் ஒருமித்து அவருடைய பிள்ளை களாயிருக்கிறோம். நாம் ஒருவரிலொருவர் அன்புகூருகிறோம். உங்களிடத்தில் அன்புகூராமல், அவரிடத்தில் நான் அன்பு கூர முடியாது. அவரிடத்தில் நான் அன்பு கூருவதாக சொல்லி விட்டு, உங்களிடத்தில் நான் அன்பு கூராமல் போனால், நான் பொய் சொல்லுகிறவனாயிருப்பேன் என்று (வேதம் உரைக்கிறது. பாருங்கள்? நான்..... நீங்கள் என்னில் அன்புகூர வேண்டும் அல்லது என் குடும்பத்தினரில் அன்பு கூர வேண்டும் என்றிருந்தால்... இவ்வி ரண்டில் நீங்கள் எதைச் செய்ய வேண்டும், என்னிடத்தில் அன்பு கூருவதோ அல்லது என் குடும்பத்தினரிடத்தில் அன்பு கூருவதோ, என்பதைக் குறித்து நான் தீர்மானம் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் என்னில் அன்புகூருவதை விட பில்லி பாலிடத்தில் அன்பு கூருவதையே நான் விரும்புவேன். அந்த விதமான ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நேரம் வருமானால், நீங்கள் அதை செய்ய வேண்டுமென்று விரும்பு வேன். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், ஏனெனில் பில்லி ஒரு போதகர் அல்ல. நீங்கள் இவ்விருவரில் எவரையாகிலும் உண்மையில் நேசிக்க விரும்பி, “நான் உங்களை அல்லது பில்லியை (நேசிக்க விரும்புகிறேன்” என்று கூறுவீர்களானால், நான் பில்லியை நேசிக்கும்படி உங்களிடம் கூறுவேன். பாருங்கள்? தேவனும் நம்மைக் குறித்து அதே வித மான உணர்வு கொண்டிருக்கிறார், நம்மால் முடியாது. அப் பொழுது, நீங்கள் என்னை நேசிக்காமல் பில்லியை நேசிக்க முடி யாது என்று நான் அறிந்து கொள்வேன். ஏனெனில் அவன் என்னில் ஒரு பாகமாயிருக்கிறான், பாருங்கள்? எனவே நான் உங்களிடத்தில் அன்பு கூராமல் தேவனிடத்தில் அன்புகூர முடியாது, ஏனெனில் நீங்கள் தேவனுடைய பாகமாயிருக்கிறீர்கள். நாம் ஒரு வரிலொருவர் அன்பு கூருகிறோம். ஓ, அது மிகவும் அற்புதமானது என்று எண்ணுகிறேன். நம்மை இறுக்கத்தில் ஆழ்த்தின இந்த கேள்விகளுக்கு நாம் பதில் கூறி முடித்த பின்பு இந்த பாடல்கள் மிகவும் அருமையாயுள்ளன என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் அல்லவா? உ ஊம், உ. ஊம், ஓ மிகவும் தத்ரூபமாயிருக்கிறது. நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்வருகின்றனர்... கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA COD 22 64-0830E 1... சகோதரர்களே, நான்... இன்னும் நான் பதில் கூறாத சில கேள்விகள் உண்டென்று எண்ணுகிறேன்; என்னால் இதற்க்கு மேல். தொடர்ந்து செல்ல முடியவில்லை. என்னே, தரிசனங்கள் என்னை அதிகமாக பாதித்துள்ளன. பாருங்கள்? இன்று பிற்பகல் பல தரிசனங்கள், சுமார் பதினைந்து அல்லது இருபது தரிசனங்கள் உண்டாயின, அது என்னை சுக்குநூறாக கிழித்து விடுகிறது. இங்கு கொஞ்சமும் அங்கு கொஞ்சமுமாக நான் கண்டு, நான் வெளியே வந்தேன். நான், “சகோ. நெவில், உங்களால் முடியுமானால், தொடர்ந்து ஆராதனை நடத்துங்கள், நான் மெல்ல நழுவி வீடு செல்ல எண்ணுகிறேன். நான் கீழே விழுந்து விடுவேன் போல் உள்ளது. என் இருதயம் பயங்கரமாக துடிக்கிறது. என்னால் நிற்கவும் கூட முடியவில்லை” என்றேன்.. அதற்கு அவர், “சகோ. பிரான்ஹாமே, நீர் கேள்வி களுக்கு பதில் கூறி முடித்து விடுவீரா என்று ஜனங்கள் என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்” என்றார். என் கடமையின் பாதையிலிருந்து விலகியோட நான் ஒருக்காலும் விரும்புவதில்லை. நான் சகோ. நெவிலைப் பாராட்டுகிறேன். சில நிமிடங்களுக்கு என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். எனக்குத் தெரியும், இன்னும் சில ... பில்லி வந்தான், நான் அவனிடம் “நீ எல்லா கேள்விகளையும் கொண்டு வந்து விட்டாயா?”, என்று கேட்டேன். 2அவன், “அப்பா, பதில் கூறப்படாத கேள்விகள் இன்னும் இருபது அல்லது அதற்கும் சற்று அதிகமாக உள்ளன” என்றான். எனவே என்னால்... இன்று முப்பது சொச்சம் பேர் பேட்டிக்கு வந்திருந்தனர், அவர்களில் இருபத்தைந்து பேர்களின் விவகாரத்தில் எனக்கு தரிசனங்கள் உண்டாயின; எனவே என் நிலை என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நான் மிகவும் களைப்பாயிருக்கிறேன், என் சிந்தை களைப்படைந்துள்ளது. ஆயினும் நாம் ஜெபித்து, கேள்விகளை நாம் எங்கு விட்டோமோ அங்கிருந்து தொடங்குவோம். இவைகளுக்கு பதில் கூறாமல் நான் அரிசோனாவுக்குத் திரும்பிச் சென்றால், இவைகள் என் மனதில் இருந்து கொண்டு என்னை ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டேயிருக்கும். கர்த்தருக்கு சித்தமானால், நான் விரைவில் திரும்ப வந்து. என்றாகிலும் ஒரு நாள் விவாகமும் விவாகரத்தும் என்னும் பொருள் எப்படி சரியானது என்பதைக் குறித்து பேசுவேன். நாம் ஜெபிப்போம். 3அன்புள்ள தேவனே, என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர், என் உணர்ச்சியை நீர் அறிந்திருக்கிறீர்; என்னைக் குறித்து எல்லாவற்றையுமே நீர் அறிந்திருக்கிறீர். தேவனே, நான் ஜெபிக்கிறேன்; அநேகர். கர்த்தாவே, அவர்களுக்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன்; அவர்கள் அதிகம் பேர் இருந்தனர். ஆனால் இன்று வந்திருந்தவர்களில் ஒருவராவது உதவி பெறாமல் திரும்பிப் போகவில்லை என்பதை நான் அறிந்தவனாய் உமக்கு மிகுந்த நன்றி செலுத்துகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் சந்தோஷமாயும் திருப்தி அடைந்தவர்களாயும் வெளியே சென்றனர் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னால் பதில் கூற இயலாதவைகளுக்கு, நீர் தரிசனங்களில் இறங்கி வந்து அவர்களுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை வெளிப்படுத்தி (அவர்களில் அநேகர் இங்கு உட்கார்ந்து கொண்டு நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது உண்மையென்று அவர்கள் அறி வார்கள்) இவை நடப்பதற்கு தங்கள் வாழ்க்கையில் காரணமாயிருந் தவைகளை அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்தீர். கர்த்தாவே, அவர்களுக்குத் தெரியும். உமது உதவியில்லாமல் இவைகளை நான் வேறெந்த வழியிலும் அறிந்திருக்க இயலாது. பரலோகப் பிதாவே, நான் ஜெபிக்கிறேன், நான் களைப்புற்றிருந்த போதிலும், உமது ஊழியக்காரனாயிருப்பதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். பேட்டி காண முடியாமல் விடப் பட்டவர்களை நீர் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன், அநேகர் பேட்டிக்கு வர வேண்டுமென்று விரும்பினர். தேவனே, அவர்களின் தேவைகள் கவனித்துக் கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். உம்முடைய மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே, அவர்களுடைய தேவைகளை அவர்களுக்குத் தருவாராக. அன்புள்ள தேவனே, இந்த கேள்விகளுக்கு பதில் கூறி முடிக்க, என்னால் முடிந்த வரையில் அவைகளுக்கு பதில் கூற, எனக்கு உதவி செய்வீராக. அப்பொழுது உம்முடைய ஜனங்கள் தங்கள் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றிருப்பார்கள். அவர்களுடைய கேள்விகளை எழுதித்தரும்படி அவர்களிடம் கூறினேன், அவர்கள் எழுதிக்கொடுத்தனர். இந்த கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு நான் கடமைப்பட்டிருப்பதாக உணருகிறேன். எனவே உமக்கும் உமது ஜனங்களுக்கும் என் கடமையை நிறைவேற்றத்தக்கதாக எனக்கு பெலனை அளிக்குமாறு ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 4இப்பொழுது, இன்று காலையில் நாம் விட்டதிலிருந்து தொடங்குவோம். இவைகளில் சிலவற்றை என்னால் படிக்க இயலாது. ஏனெனில் என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது, நான் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் இன்று பகுத்தறிதலில் பங்கு கொண்டு, தேவன் உங்களுக்கு செய்ததை பாராட்டுகிறீர்கள்? பாருங்கள்? இவ்விதமான ஊழியம், எல்லாவற்றிலும் மிகச்சிறந்தது. நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் காரியங்களும், உங்கள் வாழ்க்கையில் மறைந்து கிடந்தவைகளும் வெளிப்படுத்தப்பட்டு உங்களிடம் கூறப்படுகிறது. ஞாபகம் கொள்ளுங்கள், இவைகளில் பல காரியங்கள். இப்பொழுது, தர்மசங்கடமான காரியங்கள் வெளியே கொணரப்பட்டு கூறப்பட்டன என்பதை உங்களில் அநேகர் அறிந் திருக்கிறீர்கள். ஆனால் எனக்கும் தேவனுக்கும் தவிர வேறு யாருக்கும். இது தெரியாது. உங்களிடம் கூறப்பட்டது உங்களுக்கும் தேவனுக்குமிடையே மட்டும் இருக்க வேண்டும்; அதை தனியே விட்டு விடுங்கள். மற்றும்... உங்களுக்கு உதவி செய்வதற்கென கர்த்தர் காரியங்களை வெளிப்படுத்தினாரென்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அவ்விதம் அறிந்திருக்கிறவர்கள் கைகளை உயர்த்துங்கள். பாருங்கள்? அந்த ஜனங்கள் யாரென்றும், அவர்களைக் குறித்து ஒன்றுமே அறிந்திராமலும், அவர் தான் அதைச் செய்தார். 5இப்பொழுது, நாம் வேகமாக கேள்விகளுக்குச் சென்று, நம்மால் முடியுமா என்று பார்ப்போம். இங்கு வேறொன்றும் கூட உள்ளது. அது “நம்பர் மூன்று' என்று எழுதப்பட்டுள்ளது. அது ஒரு கடிதம் என்று நினைக்கிறேன்; அது சரி, அது ஒரு கடிதம் மட்டுமே. நான் வருந்துகிறேன். கடிதங்கள் கிடைத்தால் இவைகளை நாம் இங்கு வைத்து விடுவோம். நான் நினைக்கிறேன். ஆம், ஐயா, இதுவும் ஒரு கடிதம். அதில் ”கேள்வி“ என்று எழுதப்பட்டுள்ளது, ஆனால் அது ஒரு கடிதம் என்று நினைக்கிறேன், கடிதத்தில் ஒரு கேள்வி. இல்லை, இது கடிதம் அல்ல, ஒரு சொப்பனத்தைக் குறித்த கேள்வி. சரி, நான் சொப்பனத்தை வாசித்து விட்டு, கர்த்தர் எனக்கு அதன் அர்த்தத்தை அளிக்கிறாரா என்று பார்த்து, அதை உமக்குத் தெரியப் படுத்துகிறேன். உங்கள் முகவரியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அது இருக்கிறதா என்று பார்ப்போம்; இல்லையென்றால், இந்த சொப்பனத்தை எழுதி கேள்வி கேட்டவர் தமது முகவரியை தெரியப்படுத்த வேண்டும். இல்லை, இதில் முகவரி இல்லை. இந்த கடிதத்தை எழுதினவர் (இது எனக்கு எழுதப் பட்டுள்ளது), உங்கள் முகவரியை பில்லியிடம் கொடுக்கவும், நான் அரிசோனாவுக்கு சாலையின் வழியாய் சென்று கொண்டிருக்கையில், நான் வனாந்தரத்துக்குச் சென்று ஜெபிக்கிறேன். அவர் எனக்கு சொப்பனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்துவாரானால், அதை எந்த முகவரிக்கு எழுதி தெரியப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பேன் (பாருங்கள்? முகவரி இல்லாமல் போனால், இதன் அர்த்தத்தை), அவர் அதை வெளிப்படுத்தி தருவாரானால். அவர் தராமல் போனால், நான் ஒன்றையும் கூற மாட்டேன், ஏனெனில் அது ஒன்று மட்டுமே என்னால் செய்ய முடியும்; அப்பொழுது அது சரியென்று நான் அறிந்திருப்பேன். இப்பொழுது. 6மணவாட்டி, அதாவது இந்த செய்தியை விசுவா சிப்பவர்கள், முடிவில் மேற்கில் சென்று அங்கு ஒன்று கூட வேண்டுமா? 7மேலும் (ஒரு நிமிடம், இது... ஒரு வினாடி. ஓ! இல்லை, அதுவல்ல. அது... நான் நினைத்தேன். அது வெளிப்படுத்தல் அதிகாரம், அது “சங்கை காப்ஸ்” என்பது போல் காணப்பட்டது, அதைக் குறித்து எனக்கு சிறிது குழப்பம் ஏற்பட்டது. அது... நீங்கள் காண்பீர்களானால், அது அப்படித்தான் காணப்படுகிறது. பாருங்கள்? அது “சங்கை காப்ஸ்” அதன் பிறகு தொடர்ந்து... இல்லை, அது சரி). வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் மண வாட்டியைக் குறிக்கிறதா? இல்லை! “மணவாட்டி முடிவில் மேற்கில் செல்வாளா?” எனக்குத் தெரிந்த வரையில் இல்லை; மணவாட்டி உலகின் எல்லா பாகங்களிலும் இருக்கிறாள். இதை புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). நீங்கள் எங்கிருந்த போதிலும், எங்கு மரித்த போதிலும், அது என்னவாயிருப்பினும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தால், தேவன் உங்களை அவருடன் கூட கொண்டு வருவார். நீங்கள் சுட்டெரிக்கப்பட்டாலும், மிருகங்களால் புசிக்கப்பட்டாலும், அழிக்கப்பட்டாலும், அது எப்படியிருந்தாலும், கிறிஸ்து வரும்போது தேவன் உங்களை அவருடன் கூட கொண்டு வருவார் நீங்கள் மேற்கிலோ அல்லது வேறெங்கோ கூட வேண்டிய அவசியமில்லை கர்த்தர் உங்களை எங்கு நடத்துகிறாரோ... 8இருப்பினும், நீங்கள் மேற்கில் செல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால், நான் செல்வதற்கு முன்பு இதை தெளிவாக்க விரும்புகிறேன். இப்பொழுது... (அவர்கள் இந்த செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்கின்றனரா? செய்கின்றனரா சரி), நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று நான் உங்களிடம் கூற வேண்டியதில்லை. நீங்கள் மேற்கில் செல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால், மேற்கில் வாருங்கள். நீங்கள் கிழக்கில், வடக்கில், மேற்கில், தெற்கில் செல்ல விரும்பினால் கர்த்தர் உங்களை எங்கு நடத்துகிறாரோ, அங்கு செல்லுங்கள். இதை புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 9எங்கு போகக் கூடாது என்று நான் யாரிடமும் கூற முனைவதில்லை. நான் தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அரிசோனாவிலுள்ள டூசானுக்கு நீங்கள் வர விரும்பினால்... இன்று காலையில் உங்களிடம் நான் கூறினது போல, எனக்கு போவதற்கு வீடு இல்லாமல், வீட்டிற்கு செல்ல வேண்டுமெனும் எண்ணம் என்னில் உள்ளது. வீடு என்று அழைக்க எனக்கு ஓரிடம் இருக்குமானால் நலமாயிருக்கும்... இன்றிரவு, ஓரிடத்துக்கு நான் பதினாயிரம் டாலர்கள் கொடுத்து, “இதை என் வீடு என்று அழைக்க விரும்புகிறேன்” என்று கூற முடிந்தால், நான் தாராளமாக அதை கொடுத்து விடுவேன். எனக்கு போக்கிடமில்லை. சகோ. ஃபரீமான், என்னை நீர் சிறு வயது முதற்கொண்டு அறிந்திருக்கிறீர் என்று நினைக்கிறேன்; நான் சுற்றித் திரிகின்றவன். நீங்கள் சுற்றித்திரிகின்றவர்களாக இருக்க வேண்டாம்: நீங்கள் ஆவல் கொள்ளும் ஏதாவதொரு இடத்தை கண்டு பிடித்து அங்கு தங்கியிருங்கள்; கர்த்தராகிய இயேசுவுக்காக காத்திருங்கள். ஆனால், இப்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்கிலுள்ள அரிசோனாவிலுள்ள டூசானுக்கு நீங்கள் வர விரும்பினால், நீங்கள் வரவேற்கப்படுகின்றீர்கள்; உங்களை அங்கு கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். நீங்கள் என் சகோதரனும் சகோதரியுமாய் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உதவி செய்ய நான் உலகில் எதையும் செய்வேன். அங்கு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் என்னாலான அனைத்தையும் செய்து உங்களை வரவேற்று.' எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உங்களுக்குக் காண்பித்து, உங்களை' சுற்றிலும் கொண்டு சென்று, என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறேன், நீங்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால், மணவாட்டி - அரிசோனாவிலுள்ள டூசானி லிருந்து மட்டும் எடுக்கப்படுவாள் என்று எண்ணி, அந்த நிபந்தனையை நிறைவேற்றுவதற்க்கு. அங்கு வருவீர்களானால், நீங்கள் தவறு செய்கின்றவர்களாயிருப்பீர்கள். அதற்காக நீங்கள் அங்கு வராதீர்கள், அதற்காக நீங்கள் அங்கு வராதீர்கள், ஏனெனில் அது தவறு. அது சரியல்ல. 10இப்பொழுது, வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம்... கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துகின்ற அல்லது என்னிடம் பேசுகின்ற ஒரு காரியம் என்னவெனில்... இப்பொழுது தான் நான் தரிசனங்களைக் கண்டு விட்டு வந்திருக்கிறேன் (பாருங்கள்?) அதிலிருந்து விலகியிருப்பது மிகவும் கடினமான செயல். பாருங்கள்? மேற்கில் செல்வதைக் குறித்து இன்னும் அதிகமாக நான் கூற வேண்டுமென்று அவர் என்னை மேலும் வற்புறுத்துவதாகத் தோன்றுகிறது. இப்பொழுது, நான் ஏற்கனவே உங்களிடம் கூறினபடி, நான் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு இருக்கவில்லை. அங்கு போவதற்காக நான் நடத்தப்பட்டபடியால் அங்கு இருக்கிறேன். அங்கு தங்கி அதை என் இருப்பிடமாக்கிக் கொள்வது தவறு என்று எண்ணுகிறேன். தேவன் என்னை அங்கு அனுப்பின நோக்கம் நிறைவேறும் வரைக்கும் நான் அங்கு குறுகிய காலம் தங்கியிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அங்கு நான் ஏன் செல்கிறேன் என்று என்னால் உங்களிடம் இங்கு கூற முடியாது. ஆனால் அங்கு நான் போக வேண்டும் என்பதற்காக நான் போகமாட்டேன். 11அன்றொரு நாள் இவ்விதம். ஒரு கேள்வி கேட்கப் பட்டது: “நீர் முதல் முறையாக அரிசோனாவுக்கு ஏன் சென்றீர் என்று எங்களுக்குத் தெரியும், அப்பொழுது தூதர்கள் பிரத்தியட்சமாயினர். நீர் ஏன் இரண்டாம் முறை அங்கு திரும்பச்சென்றீர்?” அந்த கேள்வி படிக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? நான் அரிசோனாவுக்குச் சென்று திரும்பி வந்து அங்கு டாக்டர் லீ வேயிலுக்கு முன்பாக நானும் என் மனைவியும் உட் கார்ந்து கொண்டிருந்த போது (அவர் இப்பொழுது கட்டிடத்தில் எங்கோ இருக்கிறார் என்று நினைக்கிறேன்) நடந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? நான் அரிசோனாவைக் குறித்தும் நாங்கள் இங்கு தங்குவதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு கையுறுப்பு சுவற்றில் தோன்றி, வெளிச்சமும் தோன்றி, “அரி சோனாவுக்குத் திரும்பிச்செல்” என்று எழுதினது. எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? ஆகையால் தான் அங்கு நான் மறுபடியும் சென்றிருக்கிறேன்: நான் ஏன் அங்கு திரும்பச்செல்ல வேண்டும் என்று அறியாதவனாய். அங்கு அடைந்த போது, நான் எதற்காகத் திரும்பச் செல்ல வேண்டும் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்தினார். அதை நான் சொன்னால், சாத்தான் அதை தடுத்துப் போடுவான். ஆனால் என் இருதயத்தில் உள்ளதை அவன் அறியமாட்டான். அவன் வார்த்தை அல்ல, எனவே அவனால் இருதயத்தில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது. அதை நான் “வாய் விட்டுக்கூறும் போது, அவன் அதை கேட்கிறான். எனவே இப்பொழுது, அதை ஞாபகம் கொள்ளுங்கள். 12இப்பொழுது, அன்றொரு நாள் நான் கூறின போது, நான் அதை ஒருவாறு... ஒருக்கால் உங்களுக்கு தவறான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கக்கூடும். நான், “நீங்கள் அரிசோனாவுக்கு வராதீர்கள்' என்று சொன்ன போது, நீங்கள் வரக்கூடாது என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. நான் என்ன அர்த்தத்தில் கூறினேன் என்றால், நீங்கள் அங்கு வருவதற்கு நடத்தப்பட்டால், முன்சென்று அதை செய்யுங்கள். நீங்கள் கலிபோர்னியா: அரிசோனா, அல்லது வேறெங்கு நடத்தப்பட்டாலும். ஆனால் நீங்கள். ”சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அங்கு தங்கி வார்த்தையைப் பிரசங்கிக்கப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன், ஆகையால்தான் நான் அங்கு செல்கிறேன்“ என்பீர்களானால், நீங்கள் அங்கு தவறு செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? என் பிரசங்கம் எங்கிருக்குமென்றால், அது இந்த கூடாரத்தில் தான்; இதுதான் அந்த இடம். எனக்கு அரிசோனாவில் ஒரு ஆராதனையும் கூட இல்லை. நான் ஒவ்வொரு முறையும் சில மணி நேரங்கள் மட்டுமே அங்கு இருக்கிறேன். எனக்கு... கிறிஸ்துமஸுக்குப் பிறகு எனக்கு பீனிக்ஸில் வர்த்தகர்களின் கூட்டம் ஒன்றுள்ளது. இதுவே இவ்வாண்டுக்கு அங்கு முதல் கூட்டம். அவ்வளவு தான் எனக்குள்ளது. நான் வாக்கு கொடுத்திருந்தேன்; வேறொரு கூட்டம் எதுவும் எனக்கில்லை. என்னுடைய அடுத்த கூட்டம், எனக்குத் தெரிந்த வரையில், எய்த் அண்டு பென் தெருவிலுள்ள இந்த பிரான்ஹாம் கூடாரத்தில் தான். எனக்கு பேசுவதற்கு முப்பது அல்லது நாற்பது பொருட்கள் உள்ளன. இவைகளை ஒரேயடியாக பேச வேண்டு மென்றால் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் பிடிக்கும். இதுவே நான் ஜெபர்ஸன்வில், இந்தியானாவிலுள்ள பிரான்ஹாம் கூடாரத்தில் பிரசங்கிக்க வேண்டுமென்று என் இருதயத்தில் உள்ள தாகும். 13இப்பொழுது, வார்த்தையில் நிலைத்திருப் பதற்கென, நமது செய்தி பிரசங்கிக்கப்படும் ஏதாவதொரு இடத்துக்கு நீங்கள் செல்ல விரும்பினால் நமது செய்தி ஒன்றும் வித்தியாசமானது அல்ல, அது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கேட்ட அதே செய்திதான், அதனுடன் கூட இன்னும் சில காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன என்பது மாத்திரமே. இந்த செய்தி லூத்தர் பிரசங்கித்த அதே செய்தி, வெஸ்லி பிரசங்கித்த அதே செய்தி, பெந்தெகொஸ்தேயினர் பிரசங்கித்த அதே செய்தி அதனுடன் கூட சில காரியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மாத்திரமே. அது என்னவென்றால் சீர்திருத்தக்காரர்கள் விட்டுச்சென்ற முத்திரைகள் வெளிப்படுத்தப்பட்டது (பாருங்கள்?), அது இந்த காலத்தில் அறிந்து கொள்ளப்பட்டது, அவர்களால் அது அறிந்து கொள்ளப்பட முடியவில்லை. பெந்தெகொஸ்தே செய்தியானது லூத்தர் அல்லது வெஸ்லியின் நாட்களில் அறிந்து கொள்ளப்பட முடியவில்லை, அது பெந்தெகொஸ்தே காலம் வரைக்கும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. பெந்தெகொஸ்தே காலம் என்பது லூத்தரின் காலத்தை விட சற்று முன்னேற்ற மடைந்த காலமேயன்றி வேறல்ல. தானியம் வெவ்வேறு கட்டங்களில் முதிர்வடைவதைப் போல, சபையும் முதிர்வடைகிறது. 14இன்றிரவு நான் பிரசங்கித்திருந்தால், எகிப்திலிருந்து பாலஸ்தீனாவுக்கு மாற்றப்பட்ட திராட்சை செடி என்னும் பொருளின் பேரில் பிரசங்கம் பண்ணியிருப்பேன். இதை வேதத்தில் குறித்து வைத்திருக்கிறேன். இஸ்ரவேல் தமது திராட்சை செடி என்று தேவன் கூறியுள்ளார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலிருந்து இயேசு திராட்சை செடியாயிருப்பதைக் குறிக்கும் இடத்துக்கு வருகிறேன். இப்பொழுது அது சபை உலகத்துக்கு மாற்றப்பட்டு, அழுக்கில் உட்கார்ந்திராமல், கிறிஸ்துவுடன் கூட உட்கார்ந்திருப்பதால், அது கனி கொடுக்க வேண்டும். பார்த்தீர்களா? இன்றிரவு நான் பிரசங்கம் பண்ணியிருந்தால், அதுவே என் செய்தியாய் இருந்திருக்கும். ஆனால் கேள்விகளுக்கு பதிலளிப்பது நலமாயிருக்குமென்று கருதி பிரசங்கம் பண்ணும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். நான் திரும்பி வரும்போது, ஒருக்கால் இந்த பொருளை எடுத்துக் கொள்வேன். 15வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் மணவாட்டியுடன் சம்பந்தப்பட்டதல்ல. வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் (அதை நான் பார்க்கவில்லை, ஆனால் அது எனக்குத் தெரியும்) அது ஸ்திரீ சூரியனில் நின்று கொண்டு பாதங்களின் கீழே சந்திரன் இருப்பதாகும். சந்திரன் நியாயப்பிரமாணத்துக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது; ஸ்திரீ இஸ்ரவேலாகிய சபைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள்; அவளுடைய நெற்றியில் உள்ள பன்னிரண்டு நட்சத்திரங்கள் அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களை, கடந்துபோன சபை காலங்களைக் குறிக்கிறது. பாருங்கள்? சூரியன் அவளுடைய தலையில் இருந்தது. சந்திரன் சூரியனின் நிழலாயுள்ளது, அவ்வாறே நியாயப்பிரமாணமும் வரப்போகும். நல்ல காரியங்களுக்கு நிழலாயுள்ளது. அந்த ஸ்திரீ இஸ்ரவேல், மணவாட்டி. அலல. இப்பொழுது நான் அதிக நேரம் செலவிடப்போவதில்லை, ஏனெனில் இவைகளுக்கு பதில் கூறி முடிக்க வேண்டும். 16ரோமர் 7:14-18 “மேலும் நமக்குத் தெரிந்திருக்கிறபடி நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக் கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப் பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. இது எனக்குப் புரியவில்லை. நல்லது, அவர்கள் வேதவசனத்தை அப்படியே எழுதியிருக்கிறார்கள்; அது பவுல் ரோமருக்கு உரைத்தது. இப்பொழுது அவன் என்ன கூறுகிறான் என்றால்... நீங்கள் காணத்தக்கதாக இதை நான் சற்று மெருகேற்றட்டும். அவன், “எனக்குள் இரு நபர்கள் உள்ளனர்; ஒருவன் நான் நல்லது செய்ய வேண்டுமென்கிறான்; மற்றவன் நான் கெடுதல் செய்ய வேண்டும் மென்கிறான். நான் நல்லது செய்ய முனையும் போதெல்லாம், கெடுதல் அதை தடை செய்கிறது” என்கிறான். 'இன்று பிற்பகல் பேட்டிக்கு வந்திருந்த எத்தனை பேருக்கு அதே விதமான அனுபவம் உண்டாயிருந்தது. (பாருங்கள்?) அதேகாரியம்? இன்று காலையில் நான் அதைக் குறித்து சிறிது பேசினேன். 17உங்கள் வெளிப்புற மனிதன் ஆறு புலன்களுக்கு உட்பட்டிருக்கிறான்; உங்கள் உள்ளான மனிதன் விசுவாசம் என்னும் ஒரே புலனுக்கு உட்பட்டிருக்கிறான். இந்த விசுவாசத்துடன் அந்த ஆறு புலன்களும் ஒத்துப் போகாதிருந்தால், விசுவாசமும் அந்த ஆறு புலன்களுடன் ஒத்துப்போகாது. ஒன்று மற்றதுக்கு முரணாயிருக்கும். ஆறு புலன்களும் விசுவாசத்துடன் ஒத்துப் போனால் நல்லது, ஆனால் ஆறு புலன்களும் விசுவாசத்துடன் ஒத்துப் போகாமலிருந்தால், ஆறு புலன்களை தனியே விட்டு விடுங்கள். இப்பொழுது, இங்கு உதாரணமாக, இயேசு ஒன்றைக்கூறினார், ஒரு வாக்குத்தத்தத்தை அருளினார் என்று வைத்துக் கொள்வோம். உள்ளான மனிதன். அது உண்மை என்கிறான். ஆனால் வெளிப்புற மனிதனோ தன் அறிவை பயன்படுத்தி யோசித்து, அது உண்மையல்ல என்பானானால், வெளிப்புற மனிதனை தள்ளி விட்டு, உள்ளான மனிதனை ஏற்றுக் கொள்ளுங்கள். இதே காரியத்தைக் குறித்து தான் பவுல் பேசுகிறான், அவன் பாவத்துக்குக்கீழாக விற்கப்பட்டு மாம்சத்துக்குரியவனாயிருந்தான். நாம் ஒவ்வொருவரும் அப்படித்தான் இருக்கிறோம். ஆகையால் தான் நமக்குத் தொல்லைகள் நேரிடுகின்றன - நான்கைந்து முறை விவாகம் செய்தல், இது, அது, எல்லாவிதமான பாவங்கள், விபச்சாரங்கள் போன்ற நமது வாழ்க்கையில் காணப்படுபவை இவைகளின் காரணமாகவே. நாம் மாம்சத்துக் குரியவர்களாயிருக்கிறோம். அந்த பாகம் நிர்மூலமாக வேண்டும்; ஆனால் உள்ளில் நாம் ஆவிக்குரிய மனிதனாயிருக்கிறோம், உள்ளில் உள்ள ஆத்துமா. அது தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டிருக்கு மானால், அப்பொழுது நாம் தேவன், உரைத்ததை ஏற்றுக்கொண்டு, நமது வெளிப்புற சரீரத்தை விசுவாசத்தின் மூலமாய் வார்த்தைக்கு கீழ்படுத் துகிறோம். 18ஒரு களை விதையை நான் எடுத்துக் கொண்டு அதை எப்படி கோதுமை மணியாக என்னால் மாற்ற முடியும்? அது என்னால் கூடாத காரியம். அதைச் செய்யக்கூடிய ஒரே வழி அந்த களை விதைக்குள் கோதுமை வித்தின் சத்தை நுழைப்பதே. அப்பொழுது நீங்கள் களை விதையை விதைத்தால், அது கோதுமை மணியைக் கொடுக்கும். (அது உண்மை, பாருங்கள்?), ஏனெனில் கோதுமை வித்தின் சத்து அந்த களை விதைக்குள் புகுத்தப்பட்டது. களை விதையின் சத்து அதிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் களை விதையின் தன்மை பிசு பிசுவென்று கையில் ஒட்டுவதே. அதற்குள் இருக்கும் இந்த புது ஜீவன் தரைக்கு மேல் வளர்ந்து பெரிதாகும் வரைக்கும் அது அப்படித்தான் இருக்கும். அது வளர்ந்து மேலே வரும்போது, அது களை விதையாக இருக்காது, ஆனால் அது கோதுமை மணியாயிருக்கும். ஆனால் அது பூமியின் மேல் இருக்கும் போது பிசுபிசுத்தன்மை கொண்டதாயிருக்கும், ஆனால் உள்ளிலோ அது கோதுமையின் இயல்பைக் கொண்ட தாயிருக்கும். ' நீங்கள் இந்த வாழ்க்கையில் உள்ள வரைக்கும் பிசு பிசுத்தன்மை கொண்டவர்களாய் மாம்ச சுபாவத்தைப் பெற்றிருப்பீர்கள்; நீங்கள் உயிரோடுள்ள வரைக்கும் அது உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டேயிருக்கும். ஆனால் உள்ளிலோ நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் உயிரோ டெழும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சாயலை உடையவர்களாய் இருப்பீர்கள், எல்லா பாவமும் உங்களை விட்டுப்போயிருக்கும். பாருங்கள்? அது தான் காரியம். 19இதை நான் கூறட்டுமா? அது ஹாஸ்யமாக தொனிக்கக்கூடும். ஒரு சிகப்பு இந்தியன்... அவர்கள் விசித்திரமான ஜனங்கள். நான்... அவர்கள் விசித்திரமானவர்கள் அல்ல, நமக்கு அவர்கள் விசித்திரமாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சரியாகத்தான் உள்ளனர். நீங்கள் அவர்களை அறிவீர்களானால், அவர்கள் சரி யாகவே உள்ளனர். ஒரு முறை ஒரு சிகப்பு இந்தியன் இரட்சிக் கப்பட்ட போது, அவனிடம் இவ்வாறு கேட்கப்பட்டது.... 20அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. பில்லி ஜெப அட்டைகளை வினியோகித்துக் கொண்டிருந்தான். அவன் வழக்கமாக ஓரிடத்தில் நின்று கொண்டு ஜெப அட்டைகளை வினியோகிப்பான், ஓடக்கூடிய ஜனங்கள் அவனிடம் ஓடிச்சென்று ஜெப அட்டைகளை அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொள்வார்கள் ... உடல்நிலை நன்றாயிருப்பவர்கள். உதாரணமாக தலைவலி, பல்வலியினால் அவதிப்படுபவர்கள், பாதவிரலில் சிறிது கோளாறு உள்ளவர்கள் ஜெப அட்டைகளைப் பெற்றுக்கொண்டனர். அப்படிப்பட்டவர்கள் ஜெப வரிசையில் வரும்போது, என்னிடம் வந்தவர்கள், தலைவலியால் அவதிப்படுபவர்கள், 'பாதவிரலில் ஏதோ கோளாறு உள்ளவர்கள் போன்றவர்களே... புற்று நோயால் மரித்துக் கொண்டு அங்கு உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்கள் ஜெபவரிசையில் வருவதில்லை. நான் பில்லியிடம், “நீ போய் அந்த ஜனங்களிடம் அவர்களுக்கு என்ன வியாதி என்று கேள். அவர்களுக்குப் புற்று நோய் அல்லது அவர்களைக் கொன்று போடத்தக்க, வேறெந்த பயங்கரமான வியாதியும் இல்லாவிட்டால், அவர்களுக்கு ஜெப அட்டைகளைக் கொடுக்காதே. தேவனுடைய உதவி பெறாவிட்டால் மரித்துப் போகும் நிலையிலுள்ள அப்படிப்பட்டவர்களை ஜெப வரிசையில் கொண்டு வா. மற்றவர்கள் சிறிது காத்திருக்கட்டும். அவர்கள் பிறகு வேகமான வரிசையில் வரட்டும். ஆனால் மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்கள்... அவர்களைக் கேள்” என்றேன். அவன், “ஜெப அட்டைகளை குலுக்கி விட்டு அவர்களுக்கு வினியோகம் பண்ணு' என்றீர்கள். அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்றான். நான், “ஆனால் மற்றவர்களை விட வேகமாக முன்னால் ஓடி வர முடியும் ஜனங்கள் அட்டைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு அட்டைகள் கிடைப்பதில்லை“ என்றேன். “சரி, நான் அப்படியே செய்கிறேன்” என்றான். அவன் ஜனங்களிடம் சென்ற போது, அங்கு வயோதிப சிகப்பு இந்தியன் ஒருவன் இருந்தான். அவர்கள் விசித்திர மானவர்கள். அவன் நாற்காலியில் உட்கார மறுத்து விட்டான். அவனுக்கு அவர்கள் ஒரு நாற்காலியைக் கொடுத்தனர், ஆனால் அவனோ அந்த கூடாரத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டான். அவன் ஒரு தொப்பியை அணிந்திருந்தான்; அதைக் கழற்ற மறுத்துவிட்டான். அதன் பின்பக்கத்தில் ஒரு சிறகு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அவன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான். பில்லி அவனிடம் நடந்து சென்று, “தலைவரே, ஜெப அட்டை வேண்டுமா?” என்று கேட்டான். “ஹும்” என்று அவன் பதிலளித்தான். “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று பில்லி கேட்டான். அவன், “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றான். பில்லி மறுபடியும். “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று கேட்ட போது, “நான் வியாதியாயிருக்கிறேன்” என்ற பதிலே மறுபடியும் வந்தது. 21' அவ்வளவு தான் அவனிடமிருந்து பில்லி அறிந்து கொள்ள முடிந்தது. “சரி, நான் சற்று கழித்து வருகிறேன்” என்று சொல்லி விட்டு பில்லி மற்ற ஜனங்களிடம் சென்று அவர்களை விசாரிக்கத் தொடங்கினான். ஜெப அட்டைகள் குறைந்து கொண்டே வருவதை இந்த வயோதிப சிகப்பு இந்தியன் கவனித்துக் கொண்டே' வந்தான். ஒவ்வொரு முறையும் பில்லி ஜேபியிலிருந்து ஜெப அட்டை எடுக்கும் தோறும், அவை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தன. எனவே சற்று கழிந்து அந்த வயோதிப சிகப்பு இந்தியன் எழுந்து பில்லியிடம் நடந்து சென்று அவனை முதுகில் தட்டி அவன் அங்கிருப்பதை ஞாபகப்படுத்தினான். பில்லி, “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று கேட்ட போது, “நான் வியாதியாயிருக்கிறேன்” என்று மறுபடியும் அவனிடம் பதில் வந்தது. பில்லி, “நல்லது, உனக்கு என்ன வியாதி என்று நீ என்னிடம் கூற வேண்டும். வயிற்று வலி, தலை வலி உள்ளவர்களுக்கு ஜெப அட்டைகள் வினியோகிக்க வேண்டாம் என்று அப்பா கூறி விட்டார். அதிகமாக வியாதிப்பட்டவர்களுக்கே கொடுக்கும்படி சொன்னார். உன்னுடைய வியாதி எப்படிப்பட்டது? என்று கேட்டான். அவன் “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றான். பில்லி அவனை உட்கார வைத்து விட்டு மற்றவர்களிடம் சென்றான். அவனிடம் இருந்த ஜெப அட்டைகள் ஏறக்குறைய தீர்ந்து விடும் நிலையில் இருந்தது. சில நிமிடங்கள் கழித்து (அந்த சிகப்பு இந்தியன் அதை கவனித்துக் கொண்டேயிருந்து) அவன் மறுபடியும் 'பில்லியிடம் சென்று அவனை முதுகில் தட்டினான். பில்லி அவனுடைய கையில் ஒரு ஜெப அட்டையைக் கொடுத்து “நான் வியாதியாயிருக்கிறேன்' என்று அதில் எழுது” என்றான். 2235', அவன் ஜெப வரிசையில் வந்த போது அவனுக்காக நான் ஜெபித்தேன். நான் அவனிடம், “நீ விசுவாசிக்கிறாயா?” என்று (கேட்டேன். அவன், “அது உண்மை” என்றான். நான், “தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன், அவன், “அது உண்மை” என்றான், நான், “நீ நல்லவனாக இருப்பாயா?!” என்று கேட்டேன். அவன், “அது உண்மை ” என்றான் . ஒரு வாரம் கழித்து அவனை நான் சந்தித்தேன். சகோ: ஃபிரட் சாத்மனும் அப்பொழுது அங்கிருந்தார் என்று நினைக்கிறேன். அது கூடார கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயம். அது பீனிக்ஸில் நடந்தது. வாரத்தின் முடிவில் அவனைச் சந்தித்தேன். “நீ சுகமாயிருக்கிறாயா?” என்று அவனை நான் கேட்டேன். அவன், “அது உண்மை ” என்று பதிலளித்தான். பார்க்கப் போனால்... அங்குள்ள அந்த மிஷனரியின் பெயர் என்ன, வெள்ளை மீசை வைத்துக்கொண்டிருக்கும் அந்த முதியவர்? அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. அவர் ஒரு அருமையான முதியவர். அவருடைய மனைவி புற்று நோயிலிருந்து சுகமடைந்தாள். அவர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, அந்த சிகப்பு இந்தியனுக்கு அந்த இரண்டு வாக்கியங்கள் மட்டுமே தெரியும். நான் அவனுக்கு, 'நான் வியாதியாயிருக்கிறேன்' என்றும் 'அது உண்மை என்றும் சொல்ல கற்பித்துக் கொடுத்தேன். அது தான், பாருங்கள்' என்றார். ”அது உண்மை. நான் வியாதியாயிருக்கிறேன்“. 23அவன் ஒரு சமயம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். அவர் அவனிடம், “நீ எப்படியிருக்கிறாய்? என்று கேட்டதற்கு, அவன், “நன்றாகவும் மோசமாகவும் இருக்கிறேன்” என்றானாம். அவர், “நன்றாகவும் மோசமாகவும் இருக்கிறாய் என்றால் அதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டாராம். அவன், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட முதற்கு எனக்குள் இரண்டு நாய்கள் உள்ளன. ஒன்று கறுப்பு நாய், மற்றது வெள்ளை நாய் அவை எப்பொழுதும் ஒன்றோடொன்று தர்க்கித்து, ஒன்றைப் பார்த்து மற்றொன்று குரைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன: வெள்ளை நாய் எனக்கு நன்மை செய்ய வேண்டுமென்று விரும்புகிறது, கறுப்பு நாய் எனக்குத் தீமை செய்ய நினைக்கிறது” என்றானாம். “நல்லது, சண்டையில் எந்த நாய் ஜெயிக்கிறது? என்று அவனைக் கேட்டதற்கு, அவன், “நான் எந்த நாய்க்கு ஆகாரம் அதிகம் கொடுக்கிறேன் என்பதை அது பொறுத்தது” என்றானாம். பாருங்கள்? அது ஒரு நல்ல பதில் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிற அந்த இரு சுபாவங்களில், நீங்கள் எந்த சுபாவத்தை ஆதரிக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது - உலகப் பிரகாரமான காரியங்களில் 'ஈடுபட்டிருக்கும் மாம்சத்துக்குரிய சுபாவத்தையா. அல்லது தேவனுடைய காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ஆவிக்குரிய சுபாவத்தையா? அது தான். 24தேவனுடைய குமாரன் ஒவ்வொருவனும் அதிகமாக அபிஷேகம் பெற்று அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியுமா, அல்லது இது பரிசுத்த ஆவியின் நடத்துதலின் படி மட்டுமா? ஆம் அது பரிசுத்த ஆவியின் நடத்துதலின்படியே. நீங்கள் தேவனுடைய குமாரனாகவோ, அல்லது தேவனுடைய குமாரத்தியாகவோ இருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்களானால், பரிசுத்த ஆவியானவர் நீங்கள் காரியங்களைச் செய்யும்படி உங்களை நடத்துகிறார். எனக்கு நேரமில்லை. எனக்கு உங்களிடம் சிறு வரலாறுகளைக் கூறப்பிரியம். ஒவ்வொரு முறையும் அவைகளைக் கூற நினைக்கும் போது, நான் கூறாமல் கடந்து செல்ல வேண்டியதாயுள்ளது. ஆனால் இதை ஒரு நிமிடம் கூறலாமென்று நினைக்கிறேன். 25இது மிஸ்ஸிஸிப்பியிலுள்ள மெரிடியனில் நடந்தது. சகோ. பிக்பி எனக்கு கூட்டங்களை ஒழுங்கு செய்தார் என்று ஒருத்துவக்காரராகிய உங்களில் அநேகர் அறிவீர்கள். அவர் ஒரு ஒருத்துவ சகோதரன். ஓரிரவு கூட்டத்தில் பில்லி பால் மைதானத்துக்குச் சென்று ஜெப அட்டைகளை வழங்கினான். ஓ, மழை அதிகமாக பெய்து கொண்டிருந்தது. ஜனங்கள் குடைகளுடன் வெளியே நின்று கொண்டிருந்தனர். பில்லி ஜெப அட்டைகளை வழங்கினான். அங்கு ஒரு... அதன் பிறகு அவன் என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருந்தான். அவன் என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருந்த நேரத்தில், ஒரு ஸ்திரீ முன்பாகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், வேறொரு ஸ்திரீ கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, அதன் அழுகையை நிறுத்த முயன்று. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள். 'காலிகோ' உடையை அணிந்து அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயும் ஒரு தாய்தான். அவள் அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அந்த ஸ்திரீயைக் கண்டாள். பரிசுத்த ஆவியானவர் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயின் இருதயத்தில் பேசி, “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபி” என்றார். 26“நல்லது, அடுத்த முறை அவள் என்னைக் கடக்கும் போது நான் போய் ஜெபிப்பேன்” என்று சொன்னாள். அவள் அவளைக் கடந்த போது, அவள் கையில் ஜெப அட்டை இருப்பதை அவள் கண்டாள். “ஓ, நான் அந்த குழந்தைக்கு ஜெபிக்கப் போவதில்லை. சகோ. பிரான்ஹாம் இன்றிரவு அந்த குழந்தைக்கு ஜெபிப்பார். சகோ. பிரான்ஹாம் அந்த குழந்தைக்கு ஜெபிக்க இருக்கும் போது நான் ஜெபிப்பதற்கு எம்மாத்திரம்?” என்று நினைத்துக் கொண்டாள். அது பயபக்தியான ஒன்றுதான், அது அருமையானது, ஆனால் அது எப்பொழுதுமே தேவனுடைய சித்தமாயிருக்க முடியாது. சில நேரங்களில் அது வித்தியாசமாயிருக்கும். பரிசுத்த ஆவியானவர் அவளிடம், “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம்பண்ணு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். முடிவில் அவள், “நான் ஜெபிக்கப்போனால் அந்த ஸ்திரி அதை மறுத்து விடுவாள். அவளிடம் ஜெப அட்டை உள்ளதால், அந்த குழந்தைக்கு ஜெபிக்க அவள் என்னை அனுமதிக்க மாட்டாள். நான் ஜெபிப்பதற்காக அவள் அந்த குழந்தையை இங்கு கொண்டு வரவில்லை, சகோ. பிரான்ஹாம் ஜெபிப்பதற்காகவே அவள் கொண்டு வந்திருக்கிறாள்” என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவளிடம், “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம் பண்ணு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். முடிவில் அவள், “நல்லது. இதிலிருந்து நான் விடுபட என் இருக்கையை அவளுக்கு அளிப்பேன்” என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம், “தேனே (ஒரு தாய் மற்றொரு தாயிடம் பேசுகின்றாள்), நீ குழந்தையை வைத்திருக்கிறாய். நீ வந்து இங்கு என் இருக்கையில் அமருவாயா?” என்று அவளுக்கு அழைப்பு விடுத்தாள். அவள், “ஓ, தேனே, உன் இருக்கையை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. குழந்தையை அமைதிபடுத்த நான் முயன்று கொண்டிருக்கிறேன்” என்றாள். அதற்கு அவள், “நீ மிகவும் களைப்பாக காணப்படுகிறாய்” என்றாள். “நான் களைப்பாய்தான் இருக்கிறேன்” என்றாள் அவள். “அப்படியானால் இங்கு வந்து என் இருக்கையில் அமர்ந்துகொள்” என்று சொல்லி விட்டு, “உன்னிடம் ஜெப அட்டை இருப்பதைக் காண்கிறேன். சகோ. பிரான்ஹாம் உன் குழந்தைக்காக ஜெபிக்கப் போகிறாரா?” என்று கேட்டாள். அதற்கு அவள், “இந்த ஜெப அட்டை எண் கூப்பிடப்படும் என்று நம்புகிறேன்” என்றாள். “நானும் கூட நம்புகிறேன்” என்று அவள் சொல்லி விட்டு, “சகோதரியே, நீ கிறிஸ்தவளா?” என்று கேட்டாள்... அவள், “ஓ, ஆமாம்” என்றாள். “நானும் கூட கிறிஸ்தவள்தான். இங்கு நான் உட்கார்ந்து கொண்டிருந்த முதற்கு கர்த்தருடைய ஆவியானவர் என்னிடம், 'நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம் பண்ணு' என்று உரைத்துக் கொண்டேயிருக்கிறார். நீ அனுமதி அளிப்பாயா? அந்த எண் அழைக்கப்பட்டால் சகோ. பிரான்ஹாம் அந்த குழந்தைக்கு ஜெபிப்பார் என்று எனக்குத் தெரியும். நீ கையில் உன் அட்டையை பிடித்துக்கொண்டிரு. அவர் எப்படியும் கூப்பிடுவார்” என்று சொல்லிவிட்டு, “என் கரங்களை குழந்தையின் மேல் வைத்து ஒரு சிறு ஜெபத்தை நான் ஏறெடுத்தால், எனக்கு நல்லுணர்வு உண்டாகும், என்னை ஜெபிப்பதற்காக அழைத்துக் கொண்டிருக்கும் அதிலிருந்து நான் விடுபடுவேன். அது உனக்கு கோபமுண்டாக்குமா?” என்றாள். 27அதற்கு அவள், “நிச்சயமாக இல்லை, அன்பே. குழந்தைக்கு ஜெபி” என்றாள். அது நீல நிறமாயிருந்தது. எனவே இந்த ஸ்திரீ அந்த குழந்தைக்கு ஜெபித்தாள். அவள் தன் இருக்கையை அந்த ஸ்திரீக்கு கொடுத்து விட்டு படிக்கட்டுகள் ஏறி மூன்றாம் முன்மண்டபத்துக்கு (balcony) சென்று அங்கு நின்று கொண்டிருந்தாள். அங்கு ஏதோ ஒரு கிறிஸ்தவ சகோதரன் எழுந்து அவளுக்கு தன் இருக்கையை அளிக்க போதிய நற்பண்பு கொண்டவராயிருந்தார். எனவே அவள் உட்கார்ந்து கொண்டாள். அரை மணி நேரம் கழித்து நான் கூட்டத்துக்கு வந்து, சில நிமிடங்கள் பேசி விட்டு, ஜெப அட்டைகளை அழைத்தேன். இந்த ஸ்திரீ வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவதாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். முன்மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீ அதைக் கண்டதும், “ஓ, கர்த்தாவே, உமக்கு நன்றி. அந்த சிறு தாய்க்காக நான் மிகவும் வருத்தமடைந்திருந்தேன். அந்த குழந்தை சுகமாகிவிடுமென்று நம்புகிறேன், ஏனெனில் சகோ. பிரான்ஹாம்... அவள் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவதாக நின்று கொண்டிருக்கிறாள். அவள் அவரிடம் போய் விடுவாள். கர்த்தாவே, உமக்கு நன்றி” என்றாள். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த சிறு தாய் அந்த குழந்தைக்காக மனம் வருந்தினாள். 28நான் மேடையின் மேல் வந்து, அந்த ஸ்திரீ என்னிடம் வந்த போது, அந்த குழந்தைக்கு நான் ஜெபித்தேன். அவளை நான் உற்று நோக்கி, “உன் குழந்தை நீல நிறமாயிருந்தது. ஜெபிப்பதற்காக அதை இங்கு நீ கொண்டு வந்தாய். உன் பெயர் திருமதி இன்னார், நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய்; ஆனால் குழந்தை ஏற்கனவே சுகமாகி விட்டது. திருமதி இன்னார் என்னும் பெயர் கொண்ட ஒரு ஸ்திரீக்கு இருதயத்தில் பாரம் குடி கொண்டிருந்தது. அவள் இப்பொழுது முன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டி ருக்கிறாள் (மூன்றாம் முன் மண்டபத்தில் நான்காம் வரிசையின் கடைசியில் முதலாவதாக). அவள் அந்த குழந்தைக்கு விசுவாச ஜெபத்தை ஏறெடுத்தாள். அந்த குழந்தை ஏற்கனவே சுகமடைந்து விட்டது” என்றேன். அவள் இருக்கையிலிருந்து ஏறக்குறைய மயங்கி கீழே விழுந்து விட்டாள். பாருங்கள்? இப்பொழுது, அவள் அந்த குழந்தைக்கு ஜெபிக்காமல் போயிருந்தால்? நான் கூறுவது உங்களுக்கு விளங்கு கிறதா? அந்த ஸ்திரீக்கு, தாய் என்னும் முறையில், என்னைக் காட்டிலும் அந்த குழந்தையின் பேரில் அதிக அனுதாபம் இருக்கும். பாருங்கள்? தாய் என்பவள்... பாருங்கள்? நாம் எல்லோரும் அற்புதங்களைச் செய்ய முடியுமா? ஆம். அற்புதங்களைச் செய்வதற்கு நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால், போய் செய்யுங்கள், ஏனெனில் அது பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டது. இப்பொழுது, அந்த ஸ்திரீ தேவன் அவளிடம் கூறினதை செய்து நிறைவேற்றாமல் போயிருந்தால், ஒருக்கால் ஆவியில் அவளுக்கு கடிந்து கொள்ளுதல் உண்டாயிருக்க வகையுண்டு (பாருங்கள்?), அவள் தேவனுக்கு கீழ்படியாமல் போயிருந்திருப்பாள். நீங்கள் கிறிஸ்தவராயிருந்து எப்பொழுதுமே ஏதோ ஒன்று உங்களை ஏதோ ஒன்றைச் செய்ய ஏவினால், நீங்கள் போய் அதைச் செய்யுங்கள். அதை சந்தேகிக்காதீர்கள்; போய் செய்யுங்கள். 29சகோ. பிரான்ஹாமே, பரலோக நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பவர் யார்? 30ஒரு நபருடன் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தங்கியிருக்கும் அவருடைய தூதனைக் குறித்து விளக்கவும். மிகவும் நல்ல கேள்வி. இவைகளுக்கு பதில் கூறாமல் கடந்து செல்ல எனக்கு பிரியமில்லை; இவை நல்ல கேள்விகள். பாருங்கள்? “நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பவர் யார்?” - வெளிப்புறத்தில் மீட்கப்பட்டவர்கள் நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் மணவாட்டி என்று அழைக்கப்பட மாட்டார்கள். மணவாட்டி ராஜ்யத்திற்குள்ளே ராஜாவுடன் தங்கியிருப்பாள். வெளிப்புறத்தில் பூமியின் ராஜாக்கள் தங்கியிருந்து உழைத்து தங்கள் உழைப்பை - தங்கள் உழைப்பின் பலனை - நகரத்துக்குள் கொண்டு வருவார்கள். நகரத்தின் வாசல்கள் இரவில் அடைக்கப்படுவதில்லை. 31இப்பொழுது. மேலே. இப்பொழுது. மலையின் உச்சியிலுள்ள விளக்கு முழு உலகத்துக்கும் வெளிச்சம் தராது. அது நகரத்துக்கு' மட்டுமே வெளிச்சம் தரும். ஒருக்கால் அது ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் காணப்படக்கூடும், ஆனால் அது பூமிக்கு வெளிச்சம் தராது. ஏனெனில், புது உலகத்தில் அவர்கள் மாதந்தோறும், ஓய்வு நாள் தோறும், கர்த்தரைத் தொழுது கொள்ள சீயோனுக்கு - அந்த நகரத்துக்கு - அவருக்கு முன்பாக வருவார்கள் என்று வேதம் உரைக்கிறது (ஏசா. 66 : 23). அவர்கள் நகரத்துக்குப் புறம்பே தங்கியிருப்பார்கள், பணவாட்டி அல்ல, ஆனால் இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருப்பவர்கள். அவர்கள் ஆதாமைப் போல் நிலத்தைப் பயிரிடு பவர்களாகவும் தோட்டங்களைக் கவனித்துக் கொள்ளுகிறவர் களுமாயிருப்பார்கள். 32“ஒரு நபருடன் பிறப்பு முதல் தங்கியிருக்கும் அவருடைய தூதனைக் குறித்து விளக்கவும்”. இப்பொழுது. நீங்கள் கவனிப்பீர்களானால்... இப்பொழுது, இது மிகவும் ஆழமானது. இப்பொழுது, நான் ஒருபோதும் - இப்பொழுது தான் இதைக் கையிலெடுத்தேன். இந்த கேள்வியின் ஒரு பாகம் தட்டெழுத்திலும் மற்ற பாகம் பென்சிலிலும் - இல்லை, பேனாவிலும் எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது, ஒரு தூதன் உண்டு, ஆனால் இந்த கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளய மிறங்குகிறான் (சங். 34:7). பாருங்கள்? பாவிகளுக்கு தூதர்கள் இருப்பார்கள் என்று வாக்களிக்கப்படவில்லை, மீட்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே தூதர்கள் உள்ளனர். அது உங்களுக்குத் தெரியுமா? கர்த்தருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்குகின்றனர். இப்பொழுது, தூதர்கள் என்பவர்கள் செய்தியாளர்கள். நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அது மிகவும் பரிபூரணமானது. அது! உங்களுக்கு முன் குறித்தலை நிரூபிக்கும். பாருங்கள்? 33இப்பொழுது, ஒரு சிறு குழந்தை தாயின் இருதயத்தின் கீழ் உருவாகிக் கொண்டிருக்கையில்.... இவைகளைப் புரிந்து கொள்ள இயலும் சிறு பிள்ளைகளே, பாருங்கள், கர்த்தர் உங்களை உங்கள் தாய்க்குக் கொடுத்தார். அவள் உங்களை அவளுடைய இருதயத்தின் கீழ் சுமந்தாள், ஏனெனில் நீங்கள் அவளுடைய இருதயத்துக்கு மிகவும் நெருங்கினவர்கள். பிறகு ஒரு நாள் கர்த்தர் இறங்கி வந்து உங்களை தாயின் இருதயத்திலிருந்து, அவளுடைய இருதயத்துக்கு அப்பால் இருக்கும்படிக்கு, உங்களை வெளியே கொண்டு வந்தார். இருப்பினும் நீங்கள் எப்பொழுதுமே அவளுடைய இருதயத்தில் இருப்பீர்கள். இப்பொழுது, இந்த 'சிறு சரீரம் உருவாகிக் கொண் டிருக்கையில், தாய்க்குள் இந்த மாம்ச சரீரம் உருவாகிக் கொண்டிருக்கையில், அது பிறந்தவுடனே அதை ஏற்றுக் கொள்ள பூமியில் ஒரு ஆவிக்குரிய சரீரம் ஆயத்தமாகக் காத்திருக்கிறது. இப்பொழுது, குழந்தை அசையும் தசைகளுடனும், இருதயத்துடிப்புடனும் பிறக்கிறது. ஆனால் அதற்குள் ஜீவ சுவாசம் கிடையாது. அதன் தசைகள் வேகமாக அசைகின்றன. பாருங்கள்? அப்பொழுது, பாருங்கள். அதிலிருந்து வித்தியாசமான ஒன்று இருக்குமானால், பின்னால் வரவேண்டிய ஒரு ஆவி இல்லாமல் போனால், நம்முடைய சுவாசம் நம்மை விட்டுப் போகக் கூடும். நாம் சுவாசிக்காமலே உயிருடன் இருக்கக் கூடும். ஆனால் இந்த சரீரம் பிராண வாயுவைப் பெறாமல் போனால் (நம்முடைய சுவாசப்பை உள்ளே பெறுதலும் வெளியே விடுதலும்), அப்பொழு நாம் இறந்து விடுகிறோம். 34ஆனால் தாய்... தாயின் இருதயத்திலிருந்து சிறு குழந்தை பூமியில் கீழே போடப்படும் போது “கீழே போடப்படுதல்”; நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா. அதை நான் அவ்விதம் கூறக் காரணம் என்னவென்), அந்த சிறு குழந்தை கீழே போடப்படும் போது, என்ன நடக்கிறது? அது பிறந்தவுடனே அழாமல் போனால் டாக்டர் அல்லது நர்ஸ் அல்லது யாராகிலும் அதை அடிப்பார்கள் (சகோ. பிரான்ஹாம் தன் கரங்களைக் கொட்டுகிறார் - ஆசி), அதை இழுப்பார்கள். அதற்கு ஒரு அதிர்ச்சி அவசியம். என்ன நடக்கிறது? பாருங்கள். ஒரு தாய், நீசத்தனமாகவும் கொடூர மாகவும் இருக்கக்கூடும், ஆனால் குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு, அவளிடம் ஒரு குறிப்பிட்ட தயவு காணப்படுகிறது. தாயாகப்போகிற ஒருத்தியை நீங்கள் எப்பொழுதாகிலும் கவனித்ததுண்டா? அவளிடம் எதோ ஒரு வித இனிமை காணப்படுகிறது, அவள் அந்த இனிமையைப் பெற்றுக் கொள்கிறாள். ஏனெனில் அந்த சிறு தூதன், சிறு ஆவி, இந்த சிறு கூடாரத்துக்கு. ஒரு சிறு தூதுவன் இவ்வுலகிற்கு வருவதற்கு ஆயதமாயிருக்கிறான். இந்த சிறு தூதன் சரீரத்துக்குள் வரும்போது (அது பூமியின் சிறு தூதன், இந்த சரீரத்துக்குள் புகுவதற்கு தேவனால் நியமிக்கப்பட்ட ஆவி), அந்த குழந்தை இரண்டில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அது தீர்மானம் செய்கிறது. அது நடைபெறும் போது, கர்த்தருடைய தூதன் இங்கு வருவதை நீங்கள் காண்கிறீர்கள், அது ஆவிக்குரிய சரீரம், அந்த நித்தியமான ஒன்று. 35இது மரித்துக் கொண்டிருக்கிற சரீரத்தில் மரித்துக் கொண்டிருக்கிற ஆவி; ஆனால் நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சரீரங்களில் இருக்க முடியாது. இப்பொழுது, கர்த்தருடைய ஆவியின் சுபாவம்... நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, நீங்கள் அந்த குழந்தை பிறப்பது போல் மாம்சத்தில் பிறப்பதில்லை. என்ன நடக்கிறதென்றால் ஆவிக்குரிய பிறப்பு உங்களுக்கு வந்து விடுகிறது. இந்த ஆவிக்குரிய பிறப்பு உங்கள் இருதயத்தில் வளர்ந்து கொண்டிருக்கையில், அந்த ஆவியை ஏற்றுக் கொள்ள ஒரு வானத்துக்குரிய சரீரம் வளர்ந்து கொண்டு வருகிறது. உயிர் இந்த சரீரத்தை விடும்போது, அது அந்த சரீரத்துக்குள் செல்கிறது. இந்த சரீரம் பிறப்பில் பூமிக்கு ஒப்புவிக்கப்படும் போது, எவ்வாறு ஆவி உள்ளே வருகிறதோ, அந்த ஆவி சரீரத்தை விட்டு வெளியேறும் போது, அங்கு ஒரு சரீரம் காத்திருக்கிறது. “பூமிக்குரிய சுடாரமாகிய இந்த வீடு அழிந்து போனாலும், ஏற்கனவே ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது” (2 கொரி 5:1). பாருங்கள்? அதுதான், ஜனங்களின் ஆவிக்குரிய சரீரம். சகோ. பிரான்ஹாமே ... 36இப்பொழுது: இவைகள். இங்கு அநேக கேள்விகள் உள்ளன, குறைந்தது பத்து அல்லது பதினைந்து உள்ளது போல் தோன்றுகிறது. இவையனைத்தும் ஒரே விதமான காகிதத்தில் தட்டெழுத்தால் எழுதப்பட்டுள்ளன. இவைகளுக்கு முடிந்த வரையில் வேகமாக பதிலளிக்க முயல்கிறேன். முடிந்த வரையில் இவைகளை வேகமாகப்பார்க்கலாம். அன்புள்ள சகோதரனே, வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவான் இயேசுவை வணங்கும்படிக்கு அவருடைய பாதத்தில் எழுந்த போது, வணக்கத்தை வழக்கமாக அனுமதிப்பவர் ஏன் யோவானின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வில்லை? அன்புள்ள சகோதரனே, சகோதரியே, அது யாராயிருந்தாலும், வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் இயேசு அல்ல. வெளிப்படுத்தல் 22:8ல், அது தீர்க்கதரிசி, தூதன், தான் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது என்று நீங்கள் படிக்கலாம். இவைகளைக் காண்பித்த தூதனை வணங்கும்படி யோவான் அவன் பாதத்தில் விழுந்த போது, அந்த தூதன், “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும், தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். பாருங்கள், பாருங்கள்? “உன் சகோதரரும், உடன் ஊழியக்காரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் ஒருவன்; தேவனைத் தொழுது கொள்”. இயேசு அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவில்லை, தீர்க்கதரிசி தான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 37அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, இயேசு சீஷர்களின் மேல் ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னதற்கும், மேலறைக்குச் சென்று அங்கு பரிசுத்த ஆவி வரக்காத் திருந்ததற்கும் வித்தியாசம் என்ன? அது அவர் அவர்களுக்கு அளித்த வாக்குத்தத்தம். அவர் அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் மேல் ஊதி “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக அவர்கள் மேலறைக்குச் 'சென்று காத்திருந்தனர். அதே காரியம் தான், நீங்கள் சுகமாவதற்கென நாங்கள் உங்கள் மேல் கைகளை வைக்கும் போதும். அப்பொழுது அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக நீங்கள் காத்திருந்து உங்கள் வழக்கமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள். 38சகோ. பிரான்ஹாமே, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, சீடர்களுக்கு பல பூறை பிரத்தியட்சமான போது, தமது முக ரூபத்தை மாற்றிக்கொண்டாரா? “தமது முக ரூபத்தை மாற்றிக் கொண்டாரா? எனக்குத் தெரியாது. நான் நினைப்பது என்னவென்றால், அவர் தமது முக ரூபத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்தாரென்றால், அவரைக் காணாதபடிக்கு அல்லது அவர்கள் அறிந்து கொள்ளாதபடிக்கு அவருடைய கண்களை அவர் மறைத்து விட்டார். எம்மாவூர் சீஷர்களைப் போல், அவர்கள் நாள் முழுவதும் அவருடன் நடந்து ' சென்றார்கள், அவரைக் காணக்கூடாதபடிக்கு அவர்கள் கண்கள் மறக்கப்பட்டிருந்தது. ஒரு சமயம் அவர்கள், தாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த கரையில் ஒருவர் மீன்பிடிக்கக்கண்டார்கள்; அவர், “பிள்ளைகளே, புசிப்பதற்கு ஏதாகிலும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள், “நாங்கள் இராமுழுவதும் பிரயாசப்பட்டும் எங்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை” என்றார்கள். அவர், “மற்ற பக்கத்தில் வலையைப் போடுங்கள்” என்றார். அவர்கள் நிறைய மீன்களைப் பிடித்தார்கள், அப்பொழுது அவர் கர்த்தர் என்று அறிந்து கொண்டார்கள். அவர் தன் முக ரூபத்தை மாற்றிக் கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை, ஜனங்களின் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். 39கர்த்தருடைய தூதனுக்கும் கர்த்தருக்கும் வித்தியாசம் ஏதாகிலும் இருக்குமானால், அது என்ன? கர்த்தருடைய தூதன் கர்த்தரிடத்திலிருந்து செய்தியைக் கொண்டு வரும் தூதன், கர்த்தர் என்பது அந்த நபரே, அவர் கர்த்தரிடத்திலிருந்து வருகின்ற தூதன் அல்ல. இதை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். பூமிக்குரிய விதமாக பேசுவோ மானால், இங்கே கர்த்தரிடத்திலிருந்து வந்த ஒரு தூதன் இருக்கிறார், இங்கே கர்த்தரிடத்திலிருந்து வந்த மற்றொரு தூதன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வந்த தூதர்கள் என்று. நாம் எவ்விதம் அறிந்து கொள்வது? அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையைக் கொண்டு வரும்போது. ஆனால் அவர்கள் வார்த்தையைப் புரட்ட முயன்றால், அது உரைக்காத ஒன்றை உரைப்பதாகக் கூற முயன்றால், அது கர்த்தரிடத்திலிருந்து வந்ததல்ல (பாருங்கள், பாருங்கள்?). கர்த்தர் உரைத்ததை அப்படியே உரைப்பார்களானால். பிறகு கர்த்தரிடத்திலிருந்து வருகின்ற இயற்கைக்கு மேம்பட்ட தூதனும் இருக்கிறார். அவர்கள் காபிரியேல், மிகாவேல், எட்டி போன்ற பெயர் கொண்ட தூதர்கள். 40சகோ. பிரான்ஹாமே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாளில் ஏற்பட்டுள்ள தவறு என்னவெனில், ஒரு விசுவாசியாயிருந்து கொண்டு, செய்தியையும் இந்நாளின் செய்தியாளளையும் பின்பற்றிய போதிலும், நம்மால் நமது விருப்பத்திற்கேற்ப ஜெபம் செய்ய இயலுவதில்லை. இது ஒரு நல்ல கேள்வி. நான் நினைப்பது என்னவெனில், சகோதரனே, சகோதரியே, அது யாராயிருந்தாலும், இந்நேரத்தின் நிலையே அதற்கு காரணம். எழுப்புதல் முடிவடைந்து விட்டது. அது ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக நீடித்தது. இதற்கு முன்பு அது மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததில்லை. அது கடைசி எழுப்புதலைப் பெற்றுக் கொண்டதென்று நான் நம்புகிறேன். ஆகையால் தான் உங்களுக்கு முன் போல ஜெபிக்கவும் ஆவியில் உணரவும் முடிவதில்லை. ஏனெனில் எழுப்புதல் தீ அணைந்து விட்டது. 41சகோ. பிரான்ஹாமே, ஒரு நபர் தன் சொந்த சிந்தனைகளை யோசிக்கிறாரா அல்லது சாத்தான், அவர் தவறாக எண்ண வேண்டுமென்று நினைத்து அவனுடைய கருத்துக்களை சிந்தையில் போடுகிறானா - முக்கியமாக அவ்விதம் நினைக்க அவர் விரும்பாமலிருக்கும் போது - என்பதை எவ்வாறு கண்டு கொள்வது என்பதை தயவு கூர்ந்து விளக்கவும். அது வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது சாத்தான் அவ்விதம் நினைக்கத் தூண்டுவதாகும். அது வார்த்தையுடன் ஒத்துப் போனால், அது தேவன் உங்கள் சிந்தையில் போடுவதாகும். அது தவறான எண்ணங்களாயிருந்தால், அது பிசாசு. அது வார்த்தையோடும் தேவனோடும் சம்பந்தப்பட்ட நல்லெண்ணங்களாய் இருக்குமானால், அது தேவனுடைய எண்ணங்களாகும். 42ஒருக்கால், ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் குறித்து பிசாசு தன் எண்ணங்களை உங்கள் சிந்தையில் நுழைப்பதாக அது இருக்குமானால், அதை எவ்விதம் மேற்கொள்வது அல்லது விலக்கி விடுவது? அதற்கு மாறான நிலையை கடைப்பிடியுங்கள். பிசாசு உங்களை அவ்விதம் நினைக்கத் தூண்டுவானானால், நீங்கள் கிறிஸ்தவராக இருந்து, நீங்கள் கிறிஸ்தவர் அல்ல என்று அவன் உங்களை நினைக்கத் தூண்டுவானானால், நீங்கள் அதற்கு மாறான நிலையை கடைப்பிடித்து, “நான் கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். உங்கள் அனுபவம் தேவனுடைய வார்த்தையுடன் இணைந்துள்ள வரைக்கும், “நான் கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். வேறெந்த காரியத்திலும் கூட அதே வழியைக் கடைபிடியுங்கள். இதற்கு நீங்கள் பதிலுரைக்கும் போது, இதை மேற் கொள்வதற்கு எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில் நான் என் சுயநிலையில் இல்லை. தேவன் தாமே நீங்கள் மேற்கொள்ளும்படி உங்களுக்கு அருளுவாராக, நீங்கள் யாராயிருந்தாலும். உங்கள் சிந்தனைகள் மற்ற பக்கத்துக்கு சென்று, “நான் கிறிஸ்தவன்; நான் ஒரு விசுவாசி. சாத்தானே, என் மேல் உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று நீங்கள் சொல்வீர்களாக. வெளிப்படையாகக் கூறினால், இந்த பிரசங்க பீடத்தில் மயங்கி விழாமல் என்னைக் காத்துக் கொள்ள நானும் கூட இங்கு நின்று கொண்டு அதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது உண்மை. நான்கைந்து முறை நான் ஏறக்குறைய இந்த பிரசங்க பீடத்தில் மயங்கி விழுந்துப் போனேன். 43ஒரு நபர், தனக்கு தாழ்வான மனப்பான்மை அல்லது அவ்விதமான ஏதோ ஒரு மனப்பான்மை இருப்பதாக உணருவாரானால், அவர் இதை எப்படி மேற்கொள்வது, எனவே - அவர் ஒரே பிள்ளையாக இருந்த காரணத்தால் வாலிபத்தின் ஆரம்பத்திலே அது ஏற்பட்டிருக்கக் கூடுமா? அதற்கு எதிரான மனப்பான்மையைக் கொள்ளுங்கள் நீங்கள் - எப்பொழுதுமே உங்கள் வழியையே கடைபிடிக்க வேண்டுமென்றும், எல்லாமே நீங்கள் நினைத்தபடியே ஆக வேண்டுமெனும் மனப்பான்மையை குழந்தை பருவத்தில் கொண் டிருந்திருப்பீர்களானால், அந்த நிலையிலிருந்து மாறி, மற்ற வழியைக் கடைபிடிக்க உங்களாலான எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் தன்னயமுள்ளவர்களாய், எல்லாவற்றையுமே நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டுமெனும் எண்ணம் கொண்டிருப் பீர்களானால், உங்களுக்கு இருப்பவைகளை மற்றவர்களுக்கு கொடுக்கத் தொடங்குங்கள். பாருங்கள்? உங்கள் மனப்பான்மைக்கு மாறான ஒன்றை செய்யுங்கள். எதையுமே மேற்கொள்ள அதுவே சிறந்த எதிர்மருந்து (antidote). “ நீங்கள்... தென்பாகத்தைச் சேர்ந்த என் வயோதிப தாய், “நாயின் முதுகில் மயிரை எடுத்துவிட்டால், அதை கடிக்கலாம்” என்று கூறுவது வழக்கம். அது இதற்கும் பொருந்தும். 44சகோ. பிரான்ஹாமே, பதின்மூன்று வயதுக்குட்பட்ட நமது பிள்ளைகள் எந்தவிதமான செயல்களில் பங்கெடுக்கலாம்? மேலும், அவர்கள் தங்கள். சகாக்களைத் தேர்ந்தெடுக்க நாம் எந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? உங்களால் கூடுமானவரையில் அவர்களை கிறிஸ்தவ சகாக்களுடன் வைத்திருங்கள். அவர்களை... அது பெண்ணாக இருந்தால், அவளை கிறிஸ்தவ பெண்களுடன் வைத்திருங்கள்; அது கிறிஸ்தவ பையன்களாக இருந்தால், கிறிஸ்தவ பையன்களுடன் வைத்திருங்கள். அவள் ஒரு பையனுடன் செல்வதற்கு போதிய வயதுள்ளவளாயிருந்தால், அவள் சரியான பையனுடன் போகிறாளா என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேறெந்த பையனுடனும் அவள் போகாதபடிக்கு அவளுக்கு ஆலோசனை கூறுங்கள்; அவ்வாறே ஒரு பையன் சென்றாலும், அவள் ஒரு அவிசுவாசியுடன் சென்றால், ஒரு விசுவாசியுடன் செல்ல அவளை உற்சாகப் படுத்துங்கள்; அவ்வாறே பையனின். விஷயத்திலும். உங்கள் வீட்டை நன்றாக வைத்திருங்கள். உங்கள் மகளோ அல்லது மகனோ அவர்களுடைய நண்பர்களை பெற்றோர் முன்பு கொண்டு வருவதற்கு வெட்கப்படாத அளவுக்கு உங்கள் குடும்பத்தையும் வீட்டையும் நல்ல விதமாக வைத்திருங்கள்; அவர்கள் வீட்டில் தங்கியிருக்க பிரியப்படும் அளவுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்படி செய்யுங்கள். ஊ ஊ , என்னே இங்கு ஏழு கேள்விகள் வரிசையாக உள்ளன நான் சில நிமிடங்களைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. 45சகோ. பிரான்ஹாமே, சபை காலம், லவோதிக்கேயா, முடிவடைந்து விட்டதென்று நீங்கள் அண்மையில் எப்பொழுதாகிலும் கூறினதுண்டா? இல்லை, அது முடிவடைந்து விட்டதென்று நான் ஒரு போதும் கூறின தில்லை. அவ்விதம் நான் கூறியிருந்தால் அதை தவறாகக்கூறினேன், அல்லது நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது கடைசி சபை காலம். இது சபை காலங்களின் முடிவாகும். இந்த லவோதிக்கேயா: அது முடி வடையவில்லை; அது முடிவடைந்தால் சபை போய்விடும். சபை இங்குள்ள வரைக்கும் அது முடிவடையவில்லை. பாருங்கள்? 46சபை காலம் முடிவடைந்து அந்தகாரம் சூழத்தொடங்கி, மணவாட்டி அழைக்கப்பட்டு விட்டிருந்தால், நாம் ஏற்கனவே உபத்திரவ காலத்தில் பிரவேசித்து விட்டோமா? இல்லை, இல்லை, இல்லை, நீங்கள்... இந்த கேள்விக்கு விடையளிக்க சற்று அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். பாருங்கள். பாருங்கள்? மணவாட்டி சபையை விட்டு எடுக்கப்படும் போது, சபை காலம் முடிவடையும். லவோதிக்கேயா குழப்பத்துக்குள் செல்லும்; மணவாட்டி மகிமைக்குச் செல்கிறாள். புத்தியில்லாத கன்னிகைகளின் மேல் 3 ஆண்டுகள் உபத்திரவ காலம் வந்திறங்கும். இஸ்ரவேல் அப்பொழுது தன் தீர்க்கதரிசனத்தைப் பெற்றுக் கொண்டிருப்பாள்; பிறகு இஸ்ரவேலுக்கு உபத்திரவ காலம் தொடங்குகிறது; அதன் பிறகு அர்மகெதோன் யுத்தம் உண்டாகி, அது எல்லாவற்றையும் அழித்து போடும். பிறகு மனவாட்டி மணவாளனுடன் ஆயிரம் வருட அரசாட்சிக்காக திரும்பி வருகிறாள்; அதன் பிறகு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு! வருகிறது; அதன் பிறகு புதிய வானமும் புதிய பூபியம் உண்டாகி, புதிய நகரம் பரலோகத்தை விட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அப்பொழுது காலமும் நித்தியமும் ஒன்றாக இணைகிறது. 47எக்காளங்களுக்கும் மணவாட்டிக்கும் சம்பந்தமில்லை என்றும் பரிசுத்த ஆவியானவர் உம்மிடம் உரைத்திருக்கிறார். ஏழு கலசங்களுக்கும் நமக்கும் ஏதாகிலும் சம்பந்தம் உண்டா ? பரிசுத்த ஆவியானவர் அவ்விதம் வெளிப்படுத்துகிறாரா என்று நான் பொறுத்திருந்து பார்க்கிறேன். இது வரைக்கும் எனக்குத் தெரியாது. 48மல்கியா 4ல் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசி தான் வெளிப்படுத்தல் 7:9ல் உரைக்கப்பட்டுள்ள மீதியானவர்களையும், அவர்கள் உபத்திரவ காலத்திற்குள் செல்வதற்காக இருந்த போதிலும், அழைப்பவராக இருப்பாரா? இல்லை, இல்லை! வெளிப்படுத்தல் 7ம் அதிகாரத்தில் 144,000 பேர் முத்திரையிடப்படுவதை யோவான் காண்கிறான். அதன் பிறகு அவன் ஒருவனும் எண்ணக்கூடாத திரளான கூட்டமாகிய ஜனங்களைக் காண்கிறான், அதுதான் மணவாட்டி. அதற்கு... அது... மல்கியா 4ன் ஊழியம் முடிவு பெற்று மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுகிறாள், அதன் பிறகு எலியாவும் எலிசாவும் (மோசேக்கு பதிலாக எலிசா என்று சொல்லி விடுகிறார் - தமிழாக்கியோன்) பூமிக்குத் திரும்ப வருகின்றனர். சபையானது உபத்திரவ காலத்தினூடே செல்லும், ஆனால் எலியாவுக்கும் எலிசாவுக்கும் புத்தியில்லாத கன்னிகைகளுடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது (இவர்கள் புறஜாதிகள்), அவர் = யூதர்களிடம் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். 49ஏழு இரகசியங்கள் உடைய ஏழு இடிமுழக்கங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு விட்டதா? அவைகள் ஏழு (முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு இன்னும் அவை இடி முழக்கங்கள் என்பதாக வெளிப்படவில்லையா? இல்லை, அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டு விட்டன; இடிமுழக்கங்கள் என்பவை அவ்வளவு தான். அவை எதை வெளிப்படுத்த வேண்டுமென்றால்... ஏழு இடிகள் தங்கள் சத்தங்களை முாங்கின. அவை என்னவென்று யாருமே அறிந்து கொள்ள முடியவில்லை. அவை என்னவென்று யோவான் அறிந்திருந்தான், ஆனால் அவன் அதை எழுத தடை செய்யப்பட்டான். அவர், “ஏழாம் தூதன் தன் நாட்களில் தன் சத்தத்தை முழங்கும் போது, ஏழு இடிமுழக்கங்களின் ஏழு இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்” என்றார். ஏழாம் தூதன் என்பவன் ஏழாம் சபை காலத்தின் செய்தியாளன். பாருங்கள்? 50உயிரோடிருக்கின்ற மணவாட்டியின் சிறு கூட்டம், முதலாவது மணவாட்டி செய்தது போல, கர்த்தராகிய இயேசு மேகங்களின் மேல் வருவதற்கு முன்பு, எப்பொழுதாகிலும் எங்காகிலும் ஒன்று கூடி எல்லாவற்றையும் பொதுவாக அனுபவிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்பொழுது, நான் நம்புகிறேனா என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். வேதவாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியாது. ஒருக்கால் அத்தகைய நேரம் ஒன்று வரக்கூடும், எனக்குத் தெரியாது. அங்கு ஒருக்கால்... பாருங்கள்? அவ்விதம் நிகழுமானால், அவருடைய வருகை மிகவும் சமீபமாயுள்ளது என்பதை அது காட்டிக்கொடுத்து விடும். ஆனால் அவரோ, “அவர் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வருவார்” என்று கூறியுள்ளார், பாருங்கள்? அவர் யாரிடம் வருகிறாரென்றால். நான் படித்த ரோமியோ ஜூலியட்டின் கதையைப் போல. அவர் இரவில் வந்து தன் மணவாட்டியை கொண்டு போய் விடுகிறார். அவள் ஒரு நொடிப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் எடுத்துக் கொள்ளப்படுகிறாள். பாருங்கள்? அவர்கள் ஒன்று கூடுவார்களா என்பது சந்தேகம் தான். ஏனெனில் வேதம், “இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள்; ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்; இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்” என்றுரைக்கிறது. பாருங்கள். எனவே அவர்கள் ஒருக்கால்... உலகிலுள்ள மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றுகூடி எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவிக்க மாட்டாள். ஆனால் அவர்களில் சிறு குழுக்கள் உலகம் முழுவதிலும் சிதறிக் கிடக்கும். 51நான் நம்புகிறேன், கர்த்தர் என்னை அனுமதிப்பாரானால்; இது அதன் ஒரு சிறு குழு. ஒருக்கால் ஆசியாவில் ஒரு சிறு குழு இருக்கக்கூடும். அன்றொரு நாள் நான் மணவாட்டியின் தரிசனத்தைக் கண்டபோது, அவள் சர்வதேசங்களிலிருந்தும் வந்தவளாயிருந்தாள். எனவே மணவாட்டி ஓரிடத்தில் கூடுவதில்லை, அவள் உலகம் பூராவிலுமிருந்து வந்தவளாயிருப்பாள். அது வார்த்தையை முழுவதுமாக உறுதிப்படுத்துகிறது, வார்த்தை ஒரு போதும் தவறாயிருந்ததில்லை. இதுவரைக்கும் தரிசனமும் தவறாயிருந்ததில்லை, ஏனெனில் அது வார்த்தையின் படி உள்ளது. 52இந்த நேரத்தில் உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற எவராவது மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதலில் போகாமலிருக்க வகையுண்டா? நீங்கள் விளக்கம் தருவீர்களா? பாரத்தை இலகுவாக்க நாங்கள் எந்த வகையில் உங்களுக்கு உதவி செய்யக் கூடும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். முடியாது. இப்பொழுது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற உண்மையான விசுவாசிகள் மணவாட்டியில் இருப்பார்கள். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டு வெளியே அழைக்கப்பட்டவர்கள். புத்தியில்லாத கன்னிகையிடம் எண்ணெய் இல்லை. எண்ணெய் வைத்திருந்தவர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அந்த... 53“பாரத்தை இலகுவாக்க நாங்கள் என்ன செய்யக் கூடும்? ஆம், சகோதரனே, சகோதரியே. இதை எழுதினது யாராயிருப்பினும், எனக்காக ஜெபியுங்கள். நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான காரியம் அதுவே. உங்களுக்கு நன்றி. எனக்குப் பணம் தேவையில்லை. நான்... என் தேவைகளை கவனித்துக் கொள்ள போதிய பணம் வருகிறது. அதற்காக நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனக்கு உடைகள் தேவையில்லை. நான் உடுக்கும். உடைகளை அநேக முறை ஜனங்கள் எனக்கு வாங்கித்தந்து விடுகின்றனர். அவர்கள்... என். குடும்பத்தை போஷிக்க எனக்குப் போதிய பணம் கிடைக்கிறது; அவ்வளவு தான் நமக்குத் தேவை. என்ன தோன்றுகிறதென்றால்... எனக்காக நீங்கள் ஜெபிக்கலாம், ஏனெனில் எனக்கு ஆவிக்குரிய உதவி நிச்சயம் தேவை. 54நமக்குள்ள வார்த்தையில் நிலைத்திருக்கிற நமது ஊழியக்காரரின் மத்தியில், ஜெபிக்கவும், பிரசங்கிக்கவும், உபவாசிக்கவும், உலகில் எங்காகிலும் இருக்கக் கூடிய இழந்து போன ஆத்துமாக்களைக் குறித்து சிறிதளவும் கூட பாரமே இல்லாதது போல் தோன்றுகிறது. இந்த நிலையைக் குறித்து நாம் என்ன செய்ய வேண்டுமென்று தயவு செய்து எங்களுக்கு கூறுவீர்களா? சகோ. பிரான்ஹாமே, இதற்காக உங்களுக்கு மிக்க நன்றி. இது ஒரு ஊழியக்காரனாக இருக்க வேண்டும். இந்த சொற்களுக்கு அவர் கையொப்பம் எதுவும் இடவில்லை. 85, சகோதரனே... இதற்கு நான், களைப்புற்று நல்லுணர்வு இல்லாத நேரத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு நான் மிகுந்த நன்றி செலுத்துகிறேன். அவருக்கு நான் கூற நினைத்திருந்த பதிலை மறந்து விட்டேன். “பிரசங்கிமார்கள், போதகர்கள் இவர்களுக்கு இழந்து போன ஆத்துமாக்களின் பேரில் ஏன் பாரம் இல்லை? அது எழுப்புதல் இல்லாததன் காரணமாக என்று எண்ணுகிறேன். இயேசு வரும் வரைக்கும் நமக்கு இழந்து போன ஆத்துமாக்களின் பேரில் ஆர்வத்தைத் தர நாம் தேவனிடம் இப்பொழுதும் ஜெபிக்க முயல வேண்டும். 55சகோ. பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி பெற்றுள்ள ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசுவார்களென்று நீர் நம்புகிறீரா? (இல்லை!). அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி அல்ல என்று நீர் கூறுகிறீரென்று எனக்குத் தெரியும். நான்... 1 கொரிந்தியர் 12:30ஐ தயவுகூர்ந்து விளக்கவும். 1 கொரிந்தியர் 12:30ஐ நீங்கள் எடுப்பீர்களா? நான் நினைக்கிறேன் “எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா?” என்னும் வசனம் அது; எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அவர்கள் அதை எடுப்பதற்குள், வேறொரு கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன். 56சகோ. பிரான்ஹாமே, யோபு 14:21ஐ விளக்குவீரா? ஆம், யோபு 14, “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்னும் வசனம். ஓ. மனிதன் செத்த பின் ... யோபு “உயிர்த்தெழுதலைக் குறித்து பேசுகிறான் (அன்றொரு நாள் காலையில் அதைக் குறித்து பேசினேன் என்று நினைக்கிறேன், இல்லையா? அல்லது அது சார்லியின் வீட்டிலா? திருமதி காக்ஸ் அங்கு எங்கோ இருந்தார்கள்). பூக்கள் செத்த பிறகு தழைப்பதை யோபு காண்கிறான், ஆனால் அவனோ மனிதன் மண்ணுக்குள் சென்ற பிறகு திரும்ப வருவதில்லை என்று எண்ணுகிறான். அதன் பிறகு, ஏதோ ஒன்று பாவம் செய்து விட்டது என்று. அவனுக்கு விளக்கப்படுகிறது. அவனுக்கும் தேவனுக்குமிடையே ஒரு மத்தியஸ்தர் வேண்டுமென்று அவன் விரும்புகிறான். அப்பொழுது அவன் கர்த்தருடைய வருகையைக் காண்கிறான். 57அது என்ன, சகோதரனே? (சகோ. பிரான்ஹாம் ஒரு சகோதரனுடன் உரையாடுகிறார் - ஆசி). அது 1 கொரி. 12:30 என்று நினைக்கிறேன். ஆம்! “எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? அந்த வசனம் தான் அது என்று எண்ணினேன். ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. இவ்வாறு களைப்புற்றிருப்பதனால், ஆனால்... இல்லை! எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதில்லை; எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறதில்லை; எல்லாரும் அதைச் சொல்லுகிறதில்லை. அடுத்த அதிகாரத்தில் ”நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை“ பாருங்கள்? பவுல் அவர்களிடம், ”எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? நிச்சயமாக இல்லை. எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்களா? இல்லை. ஆனால், முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்“ என்கிறான். பாருங்கள் எல்லாருமே அந்நிய பாஷைகள் பேசுகிறதில்லை. நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்பு, மற்றொரு சிந்தனைகளைப் பகுத்தறிதல் ஆராதனை ஒன்றை நடத்தப் போகிறீர்களா? இல்லையென்றால், தனிப்பட்ட பேட்டி ஒன்றைப் பெற வாய்ப்புண்டா? உங்களுக்கு அது கிடைத்ததென்று நினைக்கிறேன். இப்பொழுது, எனக்கு இன்னும் அநேக கேள்விகள் இல்லை. கூடுமானால் இவைகளுக்கு பதில் கூறி முடிக்க பிரயாசப்படுகிறேன். 58கூட்டில் அடைபட்ட ஒரு கழுகு தன் சிறகுகளை அடித்துக் கொண்டு, விடுதலை பெற போராடுவதைக் குறித்த பரிதாபகரமான காட்சியை நீங்கள் விவரித்தது என் நினைவுக்கு வருகிறது. அந்த நிலையில் என் விலையேறப் பெற்ற தாயார் இருக்கிறார்கள். விவாகமான அவர்களுடைய மூன்று பிள்ளைகள், தங்கள் தகப்பனின் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், மூன்று ஆண்டுகளாக அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர் ஒரு ஸ்தாபன பிரசங்கியார். தாயாருக்கு இந்த கடைசி காலச் செய்தியை கேட்க வேண்டுமென்ற பிரியம் உள்ளது, ஆனால் ஒரு கடிதத்தையும் கூட அவர்களிடம் சேர்க்க என்னால் முடியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு கட்டுப்பட்டிருக்கலாம்? ஜெபிப்பதைத் தவிர வேறெதாகிலும் என்னால் செய்யக்கூடுமா? எனக்குத் தெரிந்த வரையில் ஒன்றே ஒன்று அது தான். அவளுடைய கணவர் ஒரு ஸ்தாபன போதகராதலால், அவள் வார்த்தையைக் கேட்க அவர் அனுமதிப்பதில்லை. அவளுக்கோ வார்த்தையைக் கேட்க வேண்டுமெனும் ஆவல் உள்ளது. ஆனால் கேட்பதற்கு அவர் சம்மதிப்பதில்லை. அவளுக்காக ஜெபியுங்கள். அந்த ஸ்திரீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாள் என்று நம்புகிறேன். 59சகோ. பிரான்ஹாமே, ஒரு நபர் உண்மையான நீதிமானாக்கப்படுதல் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதல் அனுபவத்தைப் பெற்றிருந்த போதிலும், அவர் வார்த்தையின் வெளிச்சத்தைப் புறக்கணிப் பாரானால், அவர் இழக்கப்பட்டு நரகத்தில் முடிவடைவது சாத்தியமா? ஆம், ஐயா! அது முற்றிலும் உண்மை. 60நாம் வார்த்தையை விசுவாசிக்காமல் போனால் கிறிஸ்துவிலிருந்து நித்திய காலமாக பிரிக்கப்படுவோம் என்னும் சொற்களை நீர் உபயோகிக்கும் போது, புத்தியில்லாத கன்னிகைகள் நித்திய காலமாக வாழ்ந்து, ஆனால் கிறிஸ்து தன் மணவாட்டியுடன் வாசம் செய்யும் புதிய எருசலேமிலிருந்து பிரிக்கப்படுவார்கள் என்னும் அர்த்தத்தில் கூறுகிறீரா? இங்கு பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர் உள்ளனர், அவர்கள் எவ்விதம் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று வேதம் உரைத்துள்ளபடியே மறுபடியும் பிறந்துள்ளனர். இயற்கை பிறப்புக்கு தண்ணீர், இரத்தம், ஆவி அவசியமானால், ஆவிக்குரிய பிறப்புக்கும் கிருபையின் மூன்று கட்டங்கள், ஒரு நபர் உண்மையாக மறுபடியும் பிறப்பதற்கு, அவசியமல்லவா? முற்றிலுமாக, அதை இன்று காலையில் நான் விளக்கினேன் - அதே காரியம் தான். நீங்கள் எல்லா கட்டங்களையும் பெற்றிருத்தல் அவசியம். நீங்கள் ஆவியினால் உருவாகின்றீர்கள்; ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாவதைப் போல, ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் பிறப்பதில்லை. அது உண்மை. நீங்கள் அப்பொழுது பிறக்கிறீர்கள், ஆனால் நீங்கள் குணப்படவில்லை. அந்த நேரம் வரைக்கும், நீங்கள் குணப்படும் கட்டத்தில் இருந்து வருகிறீர்கள். ஆகையால் தான் இந்த மகத்தான இரகசியங்கள் அனைத்தும் லூத்தருக்கு அளிக்கப்பட முடியவில்லை, வெஸ்லிக்கு அளிக்கப்பட முடியவில்லை, நம்மை சமீபத்தில் கடந்து சென்ற பெந்தெகொஸ்தே காலத்துக்கும் அளிக்கப்பட முடியவில்லை. ஏன்? அதற்கு நேரமாகவில்லை. அவர்கள் கருத்தரிக்கப்பட்டனர். இப்பொழுது. கிறிஸ்துவாகிய நபர்தாமே, மனுஷகுமாரன் (உங்களுக்குப்புரிகிறதா?) மனித சரீரத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார். அது இந்நாள் வரைக்கும் வர முடிந்திருக்காது. 61ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும்போது, அவிசுவாசிகள் எவ்விதம் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்? அவிசுவாசிகள் புத்தியில்லாத கன்னிகைகளுடன் உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிப்பார்கள், அந்த மற்றெல்லாருமே (அவிசுவாசிகள், புத்தியில்லாத கன்னிகைகள்), மற்றும் வெளியே எடுக்கப்படும் இஸ்ரவேலில் மீதியானவர்களும். 62சகோ. பிரான்ஹாமே, யாராகிலும் ஒருவர், அந்த பழமொழி கூறுவது போல், “என் கால் விரல்களை மிதித்தால்,” எனக்கு கோபம் அதிகரிக்கிறது; இதை நான் எவ்விதம் மேற்கொள்வது? கர்த்தர் தான் இதை செய்ய வேண்டுமென்று நான் அறிந்திருக்கிறேன், ஆனால் என் இருதயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? இது எனக்கு வேண்டாம். ஜெபத்தின் மூலமாய் உங்கள் சுபாவத்தை இனிமையாக்கிக் கொண்டு, பிறகு உங்கள் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்... எனக்குத் தொடக்கத்தில் இருந்த கோபத்தைப் போல இந்த கட்டிடத்திலுள்ள அதிகம் பேருக்கும் இருக்காது என்று எண்ணுகிறேன். ஒ, என் வாய் எப்பொழுதும் அடித்து கொதறப்பட்டது. என் ஆகாரத்தை நான் 'ஸ்ட்ரா' வழியாக உறிஞ்சி சாப்பிடுவது வழக்கம். 63என் தாயார், உங்களுக்குத் தெரிந்தபடி, பாதி சிகப்பு இந்தியர், என் தந்தை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், கென்டக்கியில் குடிபுகுந்த ஐரீஷ்காரர். இருவருக்குமே கோபம் அதிகம். எல்லா நேரங்களிலும் என் வாய் கொதறியிருந்தது; நான் தொடக்கத்தில் சிறுவனாயிருந்த போது, அவர்கள் என்னைத் தூக்கி, குத்தி கீழே வீழ்த்துவார்கள். நான் மறுபடியும் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் குத்தி வீழ்த்தி, என்னால் எழுந்திருக்க முடியாத நிலை வரும் வரைக்கும் குத்தி வீழ்த்தித் கொண்டேயிருப்பார்கள். அது எப்பொழுதும் நடந்து வந்தது. என்னால் எழுந்திருக்க முடியும் போது, நான் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் என்னைக் குத்தி கீழே வீழ்த்துவார்கள். அப்படித்தான் எனக்கு நடந்து வந்தது. “நான் கிறிஸ்தவனாக ஆகவே முடியாது” என்று எண்ணினேன். ஆனால் பரிசுத்த ஆவி என் வாழ்க்கைக்குள் வந்த போது, அது அதை சாதித்து விட்டது. ஒரு சமயம் ஒரு ஸ்திரீ இருந்தாள். அவளுடைய மின் சாரத்தைத் துண்டிக்க நான் சென்றிருந்தேன். அப்பொழுது என் தலையில் மயிர் இருந்தது. அவள் என்னைப் பார்த்து “பித்தம் பிடித்த முட்டாளே” என்றாள். நான், “ஸ்திரீயே, நீ அவ்விதம் என்னைத் திட்டக் கூடாது. ஓ, உனக்கு தேவபயம் இல்லையா?” என்று கேட்டேன். அவளோ, “பித்தம் பிடித்த முட்டாளே, அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து என்னிடம் யாராவது பேசவேண்டுமென்று நான் விரும்பினால், உன்னைப் போன்ற பைத்தியக்காரனை அழைக்க மாட்டேன்” என்றாள். “ஹூ!” அவள் என்னை எல்லாவிதமான அவதூறான பெயராலும் அழைத்தாள். ஓ, என்னே, அது மாத்திரம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்திருந்தால்! “ஒரு ஸ்திரீயை அடிக்கும் மனிதன், ஒரு மனிதனை அடிக்கக் கூடிய ஆண்மைத்தனம் கொண்டவன் அல்ல” என்று நான் அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் என் தாயாரை அவதூறான பெயரால் அழைத்த போது, அந்த வாக்கை நான் மீறியிருப்பேன். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அது என்னை சிறிதும் கோபப்படுத்தவில்லை. நான், “உனக்காக ஜெபிக்கிறேன்” என்று சொன்னேன். அது தொல்லைப் படுத்தவேயில்லை. எனக்கு என்னமோ நடந்துள்ளதென்று நான் அந்த நேரத்தில் அறிந்து கொண்டேன். ஆம், ஐயா! ஓ, என்னே! நான் சிறுவனாயிருந்த போது, சண்டையிட்டதனால் செய்த தீங்குகள் உங்களுக்குத் தெரியுமா? ஒரே நேரத்தில் நான் ஐந்து மனிதர்களை ஏறக்குறைய கொன்று விட்டேன். பதினாறு குண்டுகள் நிறைத்திருந்த ஒரு துப்பாக்கியை நான் கையிலெடுத்து நான் கென்டக்கி நாட்டைச் சேர்ந்தவன்: என்றகாரணத்தால் அந்த பையன்கள் என்னை அடித்த போது, வேறு எத்த காரணத்துக்காகவும் அல்ல.... என் தலையை எனால்நிமிர்த்தவும் கூட முடியவில்லை. ஒரு பையன் என் கைகளை இப்படி பிடித்துக் கொள்வான், மற்றொரு பையன் கையில் ஒரு கல்லை வைத்துக் கொண்டு நான் ஜீவனற்று போகும் வரை என் முகத்தில் குத்துவான். இவ்வுலகில் வேறெதுவுமே... 64அவர்கள் என்னை “கென்டக்கி ஸ்வாப் (swab)”என்று அழைத்தார்கள். ஏனெனில் என் தாயார் வாலிபமாயிருந்த போது சிகப்பு இந்தியரைப் போல் காணப்பட்டார்கள் (சற்று முன்பு நான் அவர்களுடைய புகைப்படத்தை நோக்கிக் கொண்டிருந்தேன்), அவர்கள் பாதி சிகப்பு இந்தியர் என்று அந்த பையன்கள் அறிந்திருந்தனர். நான் கென்டக்கியை சேர்ந்தவனாயிருந்து என் தாயார் சிகப்பு இந்தியராக (skaw) இருந்த காரணத்தால் அவர்கள் என்னை “கென்டக்கி ஸ்வாப்” என்று அழைத்தனர். அதற்கு நான் பொறுப்பாளியே அல்ல. நான் கென்டக்கியில் பிறந்தது என் தவறல்ல. நான் பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது எனக்கு உடுக்க 'துணிகளே இருக்கவில்லை. என் தாயார், தந்தை விவாகத்தின் போது உடுத்த அவருடைய பழைய 'கோட்டை எடுத்து அதை வெட்டி, எனக்கு கால் சட்டை தைத்துக் கொடுத்தார்கள், நான் பள்ளிக்கு முதன்முதலாக சென்ற போது அதை அணிந்து கொள்ள. நான்... என் தாயார் எனக்கு வெள்ளை நிறக்காலுறையை அணிவித்து அதன் மேல் டென்னிஸ் காலணிகளை அணிவிப்பது வழக்கம். இந்த பையன்கள் என்னை நோக்கி, “உன்னை பார்த்தால் பயித்தியக்கார கென்டக்கி நாட்டான் போல் இருக்கவில்லையா?” என்று கேலி செய்வார்கள். இது நான் பள்ளிக்கூடத்தில் இருந்த நாட்கள் முழுவதும் நடந்து வந்தது. 65ஓரிரண்டு பையன்கள், நான் சாலையில் ஏதோ ஒரு சிறு பெண்ணுடன் அவளுடைய புத்தகங்களை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற காரணத்தால்... அவ்விதம் நான் செய்வது அவர்களுக்கு பிரியமில்லை, அவர்கள் என்னை அங்கு சந்தித்து, நான் நினை விழந்து போகும் வரைக்கும் என்னை அடித்தார்கள். அவர்கள் என்னைப் போகவிட்டால். நான் நேராக வீட்டுக்கு போய்விடுவேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்தேன். எனவே அவர்கள் என்னை போகவிட்டு, எனக்கு நான்கைந்து உதைகள் கொடுத்து, என்னைக் குத்திக் கீழே வீழ்த்தி, என் முகம் முழுவதும் குத்தினார்கள். நான் அடிபட்டவனாக வயலின் வழியாக அந்த நிலையில் வீடு திரும்பினேன். என்னிடம் .22 வின்சென்ஸ்டர் துப்பாக்கி இருந்தது, அது கதவண்டையில் வைக்கப்பட்டிருந்தது. நான் தோட்டாக்களால் நிறைக்கப்பட்டிருந்த அந்த துப்பாக்கியை என் கையிலெடுத்துக் கொண்டு, புதரின் வழியாக சென்று, சாலையின் பக்கத்தில் ஒளிந்திருந்து, இந்த ஐந்தாறு பையன்கள் வருவதற்காக காத்திருநதேன். அவர்கள், “அந்த கென்டக்கி நாட்டான் இப்பொழுது முதற்கொண்டு அவன் நிலை என்னவென்பதை உணருவான்” என்று பேசிக் கொண்டே வந்தனர். 66நான் துப்பாக்கியின் மேல் கம்பியை (hammer) பின்னால் இழுத்து, ஒளிந்த இடத்திலிருந்து வெளி வந்து, “உங்களில் யார் முதலில் இறக்க விரும்புவது, அப்பொழுது நீங்கள் மற்றவர்களை கவனிக்க மாட்டீர்கள்” என்றேன். அவர்கள் அலறத் தொடங்கினர். நான், “அலறாதீர்கள், நீங்கள் ஒருவர் பின் ஒருவர்ராக எல்லாரும் சாகப் போகிறீர்கள்” என்றேன். அதை நான் உண்மையில் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். நான் மேல் கம்பியை இழுத்து சுட்டேன். துப்பாக்கியிலிருந்த குண்டு வெடித்தது. நான் வேறொரு தோட்டாவை உள்ளே போட்டு சுட்டேன். அதுவும் வெடித்தது. இப்படியாக பதினாறு தோட்டாக்களை நான் தரையை நோக்கி சுட்டேன். அவை ஒவ்வொன்றும் வெடித்தன. அந்த பையன்கள் அலறிக் கொண்டு ஓடி, மலையின் மேல் ஏறி ஓடினார்கள். அவர்கள் போன பிறகு அங்கு நான் நின்றேன். எனக்கு அதிக கோபம் வந்தால், நான் அழமாட்டேன், ஒரு முட்டாளைப் போல் சிரிப்பேன், அப்பொழுது என் கண்களிலிருந்து கண்ணீர் வடியும். இப்பொழுது, அது ஒரு கோபாவேசம். தேவன் இல்லாமல் போயிருந்தால், நான் கொலைகாரனாகியிருப்பேன். அந்த தோட்டாக்களை நான் பொறுக்கி அவைகளை துப்பாக்கியில் நிறைத்து, “பௌ, பௌ'. அவை முன்னைப் போல் நன்றாக வெடித்தன. கிருபையைக் குறித்து பேசினால், இதுதான் கிருபை! 67ஆயிரம் வருட அரசாட்சியின் போது புத்தியில்லாத கன்னிகைகள் எங்கிருப்பார்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் போது, அவர்கள் கல்லறையில் இருப்பார்கள். “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” (வெளி. 20:5). 68மோசே இஸ்ரவேல் புத்திரரை நடத்திக் கொண்டு போன போது இருந்தது போல், இப்பொழுதும் மணவாட்டி, ஒன்று கூடி வாழ ஒரு இடம் இருக்கிறதா, அல்லது இனிமேல் இருக்குமா? இந்த கேள்விக்கு நான் உங்களுக்கு விடையளிக்கப் போகிறேன்; இப்பொழுது தான் எனக்கு அது வெளிப்படுத்தப் பட்டது. நான் உங்களுக்கு உண்மையைக் கூறப் போகிறேன். ஆம், ஐயா! மணவாட்டி அனைவரும் ஒன்று கூடுவதற்கு ஒரு இடம் உண்டு. அது எங்குள்ளது என்று அறிய விரும்புகிறீர்களா? கிறிஸ்துவில். மிகவும் சரி. அங்கு ஒன்று கூடுங்கள்; நாமெல்லாரும் ஒன்று கூடினவர்களாய் இருக்கிறோம். 69ஸ்திரீகளின் உடையைக் குறித்து நாம் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டாக்குவதற்கு காரணமென்ன? (ஓ, ஓ, இது எனக்கு சூடு கொடுக்கிறது. இல்லையா?) ஸ்திரீகளின் உடைகளைக் குறித்தும் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதைக் குறித்தும்? மனிதனின் தலைமயிரைக் குறித்தும் அவன் உடை உடுக்கும் விதத்தைக் குறித்தும் ஒன்றும் சொல்லப்படுகிறதில்லையே? நல்லது. சகோதரியே. நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் குறித்து இணங்கப் போகிறேன். முதலாவதாக ஒரு மனிதனுக்கு நீண்ட தலைமயிர் இருக்கக் கூடாதென்று வேதம் உரைக்கிறது. அவன் நீண்ட தலைமயிரை வைத்திருந்தால். நான் உன்னிடம் கூறுவது போலவே அவனிடமும் கூறுவேன். அவன் அவ்விதம் செய்தால் தவறு . ஆனால் மனிதரில் பெரும்பாலோருக்கு, அவர்களில் பலருக்கு எனக்கு தலைமயிர் ஒன்றும் இல்லாதது போல, அவர்களுக்கும் இருப்பதில்லை. ஆனால் மனிதரில் பெரும்பாலோர் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, மனிதரைப் போல் காட்சியளிக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் அவ்விதம் செய்யாமல் போனால், அவர்கள் பெண்களைப் போல் தலைமயிரை வளர விடக் கூடாது என்று அவர்களிடம் கூறப்படும். நாம் விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து பிரசங்கிக்கும் போது, உனக்கு இதைக் குறித்த விவரணம் எல்லாம் கிடைக்கும். 70109, இப்பொழுது, ஒரு மனிதன், முதலாவதாக, ஒரு மனிதனின் உடல் ஒரு ஸ்திரீயின் உடலைப் போல். கவர்ச்சிக்குரியதல்ல. இப்பொழுது மனிதன், முடி வளர்ந்த தன் பெரிய கால்கள், முட்டித் தட்டும் கால்கள், பானை போன்ற தொந்தி போன்றவைகளைக் கொண்டவனாய் காண்பதற்கு பயங்கரமாயிருக்கிறான். கவரப்படுவதற்கு அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஒரு மனிதன் வாலிபனானாலும் வயோதிபனானாலும், இந்த பிக்கினிக்களை அரிந்து கொண்டு, சாலையில் நடந்து செல்லும் போது. அதுதான் நான் இதுவரை கண்டிராத மிகவும் அருவருப்பான காட்சி என்பது என் கருத்து. அப்படி செய்யும் ஒரு மனிதன், அவன் எந்த வர்க்கத்தை சேர்ந்தவன் என்பதை அறியாமலிருக்கிறான் என்று 'எண்ணுகிறேன் (பாருங்கள்? அது உண்மை). 71உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க இராணுவம் அவ்விதமாக உடுக்கப் போகிறதென்று சில மாதங்களுக்கு முன்பு கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ இராணுவம் அந்த விதமாக வெளி வரப் போகிறது, எல்லோரும் குட்டை கால் சட்டைகள் அணிந்து, நமக்கு எவ்வளவு பெரிய பெண்மைத்தனம் கொண்ட கூட்டம் உள்ளது! தேவன் மனிதனை, மனிதனைப் போல் காணப்படவும், மனிதனைப் போல் நடந்து கொள்ளவும், மனிதனைப் போல் உடுத்திக் கொள்ளவதற்காகவே படைத்தார். அவ்வாறே அவர் ஸ்திரீயை, ஸ்திரீயைப் போல் நடந்து கொள்ளவும், ஸ்திரீயைப் போல் இருப்பதற்காகவுமே படைத்தார். இன்று காலையில் மனிதனைக் குறித்த கேள்வி எழுந்த போது ... (ஒலிநாடாவின் முதல் பாகம் முற்று பெறாமல் முடிந்து இரண்டாம் பாகம் நடுவில் தொடங்குகிறது - ஆசி)... அவனுக்கு விருப்பமானால்... 72112, ஒரு ஸ்திரீக்கு மெலிந்த தலை மயிர் இருந்து அவள் அந்த 'எலிகளில்' ஒன்றை அணிந்து கொள்ள விரும்பினால், அல்லது அதை நீங்கள் எவ்விதமாக அழைத்தாலும், நான் நினைக்கிறேன் அது ... என் மனைவி அதை அணிந்து கொள்கிறாள். அது ஒரு... அவளுடைய தலைமயிர் மெலிந்துள்ளதாக அவள் கூறுகிறாள், அவளிடம் ஏதோ வட்டமான ஒன்றுள்ளது. அது ஒரு பெரிய, சாதாரண அளவை விட பெரிதான பிஸ்கோத்து போல் காணப்படுகிறது. அவள் தன் தலைமயிரை அதில் சுற்றிக் கொண்டு கொண்டை ஊசிகளை குத்திக் கொள்கிறாள். இப்பொழுது — என்னப் பொறுத்த வரையில் உங்கள் தலைமயிர் நீளமாயுள்ள வரைக்கும் அதனால் எவ்வித பாதகமுமில்லை. ஒரு போதகர், தன் மனைவியின் தலைமயிர் சாயம் பூசப்பட்டுள்ளதனால், அவள் குற்றம் புரிந்துள்ளதாக கூறினார். ஒரு கேள்வியிலிருந்து நான், அது தலைமயிருக்கு வர்ணம் பூசுவது அல்லது சாயமிடுவது என்பதைக் கண்டு கொண்டேன். அது தவறென்று என்னால் கூற இயலாது; அதைக் குறித்து எனக்கு ஒன்றுமில்லை. அவளுக்கு. நீண்ட தலைமயிர் இருக்குமானால், அவ்வளவு தான் என்னால் அதைக் குறித்து கூற முடியும். 73இப்பொழுது, ஒரு மனிதன்... இன்று காலையில் ஒருவர் தலைமயிரை எடுத்து விடுவதும், அதன் பிறகு போட்டுக் கொள்வதையும் குறித்து கேட்டிருந்தார். இப்பொழுது. தலை மயிரைக் கத்தரித்துக் கொள்வதையும் குறித்தும் இங்கு கேட்கப் பட்டுள்ளது. பாருங்கள்? இப்பொழுது, ஒரு மனிதனுக்கு தலைமயிர்' இல்லாமல், அவனுடைய மனைவி... ஸ்திரீகள், “நல்லது. நான் மாத்திரம் ஜானிடம். ... அவர் ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொண்டால் அவர் காண்பதற்கு நன்றாயிருப்பார். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோ. பிரான்ஹாமே? அவ்விதம் அவர் செய்வது தவறா?” என்று கூறுவதை நான் கேட்டதுண்டு. இல்லை, ஐயா! இல்லவே இல்லை. அது தவறல்ல. அவர் அதை அணிந்து கொள்ள விரும்புவாரானால், அதனால் பாதகமில்லை, அதற்கும் செயற்கை பல் அணிந்து கொள்வதற்கும் வித்தியாசம் எதுவுமில்லை. 74கூறப் போனால், நான் மூன்று செயற்கை பற்களை வைத்திருக்கிறேன். அவை இல்லாமலிருந்தால் நலமாயிருக்கும். அவை ஒரு கம்பியினால் கட்டப்பட்டுள்ளன; அது என் சத்தத்தைக் குறைத்தும், என் நாவை அறுத்து விடவும் செய்கிறது. ஆனால் ஆகாரம் உண்பதற்கு அவை எனக்கு அவசியமாயுள்ளன. நான் வெளிநாடுகளில் கூட்டங்கள் நடத்தும்போது, ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொள்கிறேன், நன்றாக காணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல, ஏனெனில் நான் இங்கு நின்று கொண்டு என் தலையின் மேல் தலை மயிர் துண்டு இருந்தாலும் இல்லாமல் போனாலும், அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காதென்று உங்களுக்குத் தெரியும். நான் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாகவே இங்கு இருக்கிறேன். ஆனால் வெப்ப புயல்களில் ஒன்றில் நான் முதல் இரவு அங்கு நிற்பேன் என்றால், அடுத்த நாள் இரவு என் தொண்டை கரகரப்பாகி என்னால் அங்கு செல்ல முடிவதில்லை. 75எனவே, அதை நான் செய்ய வேண்டுமென்று விரும்பி, அதை செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றினால், அதை நான் செய்வேன். ஆம், ஐயா! அதை செய்ய வேண்டாமென்று ஒன்றுமே கூறுவதில்லை. சகோதரியே, நீங்கள் 'எலி'யையோ, கொண்டையையோ, அல்லது சவரிமயிரையோ, அல்லது வேறெதாவதையோ உபயோகிக்க கூடாதென்று எந்த ஒன்றுமே கூற வில்லை. அது முற்றிலும் சரி. ஆனால் உங்கள் தலைமயிர் நீளமாயிருக்கட்டும். மனிதரே, உங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உள்ள தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? அத்துடன் அது முடிவு பெறுகிறது. ஸ்திரீகளே, நீங்கள் ஸ்திரீகளைப் போல் உடை அணியுங்கள். மனிதரே, நீங்கள் மனிதரைப் போல் உடை அணியுங்கள். நீங்கள் பெண்மைத்தனம் கொண்டவர்களாய் பெண்களின் உடைகளை அணியாதீர்கள். ஸ்திரீகளே, நீங்கள் ஆண்மைத்தனம் கொண்டு, ஆண்களின் உடைகளை அணியாதீர்கள், ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்வது தேவனுக்கு விருப்பமில்லை; வேதம் அதைக் கண்டிருக்கிறது. ஆனால், ஒரு தலைமயிர் துண்டு அல்லது வேறெதாவது தலைமயிர் அணியும் விஷயத்தில்... நல்லது, அந்த “எலிகள்” என்பது என்ன? அல்லது சற்று முன்பு அதை தவறாகக் கூறி விட்டேனோ. அல்லது அதன் பெயர் “சுண்டெலியா? அது ஒரு ஸ்திரீ தன். தலைமயிரை அடர்த்தியாக்கிக் கொள்ள அதற்குள் வைக்கும் ஒன்றாகும். அதன் பெயர் என்னவானாலும் (பாருங்கள்?), அதனால் தவறொன்றுமில்லை. அதை தொடர்ந்து செய்யுங்கள், அது பரவாயில்லை. 76சகோ. பிரான்ஹாமே, எண்ணூறு மைல் தொலைவிலிருந்து ஒரு சகோதரி கூடாரத்துக்கு வந்திருந்தாள், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அவதாரம், என்று அவள் விசுவாசிப்பதாகக் கூறினாள். தயவு செய்து இதைக் குறித்து பேசவும். அவளுடைய கருத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூற அவள் அவசரப்பட்டாள்... சரி. இப்பொழுது, அந்த சகோதரி தவறு என்பது உறுதி. நான் இயேசு கிறிஸ்து அல்ல. நான் அவருடைய ஊழியக்காரன், இதைக் குறித்து நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால்... ஓ, இதை முடிப்பதற்கு நான் மிக அருகில் வந்து விட்டேன். எனக்காக ஜெபியுங்கள், இன்னும் சிறிது நேரம். 77சகோ. பிரான்ஹாமே... (மற்றவைகளை கேட்க உங்களுக்கு விருப்பமா - என்னால் முடிந்த வரையில் விரைவாக) சகோ. பிரான்ஹாமே, ஒரு சமயம் தேவன் எனக்கு சாராளுக்கு அருளியது போல், ஒரு வாக்குத்தத்ததை அளித்தார் என்று உணர்ந்தேன். அதைக் குறித்த ஒரு கேள்வி எனக்கிருந்தது. அந்த வாக்குத்தத்தம் பிறகு வந்தது. அது தேவனிடத்திலிருந்த வந்த வாக்குத்தத்தமா? சாராள் பெற்ற வாக்குத்தத்தம் தேவனிடத்திலிருந்து வந்ததென்று அறிவேன், ஆனால் காலம் மிகவும் குறுகியுள்ளது என்று உணருகிறேன். நாங்கள் உங்கள் ஊழியத்தையும் உங்களை: ஊழியத்திற்கு அழைத்தவரையும் நேசிக்கிறோம் (அது மிகவும் இனிமையானது இல்லையா?) உங்கள் ஊழியத்தையும் உங்களை ஊழியத்திற்கு அழைத்தவரையும் நேசிக்கிறோம். ஆகையால் உங்களையும், நாங்கள் நேசிக்கிறோம். ஓ, அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர். நன்றி, சகோதரி சகோதரனே. ஒரு கேள்வி, ஆம், ஆம், சரி. இப்பொழுது, தேவன். அவர் உங்களுக்கு வாக்குத்தத்தத்தை அளித்தார் என்று நினைக்கிறேன், அது சாராளைப் போல் நிறைவேறும். நிச்சயமாக, அவர் அதே தேவன்; அவர் அதே விதமாக பதிலளிக்கிறவர். அது தேவனிடத்திலிருந்து, வந்தது என்பதைத் தவிர வேறெதையும் விசுவாசிக்காதீர்கள். சகோ. பிரான்ஹமே, வேதத்தைக் குறித்த சில கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். தயவு கூர்ந்து பரி. மாற்கு...விளக்கவும். அதை ஏற்கனவே விளக்கி விட்டேன், அதை ஏற்கனவே கூறிவிட்டேன், பார். மாற்கு 16. அன்றொரு நாள் அதை நாம் பார்த்தோம். எனக்கு ஞாபகமுள்ளது, நாம் தொடர்ந்து பார்ப்போம். 78அன்பு. சகோ. பிரான்ஹாமே, பரி. மத்தேயு -22ம் அதிகாரம். (இதையும் நாம் பார்த்து விட்டோம். உங்களுக்கு ஞாபகமுள்ளதா, அன்றொரு நாள்? அதை உங்களுக்கு காண்பிக்கிறேன். நான் ... இங்கு பாருங்கள்?)... வஸ்திரம் தரித்து, ஆனால் கலியாணவஸ்திரம் தரிக்காதவனாய் இந்த விருந்தாளி எவ்விதம் கலியாண விருந்துக்கள் நுழைய முடிந்தது? ஞாபகமுள்ளதா, நான் கூறினேன். நான் 'ஜோக்' அடித்தேன். அதாவது, “வாசல் வழியாக நுழையாமல் ஜன்னலின் வழியாக உள்ளே வந்த ஸ்தாபன சகோதரன்” என்று நான் கூறினேன். வாசல் என்பது வார்த்தை. காயீன் சர்ப்பத்தின் வித்து என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியானால் ஏவாள் “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று கூறக்காரணம் என்ன? இந்த கேள்வியைத் தான் நான் காலையில் தேடிக்கொண்டிருதேன். அதற்கான வேதவசனங்களை இங்கு நான் எழுதி வைத்திருக்கிறேன். இங்கு நான் திரும்பவும் படிக்கிறேன். நான் நினைக்கிறேன். இங்கு சிலவற்றை கண்டு பிடித்து... சகோ. பிரான்ஹாமே, வழிபாட்டில் கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்ட என் கணவர், அவருடைய வழியில் ஜெபிக்க விரும்புகிறார்... இதற்கு நான் பதில் கூறி விட்டேன். ஞாபகமுள்ளதா? ஓ, இவை மறுபடியும் வருகின்றன. அதற்கு நான் பதில் கூறி விட்டேன். சகோ. பிரான்ஹாமே, நான் முடிவில்... என் சகோதரிக்கு ஊக்கமூட்டம் அதற்கு பதில் கூறிவிட்டேன். ஒரு ஸ்திரீக்கு கத்தோலிக்க சகோதரி ஒருத்தி இருக்கிறாள். சகோ. பிரான்ஹாமே, 2 தீமோத்தேயு 4ம் அதிகாரத்தில், அளிக்கப்பட்ட வரம்... அதை நாம் பார்த்து விட்டோம். எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? பதில் கூறப்பட்ட கேள்விகள் இங்கு கலந்து விட்டன. பாருங்கள்? 79எந்த விதமான... உபயோகிப்பது நியாயமானதா? அது கருத்தடையைக் குறித்த கேள்வி. இன்று காலையில் நான் கூறினது போல், உங்களிடம் இதைக் குறித்து நான் தனியாக பேசட்டும். முதலாவதாக, அந்த ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும் இரட்சிக்கப்படுவார்களா... அதையும் நான் பார்த்து விட்டேன். நான் படித்ததையே திரும்ப படிக்கிறேன். ஒரு நிமிடம், என்னுடன் பொறுமையாயிருங்கள். வழியை அறிந்து கொண்ட பிறகு, மனந்திரும்புதல் பரிசுத்தமாகுதல் என்பவைகளுக்கான வழியை மட்டுமாவது அறிந்து கொண்ட பிறகு (அதை நாம் பார்த்து விட்டோம், உங்களுக்கு ஞாபகமுள்ளதா?), அவர்கள் அதிலிருந்து விழுந்து போவார்களானால்... இந்த கேள்வியையும் நாம் பார்த்து விட்டோம். நான் ஒரளவுக்கு படித்த கேள்விகளை திரும்பவும் படிப்பதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். நான் இவைகளை... சகோ. பிரான்ஹாமே, பிணம் எங்கேயோ அங்கே கழுகள் வந்து கூடும்“ என்று மத். 24:28ல் கூறப்பட்டதன் அர்த்தம் என்ன? அதை 'நான் விளக்கினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? பாருங்கள்? அதற்கு நான் பதில் கூறி விட்டேன். படித்த கேள்விகளை திரும்ப படிப்பதை முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! எடுத்துக்கொள்ளப்படுதலுக்கென்று மணவாட்டி உம்மோடு கூட இருப்பதற்கான நேரம் வந்து விட்டதா? (இப்பொழுது, இந்த கேள்விக்கும் நான் பதில் கூறிவிட்டேன்). ஒருக்கால் நான்... இதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அதற்கு அடையாளமாக கீழே ஒரு கோடு போடப்பட்டுள்ளது. எனக்கு ஞாபகமுள்ளது. நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நாம் வரிசைக் கிரமமாக கீழே வந்து கொண்டேயிருக்கிறோம். இப்பொழுது பார்ப்போம். 80அப்போஸ்தலர் 2:38 மட்டுமே ஞானஸ்நானம் பெறுவதற்கு ஒரே முறையானால், திரளான ஜனங்களைக் குறித்தென்ன...? அதற்கு நான் பதில் கூறி விட்டேன். அவர்களுடைய நாட்களில் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை; இப்பொழுது தான் அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் அறிந்த பின்பும், “செம்மையானதை செய்ய அறிந்திருந்தும், ஒருவன் அதை செய்யானாகில், அது அவனுக்கு பாவமாயிருக்கும். 81சகோ. பிரான்ஹாமே, புகையிலை வளர்ப்பதும் அதில் வேலை செய்வதும் தவறா? இதற்கு நான் பதில் கூறவில்லை என்று நினைக்கிறேன். இப்பொழுது நான் புகையிலைக்கு எதிராயிருக்கிறேன். புகையிலை உபயோகிப்பதற்கு நான் விரோதமாயிருக்கிறேன்; மறுபடியும் பிறந்த எந்த கிறிஸ்தவனும் அப்படித்தான் இருப்பான்; அவ்வளவு தான், ஏனெனில் அது தவறு. மருத்துவ விஞ்ஞானமும் கூட, புகையிலை தான் தொண்டை மற்றும் நுரையீரல் புற்று நோய்க்கு காரணம் என்று கூறுகிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். அவர்கள் “வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை புகையுங்கள்” என்கின்றனர். இப்பொழுது, புகை பிடிக்கும் மனிதரே ஸ்திரீகளே, அது உங்களை ஏமாற்றும் ஒன்று ஏனெனில் உங்களால்... நல்லது. அவர்கள் செய்கின்ற ஒரே காரியம்... நீங்கள் வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை வாங்கும் போது, அவைகளை நீங்கள் அதிகமாக வாங்க - வேண்டும், ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் புகையைத் தான் அது உள்ளே அனுமதிக்கிறது. ஏனெனில் எவரும் உங்களிடம் கூறுவார்கள். 82சென்ற ஆண்டில் வாஷிங்டனில் நடந்த உலக சந்தையில் (நான் உலக சந்தைக்கு சென்றிருந்த போது), இதைக் குறித்த ஒரு விரிவுரையை நான் கேட்க நேர்ந்தது. உலகின் பல் வேறு பாகங்களிலிருந்து வந்திருந்த மருத்துவர்கள் அதை விளக்கினர்; 'தார்' (tar)இல்லாத புகை இருக்க முடியாது என்று அவர்கள் கூறினர், உங்களால்... உங்களுக்கு புகை இருந்தால் உங்களுக்கு 'தாரும்' கூட இருக்கும். அவர்கள், “வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளின் விஷயத்தில் யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள், ஏனெனில் சிகரெட் பிடிக்கும் திருப்தி உங்களுக்கு தேவையானால், சாதாரண சிகரெட் ஒன்று புகைப்பதற்கு பதிலாக, இரண்டு அல்லது மூன்று வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை நீங்கள் புகைக்க வேண்டும்” என்றனர். அது பொது ஜனங்களை ஏமாற்றும் ஒரு சூழ்ச்சி, வானொலியிலும் தொலை பேசியிலும் கூறப்படும் ஏமாற்றக்கூடிய ஒரு தகவல். 83ஆனால், புகையிலை ஸ்தலத்தில் பணி புரிவதும், புகையிலை பயிரிடுவதுமான விஷயத்தில். இந்த புகையிலையைப் பயிரிடும் கென்டக்கி சகோதரராகிய நீங்கள்... நல்லது. ஒரு காரியத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் செய்வது உங்களைக் குற்றப்படுத்துமானால், அதை செய்யாதீர்கள், ஏனெனில் யாரையும் மரணத்துக்கு கொண்டு செல்லும் என்று நான் அறிந்துள்ள எந்த ஒரு காரியத்தையும் நான் செய்ய விரும்ப மாட்டேன். என் அயலானுக்கு போதை உண்டாக்கும் குடியைக் கொடுப்பது தவறானால், அந்த குடியை உண்டாக்குவதும் தவறாகும். ஆனால் வேறொன்றை நான் கூற விரும்புகிறேன். இப்பொழுது, அதை பயிரிடும் விஷயத்தில்... புகையிலையிலுள்ள நிகோடின் மருத்துவத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பயிரிடும் சோளம், கோதுமை, பார்லி' இவைகளிலிருந்து விஸ்கி தயாரிக்கப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? அது சரிதானா? சரி. பாருங்கள்? அதை எதற்காக உபயோகப்படுத்தப் போகிறார்களென்று உங்களுக்குத் தெரியாது. 84ஆனால் இப்பொழுது, நாம் சோளம் பயிரிடுகிறோம், நாம் சோளம் பயிரிடும் போது, அது சோளச் சீவல் (cornflakes) செய்யவும், ஜனங்களுக்கு ஆகாரமாயிருக்கவும், சோள ரொட்டி செய்யவும் பயன்படுத்தப்படுகிறதென்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் அதிலிருந்து போதை தரும் மதுவையும் தயாரிக்கின்றனர் (பாருங்கள்?), எனவே உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் லீலிப் புஷ்பம் வளர்த்து லீலிப் புஷ்பம் தோட்டத்தை வைத்திருக்கிறீர்கள். அவர்கள் லீலிப் புஷ்பத்தைக் கொண்டு என்ன செய்கின்றனர் தெரியுமா? அவர்கள் அதிலிருந்து அபினி என்றும் லாகிரி வஸ்துவை தயாரிக்கின்றனர். அவர்கள் 'லெட்டூஸ்' கீரையைக் கொண்டு என்ன செய்கின்றனர் தெரியுமா? அவர்கள் அதே காரியத்தையே செய்கின்றனர். அபினி 'லெட்டூஸ்' கீரையிலும் உள்ளது. நீங்கள் 'லெட்டூஸ்' கீரையை தின்றுவிட்ட பிறகு சற்று நேரம் அமைதியான உணர்வைக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதிலுள்ள அபின் தான் அதற்கு காரணம். வெங்காயத்திலும் அது உள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக, எனவே எதற்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. ஆனால் ஒரு கிறிஸ்தவ சகோதரன் மற்றொரு கிறிஸ்தவ சகோதரனுக்கு ஆலோசனை கூறும் வகையில் இதை கூற முற்படுகிறேன்; உங்களுக்கு புகையிலை தோட்டம் இருக்குமானால், அதை வேறெவருக்காவது விற்று விட்டு, சோளம் பயிரிட நோக்குங்கள். அது நல்லதாயிருக்கும் என்று நினைக்கிறேன், (பாருங்கள்?) ஏனெனில் சந்தேகமின்றி, அவர்கள் பயிரிடும் அதை ... என் கணவர் குடிகாரியான விபச்சாரி ஒருத்தியை விவாகம் செய்திருந்தார்... அதற்கு நான் பதில் கூறி விட்டேன். அது எங்கிருந்து வந்ததென்று நான் உங்களிடம் கூறினேன். அது இங்கு தொலைவில் உள்ள ஒரு இடத்திலிருந்து. இந்த கேள்விக்கு பதில் கூறி விட்டேன். இப்பொழுது பார்ப்போம். வெளிப்படுத்தல் 12ம் அதிகாரத்தில் உரைக்கப்பட்டுள்ள ஸ்திரீ... இதற்கும் நான் பதில் கூறி விட்டேன். ஆம், இந்த மொத்தமான கேள்விகளுக்கு நான் பதில் கூறி முடித்து விட்டேன். அது வெளிப்படுத்தல் 12ம் அதிகாரத்தின் பேரில், அந்த ஸ்திரீ யாரென்று. நாம் பார்ப்போம். 85சகோ. பிரான்ஹாமே, ஒரு பெண் பிரசங்கியின் கட்டுக்குள் இருக்கும் ஒரு சபைக்கு என் இரண்டு பிள்ளைகளும் செல்கின்றனர். அவள் வார்த்தையை விட்டு விலகியிருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் இந்த வலுவான ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அது தவறென்று நாங்கள் எவ்விதம் அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்? நான் முன்னமே உங்களுக்குக் கூறினேன். அதற்கு நான் பதில் கூறினேன். அதை மிருதுவாக கையாளுங்கள். நீங்கள் என்ன கூறுவீர்கள், நான்... அந்த நபர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நானறிவேன். அந்த ஸ்திரீ யாரென்று எனக்குத் தெரியுமென்று நான் உங்களிடம் கூறினால், நீங்கள் என்ன கூறுவீர்கள்? 86ஆயிரம் வருட அரசாட்சி ஆயிரம் ஆண்டு காலம் இருக்குமா அல்லது அது வெறும் ஒரு காலக் கணக்கா? இன்று காலையில் அதற்கு நான் பதில் கூறினேன். பாருங்கள்? அது ஆயிரம் ஆண்டுகள். சரி. சகோ. பிரான்ஹாமே, பிரச்சினை என்னவெனில்... - ஆம். அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். கோதுமையும் களைகளும். அதற்கு பதில் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கும். இப்பொழுது நாம் வரிசைக்கிரமமாக கீழே வந்து விட்டோம். இந்த கேள்விகளை நான் ஒருக்கால் மீண்டும் உறையில் போட்டிருக்கக் கூடும். நாம் பார்ப்போம். அதே காரியம். பிரான்ஹாமே, நான் ஆறு அருமையான பிள்ளைகளுக்குத் தாய், பண உதவி செய்வதற்காக என் கணவர் என்னை வேலைக்குச் செல்லும்படி கூறுகிறார். நான் போகலாமா? மேலும், ஆபிரகாம், தானியேல், எபிரேய பிள்ளைகள் ஆகியோருக்கு இருந்ததைப் போன்ற விசுவாசத்தை தேவன் எனக்கு அருளுமாறு எனக்காக ஜெபிக்கும்படி விரும்புகிறேன். ஒரு கிறிஸ்தவன் புகையிலை பயிரிடலாமா? இதற்கு நாம் பதில் கூறினோம்... 87சகோ. பிரான்ஹாமே, ஒரு ஸ்திரீ தன் கால்களை சவரம் பண்ணிக் கொள்வது தவறா? நான் காரியங்களைக் காண்கிறேனா? அது அவ்விதம் கூறுகிறதா? என்னால் கூற இயலாது. எனக்குத் தெரியாது. அதை நான் உன்னிடமே விட்டு விடப் போகிறேன். குடும்பத்தை அளவுக்கு உட்படுத்திக் கொள்வது தவறா? அது முழுவதுமாக குடும்பக் கட்டுப்பாடு என்பது அர்த்தமாகுமா? அதற்கு நான் பதில் கூறினேன் - ஒவ்வொரு தனிப் பட்ட நபருக்கும். நாம் பார்ப்போம். பாவத்தில் கிடக்கின்ற ஒரு ஸ்திரீ விவாகரத்து செய்து விட்டு மீண்டும் விவாகம் செய்து கொண்டால்... அதற்கு நான் பதில் கூறினேன். “விவாகரத்து விஷயங்களை தற்போது விட்டு விடுங்கள்” என்று நான் சொன்னது உங்களுக்கு ஞாபகமிருக்கும். 88எனக்கு ஒரு சிநேகிதி இருக்கிறாள், அவளை நான் அதிகமாக நேசிக்கிறேன். அவளிடம் சில ஒலிநாடாக்களும் கடிதங்களும் உள்ளன, நான் நினைக்கிறேன் அவை... அவளிடம் நான் இதைக் குறித்து பேசவில்லை. உண்மையைக் கூறினால், அவளுடைய நட்பை இழந்து விடுவேனோ என்று எனக்குபயமாயுள்ளதென்று எண்ணுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? அவளிடம் அன்புடன் பேசு. நான்... அதற்கு நான் பதில் கூறினேன் என்று நினைக்கிறேன், ஆனால் நான் எதையும் யார் மேலும் திணிக்க முயல்வதில்லை. நீ உப்புத்தன்மை கொண்டவளாயிரு: அவர்கள் உன்னைப் போல் இருக்க விரும்புவார்கள். சகோதரனே, சகோதரியே, இதற்கு நான் பதில் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். சகோ. பிரான்ஹாமே, ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளைக் குறித்து விளக்கம் தரவும். இதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும். அது சிகப்பு தாளில் கையால் எழுதப்பட்டுள்ளது. நான் நினைக்கிறேன் நாம். இதற்கு நான பதில் கூறிவிட்டேன். இவையனைத்துக்கும் நான் பதில் கூறி விட்டேன் என்று எண்ணுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாம் பார்ப்போம். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 89அன்புள்ள தேவனுடைய தீர்க்கதரிசியே, பரி. மாற்கு 16:18, நான்... வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் ஒரு பாகமாக... நான் பாம்புகளைக் கையாளுகிறவர்களின் மத்தியில் இருக்கிறேன். அதைக் குறித்தென்ன? நல்லது. அது ஒரு நல்ல கேள்வி. நீங்கள் பாம்புகளைக் கையாளுகிறவர்களின் மத்தியில் இருந்து. அவர்கள் மாற்கு 16 என்று கூறுவார்களானால்... நிச்சயமாக! வேதம் என்ன கூறியுள்ளதோ, அதை அந்த அர்த்தத்தில் தான் கூறியுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் தேவனை ஏதாவதொன்றில் பரீட்சை பார்க்க முற்பட்டால், நமக்கு தீங்கு உண்டாகும் என்பது என் கருத்து. ஒரு குப்பி ஆர்செனிக் விஷத்தை நீங்கள் என்னிடம் கொண்டு வந்து. அதை நான் குடித்து விட்டு எனக்கு விசுவாசம் உண்டென்பதை நிரூபிப்பதை நீங்கள் காண முடியுமா என்று தேவன் ஒரு போதும் சித்தம் கொண்டதில்லை; அதே விதமாக நீங்கள் ஒரு பாம்பை என்னிடம் கொண்டு வந்து. அதை நான் கையிலெடுத்து, விஷத்தை மேற்கொள்ள எனக்கு விசுவாசம் உண்டு என்று உங்களுக்குக் காண்பிப்பது தவறாகும். அது அவ்விதம் இல்லை என்று நான் நம்புகிறேன். நான் நம்புவது என்னவெனில், நான் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்க நேர்ந்து, அல்லது கர்த்தருடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது காடுகளுக்கு நான் சென்றுள்ள போது. பாம்பு என்னைக் கடிக்குமானால், நான் கர்த்தருடைய நாமத்தில் நடந்து சென்று கொண்டிருப்பேன். பாருங்கள்? அதுதான் அதன் அர்த்தம் என்று நான் நம்புகிறேன்: 90இப்பொழுது, நீங்கள் பாம்பைக் கையாள வேண்டுமானால்... அதைக் குறித்து என்ன செய்கிறீர்கள் என்று பாருங்கள், அருமை நபரே, அது யாராயிருந்தாலும்... இதை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள். அதைக் குறித்து வேதம் என்ன செய்தது என்பதைக் கவனியுங்கள். நான் நம்பவில்லை, நீங்கள் “மகிமை, மகிமை, மகிமை” என்று கூறிக் கொண்டேயிருக்க முயன்றால்... அந்நிய பாஷையில் பேசுவதற்காக தேவனை பரீட்சை பாராதிருங்கள். ஆவியானவர் உங்கள் மூலம் பேச இடம் கொடுங்கள். பாருங்கள்? இப்பொழுது, தேவனை பரீட்சை பார்ப்பதில், அல்லது எதையும் உந்திப் பெற்றுக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் சற்று முன்பு கூறினது போல, ஆவியானவர். நாம் ஆவியானவருக்கு காத்திருக்கிறோம்; அவர் அதை செய்கிறார். 91இப்பொழுது கவனியுங்கள், பவுல் கிரேத்தாதீவில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்தான், அது கிரேத்தா தீவு என்று தான் நினைக்கிறேன் (மெலித்தா தீவு - தமிழாக்கியோன்) அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான், அப்பொழுது ஒரு பாம்பு, ஒருக்கால் அது 'மம்பா' என்னும் விஷப் பாம்பாக இருக்கக் கூடும். அது மரணக்கடி; அவன் உடனே கீழே விழுந்து மரித்திருக்க வேண்டும். மம்பாவைத் தவிர உடனே கொல்லக் கூடிய வேறெந்த பாம்பும் கிடையாது. எனவே அவன் இந்த மம்பாவை கையிலெடுத்தான் என்று நாம் வைத்துக் கொள்வோம். அது மரணத்தை விளைவிக்கும் கடி; அதன் பிறகு உங்களால் ஒரு சில மூச்சுகளே விடக் கூடும். மம்பா உங்களைக் கடிக்குமானால்...'அல்லது நாகப் பாம்பு, கறுப்பு நாகப் பாம்பு உங்களைக் கடிக்குமானால், அதற்கு ஊசி போட்டாலும், நீங்கள் உயிர் வாழ்வதற்கு ஐம்பது சதவிகிதம் வாய்ப்பே இருக்கும். மஞ்சள் நாகப் பாம்பு கடித்தால், நீங்கள் - இறந்து போக 80% வாய்ப்பும், உயிரோடிருக்க 20% வாய்ப்பும் இருக்கும். ஆனால் மகிபா கடித்தால், உயிரோடிருக்க எந்த சத விகித வாய்ப்பும் உங்களுக்கு கிடையாது. நீங்கள் இறந்து விடுவீர்கள், அவ்வளவுதான், ஏனெனில் அதன் பிறகு உங்களால் ஒரு சில மூச்சுகளே விட முடியும், அது உங்கள் நரம்புகளையும், இரத்தக் குழாய்களையும், மற்றெல்லாவற்றையும் இயங்காமல் செய்து விடுகிறது. நீங்கள் இறந்து விடுவீர்கள். பாருங்கள்? 92இந்த மம்பா பவுலைக் கையில் கவ்வின போது, அவர்கள் “இந்த மனிதன் துன்மார்க்கன், இவன் ஒருக்கால் கொலைக்காரனாயிருக்கக் கூடும். இவன் கடலில் உயிர் தப்பி வந்த போதிலும், இவனால் மரணத்திலிருந்து தப்ப முடியவில்லை. இவன் கொலைகாரனாதலால், தேவன் இவனைப் பழிவாங்குகிறார்” என்றனர். பவுல் நோக்கினான், இந்த பாம்பு அவனுடைய கையில் தொங்கிக் கொண்டிருந்து, அவன் அதை உதறி விட்டான். அவன் பயந்து போய், “ஓ, கர்த்தாவே, எனக்குதவி செய்யும்” என்று சொல்லவில்லை. இல்லை! அவன் அதை உற்று நோக்கி, அதை தீயில் உதறி விட்டு, ஒன்றுமே நடக்காதது போல் விறகுகளைத் தொடர்ந்து பொறுக்கிக் கொண்டிருந்தான். அவர்கள், “இவன் இன்னும் ஒரு நிமிடத்தில் இறந்து விடுவான். ஏனெனில் அந்த பாம்பு கடிக்குமானால், நீங்கள் இறந்து விடுவீர்கள்” என்றனர். நேரம் சிறிது கிடந்தது, பவுலுக்கு வீக்கம் எதுவும் ஏற்படவில்லை, அவன் மரிக்கவில்லை, அவனை அது பாதிக்கவேயில்லை. அவர்கள் உடனே தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு, “இவன் வானத்திலிருந்து மனித ரூபத்தில் இறங்கி வந்த தேவன்” என்றனர். அவன், “அந்த பாம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்லவில்லை. அந்த பாம்பு அவனை எதேச்சையாக கடித்தது. அவன் தேவனை பரீட்சை பார்க்கவில்லை, ஆனால் பாம்புக் கடியை மேற்கொள்ள அவனுக்கு. தேவனிடம் விசுவாசம் இருந்தது. நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? 93எனவே பாம்புகளைக் கையாளுகிறவர்கள் மத்தியில் இருக்கிற நீங்கள் யாராயிருந்தாலும், நான்... இப்பொழுது, அவர்கள் பாம்புகளைக் கையாள விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது. நான் அந்த விதத்தில் இதை காணவில்லை. இப்பொழுது, நீங்கள், “நல்லது, அந்த ஜனங்களுக்கு விசுவாசம் உள்ளது எனலாம். அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்று நான் சொல்லவில்லை, அவர்கள் அக்கினியினால் தங்களை எரித்துக் கொள்கின்றனர், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றனர், ஆனால் பாருங்கள். அது அப்பொழுதும் தேவனை நிரூபிப்பதில்லை. ' இந்தியர்கள் நாற்பது கெஜம் நீளம் “மூன்று அடி அகலமுள்ள குழியில், இலைகளைப் போட்டு, அது வெண்தழல் ஆகும் வரைக்கும் காற்று வீசி (விசேஷித்த மனிதர் அல்ல, குடியானவர்கள்), தங்கள் காலணிகளைக் கழற்றி (பூசாரிகள் அவர்கள் மேல் வெள்ளாட்டின் இரத்தம் தெளித்து அவர்களை ஆசீர்வதிக்க), அவர்கள் மீன்பிடிக்கும் தூண்டில் முள்களை எடுத்து வாயில் குத்திக்கொண்டு, அழகாக வர்ணமிடப்பட்ட குடங்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு இவ்வளவு நீளமுள்ள பெரிய மீன் தூண்டில் முள்கள் தங்கள் சதைகளில் குத்தப்பட்டு (அது உள்ளேயிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்), அப்படி நின்று கொண்டு, அந்த தீயின் வழியாக நடந்து சென்று, (அது வெண் தழல், சிகப்பையும் கடந்த வெண்தழல்) அந்த தீயின் வழியாக நடந்து சென்று, திரும்பி, மறுபடியும் அதன் வழியாக நடந்து வந்து, அவர்கள் பாதங்கள் சிறிதும் வெந்து போகாததை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் நமது தேவனை சிறிதும் கூட விசுவாசிப்பதில்லை. அவர்கள் பிசாசை வழிபடுகின்றனர். 'பாருங்கள்? எனவே இவை ஒன்றுமில்லை. அதிலிருந்து விலகியிருங்கள்... நீங்கள் உண்மையும் இனிமையும் தாழ்மையும் கொண்ட கிறிஸ்தவர்களாயிருந்து. அப்படிப்பட்ட வாழ்க்கை வாழுங்கள். அப்பொழுது தேவன் மற்றவைகளைக் கவனித்துக் கொள்வார். 94சகோ. பிரான்ஹாமே, மணவாட்டியில் செல்லாத பிரசங்கிமார்கள் எதன் பேரில் பிரசங்கிப்பார்கள்? இப்பொழுது அவர்களுடைய செய்தி, பரிசுத்த ஆவி, தண்ணீர், ஞானஸ்நானம், இரட்சிப்பு என்பதாய் உள்ளது. அவர்கள் மணவாட்டியில் செல்லாவிட்டால் எதைக் குறித்து பிரசங்கிப்பார்கள்? நல்லது, ஒருக்கால் என்ன நடக்கும் தெரியுமா? இதை நான் இப்பொழுது கூறுகிறேன். என்னால் இதை நிரூபிக்க முடியாது. அவர்கள் இப்பொழுது செய்வது போல் பிரசங்கித்துக் கொண்டே போவார்கள். ஜனங்களும் தாங்கள் இரட்சிக்கப்படுவதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்; மணவாட்டி ஏற்கனவே சென்றிருப்பாள். 95குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்துவது வார்த்தையின்படி சரியா? அதற்கு தனியாக விடையளிக்கிறேன் என்று நான் உங்களிடம் ஏற்கனவே கூறினேன். இந்த கேள்விகளை வைத்துள்ளவர்கள் என்னை தனியாக வந்து காணுங்கள். சகோ. பிரான்ஹாமே, உங்களுக்குத் தெரிந்துள்ளபடி வேதம் கூறுவது போன்ற ஒரு ஆசிரியர் எங்களுக்கிருக்கிறார்... ஆம். அதற்கு நான் பதில் கூறி விட்டேன். இப்பொழுது ஒரு நிமிடம். சகோ. பிரான்ஹாமே, ஒரு சமயம் நமது பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டு ஆம், அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். இப்பொழுது அது எடுக்கப்பட்டு விட்டால், அவர்கள் தவறு செய்தனரா என்பதைக் குறித்தது. 96நீங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை ஆமோதிக்கிறீர்களா? இல்லை, என்னால் அதை ஆமோதிக்க முடியாது. இல்லை, ஐயா! பாருங்கள்? 97வெளிப்படுத்தல் 10ல் கூறப்பட்டுள்ள தூதனும் மல்கியா 4ல் கூறப்பட்டுள்ள எலியாவும் ஒரே நபரா? இந்த கேள்விக்கு நான் பதில் கூறி விட்டேனா? நான் பதில் கூறாதது போல் தோன்றுகிறது. ஆம். அது ஓரே நபர். வெளிப்படுத்தல் 10, ஏழாம் சபை காலத்திற்கான ஏழாம் தூதன், அவரே மல்கியா 4ம். குடும்பக் கட்டுப்பாடு... இதன் பேரில் என்னிடம் அநேக கேள்விகள் உள்ளன. இவைகளை நான் பின்னால் வைத்து விட்டேன். இவைகளுக்கு பதில் கூற எனக்கு விருப்பமில்லை; உங்களை நான் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன். 98நோவா 120 ஆண்டு காலம் பிரசங்கித்து, பேழையை 120 ஆண்டுகளாக உண்டாக்கிக் கொண்டிருந்தான் என்பதை நாம் வேதத்தில் எங்கு காணலாம்? இதற்கு நான் பதில் கூறினேனா? ஒரு சந்ததி, பூமியில் மனிதனுக்கு அளிக்கப்பட்ட காலம். 120 ஆண்டுகளாகும். பேழையை உண்டாக்க நோவாவுக்கு அவ்வளவு காலம் பிடித்தது. அது அந்நாட்களில் ஒரு சந்ததியின் காலமாக கருதப்பட்டது. மனிதனுக்கு அளிக்கப்பட்ட காலம் நூற்றிருபது ஆண்டுகளாகும். அவன் பிரசங்கித்து வந்தான்... ஆதியாகமம் 6:3, அவன் அந்த சந்ததிக்கு பிரசங்கித்தான், அது 120 ஆண்டுகள். நோவா பிரசங்கித்தான். சரி, இப்பொழுது நாம் பார்ப்போம். 99மல்கியா 4ல், இந்த எலியா பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், அதன் பிறகு பிள்ளைகளின்இருதயங்களை பிதாக்களிடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரே நபரா? ஆம், ஒரே நபர் தான். சரி, ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள். இல்லை! என்னை மன்னியுங்கள். நான் வருந்துகிறேன்... பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கு நிறுத்தினார் என்பதை பார்த்தீர்களா? இல்லை! நான் நினைத்தேன் அது. பாருங்கள்? மல்கியா 3ல் என்ன எழுதப்பட்டுள்ளதென்றால், “நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்”. அது. எலியா. மல்கியா 4ல், அது மறுபடியும் “இதோ, நான் எலியாவை அனுப்புகிறேன்” என்று உரைக்கிறது. மல்கியா 3, கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக ஒரு தூதன் அனுப்பப்படுகிறான். அது யோவான். எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? மல்கியா 4ன் எலியா வரும் போது, அதன் பிறகு உடனடியாக - அவனுடைய செய்தி, மற்றவைகளுக்குப் பிறகு - கர்த்தருடைய வருகையும் பூமி புதுப்பிக்கப்படுதலும் உண்டாகும். 100நீங்கள் கவனிப்பீர்களானால், இதை தெளிவாக்க... பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியின் மூலமாய், “அவன் முதலாவதாக பிதாக்களின் இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கு திருப்புவான்” என்று உரைத்து, அதை எழுதி வைத்துள்ளார். பாருங்கள்? அது யோவான் முதலாவதாக வருதல். அவன் பிதாக்களின் இருதயங்களை, பழைய கோத்திரப்பிதாக்களின் இருதயங்களை, பிள்ளைகளின் செய்திக்கு திருப்பினான். அது அப்பொழுது ஒரு புது சந்ததி. இயேசு அந்த சந்ததியில் வந்தார். அதன் பிறகு 'மற்றும்' (and) என்னும் இணைச் சொல் இவ்விரண்டையும் இணைக்கிறது (தமிழ் வேதாகமத்தில் இச்சொல் இல்லை -தமிழாக்கியோன்). இப்பொழுது பிள்ளைகளின் இருதயங்கள் பிதாக்களிடம் திருப்பப்படுகிறது, அதாவது இன்றைய செய்தி, சபை காலத்திலுள்ள பிள்ளைகளின் இருதயங்களை தொடக்கத்தில் இருந்த மூல பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்குத் திருப்பும். எனவே இது இரு வெவ்வேறு செய்தியாளர்கள். அது ஒரு செய்தியாளனைப் போல் காணப்பட்டாலும், அது வேறு பிரிக்கிறது - யோவான் முதலில் வருவதையும், இரண்டாவதாக வேறொரு நபர் வருவதையும்.. என் கணவரும் என் இளைய மகனும் விசுவாசிப்பதில்லை ..... ஆம், அதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும், ஏனெனில் இந்த நபர் இதில் கையொப்பமிட்டிருக்கிறாள். பிறகு இதைக் குறித்து அவளிடம் பேசினது எனக்கு ஞாபகம் உள்ளது. 101நாம் கர்த்தருடைய சித்தத்தை எவ்விதம் அறிந்து கொள்வது? எங்கள் இருப்பிடத்தை நாங்கள் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லுக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமா? ஒரு நபர் கிறிஸ்தவனாயிருந்து, கறுப்பு நிற மக்களை வெறுக்க முடியுமா? அவர் கறுப்பு நிறத்தவராயிருப்பதால், நம்மைப் போல் அவர்கள் நடத்தப்படுவதை தேவன் விரும்புவதில்லையா? இதைக் குறித்து நீங்கள் கூறும் ஆலோசனை என்ன? நீங்கள் ஒருமைப்பாட்டில் அல்லது ஒதுக்கப்படுதலில், எதில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்? நான் ஒருமைப்பாட்டில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நான் நம்புவது என்னவெனில் ஒரு மனிதன்.. அவனுடைய நிறம் என்னவானாலும், அவன் யாராயிருந்தாலும் அவன் என்னைப் போல் ஒரு மனிதன். அது முற்றிலும் உண்மை . நான் நினைப்பது என்னவெனில், அவர்கள் மட்டும் கறுப்பு நிறத்தவரை தனியே விட்டு விட்டு, அந்த கம்யூனிஸ்டுகள் அங்கு சென்று அவர்களை ஊக்கப்படுத்தாமலிருந்தால்... இப்பொழுது, அவர்கள் கேட்டனர். இப்பொழுது, உண்மையான கறுப்பு நிற மக்கள்; அவர்கள் மத்தியில் உண்மையான, மறுபடியும் பிறந்த, தேவபக்தியுள்ள பரிசுத்தவான்கள் உள்ளனர். ஆம், நிச்சயமாக, என் தோல் வெள்ளை நிறமாயும், அவர்களுடைய தோல் கறுப்பு நிறமாயும் இருப்பதால், அதனால் எனக்கு எந்த வேற்றுமையும் கிடையாது. அவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் என் சகோதரன். 102ஆகையால் தான் நான் ஆப்ரிகான்ஸ் செய்தியுடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளேன்; அவர்களுக்கு ஆத்துமா இருப்பதாக அவர்கள் நம்புவது கிடையாது. அதுதான் எனக்கு அங்கு பிடிக்காமல் போயிற்று. நான், “என்னைப் போலவே அவனும் ஒரு மனிதன். எனக்குள்ளதைப் போலவே அவனுக்கும் உரிமையுண்டு. அவனுடைய தோல் எனக்கோ அல்லது தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்துள்ள எந்த ஒரு மனிதனுக்கோ யாதொரு வித்தியாசத்தையும் உண்டாக்காது” என்றேன். ஆனால் நான் சொன்னேன், “அவர்கள் அந்த கறுப்பு நிறத்தினரை தனியே விட்டிருந்தால், அவர்கள் போராட ஒருக்காலும் இந்த அளவுக்கு ஊக்கம் பெற்றிருந்திருக்க மாட்டார்கள்” என்றேன். இதை நான் இந்த பிரசங்க பீடத்திலிருந்து கூறுகிறேன்... கறுப்பு நிறத்தினர் பலர் இங்கு வருகின்றனர் (இன்றிரவு அவர்களில் ஒருவரும் இங்கில்லை என்று நினைக்கிறேன்). இந்த சபைக்கு பல கறுப்பு நிறத்தவர் வருகின்றனர். சகோதரனே, அவர்கள் மற்ற எவரையும் போலவே இங்கு வரவேற்கப்படுகின்றனர். அவர்கள் என் சகோதரனும் சகோதரியுமாவர். என் வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்துள்ள மிகச் சிறப்பான ஜனங்கள், இந்த கறுப்பு நிறத்தவரில் சிலர். அவர்களில் சிலர் துரோகிகள் என்பது உண்மையே. ஆனால் அப்படிப்பட்டவர் வெள்ளை நிறத்தினர், மஞ்சள் நிறத்தினர், பழுப்பு நிறத்தினர் ஆகியோரின் மத்தியிலும் உள்ளனர். ஆம், நிச்சயமாக, 103இப்பொழுது, கலப்பு விவாகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. வெள்ளையன் ஒருவன் கறுப்பு நிறப் பெண் ஒருத்தியை விவாகம் செய்து கொள்ளக் கூடாது என்பது என் கருத்து. அவ்விதமாகவே, கறுப்பு நிறத்து ஆண் வெள்ளைப் - பெண் ஒருத்தியையோ, அல்லது மஞ்சள் நிறத்தினர் கறுப்பு நிறத்தினரையோ விவாகம் செய்து கொள்ளக் கூடாது... நான் நம்புவது என்னவெனில், பழுப்பு, கறுப்பு, வெள்ளை நிறத்தினர் தேவனுடைய பூந்தோட்டமாக உள்ளனர், அவர்கள் ஒருவருக்கொருவர் இனச்சேர்க்கை செய்து கொள்ளக் கூடாது என்பதே. தேவன் அவர்களை அந்த விதமாகவே படைத்திருக்கிறார்; அவர்கள் அந்த விதமாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அழகான கறுப்பு நிறப் பெண், மிகவும் அறிவுள்ளவள், காண்பதற்கு நன்றாயிருக்கும் இளம் பெண், மற்றெந்த பெண்ணைப் போலவே அழகுள்ளவள். வெள்ளை நிறப் பையனை விவாகம் 'செய்து கொண்டிருப்பதைக் காண்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது... அவள் வெள்ளையனை மணந்து 'ம்யூலாடோ பிள்ளைகளை ஏன் பெற வேண்டும்? (கறுப்பு நிறத்தினருக்கும் வெள்ளை நிறத்தினருக்கும் இடையே பிறக்கும் பிள்ளைகள் 'ம்யூலாடோ' என்று அழைக்கப்படுகின்றனர் - தமிழாக்கியோன்). ஒரு புத்திசாலியான கறுப்பு நிறப்பெண் அவ்விதமான காரியத்தில் ஈடுபட ஏன் விரும்ப வேண்டும்? ஏனெனில் ஏதோ ஒன்று.... அந்த கம்யூனிஸ்டுகள்... ஒரு அருமையான கறுப்பு நிறத்தினன் ஒரு வெள்ளைப் பெண்ணை மணந்து 'ம்யூலாடோ' பிள்ளைகளைப் பெற ஏன் விரும்ப வேண்டும்? அதில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் இருக்கும் விதமாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நாங்கள் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்கள். தேவன் என்னை இந்த விதமாக படைத்திருக்கிறார். என் நிறத்தை அவர் கறுப்பாக படைத்திருந்தால், நான் தேவனுக்கென்று கறுப்பு நிறத்தவனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை மஞ்சள் நிறத்தவனாக படைத்திருந்தால், நான் கிறிஸ்துவுக்கென்று மஞ்சள் நிறத்தவனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை வெள்ளையனாக படைத்திருந்தால், நான் கிறிஸ்துவுக்கென்று வெள்ளையனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை பழுப்பு அல்லது சிகப்பு நிறத்தவனாக, சிகப்பு இந்தியனாக, அல்லது வேறெந்த நிறத்த வனாக படைத்திருந்தால், நான் அந்த நிறத்திலேயே நிலைத்திருப்பேன். அது நான். என் சிருஷ்டிகர் என்னை உண்டாக்கின விதமாகவே நான் இருக்க பிரியப்படுவேன். 104அந்த நாளில் ஷ்ரீவ்போர்ட்டில் அந்த எழுச்சி உண்டான. போது, அந்த கறுப்பு நிறத்து இளைஞர் அனைவரும் கம்யூனிஸ்டுகளால் ஊக்குவிக்கப்பட்டு அதில் பங்கு கொண்டனர். இந்த பிரசங்க பீடத்தில் இதை நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன். மார்டின் லூத்தர் கிங் அந்த கறுப்பு நிறத்தினருக்கு மிகப் பெரிய கடனாளியாக இருக்கப் போகிறார். அது உண்மை. அவர் பல்லாயிரக்கணக்கான கறுப்பு நிறத்தினவரை, கம்யூனிஸ்ட் கொள்கையைக் கொண்டு ஊக்குவித்து, கொலைக்கு நடத்திச் செல்லப் போகிறார் (அது உண்மை). நான் கூறினதை நிரூபிக்கட்டும். இதை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன். தற்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். அவர்கள் ஒருமைப்பாட்டுக்காக சண்டையிடுவதாக கூறிக்கொண்டனர், ஆனால் சட்டம் அவர்களுக்கு ஒருமைப்பாட்டை அளித்து விட்ட பிறகும்... ஒருமைப்பாட்டை விரும்பாதவர்களாகிய நீங்கள், உங்களைக் குறித்து வெட்கப்பட. வேண்டும். நமது நாடு ஒருமைப்பாட்டை அனுமதித்து விட்டது. பெரிய தலைவர் என்ன சொல்லுகிறாரோ, அதையே நாம் செய்ய வேண்டும். அது முற்றிலும் உண்மை. இப்பொழுது, நீங்கள் கூறலாம். சில இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது, பொருட்களை வாங்கக் கூடாது, பேருந்தில் பின்னால் உட்கார வேண்டும் போன்றவை. இல்லை ஐயா! அவர்கள் நமக்கு சமமானவர்கள் என்று நாட்டின் சட்டம் கூறுகிறது . எனவே நாம் அவர்களுக்கு சமமானவர்கள், அந்த விதமாகவே நாம் நடந்து கொள்வோம். அந்த விதமாகவே நாம் இருப்போம். உண்மையில் மறுபடியும் பிறந்தவர்கள் அனைவரும் அந்த கருத்தையே கொண்டுள்ளனர். இப்பொழுது, அவர்களுடைய இருதயத்தில் அதுதான் உள்ளது என்று நம்புகிறேன். 105ஆப்பிரிக்காவிலுள்ள அந்த எளிய ஜனங்கள் நடத்தப்படும் விதத்தைக் குறித்து எனக்கு அவர்கள் மேல் உள்ள அனுதாபத்தைப் போல் வேறெந்த ஜனங்கள் மீதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் தென்பாகத்தை சேர்ந்தவன். நான் அந்த நதிக்கு அப்பால் பிறந்தவன், ஆனால் நான் ஆபிரகாம்லிங்கனைப் போன்றவன். மனிதன் சமமாகப் பிறந்திருக்கிறான் என்னும் கருத்தை நான் கொண்டிருப்பதால், இங்கு வருகிறேன். அது உண்மை. ஜனங்களைப் பிரிப்பது போன்றவைகளில் எனக்கு நம்பிக்கையில்லை, முக்கியமாக அந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்றவைகளைப் பெற்றிருக்கையில். ஆனால் பாருங்கள், உண்மையாக மறுபடியும் பிறந்த கிறிஸ்தவ கறுப்பு இனத்தினர் இந்த கலகம் அனைத்தும் விளைவிப்பதில்லை. கறுப்பு நிறத்தவரை அதற்காக நீங்கள் குற்றப்படுத்த நினைத்தால், நம்முடைய சில வெள்ளை நிற இளைஞரின் துரோகத்தைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்? பாருங்கள்? இருவரும் ஓரே போன்றே உள்ளனர். நமது வெள்ளை நிற இளைஞர்கள் .அவர்களை விட இரு மடங்கு தொல்லை விளைவிக்கின்றனர். அது முற்றிலும் உண்மை. அது எங்கு நடக்கிறது? நமது கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும். நம்முடைய அதிகம் கல்வி கற்ற ஜனங்களில் சிலர் இவைகளுக்கு காரணமாயுள்ளனர். பாருங்கள்? 106நல்லது, அது என்ன? இப்பொழுது, அது கம்யூனிஸம் தான், அந்த கறுப்பு நிறத்தவர் அல்ல என்று உங்களுக்கு காண்பிக்க, கம்யூனிஸம் அந்த விதத்தில் தான் எப்பொழுதுமே கைப்பற்றியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இதையே செய்து வருகின்றனர். அவ்விதம் தான் அவர்கள் செய்கின்றனர், நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்படி செய்து, புரட்சியை உண்டாக்கி, துப்பாக்கி குண்டு ஒன்றையும் வெடிக்காமலேயே கைப்பற்றி விடுகின்றனர். அவர்கள் இந்த நாட்டை தகர்த்து விட விரும்பவில்லை; அவர்களுக்கு அது வேண்டும். அவர்கள் மெல்ல ஊர்ந்து உள்ளே நுழைந்து விடுகின்றனர். பழைய புரட்சி என்ன விளைவித்தது என்பதை அவர்கள் அறிந்தவர்களாய், அதை ஆதாரமாகக் கொண்டு, வேறொரு புரட்சியை உண்டாக்கி விடலாமென்று அவர்கள் எண்ணுகின்றனர். நான் கூறும் விஷயம் தெளிவானது என்பதை நிரூபிக்க, அவர்கள் ஒருமைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பிறகும் (அவர்கள் அதை இப்பொழுது சட்டப்பூர்வமாக பெற்றுள்ளனர்), அவர்கள் முன்பை விட அதிகம் தொல்லை விளைவிக்கின்றனர். பாருங்கள்? அது கம்யூனிஸம் என்றும், தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த அந்த விலையேறப் பெற்ற ஆத்துமாக்கள் அல்ல என்பதையும் அது காண்பிக்கிறது. ' 107நாம் இப்பொழுதும் அனல் மூண்டவர்களாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமா, அல்லது அதற்கான காலம் முடிந்து விட்டதா? இல்லை, உங்களால் முடிந்த வரையில் நீங்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே செல்லுங்கள். சகோதரனே, அதில் நிலைத்திருங்கள்; நான் உங்கள் சார்பில் இருக்கிறேன். 108சகோ. பிரான்ஹாமே, முட்டை சாப்பிடக் கூடாது, பள்ளத்தாக்கில் வசிக்காதீர்கள் என்று நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, அந்த தீர்க்கதரிசனம் உங்களுக்கு மட்டுமா, அல்லது சபையோருக்கும் கூடவா? பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கடைசி நாட்களில் மிருகங்கள், மாடுகள் இவைகளின் மத்தியில் வியாதிகள் உண்டாகுமென்றும், முட்டைகளுக்கும் அது நேரிடுமென்றும் நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். சாப்பிடுவதற்கு தகுதியில்லாத முட்டைகள் இருக்குமென்றும், பள்ளத்தாக்கில் வாழும் ஜனங்களுக்கு... இதை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தேன், அதாவது பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களை நான் அங்கிருந்து வெளியேறச் சொல்வேன் என்றும் அவர்கள்... புசிக்கக் கூடாதென்றும், வெவ்வேறு இறைச்சிகள் இன்னும் மற்றவை விஷமாயிருக்ககுமென்றும், ஜனங்கள் பள்ளத்தாக்குகளில் வாழ்வது ஆபத்தாயிருக்குமென்றும் (அப்படித்தான் அதை நான் கண்டேன் என்று நான் நினைக்கிறேன்). அணு ஆயுத வெடிப்பையடுத்து கதிரியகத்துகள்கள் விழுவதற்கு முன்பு அல்லது அவர்கள் அதைக் குறித்து எதையும் அறிவதற்கு முன்பே இந்த தீர்க்கதரிசனம் உண்டானது. அது பரிசுத்த ஆவியானவர் எனக்களித்த எச்சரிக்கையாகும். இப்பொழுதும் கூட நமது மாடுகளை நீங்கள் சந்தையில் காண்பீர்களானால், DDT, மருந்தை தெளிப்பதனால், அது பசு மாடுகளில் ஏதோ ஒன்றைத் தொடங்கியுள்ளது. 109மறுபடியும் கவனியுங்கள், அவர்கள் கலப்பு இனங்களை உண்டாக்குவதும், அப்படிப்பட்ட செயல்களும் மானிடவர்க்கத்தின் நாசத்தை விளைவிக்கிறதாயுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் இருபது அல்லது முப்பது சதவிகிதம் பேர் அங்கு சேர்க்கப்படுவதற்கு மருத்துவரே காரணம் என்று “ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகை தெரிவிக்கிறது. எப்படியெனில் இதை உங்களிலிருந்து போக்க அவர்கள் கொடுக்கும் மருந்து வேறொன்றை உங்களில் தொடங்கி விடுகிறது. நீங்கள் முட்டைகளை கவனித்தீர்களா? சென்ற ஆண்டில் லூயிவில்லிலும் ஜெபர்ஸன்வில்லிலும் நூற்றுக்கணக்கான பேர்கள் பள்ளத்தாக்கில் உள்ள கோழிகள் இட்ட முட்டைகளை சாப்பிட்டதன் விளைவாக வாந்தியெடுக்கத் தொடங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் ... பள்ளத்தாக்கில் இடப்பட்ட முட்டைகள் கதிரியக்கத்துகள்களை உறிஞ்சிக் கொண்டு விட்டன. பயிர்கள், இன்னும் மற்றெல்லாமே இவைகளால் அசுசிப்பட்டு விஷமாகி விட்டன. 110என் சகோதரனே, இதை நீங்கள் இங்கு தான் பெற்றுக் கொள்கிறீர்கள். இதை நான் என் இருதயப் பூர்வமாக விசுவாசிக்கிறேன். அதாவது, எந்த ஒரு ஆகாரமும் ஸ்தோத்திரமில்லாமல் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாதென்றும், ஏனெனில் அது தேவனுடைய வசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்த மாக்கப்படுகிறதென்றும் வேதம் உரைக்கிறது. பாருங்கள்? நீங்கள், “கர்த்தராகிய இயேசுவே, இந்த ஆகாரத்தை நீர் எனக்காக ஆயத்தம் செய்திருக்கிறீர். நான் விசுவாசத்துடன், எங்கள் சரீரங்களுக்கு பெலனாக அமைய, இதை பரிசுத்தம் செய்கிறேன்” என்று ஜெபித்து விட்டு அதை சாப்பிடுங்கள். ஏனெனில் நாம் எல்லாவற்றையும் விசுவாசத்தினாலேயே செய்கிறோம். அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, குடிகார கணவனை விவாகரத்து செய்ய ஆதாரங்கள்? எனக்கு விவாகரத்தைக் குறித்து பேசுவதற்கு பிரியமில்லை. அதை குறித்து நான் சிறிது கழிந்து பேசுகிறேன் 111சகோ. பிரான்ஹாமே, சகோதரன் (ஒரு நிமிடம் இது இங்குள்ள போதகர்களில் ஒருவருடன் சம்பந்தப்பட்டது. இதை நான் முதலில் வாசிக்கட்டும் (சகோ. பிரான்ஹாம் மனதுக்குள் கேள்வியைப் படிக்கிறார் - ஆசி). ஒரு நிமிடம். நல்லது. இதை எப்படியும் படிக்கப் போகிறேன்) - சகோ. பிரான்ஹாமே, சகோ.நெவில் தீர்க்கதரிசனமாக, கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேன் என்றுரைத்தார். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேன் என்று அவர் என்னிடம் உறுதியாக கூறின போதிலும், நான் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை. நான் தொடர்ந்து... ஆம். நிச்சயமாக, அதை செய்யுங்கள். தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருங்கள்.கவனியுங்கள், நான் சகோ.வுட்டின் வீட்டில் நேற்று இருந்த போது, சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. குடிகாரனாயிருந்த அவருடைய சகோதரரோ, அல்லது வேறு யாரோ, அதிலிருந்து விடுபடுவதற்கென்று ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஊசிகள் போட்டுக் கொண்டதாகவும், சகோ. நெவில் அந்நிய பாஷை பேசி - அல்லது வேறெந்த விதத்திலோ - இந்த நபரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்து, இன்னும் சில நாட்களுக்குள் அந்த மனிதனுக்கு நல்லது ஏற்படுமென்று கூறினாராம். சக்கர நாற்காலியிலுள்ள அந்த மனிதன் தொலைபேசியில் கூப்பிட்டு, இந்த மனிதன் மருத்துவமனையில்லிருந்து வெளிவந்து அறுபத்தெட்டு நாட்கள் ஆகிவிட்டன என்றும், குடிப்பதை தடுக்க அவருக்கு ஊசி எதுவும் போடாமலேயே அல்லது அவர் மருந்து ஒன்றும் சாப்பிடாமலேயே அவர் ஒரு முறையாவது குடிக்கவில்லை என்றும் கூறினார். சகோ. நெவில் தீர்க்கதரிசனமாக உரைத்தது நிறைவேறினது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நமது சகோதரன் தேவனுடைய மனிதன் என்று நாம் விசுவாசிக்கிறோம். அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, இவர்கள்... 112இப்பொழுது பொறுங்கள், இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்கிறேன். இதை தான் நான் ஜனங்களுக்கு கூற முயல்கிறேன். நான் விசுவாசிக்கும் அதே செய்தியையே சகோ. நெவில் விசுவாசிக்கிறார். சகோ. காப்ஸ், சகோ. பீலர், சகோ. ரட்டல், இங்குள்ள இந்த சகோதரர் அனைவருமே நான் விசுவாசிக்கும் அதே செய்தியையே விசுவாசிக்கின்றனர்; அவர்கள் என்னைப் போலவே அதை பிரசங்கிக்கின்றனர். நீங்கள் உண்மையில் வெளியேற விரும்பினால், நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று அல்லது வேறெதாவது காரணத்துக்காக வெளியே செல்ல விரும்பி, வார்த்தையைக் கேட்பதற்கு வர விரும்பினால், இங்கு வாருங்கள். இந்த கூடாரத்துக்கு வாருங்கள், இங்கு தான் அதை கேட்கிறீர்கள். இவர்கள் தேவபக்தியுள்ள மனிதர். இவர்கள் நீங்களும் நானும் பெற்றுள்ள அதே பரிசுத்த ஆவியையே பெற்று, அதே வேதத்திலிருந்து அதே செய்தியை அளிக்கின்றனர்.அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, அந்நிய பாஷை பேசுகிறவர்கள் மீதியானவர்களா... ஆம், அதற்கு நான் பதில் கூறி விட்டேன். உ, ஊ. நான் பதில் கூறி விட்டேன். ஒரு ஸ்திரீ அந்நிய பாஷை பேசுதல். 113சகோ. பிரான்ஹாமே, மனைவி தன் புருஷனுக்கு கீழ்படிந்திருக்க வேண்டுமென்று வேதம் உரைக்கிறது. நான் ஒரு கிறிஸ்தவள், என் கணவர் ஒரு பாவி. அவர் தன்னாலான வரையில், எல்லா விதத்திலும் என்னை துன்புறுத்தி, நான் சபைக்கு செல்லக் கூடாதென்றும் வேதத்தைப் படிக்கக் கூடாதென்றும் கூறுகிறார். அவர் வார்த்தையை மறுதலிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? நீ என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது, கவனி, நீ கணவனுக்கு கீழ்படிய வேண்டும்; அப்படித்தான் வார்த்தை உரைக்கிறது. அவர் உன்னிடம் வேதத்தைப் படிக்கக் கூடாதென்றும், சபைக்குச் செல்லக் கூடாதென்றும், அப்படி ஏதாவதொன்றைக் கூறி உனக்கு அனுமதியளிக்க மறுத்தால், அதற்கு நீ கீழ்படிய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில், “ஒருவன் தன் தகப்பனையாவது, தாயையாவது, புருஷனையாவது, மனைவியையாவது வெறுத்து விட்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல”. அது சரியா? 114இல்லை, வேண்டாம்... மனிதரே, நீங்கள் செய்யக் கூடாது. ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை ஆளுகை செய்கிறவன் என்கிற காரணத்தால், அவள் மேல் தன் அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடாது. சகோதரனே, தேவன் உங்கள் மேல் ஆளுகை செய்கிறவராயிருக்கிறார். பாருங்கள்? உங்கள் மனைவி ஏதாவதொரு தவறைச் செய்தால், அவளிடம் கூறி அதை திருத்துவதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. அவள் உங்களுக்கு செவி கொடுக்க வேண்டியவளாயிருக்கிறாள். ஆனால் அவளை அடிக்கவோ, அல்லது இழுத்துப் போட்டு உதைக்கவோ, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது. பாருங்கள், தேவன் மனிதனுக்கு ஒரு துணைவியை உண்டாக்கினாரேயன்றி, வாசலில் வைத்திருக்கும் ஒரு மிதியடியை அல்ல. ஞாபகம் கொள்ளுங்கள், அவள் உங்கள் இருதயத்துக்கு இனியவளாயிருந்தாள்; அவள் எப்பொழுதுமே அப்படியிருக்க வேண்டும். 115கடைசி வார்த்தைக்காக தேவனுடைய ஜனங்கள் எப்பொழுது எங்கே கூடுவார்கள்? கிறிஸ்துவில்.. ஆம்! கடைசி நாளில், அவர்கள் கிறிஸ்துவில் கூடுவார்கள். அதை மறந்து விடாதீர்கள். நமக்கு கூடுவதற்கு ஓரிடம் உண்டு; அதை நாம் பெற்றிருக்கிறோம் என்பது உண்மையே, 116நாங்கள் அழைக்கப்படுகிறோம்... (இப்பொழுது, அன்றொரு நாள் நாம் விவரித்ததற்கான கேள்வி). நாங்கள் ஜூனியர் ஜாக்சன் சபைக்குச் செல்வதனால் அசுத்தமான பறவைகள் என்று அழைக்கப்படுகிறோம். சில நேரங்களில் நாங்கள்... அவர் இங்குள்ள இந்த சபையில் பின்பற்றப்படும் புது சபை விதிகளுடன் இணங்குவதில்லை. சில நேரங்களில் அங்கு நாங்கள் செல்வதனால், தேவனுடைய பரிபூரண சித்தத்தினின்று விலகியிருக்கிறோமா? இல்லை, ஐயா! ஜூனியர் ஜாக்சன் தேவனுடைய மனிதன் என்று நான் நம்புகிறேன். அதை நான் ஏற்கனவே விவரித்து விட்டேன். நான் நம்புகிறேன்... இப்பொழுது, சபை ஒழுங்கைப் பொறுத்த விஷயத்தில் நாங்கள் இணங்குவதில்லை. இப்பொழுது, நான் நம்புகிறேன். ஜூனியர் ஜாக்சனுக்கு... ஏன் அவர்... எத்தனை பேருக்கு ஜூனியர் ஜாக்சனைத் தெரியும். அவர் தேவனுடைய மனிதன் என்று நாம் அறிந்திருக்கிறோம். என்னைப் போலவே அவர் இந்த செய்தியை விசுவாசிக்கிறார், அவர் இந்த காரியங்களை விசுவாசிக்கிறார். வெளிப்படையாகக் கூறினால், நானும் ஜூனியரும் நண்பர்கள், இங்குள்ள மற்றவர்களைப் போலவே, ஜே.டி. சகோ. ரட்டல், சகோ. ஜாக்சன், சகோ. பீலர், இங்குள்ள சகோதரர் அனைவரும்; நாங்கள் அனைவரும் ஒன்றாயிருக்கிறோம். ஒருக்கால் நாங்கள் ஒரே விதமாக காணாமலிருக்கக் கூடும் (பாருங்கள்?), ஆனால் இதே செய்தியை நாங்கள் விசுவாசிக்கிறோம் (பாருங்கள்?), நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். அங்கு சகோ. ஹ்யூம் கூட இருக்கிறார், ஒரு மிஷனரி, ஓ, வெவ்வேறு நபர்கள். சில நேரங்களில் அவாகளுடைய பெயர்கள் எனக்கு ஞாபகமிருப்பதில்லை. ஆனால், சகோதரனே, உங்களை நான் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். 117நர்ஸ் வேலை செய்வதிலிருந்து விலக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதை நான் கேட்டேன். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது நர்ஸ் வேலை செய்வதைக் குறித்து அறிய விரும்பிய ஒரு அருமையான இனிய சகோதரி: நான் சிறுவனாயிருந்த போது, நான் பிரசங்கியாவதற்கு பிரியப்படுகிறேன் என்று எல்லோரிடமும் கூறி வந்தேன். (இதற்கு நான் பதில் கூறினேன். இதற்கும் நான் பதில் கூறி விட்டேன்) இன்றைக்கு அவர் என்ன செய்ய வேண்டும்? நல்லது. இது கிறிஸ்துவுக்கு ஊழியக்காரனாயுள்ள ஒருவரிடமிருந்து வந்த கடிதம்... இது எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட கடிதம், சகோ. பாட்டைலர், இந்த சபையிலுள்ள சகோதரரில் ஒருவர். கேள்விகள் அவ்வளவுதான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜனங்களாகிய உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனக்கு... (ஒலிநாடாவில் ஒரு பாகம் காணப்படவில்லை - ஆசி). ... ஒன்றாயிருக்கிறோம். நமது செளகரியங்களும் நமது விசாரங்களும் 118195, சகோதரி வில்ஸன் இன்னும் கட்டிடத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர்களை இங்கு நான் கண்டேன். சகோதரி வில்ஸன், சிறிது நேரத்துக்கு முன்பு நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நாம் மூலைக்கல்லை நாட்டின போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு விவாகமாவதற்கு முன்பு நானும் ஹோப்பும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்தேன் எனக்கு அது தெரியவே தெரியாது... நான் குத்து சண்டை போட்டு விட்டு அந்த போட்டியில் வீரனாக வெற்றி பெற்று வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கண்டது என் நினைவுக்கு வருகிறது. நான் இந்தியானாவில் வேட்டை அதிகாரியாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அன்றொரு இரவு பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு சபையை எண்ணிப் பார்க்கிறேன். அன்றைக்கு இருந்த குழுவில், ஒருவராவது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை என்று எண்ணுகிறேன் நாம் தொடக்கத்தில் மூலைக்கல்லை நாட்டின நாள் முதற்கொண்டு இங்கு இருந்து வந்திருக்கிறவர் எத்தனை பேர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். என் சகோதரன் மற்றும் சகோதரி வில்ஸனே, உங்கள் இருவரையும் ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் எவ்விதம் தொடங்கினோம் என்பது ஞாபகமுள்ளதா? மண்ணினால் கட்டப்பட்ட பழைய தரை ஞாபகமுள்ளதா? ஆடுகின்ற பழைய ஜன்னல்களும். நாம் தொடங்கும் போது எண்பது சென்டுகள் மட்டுமே இருந்தன, குவியலாக களைகள். இந்த கூடாரத்தை நாம் கட்டின போது, நமக்கு பின்னால் இருந்த இடம் ஒரே காடாக இருந்தது. 119பொருத்தனை பண்ணிக் கொண்டு, அணி வகுத்து பீடத்தைச் சுற்றி வந்த நம் அனைவரையும் பாருங்கள். அவர்கள் வந்து, ஒருவரிலிருந்து மற்றவர் பிரிந்து செல்வதை நாம் கண்டோம். இந்த செய்தியில் நிலைத்திருந்தவர்கள் எப்படி பிரிந்து சென்றனர் என்பதைக் கண்டீர்களா? செய்தியை விட்டு விலகினவர்கள், அவர்கள் எவ்விதம் பிரிந்து சென்றனர் என்பதை எண்ணிப் பாருங்கள். அதை எண்ணிப் பாருங்கள். இன்றிரவு இங்கு 'நாம் உள்ளோம். நாம் முன்பு நடத்தின் கூட்டங்களில் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் மூன்று மடங்கு ஜனங்கள் குழுமியிருந்தனர். அதை எண்ணிப் பாருங்கள். அப்பொழுது பள்ளிக்கூடப் பேருந்துகள் அது நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் இடமில்லாமல் இந்த பகுதியில் எல்லா விடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும். கூடாரங்கள் ஜனங்களால் நிரம்பி வழிந்து, அங்கு ஒன்று கூடின ஜனங்களை உட்காரவைப்பதற்கு எங்கும் இடமில்லாமல் போனது. அப்பொழுது நான் ஒரு இளம் பிரசங்கி. பாருங்கள்? நமக்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களில், இன்றிரவு நாம் மூன்று பேர் மட்டுமே இங்கு இருக்கிறோம். 120சகோதரி. வில்ஸன், காசநோயினால் பாதிக்கப்பட்டு, இரத்தம் கக்கி, தலையணை உறைகளும் படுக்கை விரிப்புகளும் இரத்தம் தோய்ந்து மூலையில் வைக்கப்பட்டு, மரணத் தருவாயில் இருந்த நிலையில் நான் படுக்கை அருகில் அழைத்துச் செல்லப்பட்டது என் நினைவுக்கு வருகிறது. பரிசுத்த ஆவியானவர் அந்த இரத்தப் போக்கை நிறுத்தினது எனக்கு ஞாபகமுள்ளது. சில நாட்கள் கழித்து நான் அவர்களுக்கு பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்த ஒஹையோ நதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, மேல் பாகம் திறந்திருந்த என் சிறு காரின் பின் இருக்கையில் உட்கார வைத்து, ஊட்டிகாவிலிருந்து அவர்களை ஓட்டிச் சென்றேன். அது சரி தானே? அங்கிருந்து... (சகோதரி வில்ஸன் சகோ. பிரான்ஹாமுடன் உரையாடுகின்றார்கள் - ஆசி). ஆம்! என் மனைவி சகோதரி ஹோப்; அங்குள்ள சகோதரி, அந்த சிறு காரின் முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். என் மனைவியும் சகோதரி ஸ்நெல்லிங்கும் பின்னால் அமர்ந்திருந்தனர். அந்த புகைப்படம் என்னிடம் உள்ளது, சகோதரி ஸ்நெல்லிங், என் தாய், மற்றவர்கள், திருமதி வீபர் - என் மாமியார், நாங்கள் எல்லோரும் அங்கிருந்தோம். மேடா ஒரு சிறு பெண்ணாக அங்கு நின்று கொண்டிருக்கிறாள், இப்பொழுது அவள் தலை நரைத்த ஸ்திரீ (ஒரு சகோதரிசகோ. பிரான்ஹாமுடன் உரையாடுகிறாள் - ஆசி). 121முதலில், நாங்கள் சபைக்கு பணம் சேகரிப்பதற்காக வசனச் சீட்டு நாள் (tag day) ஒன்றை நடத்தினது என் நினைவுக்கு வருகிறது. ஹோப் அந்த மூலையில் நின்று கொண்டிருந்தது எனக்கு ஞாபகமுள்ளது. அப்பொழுது அவள் ஒரு இளம் பெண், ஏறக்குறைய பதினாறு வயது. அவள் வசனம் எழுதப்பட்ட சீட்டை இப்படி கையில் பிடித்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தாள்... அவர்களுக்கு வசனச் சீட்டைக் கொடுப்பாள்... அவர் உண்டியில் காசு போடுவார்.தெருவின் வழியாக ஒரு குடிகாரன் வந்தான். அவன், “மிஸ், என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன விற்கிறீர்கள்?” என்று கேட்டான். அவள், “ஒன்றுமில்லை, இந்த வசனச் சீட்டை உங்களுக்குத் தருகிறேன். இது சபைக்காக சேகரிக்கப்படும் நன்கொடை. உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் நன்கொடையாக ஏதாவது காசை இந்த உண்டியில் போடலாம். நகரத்தில் ஒரு கூடாரத்தைக் கட்டுவதற்காக நாங்கள் போதிய பணம் சேகரிக்க முயன்று கொண்டிருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானால் காசு போடலாம்” என்றாள். அவன், “என்னிடம் காசு இல்லை” என்றான். அவள், “பரவாயில்லை, இந்த வசனச் சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கிக் கொண்டு அதை பார்த்தான். ஒரு பக்கத்தில் “உன் நித்தியத்தை எங்கே கழிப்பாய்?” என்று எழுதப்பட்டிருந்தது. மறு பக்கத்தில் ஒரு கேள்விக்குறி. “நித்தியத்தை எங்கே கழிப்பாய்?” என்பதற்கான ஒரு கேள்விக்குறி. அவன் தள்ளாடிக் கொண்டு திரும்பி வந்து, “மிஸ், நீங்கள் முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறீர்கள்” என்றான். அவள், “இதை முடிவு செய்தாக வேண்டும்” என்றாள். அது உண்மை. அவள் இன்றிரவு திரைக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் கூறின கடைசி சொற்கள் எனக்கு ஞாபகமுள்ளது. நான் அவளிடம் கூறினதும் எனக்கு ஞாபகமுள்ளது. அதை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். ஆம், ஐயா! 122எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. எங்களுக்கு சபை, கட்டிடம் ஒன்று இருப்பதற்கு முன்பே நாங்கள் அங்கு நின்று கொண்டு, கைகளைக் கோர்த்து, இந்தப் பாடலை பாடுவது வழக்கம். அதை என்னால் கேட்க முடிகிறது. மிர்டி அப்பொழுது சிறு பெண். வீராய் ஒரு சிறுவனாக அங்கு நின்று கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது. நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும். 202, இதை நாம் பாடுகையில், அவருடைய வருகைக்காக அநேகர் அப்பால் காத்திருக்கின்றனர். நாம் பிரிந்து செல்லும், போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது (நீங்கள் அந்த விதமாக ஒருவரையொருவர் நேசிக்கிறீர்களா?) ஆனால் நாம் அப்பொழுதும் இருதயத்தில் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 123சகோ. ஃப்ரீமான், நீங்கள் அதற்கு அருகாமையில் இருக்கிறீர்கள், இல்லையா? நான் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன், நாங்கள் சகோ.ராய் வீட்டிற்கு சென்றிருந்த போது, உங்களுக்கு அறிமுகமானேன். அட்காக் குடும்பத்தினர் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? கென்னத் என்பவரின் பெயர் ஞாபகமுள்ளது. அவருடைய சகோதரியின் பெயர் என்ன? (சகோ. ஃப்ரீமான் சகோ. பிரான்ஹாமிடம் பேசுகின்றார் - ஆசி). அவர்களுடைய புகைப்படம் என்னிடமுள்ளது. அந்த புகைப்படத்தில் நாம் எல்லோரும் முன்னால் இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு ஒருவர் தோளின் மேல் ஒருவர் கைபோட்டுக் கொண்டிருக்கிறோம். டாக்டர் ராய். ஈ டேவிஸ் போதகர். சற்று முன்பு அவர்களை நான் புகைப்படத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். டாக் (Doc) அந்த பழைய புகைப்படங்களை கொண்டு வந்திருந்தார். அதைக் கண்ட போது எனக்குள்ளே ஒரு வினோதமான உணர்ச்சி உண்டானது. அவர்களில் அநேகர் கடந்து சென்று விட்டனர் (பாருங்கள்?)- சென்று விட்டனர். நாமும் செல்வதற்கு இன்னும் நீண்ட காலம் இல்லை. பாருங்கள்? ஆனால்... நாம் பிரிந்து செல்லும் போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது ஆனால் நாம் அப்பொழுதும் இருதயத்தில் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 124சகோ. பாஸ்வர்த் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவர் கடந்து செல்வதற்கு சற்று முன்பு, அறையில் படுக்கையை விட்டுஎழுந்து, தரையில் நடந்து, தன் தகப்பனார், தாயார் மற்றும் 'கிறிஸ்துவினிடம் அவர் வழிநடத்தினவர்களுடன் கைகுலுக்கினார். அவர்கள் மரித்து அப்பொழுது நாற்பது ஐம்பது ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர்கள் அறையில் நின்று கொண்டிருப்பதை அவர் கண்டார், அவர்கள் ஒவ்வொருவரும் அவரை நோக்கிக் கொண்டிருந்தனர். அது என்ன? அன்று காலையில் நான் தரிசனத்தில் இருந்த அந்த நாட்டுக்குள் அந்த வயோதிபன் கடந்து சென்று கொண்டிருந்தார். - அவர்களை நான் அங்கு கண்டேன்; அவர்கள் மறுபடியும் வாலிப பருவத்தை அடைந்திருந்தனர். நாம் இன்னும் இருதயத்தில் இணைக்கப்பட்டு, அவர்களை சந்திப்போமென நம்புகிறோம். அது உண்மை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 125நான் கட்டிடத்தின் பின்னால் காண நேர்ந்தது. நமது கறுப்பு நிற நண்பர்களைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தோம், இப்பொழுது சகோதரன் மற்றும் சகோதரி நாஷ் பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். நீங்கள் அங்கிருப்பது எனக்குத் தெரியவில்லை. எதேச்சையாக நான் பின்னால் பார்க்க நேர்ந்தது. அவர்கள் மிகவும் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற மற்றொரு சகோதரன் .... எப்பொழுதாகிலும் ஒரு முறை பின்னால் இருந்து கொண்டு எனக்கு ஒரு பெரிய சத்தம் போடுவாரே, அவரா அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? அவருடைய பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாக சகோ. வுட் கூறினார். அவர், “உங்களுக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் என்னை அசைக்கும் போது நான் 'ஹே' என்று கூச்சலிட வேண்டியதாயுள்ளது. நான் எதையும் தொந்தரவு செய்யவில்லை என்று நம்புகிறேன்” என்று சகோ. வுட்டிடம் கூறினாராம். நீங்கள் 'ஹே' என்று கூச்சலிடாமல் இருக்கும் போது தான், அது என்னை தொந்தரவு செய்கிறது. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, சகோதரியே, உங்களை நான் நேசிக்கிறேன். அது உண்மை . சகோ. நாஷ், சகோதரி நாஷ், உங்களை நான் நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவில் என் சகோதரனும் சகோதரியுமாயிருக்கிறீர்கள். 126அன்பார்ந்த இனிய நண்பர்களே, இன்னும் பலரே, இவைகளில் சிலவற்றை நான் விட்டுப் போயிருந்தால், கதவுகள் எப்பொழுதுமே உங்களுக்குத் திறந்துள்ளன. பரலோகத்தின் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. நாம் இருதயத்தில் அப்பொழுதும் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம் என்... என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது என்னும் பாடலைப் பாடுவோம். இன்னும் ஒரு முறை நாம் பாடுவோம். வீடு செல்ல இப்பொழுது நேரமாகி விட்டது. என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே ஓ, தெய்வீக இரட்சகரே, நான் ஜெபிக்கையில் எனக்கு செவிகொடும் என் பாவம் அனைத்தும் போக்கியருளும் இந்நாள் முதல் நான் முற்றிலும் உம்முடையவனாயிருப்பேனாக. பரிசுத்தரே, பரிசுத்தரே, உன்னதமான தேவனாகிய கர்த்தரே 127இங்கு ஒரு நிமிடம் வாருங்கள். அந்த ராகம் எனக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். இசை இல்லாமல் அதை பாட நான் முயற்சி செய்யட்டும். பாருங்கள்? அதை பாட முடியுமா என்று பார்ப்போம். இப்பொழுது, ஒரு வேளை அதை நான் தவறாக பாடக் கூடும். பாருங்கள்? இப்பொழுது எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும், இப்பொழுது. பரிசுத்தரே, பரிசுத்தரே, உன்னதமான தேவனாகிய கர்த்தரே பரலோகமும் பூமியும் உம்மால் நிறைந்துள்ளன பரலோகமும் பூமியும் உம்மைத் துதிக்கின்றன ஓ, உன்னதமான கர்த்தரே! (உங்களுக்கு பிடிக்கிறதா? அது உங்களில் ஏதோ ஒன்றை செய்கிறதல்லவா? அதை நான் மறுபடியும் முயற்சிப்போம்).பரிசுத்தரே, பரிசுத்தரே, பரிசுத்தரே, உன்னதமான தேவனாகிய கர்த்தரே ' பரலோகமும் பூமியும் உம்மால் நிறைந்துள்ளன பரலோகமும் பூமியும் உம்மைத் துதிக்கின்றன ஓ, உன்னதமான கர்த்தரே! 128எனக்கு அது பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கிறது அல்லவா? ஓ, அந்த பழைய பாடல்களை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்குப் பிடித்தமான இந்த பாடல்களில் ஏதோ ஒன்றுண்டு நீங்கள் வேண்டுமானால் புதிய பாணியில் பாடும் பாடல்களை, எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு பழைய பாடல்களைத் தாருங்கள், அது எனக்குப் பிடிக்கும். கிழிக்கப்பட்ட திரையின் வழியாக கடந்து செல், இன்னும் அதைப் போன்ற மற்ற அழகான பாடல்கள்: அத்தகைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். பாடல்கள் பாடுதல் வழிபாட்டின் ஒரு பாகம் என்பது என் கருத்து (ஆம், ஐயா!), கர்த்தருக்கு துதிகளைப் பாடுதல். சரி, இப்பொழுது கூட்டத்தை முடிக்க நாம் பாடும் பாடல், இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல். கர்த்தர் தாமே, இப்பொழுது நாம் நிற்கையில், உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் வேதனையும் உள்ள பிள்ளையே அது உனக்கு மனமகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும் ஓ, நீ போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், ஒ எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம். இதோ எனக்குப் பிடித்த சரணம், அது இப்பொழுது உங்க அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக (கவனியுங்கள்!) சோதனைகள் உன்னை சூழ்ந்து கொள்ளும் போது (நீ என்ன செய்ய வேண்டும்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் ஓ, எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம்! இப்பொழுது நாம் தலைவணங்குவோம்: நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை தேவன் உங்களுடன் இருப்பாராக...